வியாழன், 18 ஜூலை, 2024

நீட் தேர்வு ஒழிப்பு இருசக்கர வாகனப் பேரணியின் நான்கு, அய்ந்தாம் பயணக்குழுக்களின் முதல் நாள் மாட்சிகள்!

 

விடுதலை நாளேடு

5ஆம் குழு (சென்னை முதல் சேலம் வரை)

சென்னை, ஜூலை 14- சென்னையிலிருந்து இளைஞரணி, திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் 21 வாகனங்களில் பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட அய்ந்தாம் குழு, புரசை தாணா தெரு, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈட்டுபட்டவாறே சென்னை அடையாறு இந்திரா நகர் பிற்பகல் 2:30 மணிக்கு வந்தடைந்தனர். தென் சென்னை மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.
தென் சென்னை மாவட்ட இளை ஞரணி தலைவர், வழக்குரைஞர் துரை அருண் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து உரையாற்றினார். தலைமைக்கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் நிகழ்ச்சிக்கான நோக்கத்தை எடுத்துரைத்து உரையாற்றினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
பரப்புரை பயண குழுத் தலைவர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், பரப்புரை பயண சொற்பொழிவாளர், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உரையாற்றி பயணத்திற்கான நோக்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

சென்னை மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சா.மாரிமுத்து நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அடுத்து தரமணிக்குச் சென்ற பயணக்குழு தந்தை பெரியார் நகர் தரமணி கழகக் கொடியை திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஏற்றினார்.
அங்கிருந்து சோழிங்கநல்லூர் மாவட் டம், வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் 4:15 மணிக்கு பயணக்குழு வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில் நடைபெற்றது. 172ஆவது வட்ட தி.மு.க. துணைச் செயலாளர் , உ.திருவேங்கடம். அனைவரையும் வரவேற்றார். மாவட்டக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் நோக்கவுரை ஆற்றினார். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து சோழிங்கநல்லூர் மாவட்டம், வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டிசம்பர் 3 இயக்கத் தலைவர் பேராசிரியர் த.மீ.நா.தீபக் கலந்துகொண்டார். மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்யானந்தம் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அயந்தாம் பயணக்குழு தாம்பரம் மாவட்டம், பல்லாவரம் பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாம்பரம் நகர செயலாளர் சு. மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாணவரணி செயலாளர் ஜைனுல் கருத்துரை வழங்கினார். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரையில், நீட் தேர்வின் கொடுமைகளை விளக்கிப் பேசினார். தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ. நாத்திகன் நன்றி கூறினார். இக்குழுவின் முதல்நாள் பயணம் தாம்பரத்தில் நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக