சனி, 31 ஆகஸ்ட், 2019

நன்கொடை

அண்ணாநகர் பகுதி திமுக இலக்கிய அணி துணைச் செயலாளராகவும், சென் னை மாவட்ட பிரதிநிதியாகவும், திமுக ஆட்சியில் அரசு வழக்குரைஞராகவும், சென்னை சூளைமேடு பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராகவும், 1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத்தமிழர் போராட்டத்தில் சிறை சென்றவருமான வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி (30.8.2019) அவரது துணைவியார் ம.புஷ்பாமணி, மகள்கள்: க.கவிதா கணேசன், க.சரண்யா கணேஷ்பிரபு ஆகியோர் ரூ.500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!
- விடுதலை நாளேடு,30.8.19

(பவழவிழா மாநாடு) திராவிட முன்னேற்றக் கழக தளபதி மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மகத்தான இயக்கமாம் தாய்க்கழகத்தின் பவள விழா!

தன்மானப் போருக்கான ஆயத்த விழா!


சென்னை, ஆக.27 சமூகநீதியை காத்துவரும் நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவள விழா! தன்மான போருக்கான ஆயத்த விழா சேலம் மாநகரத்தில் இன்று (27.8.2019) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் அறிவுரை களுக்குச் செவிமடுப்போம் - தன்மானம் காக்கும் போரில் வெற்றியன்றி வேறில்லை என்ற ஆர்ப்பரிப்புடன் அணிவகுப்போம்! என தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.8.2019) ‘முரசொலி'யில்  ‘உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன்' எழுதும் மடலில் எழுதியிருப்பதாவது:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்!
‘எல்லா சாலைகளும் ரோமாபுரி நோக்கி’ என்பார்கள். அதுபோல, திராவிட உணர்வுமிக்க தமிழர்களின் திசை தேடும் விழிகள் எல்லாம் இப்போது  சீலம் மிகுந்த சேலத்தை மட்டுமே  நோக்கி இருக்கிறது. காரணம், நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழா சேலம் மாநகரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எந்த சேலத்தில் ‘திராவிடர் கழகம்' என்ற சித்தாந்தப் பெயர் சூட்டப்பட்டதோ, அந்த சேலத்தில் எழுச்சியூட்டிடும் சிறப்பு விழா.

கருங்கடல் போன்ற பேரணி!
ஆகஸ்ட் 27 அன்று காலை 9 மணிக்கு, சேலம் அம்மாப் பேட்டை அன்னை மணியம்மையார் நினைவரங்கத்தில் தொடங்கும் நிகழ்ச்சி, மாலையில் கருங்கடல் போன்ற பேரணியால் எழுச்சியும் ஏற்றமும் பெற்று, சேலம் கோட்டை மைதானத்தில் நிறைவு விழா என்ற நினைவில் நிரந்தரமாகத் தங்கும் விழா நிகழவிருக்கிறது. தாய்க்கு விழா என்றால் தனயர்கள் இல்லாமலா? மானமிகு ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழாவில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் நிறைவுரையாற்றும் நல்வாய்ப்பினைப்  பெற்றிருக்கிறேன்.
சமூகநீதியைக் காக்கும் தளகர்த்தர்கள்
தோழமைக் கட்சித் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மதிப்பிற்குரிய கே.எஸ். அழகிரி அவர்கள்,  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன்   வைகோ அவர்கள்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் அன்பிற்கினிய பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீ அவர்கள் என சமூக நீதியைக் காத்து, களத்தில் நிற்கும் தளகர்த்தர்கள் பலரும் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாட்டில் பங் கேற்கிறோம்.

முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்றிய நீதிக்கட்சி
திராவிட இனத் தமிழ்க்குடிகளை தன்மானமும் பகுத்தறிவும் மிக்க தகுதிகள் செறிந்த சமுதாயமாக மாற்றும் மகத்தான பணியினை, தொண்டு செய்து பழுத்த பழமாகத் தொடர்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின்  தலைமையில் உருவான சுயமரியாதை இயக்கத்தின் கருஞ்சட்டைப் படையும்; வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே,  பிறப்பின் அடிப்படையிலான சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றிடும் வகையில் வகுப்புவாரி இடஒதுக்கீடு, பெண்களுக்கு வாக்குரிமை, கோவில் சொத்துகள் கொள்ளை போகாமல் பாதுகாக்க இந்து அறநிலையச் சட்டம், தேவதாசி முறை எனும் பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, ஆதிதிராவிட மக்களின் நலன் காக்கும் சட்டங்கள் எனப் பல முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்றிய நீதிக்கட்சியும்; இணைந்து பயணித்து, இந்தி ஆதிக்கத்தை வீழ்த்திட அறப்போர்க் களம் கண்டு தமிழர்களின் மொழி உரிமை மீட்கப்பட்ட காலம் அது.
சமுதாய மறுமலர்ச்சியில் தன்னிகரில்லாப் பெரும்பணி
மிட்டாமிராசுகள், ஜமீன்தார்கள், ‘சர்’ பட்டம் சூட்டப் பட்டோர், ராவ்பகதூர் - திவான்பகதூர் பட்டங்களைப் பெற்றவர்கள் -  இவர்கள்தான் அரசியலில் பங்கேற்று முன் னிலை வகித்திட முடியும் என்ற நிலையினை மாற்றிடவும், எந்த மக்களின் சமூகநீதிக்கும் சுயமரியாதைக்கும் இந்த இயக்கம் பாடுபடுகிறதோ, அந்த எளிய மக்களும் நடப்பு அரசியலைப் புரிந்துகொண்டு, சமுதாயப் பணிகளிலும் சீர்திருத்தப் பணிகளிலும் பங்கேற்றிட வாய்ப்பளித்திடும் நோக்கத்துடன் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தளபதியாக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களும் ஒரே மாதிரி சிந்தித்து செயலாற்றியதன் விளைவுதான், 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயர் மாற்றப்பட்டு, திராவிடர் கழகம் என்கிற பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘அண்ணாதுரை தீர்மானம்' என்ற பெயரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்மொழிந்த அந்த தீர்மானமும், அதில் அடங்கியிருந்த பெயர் மாற்றமும், திராவிட இயக்கத் தலைவர்களால் நீண்டநேர விவாதத்திற்குட்படுத்தப்பட்டு, ஆரோக்கியமான ஜன நாயக வழிமுறையில் ஆதரவினைப் பெற்று நிறை வேறியதன் காரணமாக, திராவிடர் கழகம் என்ற பெயர் வரலாற்றில் நிலைபெற்று, சமுதாய மறுமலர்ச்சியில் தன்னிகரில்லாப் பெரும் பங்கைச் செலுத்தியிருக்கிறது.
மகத்தான இயக்கத்திற்குப் பவள விழா!
பெயர் மாற்றம் செய்யப்பட்ட இயக்கத்திற்கு புதுக் கொடி ஒன்றை உருவாக்கும் முயற்சியில், தந்தை பெரியாரின் கொள்கைக் குருகுலமான ஈரோடு “குடிஅரசு” அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையின்போது, அங்கே துணை ஆசிரியராகப் பணியாற்றிய நம் ஆருயிர்த்
தலைவர் கலைஞர் அவர்கள், கறுப்பு வண்ணத்தின் நடுவே சிவப்பு வட்டம் வரைய மை கிடைக்காததால், தன் விரலைக் கீறி அதிலிருந்து வழிந் தோடிய  இரத்தத்தால் சிவப்பு வட்டம் வரைந்து கொடி உருவாக்கத்தை நிறைவு செய்தார். கலைஞரின் குருதியினால் கொடி உருவாக்கம் பெற்ற அந்த மகத் தான இயக்கத்திற்கு இன்று பவள விழா.
பெரியாருக்குக் காணிக்கையாக்கியவர்
தந்தை பெரியாரிடமிருந்து 1949ல் பிரிய நேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மக்கள் இயக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கியபோதும், திராவிடர் கழகத் தின் சுயமரியாதை - சமூகநீதி - பகுத் தறிவு எனும் அடிப்படைக் கொள்கை களிலிருந்து அது விலகாமல், தமிழர் நலன் காக்கும் உரிமைப்போரில் இரட்டைக் குழல் துப்பாக்கியாகவே செயல்பட்டது. 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தபோது, சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேற்றி தனது ஆட்சியையே பெரியாருக்கு காணிக்கையாக்கியவர் பேரறிஞர் அண்ணா. இயற்கை இரக்கமின்றி அவர் உயிரைப் பறித்தபோது, கட்சி யையும் ஆட்சியையும் தோளில் சுமக் கும் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள்,   தந்தை பெரியாரின் இலட்சி யங்களைத் தொடர்ந்து நிறைவேற்றும் அவரது குருகுலத்து மாணவராகவே திகழ்ந்தார்.
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு
பிறப்பால் ஒடுக்கப்படும் அனைத்து தரப்பு மக்களுக்குமான இடஒதுக்கீடு, பெண்களுக்குச்  சொத்துரிமை, தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு எனப் பெரியாரின் பெருங்கனவை நனவாக் கிய தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாரின் நெஞ்சில் இருந்த முள் எனப்படும் ‘அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகராகும் சட்ட’த்தையும் நிறைவேற்றியவர்.
தாயின் எண்ணங்களை நிறைவேற் றும் தனிச் சிறப்புப் பெற்ற தனயர்களாக  பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் ஆற்றிய சீர்மிகு பணி களின் காரணமாக, இன்று இந்திய அரசியலையும் மாநில உரிமைகளை யும் பாதுகாக்கும் முன்மாதிரி (‘மாடல்’) மாநிலமாகத் தமிழகம் தனித்துவத் துடன் விளங்குகிறது.
போர்க் களங்கள் ஓய்ந்துவிடவில்லை
வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைச்  சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி வெட்ட நினைக்கும்  சக்திகளின் அதிகாரக் கரங்களால் நீட் திணிக்கப்பட்டு தமிழ்நாட்டு மாணவ - மாணவியரின் உயிர்கள் பறிக்கப்படுகிறது.
மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன
ஜம்மு - காஷ்மீரில் தொடங்கி புதுச் சேரி யூனியன் பிரதேசம் வரை மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. அரசி யல் சட்டத்திற்கு விரோதமான, பொரு ளாதார அடிப்படையிலான இடஒதுக் கீடு திணிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி யாம் தமிழ் மொழியைக் கந்தலாக்கி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்துவதற்கான சதிவலை பின்னப் படுகிறது. இன்னும் பல வடிவங்களில் மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ள இந்தக் காலச்சூழலில் தந்தை பெரியா ரும் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் நம்மிடையே இல்லை என்றாலும், அவர்கள் வழங்கிய இலட் சிய தீபம் நம் கைகளில் அணையாத அற்புத  விளக்காகச் சுடர் விடுகிறது.
ஜனநாயக விரோத சக்திகளை எதிர்கொள்வோம்
அந்தச் சுடரை உயர்த்துவோம்! இனப்பகை எனும் இருட்டை விரட்டு வோம்! ஜனநாயக விரோத சக்திகளை எதிர்கொள்ளும் வலிமையைப் பெருக்கும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழாவினை நமது பயிற்சிக்களமாக்குவோம். மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் அறி வுரைகளுக்குச் செவி மடுப்போம். தன் மானம் காக்கும் போரில் வெற்றியன்றி வேறில்லை என்ற ஆர்ப்பரிப்புடன் அணிவகுப்போம்! என தளபதி மு.க.ஸ்டாலின் ‘முரசொலி'யில் உங் களில் ஒருவன் பெயரில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக பவளவிழா மாநாட்டுக்கு இனமான பேராசிரியர் வாழ்த்துச் செய்தி
திராவிடர் கழகப் பவளவிழா மாநாடு - 75 ஆண்டுகளுக்கு முன் எந்த மாங்கனி நாட்டில் - சேலம் மண்ணில் கூடினோமோ அங்கேயே நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்து வழிகிறது.
75 ஆண்டுகள் என்பது ஒரு இயக்க வரலாற்றில் சாதாரணதல்ல. தலைமைகள் மாறியும் தத்துவங்கள் மாறாத, கொள்கைகள் குறைவுபடாத இயக்கம் பவளவிழா கொண்டாடுவது பாராட்டிப் போற்றி மகிழ  வேண்டிய ஒன்று.
நினைவுகளைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் கல்லூரிக் காளை என்னை வரலாற்றுப் புகழ் மிக்க, திராவிடர் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய மாநாட்டில் ஆங்கில மொழி வித்தகர் 'சண்டே அப்சர்வர்' பி.பாலசுப்பிரமணியம் அவர்களின்  உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மேடையிலேயே மொழி பெயர்க்கும் பேறு பெற்றதை, இன்றும் அதைக் குறித்து பேசுவதை குறித்துக் கேட்கையில் பெருமிதமும், பேருவுவகையும் அடைகிறேன்.
மாபெரும் சமூக சீர்திருத்த இயக்கம் உரு வாக்கிய சாதனை மகுடங்கள் எண்ணிலடங்கா.
இந்த மாநாட்டில் பங்குபெறும் வாய்ப்பில் லையே என்று ஏங்குகிறேன்.
உடல் நலிவு என்னை இங்கே கட்டிப் போட்டாலும் என் மனம், சிந்தை நினைவு எல்லாம் இப்பவள விழா மாநாட்டின் பால் இருக்கும்.
மாநாட்டை சீரும் சிறப்புமாக ஏற்பாடு செய்த அன்பு இளவல் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகிய இவர்களுடன் உடனிருந்து தொண்டாற்றும் அன்பு இதயங்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த இயக்கம் சாதித்துள்ள சாதனைக் குவியல்களை எந்தக் கொம்பனாலும் அழிக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ இயலாது என்பது கல்லில் வடித்த உண்மை. மாநாடு வெற்றி பெற நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க பெரியார்!
இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
- விடுதலை நாளேடு, 27 .8 .19

திராவிடர் கழக பவள விழா மாநாடு 

திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலம் மாநகரில் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு!


திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் பங்கேற்க இன்று காலை (26.8.2019) 4.30 மணிக்கு ஏற்காடு விரைவு ரயிலில் சேலம் வருகை தந்த கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களுக்கு மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் பழனி புள்ளையண்ணன் தலை மையில் மேளதாளம் முழங்க, எழுச்சி முழக்கத்தோடு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழர் தலைவரை
வரவேற்ற தோழர்கள்
பெரியார் சமுக காப்பணியின் வணக்கத்தை பெற்றுக் கொண்ட தமிழர் தலைவருக்கு, கழக பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், மாநில அமைப்பு செயலாளர்கள் தருமபுரி ஊமை.ஜெயராமன், மதுரை வே.செல்வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண் டியன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் வா.பிரபாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள், அ.சுரேஷ், பொழிசை கண்ணன், புதுச்சேரி இளைஞரணி தலைவர் இராசா, மண்டல திராவிடர் கழக தலைவர் சிந்தாமணியூர் கவிஞர் சி.சப்பிரமணியம், சேலம் மாவட்டத் தலைவர் கே.ஜவஹர், மாவட்ட செயலாளர் அ.ச.இளவழகன், மேட்டூர் மாவட்டத் தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர், ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், சேலம் மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம், சேலம் மாநகர செயலாளர் அரங்க.இளவசரசன், சேலம் மாவட்ட அமைப்பாளர் ச.வே.ராவணபூபதி, ஓமலூர் ஒன்றியத் தலைவர் சவுந் திரராஜன், காரைக்கால் மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் பு.க. செல்வம், ஆத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ப. வேல் முருகன், ஆத்தூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் கார்.முகிலன், பா.வைரம் உள்ளிட்ட எராளமானோர் பயனாடை அணிவித்து வரவேற்பு தந்தனர்.
- விடுதலை நாளேடு, 26 .8. 19
 

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மயிலை நா.கிருஷ்ணன் கழக உறுப்பினராக புதுப்பித்தார்!



பெரியார் அறக்கட்டளை வாழ்நாள் உறுப்பினர் மயிலை நா.கிருஷ்ணன் கழக உறுப்பினராக புதுப்பித்து தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர்களிடம் படிவத்தை வழங்கினார்

- விடுதலை நாளேடு, 26.8.19

நன்கொடை



தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரு மான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் 9ஆவது தெருவை சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன் வயது 96 (24.8.2019) அன்று தன் பிறந்த நாளை கொண்டாடுவதின் மகிழ்வாக திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!

- - - - -


- விடுதலை நாளேடு 25. 8. 19

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

கழகத் தோழர் நீலகண்டன் இல்லத்திறப்பு விழா

பேரமனூர், ஆக.23 கடந்த 4.8.2019 அன்று மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், மறைமலை நகரை அடுத்த பேரமனூர் ரயில்வே தெருவில் திரா விடர் கழகத் தோழர் கி.நீலகண்டன் - நீ.பவானி இணையரின் புதிய  இல்லத் திறப்பு விழா காஞ்சிபுரம் கழக மாவட்டச் செயலாளர் பூ.சுந்தரம்  தலைமையில் நடைபெற்றது. விழாவில், தென்சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,  தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கோ.வி.ராகவன், களியப்பேட்டை கெ. தமிழ்மணி, திருக்குறள் ம. வெங்கடேசன்,  பகுத்தறிவாளர் கழக  மாவட்டச்செயலாளர் அ. சிவக் குமார், நல்லாசிரியர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். முன்னதாக கழகத் தோழர் ம.கருணாநிதி அனைவரையும் வரவேற்றார். தோழர் கி. காண்டீபன் அவர்களுடைய மகளான பள்ளி மாணவி கா.மலர் அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பாக உரை யாற்றினார்.

கி.நீலகண்டன் அவர்களுடைய பெற்றோர் து.கிருஷ்ணன் - கி.ஜெயா அம்மாள்,  சகோதரர் கி.காண்டீபன், நண்பர் சு.விஜயராகவன் மற்றும் நீல கண்டன் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் புடைசூழ ஏராளமா னவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

14ஆவது வட்ட திராவிட முன் னேற்றக் கழகச் செயலாளரும் முன் னாள் நகரமன்ற உறுப்பினருமான மு.வினோத்குமார் தந்தை பெரியார் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் சிலை அமைத்த சிறப்புக்குரியவர். அவர் விழாவில் பாராட்டப்பட்டார்.

காஞ்சி மண்டல திராவிடர் கழகச் செயலாளரும் தலைமைக்கழகப்  பேச் சாளருமான பேராசிரியர் முனைவர் காஞ்சி கதிரவன் புதிய இல்லத்தைத் திறந்து வைத்து கருத்துரையாற்றினார். பார்ப்பன மறுப்பு நிகழ்ச்சியாக தமிழர் குடும்பங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் என்றும் பார்ப்பனரை அழைத்து நம்குடும்ப நிகழ்ச்சிகளை நடத்துவதால், நம் குடும்பத்துப் பெண்கள்  இழிவுபடுத்தப்படுகின்றனர்; நம்முடைய மொழி இழிவுபடுத்தப் படுகிறது; பார்ப்பனர் தவிர மற்ற அனைவரும் மனுதர்ம சாஸ்திரத் தின்படி தீண்டத்தகாதவர்கள் என்றும் இழிவு படுத்தப்படுவதால் பார்ப்பனர் மறுப்பு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்றும் நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றும் நம் குழந் தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்றும் தந்தை பெரியார், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி ஆகி யோர் சமூக நீதிக்காக களம் கண்டு அரசியல் சட்ட பாதுகாப்பு செய்திருப் பதையும் தம் உரையில் குறிப்பிட்டார். கா.செல்வா அவர்கள் நன்றி கூறினார்.

ஆட்டோ ஓட்டும் தொழிலை மேற்கொண் டுள்ள  கி.நீலகண்டன் அவர் களுடைய மகன் நீ.தமி ழன்பன் பி.ஈ. பட்டமும், நீ.மதிவாணன் சி.ஏ. பட்டமும் பெற்றுள்ளது பாராட்டத் தக்கதாகும்.

- விடுதலை நாளேடு, 23. 8 .19

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

நன்கொடை



திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டிற்கு இன்று (20.8.2019) இரண்டாவது தவணையாக ரூ.10,000/- நன்கொடையாக திராவிடன் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன் வழங்கினார். நன்றி.
- விடுதலை நாளேடு, 20.8.19

நன்கொடை



சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற கே.காசிநாதன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை (21.8.2019) யொட்டி திருச்சி நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு பகல் உணவுக்காக ரூ.10,000 கே.காசிநாதன் அவர்களின் இணையர் மணிமேகலை, மகள் கா.பூவை, மகன் கா.உதயன் ஆகியோர் வேலூர் கழக மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன் மூலம் வழங்கினர்.

- விடுதலை நாளேடு, 20 .8. 19

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

பவளவிழா மாநாட்டிற்கு நன்கொடை



பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்கள் திராவிடர் கழக பவள விழா மாநாட்டிற்காக ரூ.5,000/- நிதியை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (சென்னை,  18.8.2019)

-  விடுதலை நாளேடு, 19.8.19

சனி, 17 ஆகஸ்ட், 2019

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தமிழாற்றுப்படை விருதுகள் செங்கை பூ.சுந்தரத்திற்கு "பெரியார் விருது" வழங்கி சிறப்பிப்பு


செங்கற்பட்டு, ஆக. 17- தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு மாவட்டங்கள் வழங்கும் தமிழ்சான்றோர்களுக்கு தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கும் விழா 15.8.2019 அன்று 11 மணிக்கு செங்கற்பட்டில் புத்தக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய - ரஷ்ய கலாச்சார நட்புறவு கழகத்தின் பொது செயலாளர் ப.தங்கப்பன் (அய்ஆர்சியு எப்எஸ்) 27 விருதாளர்களுக்கு விருது வழங்கினார். ஓவியக்கவி நா.வீரமணி அவர் கள் தலைமையில் விருது பெற்றவர்கள்.
1) காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செங்கை பூ.சுந்தரம் - பெரியார்  விருது
2) குரு.சம்பந்தம் - தொல்காப்பியர் விருது
3) ம.ச.முனுசாமி - அவ்வையார் விருது
4) கோ.வெள்ளைச்சாமி - வள்ளலார் விருது
5) வெற்றிக்கண்ணன் - அண்ணா விருது
6) இ.மணிவாசகன் - பாரதிதாசன் விருது
7) நாகை மனோகரன் - திருமூலர் விருது
8) த.கு.கருணாநிதி - கலைஞர் விருது
9) அமுதகீதன் - மறைமலை அடிகள் விருது
10) கோஸ்வா சாம்டேனியல் - கால்டுவெல் விருது
11) பாரதி ஜிப்ரான் - புதுமைப்பித்தன் விருது
12) சா.கா.பாரதிராஜா - இளங்கோவடிகள் விருது
13) தோ.ருக்மாங்கதன் - பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் விருது
14) மல்லை தமிழச்சி - ஜெயகாந்தன் விருது
15) தயானி அன்பு - ஆண்டாள் விருது
16) கோ.செழியன் - கபிலர் விருது
17) பேராசிரியர் கிள்ளிவளவன் - பாரதியார் விருது
18) இராம.மாணிக்கம் - அப்பர் விருது
19) சு.பழனிச்சாமி - கம்பர் விருது
20) அசோகன் - ஜெயங்கொண்டார் விருது
21) உமர்தாசன் - அப்துல் ரகுமான் விருது
22) முத்து கிருட்டிணன் - கண்ணதாசன் விருது
23) நா.மணிமாறன் - வைரமுத்து விருது
24) சிவக்குமார் - வைரமுத்து விருது
25) செந்தமிழ் - வைரமுத்து விருது
26) வல்லம் சோமு - வைரமுத்து விருது
27) சந்திரசேகர் - உ.வே.சா. விருது
கு.ராஜா, அ.அசோக் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். பிரவீன், மோகன், முத்துகிருட்டிணன், மா.பாலகிருட்டிணன், சுனில்குமார், எழிலரசன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
- விடுதலை நாளேடு, 17. 8 .19

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

கலைஞர் சிலை திறப்பு  விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

எதிர்நீச்சலிலேயே வளர்ந்த கலைஞரின் சிலையை - எதிர்நீச்சல்காரர் வங்காளத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அழைத்து திறக்கச் செய்தது பொருத்தமானது

கலைஞர் அளித்துவிட்டுச்சென்ற


அய்ம்பெரும் முழக்கங்களை செயல்படுத்த  உறுதி ஏற்போம்!


கலைஞர் சிலை திறப்பு  விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை




சென்னை, ஆக.9   கலைஞர் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற அய்ம்பெரும் முழக்கங்களை செயல்படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

7.8.2019 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்குத் தலைமையேற்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்  உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

பல்திறன் கொள்கலன் ஆற்றல் நிறைந்தவர் கலைஞர்


மிகுந்த உணர்ச்சிபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்றவரும், பல்திறன் கொள் கலன் ஆற்றல் நிறைந்த நம்முடைய தலைவர், மானமிகு கலைஞருக்கான விழா இது. ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்று, காஞ்சி கருவூலத்தையே தனதாக்கிக் கொண்டு, மிகப்பெரிய அளவிற்கு, தனக்கு மட்டுமல்ல, இந்தத் தரணிக்கே இந்த இயக்கம் சொந்தம் - திராவிடர் இயக்கம் சொந்தம் என்று காட்டக்கூடிய அளவிற்கு, முத்திரை பொறித்துச் சென்ற தலைவர் கலைஞர். அவர்களுக்குப் பிறகும்கூட, வெற்றிடம் என்பது கிடையாது - எல்லோரும் பெற்றிடமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும் சரி, தமிழ்நாடும் இருக்கும் என்பதற்கு அடையாளமாக இன் றைக்கு அவர் விட்ட பணிகள் மட்டுமல்ல, அவர் நினைக் காத பணிகளையெல்லாம்கூட செய்து கொண்டி ருக்கக்கூடிய நம்முடைய ஒப்பற்ற தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வீரர் அன்பிற்குரிய சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,

எதிர்நீச்சல் வீராங்கனை மம்தா பானர்ஜி


இந்த நிகழ்ச்சியில் கலைஞர் அவர்களுடைய உருவச் சிலையை, அவருடைய மூத்த பிள்ளை என்று கையெ ழுத்து ஏடாகத் தொடங்கி, தனி ஆளாக மிகப்பெரிய அளவிற்கு உழைத்து, 75 ஆண்டுகாலம் ஒரு பெரிய வரலாற்றை- நாளேட்டு வரலாற்றை உருவாக்கிய அந்த ஏட்டின் அலுவலகத்தில், எத்தனையோ கசப்பான அனு பவங்கள் அங்கே நடந்ததுண்டு; அதையெல்லாம் மாற்றி, இன்றைக்கு அங்கே ஒரு வசந்தம் பூத்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கலைஞர் அவர்களுடைய சிலை - அவர்கள் நாள்தோறும் உடன்பிறப்புக்கு எழுது கின்ற மடலை எப்படி உட்கார்ந்துகொண்டு எழுது வார்களோ - அதேபோன்று அந்த மடலை எழுதக்கூடிய வகையில் சிலை உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுக் குரியது - சரியானவரை அடையாளம் காண எப்பொழுதும் தவற மாட்டார் நம்முடைய தளபதி அவர்கள் என்பதற்கு அடையாளமாக, மேற்கு வங்கத்தினுடைய வீராங்கனை யாக இருக்கக்கூடிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை அழைத்து, கலைஞர் அவர்களுடைய சிலையை திறந்து வைக்கக்கூடிய வரலாறு படைத்த விழா இது. எதிர்நீச்சலை கலைஞர் எப்படி போட்டாரோ - அதேபோல, கலைஞர் அவர்களுடைய சிலையைத் திறப்பதற்கும் ஒரு எதிர்நீச்சல் வீராங்கனைதான் தேவை - சரியானவராக இருக்க முடியும் என்ற அளவில், நம்மு டைய அன்பான அழைப்பை ஏற்று வந்திருக்கக்கூடிய வீராங்கனை - இரும்பு மனிதர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எடுத்துக்காட்டான முதலமைச்சராக இருக்கக் கூடிய மேற்கு வங்கத்தினுடைய முதலமைச்சர் அருமை சகோதரியார் மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்களே,

புதுச்சேரியினுடைய மாண்புமிகு முதலமைச்சர், அவரும் ஒரு எதிர்நீச்சல் வீரர்தான். தினமும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார். எனவேதான், அது மிகவும் பொருத்தமானது - அப்படிப்பட்ட அருமை நண்பர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களே,

கலைஞர் அவர்களோடு இணைந்து அவரை தன்னு டைய தமிழாசான் என்பதை எப்பொழுதும் நன்றியுணர் வோடு  மறக்காமல் எங்கும் பதிவு செய்யக்கூடிய நம்முடைய கவிப்பேரரசு அவர்களே,

இந்நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்ற முரசொலி ஆசிரியர் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய செல்வம் அவர்களே,

இணைப்புரை வழங்கிக்கொண்டிருக்கக்கூடிய அருமை நண்பர் செயல்வீரர் அன்பழகன் அவர்களே,

எதிரிலும், மேடையிலும் அமர்ந்திருக்கக்கூடிய அத் துணை திராவிடர் இயக்க, திராவிட முன்னேற்றக் கழக, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களே, பெரு மக்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

It is most fitting that we must welcome the Iron Lady of West Bengal.


Madam,


You’ve come to the land of Dravidam;


You’ve come to the land of Periyar;


you've come to the land of Social Justice;


You’ve come to the land of Self-Respect;


You are most welcome, our hearty greetings.


It is most fitting and proper that you have unveiled our Leader’s statue at his office. which has revolutionized the minds of the Tamils. Not only Tamils here, Tamils throughout the world.


Kalaignar’s Pen was more mightier than anyother sword.


He has done that. So it is most fitting and proper.


You are always swimming against the current.


Mr. Naryanasamy another Cheif Minister is always swimming against the current.


Periyar swimmed against the current,


Anna swimmed against the current, and Kalaignar swimmed against the current and our Stalin our Thalapathi is swimming against the current, always they are known for that. So it is most fitting, you have come here.


We are not ‘Jalras!' We are not simply saying Yes-man. We are always  here to support the necessary things and opposed the evil and you will have to come here, even often and often.


State Rights are  systematically being curbed and taken away.


So it is responsibility of my dear Brother Stalin who will ask the entire India to come to Tamil Nadu to defend that because the constitution is being  scraped.


The constitution is not only done, it is undone. Undone that is going on. So, it is high time that you’ve come here as the fighter. Not only in Bengal, here also,  because the forces, the fundamentalists- forces, they want to take away the Periyar,   so all so  Vidhyasagar, they want to take it away  and vandalised Vidhyasagar statue there. Now, nobody could touch Periyar here. Because, Periyar completely has given a long history of our heritage.


கலைஞர் அவர்களும் எதிர்நீச்சலிலேதான் வெற்றி பெற்றார்


அன்புள்ள நண்பர்களே, எதிர்நீச்சல் அடித்த எல்லோரையும் ஒன்று சேர்த்திருக்கக்கூடிய கூட்டம். காரணம், நம்முடைய கலைஞர் அவர்களும் எதிர் நீச்சலிலேதான் வெற்றி பெற்றார். முழு கலைஞரை எப்பொழுது நீங்கள் பார்க்க முடியும் என்று சொன்னால், இளைய தலைமுறைக்கு, அவரோடு நெருங்கிப் பழக முடியாத தலைமுறைக்கு நாங்கள் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

முதலமைச்சரான கலைஞரைப் பார்ப்பதைவிட,

எழுத்தாளர் கலைஞரைப் பார்ப்பதைவிட,

பேச்சாளர் கலைஞரைப் பார்ப்பதைவிட,

திரைப்பட வசன கர்த்தா கலைஞரைப் பார்ப்பதைவிட,

கலைஞரை, முழுக் கலைஞராகப் பார்க்கவேண்டும் என்று சொன்னால், எதிர்ப்பிலேதான் எங்கள் கலைஞர் முழுக் கலைஞராக எப்பொழுதும் திகழ்வார். காரணம், அதுதான் ஈரோடு குருகுலத்தில் அவர் படித்த கற்ற பாடம்.

கலைஞர் பேனாவை, வாள்முனையைவிட வேக மாகச் சுழற்றியவர்

சுருக்கமாக ஒன்றை சொல்கிறேன்.

நெருக்கடி காலத்தில், முரசொலி பட்டபாடு,

நெருக்கடி காலத்திலே இந்த இயக்கம் பட்டபாடு,

"ஈரோடு போனவன் எப்பொழுதும் நீரோடு  போகமாட்டேன்''


நெருக்கடி காலத்திலே தணிக்கை என்ற பெயராலே, கழுத்தை நெரித்து, கருத்துகளெல்லாம் கொல்லப்பட்ட நேரத்திலே, கலைஞர் பேனாவை, வாள்முனையைவிட வேகமாகச் சுழற்றினார்; எதிர்நீச்சலிலே வெற்றி பெற்றார்...

அப்பொழுது அவரிடத்தில் ஒரு செய்தியாளர் கேட்டார், ஏன் உங்களுடைய ஆட்சியை கலைத்தார்கள் தெரியுமா, மத்திய அரசாங்கத்தார்?

செய்தியாளர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரைப் பார்த்து,

ஆட்சியை இழந்திருக்கிறோம் என்பதைப்பற்றி கவலைப்படாத கலைஞரைப் பார்த்து,

மக்களையே நம்பிக்கொண்டிருக்கும் கலைஞரைப் பார்த்து செய்தியாளர் சொன்னார்,

நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை; தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்பதற்காகத்தான், உங்கள் ஆட்சியைக் கவிழ்த்தார்கள், டில்லி உங்கள் ஆட்சியைக் கவிழ்த்தது'' என்று சொன்னார்.

ஒரே வரியில் பதில் சொன்னார் கலைஞர், அவர்தான் கலைஞர்.

"ஈரோடு போனவன் எப்பொழுதும் நீரோடு போக மாட்டேன்'' என்று சொன்னார்.

நிமிர்ந்து நின்று நம்முடைய லட்சியப் பாதையில் வெல்வோம்!


எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்டவர்கள் நாங்கள்; எனவேதான், ஆற்றோடு போகமாட்டோம்; எதிர்நீச்சல் அடித்தால்  swimming against the current  என்பது இருக்கிறதே, அதுதான் சாதனை; That is the achievement ஆகவேதான், நான் ஈரோடு போனேன்; என்னுடைய தலைவனே எதிர்நீச்சல் அடித்து வழிகாட்டிய தலை வன்தான். ஆகவேதான், நாங்கள் எப்பொழுதுமே அடி பணியமாட்டோம்; நிமிர்ந்து நிற்போம். நிமிர்ந்து நின்று நம்முடைய லட்சியப் பாதையில் வெல்வோம் என்று சொன்னார்.

அந்தக் கலைஞருடைய நினைவு நாள் என்று சொன்னாலும், இது வரலாற்று நினைவு நாள் - அதில் அற்புதமான சாதனையை செய்த நம்முடைய தளபதி அவர்களுக்கு, தமிழ்கூறும் நல்லுலகம் என்றைக்கும் நன்றி சொல்லவேண்டும்.

வென்றார் என்று சொல்லுங்கள்;


வெல்வார் என்று  சொல்லாதீர்கள்


அவர் வெல்வார் என்று சொன்னார் கவிப்பேரரசு; ஒரு சிறிய திருத்தம்; தமிழை எழுதும்போது, அவர் திருத் தத்திற்குரிய அளவிற்கு எழுத மாட்டார்; அவரைத் திருத் துகிறேனே என்று எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது; இருந்தாலும், ஆசிரியர் நான், ஒப்புக்கொள்வார் என நான் நினைக்கிறேன். வென்றார் என்று சொல்லுங்கள்; வெல்வார் என்று  சொல்லாதீர்கள்.

நிச்சயமாக, 40-க்கும் 40- என்று சொன்னார்கள் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள். 39 இல் 38; அதில் வென்றாரா? இல்லையா? 13 பெரிதா? 9 பெரிதா? வென்றாரா இல்லையா? நாளைக்கும் வென்றார்! வென் றார்!! வென்றார்!!! என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அளவிற்கு வரும்.

எனவே, நண்பர்களே! இன்றைய காலகட்டம், மாகாணங்களுடைய உரிமைகளையெல்லாம் பறித்து, மாநிலங்களே இருக்கக்கூடாது, ஒற்றை ஆட்சி - ஒரே ஆட்சி - ஒரே ரேஷன் கார்டு - ஒரே கலாச்சாரம், அது சமஸ்கிருத கலாச்சாரம்; ஒரே மதம், அது இந்துத்துவா - ஒரே கட்சி இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல் கிறீர்களே, இப்படி ஒன்று, ஒன்று, ஒன்று என்றாக்கிக் கொண்டிருக்கிறீர்களே, அவர்களைப் பார்த்துக் கேட் கின்றோம், கலைஞர் அவர்களுடைய நினைவு நாளிலே, கலைஞர் அவர்கள் போட்டுத் தந்த மேடையிலே, கலைஞரோடு தோளோடு தோள் நின்று போராட்டங்களில் சிறைச்சாலைக்குச் சென்றவர்கள் என்ற முறையில், எங்களைப் போன்றவர்கள் கேட்கிறோம்,

ஒரே ஜாதி என்று சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?


ஒரே மதம் - இந்து மதம்; ஒரே மொழி - சமஸ்கிருதம், இந்தி; ஒரே ரேசன் கார்டு; ஒரே அமைப்பு என்றெல்லாம் ஒன்று, ஒன்று, ஒன்று என்றாக்கிக் கொண்டிருக்கிறீர்களே, உங்களைப் பார்த்துக் கேட்கிறோம், ஒரே ஜாதி என்று சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? ஒரே ஜாதி என்று சத்தம் போடுவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

மாட்டீர்கள்! காரணம், நீங்கள் மனுவின் மைந்தர்கள்; மனுதர்ம ஆட்சியை, நீங்கள் மீண்டும், மீண்டும் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

எனவேதான், தந்தை பெரியாருடைய வழியில், சமத்துவபுரம் கண்டார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

மாநில சுயாட்சி என்பதை இன்றைக்கு வற்புறுத்த வேண்டிய கட்டம். எனவேதான், இரண்டு முதலமைச் சர்கள் போதாது; இதற்கு ஒப்புக்கொள்கிற அத்துணை முதலமைச்சர்களும், இன்றைக்கு வேறு முகாமில் இருக்கின்றவர்கள்கூட, பட்ட பிறகு வருவார்கள்; தமிழ் நாடுதான் கைகுலுக்கி நிற்கும். வங்காளத்தைப் பொருத்த வரையில், இந்தி எதிர்ப்பிலும் நம்மோடு அவர்கள் பயணிக்கக்கூடியவர்கள். மொழிப் பிரச்சினையில் அவர்களுக்கும், நமக்கும் வேறுபாடு கிடையாது.

வங்கத்தின் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஒருமுறை சொன்னார்,

‘‘I am a Dravidian from Bengal''

என்று. அது பதிவாகி இருக்கிறது.

அய்ம்பெரும் முழக்கங்கள்


எனவேதான், உங்களைப் பார்க்கும்பொழுது, நான் யாரையோ பார்க்கவில்லை; உரிமைக்குப் போராடுகின்ற உங்களைப் பார்க்கின்றோம். நாங்கள் அதற்கு ஆயத்தக் களம் அமைத்திருக்கின்றோம். நீங்கள் இங்கே வந்தது வெறும் சிலை திறப்பு விழாவிற்காக மட்டுமல்ல; இந்த நாட்டினுடைய உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்; பறிக்கப்படக் கூடாது. மாநிலங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்படுவது என்பது மிகவும் முக்கியம்.

எனவே, கலைஞர் அவர்களுடைய நினைவு நாள் என்ற இந்த வரலாற்று குறிப்பு நாளில், அய்ந்து பெரும் முழக்கங்களை கலைஞர் அவர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள்.

அவை முழக்கங்கள் அல்ல நண்பர்களே, ஆயுதங்கள். அந்த ஆயுதங்களை வைத்துத்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும்; தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தி யாவைக் காப்பாற்ற முடியும்.

எனவேதான், கலைஞருடைய நினைவைப் போற்றுகின்ற வகையில், இந்த அய்ந்து உறுதிமொழிகளை நான் இங்கே சொல்லுகிறேன். நீங்கள் தொடர்ந்து சொல்லவேண்டும். டில்லி வரையில் அது கேட்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்; அதுதான் கலைஞருக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய மரியாதை.

அந்த அய்ம்பெரும் முழக்கங்கள், வெறும் முழக்கங்கள் அல்ல. அவைகள்தான் வருங்கால போர்த் திட்டங்கள். அதனை நன்றாகத் தெளிந்து பார்க்கவேண்டும்.

1) அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

2)  ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!

3)  இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

4) வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

5) மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி!

(தமிழர் தலைவர் முழக்கங்களைச் சொல்ல சொல்ல, அனைவரும் திரும்பச் சொன்னார்கள்).

போர்க் களத்திற்கு ஆயத்தமாகுக!


இதுதான் நம்முடைய அடுத்த பணி. அதனுடைய தொடக்கம்தான் இது. வெறும் சிலை திறப்பு அல்ல.

வாழ்க கலைஞர்! வாழ்க பெரியார்!! வருக மாநில உரிமைகள்!

இந்தப் போர்க் களத்திற்கு ஆயத்தமாகுக!

உயிர் வெல்லமல்ல!

என்றைக்கு வேண்டுமானாலும், பெரியார் சொன் னதைப்போல, மனிதன் நோயால் சாகக்கூடாது; விபத்தால் சாகக்கூடாது. கொள்கைக்காக சாகவேண்டும். அதற்குத் தயாராகுங்கள்! தயாராகுங்கள் இளைஞர்களே!

அதுதான் கலைஞருடைய சிலையைப் பார்க்கும் பொழுது நீங்கள் பெறவேண்டிய உணர்வு என்று கூறி என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 9.8.19