தென் சென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் எம். கே. காளத்தி அவர்களின் துணைவியார் கா.கர்ணம்மா(வயது-84) அவர்கள் 18.5.20 விடியற்காலை மறைவுற்றார். மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், இளைஞரணி துணைச் செயலாளர் இரா. பிரபாகரன் மற்றும் மயிலை சீனா ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பிற்பகல் 2 .30 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகம் சார்பில் செங்கல்பட்டு அருகில் வாழ்வாதாரம் இழந்தோறுக்கு நிவாரணப் பணி
கரோனா தடுப்பு அறிவிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை கூற்றோடு அருகிலுள்ள 'கோடி தண்டலம்' என்ற ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 06.05.20 முற்பகல் 11.00 மணி அளவில் அப்பகுதியில் உள்ள பின் மாஸ்டர் இன்ஞினியரிங்கு (Bin master Engineering) தொழிற்கூடத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள 25 கிலோ அரிசி மூட்டைகளை குடும்பம் ஒன்றுக்கு தலா 25 கிலோ அரிசி வீதம் 125 குடும்பங்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் வழங்கப்பட்டது. திராவிடர் கழகம் சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி மற்றும் ஆயிரம்விளக்கு மு.சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செங்கல்பட்டு பொருளாளர் எழிலரசன் மற்றும் நடராஜபுரம் வரதன் ஆகியோர் பங்கேற்றனர்.
07.05.20 முற் பகல் 10.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 'கால்டுவெல் அவர்களின்' 206 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நேபாள நாட்டைச் சேர்ந்த 'ஹட்சன்' என்பவர் இந்திய மொழிகள் அனைத்தும் ஆரிய மொழி சேர்ந்தது என்று ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டார்.
இந்த மோசடி ஆய்வை வெளிப்படுத்துவது போன்ற வகையில்....
தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்த கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்தது ஆரிய மொழிக்கும் திராவிட மொழிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அறிந்து "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் மிக நீண்ட ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார்.
''மொழி நூலானது உலக மொழிகள் எல்லாவற்றையும் தழுவும் ஒரு பொதுக்கலை. உலக மொழிகள் எல்லாவற்றையும் ஆரியம் (Aryan) ,சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள்ளார் மாக்கசு முல்லர்.
அவற்றுள் துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திராவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல்.
இங்ஙனமே பிறரும் பிற குடும்பங்களை வகுத்துக் காட்டி உள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட்கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.
அவற்றுக்கொரு தொடர்புண்டென்று.அஃதாவது அம்மூன்றும் ஒரு குலத்தினின்றும் கவைத்திருக்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டிலேயே மாக்கசு முல்லர் (Max Muller) திடமாகக் கூறிவிட்டார்.
அம்மூலத்திற்குத் திராவிடம் மிக நெருங்கியதென்று கால்டுவெல் கூறியுள்ளார்.இக்கூற்றை என்னாலியன்ற வரை முயன்று மெய்ப்பித்திருக்கிறேன் ''
தென்சென்னை.மாவட்டம் மயிலைபகுதி.நொச்சிநரில் திராவிடர்கழகத்தின் சார்பில் .பிள்ளைக்கு பாலில்லை.பசிக்கு உணவில்லை மதுகடை தேவையா? மதுகடை மூடவலியுருத்தி.ஆர்ப்பாட்டம் செய்த.தோழர்கள். 7. 5. 20 முற் பகல் 10.00 மணி அளவில் தென்சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி இல்லம் எதிரில் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோ.குமாரி மற்றும் கு.பா.கவிமலர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மேற்கு மாம்பலம் கோடம்பாக்கம் சாலையில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் மு.ந.மதியழகன், தமிழ் மதி மற்றும் ம.கவின் ஆகியோர் கண்டன முழக்கமி ட்டனர்அரும்பாக்கம் பகுதியில் துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.
இன்று (5.5.20) முற் பகல் 10.00 மணி அளவில் தென் சென்னை திராவிடர் கழகத்தின் சார்பாக மெய்யியல் அறிஞர் காரல் மார்க்சின் 202வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மாறுதல் என்பது மாறாதது! - காரல் மார்க்ஸ்
27.4.20 முற்பகல் 11.00 மyணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக திராவிடர் இயக்க முன்னோடி, தென்னிந்திய நலவுரிமை சங்கத்தின்(ஜஸ்டிஸ் கட்சி ) தலைவர், முதல் முதலாக சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சர் பிட்டி தியாகராயரின் 169வது பிறந்த நாளை கொண்டாடப்பட்டது.