செவ்வாய், 31 ஜனவரி, 2017

பெரியார் பெருந்தொண்டர் மயிலை அ.பக்கிரிசாமியின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி






மயிலை அ.பக்கிரிசாமியின் படத்தைத் திறந்து வைத்து கவிஞர் கலி.பூங்குன்றன் உரை பெரியார், காமராசர், அண்ணா சிலைகளுக்கு கவிஞர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, செப். 16_- சென்னை மயிலாப்பூரை யடுத்த மந்தைவெளியில் உள்ள பூங்காப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தைபெரியார், கல்வி வள்ளல் காமராசர், பேரறி ஞர் அண்ணா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, திரா விடர் கழகக் கொடி ஏற் றும் விழாவும், அதனைத் தொடர்ந்து சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந் தொண்டர் சென்னை மயிலை அ.பக்கிரிசாமியின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சியும்  தென்சென்னை மாவட்ட இளைஞரணித்துணைத் தலைவர் மு.முகிலன் தலை மையில் மாவட்டத் தலை வர் வில்வநாதன் முன்னி லையில் நடைபெற்றது.

பெரியார் பெருந் தொண்டர் மயிலை அ. பக்கிரிசாமி படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நினைவேந்தல் சிறப்புரை ஆற்றினார். மயிலைக் குமார் வரவேற்றார்.

சென்னை மண்டல இளை ஞரணி செயலாளர் தமிழ் சாக்ரடீஸ், மண்டல மாண வரணி செயலாளர் மணி யம்மை, தென்சென்னை இளைஞரணித் தலைவர்  செல்வேந்திரன், செயலா ளர் சண்முகப்பிரியன், மயிலை சாமிநாதன்,  தயா ளன் ஆகியோர் நினைவேந் தல் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் மயிலை சேது ராமன், தரமணி மஞ்சுநா தன், தென்சென்னை மாவட்டத் துணை செய லாளர் அரும்பாக்கம் சா. தாமோதரன், வட சென்னை இளைஞரணித் தலைவர் புரசை அன்பு செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியை யொட்டி அ.பக்கிரிசாமி யின் மகன்கன் இரவி, இரவிக்குமார் மற்றும் மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரப்பிள் ளைகள் உள்ளிட்ட குடும் பத்தினரும், பகுதிவாழ் பொதுமக்களும் திரளாகத் திரண்டிருந்தனர்.

படத்தைத்திறந்து வைத்து திராவிடர்கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும் போது,
பெரியார் பெருந் தொண்டர் மயிலை அ.பக் கிரிசாமியின் இரங்கல் நிகழ்ச்சி என்று சொல்லப் பட்டாலும், பெரிய அள வில் துயரப்பட வேண்டிய தில்லை.

இந்திய ஆண்மக் களின் சராசரி ஆயுளை விட ஒன்றரை மடங்கு அதி கமாகவே வாழ்ந்து காட் டியிருக்கிறார். கடவுள் மறுப்பாளர், கருஞ்சட் டைத் தோழர் அப்படி வாழ்ந்து காட்டியிருப்பது மகத்தான வெற்றி.

நீண்ட கால ஆயுளுக்கு பெரியார் கொள்கை வழி செய்தது. கடவுள் இல்லை என்று சொன்னார். கடவுள் என்றால் என்ன? அப்படி இருக்கிறதா? அதற்கு சக்தி உண்டா? என்பதைப்பற்றி தெரியாமல் இருப்பவர்கள் பக்தி என்பது பயத்தால் மன நோய் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பகுத்தறிவு, துணிவு உள்ளவர்கள் பெரியார் தொண்டர்கள். தலைவர்க ளுக்கு உள்ள வரலாறு தொண்டர்களுக்கும் உண்டு. நேரில் தொண்டர்கள். சந் தித்த எதிர்நீச்சல்கள் ஏரா ளம். அதில் வெற்றி பெற்றி ருக்கிறார்கள் என் அறியும் போது இதற்கு நிகரான ஒன்று வேறு எந்த அமைப் புக்கும் கிடையாது.

உடல் நலன் பாதிக்கப்பட்ட பிற கும்கூட சக்கர நாற்காலி யில் பெரியார் திடலுக்கு வருகைதருவார். அப்படியே சுலோச்சனாசம்பத் வீட் டுக்கும் சென்றுவருவார். பல பிரமுகர்களை நேரி டையாக அறிந்தவர்.

பொதுத்தொண்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர். மற்றவர்களைப்போல செல்வந்தர் அல்லர். ஒரு வார்டு உறுப்பினர் பதவி கூட கிடையாது. ஆனாலும், அவரைப்பற்றி இப்போது பேசுகின்றோம் என்று சொன்னால் அவர் பெரி யார் கொள்கைகளை ஏற்ற வர் என்பதால்தான். பெரி யார் பெருந்தொண்டர், கருஞ்சட்டைப் பாதையிலி ருந்தார் என்பதுதான் விருது.  தந்தைபெரியார் தொண் டர் என்பதுதான் மிகப் பெரிய  விருது. செல்வத் தால் அல்ல, கல்வியால் அல்ல.

அவர் ஒரு பெரியார் தொண்டர் என்பதால் தான் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் பேச வந் துள்ளோம். அவரை மதிக்க வேண்டும் என்றால், அவர் நினைவைப் போற்ற வேண்டும் என்றால், அவர் கொள்கைவழியில் குடும் பத்தினரும் நடக்க வேண் டியது ஒன்றுதான் சரியான அளவுகோலாகும்.

பொது மக்கள் அபிப்ராயம் என் பது வெகுஜன அபிப்ராயம் என்று சொல்லும்போது அவர் கருத்துப்படி வாழ்ந்தால் என்ன லாபம் என்று கருதுவார்கள். அவரைப் போல பெரியார் கொள் கையை ஏற்றுக்கொண் டால் சுயமரியாதை இருக்கும்.

பெரியார் என்ற மாமனி தர் இல்லை என்றால் சுயமரியாதை இருந்திருக் காது. பெரியார் அடிப் படை மனித உரிமையைப் பெற்றுதந்தார். உலகில் எங் குமே இல்லாத வேடிக்கை ஒடுக்கப்பட்டவர்களே, பாதிக்கப்பட்டவர்களே அதை ஏற்றுக்கொள்கிறார் கள்.

அதையும் தாண்டி, அவர் களைத் திருத்துவதுதான் பெரும்பணியாக இருந் துள்ளது. தந்தைபெரியார் தான் தன்மான சிந்தனை உண்டாக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார். பல தலைவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர் களின் செயல்பாடுகள் முடங்கிவிட்டன.

பெரியார் அவர் காலத்தில் வெற்றி பெற்றதுடன், அவர் மறை வுக்குப் பிறகும் அவர் குறித்த தேடல், அவர் தேவைகுறித்து பேசப்படு கிறது. அவர் கொள்கையை ஏற்காதவர்கள்கூட, ஏதே னும் ஒருவகையில் அவர் படத்தையேனும் போட்டுக் கொண்டுதான் பொதுவாழ் வில் இருக்க முடியும் என் கிற நிலை உள்ளது. அந்த வகையில் பெரியாரின் தாக் கம் சமுதாயத்தில ஏற்பட் டுள்ளது. மதக்கலவரத்தால் ஒரு இனத்தையே படு கொலை செய்து அந்தக் குருதியை புத்தருக்கு அபி ஷேகம் செய்கின்றார்கள்.

புத்தர் கொள்கையைப் பேசுபவர்கள்கூட மார்க்கம் என்பதுமாறி மதவெறி யானது. பெரியார் ஒருவ ருக்குத்தான் சிறப்பு உண்டு. பெரியார் கொள்கையைப் பின்பற்ற அறிவும், துணி வும் வேண்டும்.. பெரியாரை எல்லோரும் ஏற்கவேண் டிய காலகட்டம் இப் போது வந்துள்ளது. எந்த வித சபலங்களுக்கும் ஆளா காமல், பெரியார் கொள்கை யாளர்கள் வார்டு உறுப்பி னர்கள் ஆவதில்லை.

ஆனால், மக்களுக்காகப் பணி ஆற்றியவர். பெரியார் பெருந்தொண்டர் அ.பக் கிரிசாமிக்குப் பிறகும்  அவர் மகன்கள், தோழர் கள் இயக்கக்கிளை அமைக்க வேண்டும். பெரியார் தொண்டர்கள் பேச்சே கொள்கையைச்சுற்றித்தான் இருக்கும்.

தந்தைபெரி யாருடன் நேரில் பழகியவர், அணுக்கத் தொண்டராக இருந்து போராட்டங் களில் பங்கேற்று அவர் கையாலேயே சான்று பெற்றவர். அரசியல் செல் வாக்கு பெற்றவர்கள் இருக் கலாம், அடித்தளம் பெரி யார்தான். கொள்கையைப் பின்பற்றாதவர்கூட பெரி யார்பற்றிப் பேசவேண்டிய காலம் இது. பெரியார் உலக மயம் ஆகி உள்ளார்.

விதைகள் பழுதுபடாமல் விருட்சமாக மாறவேண் டும். பெரியார் கருத்துக்களை தொடர்ந்து பேச, கிளை அமைக்கப்பட்டு பெரியார் பிறந்தநாள்விழாக் கூட்டம் நடத்த வேண்டும். அந்த விழாவில் பக்கிரிசாமி நினைவைப்போற்றுவது என்பது அவர் கொள்கைப் படி வாழ்ந்துள்ளார் என் கிற மரியாதை அளிப்பதாக இருக்கும்.

மாவட்டத் தோழர்களுடன் அவர் மகன்கள் இணைந்து இயக் கப்பணி ஆற்ற வேண்டும். இவ்வாறு திராவிடர்கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.
-விடுதலை,16.9.14

வியாழன், 26 ஜனவரி, 2017

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


 

சென்னை, ஜன. 25- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

தியாகராயர் நகர்

தந்தை பெரியாரின் 43ஆவது நினைவு நாளான 24.12.2016 காலை 8.15 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு தலைமையில் பிரச்சார செயலாளர் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி, மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப் பாளர் மு.ந.மதியழகன், துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் மற்றும் துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராக வன்,  சா.தாமோதரன் ஆகி யோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது.

கோ.மஞ்சநாதன், ந.இரா மச்சந்திரன், க.தமிழ்செலவன்,  ந.மணித்துரை, பிரகாசம்,  ஆகியோர் கலந்து கொண்ட னர்.

சேத்துப்பட்டு

முற்பகல் 11.30 மணிக்கு சேத்துப்பட்டு அம்பேத்தர் திடலிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன் அவர்க ளும், டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலா ளர் செ.ர.பார்த்த சாரதி அவர் களும்  மற்றும் துணைச் செய லாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் பகுதி பொறுப் பாளர் அ.பாபு தலைமையில் மாலை அணிவித்தனர்.  ந. இராமச்சந்திரன்,  மற்றும் பல தோழர்கள் கலந்து கொண் டனர்.

-விடுதலை,25.1.17

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 124ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று






புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 124ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று சென்னை காமராசர் கடற்கரை சாலையில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு அருகே  வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வா.மு. சேதுராமன், முன்னாள் மேயர் கணேசன், கவிக்கொண்டல் செங்குட்டுவன், வீ. குமரேசன் மற்றும் கழகத் தோழர் - தோழியர்கள் உள்ளனர். (சென்னை - 29.4.2014).

ஜாதி - மதவெறியாளர்களுக்கு எதிராக சிந்தனையூட்டும் நாள் தமிழர் தலைவர் பேட்டி

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி

பாரதிதாசன் படத்திற்கு குமரி ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப். 29- புரட் சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2014) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.

புரட்சிக்கவிஞர் பாவேந் தர் பாரதிதாசன் அவர்களின் 124-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2014) சென்னை காமராசர் கடற் கரை சாலையிலுள்ள புரட் சிக்கவிஞர் சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் கி.வீர மணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவி யும் மரியாதை செய்தார்.

புரட்சிக்கவிஞர் சிலைக்கு மாலை அணிவித்தவுடன் தமிழர் தலைவர் செய்தியா ளர்களிடம் கூறும்போது:-

புரட்சிக் கவிஞர் அவர்க ளுடைய பிறந்த நாளான இன்று (29.4.2014) ஒரு புதுமை நாள் என்பது மட்டு மல்ல. இன்றைக்கு நாட்டை மதவெறியும், ஜாதி வெறி யும் கப்பிக்கொண்டு இருண்ட எதிர்காலம் சூழ்ந்து விடுமோ என்று அஞ்சுகின்ற இந்தக் காலத்தில் புரட்சிக் கவிஞருடைய கருத்துக்கள் மிகவும் தேவை.

தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள் கையை ஒரு சூரணமாக்கி இலக்கியத்திலே தந்த பெரு மைக்குரியவர் புரட்சிக்கவி ஞர். இருட்டறையில் உள்ள தடா உலகம் என்று அன் றைக்குக் கேட்டார், அதை விரட்டுவது பகுத்தறிவே என்று சொன்னார். அப்படிப் பட்ட அந்த பகுத்தறிவை வலியுறுத்திப் பாடிய கார ணத்தால் உலகக் கவிஞராக உயர்ந்திருக்கக்கூடிய அவருக்கு உரிய விளம்பரம் தரப்படாவிட்டாலும்கூட, என்றென்றைக்கும் அவரு டைய இடத்தை எவரும் பறிக்க முடியாது.

புரட்சிக் கவிஞர் அவர்கள் மிகப் பெரிய சமுதாயப்புரட்சியை உருவாக்கித் தனித்த ஒரு தன் மையோடு மதவெறியை மாய்த்து மனித நேயத்தை மானுடத்தைக் காப்பாற்று வதற்காக மிகப்பெரிய அள விலே மானிடப்பரப்பையே தன்னுடைய அளவு கோலாக, தன்னுடைய நாடாக, தன் னுடைய கனவாக அமைத் துக் கொண்டவர்கள், அந்த வகையில் மானுடத்திற்கு மிகப்பெரிய மன்பதை உல கத்திற்கு அரிய கருத்துக்க ளைச் சொன்ன அந்தக் கவி ஞருடைய பிறந்த நாள் என் பது சமுதாயத்தினுடைய எழுச்சி மிகுந்த நாள். அவர் வாழ்க! அவர் புகழ் வாழ்க இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன், கழகத் தலைமைச்செயற் குழு உறுப்பினர் திருமகள், வட மாவட்டங்களின் அமைப் புச் செயலாளர் வெ.ஞான சேகரன், சென்னை மண்ட லச் செயலாளர் பன்னீர்செல் வம், கழக மாணவரணி மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராஜன், கு.தங்கமணி, சி.வெற்றிச் செல்வி, மருத்துவர் திரா விடன் அம்பேத்கர், மரகத மணி, சண்முக லட்சுமி, ஆனந்தி, கபிலன், சுரேஷ், செங்குட்டுவன், மயிலை சாமிநாதன், நதி ஆறுமுகம், மயிலை சேதுராமன், மஞ்சு நாதன், பாரதிநகர் வெங்க டேசன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முக பிரியன், அய்ஸ்அவுஸ் மகேந் திரன், பாலு, வெற்றிவீரன், மாரியப்பன், கலைமணி மகேஷ், அசோக்குமார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், சென்னை மாநகர முன்னாள் மேயர் சா.கணே சன், கவிக்கோ, வா.மு.சேது ராமன், கவிஞர் பொன்னடி யான், கவிக்கொண்டல், மா.செங்குட்டுவன், வண்ண பூங்காவாசன், கூட்டுறவுத் துறை ஓய்வு பெற்ற அதிகாரி பி.எல்.ராஜேந்திரன் மற்றும் திரளானோர் பங்கேற்று புரட்சிக் கவிஞர் பிறந்த நாளை சிறப்பித்தனர்.

-விடுதலை,29.4.14

புதன், 18 ஜனவரி, 2017

வள்ளல் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஜன.17 தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளான இன்று (17.1.2017) அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கழகப் பொதுச் செயலாளர்

வீ. அன்புராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற திராவிடர் இயக்கத் தலைவர்களிடம் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவருமான வள்ளல் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (17.1.2017) கொண்டாடப்படுகிறது.

அவரது 100ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று  சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர்

வீ. அன்புராஜ் ஆகியோர் கழகத் தோழர் - தோழியர்கள் புடைசூழ மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், சி. வெற்றிச்செல்வி, மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், துணைத் தலைவர்கள் மயிலை சேதுராமன், செங்குட்டுவன், செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன், அரும்பாக்கம் தாமோதரன், விடுதலை நகர் ஜெயராமன், ஜெ. குமார், தரமணி மஞ்சுநாதன், பவானி, மரகதமணி, மங்களபுரம் பாஸ்கர், பெரியார் திடல் தோழர்கள் சுரேஷ், கலையரசன், கலைமணி, உடுமலை வடிவேல்,  தமிழ்குடிமகன், தேனாம்பேட்டை பாஸ்கர், சைதை ஆனந்தன் மற்றும் திரளான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

-விடுதலை,17.1.17

திங்கள், 16 ஜனவரி, 2017

குடந்தை கோவிந்தராசன் மறைவு



தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவர் குடந்தை கோவிந்தராசன் சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று (26.11.2016) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.


-விடுதலை,26.11.16


தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், 27.11.16 முற்பகல் 10.30 மணியளவில் பழைய பல்லாவரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குடந்தை கோவிந்தராசன் அவர்களின் உடலுக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. 

மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், விருகை நாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நண் பகல் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

வியாழன், 12 ஜனவரி, 2017

வெள்ளுடை வேந்தர் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது




சென்னை, ஏப். 27- நீதிக்கட் சித் தோற்றுநர்களுள் முக்கிய மானவரான வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி.தியாகரா யர் அவர்களின் 163ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2014) சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட முகப்பில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தின் சார்பில் இன்று காலை 10 மணியளவில் திராவிடர் கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர் - தோழியர் புடை சூழ சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் வெள்ளுடை வேந்தர் வாழ்க! நீதிக் கட்சி நிறுவனர் வாழ்க!! சமூக நீதிக் காவலர் வாழ்க!!! என ஒலி முழக்கம் எழுப்பினர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினர் திருமகள், பொதுக் குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு மற்றும் சி.வெற்றிச்செல்வி, மணி யம்மை, தென்சென்னை மாவட் டச் செயலாளர் செ.ரா.பார்த்த சாரதி, பாரதிநகர் வெங்கடே சன், கொடுங்கையூர் தங்கமணி, தங்க.தனலட்சுமி, கோடம் பாக்கம் சண்முக லட்சுமி - மாரியப்பன், சுரேஷ், வை. கலையரசன், கலைமணி, தமிழ்குடிமகன், ஆனந்த், சுகுமார், புரசை.அன்புச்செல் வன், பெரியார் மாணாக்கன், சர்.பிட்டி. தியாகராயர் பேர வையின் மாநிலச் செயலாளர் மகாபாண்டியன் நிர்வாகிகள் நடராசன், மகாலிங்கம், சண் முகம், சுந்தரம், கண்ணை யன், பாலன், ராமசாமி ஆகி யோரும் பங்கேற்றனர்.

-விடுதலை,27.4.14

மயிலை மாங்கொல்லையில் மாபெரும் தலைவர் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்




சென்னை, செப். 23_- சென்னை மண்டல திரா விடர் கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா மயிலை மாங் கொல்லையில் தமிழர் தேசியத் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. ச.மகேந்திரன் முன் மொழிய மண்டல மாண வரணிச் செயலாளர் மணி யம்மை, ஆ.இர.சிவசாமி வழிமொழிந்தனர். திராவிடர் கழக சென்னை மண்டலத் தலைவர் தி. இரா.ரத்தினசாமி, மண்ட லச் செயலாளர் பன்னீர் செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா .வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, பொதுக்குழு  உறுப் பினர் சைதை எம்.பி.பாலு, மு.ந.மதியழகன், சி.செங் குட்டுவன், மயிலை சாமி நாதன், டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் தென் சென்னை இளைஞ ரணி மாவட்ட செயலா ளர் மு. சண்முகப்பிரியன் தலைமை வகித்தார். பொறியாளர் ஈ.குமார் வரவேற்றார்.  தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன் தொடக்க உரை ஆற்றினார்.

மந்திரமா? தந்திரமா?

விழாவில் புதுவை குமார் குழுவினர் மற்றும் நாத்திகன் ஆகியோர் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவுக் கலை நிகழ்ச் சிகளை வழங்கினர். தமிழ் நாடு முற்போக்கு எழுத் தாளர், கலைஞர் சங்கத் தைச் சேர்ந்த எழுத்தாளர் அருணன், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் செ.தமிழ் சாக் ரடீஸ், திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர்அ.அருள் மொழி, திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகி யோரின் உரைக்குப் பின் னர் விழா சிறப்புரையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.



நினைவுப் பரிசு

நிகழ்ச்சி இணைப்பு ரையை உ.மோகனப்பிரியா வழங்கினார்.கூட்ட முடி வில் மு.முகிலன் நன்றி கூறினார். சிறப்பாக செயல் பட்ட கழகத் தோழர்க ளுக்கு பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் நினை வுப் பரிசினை வழங்கி பாராட்டினார்.

வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், நீலாங் கரை ஆர்.டி.வீரபத்திரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், விருகம்பாக்கம் கோவிந்தராஜ், மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், கோ.வீ. இராகவன் உள்பட ஏராளமானவர் கள் கலந்து கொண்டனர்.

பயனாடை அணிவித்து பாராட்டு

விழா சிறப்புற நடக்க ஒத்துழைப்பை நல்கிய கழகத் தோழர்கள் வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், மகேந் திரன், முகிலன், விஜயக் குமார், ஓவியச் செல்வன், ஜெயப்பிரகாஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செங்குட்டுவன், சிவசாமி, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத் தய்யன், மண்டலத் தலை வர் இரத்தினசாமி, பொறி யாளர் மயிலை குமார், தென்சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், விஜய ராஜா, தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சண்முகப் பிரியன்,  சென்னை மண் டல இளைஞரணிச் செய லாளர் செ.தமிழ்சாக்ரட் டீஸ், தளபதி பாண்டியன், கார்வேந்தன், அன்பு, இரவி, இரா.பிரபாகரன் உள்பட பலரையும் தமி ழர் தலைவர் பாராட்டி பயனாடை அணிவித்தார்.



கறுப்புக்கொடி

25ஆம் தேதி மிக முக் கியப் பிரச்சினையாக ஈழத் தில் 90 ஆயிரம் சகோதரி கள் விதவைகளாக இருப் பதாக அய்.நா. அறிக்கை கூறியுள்ளது. இதற்கு காரணமான இனப்படு கொலையாளன் ராஜபக் சேவை போர் குற்றவாளி என்று நிறுத்தி அய்.நா. வின் மனித உரிமை ஆணையம் விசாரணை செய்வதற்கு உள்ளேயே வரக்கூடாது என்ற ராஜபக்சேவே இன்று அய்.நா.வில் பேச அழைத் ததைக் கண்டித்து டெசோ வின் தீர்மானப்படி அனை வரும் 25ஆம் தேதி வீட் டில் கறுப்புக் கொடி  ஏற்ற வேண்டும், கறுப்புச் சட்டை, கறுப்பு பேட்ஜ் அணிந்து கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றார் தமிழர் தலைவர்.

 

கடவுளர் பொம்மைகளுக்கு மத்தியில் கழக நூல்கள்


மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற பொதுக் கூட்ட இடத்தில் நவராத்திரி என்ற மூடநம்பிக்கை விழாவையொட்டி ஏராளமான பிளாட்பாரக் கடைகளில் கடவுளர் மொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பொம்மைகள் விற்பனைக்கு மத்தியில் கழகப் பொதுக் கூட்டம் பொம்மைகளுக்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் இளைஞர்களின் கட்டுப்பாட்டோடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பக்தி வியாபாரத்திற்கு மத்தியிலே கழக வெளியீடுகளான கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, என பார்ப்பனர்களைத் தோலுரிக்கும் நூல்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விடுதலை,23.9.14

செவ்வாய், 10 ஜனவரி, 2017

தமிழகமெங்கும் நடைபெற்ற பெரியார் 1000 வினா - விடைப் போட்டி-2014


பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் - பெரியார் பிஞ்சு இதழ் இணைந்து நடத்திய



 




அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 136ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்தும்பள்ளி மாணவ மாணவியர்களுக்கான  பெரியார் 1000 வினா விடைப் போட்டி தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தாம்பரம்

அதன் ஒரு பகுதியாக தாம்பரம் மாவட்டம் சார்பில் மூன்று இடங்களில் தேர்வுகள் நடைபெற்றன.காலை 10 மணிக்கு தேர்வு என்று அறிவித்து இருந்த போதிலும் 8 மணியில் இருந்தே மாணவ மாணவியர்கள் தேர்வு மய்யங்களுக்கு ஆர்வமாய் வரத் தொடங்கினர்.

பின்னர் சரியாக 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 11:30 வரை நடை பெற்றது. தேர்வு தொடங்கும் முன்னரே தேர்வு மய்யத்திற்கு வருகை தந்த கழகத்தின் பொதுச் செயலாளர் வீ . அன்புராஜ் அவர்கள் தேர்வுப் பணிகளை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் தேர்வுப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

தாம்பரம் சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற தேர்வில் 343 மாணவ மாணவியரும், தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில்  184 மாணவ மாணவியரும், குரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 390  மாணவ மாணவியர் என மொத்தம் 917 பேர்  தேர்வு எழுதினார்கள்.

தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கும் அவர்களோடு வருகை தந்த பெற்றோர்களுக்கும் தண்ணீர் பாட்டிலும் பிஸ்கட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது.

இத் தேர்வை கண்காணிக்கும் பணியில் முப்பதுக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட் டனர். அவர்களுக்கு சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி அவர்கள் மற்றும் வடக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் வெ. ஞானசேகரன் ,  மாவட்ட தலைவர் ப. முத்தையன், மாவட்ட துணைத் தலைவர் கோ. நாத்திகன்,  மாவட்ட செயலாளர் கு.ஆறு முகம், மாவட்ட பொருளாளர் மா. ராசு, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி. வீரபத்திரன், பொதுக்குழு உறுப்பினர் கே.எம். சிகாமணி ஆகியோர்   பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

குடந்தை
குடந்தை -புனித அன்னாள் மெட்ரிக் மேனிலை பள்ளி குடந்தை கழக மாவட்டம், குடந்தை பெருநகர பகுதிகளில் அமைந்துள்ள புனித அன்னாள் மெட்ரிக் மேனிலை யில் 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 137 பேரும் ,10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 9 மாணவிகளும், பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

இந்த மய்யத்திற்கு பெரியார் மணியம்மை பல்கலைகழக மாணவி கு.அறிவுவிழி நியமிக்கப்பட்டுஇருந்தார். மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ராணிகுரு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரா.கலைச்செல்வி, மாவட்ட கழக செயலா ளர் குடந்தை க.குருசாமி வலங்கை ஒன்றிய பகுத்தறி வாளர் கழக செயலாளர் கோவி.ரமேஷ் ஆகியோர் ஒருங்கினைப்பாளர்களாக பணியாற்றினார்கள்.

தேர்வு எழுதிய மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கலந்துகொண்ட மாண விகள்  மற்றும் அவர்களது பெற்றோர்கள் அனைவ ருக்கும் பிஸ்கட் தேநீர் வழங்கப்பட்டது. நகர மேனிலை பள் ளியில்,  குடந்தை அக்ரகாரமாக இருந்த நிலை மாறி இன்று தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் அங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை உண்டாக்கி  இருக்கிறது என்பது (31.08.2014) அன்று நடைபெற்ற பெரியார் வினாவிடை போட்டியின் மூலமாக நிரூபணம் ஆகி உள்ளது.

இந்த பள்ளிக்கு குடந்தை கழக தலைவர் கு.கவுதமன், செயலாளர் வழக்கறிஞர் பீ.இரமேஸ், ஆடிட்டர்  சு.சண் முகம் மாவட்ட கழக செயலாளர் குடந்தை க.குருசாமி, தஞ்சை மண்டல இளைஞரணி தலைவர் அஜிதன், ஆகியோர் ஒருங்கினைப்பாளர்களாக பணியாற்றினார் கள் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 176 பேரும், 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை 6 மாணவிகளும், பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

குடந்தை சிறிய மலர் மேனிலை பள்ளியில் இந்த பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமல்லாது நேடிவ் மேனிலை பள்ளி, அறிஞர் அண்ணா மேனிலை பள்ளி, கார்த்தி வித்யாலயா , எ ஆர்,ஆர், நகராட்சி பள்ளி, அரசு ஆண்கள் மேனிலை பள்ளி, சோழபுரம், ஸ்டார் மெட்ரிக் மேனிலை பள்ளி ,அம்மாசத்திரம், செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேனிலை பள்ளி குடந்தை, உட்பட 18 பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள்  6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 236 பேரும், 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை 59 மாணவிகளும், பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்  இந்த பள்ளிக்கு ஒருங்கிணைப்பாளர் களாக குடந்தை ஒன்றிய கழக தலைவர் ஜில்ராஜ், துணை தலைவர் ஆ தமிழ்மணி, நகர துணை தலைவர் நா.காமராஜ், பேராசிரியர் வினோத், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர்  சு.சண்முகம், விழந்த கண்டம் மதியழகன், மாவட்ட தலைவர் வை. இளங்கோவன், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் தி.கணேசன், அமைப்பாளர் ஏ. கைலாசம் ,வலங்கை ஒன்றிய தலைவர் நா.சந்திரசேகரன், துணை தலைவர் வீரமணி, குடந்தை ஒன்றிய செயலாளர் அசூர் செல்வம், மற்றும் கோவி.மகாலிங்கம், ஆகியோர் களப்பணி செய்தார்கள்.

கபிஸ்தலம் -மணி மெட்ரிக் மேனிலை பள்ளி (பாபநாசம்) மணி மெட்ரிக் மேனிலைப்  பள்ளி கபிஸ்தலம், மணி மெட்ரிக் மேனிலை பள்ளி கணபதி அக்ரகாரம், ஸ்ரீ வித்யாஸ்ரம் மெட்ரிக் பள்ளி வடகுரங்காடுதுறை, ஸ்ரீ கோவிந்தசாமி மூப்பனார் உயர்நிலைப்பள்ளி கபிஸ்தலம், அரசு உயர்நிலைப்பள்ளி வாழ்க்கை, அரசு உயர்நிலைப்பள்ளி வன்னியடி, அரசு மேல்நிலைப்பள்ளி புள்ளபூதங்குடி,அரசு உயர்நிலைப் பள்ளி, ராமானுஜபுரம், அரசு உயர்நிலைப்பள்ளி இலுப் பக்கோரை அரசு மேல்நிலைப்பள்ளி வீரமாங்குடி ஆகிய 10 பள்ளிகளில் இருந்து  மாணவ மாணவிகள்  6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 262பேரும், 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை 38மாணவிகளும், பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்

மாவட்ட துணை செயலாளர் சு.துரைராசு, அமைப் பாளர் வ.அழகுவேல், ஒன்றிய தலைவர் தங்க பூவா னந்தம், செயலாளர் சு.கலியமூர்த்தி, ஒன்றிய பகுத்தறி வளர் கழக தலைவர் தி.கணேசன், அமைப்பாளர் கைலாசம், திராவிடர் சமுதாய அறக்கட்டளை செயல் தலைவர் திருஞானசம்பந்தம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சு.சண்முகம், ஆகியோர் தேர்வுக்கான முழு ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.

கலந்துகொண்ட மாணவர்களுக்கு பெரியார் பிறந்த நாள் கேக் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது. பெரியார் 1000 தேர்வு கும்பகோணம் மாவட்டம் வலங்கைமானில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 69 பிரிவில் 125 மாணவ-மாணவியரும் 10, -12 பிரிவில் 62 பேரும் தேர்வு எழுதினர். மாவட்ட தலைவர் இளங்கோவன் செயலாளர் குருசாமி , மாவட்ட துணை செயலர் வலங்கை கோவிந்தன், குடந்தை கவுதமன், வலங்கை ஒன்றிய செயலர் பவானிசங்கர் தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டனர்.

பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் மோகன் ஒருங் கிணைத்து தேர்வுகளை நடத்தினார். அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ச.செங்குட்டுவன், சித்தன் வாழூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இராசேந்திரன் ஆசிரியர் த.வீரமணி ஆகியோரது வாழ்த்துரையோடு சிறப்பாக முடிந்தது.

நெய்வேலி

நெய்வேலி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற பெரியார் 1000 வினா-விடைப் போட்டியினை பொறியாளர் முன்னாள் என்.எல்.சி. கல்வித்துறை இணைச்செயலாளர் ஜோதிகுமார் அவர்கள் தலைமை வகித்து துவக்கி வைத்தார்கள். முன்னாள் மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி,நகர தலைவர் ச.கண்ணன், பொறியாளர் கண்ணன், பொறியாளர் வெங்கடே சன்,அமைப்பாளர் கு.இரத்தினசபாபதி, துணைத்தலை வர் த.பாஸ்கர், இளைஞரணி செயலர் ப.மாணிக்கவேல். இரா.நடராஜாமணி, நா.இராமராஜ், த.பிரபாகரன், இரா. பிரபாகரன், மற்றும் தமிழாசிரியர், ஓவிய ஆசிரியர், உடற் கல்வி ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு மாணாக்கர்களை ஒழுங்குபடுத்தி தேர்வுஎழுத துணை புரிந்தனர். மாணாக்கர்களுக்கு பேனா, பென்சில், அழிப்பான் இவைகளை ஜோதிகுமார் அவர்கள் வழங்கினார்.

இறுதியில் துணைத்தலைவர் த.பாஸ்கர் அவர்கள் என்.எல்.சி. கல்வித்துறை செயலாளர், ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணாக்கர் களுக்கு பேனா, பென்சில், அழிப்பான் இவைகளை வழங்கிய ஜோதிகுமார் நன்கொடை அளித்து உதவிய பொறியாளர் இராவணன், பொறியாளர் சண்முகம் மற்றும் பள்ளியின் பணியாளர்களுக்கும் நன்றி கூறினார்.

அரும்பாக்கம்
தென் சென்னை மாவட்டம், அரும்பாக்கத்தில் உள்ள நேஷனல் ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பெரியார் ஆயிரம் வினா _ விடைப் போட்டியில் 400_க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 136_ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்தும் பெரியார் ஆயிரம் வினா _ விடைப் போட்டி சென்னை, அரும்பாக்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் வகுப்பு ஒருங்கி ணைப்பாளர்களாக தலைமைக்கழகத்தின் சார்பாக இளவரசி, தெ.செ.மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் தமோதரன், மகளிரணி தோழி யர்கள் செ.கனகா, மு.பவானி, மயிலை குமார், மாரியப் பன், எத்திராஜ் ஆகிய திராவிடர் கழகத் தோழர்கள் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்வில் பெரியார் ஆயிரம் தேர்வை பள்ளி தாளாளர் கோ.பா.சாரதி தொடங்கி வைத்தார். தேர்வின் முடிவில் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பு பரிசினை திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி (வழக்குரைஞர்) வழங்கினார். உடன் திமுக 1-05_ஆவது வட்டச் செயலாளர் ந.அதியமான் பங்கேற்று சிறப்பித்தார்.

க.தமிழ்ச்செல்வன், மு.டில்லிபாவு, எம்.பிரகாசம், என்.எஸ்.கார்த்திக், க.திருச்செல்வன், த.தமிழ்ச்செல்வன், சி.செங்குட்டுவன், கோ.வி.ராகவன், தரமணி மஞ்சநாதன் உள்ளிட்ட கழகத்தோழர்கள் பலர் பெருந்திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பூவிருந்தவல்லி
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து வழங்கிய பெரியார் 1000 _ வினா, விடைப் போட்டியில் 31.8.2014 அன்று பூவிருந்தவல்லி பகுதியில் நடைபெற்றது. இதில் முதல் நிலைத் தேர்வை 225 மாணவர்களும், இரண்டாம் நிலைத் தேர்வை 90 மாணவர்களும் எழுதினர்.

போட்டித் தேர்வுகளை எழுதிப் பழகும் பழக்கத்தை இருபால் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், தந்தை பெரியாரின் சிந்தனைகளை மாணவர்களிடையே கொண்டு செல்லவும், பெரியார் 1000 என்ற பெயரில் வினா _ விடைப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஆவடி மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற இத்தேர்வில், அம்பத்தூரில் 1,114 மாணவர்களும், ஆவடி நகராட்சியில் 162 மாணவர் களும், முத்தா புதுப்பேட்டையில் 85 மாணவர்களும், பூவிருந்தவல்லி பகுதியில் 315 மாணவர்களும் என்று ஆக மொத்தம் ஆவடி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்று எழுதியுள்ளனர்.

முதல் கட்டமாக ஆவடி பகுதியிலும் (30.8.2014) இரண்டாவது கட்டமாக 31.8.2-014 அன்று பூவிருந்த வல்லி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது. இந்த நிகழ்வை மண்டலச் செயலாளர் வெ.ஞானசேகரன் தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீஸ் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தும் சிறப்பித்தார். ஆவடி மாவட்ட செயலாளர் பா.தென்னரசு தேர்வை மேற்பார்வையிட்டு தோழர்களை உற்சாகப்படுத்தினார்.

ஆவடி மாவட்ட உண்மை வாசகர் வட்டத் தலைவர் புழல் ராஜேந்திரன், ஆவடி மாவட்டத் தலை வர் கந்தசாமி, ராமதுரை, ஏழுமலை, ராமலிங்கம், மணி வண்ணன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர். கோபாலகிருஷ்ணன், உடுமலை வடிவேல் பெரியார் மாணாக்கன், திருமழிசை அரசு பள்ளி ஆசிரியர் மாட்சி, பூவை செல்வி, மணிமேகலை ஆகியோர் தேர்வு ஒருங் கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டு நல்ல வண்ணம் ஒத் துழைப்பு நல்கினர்.

தர்மபுரி

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பெரியார் ஆயிரம் வினா _ விடைப் போட்டி 11 மய்யங்களில் வெகுசிறப்பாக 30.8.2014 அன்று நடைபெற்றது. தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டி விழாவை பள்ளியின் தலைமை ஆசிரியர் முனியன் தலைமையில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வேட்ராயன், மாநில ப.க.துணைத்த லைவர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்களுக்கான போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தொடங்கி வைத்தார். மாவட்ட ப.க.தலைவர் ஊமை ஜெயராமன் ஒருங்கிணைத்து நடத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் என்.நடராஜன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விடுதலை வாசகர் வட்ட தலைவரும், கழகத்தின் கொடையாளருமான பெரியார் பெருந்தொண்டர் சின்னரா-ஜ் அவர்கள், வினா _ விடைக்குறிய தாளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் ராஜாபிரபு மேற்பார்வையில் கழக நிர்வாகி கள். பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் இரா.பரிமளம், நகர தலைவர் துரை.சித்தார்த்தன் (மருத்துவர்), கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் வனவேந்தன் சின்னசாமி, அர்ஜூனன், கல்வியாளர் சென்றாயன், அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பளி ஆசிரியர்கள் மல்லிகா, ஜே.ஆனந்தன், முருகேசன், கவுரன் தருமபுரி அதியமான் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன், சி.கிருட்டிணமூர்த்தி, மாட்லாம்பட்டி பள்ளி ஆசிரியர்கள் இராமன், அளே தருமபுரி பள்ளி ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் வினா _ விடைப் போட்டியை ஒருங்கணைத்து நடத்தினர்.

போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 164 பேரும், 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 186 பேர் என மொத்தம் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் அனைத்து மய்யங்களிலும் போட்டியில் கலந்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பிஸ்கட், குடிநீர் வழங்கப்பட்டன.

வாலாசாப்பேட்டை
பெரியார் 1000 வினா _ விடை போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகள் வாலாசப்பேட்டை ஆண்கள், பெண்கள் மேனிலைப்பள்ளி, சுமைதாங்கி மேனிலைப்பள்ளி, காவேரிப்பாக்கம் ஆண்கள் பெண்கள் மேனிலைப்பள்ளி, ரெண்டாடி மேனிலைப்பள்ளி மற்றும் பாணாவரம் ஆண்கள், பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக த.க.பா.புகழேந்தி (திமுக மாவட்ட பிரதிநிதி), செ.கோபி (மாவட்ட தி.க.செயலாளர்), சுரேசு (மாவட்ட தி.க.இளைஞரணி செயலாளர்), பொன் வெங்கடேசன் (மாவட்ட தி.க.து.செயலாளர்), ஆசிரியர் எஸ்.ராமஜெயம், எச்.ரஷீத்கான், சுனிதாராணி, ஆசிரியர் ரெண்டாடி மருதன், வாலாசப்பேட்டை மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், சுமைதாங்கி பள்ளி ஆசிரியர் ஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆவடி மாவட்டம்
ஆவடி மாவட்டம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பெரியார் 1000 வினா _ விடை, பெரியார் சிந்தனைச்சோலையிலே, போட்டித்தேர்வு 6 மய்யங்களில் சிறப்பாக நடைபெற்றது. 6 மய்யங்களின் விவரம்: டி.செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மிட்னமல்லை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, எஸ்ஆர்அய் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேது பாஸ்கரா நிகர் நிலைப்பள்ளி, எபினேசர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்ஆர்அய் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

ஆவடி காமராஜர் நகர் டி.செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா _ விடை, பெரியார் சிந்தனைச் சோலையிலே போட்டித்தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்மணி, தே.தமிழ்நெறி, நெமிலி சங்கர், ஆசிரியர் ஜி.வசந்தா, பாக்யா ஆகியோரின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 200 மாணவ, மாணவியிர்கள் தேர்விலே கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சிறப்பித்தவர்கள் மாவட்டத் தலைவர் மா.ஆ.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் பா.தென்னரசு, பள்ளித்தாளாளர் டி.செல்வம், கவிதா நந்தகுமார், காமராஜர் படிப்பகத் தலைவர் இராமநாதன், நகரத் தலைவர் இராஜேந்திரன், செயலாளர் கோ.முருகன், இளங்கோ, ராஜா மொகமத், நிழற்படக் கலைஞர் சேசாத்திரி, பெரியார் பிஞ்சு டி.எஸ்.செல்சியா, தமிழரசி, பிரீத்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

.-விடுதலை,6.9.14