திங்கள், 8 ஜூலை, 2024

மண்டல் பரிந்துரையை அமுல்படுத்தக்கோரி ஆசிரியர் கி.வீரமணி மற்றும் சந்திரஜித், பிரம்பிராகஷ் ஆகியோர் தலைமையில் டில்லியில் ஒரு வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (8-10-86).

 

இயக்க வரலாறான தன் வரலாறு(224) : 

ஏப்ரல் 16-30 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

26.09.1986 அன்று சென்னை அயன்புரம் ஜாயின்ட் ஆபிஸ் முன்பு தந்தை பெரியார் 108ஆவது பிறந்த நாள் விழா மற்றும் டெல்லியில் நடைபெறவிருக்கும் மண்டல் குழு பரிந்துரை செயல்பாட்டுப் போராட்ட விளக்கம் மற்றும் ரயில்வேயின் பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கம் எட்டாம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் டில்லியில் நடக்கவுள்ள சமுகநீதிப் போர் வரலாற்றில் பெரும் திருப்பமாக அமையும். ஒடுக்கப்பட்ட தோழர்களும் இளைஞர்களும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தேன்.

மேலும், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரையும் டில்லியில் கிளர்ச்சி, நாள்தோறும் ஆயிரம் பேர் பங்கேற்பு, மண்டல் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்தவும், நாடு முழுக்க ஒரே சீரான கல்விக்கும், டாக்டர் அம்பேத்கர் பெயரில் பல்கலைக்கழகம் அமையவும், சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் டில்லியில் தொடர் போராட்டம் என அடுக்கடுக்கான பிரசாரப் பயணத்தைப் பற்றி கூட்டத்தில் தெரிவித்து உரையாற்றினேன்.


மண்டல் பரிந்துரையை அமுல்படுத்தக்கோரி ஆசிரியர் கி.வீரமணி மற்றும் சந்திரஜித், பிரம்பிராகஷ் ஆகியோர் தலைமையில் டில்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் (8-10-86).

மண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றவும் மலைவாழ் மக்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும், டில்லியில் ஒரு வாரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டேன். 08.10.1986 அன்று டெல்லி நோக்கி _ கருஞ்சட்டைப் படை இளைஞரணி, மாணவர் அணி மற்றும் கழகத் தோழர்களுடன் புறப்பட்டு சென்றேன். இப்போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 04.10.1986 அன்று கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சாமிதுரை அவர்கள் தலைமையில், அன்றைய தினம் ஏழாவது நாளான போராட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் துரை.சந்திரசேகரன், மாநில மகளிர் அணி செயலாளர் க.பார்வதி, புதுவை மாநிலத் தலைவர் காரை சி.மு.சிவம், மதுரை மாநகர மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் கல்வி வள்ளல் பே.தேவசகாயம், முக்குலத்தோர் சங்கத் தலைவர் தியாகராஜ காடுவெட்டியார் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டார்கள்.

ஒரு வாரப் போராட்டத்தில் 50,000 பேர்  பங்கேற்றுக் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைப் போராட்டத்தில் இது ஒரு சரித்திரத் திருப்புமுனையை உருவாக்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக