ஞாயிறு, 19 மார்ச், 2017

அரும்பாக்கம் சா.தாமோதரன் தனது 54ஆம் ஆண்டு பிறந்த நாள்

தென்சென்னை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் தனது 54ஆம் ஆண்டு பிறந்த நாளினை(25.2.2017) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணி வித்து வாழ்த்து பெற்றார். தனது பிறந்த நாள் மகிழ்வாக ‘விடுதலை’ அரை யாண்டு சந்தா தொகையாக ரூ.1000, தமிழர் தலைவரிடம் வழங்கினார். நன்றி! வாழ்த்துக்கள்!
-விடுதலை,25.217

செவ்வாய், 14 மார்ச், 2017

அன்னையார் பிறந்த நாளில் எரிந்தது எரிந்தது மனுதர்மம் எங்கெங்கும் எரிந்தது!

அன்னையார் பிறந்த நாளில் எரிந்தது எரிந்தது மனுதர்மம் எங்கெங்கும் எரிந்தது!

ஆயிரத்திற்கும்மேல் பெண்கள் கைது!



சென்னை, மார்ச். 10  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தபடி, அன்னை மணியம்மையார் 98ஆம் பிறந்த நாளான இன்று (10.3.2017) ஒருகுலத்துக்கொரு நீதி சொல்லும் பெண்ணடிமையை வலியறுத்தும் மனுதர்ம எரிப்புப் போராட்டம் தமிழகம், புதுச்சேரியில் 10 இடங்களில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேல் பெண்கள் கைதானார்கள்.

பொறியாளர் இன்பக்கனி தலைமையில், திருவொற்றியூர் செ.உமா முன்னிலையில், சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெற்ற மனுதர்ம எரிப்புப்போராட்டத்தில் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி  கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு கழக மாவட்டங்களின் சார்பில் மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்.



அன்னை மணியம்மையாரின் 98 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2017) சென்னை பெரியார் திடலிலுள்ள அவரது நினைவிடத்தில் கழக மகளிரணியினர் புடைசூழ தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர்வளையம் வைத்து சூளுரை ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம்,

சிலைக்கு மாலை

காலை முதலே பெரியார் திடலை நோக்கி கருப்பு சேலைகளுடன் மகளிரணியினர், கருப்பு உடையில் மகளிர் பாசறைத் தோழர்கள் திரண்டனர். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் உறுதிமொழி கூற, அவரைத் தொடர்ந்து மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞர்கள், மாணவர் அணியினர் உள்ளிட்ட தோழர்கள் உறுதிமொழி ஏற்றார்கள். திராவிடர் தொழிலாளரணி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் நூலகவாசகர் வட்டம், திராவிடன் நலநிதி சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியார் திடலில் உள்ள 21 அடி உயர தந்தைபெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பின்னர் பெரியார் திடலிலிருந்து ஊர்வலமாக  சென்று பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் மனுதர் மத்தை  எரித்து, மனுதர்மத்துக்கு எதிராக முழக்க மிட்டபடி ஏராளமான பெண்கள் கைதானார்கள்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர்

கலி-பூங்குன்றன்,  கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மாநில மாணவரணி செயலாளர்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற பொருளாளர் நா.மாறன், பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி, தலைமைச்செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, மருத்துவர் மீனாம்பாள், செ.உமா, சி.வெற்றிசெல்வி,  பெரியார் களம் இறைவி, சென்னை மண்டல மகளிரணி செயலாளர் செ.உமா, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி, செயலாளர் பொறியாளர் ச.இ.இன்பக்கனி,  பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரிநடராசன், தென் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செ.கனகா,வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, நாக வல்லி முத்தய்யன், வி.வளர்மதி, பி.அஜந்தா, வெண் ணிலா கதிரவன், புரசை அன்புச்செல்வன் மு.பவானி, வி.சகானாப்ரியா, ஜெ.சொப்பனசுந்தரி, ரா.சங்கரி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, வி.நிலா, ரா.பரணீதரன், கோ.குமாரி, த.லலிதா, குஞ்சிதம் நடராசன், தங்க.தனலட்சுமி, வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மரகதமணி, கும்மிடிப்பூண்டி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மு.ராணி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கு.செல்வி, சு.துர்கா, சபலட்சமி, இளையராணி, மு.பவதாரணி, சு.ம.அஸ்வினி, நதியா, கர்லினா மேரி, வரலட்சுமி ஆவடி மோகனப்ரியா, மதுரவாயல் நிர்மலா பாலமுரளி மற்றும் மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் சென்னை மண்டலத்தில் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களிலிருந்து  மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வங்கிப் பணி யாளர்கள் சங்க பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, எழுத்தாளர் ஓவியா, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பேராசிரியர் மங்கள முருகேசன், வெள்ளையாம்பட்டு சுந்தரம், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தொழிலாளரணி செயலாளர் பெ.செல்வராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.வீரபத்திரன், தி.வே.சு.திருவள்ளுவன், வட சென்னை மாவட்டத்  தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், தாம் பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செயலாளர் கோ.நாத்திகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாநில மாணவரணி துணை செயலாளர் நா.பார்த்திபன், செங்குட்டுவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், கோ.வீ.ராகவன், இரா.பிரபாகரன்,  அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்செல்வம், சைதை தென்றல், திருவொற்றியூர் கணேசன், விடுதலைநகர் செயராமன், கரூர் கவுதமன், பெரியார் நூலகவாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், துணை செயலாளர் சேரன், ஆவடி மாவட்ட செயலாளர் சிவக்குமார்,  அமைப்பாளர் உடுமலை வடிவேல், தாம்பரம் மோகன்ராஜ்,  குணசேகரன், இராமேசுவரம் கே.எம்.சிகாமணி,  புழல் ஏழுமலை, இரணியன், அம்பத்தூர் இராமலிங்கம்,   அனகை ஆறுமுகம், கொடுங்கையூர் தங்கமணி, கி.இராமலிங்கம், கலையரசன், பெரியார் மாணாக்கன், இல.குப்புராசு, ஜீவா, கு.சோமசுந்தரம், ஆவடி தமிழ்மணி, க.தமிழினியன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், அச்சக மேலாளர் க.சரவணன், புகைப்படக்கலைஞர் சிவக்குமார், செஞ்சி ந.கதிரவன்,  ஆவடி இளைஞரணி கலைமணி, முத்துக்கிருஷ்ணன், பெரியார் திடல் சுரேஷ், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் உள்பட ஏராளமான தோழர்கள் அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் பெருந்திரளாகத் திரண்டனர்.

மனுதர்மத்தை எரித்த மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் எழும்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, புதுப்பேட்டை வீரபத்திரா சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டனர்.

 

சென்னையில் கைதானோர்

பெரியார் பிஞ்சுகள்: அனிச்சம், ம.செம்மொழி, த.எழில், த.யாழ்தமிழ், நிலா, பரணி, சமத்துவமணி, இளந்தென்றல் மணியம்மை, அன்புமணி, அறிவுமதி, இனியவன், வி.தங்கமணி, வி.யாழொளி, நனிபூம்கை, க.ஆற்றலரசி, அஸ்வினி, பவதாரணி, தமிழ்செல்வன்

திருமணம் ஆன மகளிர்

கா.சுபலட்சுமி, மு.கனிமொழி, மா.வீ.அருள்மொழி, ஜோஸ்வின் சகாயமேரி, சரோஜா, கீதா இராமதுரை, விஜயா, மு.இராணி, கு.செல்வி, சு.துர்கா, மா.இளையராணி, மு.நாகவள்ளி, சி.சாந்தி, பெ.கோமதி, க.வனிதா, கு.சங்கரி, சு.சாமுண்டீஸ்வரி, கர்லின்மேரி, செ.உமா, க.சுமதி, இறைவி, க.பண்பொளி, பூவை செல்வி, கற்பகம், சி.ஜெயந்தி, வீரமர்த்தினி, க.வெண்ணிலா, கலைச்செல்வி, எ.கர்லீனா, வரலட்சுமி, தமிழரசி, ச.நதியா, மு.நிர்மலா, கனிமொழி, இளவரசி, யுவராணி, விஜயலட்சுமி, நா.சாந்தகுமாரி, சு.ஆனந்தி, நூர்ஜகான், டி.லலிதா, செ.கனகா, பூங்குழலி

திருமணம் ஆகாதவர்கள்

த.மரகதமணி, ப.எழிலரசி, பூ.வனிதா, மு.பவானி, பா.மணியம்மை, மோகனப்பிரியா, இ.ப.சீர்த்தி

60 வயதுக்கு மேல்

சி.வெற்றிச்செல்வி, க.பார்வதி, ந.சவுந்தரி நடராசன், பா.பானுமதி, ஜெ.இன்பவள்ளி, ச.இன்பக்கனி, ஞா.மலர்விழி, ர.ராணி

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்....

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (10.3.2017) காலை தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர்  செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

மனுநீதி ஒழிந்த நாளே தமிழர்களுக்குத் திருநாள் என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.

வள்ளுவர்செய் திருக்குறளை

மறுவற நன்குணர்ந்தோர்

உள்ளுவரோ மனுவாதி

ஒருகுலத்துக்கொரு நீதி

என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் சொன்னார்கள்.

மனுநீதி, ஆரிய கலாச்சாரத்தின் வருணா சிரம தருமத்தின் பாதுகாப்பு அரணாகும். அந்த மனுநீதியை இந்திய அரசியல் சட்ட மும், இந்து லா என்று சொல்லக்கூடிய சட்டத்தின் அடிப்படையில் அங்கீகரித்துக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப் போல, ஜாதி ஒழியவேண்டுமானால், ஜாதியையே ஒழிக்கிறோம் என்று அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும்; வெறும் தீண்டாமையை ஒழிக்கிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது; தீண்டாமை ஒழியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சட்டப்படி தீண்டாமை ஒழிந்திருக்கிறதே தவிர, இன் னும் இரட்டைக் குவளைகளும், இன்னும் சுடுகாடுகளுக்குக்கூட பொது வீதியில் பிணத்தை எடுத்துச் செல்லக் கூடிய உரிமையைக்கூட பெற முடியாத சூழல் இருக்கிறது.

அதைவிட, எங்கு பார்த்தாலும் பெண் களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், சட்டத்தின் முன் அவர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதி ஆணவக் கொலைகள் எங்கு பார்த்தாலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அளவில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காரணம், முழுக்க முழுக்க இது பாரதீய ஜனதா ஆட்சி - ஆர்.எஸ்.எஸ். ஆட்சி என்ற பெயராலே நடைபெறக்கூடிய மனுதர்மத்தினுடைய மறுபதிப்பு ஆட்சியாக இருக்கின்ற காரணத்தினால்தான், மூலத்தையே நாங்கள் எரிக்க விரும்புகிறோம் என்று எங்களுடைய வெறுப்பை காட்ட - புதியதோர் மனித தர்மம் மலரவேண்டும் - மனுதர்மம் அழியவேண்டும் என்பதற்காக மகளிரே புறப்பட்டு களம் காணுகிறார்கள். சற்று நேரத்தில் எரிப்பார்கள்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

-விடுதலை,10.3.17

திங்கள், 13 மார்ச், 2017

மனுதர்ம எரிப்புப்போராட்டத்தில் கலந்துகொண்ட மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு



சென்னை, மார்ச் 12- அன்னை மணியம்மையார் 98 ஆம் பிறந்த நாளான நேற்று (10.3.2017) சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பில் மனுதர்மம் எரிப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

திருவாரூரில் 17.12.2016 அன்று நடைபெற்ற திராவிடர் மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அன்னை மணியம்மையார் பிறந்த நாளான நேற்று (10.3.2017) மனுதர்மம் எரிப்புப்போராட்டம் நடைபெற்றது.

சென்னை மண்டல மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பில் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள்.

சென்னை எழும்பூர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டு காவல்துறை வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட கழக மகளிர் தோழர்கள் புதுப்பேட்டை சமூக நலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனை வரும் மாலை 5.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

போராட்ட வீராங்கனைகளுக்கு

தமிழர் தலைவர் பாராட்டு, பரிசளிப்பு

விடுதலையான கழக மகளிரணி, மகளிர் தோழர்கள் அனைவரையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் திடலில் நேரில் சந்தித்து பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உடனிருந்தார்கள். தமிழர் தலைவருடன் கைதான கழக மகளிரணி, மகளிர் பாசறையினர் குழுப் படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். மேலும், அனைவருக்கும் திருவாரூர் மாநாட்டுத் தீர்மானங் களைக் கொண்ட “திருவாரூர் தீ பரவட்டும்“ புத்தகத்தைப் பரிசாக அளித்தார்.

அன்னை மணியம்மையார் பிறந்த நாளில்

மனுதர்ம எரிப்புப் போராட்டம்

தமிழர் தலைவர் பாராட்டுரையில் குறிப்பிடும்போது,

அம்மா தலைமை வகித்த இந்த இயக்கத்தில் அவர் பிறந்த நாளில் நடைபெற்ற மனுதர்ம எரிப்புப்போராட்டத்தில் கழகக் குடும்பங்களிலிருந்து ஏராளமான அளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதேபோன்று இனி அறிவிக்கப்படுகின்ற  போராட்டங்களிலும் அதிக அளவில் பெண்கள் பங்கேற்றிட வேண்டும். மகளிரணி, மகளிர் பாசறையின் கலந்துரையாடல் கூட்டம் கூட்டப்பட வேண்டும். (16.3.2017 என தேதியும் அறிவிக்கப்பட்டது)

அதன்பின்னர் மாநில அளவிலான மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் (ஏப்ரல் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில்) நடைபெற வேண்டும்.

மகளிரணி, மகளிர் பாசறை தோழர்களின் பங்களிப்பு எல்லா நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் இருக்க வேண்டும். மற்ற அமைப்புகளுக்கு வழிகாட்டக்கூடிய அளவில் கழக மகளிரணி, மகளிர் பாசறையிலிருந்து ஏராளமானவர்கள் தொடர்ச்சியாக கலந்துகொள்ள வேண்டும்.

அன்னை மணியம்மையார்

நினைவு நாளில் கலந்துரையாடல்

எனவே, அடிக்கடி இந்த அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும். இதுமாதிரி பல மடங்கு மகளிர் தோழர்கள் 16ஆம் தேதி அன்று வரவேண்டும். மதவாதிகளைப் பார்த்தீர்களா னால், சர்ச்சுகளுக்கு, கோயிலுக்கு போவது, அதேமாதிரி கேளிக்கைகளுக்கு சினிமாவுக்குப்போவது என இதெல்லாம் பார்த்தீர்களானால், குடும்பம் குடும்பமாக போகிறார்கள். அதுமாதிரி, நம்முடைய தோழர்களும் பெண்களை வீட்டில் விட்டுவிட்டு வரக்கூடாது. அன்னை மணியம்மையார் நினைவு நாளன்று (16.3.2017) மகளிர் கலந்துரையாடலுக்கு எல்லோரும் வரவேண்டும். அன்றைக்கு தேவைப்படும் வசதிகளுக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். மனம் திறந்து நீங்கள்தான் அதிகமாக பேச வேண்டும். கருத்துகளைச் சொல்ல வேண்டும்.

இதை பலப்படுத்துவது எப்படி என்று சொல்லி, ஒவ்வொரு பகுதிகளிலும் மகளிரணி அமைப்பு இருக்க வேண்டும். சென்னை மண்டலம் என்றால், சென்னை மண்டலத்தில் எத்துணை கழக அமைப்புகள் இருக்கின்றன? அதில் மகளிரணி அமைப்பு பலமான அமைப்பாக இருக்கவேண்டும். அதற்குப்பிறகுதான் மற்ற அமைப்புகள் என்று இருக்க வேண்டும். ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல, நாங்கள் ஆண்களைவிட அதிகமாக இருக்கிறோம், அதிக மாக செயல்படுகிறோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வாய்ப்புகளை உண்டாக்க வேண்டும்.

பெண்களே அனைத்திலும் முன்வரவேண்டும்

அதுமட்டுமல்ல, அடிக்கடி மகளிரணியே முன்வரவேண் டும். நாம் தனியே மகளிர் பொறியியல் கல்லூரி நடத்துகிறோம். அதில் கிடைத்த அனுபவம் என்னவென்றால், பேராசிரியர்கள் உள்பட எந்த ஆண்கள் குறுக்கிட மாட்டோம். கூட்டம் ஏற் பாடு செய்வதிலிருந்து எல்லாமே பெண்களேதான் செய்வார் கள். புதுமை தென்றல் என்றால், வீரமர்த்தினி அவருடைய பொறுப்பிலேயே எல்லாவற்றையும் செய்கிறார். அதுபோல், மகளிர் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு, அவரவர்களுக்கும் வாய்ப்புகளைக் கொடுத்துவிட்டு பின்னால்தான் ஆண்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் வரும்.

ஆகவே, நல்ல அளவுக்கு பார்த்துக்கொள்ளுங்கள். இளைஞரணியிலே பேசிய கருத்துகள் பத்திரிகையில் வந் திருக்கிறது. நீங்கள் எல்லோருமே பார்த்திருக்கலாம்.  மகளிர் தோழர்களுக்கு ஒரு தனி வேண்டுகோள், 16ஆம் தேதி அன்றைக்கு விரிவாகப் பேசிக்கொள்ளலாம்.

உங்கள் உடல் நலனைக் கட்டாயமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அலட்சியப்படுத்தாமல், பேணிக் காக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம். எந்த வயதினராக இருந்தாலும், உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

உடல் பரிசோதனையைப் பொருத்தவரையிலே செல வாகும் என்று பார்க்க வேண்டாம். பெரியார் மருத்துவமனை, பெரியார் மருத்துவ அணியை ஒருங்கிணைத்து, சிறப்பாக எல்லாமே செய்யலாம். மகளிர் உள்ள உறுதியோடு, நல்ல உடல் வளத்தோடு, உடல் நலத்தோடு இருக்க வேண்டும்.

இளம்மகளிரைக் கொண்ட

சமூகக் காப்பு அணிப் பயிற்சி

சமூகக்காப்பு அணி பயிற்சி நடத்தவேண்டும் எனும்போது, இளம் மகளிரைக்கொண்ட சமூக காப்பு அணியை ஓர் இராணுவ அணிவகுப்புமாதிரி நடத்துவதற்கு முன்வந்து, அதற்கு வேண்டிய பயிற்சிகளைக்கொடுக்கக் கூடிய அள வுக்கு வரவேண்டும்.

ஆகவே, ஆணைச்சார்ந்துதான் ஒரு பெண் இருக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறது பாருங்கள், அந்த நிலையை அறவே மாற்றவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாருடைய அடிப்படைத் தத்துவம். அந்தத் தத்துவத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குத் துணிச்சல் வரவேண்டும். தெளிவு வரவேண்டும். முதலில் வரும்போது சாதாரணமாக நினைக்கலாம். நிறைய படியுங்கள். விடுத லையை படியுங்கள்.

பாராட்டுக்குரிய தோழர்கள்

உமாவும், இன்பக்கனியும்

மகளிரணித் தோழர்கள் உமாவும், இன்பக்கனியும் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செய்தார்கள். அதில் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களை விடுதலை யில் எழுதினார்கள். நிரம்ப சிறப்பாக இருந்தது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த சுற்றுப்பயண அனுபவம் என்பது தோழர் இன்பக்கனியின் அனுபவங்களில் முற்றிலும் மாறுபட்டிருந்தது. தோழர் உமாவைப் பொருத்தவரையில் திருவொற்றியூர் உள்ளிட்ட சென்னையில் மட்டும்தான் குறுகிய வட்டத்தில் பணிசெய்த அனுபவம் அவர்களுக்கு இருந்தது. இன்றைக்கு எல்லா இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்கள். நம்முடைய தலைமை செயற்குழு உறுப்பினர் பார்வதி போன்றவர்கள்தான் இதுபோல் செல்வார்கள். இப்போது அவர்களுடைய உடல் நலனைக்கருதி, அவர்கள் இப்போது போக முடியாத நிலை யில், வயதானவர்கள் மதியுரைஞர்களாக, வழிகாட்டக்கூடிய வர்களாக மூத்தவர்கள் அனுபவம் உள்ளவர்கள் நமக்குத் தேவை. அவர்களை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ள லாமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், செயல்படுத்துவதற்கு நல்ல துடிப்புள்ள தோழர்கள் முன்வரும்போது அதை ரொம்ப அழகாக எல்லா வற்றுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மகளிர் அமைப்பு என்றும் பலமான அமைப்பாக வேண்டும்

16ஆம் தேதி மறுபடியும் சந்திப்போம். இந்த அமைப்பு பலமாக இருக்கவேண்டும். திராவிடர் கழகத்தின் மகளிரணி என்றால், மற்ற அமைப்புகளும், அரசும் நம்மைக்கண்டு பயப்படக்கூடிய அளவுக்கு கட்டுப்பாடு மிகுந்த அமைப்பாக திகழ்ந்திட வேண்டும்.

இன்றைய போராட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்காத வகையில் மிகப்பெரிய அளவுக்கு எல்லோரும் ஒத் துழைத்தீர்கள். ஆகவே, வாய்ப்புக்குறைவு (மிஸீநீஷீஸீஸ்வீஸீவீமீஸீநீமீ) ஏதேனும் இருந்திருந்தால் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

எதிர்பார்த்த அளவைவிட குறைவாக வந்திருந்ததாக கவிஞர் கூறினார். என்னைப்பொறுத்தவரையில் நான் அப் படி நினைக்கவில்லை. சென்னையிலே சென்னை மண்ட லத்தில் இவ்வளவு பேர் வந்தார்கள் என்பது பெரிய விஷயம். அதற்கு முன்பாக தந்தைபெரியார் காலத்தில் ரொம்ப காலத்துக்கு முன்பாக, நான் பொறுப்பேற்று விடுதலை அலு வலகத்துக்கு வந்தபோது,  உங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். விடுதலை அலுவலக வராண்டாவிலேயே சென்னை மாவட்டக் கமிட்டிக் கூட்டத்தை முடித்துவிடுவோம். அந்த அளவில் தந்தைபெரியாரும் உட்கார்ந்திருப்பார்கள்.

மகளிரணி ஆரம்பிக்கும்போதுகூட, கொஞ்சம் பேர் எங்களை ஊக்கப்படுத்தவில்லை. அன்னை மணியம்மை யாரும்கூட மகளிரணி என்று ஆரம்பிக்கிறோமே, அதில் சின்ன கோளாறு வந்தால்கூட கட்சிக்கே கெட்ட பெயர் வந்து விடுமே என்றார். தொடக்கத்தில் சில இடங்களில் பிரச்சினை கள் ஏற்பட்டன. அதுகுறித்து கவலைப்பட வேண்டாம். போகப்போக சரியாகிவிடும் என்றோம்.

தந்தைபெரியார் கருத்துகளை

தொடர்ந்து படியுங்கள்

இப்போது பார்த்தீர்களானால் எந்தப்பிரச்சினையும் இல்லை. நல்ல துணிச்சலுடன், நல்ல கட்டுப்பாடுடன் இங்கு வந்துள்ள நீங்கள் எல்லாதுறைகளிலும் வழிகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். தந்தை பெரியாருடைய புத்தகங்களைப் படியுங்கள். பெண்ணுரிமை, தந்தைபெரியாருடைய கருத்துகளைப் படியுங்கள். இயக்க வெளியீடுகளை, விடுதலையை, உண்மையைப் படியுங்கள்.

எந்தெந்த துறைகளில் உங்களுக்கு ஆற்றல் இருக்கிறதோ, அந்த ஆற்றலை வெளியே கொண்டு வரவேண்டும் என்று சொல்லி, இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட உங்கள் எல்லோருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொள்கிறேன்.

உங்களின் உடல் நலனைப்பார்த்துக்கொள்ளுங்கள். உள்ள உறுதியில் உங்களிடம் தடுமாற்றமே கிடையாது.  இரண் டாவது வயது இடைவெளியும் இங்கே கிடையாது. வயது என்பது ஆண்டுதோறும் கூட்டிக்கொண்டு போகும். ஆனா லும், நாம் எல்லோரும் ஒரு குடும்பம். இந்தக் குடும்பத்திலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அளவுகடந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் நான்.

மகளிர் மட்டுமே பங்கேற்ற தனிப் போராட்டம்

இது ஒரு தனிப்போராட்டம். அதனால்தான் ஆண்கள் யாரும் பங்கேற்கவேண்டாம். மகளிரே செய்யட்டும் என் றோம். காவல்துறை மேலிடம் வரைக்கும் தகவல் போகும். பெண்களே வந்தார்கள். பெண்களே நடத்தினார்கள் என்று. ஏனென்றால், அன்னை மணியம்மையார் தலைமை தாங்கிய இயக்கம்.  அவருடைய பிறந்த நாளிலே இன்றைக்கு இப்படி நடந்ததுதான் ரொம்ப பொருத்தமானது என்று சொல்லி, இனி நாம் நடத்தும் போராட்டங்களில் மகளிர் முன்நின்று வழிகாட்டுவார்கள், ஒரு குழுவாக வழிகாட்டியிருக்கிறீர்கள். அந்த வழிமுறை இன்னும் மேலும் மேலும் அகலமாகும். மேலும் மேலும் அது விரிவடையும். மேலும் மேலும் அது பெருகும். மேலும் மேலும் அது பலமடையும் என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

சென்னை மண்டல மகளிரணி செயலாளர் செ.உமா, வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இ.இன்பக்கனி, கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், கும் மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன் உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் பலரும் உடனிருந்தார்கள்.

முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியருடன் பெருவிருப்பத் துடன் போராட்ட வீராங்கனைகள் குழுவாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

-விடுதலை,12.3.17
.

இரு சக்கர வாகனப் பேரணியில் கலந்து கொள்ளும் தோழர்கள் கவனத்திற்கு

.1. இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு நபர் களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும்.

2. இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு நபர் களும் தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தினை உடன் எடுத்து வரவேண்டும். (ஓட்டுனர் உரிமம் காலாவாதியாகாமல் (ணிஜ்ஜீவீக்ஷீஹ்) இருக்க வேண்டும்).

3. இரு சக்கர வாகனத்தின் அசல் பதிவுச் சான் றினை (ஆர்.சி) உடன் கொண்டுவரவேண்டும்.

4. வாகனப் பேரணிக்குக் கொண்டு வரும் இரு சக்கர வாகனத்தின் காப்பீடு (இன்ஸுரன்ஸ்) காலா வாதியாகாமல் (ணிஜ்ஜீவீக்ஷீஹ்)  இருக்க வேண்டும்.

5. இரு சக்கர வாகனப்பேரணிக்கு எடுத்து வரும் வாகனத்தை 17.03.2017க்குள் முழு சர்வீஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.

6. வாகனப் பேரணிக்கு கொண்டு வரும் இரு சக்கர வாகனத்தின் பதிவுச்  சான்றின் நகல் (ஆர்.சி), ஓட்டுனர் உரிமம் நகல் (டிரைவிங் லைசென்ஸ்), வாகன காப்பீடு  நகல் (இன்ஸுரன்ஸ்) ஆகியவை களை தங்களது குழுவின் ஒருங்கிணைப்பாளர்களிடம் 15.03.2017க்குள் சமர்ப்பிக்கவும்.

பயண ஏற்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர்கள்:

1.     வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

2.     இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

3.     த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்)

4.     ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணிச் செயலாளர்)

குழு ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்புக்கு:

1.    சென்னை - ச.பிரின்சு என்னாரெசு பெரியார்  9444210999

2.    தருமபுரி  - ஆத்தூர்அ.சுரேசு - 9940794647

3.    கோவை  - கோவை ஆ.பிரபாகரன் - 9994473728

4.    தென்காசி  - இல.திருப்பதி  -9710944832

5.    கடலூர்  - உரத்தநாடு இர.தர்மசீலன் - 9786749397

- திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி
தலைமை நிலையம், சென்னை

செவ்வாய், 7 மார்ச், 2017

திராவிடர் கழக மாநில மாணவரணி, இளைஞரணி கலந்துரையாடலில் எழுச்சிமிகு தீர்மானங்கள்

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு தருமபுரியில்                           * மாணவர் அணி மாநாடு சென்னையில்
*ஒவ்வொரு சனி, ஞாயிறிலும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள்               *பெரியார் சமூகக் காப்பணி புதுப்பிப்பு


சென்னை, மார்ச் 5 திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவரணி, கலந்துரையாடலில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் எழுச்சியூட்டும் வகையில் சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
05.03.2017 அன்று சென்னை பெரியார் திடலில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக இளைஞரணி - மாணவரணி மாநில கலந்துரையாடல் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


தீர்மானம் - 1
இரங்கல் தீர்மானம்
திராவிடர் கழகம் எடுக்கும் முயற்சி களுக்கும் குற்றாலம், பெரியாரியல் பயிற்சி முகாம் உட்பட பெரியார் கல்வி நிறுவனங் களுக்கும் பெரிதும் உறுதுணையாகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது அளவிட முடியாத மரியாதையும், மதிப்பும் வைத்திருந்த பெரியார் மணியம்மை பல் கலைக் கழக இணைவேந்தரும், VKN நிறு வனங்களின் தலைவரும், கொடையாளருமான VKN கண்ணப்பன் அவர்களின் மறைவிற்கு கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறோம். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தார்கள், உறவினர்கள், VKN நிறுவன ஊழியர்களுக்கும் இக்கூட்டம் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் - 2
கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயலாக்குதல்   
4.02.2017 அன்று மதுரையில் நடைபெற்ற கழகப்பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் - 3
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வேன் 
நிதி உழைத்தவர்களுக்கு பாராட்டு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சுற்றுப்பயண வேகத்திற்கு வேன் ஈடுகொடுக்க முடியாமல் பழுதான நிலையில், தமிழர்களின் பாதுகாப்பு கேடயமாகவும், உரிமை மீட்புப் போரில் முதன்மையாக நின்று 84 வயதிலும் ஓய்வில்லாது சுற்றுப்பயணம் செய்துவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திராவிடர்கழக இளைஞரணி - மாணவரணி சார்பில் தமிழர் தலைவரின் 84ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக புதிய பரப்புரை பயண ஊர்தி வேன் வழங்கிட 15.09.2016 அன்று திருச்சியில் நடைபெற்ற கழக இளைஞரணி - மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் 3 மாதக்காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத் துத் தரப்பு மக்களையும் சந்தித்து (கடைவீதி வசூல் உட்பட) இலக்கையும் தாண்டி நன் கொடையைத் திரட்டிட உழைத்திட்ட கழக இளைஞரணி - மாணவரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் ஒத்துழைப்பு வழங்கிய கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மருத்துவரணி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்கள், தோழர்களுக்கும் நன்கொடை வழங்கிச் சிறப்பித்த கொடையாளர்களுக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் வேனை நவீன முறையில் வடிவமைக்க பொறுப்பேற்று செயல்படுத்திய கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் - 4
மனுதர்ம எரிப்புப் போராட்டம்
அன்னை மணியம்மையார் பிறந்தநாளான மார்ச்-10 அன்று மகளிரே முன்னின்று பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தில் கழக இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் பங்கேற்று வெற்றிபெறச் செய்வது என முடிவுசெய்யப்படுகிறது.
தீர்மானம் - 5
திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி மாநில மாநாடு
திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டை தருமபுரியிலும், திராவிடர்மாணவர்கழக மாநில மாநாட்டை சென்னையிலும் நடத்துவதற்கு அனுமதியும், தேதி ஒதுக்கித் தருமாறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் - 6
பெரியாரியல் பயிற்சிப்பட்டறை
கழக இளைஞரணி-மாணவரணி தோழர்களுக்கு கொள்கைத் தெளிவை உண்டாக்கும் நோக்கோடு பெரியாரியல்  பயிற்சிப்பட்டறைகளை மண்டல வாரியாக (2 நாட்கள்) நடத்துவது என முடிவுசெய்யப்படுகிறது. தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் - மாணவர்கள் பெருமளவில் பங்குபெறவும், ஒத்துழைப்பும் வழங்கிடுமாறு கழக பொறுப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் - 7
இளைஞரணி - மாணவரணி தோழர்களை களப்பணியாளராக்குதல்
கழகத்தின் சார்பில் நடைபெறும்போராட்டங்கள், பிரச்சாரப்பணிகள், கழக வெளியீடுகளை பரப்புதல், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல் , நிதி திரட்டுதல் உள்ளிட்ட கழகம் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் முன்னின்று நடத்துவதற்கு எந்தநேரத்திலும், எதற்கும் தயார் நிலையில் உள்ள கொள்கைத் தெளிவு, ஆளுமைத்திறன் உள்ள இளைஞர்களாக மண்டலத்திற்கு 10 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தனியாக களப்பணி பயிற்சி முகாம்களை நடத்துவது என முடிவுசெய்யப்படுகிறது.
தீர்மானம் - 8
முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்
கழக கொள்கைளை விளக்கியும், அவ்வப்போது எழும் முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தியும் கழக இளைஞரணி - மாணவரணி சார்பில் தெருமுனைக்கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது என முடிவுசெய்யப்படுகிறது.
தீர்மானம் - 9
‘நீட்' நுழைவுத் தேர்வுக்கு விலக்கு
பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிப்புக்கு ஆளாக்கும் சமூகநீதிக்கு எதிரான மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு  நுழைவுத் தேர்விலிருந்து (நீட்)  தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சியும் ஒருமித்தக்குரலில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு மத்திய அரசும், குடியரசுத்தலைவரும் ஒப்புதல் வழங்கி 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் - 10
உலகத் தலைவர் தந்தை பெரியார் நூல் திறனாய்வு
உலகத் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுதிகளையும் - கட்சிகளை கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் பெரிதும் ஈர்க்கும் கழகத் தலைவர் அவர்களின் வாழ்வியல் சிந்தனை நூல்களையும், கழகப் புதிய வெளியீடுகளையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் வெளியிட்டு, அந்நூல்களைப்பற்றித் திறனாய்வுச் சிறப்புக் கூட்டங்களையும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
நூல் வெளியீட்டு நடைபெறும் ஊர்கள்
1. வடசென்னை, 2. தென்சென்னை 3. பொன்னேரி, 4. ஆவடி, 5. தாம்பரம், 6. காஞ்சிபுரம், 7. அரக்கோணம், 8. வேலூர், 9. சேத்துப்பட்டு 10. திண்டிவனம், 11. புதுச்சேரி, 12. நெய்வேலி, 13. கல்லக்குறிச்சி, 14. விருத்தாச்சலம், 15. மத்தூர், 16. தருமபுரி, 17.சேலம், 18. ஓமலூர், 19. ஆத்தூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22 மேட்டுப்பாளையம், 23. நம்பியூர், 24. நீலமலை, 25. கோவை, 26. கணியுர், 27. கரூர், 28. திருச்சி, 29. லால்குடி, 30. பெரம்பலூர், 31. அரியலூர், 32. மயிலாடுதுறை, 33. திருவாரூர், 34.நாகை, 35. திருத்துறைபூண்டி, 36. மன்னார்குடி, 37. பாபநாசம், 38. உரத்தநாடு, 39. புதுக்கோட்டை, 40. காரைக்குடி, 41. சிவகங்கை, 42. திண்டுக்கல், 43. தேனி, 44. மதுரை, 45.உசிலம்பட்டி 46. அருப்புக்கோட்டை, 47. ராஜபாளையம், 48. கீழப்பாவூர், 49. தூத்துக்குடி, 50. நாகர்கோவில்.
தீர்மானம் - 11 
பெரியார் சமூக  காப்பணி
பெரியார் சமூக காப்பு அணியைப் புதுப்பித்து 2017 மே மாதத்தில் புதிய இளைஞர்களுக்கு பெரியார் சமூக காப்பணி பயிற்சி முகாம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.


- விடுதலை,5.3.17

வியாழன், 2 மார்ச், 2017

திராவிடர் கழகத்துக்கும் - திமுகவுக்கும் இடையே இருப்பது உறவு! உறவை யாராலும் பிரிக்கமுடியாது: தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி







தனது 65 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சென்னை பெரியார் திடலுக்கு வருகை புரிந்தபொழுது, அவருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, தமது வாழ்த்துகளைத் தெரிவித்து இயக்க நூல்களை வழங்கினார். உடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உள்ளனர் (சென்னை, 1.3.2017)


சென்னை, மார்ச் 1 சென்னை பெரியார் திடலில் இன்று (1.3.2017) காலை திமுக செயல் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் 65 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரி யாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரை வரவேற்று பயனாடை அணிவித்து, இயக்க வெளி யீடுகளை வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின்னர், பெரியார் திடலில் செய்தியாளர்களை தமிழர் தலைவர் சந்தித்தார்.

செய்தியாளர்: இன்று திமுக செயல் தலைவர் வந்து தங்களை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: திராவிட முன் னேற்றக் கழகத்தினுடைய செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுடைய 65 ஆம் ஆண்டு ஆண்டு பிறந்தநாள் விழாவாகிய இன்று அவர் தந்தை பெரியார் அவர் களுடைய நினைவிடத்துக்கு வந்து, அவர்களுடைய வழமைபோல், மரி யாதை செலுத்தினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா, அவர்களையொட்டி கலைஞர் அவர்களுடைய பணி இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக இன்றைக்கு திராவிடர் இயக்கத்திலே சுமந்துகொண்டு அரிய பொறுப்பை ஏற்றிருக்கக்கூடியவர், கடும் உழைப்பாளியான, எதிர்நீச்சல் அடித்துக்கொண்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அவர்களுடைய அரசியல் பயணம் பல்வேறு அறைகூவல்களை இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிற காலகட்டம். இதிலே அவர்களோடு தோளோடு தோள் நின்று தாய்க்கழகம் என்றென்றைக்கும் சிறப்பாக அவர் வெற்றிவாகை சூட வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செய்தியாளர்: தொடர்ந்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் தங்களிடம் வந்து வாழ்த்து பெற்றுள்ளார். தாங்கள் அதிமுக பொதுச்செயலாளரை ஆதரித்து வந்துள்ள இந்த சூழ்நிலையிலே, அதே மாதிரி, சட்டமன்ற நிகழ்வுகள்பற்றி ஒரு விமர்சனத்தை வைத்திருக்கிற இந்த சூழ்நிலையிலே அவருடைய இந்த சந்திப்பு முரண்பாடாக இருக்குமா? அதை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: முதலில் உங்கள் கேள்வியில்சிறுதவறு.அதைசரிசெய்து கொள்ள வேண்டும். அதிமுக பொதுச் செயலாளரை ஆதரிக்கவில்லை. பாஜக வுக்கும், அதற்கும் இருந்த பிரச்சினையிலே, அந்த இயக்கம் உடைபடக்கூடாது, உடைப் பதற்காக ஆர்.எஸ்.எஸ். பிஜேபி முயற்சி செய்கிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள் என்று தாய்க்கழகம் அவர்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்தது. எங்கள் எச்சரிக்கை உண்மை என்றும் நாட்டுக்குப் புரிந்துவிட்டது. அந்த காலக்கட்டத்தைத் தவிர, வேறொன்றுமில்லை.

இரண்டாவது, திராவிடர் கழகம் என்பது திராவிடர் இயக்கங்களுக்கு தாய்க்கழகம். அந்த வகையிலே திராவிடர் இயக்கத்தைக் காப்பாற்றுவதும், கழகங்களே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று உறுப்பினர்களே இல்லாத கட்சிகள் சொல் லிக் கொண்டிருப்பதும் மிக வேடிக்கையான ஒன்று.

கொள்கை மாறுபாடுகள் இல்லை

சில நேரங்களில் கருத்து மாறுபாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததே! அது கொள்கை மாறுபாடுகள் அல்ல. கருத்து மாறுபாடுகள். ஒரு குடும்பத்திலே எப்படிப்பட்டவர்கள், எப்போது, எந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என் பதிலே மாறுபட்ட கருத்துகள் வருவதும், மற்றவர்கள் இன்னொரு அணுகுமுறையைக் கையாள்வதும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும் இயல்பு. ஆகவே, எங்களைப் பொறுத்தவரையிலே, என்றென்றைக்கும் திராவிடர் கழகத்துக்கும், திராவிட முன் னேற்ற கழகத்துக்கும் இடையே இருப்பது தோழமை அல்ல, கூட்டணி அல்ல, உறவு! உறவை யாராலும் பிரிக்க முடியாது.

இவ்வாறு தமிழர் தலைவர்

ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.


 

சென்னை, மார்ச் 1  திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 65ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று காலை பெரியார் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தபோது, அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து சிறப்பித்தார்.

திமுக செயல் தலைவரும், தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 65ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (1.3.2017) தி.மு.கழகத்தின் சார்பில் இளைஞர் எழுச்சிநாளாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டா டப்படுகிறது.

பெரியார் திடலுக்கு வருகை

தமது பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 7.45 மணியளவில் பெரியார் திடலுக்கு வருகை தந்தார். அவரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்று பிறந்தநாள் வாழ்த்து

தெரிவித்தார்.

அய்யா - அம்மா நினைவிடங்களில் மரியாதை

இதையடுத்து தமிழர் தலைவருடன் தளபதி மு.க.ஸ்டாலின் இணைந்து சென்று தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்து

பின்னர் பெரியார் நினைவிடம் நுழைவாயில் இருக்கும் வரலாற்று கல்வெட்டு இடத்தில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர்தலைவர் பொன்னாடை அணிவித்து திராவிட இயக்க நூல்களை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த.வீரசேகரன், கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், அரும்பாக்கம் தாமோதரன், வழக்குரைஞர் சென்னியப்பன், மற்றும் கழகத் தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றனர்.

பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள்

சென்னை பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.இராதா மன்றம் முன்பு பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கை மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்டி தோழர்களுக்கு வழங்கினார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், மற்றும் சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார். இந்நல திட்ட உதவிகள் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு மற்றும் 50ஆவது வட்ட பகுதி நிர்வாகிகள் எழும்பூர் ஏகப்பன், பெரியமேடு ஜெ.கிருஷ்ணமூர்த்தி, தேவநிதி ஆகியோர் செய்திருந்தனர்.

பங்கேற்றோர்

திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியார் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்திய போது அவருடன் சட்ட மன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, க.பொன்முடி, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியம், சுதர்சனம், ராணிப்பேட்டை காந்தி,  சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்க நாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், டி.ஆர்.பி.ராஜா, திமுக தீர்மானக்குழு உறுப்பினர் குழந்தை தமிழரசன், சின்ன கிருஷ்ணன் மற்றும் திரளான தி.மு.கழக தோழர்கள், தோழியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

-விடுதலை,1.3.17