வெள்ளி, 30 ஏப்ரல், 2021

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் 170ஆம் ஆண்டு பிறந்த நாள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள்


 கழகத்தின் சார்பில் படத்திற்கு மாலை அணிவிப்பு

சென்னை, ஏப்.29 வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயர் அவர்களின் 170 ஆம் ஆண்டு பிறந்த நாள் (27.4.2021) - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள் (29.4.2021) ஆகியன முன்னிட்டு, இன்று காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அவர்தம் உருவப் படங்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் மனோகர், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேசு, சண்முகப் பிரியன், பொறியாளர் குமார் மற்றும் பெரியார் திடல் பணித் தோழர்கள் பங்கேற்றனர்.

சி.எஸ்.மணி அவர்களின் நினைவு நாள் (02.04.2021) நன்கொடை

நன்கொடை

 

* செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவரும், திராவிடர் கழக, தி.மு. கழக பற்றாளரு மான சி.எஸ்.மணி அவர்களின் நினைவு நாளை (02.04.2021) முன்னிட்டு, அவர் குடும்பத்தின் சார்பாக ரூ.500/-அய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளித்து அவர் குடும்பத் தினர்  வீரவணக்கம் செலுத்தினர். -ம.கருணாநிதி (திராவிடர் கழகம்.செங்கற்பட்டு.)

மு.சண்முகப்பிரியனின் 33ஆம் ஆண்டு பிறந்தநாள்

நன்கொடை

தென்சென்னை இளைஞரணி தோழர் மு.சண்முகப்பிரியனின் 33ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். மு.சண்முகப்பிரியன் - விசித்ரா இணையருக்கு கழகத்  துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

வியாழன், 29 ஏப்ரல், 2021

பகுத்தறிவாளர் கழகத் தோழரும் நாத்திகக் கவிஞருமான ஆசிரியர் மெ.இலட்சுமிகாந்தன் (கவிஞர் காந்தன்) மறைவு

 பகுத்தறிவாளர் கழகத் தோழரும், தீவிரமான நாத்திகக் கவிஞருமான ஆசிரியர் மெ.இலட்சுமிகாந்தன் (கவிஞர் காந்தன்) 8.1.1996 அன்று மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினோம். அவரது இறுதி ஊர்வலத்தில் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி 
-உண்மை இதழ், ஏப்ரல் 16 - 30 .21

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்

திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அண்ணா சாலை என்றும் மாற்றப்பட்டு தமிழக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிய நிலையிலும், வணிக விளம்பரப் பலகைகளில் பழைய பெயர்களே எழுதப்பட்டுள்ளதைக் கண்டித்து 19.12.1995 அன்று தலைவர்களை அவமதிக்கக் கூடியதும், சட்ட விரோதமானதுமான இந்த நிலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து துண்டறிக்கை வழங்கப்பட்டது. இதில் சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி தோழர்கள் என ஏராளமானோர் அணிவகுப்பாகச் சென்று வணிகர்களைச் சந்தித்து எடுத்துக் கூறினர். 31.12.1995 தேதிக்குள் பெயர்களை மாற்றக் கோரியும், அவ்விதம் செய்யாவிட்டால், சட்ட விரோதமாக எழுதி வைக்கப்பட்டுள்ள பெயர்களை ‘தார்’ கொண்டு அழிக்க நேரிடும் என்று துண்டறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பிரச்சாரத்தினை வணிகர்கள் புரிந்துகொண்டனர். பெயர் மாற்றமும் விரைவாக நடைமுறைக்கு வந்தது.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 1-15.4.21

புதன், 21 ஏப்ரல், 2021

நடிகர் விவேக் மறைவுக்கு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை


மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்பட்டது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கல் அறிக்கையினை மறைந்த நடிகர் விவேக் அவர்களின் துணைவியார் மற்றும் மகள்களிடம் கழகத் தோழர்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், துணைத்தலைவர் சி.செங்குட்டுவன், த.கு.திவாகரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை. தமிழ்ச்செல்வன், தென்சென்னை இளைஞரணி மு.சண்முகப்பிரியன், மகேந்திரன், ஊரப்பாக்கம் பொய்யாமொழி, பொறியாளர் குமார், பெரியார் சேகர், பரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மணவிழா மகிழ்வாக ஆசிரியரிடம் சந்தாக்கள் வழங்கல்


தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் - வி.வளர்மதி இணையர் 23ஆம் ஆண்டு மண நாள் மகிழ்வாக விடுதலை மற்றும் உண்மை சந்தாக்களுக்கான தொகை ரூ.2100அய் தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

(சென்னை, 19.4.2021)

புதன், 7 ஏப்ரல், 2021

தென்சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்கள்


தென்சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராயர் நகர், சைதாப் பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து 30 தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள் தென் சென்னை மாவட்ட கழகம் சார்பில் நடத்தப் பட்டன.

பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடங்களின் பட்டியல்:

29.3.21-சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆதரித்து  மாலை 5.00 மணி - வி.ஆர்.(பிள்ளை)தெரு, 5.40 மணி - நீலம் பாஷா தர்கா, 6.30 மணி - அனுமந்தபுரம், 7.15 மணி - இருசப்பா தெரு, இரவு 8.00 மணி - ராம் நகர், சிறப்புரை: பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை செயலாளர்.

31.3.21 - மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தா. வேலுவை ஆதரித்து மாலை 5 .00மணி - நொச்சி நகர், 5 .40 -  நொச்சிக்குப்பம், 6.30 -  டும்மிங்குப்பம், இரவு 7 .15- முல்லை நகர், 8 .00 மணி - சீனிவாசபுரம், சிறப்புரை: பா.மணி யம்மை, மாநில மகளிர் பாசறை செயலாளர்.

01.04.21 - சைதாப்பேட்டை தொகுதி வேட் பாளர் மா.சுப்ரமணியன் அவர்களை ஆத ரித்து மாலை 5 .00 மணி - கோட்டூர், 5.40 மணி - கோட்டூர்புரம், 6.30 மணி - சித்ரா நகர், இரவு 7.30 மணி - ஜோன்ஸ் சாலை, 8.15 மணி - மேட்டுப்பாளையம் அங்காடி, சிறப்புரை: மு. சண்முகப்பிரியன்,

02.04.21 - ஆயிரம் விளக்கு தொகுதி வேட் பாளர் மருத்துவர் நா.எழிலன் அவர்களை ஆதரித்து மாலை 5.00 மணி - தேனாம் பேட்டை, இளங்கோ சாலை, 5.45 மணி - ஆலையம்மன் கோயில் அருகில், 6.30 மணி - ஆல் தோட்டம் கு.மா. வாரிய குடியிருப்பு, இரவு 7.30 மணி - திருவள்ளுவர் சாலை, 8.30 மணி - சிஅய்டி நகர், சிறப்புரை: மு. சண்முகப் பிரியன்

03.04.21 - தியாகராயர் நகர் தொகுதி வேட் பாளர் ஜெ.கருணாநிதி அவர்களை ஆதரித்து மாலை 5.00 மணி - அசோக் நகர், 5.45 மணி - 86ஆவது தெரு, 6.30 மணி - முத்துரங்கம் சாலை, இரவு 7 15 மணி - சீனிவாசா திரை யரங்கம், 8.00 மணி- ஜாபர்கான்பேட்டை, சிறப்புரை: மு. சண்முகப்பிரியன்

04.04.21 - மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தா.வேலுவை ஆதரித்து மாலை 4.00மணி - பஜார் சாலை, 4.30 மணி -  முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெரு, 5.00 மணி -  மாதவப் பெருமாள் கோவில் தெரு, 5.30 மணி - டாக்டர் அம்பேத்கர் பாலம், 6.00 மணி‌ - கைலாசபுரம், சிறப்புரை:- மு. சண்முகப்பிரியன்.

மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் பரப்புரைக் கூட்டங்கள் சிறப் பாக நடைபெற்றது. பரப்புரையின் இறுதியில் (4.4.21,இரவு 7.00 மணி) சிறப்பான ஏற்பாடுகளை செய்து பரப்புரைக்கு வழிவகுத்த தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன் அவர்களுக்கு மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் பாராட்டி பயனாடை அணிவிக்கப்பட்டது.

பரப்புரையில் கலந்து கொண்டோர் வருமாறு:

மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், செயலா ளர் ந.மணித்துரை, ஈ.குமார், மு.சண்முகப்பிரியன், தரமணி பகுதி பொறுப்பாளர் கோ.மஞ்சநாதன், மாணவர் கழகச் செயலாளர் வி.விசு வாசு, தலைவர் கு.பா.அறிவழகன்,  பி.அஜந்தா, செய. சொப்பன சுந்தரி, ஜெயவேல், அய்ஸ் ஹவுஸ் அன்பு மற்றும் பாரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

என் பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை’ தேர்தல் ஆணையத்திடம் ஆ.ராசா விளக்கம்

April 01, 2021 • Viduthalai

சென்னை,ஏப்.1- தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் கேட்ட விளக்கத்துக்குதனது பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை என்று திமுக துணை பொதுச் செயலாளர் .ராசா விளக்கம் அளித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளர் .ராசா எம்.பி., தேர்தல் பிரச்சாரத்தின்போதுமுதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை ஏற்பட்டதுஇதுதொடர்பான பல பகுதிகளிலும் அதிமுகவினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்புகாரின்பேரில் .ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுஅதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்துதேர்தல் ஆணையம் சார்பில் .ராசாவிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளதுஅதற்குமின்னஞ்சல் வழியாக தேர்தல் ஆணையத்துக்கு .ராசாஅனுப்பி யுள்ள இடைக்கால விளக்க கடிதத்தில் கூறியி ருப்பதாவதுதிராவிட இயக்கத்தின் அடித் தளமே மகளிருக்கு அதிகாரம் அளித்தலும்சமுதாயத்தில் அவர்களுக்கு சமஉரிமை வழங்குதலும் தான்டாக்டர் அம்பேத்கர்தந்தை பெரியார்அறிஞர் அண்ணா ஆகி யோரின் மாணவனாகமறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின்  வழிகாட்டுதலில்திமுக வில் உறுப்பினராக இருக்கும் நான் ஒருபோதும் மகளிர்குறித்து இழிவாக பேசமாட்டேன்.

முதல்வரை நான் இழிவுபடுத்தியதாக அதிமுகவும்பாஜகவும் தேர்தல் ஆதாயத்துக் காக பொய்யான பிரச்சாரத்தை செய்கின்றன.

கடந்த 27ஆம் தேதி பெரம்பலூரில் செய்தி யாளர்களை சந்தித்துஎனது விளக்கத்தை அளித்தேன்அப்படி இருந்தும்முதல்வர் பழனிசாமி, 28ஆம் தேதி சென்னை திருவொற்றியூரில் நடந்த பொதுக் கூட்டத்தில்எனதுபேச்சை மேற்கோள் காட்டி உணர்ச்சிப் பூர்வமாக பேசியுள்ளார்அதைத் தொடர்ந்து 29ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, ‘முதல்வர் பழனிசாமியை இழிவுபடுத்தும் நோக்கில் பேச வில்லைஅது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால்அதற்கு மன்னிப்பு கோருகிறேன்’ என்று தெரிவித்திருந்தேன்.

நான் தேர்தல் விதிகளை மீறி எதுவும் பேச வில்லைஎன் மீது அதிமுக சார்பில் எத்தகைய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தெரியாதுஎனவேஅதிமுகவின் புகார் மனுவை எனக்கு அளிக்க வேண்டும்அதன் பின்னரே எனது முழு விளக்கத்தை அளிக்க முடியும்.

பொதுமக்கள் புரிந்துகொள்ளும் விதமாக உவமானத்தை மேற்கோள்காட்டி முதல்வர் பழனிசாமிதிமுக தலைவர் ஸ்டாலின் ஆகி யோர் அரசியலில் உயர்ந்ததை ஒப்பிட்டு பேசினேன்என் முழு பேச்சையும் ஆய்வுக்கு உட்படுத்தினால்அதில் எவ்வித அவதூறும் இல்லை என்பது தெரியவரும்இவ்வாறு அதில் .ராசா குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 1 ஏப்ரல், 2021

ஈக்காட்டுத்தாங்கலில் ஆசிரியர் ஏவிய அறிவுக்கணைகள்!


‘‘தி.மு.கூட்டணியின் வெற்றி உறுதிஉறுதி!!

 நமது சிறப்புச் செய்தியாளர்

சென்னைமார்ச் 31 நேற்று (30.3.2021) மாலை சென்னை சைதை சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஈக் காட்டுத்தாங்கல் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எய்திட்ட அறிவுக்கணைகள்:

* தி.மு.கூட்டணி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.

* இப்பொழுது தேவையெல்லாம் எதிரணியினர் கட்டிய பணத்தைத் திரும்பப் பெறக் கூடாது என்பதுதான்.

* காவிகளுக்கோ காலிகளுக்கோ இந்த மண்ணில் இடமில்லைகருத்துக் கணிப்பை நாங்கள் எப்போதும் நம்புவதில்லைஆனால்மக்களின் நாடித்துடிப்பை நேரில் சென்று பார்த்து வருகிறோம்ஆகவேசொல்கிறோம் தி.மு.ஆட்சி அமைப்பது உறுதி.

* தளபதி மு..ஸ்டாலின் மீட்கப் போவது தமிழ்நாட்டை மட்டுமல்ல - பா...வுக்கு அடிமையாகப் போய்விட்ட - அடகு வைக்கப்பட்ட பொருளான அண்ணா பெயரில் உள்ள .தி.மு..வையும் சேர்த்துதான்.

* அடகு வைக்கப்பட்ட .தி.மு.என்று சொன்னது விளையாட்டு வார்த்தையல்ல - நாகர்கோவிலுக்கு வந்து பரப்புரை செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொன்னார்?

234 இடங்களில் வெறும் 20 இடங்களில் மட்டும் போட்டியிடும் பா...தான் தமிழ்நாட்டை ஆளப் போகிறது என்று சொன்னாரே - அதன் பொருள் என்ன?

* கரோனாவை ஒழித்துக்கட்ட கைதட்டுங்கள் என்றார்பிறகு விளக்கேற்றுங்கள் என்று சொன்னார் பிரதமர் மோடி - கரோனா ஒழிந்ததா?

* அறிவியலான விஞ்ஞானம்தானே - தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதானே ஓரளவுக்காவது ஒழிக்க முடிந்தது.

* கரோனாவைவிட ஆபத்தானது - பா...,

ஆர்.எஸ்.எஸ்எனும் கோவிட்-19 கிருமிஅதனை ஒழிக்கும் தடுப்பூசிதான் தளபதி மு..ஸ்டாலின்கூட்டணி என்பதுதான் சுத்தம் செய்யும் சோப்புகிருமி நாசினிதான் திராவிடர்கழகம்.

* இன்றைய தினம் தாராபுரத்தில் பிரதமர் மோடியுடன் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிபிரதமர் மோடியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டுதமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக் கல்லூரிகளைத் தந்தவர் நமது பிரதமர் என்று பெருமை பொங்கப் பேசினாரே - அவரைப் பார்த்து ஒரு கேள்வி -

இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என்ன பயன்அதுதான் நீட்டைக் கொண்டு வந்து ஒழித்துவிட்டாரே - இட ஒதுக்கீடும் இல்லை என்று கூறிவிட்டாரேமுதலமைச்சர் தூக்கிச் சுமக்கும் பிரதமர்.

கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதையாக அல்லவா ஆகிவிட்டது.

* பிரதமரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பேசியிருக்கிறார்மத்திய அரசுடன் ஒத்துப்போனால் காரி யங்களைச் சாதிக்க முடியும் என்கிறார் ('காக்காபிடிப்பது என்பார்களேஅது இதுதானோ!)

ஒத்துப் போவது என்பது வேறு - ஒத்து ஊதுவது என்பது வேறு!

மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்பதை இப்படிக் கொச்சைப்படுத்தலாமா?

மானமிகு கலைஞர் என்ன சொன்னார்?

''உறவுக்குக் கைகொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம்'' என்ற கலைஞர் எங்கே - இந்த எடப்பாடிகள் எங்கே?

* அம்மா ஆட்சிஅம்மா ஆட்சி என்று சும்மா சும்மா சொல்கிறார்களேஅந்த அம்மா ஆட்சியில் இருந்தபோது - நீட்டை நுழைய விட்டாரா - ஓராண்டு விலக்குப் பெறவில்லையா?

எடப்படியால் ஏன் முடியவில்லைஇரு மசோதாக் களை எதிர்க்கட்சிகளின் ஒப்புதலோடு நிறைவேற்றியும்ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து ஏன் பெற முடியவில்லை?

* இப்பொழுது நடைபெறும்  ஆட்சி லேடி ஆட்சியாமோடி ஆட்சியா?

* அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்திற்கு முதன்முறை சென்றபோது ஆற்றிய கன்னிப் பேச்சில், ''I come from Dravidian Stock'' என்று பேசினாரே!

* ''நான் திராவிட மரபிலிருந்து வந்தவன்'' என்று கம்பீர மாகச் சொன்னாரே - அந்த அண்ணாவின் பெயரைத் தாங்கிடகொடியில் அண்ணாவின் உருவத்தைப் பொறிக்க அந்தக் கட்சிக்குத் தகுதி உண்டா?

* அண்ணா என்ன சொன்னார்பதவி என்பது துண்டுகொள்கை - இலட்சியம் என்பது வேட்டி என்றாரே - அந்த அண்ணாவின் பெயரைத் தாங்கும் .தி.மு.., துண்டு மட்டும் போதும் என்ற நிலையில் அல்லவா இருக்கிறது!

* வாக்குப் பதிவுக்கு இன்னும் இடையில் சில நாள்களே உள்ளன - அதற்குள் வீட்டுக்கு வீடு யானையைக் கொடுப் பேன் என்று முதலமைச்சர் அறிவித்தாலும் அறிவிப்பார்.

* ஊழல்ஊழல் என்று ஓங்கிப் பேசுகிறார்களே.தி.மு..வின் முன்னாள் எம்.எல்.சின்ன சேலத்தைச் சேர்ந்தவருக்கு ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே - இதுதான் ஊழலை ஒழிக்கும் .தி.மு..வின் லட்சணமா?

* தி.மு..வின் தேர்தல் அறிக்கையில் என்ன குறிப்பிடப் பட்டுள்ளது?

* தி.மு.ஆட்சியில் முதலில் ஒழிக்கப்படப் போவது 'நீட்என்று கூறப்பட்டுள்ளதே - அந்த உறுதிமொழி உண்டா .தி.மு..விடம்?  இரண்டு மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்போடு ஒருமனதாக நிறை வேற்றப்பட்டும் சாதிக்க முடியவில்லையே!

* அரசு பள்ளிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கு ஏழரை சதவிகித இட ஒதுக்கீடு பெற்றுள்ளோம் என்று மார்தட்டுகிறதே  .தி.மு.அரசு - அதற்கும் இப்பொழுது ஆபத்து ஏற்பட்டுவிட்டதே!

* புதுச்சேரி மாநிலத்தில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடுக்குச் சட்டம் செய்திருந்தும்அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் இதுபோன்ற இட ஒதுக்கீட்டை அளிப்பதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை என்று மத்திய அரசின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறியிருப்பது எதைக் காட்டுகிறது?

அடுத்துத் தமிழ்நாட்டின் கழுத்துக்கும் கத்தி தீட்டப் படும் அபாயம் உள்ளதே!

* வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டின் நிலை என்ன?

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெளிமாநிலத்தவர்களும் பங்குகொள்ளலாம் என்று - முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஆணை பிறப்பித்தவர்தானே .பன்னீர்செல்வம்மறுக்க முடியுமா?

* திருச்சி பொன்மலையில் இரயில்வே பதவி 581 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 12 பேர்தானே - மீதி இடங்கள் எல்லாம் வெளிமாநிலத் தவர்களுக்கே!

* சென்னை மண்டல இரயில்வே துறையில் 884 பதவிகளில் 804 இடங்களில் பிற மாநிலத்தவர்கள் - வெறும் 80 இடங்களில்தான்  தமிழ்நாட்டுக்காரர்கள்.

'பெல்நிறுவனத்தில் 738 பெரிய உத்தியோகங்கள் என்றால்தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பூஜ்ஜியமே!

* இதுதான் தமிழ்நாட்டின் நிலை - தட்டிக் கேட்கும் முதலமைச்சராக தளபதி மு..ஸ்டாலின்தான் இருப்பார்ஊர்ந்து செல்லும் முதலமைச்சர்களால் சாதிக்க முடியாது.

* எந்த வகையில் மக்கள் நல அரசாக மத்திய - மாநில அரசுகள் இருக்கின்றனஇதற்குப் பாடம் கற்பிக்கப்பட வேண்டாமா?

* தேர்தல் நாளன்று உதயசூரியன் பொத்தானை அழுத் துங்கள் - விளக்கு எரியும்வரை அழுத்துங்கள் - அங்கு விளக்கு எரிந்தால்உங்கள் வீட்டில் விளக்கு எரியும்நாட்டிலும் விளக்கு எரியும்காரிருளும் அகன்று உதிக்கட்டும் உதயசூரியன்உதயமாகட்டும் புத்துலகுஓடி மறையட்டும் நாட்டைப் பீடித்த காரிருள்!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சைதாப் பேட்டை தொகுதி தி.மு.வேட்பாளர் மா‌.சுப்பிர மணியனை ஆதரித்து ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு தி.மு.வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்தி.மு.பகுதி கழக துணை செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்புரை வழங்கிட,  தி.மு.பகுதி கழக செயலாளர்கள் துரைராஜ்கிருஷ்ணமூர்த்திமோகன்குமார்பால்ராஜ்நரசிம்மன்திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்திராவிடர் கழக மாவட்ட செயலாளர் செ.ரா.பார்த்தசாரதிஅமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தொடக்கவுரையாற்றினார்அடுத்து சைதைத் தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பரப்புரை கூட்டத்தில்திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்திராவிடர் கழகப் பொரு ளாளர் வீ.குமரேசன்மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார்மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை,  மண்டல செயலாளர் தே.செ.கோபால்தாம்பரம் மாவட்ட தலைவர் .முத் தையன்சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன்தி.மு..மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன்தி.மு.பொதுக்குழு உறுப்பினர் சைதை சம்பத்.தி.மு.மாவட்ட செயலாளர் சுப்பிரமணிசி.பி.அய்மாவட்ட செயலாளர் ஏழுமலைவி.சி.பகுதி கழக செயலாளர் சைதை ஜேக்கப்சி.பி.அய்மாநிலக்குழு தலைவர் சுசீலா.வா.பகுதி செயலாளர் வீரன்தனசேகரன்விஜிதிராவிடர் கழக பகுதி செயலாளர் சேகர்காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் லயன் விவேகானந்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவாக வட்ட தி.மு.செயலாளர் சென்னப்பன் நன்றி கூறினார்.

பரப்புரை பயணக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்மாநில அமைப்பாளர் இரா‌.குணசேகரன்அமைப்பு செயலாளர் மதுரை வேசெல்வம்மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டிதி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்தமிழர் தலைவர்ஆசிரியர் அவர்களிடமிருந்து திராவிடர் கழக வெளியீடான தேர்தல் பிரச்சார புத்தகத்தைபல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள்பெற்றுக் கொண்டனர்

ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்தமிழர் தலைவர்ஆசிரியர் அவர்களிடமிருந்து திராவிடர் கழக வெளியீடான தேர்தல் பிரச்சார புத்தகத்தைபல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள்பெற்றுக் கொண்டனர். (30.3.2021)