சனி, 30 மார்ச், 2024

தென் சென்னை கழக மாவட்டம் திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் பகுதியில் "இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் - ஏன்?" “தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” பரப்புரைக் கூட்டம்


தென் சென்னை கழக மாவட்டம் திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் பகுதியில் “தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” பரப்புரைக் கூட்டம்

விடுதலை நாளேடு
Published March 30, 2024

திருவல்லிக்கேணி, மார்ச் 30- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் திரு வல்லிக்கேணி அய்ஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள அன்னி பெசன்ட் சாலை மற்றும் இரு சப்ப தெரு இணையும் இடத் தில் 22.03.2024 மாலை 6.30 மணி அளவில் அன்னை மணி யம்மையாரின் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ”இந் தியா கூட்டணி வெல்ல வேண் டும் ஏன்?’ “தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்” என்கின்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை கூட்டம், தென் சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ச. மகேந்திரன் தலை மையிலும் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் மாவட்ட துணைச் செயலாளர் சா. தாமோதரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் செ. ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி தொடக்க உரை யாற்றினார்.

கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரை ஞர் பா.மணியம்மை முதன்மை உரையாற்றினார். அவரின் உரைக்கு பின் கிராமப் பிரச் சாரக் குழு கழக மாநில அமைப் பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் சிறப்புரையாற்றி னார்.
அவரது உரையில்; “தமிழ் நாடு ஆளுநர் அவர்கள், தமிழ் நாடு அரசு சொல்வதை செய்ய மாட்டேன்; உன்னால் முடிந் ததை செய் என்றார்; உச்ச நீதிமன்றம் கட்டளை இட்ட பிறகும் அடம் பிடித்தார் ஆளு நர்! மீண்டும் உச்சநீதிமன்றம் கண்டித்ததற்கு பிறகு தமிழ்நாடு அரசுக்கு பணிந்தார் ஆளுநர், இத்தனை அவமானங்களுக்கு பிறகு மீண்டும் அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

ஒன்றிய அரசு யாரை அனுப் பினாலும் அவரை பணிய வைப்பதில் சிறந்தவர் நமது முதலமைச்சர் மு.க .ஸ்டாலின். திட்டமிட்டு தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவம் படிக்க விடாமல் செய்ய மாநில பாடத்திட்டத்தில் கேள்வி கேட்காமல், சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் கேள்விகளை கேட்கும் வகையில் நீட்டைக் கொண்டு வந்தார்கள்.
நமது மருத்துவ கட்ட மைப்பு இந்தியாவிலேயே சிறந்த கட்டமைப்புடையதா கும். தமிழ்நாட்டு மருத்துவர் கள் சிறந்த முறையில் மருத்து வம் பார்க்கிறார்கள். வெளி மாநில நோயாளிகள் தமிழ் நாட்டிற்கு வந்து மருத்துவம் பார்த்துக் கொண்டு செல்கிறார் கள். தமிழ்நாட்டு மருத்துவர் கள் இந்த நோயை சரி செய்ய முடியாது என்று கூறிவிட் டால், எந்த நாட்டிற்கு சென்றா லும் அந்த நோயை சரி செய்ய முடியாது; அந்த அளவிற்கு கெட்டிக்காரர்கள் தமிழ் நாட்டு மருத்துவர்கள்.

உயர்கல்வியில் இந்தியாவி லேயே தமிழ்நாடு முன்னணி யில் உள்ளது. ஆல் இந்தியா டாப்பர்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளனர்.
நாம் பிஜேபி என்கிற பார்ப் பன ஜனதா கட்சியை தோற் கடிக்க வேண்டும்! இந்தியா கூட்டணி வென்று இந்தியாவே திராவிட மாடல் ஆட்சியாக ஆகப்போகிறது என்று நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்கள்.
நீட்டை ஒழிக்கவும், ஜிஎஸ் டியை ஒழித்துக் கட்டவும், பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவைகளின் விலையை குறைக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விவசாய பொருள்களின் குறைந்த பட்ச ஆதார விலையை நிர் ணயிக்கவும், இந்தியா முழுக்க பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கவும், பெண்க ளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும், தேசிய அடிமட்ட (குறைந்தபட்ச) நாள் கூலியை ரூ.179லிருந்து ரூ400ஆக உயர்த் தவும், தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக மாற்றவும் நாள் கூலியை ரூ400 ஆக உயர்த்தவும் இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை மூலம் உறுதி அளித்துள்ளது. கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

அமையப்போகிற ஆட்சி, கூட்டணி ஆட்சியாக அமைய விருக்கிறது. ஆகையால் அனை வரும் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்!
தென் சென்னை நாடாளு மன்ற இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்தும், அதேபோல் மத்திய சென்னை யில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்தும் உதயசூரியன் சின்னத்தில் வாக் களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.” என்று கூறினார்.
மாமன்ற உறுப்பினர் மங்கை ராஜ்குமார் மற்றும் கேரள என்.ரவி (திராவிட முன் னேற்றக் கழக 120ஆ வட்ட செயலாளர்) வருகை தந்து சிறப்பித்தனர். உரையாற்றிய வர்களுக்கு பயனாடை அணி வித்து சிறப் பிக்கப்பட்டது.

துணைப் பொதுச்செயலா ளர் வழக்குரைஞர் ச. பிரின்சு என்னாரசு பெரியார், மாநில தொழிலாளர் அணி பொரு ளாளர் கூடுவாஞ்சேரி இராசு, தென் சென்னை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.மாரியப்பன், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட இளைஞ ரணி செயலாளர் ந.மணிதுரை, துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, செய. குசேலன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, மாவட்ட மகளிர் அணி தலைவர் வி.வளர்மதி, செயலாளர் பி.அஜந்தா, பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக் குநர் பசும்பொன், மா.தமிழரசி, ஜெ.சொப்பன சுந்தரி, மு.பாரதி, வி.சகானாப்பிரியா, ஜெயசங்கரி, மயிலை ஈ.குமார், கோ. தங்கமணி, தங்க. தன லட்சுமி, வடசென்னை மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், இரா.அருள், க.செல்லப்பா, எஸ். செல்வம், ச.இன்பத்தமிழன், உதயசூரியன், மு.திருமலை, இராயப்பேட்டை கோ.அரி, கா.சுந்தர், எ.தினேஷ்குமார், பேரறிவன் சேய், வை.கலையர சன், உடுமலை வடிவேலு, அசோக், இனியன், திராவிட முன்னேற்றக் கழக 120அ வட்ட தோழர்களும் பொதுமக் களும் கலந்து கொண்டு கூட் டத்தை சிறப்பித்தனர்.
இறுதியாக எஸ்.அப்துல்லா நன்றி கூறினார். கூட்டம் முடிந்த பின் வந் திருந்த அனைவருக்கும் சிற் றுண்டி வழங்கப்பட்டது.

-------++++++-----+++++-----+++++----++++--

வெள்ளி, 29 மார்ச், 2024

இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?’ தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்” மயிலாப்பூரில் மகளிர் அணி சார்பில் பரப்புரை கூட்டம்


“தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” கழகப் பரப்புரைக் கூட்டம்

விடுதலை நாளேடுPublished March 29, 2024

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி,
மகளிர் பாசறை சார்பில் மயிலாப்பூர் பகுதியில்
“தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” கழகப் பரப்புரைக் கூட்டம்

சென்னை, மார்ச் 29– தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள டாக் டர் அம்பேத்கர் பாலம் அருகில் 21.03.2024 மாலை 6.30 மணி அளவில் அன்னை மணியம்மையா ரின் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ”இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?’ தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்” என்கின்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் தென் சென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி தலைமையிலும் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, மாவட்ட மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி, செயலாளர் பி. அஜந்தா மற்றும் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குமீர் மு.பசும்பொன், மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் வி.யாழ்ஒளி வரவேற்புரை ஆற்றினார்.  வி.தங்கமணி  இணைப்புரை வழங்கினார். கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தொடக்க உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தின் 125ஆவது வட்ட கழக செய லாளர் அ.தவநேசன் இந்தியா கூட் டணிக்கு வாக்கு கேட்டு உரையாற் றினார். கழகத் துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரசு பெரியாரின் உரைக்குப்பின் கிராமப் பிரச்சாரக் குழு கழக மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் “மாநில அரசின் சம்பளத்தை பெற் றுக்கொண்டு (தமிழ்நாடு) மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் முகத்திரையை கிழித் தெறிந்தார். ஆளுநர் சம்பளம் பெறு வது மாநில அரசிடம், ஆனால் வாதாட வழக்குரைஞரை ஒன்றிய அரசு நியமிக்கிறது. இது போன்ற வேடிக்கைகளை எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஒன்றிய அரசு திட்டமாக சித்த ரித்து பம்மாத்து வேலை செய்கிறது என்றும், தமிழ்நாடு அரசு செய்து முடித்த நலத்திட்டங்களில் ஒரு சிலவற்றை இப்பொழுது செய்யப் போவதாக அறிக்கை விடுகிறது ஒன்றிய அரசு. நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் மிரட்டி டிஜிட்டல் முறையில் பணம் பெற்று பெரும் ஊழல் செய்து வருகிறது ஒன்றிய அரசு, வட மாநிலங்கள் முழுக்க வன்முறை களும், மதத்தின் பெயரால் படு கொலைகளும், பாலியல் வன்கொடு மைகளும் நடைபெற்று வருகின் றன. வன்கொடுமை செய்பவரை பாதுகாக்கிறது ஒன்றிய அரசு என்று கூறினார்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் இந்தியா முழுக்க மகளிர் உரிமை தொகையும், மகளிருக்கு இட ஒதுக்கீடும் வழங் கப்பட உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 லட்சம் வங்கி கடன் வழங்கப்பட உள்ளது. கல்வி கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்பட உள்ளது, “நீட்” ஒழித்துக் கட்டப்படவுள்ளது. ஆகையால் இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்! இந்த தென் சென்னை நாடாளுமன்ற தொகு தியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற் றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து உதய சூரியன் சின்னத்தில் முத்தரையிட்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள் கிறேன்’ என்று கூறி சிறப்பான தொரு உரையாற்றினார்.

மாமன்ற உறுப்பினர் ஏ.ரேவதி வருகை தந்து சிறப்பித்தார். உரை யாற்றியவர்களுக்கு பயனடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. மு.பாரதி, எஸ். பிருந்தா, வி. சகானா பிரியா, வி.நிலா. ம. சுவாதி, ஜெய சங்கரி, எஸ். தமிழினி, தங்க. தனலட்சுமி, வடசென்னை மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி உள்ளிட்ட ஏராளமான மகளிர் தோழர்களும், தம்பிதுரை(திமுக), மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட இளை ஞரணி செயலாளர் ந.மணிதுரை, துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, மயிலை ஈ.குமார், கோ. தங்கமணி, தரமணி ராஜி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க. தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், இரா.அருள், வை.கலையரசன், க.கலைமணி, ஓட்டுநர் மகேஷ், உடுமலை வடிவேலு, ஆ.கவின், பேரறிவன் சேய்,திராவிட முன்னேற்றக் கழக 125ஆவது வட்ட உள்ளிட்ட தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்த னர்.

இறுதியாக ஜெ.சொப்பனா அவர்கள் நன்றி கூறினார். கூட்டம் முடிந்த பின் வந்திருந்த அனை வருக்கும் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.


புதன், 27 மார்ச், 2024

தஞ்சையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!



விடுதலை நாளேடு
Published March 26, 2024

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா
♦ சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுவோம்!
♦ அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நசுக்கும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய ஆட்சியை மக்களவைத் தேர்தலில் வீழ்த்துவோம்!
‘இந்தியா’ கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்!
தேர்தல் களத்தில் கழகத் தோழர்களின் பங்களிப்பு சிறக்கட்டும்!
தஞ்சையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

தமிழர் தலைவர் எழுதிய “மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!” என்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் புத்தகத்தை கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி வெளியிட கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.

தஞ்சை, மார்ச் 26 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நசுக்கும் மதவாத ஒன்றிய பி.ஜே.பி. அரசை வரும் மக்களவைத் தேர்தலில் வீழ்த்தி, வாக்காளர்கள் ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வதைக் கடமையாகக் கொள்ளவேண்டும் என்றும், தேர்தல் களத்தில் திராவிடர் கழகத் தோழர்களின் பணி சிறப்பாக இருக்கவேண்டும் என்றும் தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தந்த கழகத் தோழர்கள்

திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூர் இராமசாமி திருமண மண்டபத்தில் நேற்று (25.3.2024) மாலை திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம் 

தீர்மானம் எண் 2:
மக்களவைத் தேர்தலும் – வாக்காளர்களின் கடமையும்!

ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு, ‘‘முன்னேற்றம், வளர்ச்சி” என்ற கோஷத்தோடும், வாக்களித்தால், ‘அச்சே தின்’ ‘நல்ல காலம் மக்களுக்கு பிறக்கும்’ என்ற வாக்குறுதி அளித்தும் பெரும்பான்மை இடங்களை பெற்று ஒன்றியத்தில் ஆட்சிக்கு இருமுறை வந்தது.
கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில், நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே அடைந்துள்ளது.
பொருளாதார மேம்பாடு, ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பணம் மீட்பு, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு என மோடி அரசு அளித்த வாக் குறுதிகள் அனைத்துமே வெற்று அறிவிப் புகளாக, காலவாதியான வாக்குறுதிகளாக இருக்கின்றன என்பதை நாட்டு மக்கள் இன்று தெளிவாக உணர்ந்துள்ளார்கள் – கொடு மைக்கும் ஆளாகியுள்ளனர்.

ரூபாய் மதிப்பிழப்பு என்று திடீரென்று அறிவித்து பொருளாதாரமே முற்றிலும் நசிந்து போகும் நிலையை உருவாக்கினார் பிரதமர் மோடி. சிறு குறு, நடுத்தர தொழில்கள் இழுத்து மூடப்பட்டன. இலட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்து நடுவீதிக்கு வந்தனர்.

கோவிட் பெருந்தொற்றுப் பிரச்சினையை தவறாகக் கையாண்டதும், தடுப்பூசி என்பதில் நடந்த குழப்பங்களும், பொருளாதாரத் துறை யின் நாசகாரச் செயல்பாடும், பாதுகாப்புத் துறை சாதனங்களை வாங்குவதில்கூட ஏற்பட்ட சந்தேகங்களும், விவசாயிகள் போராட்டத்தை அரசு அணுகிய விதம், பெட்ரோல், டீசல் விலைகளின் செங்குத்தான ஏற்றம் அனைத்துமே, மோடி தலைமையிலான பாஜக அரசு, மக்கள் விரோத அரசாகவே தொடர்ந்து நடந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

நாடாளுமன்ற நடைமுறைகளை அவமதித்தல், ஜனநாயக மாண்பைக் காலில் போட்டு மிதித்தல், அரசமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ள அமைப்புகளின் மாண்பைத் தகர்த்தல், மா நில உரிமைகளை மறுத்தல், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாக ‘‘போட்டி அரசாங்கத்தை” நடத்துதல், நிதி பங்கீட்டில் ஓரவஞ்சனை என அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு தீவிர போக்கினை மட்டுமே பாஜக அரசு செய்து வந்துள்ளது. ‘‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற பெயரில் நாட்டை ஹிந்துத்துவ மதவாதப் படுகுழியில் தள்ளும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது மோடி அரசு.

‘‘எங்கள் அரசு வெளிப்படைத் தன்மையுடனும், அனைத்து மாநிலங்களையும் அரவணைத்துச் செல்லும்” எனப் பேசி வந்த பிரதமர் மோடியின் தொடர் நடவடிக்கைகள், அதற்கு எதிர்மாறாகவே உள்ளன. தேர்தல் பத்திரம் தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடக் கூடாது என்பதில் காட்டிய தீவிரம், ‘‘பி.எம்.கேர்” என அரசு விளம்பரத்தோடு நடைபெறும் நிறுவனம் தனியார் அமைப்பு என கூசாமல் தந்திரமாக நடைபெறும் ஓர் அரசாக மோடி அரசு விளங்குகிறது.
தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பின்மூலம் மக்கள் நலன் சார்ந்தும், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமூகநீதி அடிப்படையிலும் எந்த திட்டங்களையும், சட்டங்களையும் பாஜக ஆட்சி செயல்படுத்தவில்லை. மாறாக, முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தின் பாசிச சித்தாந்தந்தை நடைமுறைப்படுத்தி, சிறுபான்மையினருக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் சட்டங்களை நிறைவேற்றுவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் முத்தாய்ப்பாக விளங்கும் மதசார்பின்மைக் கொள்கையை குழி தோண்டி புதைக்கும் விதமாக, கோயில் கட்டுவதிலும், அதைத் திறப்பதிலும் ஹிந்துத்வா கொள்கையை முன்னெடுக்கும் ஓர் அரசாக மோடி தலைமையிலான அரசு நாளும் நடந்து வருகிறது.

நமது அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில், நாட்டின் மதசார்பின்மைக்கும், சமூக நீதிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் ஊறுவிளைவிக்கும் பாசிச பாஜக எதேச்சதிகார ஆட்சியை அகற்றுவது இந்திய மக்களின் இன்றைய இன்றியமையாத கடமையாகும். ஆகவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக ஆட்சியை விரட்டிடவும், இந்தியா கூட்டணிக்கு பேராதரவு தந்து வெற்றி பெற செய்திடவும் நாட்டு மக்கள் உறுதியாக இருக்கவேண்டுமென்றும், நாட்டு மக்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக திராவிடர் கழகம் முழு மூச்சுடன் களத்தில் இறங்கிப் பாடுபடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 3:
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா!

அறிவாசான் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா 2024 நவம்பரில் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு நிறை வடைகிறது.
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும் உலகம் தழுவிய அளவில் இன்றைய தினம் பெரும் வரவேற் பைப் பெற்று வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுயமரியாதை, சமூகநீதி, இனநலம், மொழி மானம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, பாலியல் உரிமை, ஜாதி ஒழிப்பு, சமத்துவம், சமதர்ம சிந்தனைகளின் செழித்த விளைச்சல் நிலமாகவும், இந்தியத் துணைக் கண்டத்திலேயே தனித்துவம் மிக்கதாகவும், ‘‘திராவிட பூமி, பெரியார் மண்” என்று கட்சிகளைக் கடந்து பலராலும் ஒப்புக்கொள் ளப்பட்டதாகவும், அரசியலிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாகவும், பார்ப்பன வல்லாண்மையை வேரடி மண்ணோடு வீழ்த்தும் போராயுதமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்றால், அதற்கு வலுவான அடித்தளம் இட்டது தந்தை பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கமே!

சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுகள் – நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரலாற்றுத் திருப்பங் களாகவும், ஆட்சிகள்மூலம் செயல்படுத்தப்படும் உயரத்தை எட்டின என்பதும் வரலாறு!

ஒரே நேரத்தில் சுயமரியாதை இயக்கத்திற்கும், ‘‘நீதிக் கட்சி” என்றழைக்கப்பட்ட திராவிடர் இயக்கத்திற்கும் தலைவராக விளங்கி, பிறகு, ‘‘திராவிடர் கழகமாக” பரிணமித்து, இன்றுவரை உயிர்த் துடிப்போடு – தேர்தலில் பங்கேற்காத சமூகப் புரட்சி இயக்கமாக, நாட்டின் அரசியல், சமூக கலங்கரை வெளிச்சமாகவும் செயல் பட்டு வருகிறது.
பிரச்சாரம் – போராட்டம் என்ற இரு விசைகளுடன் சுழன்று சுழன்று தொண்டறம் புரியும் மக்கள் இயக்கமாகவும், அனைத்துத் திராவிட கட்சிகளுக்கும் தாய் என்று சொல்லும் அளவுக்கும், பிற கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பெரும் சக்தியாகவும், வரலாறு படைத்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா தொடக்கம் இவ்வாண்டு நவம்பரில் வருகிறது.
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் சுயமரி யாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை இவ்வாண்டு இறுதியில் கொண்டாடுவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
அதற்குள் இயக்கம் இல்லாத பட்டி, தொட்டி, நாடு, நகரங்கள் எல்லாவற்றிலும் நமது கிளைகள் அமைக்கும் பணியை முடித்தாகவேண்டும் என்று கழகத் தோழர் களை, பொறுப்பாளர்களை இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

தீர்மானம் எண் 4:
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டுவிழா!

சிந்து சமவெளி என்பது திராவிட நாகரிகம்தான் என்று (பொ.ஆ.மு. (Common Era) BCE 3300-1300) இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த சர்ஜான் மார்ஷல் என்பவர் 1924 ஆம் ஆண்டில் தொல்லியல் ஆய்வின் மூலம் உலகறியச் செய்தார்.

‘ஆரியம் – திராவிடம்’ என்பதெல்லாம் வெள்ளைக் காரனின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப்பனர்கள் பரப்புரை செய்வதெல்லாம் – ஆரியப் பார்ப்பனர்களின் தந்திரமே என்பது 1924 இல் தொல்லியல் ஆய்வின்மூலம் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று உறுதி செய்யப்பட்டது. (‘தினமணி’ ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன் போன்றவர்களும் இதனை ஏற்கின்றனர்).

1924 இல் பிரகடனப்படுத்தப்பட்ட திராவிட நாகரிகத் தினையும், அதனை ஆய்வின்மூலம் உலகறியச் செய்த சர்ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பையும் வரலாற்றில் நினைவு கூர்வதற்கு அதன் நூற்றாண்டு விழாவினை வரும் டிசம்பரில் சிறப்புடன் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 5:
பாடகர் கிருஷ்ணாவுக்கு விருது – தந்தை பெரியார்மீது அவதூறு பரப்புவோருக்குக் கண்டனம்- எச்சரிக்கை!

சென்னை மியூசிக் அகாடமி என்ற அமைப்பு கர்நாடக இசைக் கலைஞரும் சமூக நல்லிணக்க உணர்வுடன் செயல்பட்டுவருபவருமான டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுமென அறிவித் திருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஞ்சனி-காயத்ரி என்ற இரண்டு பாடகிகள், டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் பற்றி பாடல் பாடியிருக்கிறார் என்றும், கருநாடக இசையில் சமூகக் கருத்துகளைப் பாடுவதையும் காரணம் சொல்லி, தந்தை பெரியாரைக் குறித்த அவதூறுகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளை யும் தெரிவித்துள்ளனர். அதனையொட்டி மேலும் சில பார்ப்பனக் கோஷ்டிகளும் அவர்களுடன் இணைந்து உள்ளன. பெரியார் மீதான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருவதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், இந்த விவகாரத்தில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகவும், தந்தை பெரியார் பற்றிய அவதூறுகளுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்து உள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே ராகத்தை இசைப் பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்திருப்பது மிகவும் தெளிவாகிறது.
ஆனால், இப்பிரச்சினையில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதில் மியூசிக் அகாடமியும், அதன் தலைவர் என்.முரளியும் காட்டிவரும் உறுதி பாராட்டுக் குரியதாகும்.
தந்தை பெரியார் ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட மனிதநேயத் தலைவர். அவரை இழிவு செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மன்னிப்புக் கேட்கவில்லை யெனில், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 6(அ):
கழக செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துதல்!

2023 மே 13 ஆம் தேதியன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் கழக அமைப்பு முறையிலும், நிர்வாக முறையிலும் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கழகப் பணிகள் பல தளங்களிலும் எழுச்சி யுடன் நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கழகச் செயல்வீரர்களின் பணி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.
அடுத்து நாம் சந்திக்க இருப்பது மக்களவைத் தேர்தலாகும். கொள்கை, லட்சியம் என்ற அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்தல் என்பது – நமது கழகத் திற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகமிக முக்கிய மானதாகும்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்த வகையில் இந்தியாவிற்கே வழிகாட்டுவதாகும் என்பதற்கு அவர் பெரிதும் உழைத்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியே தக்க சான்று. இந்தியா கூட்டணியின் வெற்றியே ‘வேற்றுமையில் ஒற்றுமையை’ இந்திய நாடும், நாளை அமையப்போகும் அரசும் தக்க வைக்கவும், கூட்டாட்சி தத்துவத்தோடு, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஆட்சியாக ஒன்றியத்தில் அமைவதற்கான நல்வாய்ப்பாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அத்தனைத் தொகுதிகளிலும் வெற்றி பெற நமது கழகத் தோழர்கள் முழு மூச்சுடன் பாடுபடுவது என்றும், அடுத்து இவ்வாண்டு இறுதியில் காத்திருக்கும் இரு நூற்றாண்டு விழாக்கள் சிறப்புற நடத்துவது என்றும்,
இந்தப் பணிகளுக்கிடையே கழகக் கட்டமைப்புப் பணிகளிலும் கழகப் பொறுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கழகத் தோழர்களை யும், பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 6(ஆ):
தந்தை பெரியார் காட்டிய நெறிமுறையின்படி பரப்புரைப் பணிகள்

கழகத் தலைவர் வழிகாட்டுதல்படி நமது சொற்பொழி வாளர்கள்மூலம் பரப்புரை பயணங்களை வாக்காளர் களிடையே போதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தித் தரும் வகையில் பொறுப்புடன் நடத்தி, கொள்கைக் கூட்டணிக்கு அச்சாணி போன்று இயக்கவேண்டியது நமது தலையாய கடமையாகும். தந்தை பெரியார் காட்டிய நெறிமுறையின்படி பரப்புரை பணிகள் அமைக்கப்படல் வேண்டும் என்று இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

ஈரோடு த. சண்முகத்தின் 60ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை ஆதவனின் 68ஆவது பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை கூறினார். தாராசுரம் இளங்கோவனின் 84ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (தஞ்சை 25.3.2024)

தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்

திராவிடர் கழக செயலவைத் தலைவர் – சீரிய எழுத்தாளர் – பேச்சாளர் கடலூர் மானமிகு சு.அறிவுக் கரசு (வயது 84, மறைவு: 22.1.2024), திராவிடர் கழக மேனாள் மாநில மகளிரணி செயலாளரும் கொள்கை வீராங்கனையுமாகிய க.பார்வதி (வயது 77, மறைவு: 8.11.2023), நீண்டகால இயக்க செயல்வீரர், மாவட்ட கழக காப்பாளர் நெய்வேலி வெ.ஜெயராமன் (வயது 82, மறைவு: 22.12.2023), முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் கோவை கண்ணன் (வயது 84, மறைவு: 2.1.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், கோவையில் பல்வேறு பொது அமைப்புகளில் இருந்து தொண்டறம் பேணிய கோவை ‘வசந்தம்‘ கு.இராமச்சந்திரன் (வயது 98, மறைவு: 24.6.2023), கோவை மாவட்ட மேனாள் செயலாளர், பொள்ளாச்சி கழக செயல் வீரர் பாரதி (வயது 67, மறைவு: 4.2.2024).

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பெரியார் தொண்டர் கு.தாமோதரன் (மறைவு: 9.2.2024), ஆந்திர மாநிலம் பாரத

நாத்திக சமாஜ் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் (வயது 80, மறைவு: 7.2.2024), புதுக்கோட்டை மாவட்டக் கழக காப்பாளர் செயல் வீரர் பெ.இராவணன் (வயது 90, மறைவு: 11.2.2024), திராவிட இயக்க உணர்வாளர் – சிந்தனையாளர் கயல் தினகரன் (வயது 88, மறைவு: 14.2.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கல்லக்குறிச்சி பெரியார் நேசன் (வயது 94, மறைவு: 22.2.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமி (வயது 102, மறைவு: 25.2.2024), புழல் தோழர் டி.பி.ஏழுமலை (வயது 71, மறைவு: 24.2.2024), பெரியார் பெருந்தொண்டர் மூக்கனூர் பெருமாள் (ரெட்டியார்) (ஓமலூர் வட்டம்) (வயது 94, மறைவு: 27.2.2024), கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடி யு.கலாநாதன் (வயது 84, மறைவு: 6.3.2024).

அரூர் நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் மார்க்ஸ் (மறைவு: 11.3.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிறீரங்கம் எஸ்.எஸ்.முத்து (வயது 93, மறைவு: 13.3.2024), விழுப்புரம் மாவட்ட கழகத் தலைவர் ப.சுப்பராயன் (வயது 71, மறைவு: 18.3.2024), வேலூர் – திமிரி நகர கழக தலைவர் ஜெ.பெருமாள் (வயது 76, மறைவு: 20.3.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் திருவையாறு வடிவேலு (வயது 91, மறைவு: 21.3.2024).

புகழ் புத்தகாலயம் பதிப்பாளர் – கவிஞர் தமிழ் ஒளி படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற எழுத்தாளர் செ.து.சஞ்சீவி (வயது 94, மறைவு: 20.5.2023), நீடாமங்கலம் நகர கழகத் தலைவர் இர.அமிர்தராஜ் (வயது 82, மறைவு: 21.5.2023), விருத் தாசலம் நகர கழகத் தலைவர் நா.சுப்பிரமணியன் (வயது 73, மறைவு 25.5.2023), ஜாதி ஒழிப்பு வீரர் – தத்தனூர் துரைக்கண்ணு (வயது 91, மறைவு: ஜூன் 2023), சோழங்கநல்லூர் வடகுடி கிளைக் கழகத் தலை வர் த.காமராஜ்(ஜூன் 2023).

சென்னை தியாகராயர் நகர் மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஏழுமலை (வயது 92, மறைவு: 15.6.2023), இயக்க ஈடுபாட்டாளர் சிங்கப்பூர் அன்னபூரணி நடராசன் (வயது 89, மறைவு: 19.7.2023), மலேசிய கழகத்தின் மூத்த உறுப்பினர் இரா.நல்லுசாமி (மறைவு: 21.7.2023), மலேசிய கழகத்தின் மூத்த தலைவர் சின்னப்பன் (மறைவு: 21.7.2023), மதுரை பேராசிரியர் முனைவர் கஸ்தூரிபாய் மனோகரன் (வயது 78, மறைவு: 23.7.2023), இனமானக் கவிஞர் செ.வை.ர.சிகாமணி (வயது 83, மறைவு: 7.8.2023), பொத்தனூர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் சி.தங்கவேல் (வயது 86, மறைவு: 9.8.2023), கழகக் காப்பாளர் திருச்சி துப்பாக்கி நகர் சோ.கிரேசி (வயது 76, மறைவு: 20.8.2023).

மத்தூர் ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர் ப.மங்களதேவி (மறைவு: 23.8.2023), குடந்தை மாநகர கழகத் தலைவர் செயல் வீரர் கு.கவுதமன் (வயது 68, மறைவு: 24.8.2023), கழகப் பற்றாளர் துறையூர் ‘வீகேயென்’ பாண்டியன் (மறைவு: 25.8.2023), சென்னை பகுத்தறிவாளர் ந.சி.இராசவேலு (வயது 83, மறைவு: 26.8.2023), திருத்தணி ஒன்றிய கழக அமைப்பாளர் கி.சபரி (மறைவு: 29.8.2023), இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி (வயது 54, மறைவு: 4.9.2023), பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் பெரியார் முரசு (எ) ஆறுமுகம் (வயது 93, மறைவு: 4.9.2023).
பகுத்தறிவு இயக்குநர் – நடிகர் தேனி மாரிமுத்து (வயது 56, மறைவு: 8.9.2023), தருமபுரி மாவட்டக் கழக மேனாள் தலைவர் புலவர் வேட்ராயன் (வயது 76, மறைவு: 17.9.2023), கடலியல் வரலாற்று ஆய்வாளர், ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணியன் (வயது 60, 6.10.2023), செம்பனார் கோவில் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் டி.கனகலிங்கம் (வயது 82, மறைவு 17.02.2024) ஆகிய மறைவுற்ற பெருமக்களுக்கும், சுயமரியாதைச் சுடரொளிகளுக்கும் இப்பொதுக்குழு தனது ஆழ்ந்த துயரத்தையும், அவர்களின் அளப் பரிய தொண்டுக்கு வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் இப்பெருமக்களின் மறைவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத் தினருக்கும் இப்பொதுக்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை கழகத் தோழர்கள், கொள்கை முழக்கமிட்டு வரவேற்றனர். தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர்
சி.அமர்சிங் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (தஞ்சை – 25.3.2024)

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரை

விடுதலை நாளேடு
Published March 26, 2024

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்பு – கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரையாற்றினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (திராவிடர் கழகப் பொதுக்குழு, தஞ்சை – 25-3-2024)


அய்ஸ் அவுஸ் அன்புவின் உடல் நலம் விசாரிப்பு


விடுதலை நாளேடு,
Published March 27, 2024

‘விடுதலை’ நாளேட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இல்லம் உள்பட முக்கியமானவர்களின் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி நேரில் சென்று, ‘விடுதலை’ நாளேட்டை சேர்ப்பித்து வந்த அய்ஸ் அவுஸ் ‘விடுதலை’ அன்பு சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேற்று (26.03.2024) நண்பகல் நேரில் அவரது இல்லம் சென்று உடல் நலம் விசாரித்தார். உடன் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் சென்றிருந்தார்.

சனி, 23 மார்ச், 2024

கழகத் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு (தென் சென்னை)


Published March 22, 2024

தோழர் கரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் இராமாபுரம் பகுதி தோழர் க.சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகர் பகுதி பெரியார் மணிபொழியன், விருகை பகுதி க.செல்வம் மற்றும் தோழர்கள் கண்ணன், மாசிலா விநாயகமூர்த்தி ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இன்று (22.3.2024) சந்தித்தனர்.

ஞாயிறு, 17 மார்ச், 2024

தென் சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதியில் “தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” கழகப் பிரச்சாரக் கூட்டம்



விடுதலை நாளேடு
Published March 17, 2024

சென்னை, மார்ச் 17- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அரும்பாக்கம் பகுதி யில் உள்ள சக்தி நகர் இந்திரா காந்தி தெரு இணையும் இடத் தில் 11.03.2024 அன்று மாலை 6 மணி அளவில் அன்னை மணியம்மையாரின் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ”இந்தியா மிழிஞிமிகி கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?’ தெரு முழக்கம் பெரு முழக்கமாகட் டும்” என்கின்ற தலைப்பில் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமையிலும் மாவட்டத் தலைவர் இரா வில்வநாதன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேது ராமன் ஆகியோர் முன்னிலை யிலும் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற் புரையாற்றினார். வட சென்னை தோழர் துரைராஜ், வாசி ரவி, பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங் கடேசன் மற்றும் கழக செயல வைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி ஆகியோரின் உரைக்குப்பின் கிராமப் பிரச்சாரக் குழு கழக மாநில அமைப்பாளர் முனை வர் அதிரடி க.அன்பழகன் ‘பாரதிய ஜனதா ஆட்சியால் நாடு சீரழிந்து கிடப்பதையும், மதவெறி தாண்டவம் ஆடு வதையும், வடமாநிலங்களில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் மலிந்து விட்டதையும், தொழில்நுட்ப (டிஜிட்டல்) முறையில் ஊழல் நடப்பதையும், அரசுத் துறைகளை ஏவல் துறைகளாக மாற்றி இருப்பதையும் எடுத்துக் கூறி, பகுத்தறிவு மூடநம்பிக்கை ஒழிப்பு, தந்தை பெரியாரின் சீரிய பங்களிப்பு ஆகியவற்றை விளக்கியும் அதனால் தமிழ் நாடும் மக்களும் கல்விலும் வேலைவாய்ப்பிலும் தொழில் நுட்பத்திலும் அறிவியல் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கு கின்றனர் என்பதை விளக்கிக் கூறி இதே போல் இந்தியா வையே திராவிட இந்தியாவாக மாற்ற வேண்டும், அதற்கு இந்த நல்வாய்ப்பை பயன்படுத் திக் கொண்டு ‘இந்தியா கூட்ட ணி’யை வெற்றி பெற செய்யும் வகையில் முன்னெடுத்து செல்ல வேண்டும்’. என்று கூறி சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார்.

சிறப்புரைக்கு நடுவே உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்பமை சந்திர சூட் அவர்களின் தீர்ப்பை பாராட்டி அனைவரையும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தும்படி கூறியதைய டுத்து அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர்.

செயலவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆ.வீரமர்த்தினி அவர்களை பாராட்டும் வகையில் சிறப்பு அழைப்பாளராக வரவழைக் கப்பட்டு கூட்டமேடையில் பயனாடை அணிவித்து பாராட் டப்பட்டார்.
சிறப்பு பேச்சாளர் முனை வர் அதிரடி அன்பழகனுக்கும், பகுதி மாநக ராட்சி மாமன்ற உறுப்பினர் ந.அதியமானுக்கும் பயனாடை அணிவித்து நூல் கள் வழங்கி பாராட்டு தெரி விக்கப்பட்டது.

துணைச் செயலாளர் சா.தாமோதரனின் 61ஆவது பிறந்த நாளை ஒட்டி அவரை பாராட்டும் வகையில் தாம்ப ரம் மாவட்ட நகரக் கழகம் சார்பில் தாம்பரம் நகர செய லாளர் சு.மோகன்ராஜ், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்செல்வன் ஆகியோர் சட்டமிடப்பட்ட ‘தந்தை பெரியார்’ படத்தை வழங்கினர்.
மாநில திராவிடர் கழக தொழிலாளர் பேரவை பொரு ளாளர் கூடுவாஞ்சேரி இராசு, தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் மு.இரா.மாணிக்கம், தென் சென்னை மாவட்ட தொழிலா ளர் அணி தலைவர் ச.மாரியப் பன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண் முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் ந.மணிதுரை, மாணவர் கழகத் தலைவர் கு.ப.அறிவழ கன், சைதை தென்றல்,
மு. டில்லிபாபு, மா.சண்முகலட் சுமி, மு.பவானி (தலைவர், மாவட்ட மகளிர் பாசறை), அண்ணா நகர் அரங்க.சுரேந்தர், மேடவாக்கம் அரங்க.இராசா, மா.தமிழரசி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர் தளபதி பாண்டியன், கோ. தங்கமணி, தங்க. தன லட்சுமி, முகப்பேர் டி.முரளி, க. செல்லப்பன், ச. சாம்குமார், இரா.அருள், க. இளவழகன், மு. செல்வி, ச.ச. அழகிரி, க. இளவரசன், து.கலையரசன், பெரியார் சுயமரியாதை திரு மண நிலைய இயக்குநர் பசும் பொன் மற்றும் திராவிட முன் னேற்றக் கழக 102, 103ஆவது வட்ட தோழர்களும் பொதுமக் களும் கலந்து கொண்டு கூட் டத்தை சிறப்பித்தனர்.
இறுதியாக வழக்குரைஞர் தங்க.இராஜா நன்றி கூறினார்.

நிகழ்வில் பங்கேற்ற அனை வருக்கும் சிற்றுண்டி வழங்கப் பட்டது.

--------------------++++++++++++++-------------------


ஞாயிறு, 10 மார்ச், 2024

ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சி.பி.அய் – எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சாதனைகளை சொல்ல முடியாத பா.ஜ.க. ஒன்றிய அரசு மக்களிடம் இருக்கும் பாமர பக்தியைப் பயன்படுத்தி வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடுகிறது!


விடுதலை நாளேடு 

 கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை

சென்னை. பிப். 10- ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சி.பி.அய் – எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை வைத்து போட்டி அரசு நடத்துவ தையும், மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய மோடி அரசு’ என்கின்ற தலைப்பில் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும் சி.பி.அய்.எம் சார்பில் 8.2.2024 அன்று, சென்னை, சைதாப்பேட்டையில் ”கலைஞர் பொன்விழா வளைவு”க்கு அருகே, மாலை 6 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் இரா.வேல் முருகன் தலைமையில், சி.பி.அய்.எம். சைதைப் பகுதிச் செயலாளர் தோழர் ஜி.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநகராட்சி உறுப்பினர் தோழர் எம்.சரஸ்வதி, சி.பி.அய். மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, ம.தி.மு.க. மாநகராட்சி உறுப்பினரும், தென்சென்னை மாவட்டச் செயலாளருமான ப.சுப்பிரமணி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்
க. பீம்ராவ், மாநில செயற்குழு தோழர் என். குணசேகரன், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாள ருமான ச. அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். இறுதியாக திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.
அவர் தனது கண்டன உரையில் கடந்த 2014 இல் ஆட் சிக்கு வந்த பா.ஜ.க. அரசு சட்டப்படியான ஆட்சியை நடத்த வில்லை என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துக் கூறினார். இப்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனது 10 ஆண்டு கால சாதனைகளாக சொல்வதற்கு எதுவுமில்லை. ஆகவே, மக்களின் பாமர பக்தியைப் பயன்படுத்தி வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடு கிறது. I.N.D.I.A. கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இருந்து அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்று கூறினார். இறுதியாக சைதை பகுதிக்குழு தோழர் கே.மணிகண்டன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர்கள் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க. அன்பழகன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மு.ந.மதியழ கன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர்கள் பூவை தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.பவானி, திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தலைமைக் கழகப் பணித் தோழர் க,கலைமணி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு சேர்த்தனர்.

தேனி
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநர் ரவியை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பூ மணிகண்டன் தலைமையில் தேனி மாவட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்க எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பூ.மணிகண்டன் தலைமையில் தேனி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கரூர்
கரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்டத் தலைவர் குமாரசாமி, திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர் மு க ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சே அன்பு, காப்பாளர் வே, ராஜு, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, ஆகியோர் கரூரில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கரூர் கடைவீதி தலைமை அஞ்சல் அலுவலகம் முன். சிபிஎம் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஎம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், பிஜேபி அரசு ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து, கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் டில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கரூர் மாவட்ட செயலா ளர் ஜோதிபாசு, திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், திமுக கரூர் மாநகர செயலாளர்கள் வழக்குரைஞர் சுப்பிரமணி எஸ்.பி கனகராஜ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கொமதேக மாவட்ட செயலாளர் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன், அமைப்புசாரா தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், கரூர் மாவட்ட கழகத் தலைவர் குமாரசாமி, எல் பி எஃப் கரூர் மாவட்ட செயலாளர் அண்ணா வேலு, திமுக கரூர் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் பாபு, சிபிஅய் மாவட்ட தலைவர் நாட்ராயன், விசிக கரூர் நகர செயலாளர் முரளி என்கிற பாலசிங்கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, சக்திவேல், சுப்பிரமணி, ராமமூர்த்தி கோச்மீன் சரவணன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஒசூர்
ஒசூரில் சிபிஎம் கட்சி மாநகர செயளாலர் சி.பி.ஜெயராமன் தலைமையில் பிஜேபி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, மமக, சிபிஅய் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், திமுக மாவட்ட செயளாலர் ஒய்.பிரகாஷ், மேயர் சத்யா, சிபிஅய் மாதையன், மதிமுக ஈழம் குமரேசன், விடுதலை சிறுத்தை கட்சி மாநகர மாவட்ட செயளாலர் எம்.ராமசந்திரன், சி.பி.எம் மாவட்ட செயற்குழு ஆர்.சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோவை
கோவையில் 8.2.2024 அன்று டாடாபாத் பகுதியில் மாலை 5 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திராவிடர் கழகம் சார்பில் கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்
ஆர்பாட்டத்தில் கழகத் தோழர்கள் அ.மு.ராஜா வெங்க டேஷ், நா.குரு, ஆவின் சுப்பையா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் நிதி பங்கீட்டில் பாரபட்சம் காட்டப் படுவதையும், மாநில அரசுகள் கடன் பெற சீலிங் வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டியும், சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் மழை பேரிடரை சரி செய்ய, தமிழ்நாடு அரசு 36 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டது. ஆனால் ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்பதையும், தமிழ்நாடு, கேரளா, டில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசு ஆளுநர்கள் மூலம் இடையூறுகள் செய்து வருகிறது. மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டியும் உரையாற்றினார்கள்.

இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் திராவிட முன் னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் – ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், சேதுபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுசி கலையரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ.கே.சிவஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மத்திய மண்டல துணைச் செயலாளர் ஏ.பி.மணி பாரதி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்
ஒன்றிய அரசை கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழு விய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில உரிமைகள் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம், ஆளுநரை பயன்படுத்தி மசோதாக்களுக்கு அனுமதி தர மறுப்பதா, ணிஞி, மிஜி போன்ற ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டாதே போன்ற பல்வேறு முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில். திராவிடர் கழகத்தினர் உள்பட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------