செவ்வாய், 23 மார்ச், 2021

தி.மு.க வேட்பாளர்களுக்கு தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்து

தியாகராயர்நகர்-ஜெ.கருணாநிதி, மயிலாப்பூர்-மயிலை த.வேலு, சைதாப்பேட்டை-மா.சுப்ரமணியன் தி.மு.க வேட்பாளர்களுக்கு தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்து

தியாகராயர் நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி அவர்களை சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து ஆசிரியர் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாடு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் மயிலை த.வேலு அவர்களையும், சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியன் அவர்களையும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து "திமுக கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்" புத்தகத்தை வழங்கி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்வதை பற்றி ஆலோசிக்கபட்டது. மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி. மாவட்ட துணைத் தலைவர் கோ.வீ.ராகவன், மு.சண்முகப்பிரியன். ந.மணித்துரை, சிவசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்

லக்னோவில் பெரியார் மேளா

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் 1995, செப்டம்பர் 16, 17, 18 தேதிகளில் மிகப் பெரிய அளவில் “பெரியார் மேளா’’ நடத்த அம்மாநில பகுஜன் சமாஜ் அரசு அறிவித்தது. லக்னோவில் உள்ள மற்ற சமூக மாற்றப் பூங்காவில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், நாராயண குரு, சாகு மகராஜ், ஜோதிபாபுலே ஆகியோரின் சிலைகள் திறப்பும் நடைபெற்றது. இதற்கு முழுக் காரணம் கன்ஷிராம் அவர்களே!

பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். சக்திகளின் எதிர்ப்பையும் மீறி, பல்வேறு விமர்சனங்களையும் பொருள் படுத்தாது சமூகநீதிப் போராளி கன்ஷிராம் அவர்களும், அம்மாநில முதல்வர் மாயாவதி அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவை ஆட்சி கவிழ்ந்தாலும் கவலை இல்லை என்று அறிவித்து, பணி செய்து வருவது பாராட்டுக்குரியது. அவர்களின் அழைப்பினை ஏற்று 14.9.1995 அன்று தனி ரயில் மூலம் கழகக் குடும்பத்தினர், முதியவர்களும், இளைஞர்களும், மகளிரும், குழந்தைகளும் என குடும்பம் குடும்பமாக பெரியார் திடலில் இருந்து ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அவர்களை வழியனுப்ப ரயில் நிலையம் சென்று வாழ்த்தி உரையாற்றுகையில், “லக்னோ பெரியார் மேளாவிலும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களிலும் கலந்துகொள்ள குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்திருப்பதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கன்ஷிராம் அவர்கள் என்னுடன் தொலைபேசியில் பேசியபோது, “பெரியார் கொள்கை காவிரி நதிக்கரையிலிருந்து கங்கை நதிக்கரைக்குப் பரவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். திராவிடர் கழகத்தினர் கலந்து கொள்ளுவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியது’’ என்றார்.

லக்னோ விழாவிற்கு பிறகு 19ஆம் தேதி டில்லியில் நடக்கும் விழாவும் மிகச் சிறப்பானதாக இருக்கும். கழகத் தோழர்களே, உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய உங்களுடன் கழகப் பொறுப்பாளர்களும் வருகின்றனர். வைக்கத்திலே அய்யா விழாவுக்கு சென்றபோது கடைப்பிடித்த அதே கட்டுப்பாட்டோடு பயணம் செய்து வாருங்கள். உங்களை லக்னோவில் சந்திப்பேன்’’ எனக் கூறி கழகத் தோழர்களை வழியனுப்பி வைத்தோம். அங்கிருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்களும் தனி ரயிலில் புறப்பட்டனர். அவர்களையும் வாழ்த்தி, கொடியசைத்து வழியனுப்பினேன்.

உத்தரப்பிரதேசம் லக்னோவில் 17.9.1995 அன்று நடந்த பெரியார் மேளாவில் லட்சோபலட்சம் மக்கள் குவிந்தனர். லக்னோவில் ‘டாலிபாக்’ பகுதியில் தங்கியிருந்த கழகக் குடும்பத்தினரை சந்திக்க காலை 11:00 மணியளவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் தனது கட்சியினருடன் விருந்தினர் மாளிகைக்கு வந்தபோது, அவருடன் வந்த கட்சியினர், “பிதா பெரியார்கி ஜிந்தாபாத்! நேதாஜி வீரமணிகி ஜிந்தாபாத்! கன்சிராம்கி ஜிந்தாபாத்! எனும் முழக்கங்களை தோழர்கள் விண்ணதிர முழக்கமிட, கன்சிராம் அவர்கள் வரவேற்றும், அங்கிருந்த ‘அய்யா’ படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். நமது பெரியார் சமூகக் காப்பு அணியினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கழகத் தோழர்கள் கைகளில் கழகக் கொடிகளை ஏந்தி பேரணியாகப் புறப்பட்டனர். மக்கள் பிற பகுதிகளிலிருந்தும் ஊர்வலமாக வந்தனர். பேரணி ‘பேகம் அஸ்ரத்’ மகால் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் திடலை சென்றடைந்தது. பிற்பகல் 2:45 மணியளவில் ‘பெரியார் மேளா’ துவங்கியது. விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில்,

“தந்தை பெரியார் ஒரு பிறவிப் போராட்ட வீரர். தென்னகத்தில் பிறந்த தந்தை பெரியாரின் விழாவை இங்கு கொண்டாடுவதன் மூலம் ‘உண்மையான சமுதாய ஒருமைப்பாடு’ ஏற்பட்டிருக்கிறது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருந்த பிறவி ஏற்றத்தாழ்வை ஒழிக்கப் பாடுபட்டவர் பெரியார். காசியில் சம்பூர்ணானந்த் சிலையை பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் திறந்தபோது, தீட்டாகிவிட்டது என உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் கங்கை நீரை ஊற்றிக் கழுவினர். அதைக் கண்டித்துக் குரல் கொடுத்தது திராவிடர் கழகம். வடநாடு அயோத்தி ராமனை மட்டுமே அறிந்திருந்தது. இப்போது ஈரோட்டு ராமசாமியையும், கன்சிராமையும் அறிந்திருப்பது வரவேற்கத்தக்கது’’ எனப் பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். அந்த ஆங்கில உரையை ‘டாக்டர் பிரிஜ்லால் வர்மா’ இந்தியில் மொழிபெயர்த்துக் கூறியதை மக்கள் உணர்ச்சி பொங்க கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைக் காட்டினர்.

மாநில முதல்வர் மாண்புமிகு மாயாவதி உரையாற்றுகையில், “எதிர்ப்புகளைக் கண்டு எங்கள் அரசாங்கம் அஞ்சாது, பெரியாருக்குச் சிலை வைப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். காந்திக்கும், நேருவுக்கும் விழா எடுக்கும்போது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு ஏன் சிலை வைக்கக் கூடாது? எங்கள் அரசாங்கம் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

நிறைவுரையாற்றிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்சிராம் அவர்கள், “தந்தை பெரியார் சிலையை நிறுவுவதில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பின்வாங்க மாட்டோம். பெரியார் அம்பேத்கரின் கொள்கைகள்தான் வெகுமக்களின் உரிமைகளை ஈட்டித் தரமுடியும். அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரை தேசத் துரோகி என்றவர்கள் இப்போது, “பாரத ரத்னா’’ என்று போற்றுகிறார்கள். அதேபோல், இப்போது ‘பெரியார் மேளா’வைத் தூற்றுபவர்கள் நாளை வேறு மாதிரி பேசுவார்கள். இது அவர்கள் வழக்கம். நான் சாவதற்குள் பெரியார் சிலையை அமைத்துவிட்டுத்தான் சாவேன்!’’ என்றார்.

விழாவினை சிறப்பாக நடத்தியமைக்காக மாநில முதல்வருக்கும், கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்களுக்கும், சிவகங்கை ராமலக்குமி சண்முகநாதன் அம்மையாருக்கும் பொன்னாடை போர்த்தி, ‘அய்யா’ படம் பொறித்த நினைவுப் பரிசினை வழங்கி உரையாற்றினேன். வடபுலத்திலிருந்து கலந்துகொண்ட அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றி கூறினேன். இந்த ‘பெரியார் மேளா’ எல்லோர் மனதிலும் புதிய எழுச்சியை உருவாக்கியது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

-உண்மை இதழ், 1-15.3.21

ஐநாவிடம் அளிக்க திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து

ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைக் கண்டித்து _ தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அய்.நா.வின் மனித உரிமைக் கமிஷனுக்கு அனுப்ப கழகம் திட்டமிட்டு, சென்னை மாநகரத்தில் 20 நாள்களாக 170 தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை கழக இளைஞரணியினர் நடத்தி கையொப்பங்களைப் பெற்றனர். அப்படிப் பெறப்பட்ட பத்து லட்சம் கையொப்பங்களை கழக பொதுச் செயலாளர் என்னும் முறையில் என்னிடம் ஒப்படைக்க பொதுக் கூட்டத்திற்கு புதுப்பேட்டை காவல்நிலையத்தில் அனுமதி கேட்டனர். அதற்கு காவல் துறையினர் ‘வினாயகர் சிலைகள்’ வைத்திருப்பதாகக் கூறி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி 31.8.1995 அன்று திட்டமிட்ட இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டு, காரியத்தில் இறங்கினோம். பெரியார் திடலுக்கு ஏராளமான கழகத் தோழர்கள் உணர்ச்சியோடு திரண்டனர். வெளியே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பொதுக்கூட்டத்திற்கு கழகத் தோழர்களின் அணிவகுப்போடு தலைமை ஏற்று, “தந்தை பெரியார் வாழ்க! கருத்துரிமையை பறிக்காதே! மனித உரிமைகளுக்குக் குரல் கொடுக்கவும் தடையா? என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. அப்போது போலீசார் எங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்படியே சாலையில் அமர்ந்தோம். போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. அப்போது தோழர்களிடம் உரையாற்றுகையில், “ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையைக் கண்டித்து ஒரு கோடி கையொப்பங்களைப் பெற்று, அய்.நா.மனித உரிமைக் குழுவுக்கு அனுப்ப நாம் திட்டமிட்டு புதுப்பேட்டையில் நிறைவு விழா கூட்டத்திற்கு காவல் அனுமதி தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. புதுப்பேட்டை பகுதி என்றாலே _ அது இந்து முன்னணிக்கே குத்தகைக்கு விடப்பட்டு அவர்களுக்கே தாரை வார்த்துக் கொடுத்தது போல் காவல்துறை நடந்துகொள்வது எதனால்?

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து  தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தி கைதாகும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

இந்த ஆட்சியில் உள்துறை செயலாளராக ஒரு பார்ப்பனர், தலைமைச் செயலாளராக ஒரு பார்ப்பனர், சென்னை மாநகர காவல்துறை அதிகாரியாக ஒரு மலையாளி. இப்படி தமிழர் அல்லாதவர்களை காவல் துறையில் நியமித்துக் கொண்டு வருகிறார்கள். காவல் துறையில் உள்ள தமிழர் அதிகாரிகள் நாதியற்றுப் போய்விட்டார்கள் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதா? இது முடிவானதல்ல, இதுதான் துவக்கம். மீண்டும் சட்டப் போராட்டம் செய்து வென்று இதே இடத்தில் இந்த தடை செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தை நடத்துவோம்’’ என பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். 200க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் என்னோடு கைது செய்யப்பட்டு, இரவு 10:00 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டோம்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி,

- உண்மை இதழ், 1-15.3.21

திங்கள், 22 மார்ச், 2021

கழகத்தோழர் மு.இரா.இளங்கோ _ சு.கனிமொழி ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

சென்னை சைதை வர்த்தகர் சங்கக் கட்டடத்தில் 15.8.1995இல் கழகத்தோழர் மு.இரா.இளங்கோ _ சு.கனிமொழி ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஏற்பு விழாவை தலைமையேற்று உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தேன். இந்த மணவிழா ஆடிமாதம், செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவாக நடைபெற்றது. அந்தப் பகுதியின் முக்கிய கழகப் பொறுப்பாளர்களும், கழகத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ் 16 -28. 2. 21

வெள்ளி, 19 மார்ச், 2021

குருசாமி, அசோக்குமார் மறைவு

கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் நமது தொழில்நுட்பக் கல்லூரிகளுடன் இணைப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் வெற்றிகரமான வகையில் நிறைவேறின என்ற மகிழ்ச்சியோடு தாயகம் திரும்பினோம்.

குருசாமி

சென்னை விமான நிலையத்திலிருந்து நாங்கள் திரும்பியபோது, ஏராளமான கழகக் குடும்பத்தினரின் பாசமழையில் நனைந்தேன் என்றாலும், 23.7.1995 அன்று நண்பர் குருசாமி மறைவு என்கிற பேரிடி தலையில் விழுந்தது!

நேரே அங்கு சென்று இறுதி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தபோதே, மற்றொரு மின்னல்தாக்கி நம் கண்களைப் பறித்ததுபோல, வார்த்தைகளால் வடிக்க முடியாத சோக நிகழ்ச்சியை ஓடிவந்து கூறினார்கள்.

விமான நிலையத்தில் நம்மை வரவேற்றுவிட்டு, தனது இரண்டு சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த அயன்புரம் கழகத் தலைவர் அசோக்குமார் விபத்துக்குள்ளாகி சாவின் கோரப் பிடிக்கு ஆளானார் என்கிற செய்தி ஆயிரம் ஆயிரம் சம்மட்டிகளால் நம் இதயத்தைத் தாக்கி சுக்கல் நூறாக்கியது போன்ற நிலைக்கு ஆளானேன்.

அசோக்குமார்

அவரது குடும்பமே திராவிட இயக்க குடும்பம். அவரது தந்தையார் அப்பகுதி தி.மு.கழகத்தில் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர். அவரது திருமணத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்  நடத்தி வைத்தேன் என்ற நினைவு என்னை மேலும் துன்பத் தீயில் தள்ளியது!

கொள்கை ஆர்வத்தில் என்றும் குறையாத ஆர்வம் படைத்தவர். ஏன், வெறிபிடித்த வேங்கைபோல் எப்போதும் இருப்பார். கழகப் பணிகளை பம்பரமாகச் சுழன்று செய்வார். கட்டுப்பாட்டில் ஒப்பற்ற ஓர் இராணுவ வீரர்! போராட்டங்களில் ஈடுபட்டுப் பூரித்தவர்!

அவரது இழப்பு என்னை வாட்டுகிறது வதைக்கிறது!

இரண்டு பெரும் இழப்புகள் _ அதுவும் ஒரே நேரத்தில். அவரது அன்பு வாழ்க்கைத் துணைவியார், அவரது பெற்றோர்கள், உடன்பிறந்தோர், உற்றார் உறவினர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது!

இதற்கு மேலும் என்னால் எழுத முடியவில்லை. வீர வணக்கம்! வீர வணக்கம்! குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டோம். அந்த அறிக்கையில்,

நமது பெரியார் கலையகத்தின் இயக்குநரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சுயமரியாதைக் கொள்கையிலும், உணர்விலும் சொக்கத்தங்கமாகத் திகழ்ந்தவரும், சுமார் 38 ஆண்டுகாலமாக நம்மிடம் மாறாத நட்புக் கொண்டவரும், பிரபல ஓவியர் _ புகைப்பட வல்லுநருமான தோழர் மா.குருசாமி அவர்கள் மாரடைப்பால், 23.7.1995 அன்று விடியற்காலை சுமார் 3:00 மணி அளவில் இயற்கை எய்தினார் என்கிற தகவல் அறிவிக்கப்பட்டபோது. நெருப்பில் விழுந்த நிலை எனக்கு ஏற்பட்டது! துன்ப துயரச் சூறாவளி என்னைத் தாக்கியது!

1957இல் எனது திருமணத்தை அய்யா அவர்கள் உறுதிப்படுத்திய காலகட்டத்தில் எனது சுற்றுப் பயணத்தின்போது, நன்னிலம் வட்டம் ஏனங்குடியில் முதன்முதலாக தோழர் குருசாமி அவர்களை நண்பர்கள் தங்கவேலு, திருவேங்கடம் ஆகியோருடன் சந்தித்தேன்.

அன்று முதல் அவரது நட்பு வளர்பிறையானது; அவரது மூச்சு, பேச்செல்லாம் கழகம்! பிறகு அவர் குடும்ப நலத்துறையில் அரசு தலைமை ஓவியராக (Chief Artist) பணியில் சேர்ந்த நிலையிலும், அஞ்சாது _ அயராது தான் ஒரு கருப்புச் சட்டைக்காரர் என்பதைக் காட்டத் தவறியதே இல்லை.

நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் _ அன்னை மணியம்மையார் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட தோழர், படப்பிடிப்பாளர். இயக்கத்தின் தலைமைக்கு அவர் இறுதிவரை விசுவாசி. கடமை தவறாத கருஞ்சட்டை இராணுவ வீரன்.

ஒவ்வொரு ‘விடுதலை’ மலரும், நாள்காட்டி, கழக டைரிகளும் அவரது ஆற்றலின் சான்றுகள்! சென்னை அய்யா நினைவகம் அவரது கடும் உழைப்பால் உருவானது!

புகைப்படக் காட்சிமூலம் உலகம் முழுவதும் அய்யாவின் பெருமையைப் பறைசாற்ற வேண்டுமென்றே உழைத்தவர்.

எனது எண்ணங்களை அவரிடம் கூறுவேன். அதற்கு வண்ணங்கள் கொடுத்து வெற்றியடையச் செய்யும் விற்பன்னர், அம்மேதை!

அவரைக் கடந்த சில ஆண்டுகள் இருதய நோய் தாக்கிய நிலையில்கூட, அவர் பெரியார் திடலில் வந்து தனது கடமையை அமைதி வழியில் ஆற்ற அவர் என்றும் தவறாதவர்.

அரசுப் பணியில் எத்தனையோ சோதனைகள் அவருக்கு! அய்யாவுக்குப் படம் எடுத்தார் என்று நெருக்கடி காலத்தில் குற்றம் சாட்டப்பட்டபோது மறுக்கவில்லை.

அவர் சிறப்பு இயக்குநராகி, பெரியார் திடலில் ‘பெரியார் கலையகம்’ கண்டார்! கடுமையாக உழைத்தே கண்மூடினார்!

கழகப் பொறுப்பாளர்கள் அனைவருடனும் அன்பு பூண்டவர். பாசப் பிணைப்புடன் செயல்பட்டவர். விமானத்திலிருந்து இறங்கிய உடனே என் கண்கள் குளமாகின! நேரே அவர் இல்லம் சென்று கருப்பு மெழுகுவத்திக்கு இறுதி மரியாதை, வீர வணக்கத்தைச் செலுத்தினேன். மயான பூமிவரை சென்றேன். அவர் உடல் எரிந்தது _ நம் அனைவர் உள்ளங்களைப் போல. அவரது துணைவியார் _ சகோதரி மாஸ்கோ _ சுயமரியாதைக் குடும்பமானதால் அந்தக் காலத்திலேயே ‘மாஸ்கோ’ என்று பெயர் சூட்டப்பட்டவர். மகன்கள் நெப்போலியன், கவுதமன், மைத்துனர் எழிலன், அவருடைய தொண்ணூறு வயதைத் தாண்டிய மாமியார் ஆகியோரைக் கண்டு ஆறுதல் கூற முடியாமல் தவித்தேன்!

என் செய்வது! பகுத்தறிவுவாதிகள் எதனையும் ஏற்றே பழக்கப்பட வேண்டியவர்கள்தானே!

நண்பர் குருசாமி, பெரியார் திடலில், பெரியார் கலையகத்தின் மூலம் நிரந்தரமாக வாழ்வார் என்பது தானே நம் எல்லோருக்கும் ஒரே ஆறுதல்! வீரவணக்கம்! குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அறிக்கை வெளியிட்டோம்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி,

- உண்மை இதழ், 1-15.2.21


வியாழன், 18 மார்ச், 2021

ஆயிரம் விளக்குத் தொகுதி வேட்பாளர் தமிழர் தலைவரிடம் வாழ்த்து!


சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி தி.மு.வேட்பாளர் மருத்துவர் நா.எழிலன்தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்உடன்கவிஞர் கலி.பூங்குன்றன்பேராசிரியர் நாகநாதன்,  மா.பாஅன்புதுரை (சென்னை, 16.3.2021)

திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது- (ஜனநாதன் மறைவு)


சென்னை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் உடலுக்கு  15.3.2021  அன்று முற்பகல் 11.50 மணி அளவில் மயிலாப்பூர் இடுகாட்டில்  மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில்   வீரவணக்கம்  செலுத்தப்பட்டதுசெயலாளர் செ..பார்த்தசாரதிதுணைச் செயலாளர் கோ.வீ.ராகவன்இளைஞரணி தலை வர் .மகேந்திரன்தரமணி கோ.மஞ்சுநாதன்கா.பெரியார் சித்தன் ஆகியோரும் வீரவணக்கம் செலுத்தினர்.

திங்கள், 15 மார்ச், 2021

குடந்தை வரலாறு படைத்தது


 குமரி முதல் திருத்தணி வரை குழுமிய திராவிடர் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் 13.3.2021 சனி யன்று காலை 10.30 மணிக்கு கும்பகோணம் ராயா மண்டபத்தில் எழுச்சி யுடன் கூடியது.

குமரி முதல் திருத்தணி வரை உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் வருகை தந்தனர். மண்டபம் நிறைந்து வழிந்தது.

தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மகளிர் அணி யினர் கழகக் காப்பாளர்கள், மண்டல, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர், செயலாளர்கள் என்று அவரவர்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்த இருக்கைப் பகுதிகளில் அமர்ந் திருந்தனர்.

கழகத் தலைவர் குறிப்பிட்டபடி மகளிரில் நாகர்கோயில் கிருஷ்ணேஸ்வரி  குடவாசல் வசந்தா கல்யாணி என்ற முதுபெரும் பெரியார் தொண்டர்கள் முதல், பிரச்சார செயலாளர் அருள்மொழி ஒத்த நடுத்தர வயதுடையோர், மணியம்மை, மதிவதனி பேன்ற இளைய தலைமுறையினர் என்று தலைமுறை இடை வெளியில்லாமல் மகளிர் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அதே போன்று ஆண்களிலும் மாண வர்கள், இளைஞர்கள் நடுத்தர வயதினர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் என்ற வகையில் வரிசையாக அமர்ந்தி ருந்தது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

கரோனா என்ற நெருக்கடி காலத்திலும் கழகப் பணிகள், இணையத்தின் மூலம் எப்படியெல்லாம் முடுக்கி விடப்பட்டன என்பதைக் கழகத் தலைவர் விளக்கினார்.

PDF  மூலம் 'விடுதலை' வெளி வந்தது; பிறகு 4 பக்கங்களாக அச்சிடப்பட்டு வெளி வந்தது; அன்னை மணியம்மையார் பிறந்த நாளிலிருந்து  வழக்கம்போல 8 பக்கங்களில் பல வண்ணங்களோடு வெளிவந்து கொண்டி ருக்கிறது.

இணையதளத்தில் ஏடு வெளிவந்தபோது 'விடுதலை' படிக்கும் வாசகர்களின் சராசரி விகிதம் பெருகியது மகிழ்ச்சிக்குரியது என்று குறிப்பிட்டார் கழகத் தலைவர்.

திராவிட மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை கடவுள் மறுப்புக் கூறிட, குடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர்

கு. நிம்மதி வரவேற்புரையாற்றினார்.

செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த பொதுக் குழுவுக்கும் இன்று நடை பெறும் கழகப் பொதுக் குழுவுக்கு இடையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சிகளைப் பட்டிய லிட்டுக் காட்டினார்.

குறிப்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வரும்  "பெரியார் உலகம்" பற்றிய தகவல்களை விளக்கிக் கூறினார். தொடர்ந்து பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

தீர்மானங்கள்

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலும் - நமது கடமையும் எனும் தேர்தல் தொடர்பான முக்கிய தீர்மானத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார். அனைவரும் எழுந்து நின்று பலத்த கரஒலி எழுப்பி தீர்மானத்தை வழிமொழிந்தனர்.

"திராவிடம் வெல்லும் வெல்லும்!" எனும் முழக்கத்தை கோடையிடியென முழங்கினர்.  மற்ற மற்ற தீர்மானங்களை திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் குடந்தை கோ. கருணாநிதி, கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை செயராமன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் முன்மொழிந்தனர். அனைத்துத் தீர்மானங்களையும் பலத்த கரஒலிக்கிடையே தோழர்கள் ஒரு மனதாக வழிமொழிந்தனர்.

குடந்தை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் சு.துரைராசு நன்றி கூறிட பொதுக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது.

நடைபெறவிருப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல - சித்தாந்தப் போராட்டமே!தி.மு.க. தலைவர் வெளியிட்ட சிறப்பான தொலைநோக்குத் திட்டம்!


 தமிழ்நாட்டிலும் - புதுவையிலும் தி.மு.க. -காங்கிரஸ் அணிகளை வெற்றி பெறச் செய்வீர்!

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் முழக்கம்

கும்பகோணம், மார்ச் 15   நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது - சமூகநீதி, மதச்சார் பின்மை கொள்கை உடைய தி.மு.க. அணிக்கும் - இவற்றிற்கு எதிரான பா.ஜ.க. - அ.தி.மு.க.வுக்கும் இடையில் நடக்கும் சித்தாந்தப் போராட்டமே - இதில், தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரி அணிகள் வெற்றி பெற உழைப்போம் என்று  முழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கும்பகோணம்: திராவிடர் கழகப் பொதுக்குழு

கடந்த 13.3.2021 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில்  முதல் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய தோழர் களே! திராவிடர் கழகத்தினுடைய பொதுக்குழு முதன்முறையாக குடந்தை மாநகரில் நடைபெறுகிறது என்கிற பெருமை யைப் பெற்றதோடு, சிறப்பான வகையில் ஏற்பாடு செய்து,  அதற்கு ஏராளமான ஒத்துழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய மாவட்ட, மண்டல கிளைகள் சார்ந்த தோழர்களின் பெயர்களை சொன்னால் நேரமாகும் என்பதற்காக, அவ்வளவு பேரையும் நல்ல அளவிற்கு ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து  வரவேற்புரையாற்றிய நம்முடைய மாவட்ட தலைவர் வழக்குரைஞர்  கு.நிம்மதி அவர்களே,

இந்தக் கூட்டத்தினுடைய தலைவர் மானமிகு செயலவைத் தலைவர் அருமை சகோதரர்

சு.அறிவுக்கரசு அவர்களே,

கழகத் துணைத் தலைவர் உள்பட இயக்கத்தி னுடைய முக்கிய பொறுப்பாளர்களே, மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், வழக்குரைஞரணி, தொழிலாளரணி, மருத்துவரணி, வேளாண்மைத் துறை - விவசாய அணி  என்று பல்வேறு துறைகளி லிருந்து இங்கே பொதுக்குழுவிற்கு வந்திருக்கக் கூடிய அருமைப் பெரியோர்களே, நண்பர்களே!

நம் நெஞ்சங்கள் மகிழ்ச்சியால்,

அன்பால் நிரம்பி இருக்கிறது

இந்த அரங்கம் நிரம்பியிருக்கிறது. நம் நெஞ்சங்கள் அதைவிட மகிழ்ச்சியோடு, ஒருவருக்கொருவர் சந்திக்கின்றபொழுது, மகிழ்ச்சியால், அன்பால் நிரம்பி இருக்கிறது.

கடமை சிறப்பாக முன்மொழிந்து,வழிமொழிந்து நம்மையெல்லாம் கடமையாற்று என்று கட்டளை யிடுகிறது.

எனவே, மிகப்பெரிய ஒரு சோதனை காலத்தில், இயல்பாக இருக்க முடியவில்லை. மீண்டும் கரோனா என்ற தொற்று நோய் வந்துவிடுமோ என்கிற அச் சத்திலேதான், கட்டுப்பாடோடு நாம் அனைவரையும் சந்திக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில்,  தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி அன்றைக்கு நடைபெறவிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழகம் பட்ட அவதியிலிருந்து ஒரு விடியலை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கின்றோம் என்ற பெருமைக்குரிய ஒரு காலகட்டத்தை அடைவதற்கு ஒரு தீர்வு ஏற்படுகின்ற நாளாகத்தான் நாம் அந்தத் தேர்தல் நாளைப் பார்க்கிறோம்.

234 இடங்களும் நம்முடைய இடங்கள்

திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காத ஓர் இயக்கம்; திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில், தாய்க்கழகம் என்கிற முறையில், அது இணைந்திருந்தாலும்கூட, மற்ற கூட்டணித் தோழர் கள் பேச்சுவார்த்தை என்று வரும்பொழுது, ‘‘எங் களுக்கு எவ்வளவு இடங்கள்? எவ்வளவு இடங்கள்?'' என்றெல்லாம் கேட்டார்கள். இடங்கள் கேட்காத ஒரே இயக்கம் நம்முடைய இயக்கம்தான்.

அதற்கு ஒரே  ஒரு காரணம் உண்டு. என்ன அந்த காரணம் என்றால், 234 இடங்களும் நம்முடைய இடங்கள்.

எனவே, நாம் கேட்கவேண்டிய அவசியமே இல்லை - நாம் பெறவேண்டிய அவசியமே இல்லை. நாம் மக்களை ஆயத்தப்படவேண்டிய வைக்க  அவசியத்தில் இருக்கிறோம்.

எனவேதான், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்கிற அந்த உணர்வோடு, நாம் கடமை செய்யக்கூடிய அந்த உணர்வை தாய்க் கழகமான திராவிடர் கழகம் ஏற்றிருக்கிறது.

லட்சியங்களைக் காப்பாற்றக்கூடிய

ஒரு போர்க்களம் தேர்தல் களம்!

நம்மைப் பொறுத்தவரையில்,  தேர்தலை ஒரு அரசியல் வாய்ப்பாக நினைக்கவில்லை. ஒரு போர்க் களமாக - கொள்கைப் போர்க்களாக - லட்சியங்களைக் காப்பாற்றக்கூடிய ஒரு போர்க்களமாக நாம் பார்க் கிறோம்.

அந்தப் போர்க்களம் இந்தக் காலகட்டத்தில், மிகக் கடுமையான ஒரு போர்க் களம். நேர்மையான எதிரிகள் இல்லாமல், சூழ்ச்சியையும், தந்திரத்தையும், வாய்மையைக் கைவிட்டு, பொய்மையை முதலிட்டு, செய்யக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

எனவேதான், இந்தக் காலகட்டத்தில் மிக முக் கியமான வேண்டுகோளை மக்களுக்கு, தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு வைக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

பொதுவாக, அடுத்த தலைமுறையினுடைய வாழ் வைப்பற்றி கவலைப்படுகின்ற இயக்கம் திராவிடர் கழகம்.

மக்களுடைய வாழ்க்கை, அதுவும் குறிப்பாக, காலங்காலமாக அடிமைப்பட்ட மக்கள், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள், போராடிப் பெற்ற வெற்றிகள் எல்லாம் பொய்யாய், பழங்கதையாய் கனவாகப் போய் விடுமோ என்கிற கவலையோடு நாம் இந்தத் தேர்தலைப் பார்க்கிறோம்.

நம்முடைய பார்வைக்கும், நம்முடைய கவலைக் கும் தேர்தலிலே வேட்பாளர்களாக 234 தொகுதி களிலும் இருக்கின்றவர்களைவிட, நமக்கு அதிகம்.

நோயாளியைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம், நோயாளிகளுடைய உற்றார் உறவினர் களுக்கும், படுத்திருக்கின்ற நோயாளிக்கு இருப் பதைவிட, நோயாளிக்குச் சிகிச்சை கொடுக்கிறாரே மருத்துவர் அவருக்கு அதிகமாக உண்டு. அந்த இடத்தில் நாம் இருக்கிறோம்.

இங்கே வந்திருக்கின்ற ஒவ்வொரும், ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழரும், இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற இன உணர்வாளர்கள் ஒவ் வொருவரும் - கட்சியில்லை, ஜாதியில்லை, மத மில்லை - லட்சியம் ஒன்றுதான் நம்மை இணைக்கிறது என்று சொல்லக்கூடிய அளவில், மிகத் தெளிவாக இணைய வேண்டிய நேரம்.

எனவேதான், இந்தப் பொதுக்குழுவில், ஒரு பெரிய தீர்மானம் மிகவும் விளக்கமானது. இதற்கு மேலே இந்தத் தீர்மானமே ஒரு தன்னிலை விளக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்ற தீர்மானத்தை- நிரம்பியிருக்கிற அவையில் சிறப்பாக நிறைவேற்றி, குடந்தை  வரலாறு படைத்திருக்கிறது.

குடந்தை, பல திருப்பங்களை உருவாக்கி இருக்கிறது. மாணவர் கழகத்தை உருவாக்கியது  குடந்தைதான். இந்தக் குடந்தையில்தான் பல்வேறு சூழல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

லட்சியங்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்!

நாம், தனி மனிதர் யாருக்கும் விரோதிகள் அல்ல. அவர்களுடைய லட்சியங்கள்தான் நமக்கு விரோ திகள். நட்பில் நாம் எப்பொழுதும் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறோம். லட்சியங்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்பதும் நமக்கு முக்கியம்.

கொள்கை வேறு - கூட்டணி வேறு என்று சொல்லுகின்றவர்களை நாம் மதிக்கமாட்டோம்.

கொள்கையும் ஒன்றுதான் -அதற்காகத்தான் இந்தக் கூட்டணி என்று சொல்கின்றவர்கள்தான் நமக்கு ஆயுதங்கள். அடையாளம் காட்டப்படவேண் டியவர்கள்.

அந்த வகையில் நண்பர்களே, இந்தத் தீர் மானத்தை, இந்த மாபெரும் அவையின் முன், செய்தி யாளர்கள்,  ஊடகவியலாளர் நண்பர்கள் அனைவரின் முன்னிலையிலும், அரசாங்கத்தின் காதுகளுக்கும் சரியாகப் போய்ச் சேரக்கூடிய வகையிலே, இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

வேட்பாளர்களைவிட,

நமக்கு அதிகமான அக்கறையும், கவலையும் உண்டு!

நீங்கள் அனைவரும் கடைசியாக எழுந்து நின்று, இந்தத் தீர்மானத்தை ஏற்கிறோம் என்று மனப்பூர்வமாகச் சொன்னால், இந்தத் தீர்மானத் திற்காக மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, வருகின்ற 6 ஆம் தேதிவரையில் தொடர்ந்து இதற்காகப் பணியாற்றுவது - வேட்பாளர்களைவிட, நமக்கு அதிகமான அக்கறையும், கவலையும் உண்டு என்ற உணர் வோடு நாம் பணியாற்றக் கடமைப்பட்டு இருக்கின்றோம் தோழர்களே!

பொதுக்குழுவில் தமிழர் தலைவரால் முன்மொழியப்பட்ட தீர்மானம்!

‘‘தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ள 16 ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஓர் அணியும், அ.இ.அ.தி.மு.க. தலைமையின்கீழ் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.

‘‘போட்டியிடும் இரண்டு முக்கிய கூட்டணிகளில் தி.மு.க. தலைமையில் உள்ள முக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி - கொள்கை லட்சியங்களால் உருவான கூட்டணி. மற்றொன்று அ.தி.மு.க.வின் தலைமை என்றாலும், பா.ஜ.க.வின் ஆணையை ஏற்று செயல்படும் கூட்டணி; கொள்கைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தமில்லை என்று பகிரங்கமாகவே சொல்வதற்கு வெட்கப்படாத ஒரு கூட்டணி.

வேறு சில அணிகளும் உண்டு என்றாலும், அவை கவனத்துக்கு உரியவையல்ல. மறைமுகமாக பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு வலிமை சேர்க்கவே உருவாக் கப்பட்ட கூட்டணியாகும்!

தி.மு.க. அணியைப் பொறுத்தவரையில் மதச் சார்பின்மை சமூகநீதி, சமதர்மம், சமத்துவம் பாலியல் நீதி, மாநில சுயாட்சி, மொழி, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக சீர்திருத்தம் ஆகிய முற்போக்குக் கோட்பாடுகளைக் கொண்ட அணியாகும்.

ஊழலற்ற - கருத்துரிமைக்குத் தங்கு தடையற்ற - அனைவருக்கும் அனைத்தும் என்ற சீரிய நோக்கோடு வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு தேர்தல் களம் காணும் அணிதான் தி.மு.க. தலைமையிலான லட்சியக் கூட்டணியாகும்.

திராவிட முகமூடி!

அ.இ.அ.தி.மு.க. தலைமையில், பா.ஜ.க.வை உள்ளடக்கிய அணி என்று கூறப்பட்டாலும், அந்த அணியில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அணியே என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அண்ணாவின் பெயரையும், ‘திராவிட' என்ற கலாச்சாரப் பண்பாட்டுப் பெயரையும் கட்சியிலும் அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் தாங்கியுள்ள அண்ணா தி.மு.க. - அதற்கு முற்றிலும் முரண்பாடான பா.ஜ.க.வுடன் முற்றிலும் இணைந்து செயல்படுவதும், அதன் அதிகாரத்துக்கும், கட்டளைக்கும் அடிபணிந்து செயல்படுவதும் எல்லோரும் அறிந்த வேதனையான உண்மையாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசம், மாநில உரிமைகள் என்பவைகளுக்கு முற்றிலும் விரோதமான சித்தாந்தத்தையும், செயல்முறையையும் தனது இரத்த வோட்டமாகக் கொண்டு நொடிதோறும் நொடிதோறும் அதே சிந்தனையோடும், செயல்பாட்டோடும் இயங்கக் கூடியது ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பாரதீய ஜனதா கட்சியாகும்.

தேர்தல் களத்தில் ‘லேடியா - மோடியா?' என்று சவால் விட்ட செல்வி  ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியை அமைக்கப் போகிறேன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறிக் கொண்டிருக்கும் அ.இ. அ.தி.மு.க. அந்த வகையிலும் சுயநலம், பதவி வெறி, மடியில் கனம் இவற்றின் காரணமாக அக்கட்சியின் இரட்டைத் தலைமைச் சிக்கல், அக்கட்சிக்கே துரோகம் இழைக்கும் வேலையில் அ.இ.அ.தி.மு.க. செயல்பட்டு வருவதை அடையாளம் காண வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களை இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கிறது.

மாநில  சுயாட்சி, இருமொழிக் கொள்கை, தமிழ் உணர்வு, பண்பாடு, சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத் துவம்  பெண்ணுரிமை, மனிதநேயம் ஆகியவற்றில் அறிஞர் அண்ணாவின் ஆணித்தரமான லட்சிய நிலைப்பாடுகளைத் தூர எறிந்து, ‘‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம்'' என்ற கோட்பாடு உடைய ஆர்.எஸ்.எசை தாய் நிறுவனமாகக் கொண்ட பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பதையும் கடந்து பா.ஜ.க.வுக்கு அடிமை முறிச் சீட்டு எழுதிக் கொடுக்காத குறை என்கிற அளவுக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி எல்லா வகைகளிலும் தோல்வியுற்றுச் சீரழிந்து கிடப்பதை இப்பொதுக்குழு தமிழ்ப் பெருமக்களுக்கு அடையாளம் காட்டுகிறது.

செம்மொழி நிறுவனத்தை சிதைத்தவர்கள்!

தமிழ் அடையாளம் காட்டி, தமிழ்நாட்டில் கால் பதிய வைக்கும் பா.ஜ.க. - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முயற்சியால் வந்த செம்மொழி நிறுவனத்தை சிதைத்து வருவதை மறந்துவிட முடியாது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர், எம்.ஜி.ஆர். சிலை களை அவமதிக்கும் காவிகளான குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய - தவறி வருகிற தமிழக அரசை மன்னிக்கவே முடியாது - கூடாது.

மாநில சுயாட்சிஎன்ற சுய உரிமைக் கொள்கையைக் கைவிட்டதால், மத்திய அரசிடமிருந்து - உரிமையுடன் கூடிய ஜி.எஸ்.டி.மூலம் பெறவேண்டிய நிதியைப் பெறுவதிலும், இயற்கைப் பேரிடர் காலங்களில் கிடைக்க வேண்டிய நிதியைப் பெறுவதிலும் பெருந்தோல்வியைக் கண்டும் வருவதால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது.

தி.மு.க.  ஆட்சிக் காலத்தில் வெறும் 60 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்   5.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது. ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ரூ.62 ஆயிரம் கடன் என்ற பரிதாப நிலைதான் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை! எதிலும் ஊழல் - ஊழல்  - நிர்வாகச் சீர்கேடு - சீர்கேடு இவற்றின் ஒட்டுமொத்த வடிவமே அ.தி.மு.க. ஆட்சி!

சமூகநீதிக்கு எதிரான ‘நீட்'

சமூகநீதியில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் - திராவிட இயக்கத்தின், தனித்தன்மை வார்ப்பான சமூகநீதிக் கொள்கையிலும், பா.ஜ.க.வின் சமூகநீதிக்கு எதிரான செயல்பாட்டினை எதிர்த்து வெற்றி பெறும் வலிமையை இழந்து தவிக்கிறது தமிழக அ.தி.மு.க. ஆட்சி.

சமூக நீதிக்கு எதிரான ‘நீட்' கூடாது என்று தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், தனது இணை பிரியாக் கூட்டணி கட்சியான ஆளும் பா.ஜ.க. அரசிடமிருந்து ஒப்புதல் பெற முடியாத நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களின், கிராமப்புற மக்களின், ஏழை, எளிய முதல் தலைமுறையாகப் படிக்கும் மக்களின் தலையில் பேரிடி விழுந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது!

அரசமைப்புச் சட்டத்துக்கும், நீதிமன்ற தீர்ப்பு களுக்கும் முற்றிலும் விரோதமாக மத்திய உயர்ஜாதி பா.ஜ.க. ஆட்சியால் கொண்டு வரப்பட்ட, ‘‘பொரு ளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு'' என்பதை ஏற்கமாட்டோம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு,  இன்னொரு பக்கத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு உட்பட்ட சில பல்கலைக் கழகங்களில் குறிப்பிட்ட பாடங்களில் அந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அனுமதித்ததைவிட துரோகமும், மத்திய பா.ஜ.க. - அரசுக்கு நடுநடுங்கும் கோழைத்தனமும், தமிழ்நாட்டு மக்களால் எந்த வகையிலும் மன் னிக்கவேப்பட முடியாததாகும்.

மருத்துவக் கல்வியிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்குச் சட்டப்படி கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டையும் கோட்டை விட்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு.

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டு வேலை வாய்ப்பைப் பெறலாம் என்ற மாபெரும் துரோகத்தைச் செய்திருப்பது அ.தி.மு.க. ஆட்சியே!

புதிய தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குலக்கல்வித் திட்டம், பட்டப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு இவற்றைக் கொண்டுவரும் பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் துரோகமும், அவலமும் இன்னொரு பக்கம்!

ரூபாய் மதிப்பு இழப்பின் விளைவு!

‘ரூபாய் மதிப்பு இழப்பு' என்பதன்மூலம் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவு, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பெரும் அளவு பாதிப்பு, வேலையிழப்பு அதிகரிப்பு, மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்ட விவசாயத் துறையில் மத்திய பா.ஜ.க. அரசு தலையிட்டு, தன்னிச்சையாக விவசாயிகளின் தலையில் மரண அடியைக் கொடுக்கும் வகையில் இயற்றப்பட்ட மூன்று சட்டங்கள் - அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட துணை போன அ.இ.அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - காவிரியின் குறுக்கே மேகதாது அணையினைக் கட்ட கருநாடகத்துக்கு அனுமதி அளிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுடன் கூட்டணி.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் எதிரான வகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் ஆலை திறப்பு, எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களை மத்திய அரசு முரட்டுத்தனமாக செயல்படத் துடிக்கும் முனைப்பு. அதனைத் தடுக்க முடியாத அ.தி.மு.க. அரசின் பரிதாபம்.

மோடியின் வாக்குறுதி எங்கே?

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புத் தருவதாகப் பொய்யான மத்திய மோடி அரசின் வாக்குறுதி,  இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கும் ஒரு காலகட்டத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்துவதென்பது தமிழ்நாடு அரசின் ஏமாற்றுத்தனம் (ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அளிக்கப்படவேண்டிய கிராஜூட்டி போன்ற தொகையைக் கொடுக்க இயலாத பொருளாதார நெருக்கடியே காரணம் ஆகும்).

10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சாதிக்க முடியாதவற்றை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்காளர்களுக்கு அள்ளி வீசும் அ.தி.மு.க.வின் புதிய வாக்குறுதிகள் அசல் ஏமாற்றுத் தந்திரமே! வாக்காளப் பெருமக்கள் ஏமாறக் கூடாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உறுதி செய்யப்பட்ட சோசலிசம் என்பதற்கு நேர் விரோதமாக அரசுத் துறைகளைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பது - அதன்மூலம் இட ஒதுக்கீட்டிற்கே இடமில்லாமல் செய்வது இன்னோரன்ன செயல்பாடுகளால் மத்திய பா.ஜ.க. அரசு மக்கள்முன் மிகப்பெரிய தோல்வியைக் கண்டு இருக்கிறது. அதன் தவறான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு துணை போவது தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசே!

இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. அதனோடு கூட்டுச் சேர்ந்த பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளையும் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியை அடையச் செய்யவேண்டும் என்று தமிழக வாக்காளப் பெருமக்களை இப்பொதுக்குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சியில், அமைச்சரவையில் பா.ஜ.க. பங்கு ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து அபாயகரமானது என்பதை தமிழ்ப் பெருமக்கள் உணரவேண்டும்.

தனது கடந்த கால ஆட்சியின்போது அளப்பரிய சாதனைகளை நாட்டு மக்களுக்குச் செய்து வரலாறு படைத்தது தி.மு.க. ஆட்சியேயாகும்.

தி.மு.க. தலைவரின் தொலைநோக்குத் திட்டங்கள்

மேலும் பத்தாண்டு நோக்கு என்ற முறையில், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த 7 ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் அறிவிக்கப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் என்பது - இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டக் கூடிய உன்னதமான மக்கள் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் அறிவிக்கப்பட்ட- மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

எதிர்க்கட்சியாகவும் கடந்த 10 ஆண்டுகாலம் தி.மு.க. மிகச் சிறந்த முறையில் பணியாற்றி இருக்கிறது. தமிழ்நாட்டு உரிமைகளுக்காக ஏராளமான களங்களை அமைத்துப் போராடிப் போராடி புத்தெழுச்சியை ஏற்படுத்தியிருப்பதும் தி.மு.க.வே!

அதன் தலைமையில் அமைந்துள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பல்வேறு முற்போக்குக் கட்சிகள், அமைப்புகள் மதச்சார்பின்மையிலும், சமூகநீதியிலும், தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியிலும் அக்கறையும், ஆர்வமும் கொண்ட ஜனநாயக முற்பாக்குச் சக்திகள் என்பதால், நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்வதற்கு  தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் பேராதரவைத் தருமாறு திராவிடர் கழகப் பொதுக்குழு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

நடக்கவிருக்கும் தேர்தல் என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையை மய்யப்படுத்துவது மட்டுமல்ல; அதைவிட முக்கியமாக காலங்காலமாய்ப் போராடிப் பெற்ற சமூகநீதிக் காப்பு - மதச்சார்பின்மையைக் காக்கும் ஓர் அணி  - மதச்சார்பு - சமூக அநீதி எனும் மற்றொரு அணி என்ற இந்த இரு அணிகளுக்கிடையிலான சித்தாந்தப் போராட்டம் என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும் என்றும், சமதர்ம, சமூகநீதி, மதச்சார்பின்மை - நாட்டு வளர்ச்சி உள்ளிட்ட கொள்கை வெற்றி பெற தி.மு.க. அணிக்கே வாக்காளிக்க வேண்டுமாய் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மண்ணின் மைந்தர்களான மக்களை மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிரித்து, சிறுபான்மையினர் குடியுரிமையின்றியும் வாழவேண்டும் என்ற கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார் - பா.ஜ.க. உள்ளிட்ட  வெறுப்பை வளர்க்கும் சக்திகளான இந்தப் பிற்போக்குச் சக்திகள், கட்சிகள் தமிழ் மண்ணில் தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டுமாயும் இவற்றிற்குத் துணை போகும் அ.இ.அ.தி.மு.க.வையும் அதன் கூட்டணியையும் படுதோல்வியுறச் செய்யவேண்டும்; அதற்கு ‘ஆக்கப்பூர்வ மாற்று தி.மு.க. கூட்டணியே' என்பது அதன் கொள்கை திட்டங்களே சான்றாகும். தி.மு.க. அணியின் வெற்றி என்பது வெகுமக்கள் நலவாழ்வின் வெற்றி என்பதையும் மனதிற்கொண்டு வாக்களிக்குமாறு இப்பொதுக்குழு தமிழக வாக்காளப் பெருமக்களை முக்கியமாகக் கேட்டுக் கொள்கிறது.

ஆட்சி மாற்றம் தேவை என்பது வெறும் காட்சி மாற்றத்திற்காக அல்ல; நம் இனத்தின் மீட்சிக்கான மாற்றாக - விடியலாக அமையவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகவே இந்த வேண்டுகோளை வாக்காளப் பெருமக்கள் முன் வைக்கிறோம்.

வெல்லட்டும் திராவிடம்!

புதுச்சேரி மாநிலத்தில்...

அடுத்து இன்னொரு பகுதி தீர்மானத்தில்,

பக்கத்தில் இருக்கின்ற புதுச்சேரியில் நான்கே முக்கால் ஆண்டுகாலம் நடைபெற்ற ஒரு நிலையான நல்லாட்சியைக் குறுக்கு வழியில் கவிழ்த்த பா.ஜ.க.வுக்கும் நீண்ட காலம் பதவிகளை அனுபவித்துவிட்டுக் கடைசி நேரத்தில், முதுகில் குத்தி கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்களுக்கும் தக்க பாடம் கற்பிக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியைப் பெரு வெற்றி பெறச் செய்யவேண்டுமாய் புதுச்சேரி மாநில வாக்காளப் பெருமக்களை இப்பொதுக்குழு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.''

தீர்மானத்தை இந்த அவையில்  அனைவரின் முன்பும் இதை நான் முன்மொழிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

வெற்றிக் கரவொலியாக அமையவேண்டும்!

அடுத்து, வெற்றிக் களத்திலே சந்திக்கக் கூடிய ஒரு வாய்ப்பை இந்தத் தீர்மானம் நமக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாக நிறைவேறியிருக்கிறது.

உங்களின் கரவொலியின்மூலமாக இதனை நீங்கள் வழிமொழிகிறீர்கள் என்று ஏற்றுக்கொள்கிறோம்.  இதனுடைய ஒலி வெற்றிக் கரவொலியாக அமையவேண்டும். 

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

குடந்தைப் பொதுக் குழுவின் தீர்மானம்


 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தமிழ்நாடு - 16ஆம் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

தி.மு.க. அணியில் மதச் சார்பின்மை முற்போக்குக் கட்சிகள் ஓர் அணியாகவும், அதிமுக தலைமையில் என்றாலும் முற்றிலும் பா.ஜ.க. கட்டுப்பாட்டுக்குப் பலியான அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து இன்னொரு அணியாகவும்  தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன. வேறு சில கூட்டணிகளும் உண்டு. என்றாலும் இந்த இரு கூட்டணிகள்தான் முக்கியமான அணிகள் என்பது கள யதார்த்த உண்மை.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க. என்பதை வெறும் அரசியல் கட்சியாகக் கருதிவிடக் கூடாது. அதன் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸின் கொள்கையை மய்யமாகக் கொண்டு இயங்கும் அரசியல் அமைப்பு.

2014 முதல் இந்திய ஆட்சி அதிகாரம் அவர்களின் கைக்குப் போய் விட்டது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே அதன் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

குறிப்பாக அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார்பின்மை, சமூகநீதி, சோசலிசம் ஆகிய மூன்றுக்கும் நேர் எதிராகவே அதன் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் 1992இல், அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் நாளைத் தேர்வு செய்து ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங்பரிவார், சாமியார்கள், பா.ஜ.க. முன்னணித் தலைவர்கள்  தலைமையில் திட்டமிட்டு இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர். இந்தக் கலவரத்தின் அடிப்படையில் இந்து - முஸ்லிம் என்ற பிரச்சினையைப் பெரிதாக்கி, பெரும்பான்மை மக்களான இந்துக்களின் கட்சியாக தன்னை காட்டிக் கொண்டு வருகிறது. அதையே தன் அடிப்படையாகக் கொண்டு ஆட்சியதிகாரத்தையும் செலுத்தி வருவது கண்கூடு.

ஆட்சிக்கு வந்த நிலையில் இந்துத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் பசுவதைத் தடை சட்டத்தை முன்னிலைப் படுத்தினர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதலைத் தொடுத்தனர். உ.பி.யில் ஒரு இஸ்லாமியத் தோழர் வீட்டில் உள்ள குளிர் சாதனப் பெட்டியில் மாட்டுக் கறி இருந்தது என்று கூறி, வீட்டு உரிமையாளரான முதியவரை அடித்தே கொன்றனர்.

குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால் இஸ்லாமியர்களை இரண்டாம் நிலைக் குடிகளாக அடையாளப்படுத்தி வெளியேற்றும் கொடுமையும் அரங்கேற்றப்படும் நிலை.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுவதும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் சர்வ சாதாரணமாகி விட்டன.

இந்த அராஜகத்தை தமிழ்நாட்டிலும் திணித்து, தாங்கள் காலூன்றிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு - திட்டம்.

ஆனால் தமிழ்நாடு தந்தைபெரியாராலும், அவர்கள் கண்ட திராவிட இயக்கத்தாலும் பக்குவப்படுத்தப்பட்ட சுயமரியாதை மண்ணாகவும், பகுத்தறிவுச் சிந்தனை வேரோடிய நிலமாகவும் இருக்கும் காரணத்தால், அவர்கள் போடும் கணக்கு ஈடேற முடியாத நிலையில்,  திராவிடம் என்ற பெயராலும், அண்ணா என்ற பெயராலும் நடமாடும் அண்ணா திமுக என்ற கட்சியை வசப்படுத்தி, அதன்மீது குதிரை சவாரி செய்து, காலூன்றிப் பார்க்கத் திட்டமிட்டுள்ளது. பொருத்தமாகத் தேர்தல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கூறி - ஆளும் அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல்களை இலாவகமாகக் கையில் எடுத்துக் கொண்டு, அதைக் காட்டிக் காட்டியே அச்சுறுத்தி, அ.இ.அ.தி.மு.க.வை ஆட்டிப் படைக்கும் எஜமானனாகவே ஆகி விட்டது பா.ஜ.க.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்ற நிலைப்பாட்டில் அ.இ.அ.தி.மு.க.வைக் கபளீகரம் செய்து, இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. தமிழ்நாட்டில் பவனி வர வேண்டும் என்பது அவர்கள் போட்டுள்ள திட்டமாகும்.

இந்த நிலையில் தான் கும்பகோணத்தில் 13.3.2021 அன்று கூடிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானமாக ஒன்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடக்க இருக்கும் தேர்தல் வெறும் அரசியல் போராட்டமல்ல - சித்தாந்தப் போராட்டம் என்று மிகவும் சரியாகவே அடையாளப்படுத்திக் காட்டியுள்ளது.

சமூக மதச் சார்பின்மை - சமூகநீதி என்பதற்கும் - இவைகளுக்கு எதிரான இன்னொரு கோட்பாடுகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பதைத் தீர்மானம் தெளிவுபடுத்தியுள்ளது.

1971இல் நடைபெற்ற தேர்தல் எப்படி மதவாதத்துக்கும், மதவாதஎதிர்ப்புக்கும் இடையிலான ஒன்றாக நடைபெற்று, இதுவரை தமிழக வரலாறு காணாத பெரு வெற்றியை தி.மு.க. பெற்றதோ, அத்தகைய வெற்றியை இந்தத் தேர்தலிலும் தி.மு.க. அணி பெற வேண்டும்.

பாசிச பா.ஜ.க. - அதன் எடுபிடியான அ.இ.அ.தி.மு.கவைத் தோற்கடித்து தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - வெறும் ஆட்சி - காட்சி மாற்றமல்ல - மீட்சிக்கான நடவடிக்கைகள் என்பதைத் தமிழக வாக்காளப் பெரு மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம்

திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

 

குடந்தையில் நேற்று (13.3.2021) மாலை நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகப் பேச்சாளர்களுக்கு வழிகாட்டுதல் உரையாற்றினார்  (குடந்தை, 13.3.2021)

திராவிடர் கழக கும்பகோணம் பொதுக்குழு கூட்டத்தில் (13.3.2021) அறிவிப்புகள்


தருமபுரி மாவட்ட புதிய பொறுப் பாளர்கள்

1. மாவட்டச் செயலாளர் - எல்.அய்.சி. மு.பரம சிவம்

2. மாவட்ட துணைத் தலைவர் -

மா.கிருட்டிணன்

3. மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி

தலைவர் - கதிர்.செந்தில்குமார்

செயலாளர் ந.அண்ணாதுரை

அமைப்பாளர் - மு.பிரபாகரன்

4. திராவிடர் மகளிர் பாசறை

தலைவர்  - த.முருகம்மாள் (வேப்பிலைப்பட்டி)

செயலாளர் - நெ.தமிழ்ச்செல்வி (கடத்தூர்)

அமைப்பாளர் - ஆ.இளையரசி (கொண்டகர அள்ளி)

5. மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

மாவட்ட அமைப்பாளர் - க.இராமச் சந்திரன் (கட்டரசம்பட்டி)

6. மாவட்ட மகளிரணி

தலைவர் - நளினிகதிர் (தருமபுரி)

செயலாளர் - சி.முனியம்மாள் (காமலாபுரம்)

அமைப்பாளர் - கா.கவிதா

7. பொதுக்குழு உறுப்பினர் - இ.மாதன்

திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்

திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சமதர்மக் கூட்டணியாம் தி.மு.க. அணியை வெற்றியடையச் செய்யும் தீர்மானத்தை தமிழர் தலைவர் முன்மொழிந்தபோது தோழர்கள் எழுந்து நின்று உற்சாகமாக கரவொலி எழுப்பி வரவேற்றனர்

குடந்தையில் இன்று (13.3.2021) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சமதர்மக் கூட்டணியாம் தி.மு.க. அணியை வெற்றி அடையச் செய்ய வேண்டும் எனும்  தீர்மானத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முன்மொழிந்தார். அதனை வரவேற்று அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, "திராவிடம் வெல்லும், திமுக வெல்லும்!" என்று வானதிர முழக்கமிட்டனர்.





திங்கள், 8 மார்ச், 2021

காவல்துறையே, நீதிமன்றமே பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றாதே!

*  ‘லவ் ஜிகாத்என்ற பெயராலே ஜாதிமத மறுப்புத் திருமணங்களைத் தடுக்காதே!

* கல்விவேலை வாய்ப்பில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தேவை!

உலக மகளிர் நாளில் திராவிடர் கழக மகளிரணிமகளிர்ப் பாசறை ஆர்ப்பாட்டம்!

சென்னைமார்ச் 8- காவல்துறையில் பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரியேகாவல்துறைப் பெண் அதிகாரியிடம் தவறாக நடந்துகொண்டும்சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பணியிடை நீக்கம்கூட செய்யாததைக் கண்டித்தும்உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியேபாலியல் குற்றம் செய்த ஆசாமியிடம்பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டதைக் கண்டித்தும்கல்விவேலை வாய்ப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும்திராவிடர் மகளிரணிமகளிர்ப் பாசறை சார்பில் இன்று (8.3.2021) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

உலக மகளிர் உரிமை நாளான இன்று (8.3.2021) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறையின் சார்பில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி தலைமையில் மகளிர் உரிமைக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மகளிர் அனைத்துத் துறைகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு மகளிருக்குத் தேவை!

அர்ச்சகர் உரிமை பெண்களுக்கும் தேவை

பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்திடுக!

பள்ளிகளில் பெண்களுக்கு கராத்தே - சிலம்பம் கற்றுக் கொடு!

ஜாதி மறுப்புத் திருமணங்களைத் தடுக்காதே!

காவல்துறை அதிகாரிக்கும் பாலியல் தொந்தரவாவெட்கம்வெட்கம்!

காவல்துறையேநீதிமன்றமேபாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முனையாதே!

போன்ற ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்றார்மாநில மகளிரணி செய லாளர் தகடூர் தமிழ்செல்வி தொடக்கஉரையாற்றினார்புதிய குரல் பரிமளாவழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் .வீரமர்த்தினி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் .அருள் மொழி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.

பாலியல் வன்முறைக் குற்ற வழக்கில் குற்றமிழைத்த வரையே மணம்புரிந்து கொள்ளச் சொல்லும் உச்சநீதி மன்றத்தின் நீதிபதி கருத்தை கழக மகளிரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

பெண்களை அடிமைப்படுத்துகின்ற மனுதர்மத்தை நீதி மன்றங்களில் குறிப்பிடக் கூடாது.

பாலியல் குற்றமிழைத்த காவல்துறை உயர் அதிகாரி ராஜேஷ்தாஸ்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

காவல்துறை பெண் எஸ்.பி.யிடம் பாலியல் குற்றமிழைத்த காவல்துறை உயர் அதிகாரிமீதான விசாரணையை மாநில காவல்துறை விசாரணையிலிருந்து சிபிஅய் அல்லது வேறு அமைப்புக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற் றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்பொரு ளாளர் வீ.குமரேசன்மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட பொறுபபாளர்கள் கலந்துகொண்டனர்.

பங்கேற்றோர்

சி.வெற்றிசெல்விவி.வளர்மதிபி.அஜந்தாவி.யாழ்ஒளிபெரியார் களம் இறைவி.சுமதி.மரகதமணிகோட்டீசுவரிஜி.பாக்கியவதிமு.ராணிபூவிருந்தவல்லி லலிதாசுந்தரி.வெண்ணிலாமு.பவானிமோ.விஜயாவி.தென்னரசிஇளையராணிசி.அமலிஅனுஷாசுமதிமீனாம்மாள் மற்றும் மகளிரணிமகளிர் பாசறை பொறுப்பாளர்கள் பெருந் திரளாக பங்கேற்றனர்.

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்செயலாளர் தி..கணேசன்,  தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ.ரபார்த்தசாரதிஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசுதிருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன்செயலாளர் பாலுசோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன்தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன்சு.மோகன்ராஜ்மா.குணசேகரன்கோ.வீ.ராகவன்அரும்பாக்கம் சா.தாமோதரன்,  வெ.ஞானசேகரன்சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ்உடுமலை வடிவேல்முத்தழகுமு.ரகுபதிமுருகேசன்இரணியன்டில்லிபாபுதமிழ்செல்வன்பெரம்பூர் கோபாலகிருஷ்ணன்எருக்கமாநகர் ரவிக்குமார்கெடார் மும்மூர்த்திகொடுங்கையூர் .துரைகு.ஜீவரத்தினம்ஆயிரம் விளக்கு சேகர்பூவிருந்தவல்லி தமிழ்செல்வன்,திருவண்ணாமலை கவுதமன்கூடுவாஞ்சேரி மா.ராசுஜனார்த்தனன்ஆவடி கலைமணி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.