செவ்வாய், 19 ஜூன், 2018

மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு தமிழர் தலைவர் உரை



மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., அவர்கள் எழுதிய ஷிஜீமீணீளீவீஸீரீ ஜிக்ஷீutலீ tஷீ றிஷீஷ்மீக்ஷீ (ஆங்கில நூல்) - அந்நூலின் தமிழாக்கமான ‘‘வாய்மையே வெல்லும்'' ஆகிய இரு நூல்களையும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். கவிப்பேரரசு வைரமுத்து இரு நூல்களையும் பெற்றுக் கொண்டார்.

விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் தலைமை வகித்தார். கவிதா பதிப்பகம் சேது.சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றிட, எழுத்தாளர்

எஸ்.இராமகிருஷ்ணன், முனைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர். நூலாசிரியர் ப.சிதம்பரம் ஏற்புரை வழங்கினார். கவிஞர் இலக்கியா நடராஜன் நன்றி கூறினார். அரங்கம் வழிய பல்துறைப் பெருமக்கள் கூடியிருந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் விழாக் குழுவின் சார்பில், சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது (சென்னை வித்யோதயா பள்ளி அரங்கம், 16.6.2018, மாலை

- விடுதலை நாளேடு, 17.6.18

தாழ்த்தப்பட்டவர் என்பதால் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்


தாழ்த்தப்பட்டவர் என்பதால் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?''

தீண்டாமை ஒழிப்புச் சட்டம் எங்கே? எங்கே? குறட்டை விடுகிறதா?

சென்னை, ஜூன் 7 இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவரது துணைவியாரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைக் கண்டித்தும், மனித உரிமை - தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு இந்தியாவின் முதல் குடிமகனான - முப்படைக்கும் தலைவரான குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் தன் துணைவியாருடன் சென் றுள்ளார்.

குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன? அவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராயிற்றே! ஏற்குமா இந்த சனாதனக் கூட்டம்? எனவே, சாமி' கும்பிட அவரை கோவிலுக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை.

எந்தப் பதவியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்றால் கோவிலுக்குள் இடமில்லை என்று கறாராகக் கூறிவிட்டனர். அதன் விளைவு படியில் அமர்ந்து வழிபாடு செய்துவிட்டுப் புறப்பட்டு விட்டார் - 120 கோடி இந்திய மக்களின் முதல் குடிமகன்.

வழிபாடு செய்ய குடியரசுத் தலைவர் கோவிலுக்குள் நுழை யவே அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி எத்தகைய கொடுமை - எவ்வளவுக் கேவலமான ஜாதியின் பெயரால் அவமதிப்பு? ஜாதி ஆணவம்?

குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர் களும், அவர்தம் துணைவியாரும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே! கோவிலுக்குள் செல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே! இதற்குக் காரணம் என்ன? குடியரசுத் தலைவராக இருந்தாலும், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால்தானே இந்தக் கொடுமை!

இது மன்னிக்கப்பட முடியாத மிகப்பெரிய குற்றமே - தீண் டாமை ஒழிப்புச் சட்டம் என்ன செய்கிறது? இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள், நிருவாகிகள் பிணையில் வர முடியாத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா?

இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையல்ல - மனித உரிமைப் பிரச்சினை - சட்டத்தின் மரியாதையைக் காப்பாற்றும் பிரச் சினை. எனவே, குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் நுழைய விடாததைக் கண்டித்து சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் சார்பில் முதற்கட்டமாக 7.6.2018 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒத்தக் கருத்துள்ள அனைவருடன் இணைந்து திராவிடர் கழகம் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில்....

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.

போராடுவோம் வெற்றி பெறுவோம்!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! போன்ற ஒலி முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிர முழங்கப்பட்டன.

என தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  திருவள்ளூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வழக்குரைஞர் சைதை சுப்பிரமணி, கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் நிகழ்த்தினர்.

முன்னதாக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் இ.ச.இன்பக்கனி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன், செயலாளர் இரா.விஜயகுமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

-  விடுதலை நாளேடு, 7.6.18

சென்னை, ஜூன் 8- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இராஜஸ்தான் கோயிலுக்கு சென்ற போது பிரம்மா கோயி லுக்குள் சென்று அவர் வழிபடு வதற்கு அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ப தால் அனுமதி மறுக்கப்பட்ட மனித உரிமை பறிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (7.6.2018) நடைபெற்றது. திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென் னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத் துக் கட்சியினரும் பங்கேற்றனர்.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மதி முக ஆட்சி மன்ற குழு செய லாளரும் திருவள்ளூர் மாவட் டச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், மதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சைதை ப.சுப் பிரமணி, கழக அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல் வம்,  வடசென்னை மாவட்டத் தலைவர்  வழக்குரைஞர் சு. குமாரதேவன்,   மண்டல மாண வர் கழக செயலாளர் பா.மணி யம்மை ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

தலைமைசெயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் களம் இறைவி உள்ளிட்ட தோழர்கள் எழுச்சி முழக்கமிட்டனர்.

தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

அனைத்து கட்சித் தோழர்கள்

மதிமுக சிறுபான்மை அமைப்பு செயலாளர் முராக்புகாரி, மதி முக வெளியீட்டுச் செயலாளர் எம்.எல்.எஃப்.ஜார்ஜ், மதிமுக தலைமை கழக சொற்பொழிவா ளர் கனல் காசிநாதன், தியாக ராசன், இரவிச்சந்திரன், செல் வமணி, ஆர்,ரவிச்சாமி, மலுக் காமலி, கே.எஸ்.அரி, கராத்தே ஜெ.பாபு, திலீபன், எட்வின், துறைமுகம் பகுதி செயலாளர் நாசர், துறைமுகம் பகுதி வட் டச் செயலாளர் சுரேஷ்,  மூத்த வழக்குரைஞர் இரத்தினவேலு, அம்பேத்கர் முன்னணி இயக் கம் திண்டிவனம் சிறீராமுலு

மகளிரணி

சி.வெற்றிச்செல்வி, பெரி யார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, கற்பகம், வி. வளர்மதி, வி.தங்கமணி, நூர்ஜ கான் ராசு, பூவை செல்வி, சகா னாப்பிரியா, சீர்த்தி, தொண்ட றம்.

தென்சென்னை

செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, இளைஞரணித் தலைவர் செ.தமிழ்சாக்ரட்டீசு, மு.ந. மதி யழகன், சி.செங்குட்டுவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், மயிலை பாலு, சா.தாமோதரன், விருகை சி.தங்கவேலு, க.தமிழ்ச்செல்வன், மு.சேகர், மு. ஆனந்தன்,  ஆர்.எம்.சிதம்பரம், சின்மயா நகர் தங்கவேல், கோ.மஞ்சநாதன், இளைஞரணி அமைப்பாளர் நுங்கம்பாக்கம் பவன்குமார், க.வெற்றிவீரன்

வடசென்னை

மண்டல செயலாளர் தே.செ.கோபால் மாவட்டச் செய லாளர் தே.ஒளிவண்ணன், பொதுக் குழு உறுப்பினர் எண்ணூர் வெ. மு.மோகன், பெரு.இளங்கோ, செல்வம், இளைஞரணி செய லாளர் சோ.சுரேஷ்,  கெடார் சு.மும்மூர்த்தி, நாத்திகம் சேகர், இனநலம், அம்பேத்கர், சட் டக்கல்லூரி மாணவர் கழகம் பிரவீன்குமார், விமல்ராஜ்

தாம்பரம் மாவட்டம்


சென்னை மண்டலத் தலை வர் தி.இரா.இரத்தினசாமி, மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செயலாளர் கோ.நாத்திகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் பொழிசை கண்ணன், மண்டல இளைஞ ரணி செயலாளர் ஆ.இர.சிவ சாமி, விடுதலைநகர் செயரா மன், கடப்பேரி கு- சோமசுந்த ரம், ஊரப்பாக்கம் சீனுவாசன், நூர்ஜகான், கூடுவாஞ்சேரி இராசு, நங்கைநல்லூர் க.தமிழினியன், நடராசன், அர்ச்சுனன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா. குணசேகரன், தாம்பரம் லட் சுமிபதி, செஞ்சி ந.கதிரவன், ஆதம்பாக்கம் சவரியப்பன்

கும்மிடிப்பூண்டி மாவட்டம்

மாவட்டத் தலைவர் த. ஆனந்தன், செயலாளர் இர. இரமேசு, வே.அருள், கெ.முருகன், அறிவுமானன், புழல் ஏழுமலை, சனாதிபதி, சுதாகர்

ஆவடி மாவட்டம்

மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், இல. குப்புராசு, இளைஞரணி அமைப் பாளர் கலைமணி, கலையரசன், பெரியார்மாணாக்கன், இ.ப.இன நலம், கோபால் உள்பட பல்வேறு அமைப்புக ளைச் சார்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

-  விடுதலை நாளேடு, 8.6.18

வெள்ளி, 15 ஜூன், 2018

குலக்கல்வி'' திட்டத்தைவிட மோசமானது குருகுல கல்வித்'' திட்டம்

இந்தப் பாடத் திட்டங்களை தெருத்தெருவாக கொளுத்தவேண்டும்!


சென்னை சிறப்புக் கூட்டத்தில் வைகோ போர் முழக்கம்




சென்னை, ஜூன் 13-  குலக்கல்வி திட்டத்தைவிட மோசமானது மத்திய பி.ஜே.பி. அரசு கொண்டுவரத் துடிக்கும் குருகுலக் கல்வி. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டமும் நமக்குத் தேவையில்லாதது - இவற்றை தெருத் தெருவாகக் கொளுத்தவேண்டும் என்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்.


”குருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா?”


6.6.2018 அன்று மாலை வடசென்னை மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் குருகுலக்கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா? எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ  அவர்கள் உரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

குருகுலக் கல்வி எனும் பெயரால், குலக்கல்வித் திட்டத் தைவிட கொடுமையான அநீதியைத் திணிக்க முயன்றுவிட்ட மத்திய அரசைக் கண்டித்து, கருப்புடை தரித்தோர் உண்டு கொடுமையை நறுக்கியே திரும்பும் வாட்கள் என்ற உணர் வோடு, சரியான வேளையில், போர் முரசு ஒலிக்கின்ற இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் எனது ஆருயிர் அண்ணன் மானமிகு வீரமணி அவர்களே,

இணைப்புரை நிகழ்த்திய திராவிடர் கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

வரவேற்புரை நிகழ்த்திய வடசென்னை மாவட்டத் தலைவர் சகோதரர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இனிய சகோதரர் அன்புராஜ் அவர்களே,

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் மானமிகு கும ரேசன் அவர்களே, அமைப்புச் செயலாளர் மானமிகு பன்னீர் செல்வம் அவர்களே, மானமிகு ஒளிவண்ணன் அவர்களே, திராவிடர் கழகத் தோழர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களே, விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம் அவர்களே, வருக தந்திருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, அன்புடைய சகோதரிகளே, இல்லங்களிலிருந்து எங்கள் உரையை செவிமடுத்துக் கொண்டிருக்கின்ற பேரன்பிற்குரிய தாய்மார்களே, பெரியோர்களே, வாலிப வேங்கைகளே, மாணவச் செல்வங்களே, பத்திரிகையாளர்களே, தொலைக்காட்சி ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்க்கழகமான திராவிடர் கழகத்தினுடைய கட்டளை


இடி இடித்தாலும், மின்னல் கீற்றுகள் வானிலே பளிச் சிட்டாலும், பெருமழை கொட்டினாலும், அறிவிக்கப்பட்ட கூட்டத்தை நடத்தியே தீருவோம் என்று சொல்லக்கூடிய உறுதி, அறிவாசான் தந்தை பெரியார் காலத்திலிருந்து நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருவதால், இந்த நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று மாலையில் நான் கோவை செல்வதாக இருந்தேன். அண்ணன் வீரமணி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரச் சொன்னபொழுது, மறுமலர்ச்சி தி.மு.க.விலிருந்து முன்னணி தலைவர் ஒருவரை அனுப்புகிறேன் என்று சொன்னபொழுது, இல்லை, நீங்கள்தான் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்றபொழுது, தாய்க்கழகத்தினுடைய, அனைத்துக்கும் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தினுடைய கட்டளை என்று நான் ஏற்றுக்கொண்டு, இன்று இரவு பயணத்தை, நாளை காலை பயணமாக மாற்றிக்கொண்டு இங்கே நான் வந்திருக்கிறேன்.

அண்ணன் அவர்களே, முதன்முதலாக உங்களுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு முன்னால், நீங்கள் இருதய வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் இருந்தபொழுது அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களோடு வந்து நான் பக்கத்தில் நின்று பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று கருதுகிறேன்.


பலமுறை மருத்துவர்களுடைய கத்தி உங்கள் இருதயத் திலே பட்டிருக்கிறது; உயிர் போவதைப்பற்றி நான் கவலைப் படவில்லை என்றீர்கள்; அறிவாசான் பெரியார் காலத்தில், காமராசர் காலத்தில், அண்ணா காலத்தில் ஏற்படாத கொடு மைகளும், ஆபத்துகளும், அபாயங்களும் நம்மை சூழ்ந் திருக்கின்ற காரணத்தினால், நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.

குலக்கல்வித் திட்டத்தைவிட கொடுமையானது குருகுலக் கல்வி


திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நான் ஒரு வழக்குரைஞர் என்கிற முறையில் சொல்கிறேன், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, இப்படி வாதிடு, இப்படி வாதிடு என்று சொன் னால்தான், ஒரு வழக்குரைஞன் சரியாக வாதிட முடியும். அப்படி எங்களுக்கு ஆவணங்களை, கோப்புகளை சேகரித்து, உங்களுடைய ஆங்கில புலமையாலும், அறிவாற்றலாலும், எங்கெங்கே கேடுகள் வருகிறது என்று - நாங்கள் பரபரப்பான அரசியலில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் -  நீங்கள் எங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறபொழுதுதான், இப்படியொரு ஒரு ஆபத்து வந்திருக்கிறதா? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குருகுலக் கல்வியை தீர்மானமாக கொண்டு வந்த நேரத்தில், எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இது குலக்கல்வித் திட்டத்தைவிட கொடுமையானது.


அண்ணன் மானமிகு வீரமணி அவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த தீர்மானத்தை எழுத்து பிசாகாமல் அப்படியே அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் என் ஆருயிர் சகோதரர் மானமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள்.


அனைவரும் ஆர்.எஸ்.எஸ். குருகுலத்திலிருந்து வந்தவர்கள்


குருகுலக் கல்வியினுடைய கொடுமைகளைப்பற்றி அண்ணன் வீரமணி அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆட்சி மத்தியில் அமைந்தவுடன், நம்மீது தொடுக்கப்பட்ட அஸ்திரம் - சமஸ்கிருத கல்வி வாரியம் என்று 2015 ஆம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஒரு ஆணையம் அமைத்து, அதில் 13 பேரை நியமித்தார். அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். குருகுலத்திலிருந்து வந்தவர்கள். தேர்தல் ஆணையராக இருந்த கோபால்சாமி அவர்களை அந்த ஆணையத்திற்குத் தலைவராக நியமித்தார்கள்.

அவர்களுடைய பரிந்துரையின்படி, யுனெஸ்கோ நிறுவனத் திற்கு, சமஸ்கிருதத்தை அவர்கள் வளர்ப்பதற்கு 300 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்று அறிவித்து, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுவிட்டதாக நான் அறிகிறேன்.

சர்வாதிகாரி நாட்டில்கூட, இட்லரின் சர்வாதிகாரத்தில்கூட...


ஒன்றல்ல, இரண்டல்ல - அவர்களின் சமஸ்கிருத பாடங்களை அனைத்துக் கல்விச் சாலைகளிலும் கொண்டு வரவேண்டும்; தகவல் ஊடகங்களில் கொண்டுவரவேண்டும்; மின்னணு பொறிகளில் கொண்டு வரவேண்டும். இந்த சமஸ்கிருதம்தான் இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இடம்பெறவேண்டும். இந்தியில் இலக்கணமும் கிடையாது; இலக்கியமும் கிடையாது. அதைப்பற்றி நாம் பேசவேண்டியதில்லை. இது செத்துப்போன மொழி சமஸ் கிருதம். மீண்டும் எங்களை சாகடிக்கத் தூண்டாதே! எங்கே எடுத்துக்கொண்டு வந்து திணிக்கிறாய்! சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, அவரே மதிப்பெண் போட்டுக்கொண்டு 10 ஆம் வகுப்பில் சேரலாம் என்றால், உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், சர்வாதிகாரி நாட்டில்கூட, இட்லரின் சர்வாதிகாரத்தில், தர்பாரில்கூட அவர் இதை நிறைவேற்றியதில்லை.

யூதர்களை ஒழிக்கவேண்டும் என்கிற விதத்தில், நேஷ னல் சோசலிசம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன், நான் ஒரு ஆரியன் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் - அவன்கூட இப்படிப்பட்ட கல்வி முறையை ஜெர்மனியில் கொண்டுவரவில்லை.


எனவே, இந்த சமஸ்கிருத மொழி என்பதைத் திணிக்க முற்பட்டிருக்கக் கூடிய வேளையில்தான், நம்முடைய ஒடுக் கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட சகோதரர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் - நம்முடைய பிள்ளைகள் இனி டாக்டராக முடியாது; எம்.பி.பி.எஸ்.சில் சேர முடியாது. 91.1 சதவிகிதம் பள்ளி இறுதித் தேர்வில் தமிழகத்தில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வட மாநிலங்களில் 60 சதவிகிதம், 65 சதவிகிதம்தான் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால், மருத்துவக் கல்லூரி நீட் தேர்வில் நாம் 34 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

அனிதாவும், பிரதீபாவும் ஏன் தன்னுயிரை


மாய்த்துக் கொண்டார்கள்?


அனிதா ஏன் தன்னுயிரை முடித்துக்கொண்டாள்? பிரதீபா ஏன் தன்னை சாகடித்துக் கொண்டாள்? அனிதாவிற்கு பள்ளி இறுதி வகுப்பில், மூட்டைத் தூக்கும் தொழிலாளியின், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளியின் மகள் 1,176 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். 1,176 மதிப்பெண் களைப் பெற்ற பெண்ணுக்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கு, நீட் தேர்வால் இடம் கிடைக்கவில்லை. இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை.

மத்திய அரசுக்கு குற்றேவல் புரிகிற எடுபிடி அரசு


ஒரு கூலித் தொழிலாளி வீட்டில், குடிசை வீட்டில், தாய், தந்தைக்கு உதவியாக வேலை செய்துகொண்டே படித்து, 1,176 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். நான் ஒரு டாக்டராகி சேவை செய்யவேண்டும்; என் கனவு கானல் நீராகிவிட்டதே, என்னை நானே அழித்துக்கொள்கிறேன் என்று தன்னை தானே அழித்துக்கொண்டாள். இந்த சாவிற்குக் காரணம் மத்திய அரசு. மத்திய அரசுக்கு குற்றேவல் புரிகிற எடுபிடி அரசு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.

பிரதீபா 1125 மதிப்பெண் பெற்றிருக்கிறார். கொடுமை என்ன தெரியுமா? கடந்த ஆண்டு நீட் தேர்விலும் மதிப்பெண் பெற்றாள். ஆனால், அரசு கல்லூரியிலே அவளால் சேர முடியவில்லை. தனியார் கல்லூரியில் சேருவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. நான் அடுத்த ஆண்டு, அரசு கல்லூரியில் சேருவதற்குரிய மதிப்பெண்களைப் பெற்றுவிடுவேன் என்று சொன்னாள். அய்யோ, செத்துப் போனாள்.

டாக்டர் தணிகாசலத்தைவிடஇருதயசிகிச்சையில்


சிறப்பான டாக்டர் இந்தியாவில் உண்டா?


தமிழகத்தில் உள்ள டாக்டர்களைவிட உயர்ந்த டாக்டர்கள் உலகத்தில் இருக்கிறார்களா? டாக்டர் தணிகாசலத்தைவிட இருதய சிகிச்சையில் சிறப்பான டாக்டர் இந்தியாவில் உண்டா? நான் இப்படி பட்டியலை வெளியிட முடியும். இவர்கள் எல்லாம் நம்முடைய பள்ளியில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள்.

ஒட்டுமொத்தமாக வடபுலத்தில் இருப்பவர்களைக் கொண்டு வந்து திணித்து, எங்கள் ஏழை, எளிய வீட்டுப் பிள்ளைகளை, தாழ்த்தப்பட்ட வீட்டுப் பிள்ளைகளை, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வி என்பதே கிடையாது. பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் இல்லை என்கிறார்கள். இதை பொறியியல் கல்லூரிகளிலும் கொண்டு வரப் போகிறோம் என்கிறார்கள்.

பகைவர்களுடைய கவசங்களை உடைத்துத்


தகர்க்கின்ற வாளாக இருக்கும்


அதனால்தான் சொன்னேன், பெரியார் காலத்தில் இவ் வளவு பெரிய ஆபத்து வரவில்லை; காமராசர் காலத்தில் இவ் வளவு பெரிய ஆபத்து வரவில்லை; அண்ணா காலத்தில் இவ்வளவு பெரிய ஆபத்து வரவில்லை. ஆனால், அவர்களால் வார்ப்பிக்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம். அண்ணன் வீரமணி அவர்களே, உங்கள் வாயால் சொன்னீர்கள், திராவிட இயக்கத்தின் போர் வாள் என்று - வழக்கமாக நான் எந்தப் பட்டத்தையும் ஏற்றுக்கொள்பவன் அல்ல - ஆனால், உங்கள் வார்த்தைப்படி இந்த வாள் உறைக்குள் இனி போகாது; இந்த வாள் பகைவர்களுடைய கவசங்களை உடைத்துத் தகர்க்கின்ற வாளாக இருக்கும். லட்சியங்களுக்காக வாழ்வேன். தமிழ் இனத்தின் உயர்வுக்கு வாழ்வேன். தன்மானத்திற்காக, தமிழர்களின் உயர் வுக்காக, சமூகநீதி தழைப்பதற்காக, மதச்சார்பின்மை என்ற கொள்கையை காப்பதற்காக, இந்துத்துவாவின் சக்திகளின் இடுப்பை உடைத்து, பொடிப்பொடியாக நொறுக்கி, தூள் தூளாக ஆக்குவதற்காக நான் வாழ்வேன்.

இடது பக்கத்தில் அண்ணன் வீரமணி - வலது


பக்கத்தில் சகோதரர் தளபதி ஸ்டாலின்


54 ஆண்டுகள் ஓடி மறைந்தவிட்டன என்னுடைய பொதுவாழ்க்கை. ஆனால், நான் இன்றைக்கு மன மகிழ்ச்சியோடு இருக்கிறேன். இடது பக்கத்தில் அண்ணன் வீரமணி - வலது பக்கத்தில் சகோதரர் தளபதி ஸ்டாலின். நான் மனமகிழ்ச்சியோடு இருக்கிறேன். திராவிட இயக்கமாக இருக்கிறோம்.

ஆனால், எனக்கு வருகிற வேதனை என்னவென்றால், இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தினுடைய புகழ்மிக்க, நேர்மை தவறாத, குன்றிமணி அளவும் குறை காண முடியாத, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், லோகூர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும், ஜஸ்டீஸ் செல்லமேஸ்வர் தலைமையில் கூடி, பாசிச பாதையில் இந்த நாடு போகிறது என்றார்கள்.

நீதியைக் கொன்று குழிதோண்டி புதைத்துவிட்டார்


இப்படி இந்திய நாட்டின் வரலாற்றில் நீதிபதிகள் சொன்ன வரலாறு கிடையாது. நான்கு நீதிபதிகளும் புகழ்மிக்க நீதிபதிகள். தலைமை நீதிபதியாக இருக்கிறாரே, நீதிபதி மிஸ்ரா. நான் குற்றம்சாட்டுகிறேன், காவிரி பிரச்சினையில், தமிழகத்திற்கு வஞ்சகமும், கேடும் செய்து நீதியை குழிதோண்டி புதைத்தவர் இந்திய நாட்டினுடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. ஏழு தொலைக்காட்சிகள் என்னுடைய உரையினைப் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அய்.பி. ஒரு பக்கத்தில் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரிப்போர்ட்டை அனுப்புங்கள். இந்திய நாட்டினுடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியைக் கொன்று குழிதோண்டி புதைத்துவிட்டார் காவிரி பிரச்சினையில்.

I accused the Cheif Justice of  the Supreme Court of India who has betrayed the tamils on Cauvery issue buried justice.

இப்படியே போடு - தமிழில் சொன்னால் எங்களுக்குப் தெரியாது என்பீர்கள், அதனால்தான் ஆங்கிலத்தில் சொன் னேன்.

பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தது உண்டா?


இந்தக் கட்டத்தில்தான் சகோதரர்களே, தாத்ரியிலே ஒரு முகமது சகோதரன் முகமது அக்லக்,104 டிகிரி டைபாய்ட் காய்ச்சலில் படுத்துக் கிடந்தார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. பசு மாட்டைக் கொன்று இறைச்சி வைத்திருக்கிறார் என்று அவரை அடித்தே கொன்றனர் பாவிகள். பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தது உண்டா? காஷ்மீரிலே கது வாவில், ஆசீபா என்கிற ஒரு முசுலிம் பெண். சின்னஞ்சிறு 8 வயது பெண் - கோவிலின் கர்ப்பக்கிரகத்திற்குப் பின்னால்  நாசமாக்கப்பட்டாள். யார் கோவிலைப் பழிப்பது - நாங்களா?


டாக்டர் கலைஞர் சொன்னதைப்போல, பராசக்தி படத்தில், கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்; கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடிய வர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன், அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேசமாகிவிட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காக.


இன்றைக்கு ஆசீபா என்ற பெண் கோவில் கர்ப்பக் கிரகத்திற்குப் பக்கத்தில் நாசமாக்கப்பட்டுவிட்டாள். கொல்லப்பட்டு விட்டாள். கண்டனம் தெரிவித்தாரா மோடி?


அதைவிட கொடுமை உத்தரப்பிரதேசத்தில், குல்தீப் சிங் பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர், 17 வயது பெண்ணை நாசப்படுத்திக் கொன்று விட்டான். அந்தப் பெண்ணின் தந்தை, புகார் கொடுத்தார் காவல் நிலையத்தில். புகார் கொடுத்த நான்காவது நாள் அவர் கொல்லப்பட்டார்.

உனாவிலே, தலித் இளைஞர்கள் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்டார்கள். கல்புர்கி கொல்லப்பட்டார் கருநாடகத்தில். சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார் - இவர்கள் எல்லாம் பொதுவுடைமை சித்தாந்தத்திலே வளர்ந்தவர்கள். எல்லாவற் றையும்விட மிகக் கொடுமை - கவுரி லங்கேஷ் - சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் - மதச்சார்பற்ற தன்மை யைக் காப்பதற்காக போராடியவர் - இந்துத்துவா சக்திகளின் முகத்திரையைக் கிழித்தவர். வீட்டு வாசலிலே வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். லங்கேஷ் என்ற பத்திரிகை ஆசிரியரான கவுரி லங்கேஷ்.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை - தெருத்தெருவாகப் போட்டு


தீ வைத்துக் கொளுத்தவேண்டும்


ஆக, படுகொலையாளர்கள் இவர்கள் -சிந்தனை யாளர்களை கொலை செய்கிறார்கள். எதிர்ப்பவர்களை கொலை செய்கிறார்கள். கோட்சேவுக்கு சிலை வைக்கவேண்டும் என்கிறார்கள். கோவில் கட்டுவோம் என்கிறார்கள். இதையெல்லாம்விட கொடுமை, இந்த ஆண்டு பாடத் திட்டம் - சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தில், 12 ஆம் வகுப்புப் பாடத்தில், நரேந்திர மோடியைப்பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது. அவர் தேர்தல்களில் வெற்றி பெற்ற கீர்த்திகளைப் பாராட்டி ஒரு அத்தியாயம் இருக்கிறது. அவர் ஒரு பெரிய மகான் என்ற வர்ணனை இருக்கிறது. இந்துத்துவா என்ற கொள்கைக்கு விளக்கம் இருக்கிறது. தீ வைத்துக் கொளுத்தவேண்டும் இந்த சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை - தெருத்தெருவாகப் போட்டு தீ வைத்துக் கொளுத்தவேண்டும்.


மகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவன் சாவர்க்கர்


மகாத்மா காந்தியார் பெயர் அதில் கிடையாது; பண்டிதர் நேரு பெயர் அதில் கிடையாது. வீரசவார்க்கர், ஒரு காலத்தில் லண்டனில் இருந்தபொழுது, விடுதலைக்குப் போராடி இருக் கலாம். பிரான்சு நாட்டு ஓரத்தில், தப்பிச் செல்ல முயன்றபொழுது கைது செய்யப்பட்டு இருக்கலாம்; அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கலாம்; சுதந்திரப் போர் எரிமலை என்ற புத்தகத்தை எழுதியிருக்கலாம். எட்டப்பன் முதலில் நல்லவனாக இருந்தான், அவன் துரோகம் செய்த பிறகு, அந்தத் துரோகத்தை காறி உமிழ்கிறோம் அல்லவா! அதைப்போல, வெள்ளைக்கார அரசாங்கத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவன்தான், வீரசாவர்க்கர் என்ற சாவர்க்கர். மகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவன் சாவர்க்கர்.

நாங்கள் மத சமயங்களுக்கு விரோதியல்ல. அய்யா பெரியாருடைய வழியில், நாங்கள் சுடரேந்தி வந்தாலும்கூட, இங்கே என் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கின்றவர்கள் அனைவரும் நாத்திகம் பேசுகிறவர்கள், இவர்கள் எல்லோரும் கடவுள் விரோதிகள் என்று நினைக்கக்கூடாது.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

பெரியாரிடமே கேட்டார்கள், கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, கடவுள் நேரே வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று.

உடனே பெரியார் சொன்னார், இருக்கார் என்று சொல்லிவிட்டுப் போகிறேன் என்றார்.

தேவாரம் ஒலிக்கட்டும், திருவாசகம் ஒலிக்கட்டும், தமிழ்ப் பண்கள் ஒலிக்கட்டும், சோமனுக்கு ஒரு நாள் மனைவியாக இருந்துவிட்டு, கந்தர்வனுக்கு ஒரு நாள் மனைவியாக இருந்துவிட்டு, அக்னிக்கு ஒரு நாள் மனைவியாக இருந்து விட்டு, இப்பொழுது போனால் போகுது என்று உனக்கு மனைவியாக்குகிறேன் என்று சொல்லும் சமஸ்கிருத மொழிக்கு அர்த்தம் புரிந்தால், செருப்பாலடித்து கையை உடைத்துவிடுவார்கள்.

நமக்கெல்லாம் தெரியாததை அய்யா


பெரியார் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறாரே!


சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் கொண்டு வந்தார் என்றால், அதை சட்டமாக்கும்பொழுது, அண்ணா அவர்கள் டபுள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சட்டத்துறை செய லாளர்கள் எல்லாம் அந்த சட்டத்திற்கான பில்லை அய்யாவிடம் கொண்டு போய் காட்டுகிறார்கள்.

and tying of Thali - தாலியைக் கட்டுவதும் சேர்த்து என்று அதில் இருக்கிறது. ஆங்கிலத்தில்தான் அந்த டிராப்ட் இருக்கிறது.

அய்யா அவர்கள் அந்த அதிகாரியைப் பார்த்து,and tying of Thali  என்று சொன்னால், தாலி கட்டவில்லை என்றால், அந்த மணமுறை செல்லாது என்று ஆகிவிடுமே! என்றார்.

இந்தத் தகவலை அண்ணா அவர்களிடம் சொன்னதும், அண்ணா அவர்கள், வீரமணி, நான் எம்.ஏ., படித்திருக்கிறேன்;  நீ எம்.ஏ.,பி.எல்., படித்திருக்கிறாய். சட்டத்துறை செயலா ளர்கள் எல்லாம் சட்ட நுண்ணறிவு பெற்றவர்கள். நமக் கெல்லாம் தெரியாததை அய்யா பெரியார் அவர்கள் கண்டு பிடித்திருக்கிறாரே என்றாராம்.

சட்டக்கல்லூரி விடுதி விழாவில் தந்தை பெரியார்!


சட்டக்கல்லூரி விடுதியின் ஆண்டு விழாவில் உரையாற்ற தந்தை பெரியார் அவர்களை அழைத்திருந்தோம். சமுதாய சீர்திருத்தம் என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார். கல்லூரிக்குச் செல்லாத கிழவனை நீங்கள் அழைத்துக் கொண்டு, எனக்கு இவ்வளவு பெரிய கவுரவத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று பேசினார். 20 நிமிடங்களில் மின்சாரம் நின்று போனது; நாங்கள் ஜெனரேட்டர் வைக்கவில்லை.

நாங்கள் எல்லாம் பயந்துகொண்டே இருந்தோம் ஏனென்றால், அது விடுதி நாள் என்பதால், மாணவர்கள் விசில் அடித்து கலாட்டா செய்வார்களோ என்பதால்தான்.

15 நிமிடங்களும் ஒரு சத்தமும் இல்லாமல் கடந்தது. மின்சாரம் வந்து வெளிச்சம் வந்தவுடன், பெரியார் பேச ஆரம்பித்தார். சட்டக் கல்லூரி பையன்கள் மிகவும் முரட்டுப் பையன்கள் என்றார்கள்.  ஆனால், கல்லூரி காணாத இந்தக் கிழவனுக்காக இந்த 15 நிமிடமும் நீங்கள் அமைதி காத்தீர்களே, நான் அதை மறக்கமாட்டேன் என்று சொன்னார்.

அந்த நிகழ்வுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. கடைசி நிமிடம் மூச்சு அடங்குகிற வரை தியாகராயர் நகரில், அறிவாசான் பெரியார் அவர்களே, நீங்கள் என்ன முழங்கினீர்களோ, அது எங்கள் இருதயத்திற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த முழக்கத்தை நாங்களும் எழுப்பி, அந்தக் களத்தை தயார்படுத்துகிற ஒரு நாள் வரும் என்கிற நம்பிக்கையில் நாங்கள் இருப்போம்.

அம்னெஸ்டி இன்டர்நேசனல்


உலக பொது மன்னிப்பு ஸ்தாபனம் - அம்னெஸ்டி இன்டர்நேசனல் சொல்லியிருக்கிறது - இந்தியாவிலே மத சகிப்பின்மை ஆபத்தாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய ஆபத்து நம்மை சுற்றி வளைக்கிறது என்று பாருங்கள்.

ஆக, இத்தனை நிலைமைகளும் நடக்கிறபொழுது, பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்கிறாய். கீதையைப்பற்றி ஆசிரியர் அண்ணன் அவர்கள் எழுதிய புத்தகத்தை படிக்கச் சொல்லி அவர்களுக்கு அனுப்பவேண்டும்.

திருக்குறளைவிட உயர்ந்த நூல் உலகத்தில் வேறொன்று இருக்கிறதா? திருக்குறள் உலகப் பொது மறை. ஆனால், ஒருவகையில், இன்றைக்கு நான் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மத்தியில் உள்ள ஆட்சி அகற்றப்பட்டால், இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். கொடுமையான, அக்கிரமமான ஆட்சி  நீடிக்காது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 145 இடங்களைத்தான் பெறும் என்பது என்னுடைய கணக்காகும்.

மேகலாயா நடைபெற்ற தேர்தலுக்காக 36 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்களாம்; ஒரு ஓட்டிற்கு 50 ஆயிரம் கொடுத்தார்களாம்.

தமிழகத்தில் உள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர்மீதெல்லாம் பிரச்சினை இருப்பதினால், இவர்களை வளைத்துப் போட்டுக்கொண்டு, அ.தி.மு.க. எதிர்ப்பு ஓட்டுகளையெல்லாம் தி.மு.க. அணிக்குப் போகாமல் தடுப்பதற்காக என்னென்ன உபாயங்களை நீங்கள் செய்ய முனைகிறீர்களோ - சாணக்யத்தனத்தினை நீங்கள் செய்கிறீர்கள்.

அ.தி.மு.க.வின் எதிர்ப்பு ஓட்டுகள் - தி.மு.க. அணிக்குப் போகக்கூடாது - இதற்காக நீங்கள் புதிய புதிய உத்திகளை கையாளுகிறீர்கள்.

பாஷாணத்தில் புழுத்த புழு என்று அண்ணா ஒருமுறை சொன்னார். யாரிடம் வந்து உங்கள் வேலையைக் காட்டுகிறீர்கள். இவர்கள் தப்பித் தவறி இன்னொருமுறை மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களேயானால், இந்தியா ஒன்றாக இருக்காது. அதிலொன்றும் சந்தேகம் வேண்டாம்.

நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க முனைபவர்கள் - உபகண்டத்தை ஒரு நாடாகவே தொடர்ந்து நீடிக்க விரும்புகிறவர்கள் - இந்துக்களும், இசுலாமியர்களும், கிறித்துவர்களும், சீக்கியர்களும், பவுத்தர்களும், சமணர்களும், பகுத்தறிவாளர்களும் எல்லோரும் இணைந்து கரம் கோர்த்து வாழ முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.

ஒருசேர களத்தில் திரளவேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது. தெற்கு திசை தமிழ்நாடு அதற்கு வழிகாட்டட்டும். இந்தக் குரல் எங்கும் ஒலிக்கட்டும்.

சமூகநீதியைக் கொண்டு வந்த பெரியாரை வடநாட்டில் மதிக்கிறார்கள். பிஷம்பர்நாத் பாண்டே என்பவர் மாநிலங்களவை வைஸ் சேர்மனாக இருந்தார். காங்கிரசு கட்சியில் பெரிய தலைவர். வயது 80-க்கு மேல் இருக்கும். நான் அப்பொழுதுதான் மாநிலங்களவைக்குச் சென்றிருந்தேன். சேர்மன் நாற்காலியில் அவர் அமர்ந்திருப்பார். எனக்கு ஏழு நிமிடம்தான் ஒதுக்கியிருப்பார்கள். நான் 10, 15 நிமிடம் பேசுவேன். பேச விடுவார்.

நான்கூட நினைப்பேன். நான் புதிய ஆளாயிற்றே! எனக்கு சட்டசபை பயிற்சியும் கிடையாது. நான் சென்ட்ரல் ஹாலில் வருகிறபொழுது, என்னை அழைத்தார். நான் அவரிடம் சென்றேன், உட்கார் என்றார்.

பெரியார் வீட்டிற்குச் சென்று மூன்று மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டுவா!


நான் ஏன் உனக்கு ஒவ்வொரு நாளும் பெல் அடிக்காமல் நேரம் கொடுக்கிறேன் தெரியுமா? என்றார்.

என்மேல் உங்களுக்கு ஏதோ ஒரு அன்பு என்றேன்.

காந்தியார் அவர்கள் சொன்னார், ஈரோட்டிலுள்ள பெரியார் வீட்டிற்குச் சென்று மூன்று மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டு வா என்றார். நான் 22 வயது இளைஞனாக, ஈரோட்டிற்கு வந்து, மூன்று மாதம் பெரியாரிடம் இருந்தேன். உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம், பெரியாருடைய பேரன் போன்ற ஞாபகம் வருகிறது. அதற்காகத்தான் உனக்குப் பேசுவதற்கு அனுமதி கொடுக்கிறேன் என்றார்.

அதைக் கேட்டு நான் பூரித்துப் போனேன்.

பெரியாருக்கு  - அண்ணா எழுதிய கடிதம்!


அண்ணா அவர்கள் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கிலிருந்து எழுதுகிறார்கள்.

உடல் தேறி வருகிறது; குணம் பெற்று வருகிறது. ஆனால், களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் பசியின்மை இருக்கிறது. என்னை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தபொழுது, உங்கள் முகத்தில் கலக்கத்தைக் கண்டேன். சமீபத்தில் நான் துறவியாகப் போய்விடுவேனோ என்று நீங்கள் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன் தந்தைக்குத் தனயன் - தலைவருக்குத் தலைமாணாக்கன் எழுதுகிறார்.

உலகத்தில் எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைக்காத வெற்றியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்று அண்ணா, பெரியாருக்கு எழுதுகிறார்.

அந்த வார்ப்புகள்தான் நாம் இருக்கிறோம். ஒரு உறுதியை எடுத்துக்கொள்ளவேண்டும். இன்றைய விடுதலையில் மிக அருமையான அறிக்கையை அண்ணன் அவர்கள் எழுதியிருக்கிறார். அதனை துண்டறிக்கையாக வெளியிட்டு, எல்லா இடங்களிலும் கொடுக்கவேண்டும்.

நீட்டை ஒழித்துக்கட்டவேண்டும். நீட் பிரச்சினைபற்றி பேசுவதற்கு ஒரு முதலமைச்சரையே சந்திக்க நேரம் ஒதுக்கமாட்டேன் என்கிறார் பிரதமர்.

ஏழரை கோடி மக்களை நீங்கள்


உதாசீனப்படுத்தி விட்டீர்கள்!


தமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி மக்களின் பிரதிநிதிகளாக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், அனைத்துக் கட்சித் தலைவரும் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்று கேட்டால், மிஸ்டர் நரேந்திர மோடி, சந்திக்க முடியாது என்று மறுக்கின்ற அதிகார ஆணவத் திமிராக அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்? ஏழரை கோடி மக்களை  நீங்கள் உதாசீனப்படுத்தி விட்டீர்கள். அதனை என்றைக்கும் நாங்கள் மறக்கமாட்டோம்.

எனவே, மத்தியில் இப்பொழுது உள்ள அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது. வரக்கூடாது.  மதச்சார்பின்மையைப் பாதுகாக்கின்ற ஆட்சிதான் வரவேண்டும். வரும்.

செக்குலரிசத்தையே பிரியாம்பிளிலிருந்து எடுத்துவிடவேண்டும் என்கிறார்கள்.

ஆனால், எல்லா இடங்களிலும் மரண அடி விழுந்து கொண்டிருக்கிறது தேர்தல்களில். ராஜஸ்தான் கைவிட்டுப் போய்விட்டது; மத்தியப் பிரதேசம் கைகழுவப் பட்டுவிட்டது. கருநாடகாவிலும் அடிவாங்கியிருக்கிறீர்கள்.

ஒரு மாநிலத்திலும் இனிமேல் நீங்கள் வெற்றி பெற முடியாது. ஆகவே, அத்தகைய முடிவை எடுத்துக்கொண்டு, இங்கே வந்திருக்கின்ற தோழர்கள் ஒவ்வொருவரும் 100 பேராக மாறவேண்டும்.

அய்யா பெரியாரின் கனவுகள் நனவாகும்


நம்முடைய களம் சமூகநீதியைக் காக்க, ஜனநாயகத்தைக் காக்க, மதச்சார்பின்மையை காக்க -நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக, என்ஜினியர்களாக, பல் மருத்துவர்களாக வருவதற்கு இந்த நீட் தேர்வு என்கிற இந்த நாசகார திட்டத்தை குப்பைத் தொட்டியில் கிழித்துப் போடுகிற நிலையை உருவாக்க - இந்த அரசு அகலும் - புதிய அரசு அமையும். அந்த அரசு திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் பங்கெடுத்து அமைகின்ற அரசாக இருக்கும். அய்யா பெரியாரின் கனவுகள் நனவாகும்.

எப்பொழுது அழைத்தாலும் வைகோ வருவான்!


அண்ணன் வீரமணி அவர்களே, எப்பொழுது அழைத்தாலும் வைகோ வருவான்; வைகோ மட்டுமல்ல, என் சகாக்களும், என் சகோதரர்களும் வருவார்கள். நாளைய போராட்டக் களத்திற்கு இங்கே டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் ஜீவன் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் கழகக் குமார் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் மகேந்திரன் வந்திருக்கிறார். இவர்கள் எல்லோரும் நாளை நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 13.6.18

செவ்வாய், 12 ஜூன், 2018

அரசும் - காவல்துறையும் மனிதாபிமானத்துடன் நடக்கட்டும்!

தூத்துக்குடி ஒரு கருப்பு நாளை உருவாக்கிவிட்டது  சுற்றுச்சூழல் கேட்டை எதிர்த்துப் போராடியவர்களை சுட்டுத் தள்ளுவதா? போராட்டம் நடத்தியவர்கள் சமூக விரோதிகளா? அவர்கள்மீது வழக்கா - சிறையா?


தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி




தூத்துக்குடி,ஜூன் 12 ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறி, காவல்துறை சுட்டுத் தள்ளியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்காகப் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று வழக்குப் போட்டுச் சிறையில் தள்ளுவது தவறான முடிவு - அதனைத் தமிழக அரசு மாற்றிக் கொள்ளவேண்டும் என்று செய்தியாளர்களுக்குத்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நேரத்தில், அவர்கள் துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆளாகி 13 பேர் உயிர் இழந்தனர். பலர் குண்டடியாலும், தடியடியாலும் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக் களை நேரில் பார்த்து ஆறுதல் கூற நேற்று (11.6.2018) தூத்துக்குடிக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

தூத்துக்குடி ஒரு கருப்பு நாளை உருவாக்கி இருக்கிறது


தூத்துக்குடி ஒரு கருப்பு நாளை உருவாக்கியிருக்கிறது. வரலாற்றில் படியக் கூடாத ஒரு கறை படிந்திருக்கிறது. தங்களை சுற்றுச்சூழல் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தூய காற்று - நோய் நொடி இல்லாத வாழ்க்கை இவைகளைப் பெறவேண்டும் என்பதற்காக முயற்சித்து அதற்கு எத்தனையோ முறை நீதிமன்றங்களாலும், பசுமைத் தீர்ப்பாயங்களாலும் தடுக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் அல்லது அது  முழுமையாகப் பாதுகாப்புடன் நடப்பதற்கு மாற்று வழிகளை சொல்லவேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்து, மக்கள் தொடர்ந்து 100 நாள் களாகப் போராட்டம் நடத்தியபொழுது, அதுவரை அமைதியாக இருந்துவிட்டு, கடைசியில் துப்பாக்கிப் பிரயோகம் வரையில் சென்றிருப்பது, இதுவரையில் தமிழகம் காணாத ஒரு மிகப்பெரிய அவலமாகும், கண்ட னத்திற்குரியதாகும்.

காவல்துறையின் நடவடிக்கை


விரும்பத்தக்கதல்ல - கண்டனத்திற்குரியது


அதில் இறந்தவர்கள் 13 பேர் என்ற பட்டியல், ஒரு சோகத்தை இந்த நகரத்தில் உருவாக்கியது மட்டுமல் லாமல், இவ்வளவு பெரிய துப்பாக்கிப் பிரயோகம் தமிழ் நாட்டு வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு காக்கை, குருவிகளைப் போல சுட்டுக் கொன்றிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல. உங்கள் நண்பன் என்று இதுவரையில் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டிய

காவல்துறை - மக்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டிய அளவிற்கு வந்தது மிகப்பெரிய கேடு - அது விரும்பத்தக்கதல்ல - கண்டனத்திற்குரியது.

தூத்துக்குடி மக்கள் அச்சத்தின்


பிடியில் உள்ளனர்!


ஒரு ஜனநாயகத்தில் தங்களுடைய நியாயமான கருத்துகளை எடுத்து வைப்பதற்கு உரிமை உண்டு. அதேநேரத்தில், அவர்கள் வேறுவிதமாக நடந்துகொண்டால், அதனைக் கண்டிப்பதற்கு இதைவிட மோசமான சூழ்நிலை ஏற்பட்ட, காசி போன்ற இடங்களில், வடமாநிலங்களில், வெளிநாடுகளில் கூட இத்தனை உயிர்களைப் பலி வாங்கக்கூடிய சூழல் இல்லை. அதைவிட இன்னும் கொடுமை, 20 பேர்களுக்குமேல் குண்டடிபட்டு, தடியடிபட்டு பாதிக்கப்பட்டு நோயாளிகளாக இருக்கின்றவர்களைப் பார்த்தபொழுது, அவர்கள் பேசவே பயப்படுகிறார்கள். அந்த அளவிற்கு அச்சத்தின் பிடியில் அவர்கள் இருக்கிறார்கள்.

அழுதுகொண்டே ஒரு தாய் சொன்னார், இறந்த வர்களைப் போல நாங்களும் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தால், இவ்வளவு அவதி எங்களுக்கு இல்லை. அவர்கள் உடனே இறந்து போனார்கள். ஆனால், நாங்கள் நித்தம் நித்தம் இறந்துகொண்டு இருக்கிறோம் என்று சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, உள்ளமெல்லாம் பதறுகிறது; நெஞ்சமெல் லாம் கசிகிறது ரத்தக்கண்ணீரால்!

அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏதோ பணம் கொடுத்துவிட்டோம்,  பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நினைக்காமல், போன உயிர்களை எந்தக் காலத்திலும் மீட்க முடியாது என்கிற சூழ்நிலையில், எதற்காக அவர்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதோ, அது மீண்டும் ஏற்படக் கூடாது. எதற்காக இந்தப் போராட்டத்தினை அவர்கள் நடத்தினார்களோ, அதனைக் கொச்சைப்படுத்தக் கூடாது. அந்தப் போராட்டத்தில் சமூக விரோதி களும், விஷக்கிருமிகளும் வந்தார்கள் என்றெல்லாம் சொல்லக்கூடாது.

அன்றாடக் கூலிகள்;


இந்த மண்ணின் மைந்தர்கள்


அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் அன்றாடக் கூலிகள்; இந்த மண்ணின் மைந்தர்கள். அப்படிப்பட்டவர்கள் யாரும் சமூக விரோதிகள் அல்ல. ஆகவே, அவர்களை சமூக விரோதிகள் என்று வழக்குப் போடுவதும், சிறையில் தள்ளுவதும் முறையற்றதாகும்.

இப்பொழுதுகூட யாராவது அவர்களை சந்தித்துவிட்டு வந்தால்,  எங்களுக்கு இப்பொழுது கிடைக்கும் இந்த சிகிச்சை கூட கிடைக்காதோ என்கிற அச்சம் இருக்கிறது என்று அவர்கள்  சொல்வதைக் கேட்டு, கண்ணீர் வடிப்பதா? அல்லது வேதனையால் துடிப்பதா? என்று எங் களுக்குத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். நீங்கள் இதுவரையில் எப்படி நடந்திருந்தாலும், பொறுப்பேற்பதற்கு நீங்கள் தயங்கியிருந்தாலும், இருக்கின்ற உயிர்களைக் காப்பாற்றுங்கள். தூத்துக்குடி மக்களைக் காப்பாற்றுங்கள். தேவையில்லாமல், அச்சுறுத்தல்கள்மூலமாகவும் அதேநேரத்தில், அதீதமான மறைமுகமான வித்தைகள் மூலமாகவும் நீங்கள் பெருமுதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளி களுக்கு உதவக்கூடிய அளவிற்கு இந்த மக்களுடைய வாழ்வோடு விளையாடாதீர்கள் என்பதைத்தான் வேண்டுகோளாக வைத்து, இதையே மக்கள் மன்றத்தின் முன் எடுத்துச் சொல்லுவோம்.

ரத்தக் கண்ணீர் வடிகின்ற அளவிற்கு...


நேரிலே பார்க்கவேண்டும், கொஞ்சம் அமைதி திரும்பிய காலகட்டத்தில் சென்றால்தான், களத்தில் பலியாகக் கூடிய உண்மைகள் நமக்குத் தெரிய வரும் என்கிற உணர்வினால் இன்றைக்கு வந்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட அவர்களை நேரில் பார்த்தபொழுது, எந்த உணர்வோடு நாங்கள் வந்தோமோ, அவர் களைவிட மோசமான மனநிலையைப் பெறக்கூடிய அளவிற்கு, உள்ளத்தில் ரத்தக் கண்ணீர் வடிகின்ற அளவிற்கு இருக்கிறது.

அன்றாடத் தொழிலாளிகள், கல்லூரிகளில் படிக்கக் கூடியவர்கள், பள்ளிக்கூடங்களில் படிக் கின்ற இளந்தளிர்கள் எல்லாம் அடிபட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

துப்பாக்கிக் குண்டால் காயப்பட்டவர்களை, கல்லெறி காரணமாக காயப்பட்டவர்களைப் போல காட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது கொடுமையல்லவா - உண்மைக்கு மாறானதல்லவா!ஆக, இதையெல்லாம் செய்யாமல், கொஞ்சம் மனிதநேயத்தோடு காவல்துறை நடந்துகொள்ளவேண்டும்;அரசும் நடந்துகொள்ளவேண்டும். இதில் அரசியல் பார்க்கக்கூடாது. இதில் எந்த அரசியலும் இல்லை. மனிதா பிமானம்தான் இப்பொழுது தலை யானதாக இருக்கவேண்டும்.

மக்களுக்கு உரிய நம்பிக்கைகளை அளிக்கவேண்டும்


எனவே, தூத்துக்குடி மக்கள் காப்பாற்றப் படவேண்டும். அதைவிட ஜனநாயக உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும். மக்கள் உரிமைகளை மதிக்காத அரசு நீடித்ததாக வரலாற்றில் என்றைக்குமே ஒரு சம்பவம் தொடர்ந்ததில்லை. இதையும் நன்றாக நினைவுபடுத்தி, மீண்டும் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஏதோ பணம் கொடுத்துவிட்டோம், தீர்ந்துவிட்டது என்று தயவு செய்து நினைக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை, மற்ற மற்ற மாற்று வழிகள், அவர்களுக்கு உரிய நம்பிக்கைகளை அளிக்கவேண்டும். அமைதி திரும்பிவிட்டது என்றால், வெளியுலகத்தில் இருக்கிற அமைதி, நகரத்தில் இருக்கிற அமைதி முக்கியமல்ல - பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் அமைதி திரும்பவேண்டும். அந்த அமைதி திரும்புவதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி,

ஜனநாயக உரிமைகளை ஒருபோதும்


நசுக்கிவிட முடியாது!


வன்மையான கண்டனத்திற்குரிய விலையைக் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்கவேண்டிய காலகட்டத்தைத் தவிர்க்க முடியாது. ஜனநாயகத் தில் இந்த உரிமைகளை ஒருபோதும் நசுக்கிவிட முடியாது. இன்றைக்கு நசுக்கிவிட்டதாக மனப்பால் குடிக்கிறவர்கள், அவர்கள் நாளைக்கு கடுமையான விலையைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை - அதை மறந்துவிடக்கூடாது.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

- விடுதலை நாளேடு, 12.6.18

தமிழக அரசின் அவசரப் பார்வைக்கும் நடவடிக்கைக்கும் * மூன்று உயிர்களைப் பறி கொடுத்த அச்சம் தீராத கச்சநத்தம் கிராமம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு  அரசு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் பாதிக்கப்பட்ட இளைஞர் தமிழர் தலைவரிடம் கோரிக்கை




சிவகங்கை, ஜூன் 12 ஜாதிய அடக்குமுறை  காரணமாக மூவர் படுகொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது நாட்டையே உலுக்கும் வண்ணம் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த தூத்துக்குடி ஆகிய ஊர் களில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறிட ஒரு நாள் பயணமாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று (11.6.2018) காலை  5.30 மணியளவில் மதுரை வந்தடைந்தார்கள்.

அச்ச உணர்வில் கச்சநத்தம்



தமிழர் தலைவர் அவர்கள் அண்மையில் ஜாதிய அடக்குமுறை காரணமாக மூவர் படுகொலை செய்யப்பட்ட கச்சநத்தம் கிராமத்திற்கு சென்றார். அந்த சின்னஞ்சிறிய கிராமம் மொத்தமும் ஒருவித அச்ச உணர்வோடு சோகமாக காட்சியளித்தது. அனைவரையும் வாட்டியது.

படுகொலை செய்யப்பட்ட சந்திரசேகர் (வயது 37), சண்முகநாதன் (வயது 29), ஆறுமுகம் (வயது 85) ஆகியோர் இல்லங்களுக்கு சென்ற கழகத் தலைவர் அந்த குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி  நடந்த மிக துயரமான சம்பவத்தை கேட்டறிந்தார். மொத்தமே 40 குடும்பங்களை கொண்ட அந்த குக்கிராமமான கச்சநத்தம் இப்போது மேலும் இறுகிப் போய் நிற்பது கொடுமையிலும் கொடுமை.

பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் வேதனைக் குரல் எழுப்பிய சகோதரி ஒருவர் தமிழர் தலைவரிடம் கூறும்போது இரண்டு முறை காவல் நிலையத்தில் சென்று புகார் மனு அளித்தும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் இன்றைக்கு மூன்று பேரை இழந்து நிற்கிறோம். 15க்கும் மேற்பட்டவர் இரவு  9 மணிக்கு கிராமத்தில் நுழைந்து மின்சார இணைப்பை துண்டித்து விட்டு வீடுகளில் புகுந்து இளைஞர்கள் பெரியவர்கள் என்று பாராமல் இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்டிவீசினர். மொத்தம் எட்டு பேரை வெட்டிப் போட்டு விட்டு

9.30 மணிக்குள் போய் விட்டார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றோம். ஆம்புலன்சு வாகனமோ 5 மணி நேரம் தாமதமாகத்தான் வந்தது. எங்கள் ஊரின் பக்கத்து ஊரான ஆவாரங்காட்டை சேர்ந்தவர்கள்தான் இந்தப் படுகொலையை செய்தவர்கள். காலம் காலமாக அடிமைப்பட்டு கிடந்த எங்கள் சமூகத்தில் இந்த தலைமுறையை சார்ந்தவர்கள்தான் நன்கு படித்து அரசுப் பதவிகளில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க ஜாதியினர் இப்படி பல நாள் திட்டமிட்டு ஒரு கொடிய சம்பவத்தை ஈடேற்றியுள்ளனர்.

இத்தனையையும் கேட்டறிந்த கழகத் தலைவர் அவர்கள் மிகவும் துயரப்பட்டதுடன் அந்த கிராம மக்களிடையே ஆறுதல் கூறியதுடன் அரசுக்கு இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய முறையில் தெரிவிப்பதுடன் சம்பவத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவிகள் செய்ய முடியுமோ அதைச் செய்வோம் எனக் கூறினார்.  அந்த கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதை முன் கூட்டியே அரசும் காவல்துறையும் செய்திருந்தால் இவ்வளவு பெரிய படுகொலைச் சம்பவம் நடந்திருக்காது. கொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளின் வாசலில் இரத்தக் கறை இன்னும் மறையாமல் பார்க்கவே கொடூரமாக இருந்தது. இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை.  சரியாக 11.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட கழகத் தலைவர் மதியம் 1.30 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மய்யத்திற்கு சென்றடைந்தார்.

13 உயிர்களைக் குடித்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு



2 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கு உள்நோயாளிகள் பிரிவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 5ஆவது தளத்திற்கு சென்று துப்பாக்கி சூட்டில் குண்டடிப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் தனித் தனியாக சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். அவர்களில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் நான் செல்லும் வழியில் எந்தக் கூட்டமும் இல்லை என்று சொன்னதால்தான் போனேன். ஆனால் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. குண்டடிபட்டதில் என் கால் எலும்பு நொறுங்கிப் போனது என்றார்.

அதேபோல படுகாயமடைந்த இளம்பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்கத்தான் நாங்கள் போனோம். திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். கூட்டத்தை கலைக்க லத்தியால் அடித்து விரட்டியதுடன் மிக மோசமான அநாகரிகமான முறையில் காவல்துறையினர் நடந்துகொண்டார்கள்.

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் குண்டு அடிபட்ட ஒரு சிறுமி கழகத் தலைவரை கண்டவுடன் அய்யா எப்படி நீங்கள் கருப்புச்சட்டை போட்டு உள்ளே வந்தீங்க? காவல்துறையினர் எப்படி உங்கள உள்ள விட்டாங்க? ஏன்னா கருப்புச் சட்டை போட்டு வந்தாலே அடிச்சு விரட்டுறாங்க இங்க! அதனால கேட்டேன். குண்டடிப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த எங்களை சந்திக்க வந்த ஒரு அக்கா கருப்புடை போட்டிருந்தாங்க! ஆனா அவங்கள காவல்துறையினர் கருப்புச் சட்டையை கழட்டச் சொல்லி உள்ளாடையோடு நிற்க வச்சுட்டாங்கையா! இவ்வளவு கீழ்த்தரமா காவல்துறையினர் நடந்து வருவதெல்லாம் கேக்க ஆளில்லையா? ஆனா உங்களை பார்த்ததில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை வருதுங்கையா!  நாங்க தொடர்ந்து போராடுவோம்! விட மாட்டோம். இந்த அரசு மக்களால் நான்! மக்களுக்காக நான்! என்று சொல்லி ஏமாற்றி வராங்க! உண்மையில இந்த அரசு கார்ப்பரேட்டுகளால் நான்! கார்ப்பரேட்டுகளுக்காக நான்! என்று சொல்வதுதான் சரி! என்று அந்த இளந்தளிர் தனக்கு ஏற்பட்ட கொடுமையைகூட எண்ணாமல் போர்க் குணத்தோடு சொன்னபோது தமிழர் தலைவர் அவர்கள் அந்த சிறுமியின் கையை பிடித்து வாழ்த்துக்களை சொன்னார்.



மேலும் வேடிக்கை பார்த்தவர்கள், அந்த வழியாக போனவர்கள். அப்பாவி பொது மக்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரும் குண்டடிப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடுமையின் உச்சம் பிரின்ஸ்டன் என்ற இளைஞர் குண்டடிப்பட்டதில் வலது காலை இழந்து மிக அநியாயமாக பரிதாபமாக தனது வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் படுக்கையில் பேசவே முடியாமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் தனக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கியதை பெற்றுக் கொண்ட ஆசிரியர் அவர்கள் அரசுக்கு உரிய முறையில் அதை தெரியப்படுத்துவோம் என்று சொல்லி ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் பலியான மணிராஜன் வீட்டுக்குச் சென்ற தமிழர் தலைவர் அவரது தாய், தந்தை, சகோதரி ஆகியோரிடம் ஆறுதல் கூறி, தனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திவிட்டு வந்தார். அங்கிருந்து துப்பாக்கிச் சூட்டில் இறந்த மற்றொருவரான தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த கந்தையா இல்லத்திற்குச் சென்றார். அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறி, நடந்த விவரங்களைக் கேட்டறிந்தார். சிலோன் காலனியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழர் தலைவரிடம் நடந்த கொடுமைகளைப் பற்றி விவரமாக எடுத்துக் கூறினர்.

3 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் உணவை முடித்து விட்டு மதுரை செல்லும் வழியில் குறுக்குச் சாலை என்னும் இடத்தில் வசித்துவந்தவரும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவருமான தமிழரசன் அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கு மரியாதை செய்த தமிழர் தலைவர், வயதான அவரது தாயார் மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.

மொத்தத்தில் ஜாதிய அடக்குமுறை காரணமாக கச்சநத்தத்தில் நடந்த படுகொலையும், தங்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அரசின் முதலாளித்துவ சிந்தனையையும் எதிர்த்துப் போராடுவது என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதற்கு சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும், ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையை போராடும் மக்களுக்கு தமிழர் தலைவரின் கள ஆய்வுப் பயணம் உறுதிப்படுத்தியுள்ளது.





- தி.என்னாரெசு பிராட்லா,

செய்தியாளர்

முழு சிகிச்சை தேவை

கச்சநத்தத்தில் நடந்த கலவரத்தில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு  மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து செல்லுங்கள் என வற்புறுத்துவதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட அவர்கள் முழு சிகிச்சை பெற்று பூரண நலமடைந்த பிறகு டிஸ்சார்ஜ் செய்ய உதவ வேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டனர். இந்த தகவலை அரசுக்கும், உரியவருக்கும் எடுத்துச் செல்வோம் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.

 

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் நேரில்  ஆறுதல்
- விடுதலை நாளேடு, 12.6.18