வியாழன், 29 நவம்பர், 2018

டிசம்பர் 2இல் சுயமரியாதை நாள் விடுதலை சந்தாக்கள் வழங்கும் விழா!

திமுக பொருளாளர் துரைமுருகன், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் பங்கேற்பு


சென்னை, நவ.29 சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் பிறந்த நாள் 2.12.2018 அன்று காலை சுயமரியாதை நாள், விடுதலை நாளிதழ் சாந்தா வழங் கும் விழா நடைபெறுகிறது. விடுதலை நாளிதழின் ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக விடுதலை சந்தாக்களை கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் விழாவில் வழங்குகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள கழக மாவட்டங்களிலிருந்தும், கருநாடகா, மராட் டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும், பன்னாட்டளவில் அமெரிக்காவிலிருந்தும் விடுதலை நாளிதழுக்கான சந்தாக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளிக்கப்படுகின்றன.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 2.12.2018 அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கழக மாவட்டங்களின் சார்பில் விடுதலை சந்தா வழங்குதலும் சந்திப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முற்பகல் 11 மணிக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலை மையில் தமிழர் தலைவர் 86ஆம் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டலச் செயலா ளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதே வன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல் லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி வரவேற்புரை யாற்றுகிறார்.  கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அறிமுக வுரையாற்றுகிறார்.

திமுக பொருளாளர் க.துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் இரா.முத்தரசன் ஆகியோர் விழாவில்  பங்கேற்று கருத்துரையாற்றுகிறார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றுகிறார். கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மாணவர் கழக மாநில செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகின்றனர்.

விழா முடிவில் கழகப் பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் நன்றியுரையாற்று கிறார்.

26.11.2018 அன்று நடைபெற்ற ஜாதி தீண்டாமை  ஒழிப்பு மாநாட்டில் வெளியி டப்பட்ட அறிவிப் பின்படி, 2.12.2018 அன்று நடை பெறுகின்ற விழாவில் விடுதலை சந் தாவுடன் கஜா புயல் நிவாரண உதவிகள் அளிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு எள்ளது.

நூல் வெளியீடு

2.12.2018 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில் இயக்க வெளி யீடுகள் வெளியிடப்படுகின்றன.

டிசம்பர் 2 தமிழர் தலைவர் பிறந்த நாள் புதிய வெளியீடுகள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில்... இயக்க வரலாறான தன் வரலாறு (பாகம் 6) ரூ.250

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள்  13ஆம் தொகுதி ரூ. 200

துரை.சக்கரவர்த்தி எழுதிய தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம் ரூ.40

வழக்குரைஞர் கி.மகேந்திரன் எழுதிய தமிழரின் பரிணாமம்  ரூ.40 ஆகிய நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு மலர் 2018 ரூ.200

தொடர்புக்கு: 7639818254, 9626657609

பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், குருதிக்கொடை

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2018 அன்று காலையில் குருதிக்கொடை சிறப்பு முகாம் மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்க ளின் 86ஆம் பிறந்த நாளை முன்னிட்டு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குருதிக்கொடை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

2.12.2018 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பொது மருத்துவம், தாய் சேய் நலம், நீரிழிவு நோய், கண் மருத்துவம், காது மூக்கு  தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்துறை களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெறுகிறது. இம்முகாமில் பரிசோதனை கள், மருத்துவ ஆலோசனைகள், சிகிச் சைகள் வழங்கப்படுகின்றன.

-  விடுதலை நாளேடு, 29.11.18

தென்சென்னையில் தமிழர் தலைவர் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் - விடுதலை சந்தா வழங்கல்



தென்சென்னை மாவட்ட கழக சார்பில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் அளிக்கப்பட்ட சந்தாக்கள் - உடன் டி.ஆர் சேதுராமன் மாவட்ட துணைத் தலைவர்,கு.பா.அறிவழகன் மாவட்ட மாணவர் கழக செயலாளர், கு.பா.கவிமலர், ஆவடி மாவட்ட மாணவர் கழக செயலாளர் உ.விஜய், அரவிந்த், க.வீரமணி, வா.தமிழழகன்.... மண்டல செயலாளர் தெ.சே.கோபால் மூலம் வழங்கப்பட்ட சந்தா.., வி.பரிமளாதேவி - ரூ.900, ரா.அம்பிகா ரூ.900, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மூலமாக 10 அரையாண்டு சந்தா ரூ.9000, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மூலமாக 10 அரையாண்டு சந்தா ரூ.9000, தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவர் ச.மகேந்திரன் 10 அரையாண்டு சந்தா ரூ.9000.
-  விடுதலை நாளேடு, 29.11.18
(நுங்கம்பாக்கம்)

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை ( நுங்கம்பாக்கம்)



அசோக் லேலண்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற  நுங்கம்பாக்கம் பகுதி மறைவுற்ற தோழர் நடராசன் அவர்களின் 3ஆவது நினைவுநாளையொட்டி (26.11.2018) அவரது துணைவியார் பத்மாவதி, நாகம்மையார் குழந்தைகள் இல்ல மதிய உணவுக்காக 3ஆம் ஆண்டாக ரூ.10 ஆயிரத்தை கழக துணைத் தலைவரிடம் வழங்கினார். உடன் தொழிலாளர் கழகத் தோழர் தமிழினியன். (உள்படம்: நடராசன்) (27.11.2018)

-  விடுதலை நாளேடு, 29.11.18 

புதன், 28 நவம்பர், 2018

கஜா புயல் இழப்பீடு கோரிய சென்னை ஆர்ப்பாட்டத்தில் உரிமை முழக்கங்கள்


மத்திய அரசே கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பினை


பேரிடராக அறிவித்து போர்க்கால அடிப்படையில் உதவி செய்க!




சென்னை, நவ.27 கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உடனடி நிவாரணம் தேவை --& பேரிடராக அறிவித்துப் போர்க்கால அடிப் படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் நடத்திட வேண்டும் என்று சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (27.11.2018) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  சென்னையில் சென்னை மண்டல கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி முன்னிலை வகித்தனர்.

கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகித்து ஆர்ப்பாட்ட கண்டன  உரையாற்றினார்.

பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் கழகத் தோழர்கள் திருவாரூர், நாகப்பட்டினம், வேதா ரண்யம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நேரடியாக சென்று ஏறத்தாழ  பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர். அந்த பகுதிகளிலெல்லாம் மக்கள் பொருளாதார ரீதியாக வாழ் வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கே மின்சார மில்லை. சமைப்பதற்கு கூட ஒரு தகுதியான  இடம் இல்லை. கூரைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். அவர்களையெல்லாம் சந்திக்க தமிழர் தலைவர் நாளையிலிருந்து இரு நாள்கள் அந்த பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் அளிக்க  செல்கிறார்கள். கழகத் தோழர்கள் அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், நிவாரணப்பொருள்களும் வழங்கி வரு கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்




கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக் கின்ற நிலைமையை நாம் உணர்ந்தது என்பது ஒரு சதவிகிதம் கூட இல்லை. பத்திரிகைகளில் படிப்பவை, தொலைக்காட்சிகளில் பார்ப்பவை எல்லாம் ஒரு சதவிகித அவலத்தைத்தான் நாம் தெரிந்து வைத்திருக் கின்றோம். நேரிலே அங்கு சென்று பார்த்தால்தான் இப்படி ஒரு இயற்கைப் பாழா? இப்படி ஒரு இயற்கைக் கோரத் தாண்டவமா? என்ற கேள்வி நமக்குள்ளே எழச்செய்கிறது. சாதாரண மக்கள் மட்டுமல்ல, வசதி வாய்ப்புகள் உள்ள மக்கள்கூட நடுத்தெருவிலே நிற்கக் கூடிய ஓர் அவலத்தை அங்கே சென்று பார்த்தவர் களுக்குத்தான் தெரியும்.

நாளை என்பது அவர்களைப்பொறுத்தவரையிலே ஒரு பெரிய கேள்விக்குறி. டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழக்கூடியன. கடந்த கால் நூற்றாண்டு காலமாக காவிரி நீர்ப் பிரச்சினையின்காரணமாக அந்த பகுதிகளிலே சிறுக சிறுக விவசாயம் அழிந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு காலக்கட்டத்தில், இப்படி ஓர் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு, அந்த மக்களை முழுமையாக சீர்குலைத்து தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டதைப்போன்ற ஒரு துயரமான நிலையை அங்கே பார்க்க முடிகிறது. படிக் கின்ற பிள்ளைகள் புத்தகங்கள்கூட, அங்கே கிடையாது. வீடுகளில்லாமல் எங்கே தங்குவது என்பதே கேள்விக் குறியாக உள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், இன்றைக்கு அரசு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் தங்களால் இயன்ற அத்துணை உதவிகளையும் மனச்சான்றோடு, மனிதாபிமானத்தோடு செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், போர்க்கால அடிப்படையிலே பணிகள் அங்கே நடைபெற வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.  பேரிடராக அறிவிக்க வேண்டும். ஏன் பேரிட ராக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம் என்றால், பேரிடர் என்று சொன்னால், அதற்காக ஒதுக்கப்படுகின்ற தொகை, அதற்காக செய்யப்படுகின்ற நிவாரணங்கள் பல வடிவங்களிலே வேகமாக இருக்கும். அந்த முறையில் பேரிடராக அதிகாரபூர்வமாக அறிவித்து, பணிகளைப் போர்க்கால அடிப்படையிலே செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்  திருப்பித்திருப்பி இதைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அங்கே அமைச்சர்கள்கூட செல்ல முடியவில்லை.

அப்படி சென்றாலும், மக்கள் அவர்களை முற்றுகையிடுகிறார்கள். இந்த அளவிற்கு மக்களுடைய கோபம் இன்றைக்கு கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், ஏதோ மத்திய அரசு சம்பிர தாயமாக ஒரு குழுவை அனுப்புவது, அதற்குப்பின்னாலே ஆலோசனை செய்வது, அதற்குப்பின்னாலே அரசாங்கம் கேட்ட தொகை ஒன்று, கொடுக்கின்ற தொகை ஒன்று என்கின்ற நிலைதான் கடந்த பல காலக்கட்டங்களிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், அதை எப்படி எரிகிறது என்று கமிட்டி போட்டு, எதனால் ஏற்படுகிறது என்று கமிட்டி போட்டு, அதற்குப் பின்னாலே அந்த வீட்டை அணைப்பது என்பது எப்படி ஒரு பரிதாப மான நிலையோ, அதேபோல் தான் இன்றைக்கு நேரடியாக பாதிக் கப்பட்ட மக்கள், அடுத்த வேளை உணவுக்கு என்ன? என்கின்ற ஒரு கேள்விக் குறியோடு பரிதவிக்கக்கூடிய நிலையிலே உடனடியாக இடைக்கால நிதியாவது அறி வித்து, உடனடியாக அந்த மக்களுடைய உயிரைக் காப் பாற்றக்கூடிய ஒரு காரியத்திலே, மாநில அரசாங்கம் ஈடுபட வேண்டும், மத்திய அரசாங்கம் ஒத்துழைப்புக் கொடுக்க வேண் டும். இவற்றை எல்லாம் மக்க ளின் குரலை மக்கள் மத்தியிலே எடுத்துச்சொல்லி, உங்கள் மூலமாக மாநில, மத்திய அர சாங்கங்களுடைய காதுகளுக்கு எட்ட வேண்டும் என்கிற நோக்கத்துக் காகத்தான் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தமிழ்நாடு தழுவிய அளவிலே எல்லா மாவட்டங்களிலும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

உங்களுக்கெல்லாம் தெரியும், விவசாய மாவட்டம் என்றால், பயிர் வளர்ப்பது, மரங்கள் வளர்ப்பது, கால் நடைகளை வளர்ப்பது இவைதான்  அவர்களுடைய ஜீவாதார வாழ்க்கைக்கான அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது.

அவையெல்லாம், முற்றிலும் அழிந்துவிட்ட பிறகு, அவர்கள் என்ன செய்வார்கள் என்றி நிலைமையை நினைத்துப்பார்க்க வேண்டும். நமக்கெல்லாம் மனிதாபிமானம் இருக்கிறது, மனித நேயம் இருக்கிறது என்பதை காட்டுவதற்காக ஒரு சரியான சந்தர்ப்பம் இப்போது கிட்டியிருக்கிறது. இந்த சரியான சந்தர்ப்பத்தை தனியார் நிறுவனங்களும், தன்னார்வ நிறுவனங்களும், அதே போல அரசாங்கமும்  ஓடிச்சென்று அவர்களுடைய துயரைத் துடைக்க வேண்டும்.

திராவிடர் கழகத்தின் நிவாரணப் பணிகள்


திராவிடர் கழகத்தைப்பொறுத்தவரையிலே, அந்த பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. எங்கள் கல்வி நிறுவனங்கள் எல்லாம் நேரடியாக அந்தப்பகுதிக்கு சென்று தேவையான உதவிகளை செய்துகொண்டிருக் கிறார்கள். மகளிர் எல்லாம் அந்த கிராமங்களுக்குச் சென்று வேண்டிய உதவிகளை செய்து கொண்டி ருக்கிறார்கள். ஆகவே, இந்த நிலையிலே இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக நாங்கள் தெரிவித்துக்கொள்வது உடனடிப் பரிகாரம், உடனடி நிவாரணமே!

இரண்டாவதாக உள்ளாட்சிப்பிரதிநிதிகள் இப்போது இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள் இருப் பார்கள். நேரடியாக பிரச்சினைகளைப்பார்த்து தேவை யான உதவிகளை செய்வதற்கான வாய்ப்புகளெல்லாம் இருக்கும். மாநில அரசாங்கம் கேட்டிருக்கும் நிதியை ஒரு பைசா கூட குறையாமல் மத்திய அரசு கொடுக்க வேண்டும்-.

இவ்வாறு கழகத் துணைத் தலைவர் பேசினார்.

ஆர்ப்பாட்ட முடிவில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை க.கண்ணன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் சென்னை மண்டலக் கழக மாவட் டங்களிலிருந்து கழகத்தின் பல்வேறு அணியினரும் பெருந்திரளாக கலந்தகொண்டனர்.

-  விடுதலை நாளேடு, 27.11.18


சென்னை, நவ.28 கஜா புயலை தேசிய பேரிடராக அறி விக்க வேண்டும். மாநில அரசு கோரும் நிதியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சியினரையும் இணைத்த குழுக் களை அமைத்து வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர் தலை உடனடியாக நடத்த வேண்டும் என்னும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று (27.11.2018) காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றி னார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம் வரு மாறு: தலைமைச் செயற்குழு உறுப் பினர் ச.இன்பக்கனி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யச் செயலாளர் பேராசிரியர் ந.க.மங்  களமுருகேசன், புலவர் பா.வீரமணி,  மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் நா.பார்த்திபன், மந்திரமா? தந்தி ரமா? பேராசிரியர் ஈட்டி கணே சன், திருவண்ணாமலை கவுத மன் மற்றும் சென்னை மண்டல கழக மாவட்டங்களிலிருந்து பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மகளிர் அணி: க.பார்வதி, சி.வெற்றிசெல்வி, தங்க.தன லட் சுமி, வி.வளர்மதி, பி.அஜந்தா, சகானப்பிரியா, கற்பகம்

தாம்பரம்: ப.முத்தையன், மா.இராசு, சு.மோகன்ராஜ், இலட் சுமிபதி, பொழிசை க.கண்ணன், மா.குணசேகரன், இராமாபுரம் ஜெனார்த்தன், ஊரப்பாக்கம் பொய்யா மொழி, ஊரப்பாக்கம் சீனிவாசன், மேடவாக்கம் விஜய் ஆனந்த், செஞ்சி ந.கதிரவன், குன்றத்தூர் பரசுராமன்

கும்மிடிப்பூண்டி: புழல் த.ஆனந் தன், இர.ரமேஷ், ந.ஜனாதி பதி, அறிவுமானன், ந.கஜேந் திரன், சோழவரம் சக்கரவர்த்தி, மு.க.தமிழ்செல்வம், செ.உதய குமார்

திருவொற்றியூர்: பா.பாலு, செல் வம், சுதாகர்

ஆவடி: பன்னீர்செல்வம், முத்து கிருஷ்ணன், க.இளவரசன், இரா. கோபால், பெரியார் மாணாக்கன், கலைமணி, உடுமலை வடிவேல்

தென்சென்னை: இரா.வில்வ நாதன், செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், மு.சேகர், அ.பாபு, மு.ஆனந்தன், இரா.ரவி,  பி.டி.சி.இராஜேந்திரன், அரும் பாக்கம் சா.தாமோதரன்

வடசென்னை: கணேசன், சு.அன்புசெல்வன், சோ.சுரேஷ், சி.காமராஜ், வேலவன், கொளத் தூர் பார்த்திபன், தங்கமணி, சுந் தரமூர்த்தி, அம்பேத்கர்,-சிவக் குமார் மகேஷ், சுதன், அருள், ஷாஜகான், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் பரீதின்.

-  விடுதலை நாளேடு, 28.11.18


ஞாயிறு, 25 நவம்பர், 2018

93 வயது பெரியார் பெருந்தொண்டர் இரா.கோவிந்தசாமி பேசுகிறார்

(செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் இரா.கோவிந்தசாமி இதோ பேசுகிறார்)




நான் பிறந்த ஊர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு பின்புறம் சுமார் 3 கி.மீ தூரத்திலுள்ள ரெட்டிபாளையம் என்கிற ராமநாதபுரம் கிராமம் ஆகும். எனது தந்தையார் மா.கோ. ராமசாமி, தாயார் நீலம்பாள் அம்மையார். என்னுடைய பிறந்த நாள் 26-07-1926 ஆகும். என் தந்தையார் அந்த காலத் திலேயே ஒரு தமிழ்வைத்தியர் ஆவார். இராமாயணம், மகாபாரதம், போன்ற புராணங் களை நன்கு கற்றவர். அந்த நூல்கள் எல்லாம் எங்கள் வீட்டிலேயே இருந்தன. நான் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த போது, கிராம மக்களை எல்லாம் கூட்டி, இரவு நேரத்தில் இராமாயண, மகாபாரத புராணங் களை என் மூலமாக கதாகாலட்சேபம் செய்யச் சொல்லுவார். ஆதலால் நானும் அந்த புராணங் களில் உள்ள கருத்துகள் உண்மையென நம்பி இருந்தேன். நான் என் ஊரில் இருந்த 4ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் படித்து விட்டு, மேல்படிப்பிற்காக தஞ்சாவூர் வந்தேன். 1942இல் ESLC 
எனப்படும் 8ஆம் வகுப்பு படிப்பு முடித் தேன். அப்போது 2ஆவது உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம், விமானத்தில் இருந்து குண்டுவீசி, பொதுமக்கள் தாக்கப்பட்டால் அவர்களை, எப்படி காப்பது என்பதற்காக அரசினால், ARP (Department of Airraid Pre causion) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் நான் சேரும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது எனக்கு மாதச்சம்பளம் ரூ.15 சுமார் 2 ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்தேன். 1945ஆம் ஆண்டு, உலகப்போர் முடியும் நிலையில் இருந்தபோது, ARP-படை கலைக்கப்பட்டது. என் வேலையும் போய் விட்டது. வேலைக்கு வேலையும் போய், படிப்புக்கு படிப்பும் போய் விரக்தியுற்ற நிலையில் வேலை தேடி அலைந்து கொண்டி ருந்தேன். 1945 ஏப்ரல் மாதத்தில் காவல் துறையில் சேர்ந்தேன். கோயம்புத்தூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் 6 மாதங்கள் பயிற்சி பெற்று, அக்டோபர் 1945இல் விழுப்புரம் இரயில்வே காவல்நிலையத்தில் பணியில் அமர்த்தப் பட்டேன். அப்போதெல்லாம் காவல்துறையில், விடுதலை பத்திரிகையையும், திராவிடர் நாடு பத்திரிகையையும் படிக்காத காவலர் களே இல்லை என்றால் அது மிகையாகாது. நான் இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங் களில் மூழ்கி, மூட பக்தியில் இருந்தபடியினால் எனக்கு அந்த நிலை அதிர்ச்சியையும், மாற்றத் தையும் உண்டு பண் ணியது. மெல்ல, மெல்ல அவர்களை பார்த்த நானும், என்னுடைய மூடக்கொள்கைகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். என்னை ஒரு பகுத்தறிவுவாதி யாகவும், பெரியார் தொண்டனாகவும், மாற்றியதில் என்னுடன் பணிபுரிந்த தலைமைக் காவலர் திருவாரூர் மானமிகு கோவிந்தசாமி செட்டியார் அவர்களும், காவலர் எண் 279 சாமுயேல் என்பவர்களுமே காரணம் ஆவார்கள். அவர்களை நினைக்காத நாள் இல்லை .

பிறகு, 1947ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் சென்னை சென்று சிந்தாதரிப் பேட்டையில் இருந்த பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் அவர்களை முதன் முதலாக சந்தித்தேன். முன்பின் அறிமுகமில்லாத சிறுவனாக இருந்த என்னை அய்யா அவர்கள் அன்போடும், பண்போடும் வரவேற்று, சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நாள் மடமையில் ஊறிக் கிடந்த என்னை மனிதனாக ஆக்கிய நாள் ஆகும். அது முதல் அய்யாவின் கொள்கைகளை முழுமையாக ஏற்று அவர்கள் பேசும் பொதுக் கூட்டங் களில் கலந்து கொள்வதும் விடுதலை திராவிட நாடு போன்ற இயக்க பத்திரிகைகளை படிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டேன்.

நான் எந்தெந்த ஊருக்கு மாற்றி சென்றாலும், அந்தந்த ஊரில் உள்ள திராவிடர் கழக தோழர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு கழகக் கொள்கைகளை பரப்புவதில் ஆர்வம் காட்டி வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு தஞ்சாவூரில் 1955இல் திருமணம் நடந்தது. என் மனைவியின் பெயர் புஷ்பம் அம்மையார் ஆவார்கள். எங்களுடைய திருமணம் அன்றைய தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் தஞ்சை இராச கோபால், பள்ளி அக்கிரகாரம் ஆளவந்தார் இவர் களின் தலைமையில் நடைபெற்றது. நான் புரோகிதன் அற்ற சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதால் எனது உறவினர்களில் பாதிப்பேர் திருமணத்தில் கலந்து கொள்ள வில்லை.

பிறகு நான் படிப்படியாக பதவி உயர்வு பெற்று, இறுதியாக உதவி ஆய்வாளராக ஆனேன். 1973ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு மாற்றலானேன். அம்மாவட்டத்தில் காஞ்சிபுரம், மாமல்லபுரம், சாலவாக்கம், கூடுவாஞ்சேரி, சிறீபெரும்புத்தூர் செங்கல் பட்டு முதலிய ஊர்களில் பணியாற்றி 30.6.1984இல் பணி ஓய்வு பெற்றேன். இந்த மாவட்டத்தில் பொறுப்பி லிருந்த சி.பி.ராஜ மாணிக்கம், டி.ஏ.கோபால், ஜானகிராமன் முதலிய கழகத்தினருடன்  தொடர்பு கொண்டு பணியாற்றினேன். பணி ஓய்வு பெற்றவுடன் செங்கல்பட்டிலேயே தங்கி விட்டேன். அப்போது செங்கல்பட்டில், செங்கல்பட்டு நகர திராவிட கழகத்தில் இரயில்வேயில் பணியாற்றிய ஆர்.கே. கோபால்சாமி, அஞ்சல் அதிகாரி கோவிந்த ராஜன், சோடாக் கடை கங்காதரன், ரயில்வே நிலையத்தில் தேநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்த சி.கே.மதுரை முத்து ஆகிய நான்கு பேர் தான் இருந்தனர். தொய்வான நிலையில் இருந்த செங்கல்பட்டு நகர திராவிட கழகத்தை வளர்க்க வேண்டும் என்ற முடிவெடுத்து பாடுபட்டேன். நான் பணியி லிருந்து ஓய்வு பெற்றபின் பல பொதுக் கூட் டங்கள், நிகழ்ச்சிகளையும், நடத்தியிருக்கிறேன்.  கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று கைதாகி சிறை சென்று இருக்கிறேன். கலியப்பேட்டை கிராமத்திலும், செங்கல் பட்டு நகரிலும் தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் நிறுவுவதில் எனது பங்கும் உண்டு. எனது வாழ்நாள் இறுதிவரை கழக வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

எனக்கு தற்போது 92 வயது முடிந்து (26.7.2018 அன்று முதல்) 93 நடக்கிறது. நான் பணி ஓய்வு பெற்ற பிறகு கழகத்தில் இணைந்து முதன் முதலாக செங்கல்பட்டு நகரில் நடத்திய முதல் இரண்டு கூட்டங்களின் துண்டு அறிக்கை களின் நகல்கள் இத்துடன் இணைத்து இருக்கிறேன். தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

- விடுதலை ஞாயிறு மலர், 24.11.18

வியாழன், 22 நவம்பர், 2018

சென்னை மண்டல இளைஞரணி கழக கலந்துரையாடலில் தீர்மானம்


சென்னை மண்டல கழக கலந்துரையாடலில் தீர்மானம்




சென்னை, நவ.22 திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டல இளைஞரணி கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை மண்டல இளை ஞரணி சார்பில் 500   விடுதலை' சந்தாக்களை வழங் குவது என்றும், குருதிக் கொடை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திட லில் அன்னை மணியம்மையார் அரங்கில் 18.11.2018 அன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு ஆவடி வை.கலையரசன் கடவுள் மறுப்பு கூறினார். மண்டல இளைஞரணி அமைப் பாளர் சோ.சுரேஷ் தலைவரை முன்மொழிந்து உரை யாற்றினார். மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி வழிமொழிந்து வரவேற்புரையாற் றினார்.

மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் கலந்துரையாடல் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களை யும், அவற்றை செயல்படுத்துவதில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய அணுகுமுறைகளையும் கூறினார். குறிப்பாக விடுதலை சந்தா சேர்ப்பதன் முக்கியத் துவத்தை எடுத்துக் கூறி னார்.

அவரைத் தொடர்ந்து வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் கெ.விஜயகுமார், செயலாளர் சட்டநாதன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன், செயலாளர் மணித்துரை, கும்மிடிபூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.ச.க.இரணியன், அமைப்பாளர் கார்த்தி கேயன், ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கலைமணி, ஆவடி நகர இளைஞரணி தலைவர் இ.தமிழ்மணி, திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.சதீஷ், சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் நித்தியாநந்தம், வடசென்னை பெரம்பூர் பகுதி திராவிடர் கழக இளைஞரணி இந்திரஜித், புதுவண்ணை இளைஞரணி அமைப்பாளர் செல்வம் ஆகியோர் விடுதலை சந்தா சேகரிப்பில் தங்களது இலக்கு குறித்தும் கையாளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் உரையாற்றினர்.

அவர்களைத் தொடர்ந்து தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மண்டலச் செயலாளர் தே.செ. கோபால் ஆகியோர் அரிய கருத்துகளை வழங்கி உரை யாற்றினர்.

கூட்டத்தில் பங்கேற்ற புதிய தோழர்களான தாம்பரம் வசந்தகுமார், மயிலாப்பூர் கலையரசன், போரூர் தினேஷ், வடபழனி தினேஷ், வடபழனி இரமேஷ், பூபதி ஆகியோர் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு உரையாற்றினர்.

பின்னர் மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர் மானங்களை முன்மொழிந்தார். தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரையை நிறைவுரையாகவும் வழிகாட்டுதல் உரை யாகவும் ஆற்றினார். அவரது உரையில் அரசியல், சமூக சிக்கல்களையும் இதுபோன்ற பிரச்சினைகளை கையாள்வதில் (தந்தை பெரியார் காலம் தொட்டு) இயக்கத்தின் நிலைப்பாட்டையும், விடுதலை ஏட்டின் தேவையையும், அதன் முக்கிய பங்களிப்புகளையும் விளக்கி உரையாற்றினார். இறுதியாக பொன்னேரி நகர மாணவர் கழக பொறுப்பாளர் சுகன்ராஜ் நன்றி யுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் வடசென்னை மாவட்ட அமைப் பாளர் புரசை அன்புச் செல்வன், பா.கோபாலகிருஷ்ணன், கா.காரல்மார்க்ஸ், ச.தாஸ், அம்பேத்கர், கோயம்பேடு அண்ணாதுரை, க.தமிழ்ச்செல்வன், தரமணி மஞ்சநாதன், மாணவர் கழகத் தோழர் கு.பா.கவிமலர், எண்ணூர் செல்வா, பெரம்பூர் முரளிகிருஷ்ணன், பெரம்பூர் உமாபதி ஆகியோர் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:



தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம்


கடலூர் மாவட்ட முன்னாள் மகளிரணி அமைப் பாளர் இரா.சீனியம்மாள் வயது 70 (20.10.2018), பகுத்தறிவாளர் கழக முன்னாள் மாநிலத்துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன் வயது 69 (31.10.2018), ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரரான கூடுவாஞ்சேரி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சு.மன்னார் வயது 85 (2.11.2018) அவர்களின் மறைவிற்கு சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி ஆழ்ந்த இரங் கலையும், அவர்களின் அளப்பரியத் தொண்டிற்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:

குருதிக்கொடை


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆவது பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) & உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் அயராது உழைத்துவரும் தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளான (2.12.2018) அன்று சென்னை பெரியார் திடலில் நடை பெறும் மனிதநேயப் பணியான "குருதிக்கொடை" வழங்கும் முகாமில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட இளைஞரணித் தோழர்கள் குருதிக்கொடை வழங்கு வதென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

விடுதலை சந்தா சேர்ப்பு


உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான  விடுதலை' நாளிதழுக்கு சந்தா சேர்ப்புப் பணியில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து "500" விடுதலை சந்தாக்களை சேர்த்து தமிழர் தலைவர் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4:

"என் கடன் பெரியார் பணிமுடிப்பதே"


திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாளை (சுயமரியாதை நாள்) முன்னிட்டு டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு தினங்களில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட ஏழு மாவட்டங்களில் "என் கடன் பெரியார் பணிமுடிப்பதே" எனும் தலைப்பில் நடைபெறவிருக்கும் கூட்டங்களை அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களின் ஆலோசனையினைப் பெற்று சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது

தீர்மானம் 5:

விடுதலை வளர்ச்சி நிதி


திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் தங் களுடைய பிறந்த நாள் உட்பட பிற நிகழ்வின்போது கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெறும்போதெல்லாம் பயனாடை களுக்குப் பதிலாக "விடுதலை வளர்ச்சி நிதி" வழங்கு வதென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6:

பெரியார் சமூக காப்பணி - மாநில மாநாடு


அ) தஞ்சையில் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கான விளம்பரங் களில் சிறப்பாக இளைஞரணி பொறுப்பாளர்களும், தோழர்களும் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

ஆ) மாநில மாநாட்டையொட்டி தலைமை நிலை யம் அறிவித்துள்ளபடி பெரியார் சமூக காப்பணி யில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தோழர்கள் பயிற்சி யில் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

- விடுதலை நாளேடு, 22.11.18

திங்கள், 19 நவம்பர், 2018

தரமணியில் கழக கொடி ஏற்றம்



12.11.18 முற்பகல் 11.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி தந்தை பெரியார் நகர் பேருந்து நிலையம் அருகில் தரமணி மஞ்சநாதன் தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் தரமணி எம்.ஜாபர் அலி ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் கழக கொடியை ஏற்றிவைத்தார். ச.துணைவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-  விடுதலை நாளேடு, 18.11.18

திங்கள், 12 நவம்பர், 2018

தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
 தரமணி தந்தை பெரியார் நகர்
17.9.18 காலை 7.00 மணிக்கு தரமணி பெரியார் நகரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தரமணி மஞ்சநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா.வில்வ நாதன் மாலை அணிவித்தார்.    துணைச் செயலாளர் சா.தாமோதரன், எ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்ற பொறுப்பாளர்கள் ஜி.கண்ணன், கோ.மனோோகர், மீசை டி.சேகர், அ.மகாதேேவன் மற்றும் ச.சந்தோஷ், அய்ஸ் அவுஸ் அன்பு, ந.மணித்துரை, கு.பா.அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜி.கண்ணன் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கினர். 

தியாகராயர் நகர்
காலை 8 .10 மணிக்கு தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலு தலைமையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன்  மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் முன்னிலையிலும் அமைப்பாளர் மு.ந.மதியழகன் மாலை அணிவித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மு.சேகர், ந.இராமச்சந்திரன், கோ.மஞ்சநாதன், அய்ஸ் அவுஸ் அன்பு, ந.மணித்துரை, கு.பா.அறிவழகன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். 

தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் தமிழர் தலைவரிடம் வழங்க முடிவு



சென்னை, நவ. 12 தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக பொறுப் பாளர்கள் கூட்டம் 9.11.2018 அன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் மேல்மாடி முத்துதெருவில் அமைந் துள்ள மாவட்ட கழக செயலாளர் பார்த்தசாரதி இல்லத்தில் உற்சாகமாக நடைபெற்றது.

தென்சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங் கேற்று திராவிட மாணவர் கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 86ஆவது பிறந்தநாள் மகிழ்வாக வழங்கப்படவுள்ள விடுதலை சந்தா சேகரிப்புப் பணி களையும், ஒவ்வொரு கழகத் தோழர் களும் விடுதலை சந்தா திரட்டும் பணிகளில் முழுமூச்சாய் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் எடுத் துரைத்தார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மாண வர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.

சந்தா திரட்டித்தர பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்


மாவட்ட தலைவர் வில்வநாதன் 20 சந்தாக்கள், மாவட்ட செயலாளா செ.ரா.பார்த்தசாரதி 20 சந்தாக்கள், மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் 10 சந்தாக்கள், அரும் பாக்கம் க.தமிழ்ச்செல்வன் 10 சந் தாக்கள், மாவட்ட துணைத் தலைவர் கோ.வி.இராகவன் 10 சந்தாக்கள், மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன் 10 சந்தாக்கள், மாவட்ட மாணவர் கழக தலைவர் விஸ்வாசு 5 சந்தாக்கள், மாவட்ட மாணவர் கழக செயலாளர் கு.ப.அறிவழகன் கவின் மலர் 5 சந்தாக்கள், பகுதி பொறுப் பாளர் க.இராமச்சந்திரன் மாணவர் கழக பொறுப்பாளர்கள், துணை வேந்தன், இரவி 10 சந்தாக்கள்

இறுதியாக கவின்மலர் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 12.11.18

வியாழன், 8 நவம்பர், 2018

திருவொற்றியூர் கழக மாவட்ட கலந்துரையாடல்



திருவொற்றியூர், நவ. 5 திரு வொற்றியூர் மாவட்ட திரா விடர் கழக கலந்துரையாடல் கூட்டம் புதுவண்ணை பெரியார் மாளிகையில் அமைப்புச் செய லாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையிலும், மாவட்ட தலைவர் வெ.மு. மோகன் மற்றும் மண்டல செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் முன் னிலையிலும் 28.10.2018 அன்று மாலை 7 மணியளவில் நடை பெற்றது.

தீர்மானங்கள்


1) கிளை தோறும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுக் கொடிக்கம்பங்கள் நிறுவுவது என தீர்மானிக்கப் பட்டது.

2) புதிய கிளைகள் அமைப் பது

3) அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவுடன் புது வண்ணை பெரியார் பெருந் தொண்டர் க.பலராமன் அவர் களின் நூற்றாண்டு விழாவும் (1.7.1919 & 1.7.2019) சேர்த்து புது வண்ணை பகுதியில் எழுச்சி யுடன் கொண்டாடுவது என தீர் மானிக்கப்பட்டது. தலைமைக் கழகத்தின் அனுமதி கோருவது,

4) விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கமாக நடத்துவது

5) திருவொற்றியூர் பெரியார் நகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை மறைத்து அடிக்கடி பேனர்கள் கட்டுவது பற்றி காவல்துறை மற்றும் மாநகராட்சி அமைப்புகளிடம் புகார் தெரிவிப்பது என தீர் மானிக்கப்பட்டது.

6) திருவொற்றியூர் மாவட்ட அமைப்பாளராக செ.நாகேந்தி ரன், மாவட்ட துணைச் செய லாளராக புதுவண்ணை சு.செல்வன் ஆகியோர் நியமிக்கப் பட்டனர். மாவட்ட இளை ஞரணி தலைவராக மு.ரா.

திலீபன் நியமிக்கப்பட்டார். மாவட்ட செயலாளராக இரா.சதீஷ் நியமிக்கப்பட்டார்.

-  விடுதலை நாளேடு, 5.11.18

திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் முடிவுகள்

* அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்


* கிரீமிலேயர் முறையை ஒழித்துக் கட்டுவோம்!

* தமிழர் தலைவர் பிறந்த டிசம்பர் 2 இல் விடுதலை' சந்தாக்களை அளித்து மகிழ்வோம்!



சென்னை, நவ.3 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2 இல் விடுதலை' சந்தாக்களை பிறந்த நாள் பரிசாக அளிப்பது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று (3.11.2018) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1 : இரங்கல் தீர்மானம்

மானமிகு சுயமரியாதைக்காரன்'' என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு திராவிடர் கழக இளைஞரணி ஆழ்ந்த இரங்கலையும், அவரின் அளப்பரியத் தொண்டிற்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்  2:      பொதுக்குழு தீர்மானங்களைச் செயல்படுத்தல்

06.10.2018 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்றுச் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் விழா  (சுயமரியாதை நாள்)

உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் ஓயாது உழைத்துவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு. கி.வீரமணி அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் விழாவை (சுயமரியாதை நாள்) 2018 டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி மனிதநேயப்பணிகளான குருதிக்கொடை வழங்குதல், உடற்கொடை வழங்குதல், மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்குதல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல்,  தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களை நமக்கு அளித்த  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், கழகக் கொடியேற்றுதல், கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வது எனத் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம்  4: உண்மை' சந்தா சேர்ப்புக்குப் பாராட்டு



2017 நவம்பரில் கடலூரில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் கழக இளைஞரணியினர் 2000 உண்மை' சந்தாக்கள் சேர்த்து அளிக்க வேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை ஏற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு மேலாக 2,220 உண்மை' சந்தாக்கள் சேர்த்து வழங்கிய கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு (குறிப்பாக சென்னை, தஞ்சாவூர், தருமபுரி, கோவை மண்டலம்) இக்கூட்டம் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இப்பணியை ஒரு தொடர் பணியாக செய்திடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  5: விடுதலை' சந்தா சேர்ப்பு


உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான, விடுதலை' சந்தா சேர்ப்புப் பணியில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து 1,000 விடுதலை' சந்தாக்களைச் சேர்த்து 2018 டிசம்பர் 02 அன்று சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  6: இளைஞரணி அமைப்பைக் கட்டமைத்தல்




திராவிடர் கழக இளைஞரணியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலுவாக கட்டமைக்கும் வகையில், கழக இளைஞரணி அமைப்பை மாவட்டம், ஒன்றியம், கிளைக் கழகம் வரை புதுப்பிப்பதற்கான சுற்றுப்பயணத்தை, கழக இளைஞரணி மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள்  மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  7: தஞ்சையில்  கழக மாநில மாநாடு விளக்க சுவர் எழுத்துப் பணிகள்

2019 பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாட்டை விளக்கி, தமிழகம் முழுவதும் உடனடியாக சுவர் எழுத்து விளம்பரப் பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்படுகிறது. மேலும் மாநாட்டு நன்கொடை வசூல் பணிகள் மற்றும் விளம்பரப் பணிகளில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்  8 : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா


அறிவுலக ஆசான் தந்தை  பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்து தன் வாழ்வை இலட்சியத் திற்காக அர்ப்பணித்து அவர் மறைவிற்குப்பின், திராவிடர் கழகத்திற்கு தலைமையேற்று 5 ஆண்டு காலம் வழிநடத்திய தொண்டறத்தின் தூய உருவம் அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை 2019 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடிட தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிவித்த 8 செயல்திட்டங்களை செயல்படுத்திட திராவிடர் கழகம் மற்றும் கழக மகளிரணி பொறுப்பாளர்கள், தோழர்களோடு  இளைஞரணி தோழர்கள் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  9: கிரீமிலேயர் வருமானக் கணக்கீடு தொடர்பான ஆணையை ரத்து செய்க


கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட, அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், கிரீமிலேயர் எனும் முறையை அமல்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்குத் தொடர்ந்து மத்திய அரசால் அநீதி இழைக்கப்பட்டு வருவது போதாதென்று, தற்போது மத்தியப் பணியாளர் நல அமைச்சகத்தின் 06.10.2017 தேதியிட்ட ஆணை மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் அபாய நிலையை உருவாக்கி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாதச் சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசாணையை மாற்றியது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆணையை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மேலும், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே மத்திய பி.ஜே.பி. அரசின் நோக்கமாக இருப்பதைக் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் புரிந்துகொண்டு போராடிட  கிளர்ந்தெழ வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 10: சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்வது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துக!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்லலாமா? கூடாதா? என்பதுபற்றி உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கில் சனாதனிகளும், பழைமை சம்பிரதாய விரும்பிகளும், பிரபல வழக்குரை ஞர்களையெல்லாம் வாதாட வைத்த நிலையில், 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வில் 4 நீதிபதிகள் பெரும்பான்மை கருத்துகளை தீர்ப்பாக எழுதி, எல்லா வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லலாம்  என்று உரிமை வழங்கியது. ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டிய மத்திய அரசு குறுக்குசால் ஓட்டாமல், கேரள அரசுக்குத் துணை நின்று,  எல்லா வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதிட வகை செய்க!

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதக்கூடாது என்று துணைவேந்தர் அறிவித்திருப்பது தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு விரோதமானது.  மாநில அரசு குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர்,  கல்வித்துறைச் செயலாளர் உடனடிகவனம் செலுத்தி,   புதிய ஆணை ஒன்று தேவைப்படின்  நிறைவேற்றி முதல் தலைமுறை கிராமப்புற மாணவர்கள்,  தமிழில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படித்து பட்டதாரிகளாக விரும்பும் மாணவர்களுக்கு அந்த உரிமையை வழங்கவேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இப்பிரச்சினையில் காலம் தாழ்த்தினால்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அனுமதி  பெற்று, கிளர்ச்சியில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

-  விடுதலை நாளேடு, 3.11.18

ஞாயிறு, 4 நவம்பர், 2018

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் ஏராளமான இளைஞரணியினர் பங்கேற்பு

தஞ்சாவூரில் நடைபெறும் கழக மாநில மாநாட்டில் இளைஞரணி சார்பில்


சீருடை அணிவகுப்பை நடத்துவது என தீர்மானம்




சிறப்பு தீர்மானம் 13:
இளைஞரணி சீருடை அணிவகுப்பு நடத்துதல்
2019 பிப்ரவரி 2, 3 ஆகிய நாள்களில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூகநீதி மாநாட்டில் நடைபெறும் ஊர்வலத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் சீருடை அணிவகுப்பை எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.


சென்னை, நவ. 4 திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில்  3.11.2018 அன்று முற்பகல் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது அவர் இளைஞரணியினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அணுகு முறைகள் குறித்தும், இளைஞரணிப் பொறுப் பாளர்களோடு கலந்துரையாடி தலைமை யுரையாற்றினார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் பட்டுக் கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரத்தமிழன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் வரவேற்புரை ஆற்றி னார். கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிறைவாக கருத்துரை வழங்கினார். முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு இளைஞரணித் தோழர்களின் பணிகளைப் பாராட்டி, 2019 பிப்ரவரி 2,3 ஆகிய நாள்களில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாட்டில் இளைஞரணி சார்பில் மிகுந்த எழுச்சியுடன் மிகப்பெரிய அளவில் சீருடை அணி வகுப்பை நடத்திட வேண்டும். இளை ஞரணி தோழர்கள் உடனடியாக அதற்கான செயல்திட்டத்தில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பின்னர், விழுப்புரம் மண்டலத் தலை வர் க.மு.தாஸ், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமார தேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் மோகன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஆத்தூர் சுரேஷ், ப.வெற்றிச்செல்வன், தே.காமராஜ், பொழிசை ச.கண்ணன், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக் குமார், ஈரோடு மண்டல இளைஞரணிச் செயலாளர் சா.ஜெயராஜ்செல்லத்துரை, திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் முனைவர் அன்புராஜா, கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், திண்டுக்கல் மண்டல இளைஞரணிச் செயலாளர் குண.அறிவழகன், மதுரை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், விழுப்புரம்மண்டல இளைஞ ரணிச் செயலாளர் தா.இளம்பரிதி, காஞ்சிபுரம் மண்டல இளைஞரணிச் செயலாளர் தி.இளந்திரையன், சேலம் மண்டல இளை ஞரணிச் செயலாளர் கூ.செல்வம், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.சிவசாமி, தருமபுரி மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆறுமுகம், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் வீ.திராவிடன், புதுச்சேரி  இளைஞரணித் தலைவர் தி.இராசா, காரைக்கால் மண்டல இளை ஞரணி பொறுப்பாளர் பெரியார் கணபதி, தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் விஜயகுமார், அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன்.செந்தில்குமார், விருத்தாசலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அருண்குமார், திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பழனிச் சாமி, கோவை மாவட்ட இளைஞரணித் தலைவர் திராவிடமணி, திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் திலீபன், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் நாகராசன், திண்டிவனம் மாவட்ட இளைஞரணித் தலைவர் பாபு, வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழ் சாக்ரடீஸ், குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவக்குமார், ஆவடி மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், தருமபுரி மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் பகத்சிங், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் இளைஞரணியின் பணிகள் குறித்தும், எதிர்கால வேலைகள் குறித்தும் பேசினர்.

கூட்டத்தில், மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் பார்த்தீபன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், திண்டிவனம் மாவட்டத் தலைவர் கந்தசாமி, வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், செந்துறை மதியழகன், அரும்பாக்கம் தாமோதரன், மாவட்ட ப.க. செயலாளர் பழனி மெர்சி ஆஞ்சலாமேரி, விருத்தாசலம் மாவட்ட ப.க. செயலாளர் தே.சுதாகர், தஞ்சை யோவான்குமார், குமார் விருத்தா சலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடராசா, திண்டிவனம் தம்பிபிரபா கரன், சென்னை சண்முகப்பிரியன், செல் வேந்திரன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் கணேசன், விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் மணி, நாகை திலீபன் சக்ரவர்த்தி, சுரேஷ், வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பரசன், அமைப்பாளர் தயாளன், செந்துறை அறிவன், மத்தூர் இராமஜெயம், தாம்பரம் மாவட்ட இளை ஞரணி செயலாளர் சட்டநாதன், மரக் காணம் அம்சராஜ், திண்டிவனம் தமிழரசு, வடசென்னை மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் பகலவன், விருத்தாசலம் நகர செயலாளர் சேகர், அருப்புக்கோட்டை பெரியார் செல்வம், மரக்காணம் மதிவாணன், விருத்தாசலம், சந்துரு, வீரமுத்து, தீபக்குமார், கல்லக்குறிச்சி சபரிநாதன், விழுப்புரம் கோதண்டராமன், கல்லக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பகவான்தாஸ், விருத்தாசலம் மாவட்ட மாணவர் கழக செயலாளர் இராமராஜ், அசோக் நகர் அகிலன், விருத்தாசலம் வெங்கடேசன், காஞ்சீபுரம் தனுஷ், திருநாவுக்கரசு, குரோம்பேட்டை இனியரசன், தென் சென்னை தாஸ், ஆவடி சரவணன், பெரியார் திடல் கலைமணி, தெய்வசிகாமணி, இன்பரசன், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் பால சுப்பிர மணியன், புழல் அறிவுமானன், வாதுர் அன்பரசன், அர்ச்சுனன், ரேகா உள்பட 150க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற் றனர்.

நிறைவாக மாநில மாணவர் கழக கூட்டுச்செயலாளர் சே.மெ.மதிவதனி நன்றி கூறினார்.

திராவிடர் கழக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்


திருவாரூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: சு.இராஜ்மோகன் வேலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: ந.கண்ணன் (குடியாத்தம்)

அரியலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: பொன்.செந்தில்குமார் (செந் துறை) சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்:  சோ.சுரேஷ் அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்: சு.அறிவன் (செந்துறை)

வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்: பொ.தயாளன் (காங்கேயநல்லூர்)

மதுரை புறநகர் மாவட்ட இளை ஞரணித் தலைவர்: பா.முத்துக்கருப்பன் (திருமங்கலம்), மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணிச் செய லாளர்: இரா.பிரபாகரன் (கூடல்நகர்)

காரைக்கால் மண்டல இளைஞரணித் தலைவர்: நாத்திக.பொன்முடி, காரைக்கால் மண்டல இளைஞரணிச் செயலாளர்: கோ.மு.பெரியார்கணபதி

சோழிங்கநல்லூர் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்: எம்.நித்தியானந்தம் (கேளம்பாக்கம்)

திருவொற்றியூர் மாவட்ட இளைஞ ரணித் தலைவர்: சதீஷ் (திருவொற்றியூர்), திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: திலீபன் (திருவொற்றியூர்)

நாகை மாவட்டம்


நாகை மாவட்ட இளைஞரணித் தலை வர்: வெ.தீபன்சக்ரவர்த்தி, நாகை மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: பா.பாலாஜி, நாகை மாவட்ட இளைஞரணி அமைப் பாளர்: கி.சுரேஷ், நாகை மாவட்ட இளை ஞரணித் துணைத்தலைவர்: கா.குமரேசன், நாகை மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர்: இரா.இரமேஷ்

சேலம் மாவட்டம்


ஆத்தூர் மாவட்ட இளைஞரணிச் செய லாளர்: ப.வேல்முருகன்

திண்டிவனம் மாவட்டம்


திண்டிவனம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: ச.செந்தில்

மரக்காணம் வட்டத் தலைவர்: தெ.ஜெகதீசன், மரக்காணம் வட்டச் செயலாளர்: வா.மதிவாணன், மரக்காணம் நகர செயலாளர்: லிகோரி சுரேஷ் வர்சைல், மரக்காணம் நகர அமைப்பாளர்: கா.அம்ச ராஜ், மரக்காணம் நகர துணைத் தலைவர்: பா.மணிகண்டன்

வானூர் வட்டத் தலைவர்: சிவ.கவுரி சிறீதர், வானூர் வட்ட அமைப்பாளர்: மாரிமுத்து

ஒலக்கூர் ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்: தேவராஜ்

ஈரோடு மாவட்டம்


பவானி ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்: தே.தேவேந்திரன்

தென்சென்னை மாவட்டம்


மாவட்ட இளைஞரணித் தலைவர்: சி.மகேந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: ந.மணித்துரை, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்: இரா.கதிரவன்.

திருவள்ளூர் மாவட்டம்


மாவட்ட இளைஞரணி தலைவர்: விஸ்வாகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர்: மு.ராக்கி

வடசென்னை மாவட்டம்


மாவட்ட இளைஞரணி செயலாளர்: அ.தமிழ்ச்செல்வன் (எருக்கஞ்சேரி), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: கோ.பகலவன்

ஆவடி மாவட்டம்


மாவட்ட இளைஞரணித் தலைவர்: வெ.கார்வேந்தன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: க.கலைமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: சே.கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர்: இரா.கலை வேந்தன்.

- விடுதலை நாளேடு, 4.11.18