வெள்ளி, 5 ஜூலை, 2024

சேலம் மாவட்டம் மேச்சேரியில் ஜாதி ஒழிப்பு மாநாடு - 4.2.1995

 

அய்யாவின் அடிச்சுவட்டில் …: இயக்க வரலாறான தன் வரலாறு(257)

டிசம்பர் 01-15, 2020

உலகில் ஒப்பற்றது சுயமரியாதை இயக்கம்!

கி.வீரமணி

4.2.1995 சேலம் மாவட்டம் மேச்சேரியில் ஜாதி ஒழிப்பு மாநாடு எழுச்சியோடு நடைபெற்றது. கழக இளைஞரணித் தோழர்கள் பங்கேற்ற வீதிநாடகம், சத்தியமங்கலம் முத்துவின் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து மேடையிலேயே சேலம் அர்த்தனாரி _ ஆராயம்மாள் ஆகியோரின் மகன் இராமுவுக்கும் சங்ககிரி வட்டம் சமுத்திரம் ஆரோக்கியசாமி _ பாக்கியம் ஆகியோரின் மகள் பிரகாசமேரிக்கும், ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்த வைத்து வாழ்த்தினேன். 1957இல் சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டு சிறையேகிய அம்மாப்பேட்டை எஸ்.தனபால், பெ.முத்து, பி.குழந்தைசாமி, மல்லூர் பழனிச்சாமி, அப்பாய் கோவிந்தராஜ், எஸ்.எஸ்.இளஞ்செழியன், ஏ.கே.திருமலை, கே.சி.கந்தசாமி, டி.என்.சின்னு, சி.ஆ.பெருமாள், மேகநாதன் உள்ளிட்ட பலருக்கும் பாராட்டுச் சான்றிதழும், சால்வையும் போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தோம். தருமராசன்_சாந்தி ஜாதி மறுப்புத் தம்பதியினரின் இரண்டாவது பெண் குழந்தைக்கு ‘அன்புச் செல்வி’ எனப் பெயர் சூட்டினேன். மாநாட்டு ஏற்பாடுகளை இளைஞரணியினர் சிறப்பாகச் செய்திருந்தனர். மாநாட்டுப் பேரணி அணிவகுப்பில் தொடர்ந்து நான்காவது முறையாக சேலம் மாவட்ட இளைஞரணியினர் முதல் பரிசு பெற்றனர். அவர்களுக்கு பரிசளித்து, பாராட்டையும் தெரிவித்தேன்.

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றும் ஆசிரியர்,
மேடையில் கழகப் பொறுப்பாளர்கள்


மாநாட்டில் நடைபெற்ற ஜாதி மறுப்பு மத மறுப்புத் திருமண
இணையரை  வாழ்த்தும் ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக