வியாழன், 4 ஜூலை, 2024

சென்னை ரிசர்வ் வங்கியின் முன் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் - 28.9.1992

 

இயக்க வரலாறான தன் வரலாறு (245) : வி.பி.சிங் அவர்களுக்கு வரலாறு காணாத வரவேற்பு!

மார்ச் 1-15, 2020

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

28.9.1992 அன்று ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு தந்தி கொடுத்தோம். அதில் மதச் சார்பற்ற கொள்கைப்படி நடக்க வேண்டிய சென்னை ரிசர்வ் வங்கியில் பார்ப்பன இந்து மத கொள்கைப்படி, கலாச்சாரப்படி யாகம் நடத்தினால் பொதுமக்களே அலுவலகத்திற்குள் நுழைந்து யாகத்தைத் தடுக்க நேரிடும் என்று அந்த தந்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து 28.9.1992 அன்று சென்னை ரிசர்வ் வங்கியின் முன் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும்போது, ரிசர்வ் வங்கி என்பது அக்கிரகாரத்தின் தனிச் சொத்தா? சங்கரமடத்தின் பிராஞ்சா? ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளையா? எல்லாம் பார்ப்பன மயம் என்கிற ஆணவத்தினால் எதையும் செய்யலாம் என்று பார்ப்பனர்கள் நினைப்பார்களேயானால் அந்த ஆணவத்தின் முதுகெலும்பை கருஞ்சட்டைப் படை முறித்தே தீரும் என்று கண்டித்து உரை நிகழ்த்தினேன். ஊர்வலத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்து வந்தனர்.


1 கருத்து:

  1. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பான நிகழ்வு என்றாலும் தமிழர்கள் என்றும் மறக்கக் கூடாதது. தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு