வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

சா.தாமோதரன் தமது 58ஆவது பிறந்த நாள் - விடுதலை சந்தா வழங்கல்

தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் தமது 58ஆவது பிறந்த நாள் மகிழ்வாக 25.2.2020 அன்று, சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 'விடுதலை' ஏட்டிற்கு ரூ. 1000 (சந்தா) வழங்கி வாழ்த்துப் பெற்றார். ஆசிரியர் அவர்கள் சா.தாமோதரனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினார். உடன் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், க.தமிழ்ச்செல்வன், த.லலிதா, எம்.பிரகாசம். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

சா.தாமோதரனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். கவிஞரிடம் 'விடுதலை' ஏட்டிற்கு ரூ. 1000 (சந்தா) வழங்கப்பட்டது. ('விடுதலை' ஏட்டிற்கு ஒரு ஆண்டு சந்தா ரூ.1800, வளர்ச்சி நிதி ரூ.200)

வியாழன், 27 பிப்ரவரி, 2020

இந்திய மாணவர் சங்கக் கருத்தரங்கில் திராவிடர் கழகப் பொருளாளர் பங்கேற்பு

சென்னை, பிப்.25 இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) தமிழ்நாடு மாநில குழுவின் சார்பாக சென்னையில் 22.2.2020 அன்று கல்வி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை - நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கரூர் வைஸ்யா வங்கி தொழிற்சங்க அரங்கில் 'தேசம் காக்க பல்கலைக் கழகங்களைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் ஒரு நாள் முழுவதும் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் அமைப்பினைச் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றினர். திராவிடர் கழகத்தின் சார்பாக பொருளாளர் வீ.குமரேசன் பிற்பகல் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கழகப் பொருளாளர் தமது உரையில் குறிப்பிட்டதாவது: ஆண்டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்த உழைக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் இரண்டு தளங்களில் கிடைக்க வேண்டும். ஒன்று - கல்வி கற்கும் உரிமை, அடுத்து - கல்வியைப் புகட்டும் நிலையங்களான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் உரிமை.

இந்திய நாடு அரசியல் விடுதலை பெறுவதற்கு முன்பே நாட்டின் தென்பகுதியில் - குறிப்பாக சென்னை மாகாணத்தில் கல்வி மறுக்கப்பட்டு வந்த மக்களுக்கு அரசு ஆணை மூலம் கல்வி கற்க அடித்தளம் அமைத்தது நீதிக்கட்சி. கல்வி மறுக்கப்பட்டு வந்த மக்கள் - அந்தக் குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகள் படிப்படியாக படிக்கும் வாய்ப்பினைப் பெற்றனர். கல்வி கற்கும் மக்கள் பிரிவினர் பரந்து பட்டு வந்த நிலையில் நாடு விடுதலை பெற்று அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அனைவரும் கல்வி கற்றிட வழி அமைத்த வகுப்புரிமை ஆணை செல்லாது என மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் போடாமலேயே தனக்கு மருத்துவக்கல்வி பெற வாய்ப்பு கிடைக்கவில்லை என ஒரு பார்ப்பனப் பெண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். மக்கள் அனைவரும் சமம்; பாகுபாடுகூடாது' எனும் அரசியலமைப்பு சட்ட விதியை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வகுப்புரிமை ஆணை செல்லாது என தீர்ப்பு அளித்தது. தந்தை பெரியார் தலைமையில் தமிழகமே ஒட்டு மொத்தமாகத் திரண்டு, நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் வகுப்புரிமை ஆணையின் நடைமுறையினை ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை உறுதி செய்திடும் வகையில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்திட ஏதுவாக அரசமைப்புச் சட்ட முதல் திருத்ததின் மூலம் புதிய விதியினை 15(4) சேர்க்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்ட விதிகள் எழுத்துப் பூர்வமாகவும், அதனுள் அடங்கிய பொருள் விளக்கத்தின் மூலமாகவும் அனைவரும் கல்வி பெற்றிடும் வகையில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், முழுமையாக அனைவரும் கல்வி கற்கக் கூடாது என்று பல்வேறு வழிகளில் தடைகளை ஆதிக்க சக்திகள் இன்றளவும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே அனைவரும் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நீட், நெக்ஸ்ட் என பல்வேறு தடைத் தேர்வுகளை நடத்தி கல்வி கற்கும் வாய்ப்பினை சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய நீதிமன்றங்களே மறுத்து வருகின்றன. ஆட்சியாளர்களும் அதற்கு ஏதுவாக கல்வி அனைவருக்கும் கிடைக்கூடிய வாய்ப்பினை தடுத்து வருகின்றனர்.

அடுத்து கற்பிக்கும் கல்வி நிலையங்கள் சுதந்திரமாக கல்வி வழங்கிடுவதிலும் தடைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உயர் கல்வி நிறுவனங்களை பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டை முடக்கிடும் வகையில் மத்திய அரசு தனது அதிகார வரம்பினை தொடர்ந்து மீறிக்கொண்டே வருகிறது. கல்வி என்பது மாநில ஆட்சியின் உரிமை எனும் நிலையிலிருந்து மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து  நடைமுறைப்படுத்தும் அதிகாரமாக கடந்த காலத்தில் மாற்றப்பட்டதே கல்வி நிலையங்களின் உரிமையினை பறிப்பதாக அமைந்துவிட்டது. ஆனால் குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழி பறித்த கதையாக கல்வி அதிகாரத்தை இன்று மத்திய அரசே தன்னிச்சையாகக் கையாளும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் உண்மையான ஆளும் அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அந்த மக்கள் தங்களது நலன்களை, உரிமைகளை - கல்வி கற்கும் உரிமையினை தட்டிப்பறிக்கின்ற எந்தப் போக்கினையும் தட்டிக்கேட்காவிட்டால் உரிமை இழந்து வாழும் சூழ்நிலை உருவாகிவிடும். அந்த நிலையி¬னை தடுத்து கல்வி உரிமை பற்றிய விழிப்புணர்வை, போரிடும் வல்லமையினை மக்களிடம் உருவாக்க வேண்டும். அனைத்து மக்களும் கல்வி கற்க தடை விதிக்கும் எந்த ஆட்சியாளரையும் பதவியில் இருந்து இறக்குவதை தங்களது வாக்கு பலத்தின் மூலம் அவ்வப்போது நிரூபித்துக் கொள்ள வேண்டும். உரிமை மறந்தால் உரிமை இழப்பு உறுதி எனும் எச்சரிக்கை உணர்வினை மக்களிடம் தொடர்ந்து விளக்கி, பிரச்சாரம் செய்திட மக்கள் அமைப்புகள், சமூக அமைப்புகள் முன் வரவேண்டும். இது குறித்த களப்பணிகள் மேலும் பலப்பட வேண்டும். இந்த கல்வி கருத்தரங்கள் அதற்கு வழிகோறும். பிரச்சார பணியினை முடுக்கி விடுவோமானால் கல்வி கற்கும் உரிமை காப்பாற்றப்பட்டுவிடும்.

இவ்வாறு வீ.குமரேசன் குறிப்பிட்டார்.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற கருத்தரங்கில் கல்வியாளர் பேராசிரியர் வசந்திதேவி, திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.எழிலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாணவரணி செயலாளர் பால.சசிக்குமார் மற்றும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் அயிஷி கோஷ் ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் நிறைவுரையாற்றினார்.

கருத்தரங்கில் திராவிடர் மாணவர் கழக மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கலைமணி, தீபிகா மற்றும் பல தோழர்களும் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு 25 2 20

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

தமிழ்நாட்டில் 11 நாள்கள் சூறாவளி சுற்றுப்பயணம்

நீட்', 'புதிய கல்வி'யின் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி

மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சாதனை

தொகுப்பு: இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

நேற்றைய விடுதலையில் வெளிவந்ததின் தொடர்ச்சி....

ஆத்தூரில் தோழர்கள் சந்திப்பு

24.01.2020 நண்பகல் 12.30 மணிக்கு ஆத்தூர் ராம கிருஷ்ணா ரெசிடென்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை ஆத்தூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குடும்பத்துடன் சந்தித்து உரையாடி மகிழ்ந் தனர்.  மதிய உணவுக்குப் பின் ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர் அவர்கள்.

ஆத்தூர் தங்கவேல் இல்லம்

மாலை 6.10 க்கு விடுதியிலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேல் வாழ்விணையரை சந்தித்து உடல் நலம் விசாரித்து விடைபெற்றார்.

ஆத்தூர் பொதுக்கூட்டம் (24.01.2020)

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6.20 க்கு வருகை தந்தார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மாவட்டச் செயலாளர் நீ. சேகர் வரவேற்றார். மாவட்டத் தலைவர்

த. வானவில் தலைமையேற்றார். பெ. சோமசுந்தரம், சி. சுப்ர மணியன், விடுதலைசந்திரன், வெ. அண்ணாத்துரை, திவாகர், வீராச்சாமி ஆகியோர் முன்னிலையேற்றனர்.  உ. செல்வன் நன்றி கூறினார். 7.10 மணி முதல் 8.05 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.  பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய ஆசிரியர் அவர்களின் உரையை பெருந்திரளாக பொது மக்கள் கூடி கேட்டனர்.

எடைக்கு எடை நாணயம்

நீட் எதிர்ப்பு பரப்புரை மேற்கொண்டு ஆத்தூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆத்தூர் கழக இளைஞரணி தோழர்களால் பொதுக்கூட்ட மேடையில் பொது மக்களின் வாழ்த்துக்களிடையே எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது.  நாணயத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அவர்கள் எனது எடைக்கு மேலாக வழங்கப்பட்ட நாணயம் ரூ.16,000 திருச்சியில் இயங்கி வரும் நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்

ஆத்தூர் பொதுக்கூட்ட மேடையில் தோழர் இளமாறன் அவர்கள் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களிடத்தில் விடைபெற்று இரவு 8.10 க்கு கல்லக்குறிச்சி நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

கல்லக்குறிச்சியில் வரவேற்பு

ஆத்தூர் பொதுக்கூட்டம் முடிந்து கல்லக்குறிச்சிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 9.05 க்கு மண்டலத் தலைவர் கா.மு. தாஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தோழர்கள் பயனாடை அணி வித்து மகிழ்ந்தனர்.

கல்லக்குறிச்சி பொதுக்கூட்டம் (24.01.2020)

கல்லக்குறிச்சி மந்தவெளி பொதுக்கூட்ட மேடைக்கு 24-01-2020 இரவு 9.10 மணிக்கு வந்தடைந்தார் தமிழர் தலைவர் அவர்கள். மாவட்டச்செயலாளர் கோ.சா.பாஸ்கர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ம. சுப்பராயன் தலைமையேற்றார். பொன்.ராமகிருஷ்ணன், க,மு.தாஸ், குழ. செல்வராசு, த. பெரிய சாமி, து. சுந்தரராசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  9.15 மணி முதல் 10 மணி வரை தமிழர் ஆசிரியர் அவர்கள் 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார்கள். முத்துசாமி நன்றி கூறினார்.

தமிழர் தலைவருக்கு மலர் கிரீடம்

நீட் பரப்புரை மேற்கொண்டு கல்லக்குறிச்சி வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மலர் கிரீடமும் மலர் மாலையும் அணிவித்து மகிழ்ந்தனர். மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையர்கண்ணி, தி.மு.க. செயற்குழு உறுப்பினர் அருணாசலம், உலகத் தமிழர் கவிஞர் பேரவை பொதுச் செயலாளர் புலவர் . கு,சீத்தா. வழக் குரைஞர் செல்வநாயகம், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் சரவணன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் ஏழுமலை, காங் கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய் கணேஷ், தி.மு.க ஒன்றிய செயலாளர் சி. வெங்கடாசலம், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், வி.சி.க மாவட்டச் செயலாளர் தமிழ்மாறன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஆ. பகல்முகமது உள்ளிட்ட தோழமை இயக்கத் தோழர்கள் ஆசிரியர் அவர் களை வரவேற்று பயனாடை அணிவித்து மகிழ்ந்துள்ளனர்.  இரவு 10.10 மணிக்கு திருச்சி நோக்கி புறப்பட்டார் ஆசிரியர். வேப்பூர் ஆரியாஸ் உணவு விடுதியில் இரவு உணவை முடித்து புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து ஓய்வுக்கு சென்றார் தமிழர் தலைவர்.

தோழர்கள் சந்திப்பு

திருச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை திருச்சி, லால்குடி மாவட்ட கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்தித்து சந்தாக்கள் வழங்கி சிறப்பித்தனர். திருச்சி வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடினார்.

பெரம்பலூரில் வரவேற்பு

6ஆவது நாள் பரப்புரை பயணம் மேற்கொண்டு 25.01.2020 மாலை 5.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களுக்கு மாலை 6.50 மணியளவில் பெரம்பலூர் மூன்று ரோட்டில் தி.மு.க பொறுப்பாளர் முகுந்தன் தலைமை யில் தி.மு.க, தி.க, வி.சி.க தோழர்கள் பயனாடை அணிவித்து உணர்ச்சி மிக்க வரவேற்பு அளித்து இருசக்கர வாகனங்களில் முன்னே அணிவகுத்து சென்றனர்.

பெரம்பலூர் பொதுக்கூட்டம் (25.01.2020)

பெரம்பலூர் தேரடியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடைக்கு மாலை 7 மணிக்கு வருகை தந்தார் ஆசிரி யர் அவர்கள், நகரத் தலைவர் அக்கி ஆறுமுகம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையேற்றார் மண்டலத் தலைவர் காமராஜ் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந் தன்  கழக பொதுக்குழு உறுப்பினர்கள், ப.அறுமுகம், இரா.அரங்கராசன், சா.தங்கபிரகாசம், ஆதிசிவம், அண்ணாத்துரை, பெ.துரைசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர் 7.15 மணி முதல் 7.55 வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் "நீட்டி"ன் அவலங்களை எடுத்துரைத்து உரையாற் றினார்கள். அனைத்துகட்சி தோழர்கள் பொதுமக்கள் பெருந் திரளாக கூடி நின்று உரையை கேட்டு தெளிவு பெற்றனர். மு.விசயேந்திரன் நன்றி கூறினார்.

தோழமை இயக்க பொறுப்பாளர்களின் வரவேற்பு

மாவட்ட தி.மு.க செயலாளர் சி.இராஜேந்திரன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் செ.துரைராஜ், சி.பி.அய் (எம்) மாநில விவசாய அணி செயலாளர் ந.செல்லதுரை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர் சுல்தான்மொய்தீன் உள்ளிட்ட ஏராள மான அனைத்து இயக்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை வரவேற்று பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு

பெரம்பலூர் பொதுக்கூட்டம் முடிந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அங்கு கூடியிருந்த செய்தியா ளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து நீட் பரப்புரை பயண நோக்கங்களை விளக்கி பேட்டியளித்தார் அனைவரி டமும் விடைபெற்று இரவு 8 மணிக்கு அரியலூர் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அரியலூரில் வரவேற்பு

அரியலூர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு ஊர் எல்லையில் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் அவர்கள் தலைமையில் கழகக் கொடியுடன் ஏராளமான தோழர்கள் கூடிநின்று ஒலி முழக்கங்களுடன் வரவேற்று பொதுக் கூட்ட மேடைக்கு அழைத்து சென்றனர்.

அரியலூர் பொதுக்கூட்டம் (25.01.2020)

25.01.2020 இரண்டாவது கூட்டம் அரியலுர் ஆயிரங்கால் மண்டப வீதியில் அனிதா நினைவரங்கத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையேற்றார் மாநில இளைஞரணி செயலா ளர் த.சீ.இளந்திரையன் மண்டலத் தலைவர் சி.காமராசு மண் டல செயலாளர் சு.மணிவண்ணன், இரத்தின.இராமச்சந்திரன் தங்க.சிவமூர்த்தி, சி.சிவக்கொழுந்து, பேராசிரியர் தங்கவேலு பொறியாளர் இரா.கோவிந்தராசன் உள்ளிட்டோர் முன்னிலை யேற்றனர் இரவு 8.50 மணிக்கு மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 9.05 க்கு பேச்சை தொடங்கி 9.55 வரை 50 நிமிடங்கள் உரையாற்றினார், நீட் என்ற தேர்வால் அனிதா உட்பட நமது பிள்ளைகளை எத் தனை பேரை இழந்துள்ளோம.; நீட்டை விரட்டும் வரை நமது போராட்டம் ஓயாது பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்து உரையாற்றினார். பெருந்திரளாக மக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர். ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருஷ் ணன் நன்றி கூறினார்.

தோழமை கட்சியினர் வரவேற்பு

ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் கு.சின்னப்பா, சி.பி.அய் (எம்) மாவட்டச் செயலாளர் இரா.மணிவேல், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சந்திரசேகர், சி.பி.அய் மாவட்டச் செயலாளர் இரா.உலகநாதன், எம்.ஜி.ஆர் கழக மாவட்டச் செயலாளர் எம்.ஜி கலைவாணன் உள்ளிட்ட தோழமை கட்சி பொறுப்பா ளர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து பரப் புரை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவு வல்லத்தில் ஓய்வு

அரியலூர் கூட்டம் முடித்து இரவு 10 மணிக்கு தோழர் களிடம் விடைபெற்று புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பயணக் குழுவினர் இரவு 11.15 மணிக்கு தஞ்சை வல்லம் வந்தடைந்தனர் இரவு உணவுக்கு பின் ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர் அவர்கள்.

தோழர்கள் சந்திப்பு (26.01.2020)

26.01.2020 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் கிளைக்கழக தோழர்ள், பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஒக்கநாடு மேலையூரில் நடைபெறும் மன்னை நாராயணசாமியின் 100ஆவது ஆண்டு விழா, நீட் எதிர்ப்பு கிராமப்புற வட்டார மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி மகிழ்ந்தனர். அனை வரிடமும் விடைபெற்று முற்பகல் 11 மணிக்கு மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

இராஜகிரி தங்கராசிடம் நலம் விசாரிப்பு

தஞ்சை வல்லத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 11.45 அளவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராஜகிரி தங்கராசு (96) அவர்களின் இல்லத்திற்கு திடீரென்று சென்று நலம் விசாரித்து ஒளிப்படம் எடுத்து சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தார்கள். தங்க.பூவானந்தம் அவரின் வாழ்விணையர் ஆசிரியர் அவர்களை வரவேற்று தங்கள் தோட்டத்தில் விளைந்த பழங்களை வழங்கி மகிழ்ந்தார். அனைவரிடமும் விடைபெற்று மயிலாடுதுறை நோக்கி பயணக்குழுவினர் புறப்பட்டனர்.

மயிலாடுதுறையில் வரவேற்பு

26.01.2020 மதியம் 1.30 மணிக்கு மயிலாடுதுறை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மில்லினியம் விடுதியின் முன் மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பிற்பகல் 2 மணிக்கு மதிய உணவுக்கு பின் ஓய்வுக்கு சென்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

தோழர்கள் சந்திப்பு

மயிலாடுதுறை மில்லினியம் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் அவர்களை மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கும்பகோணம் மாவட்டக் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்தித்து தங்கள் பகுதியில் நடைபெறும் இயக்கப் பணிகள் குறித்து தமிழர் தலைவர் அவர்களிடம் உரையாடி மகிழ்ந் தனர்.

மயிலாடுதுறை பொதுக்கூட்டம் (26.01.2020)

மயிலாடுதுறை தங்கும் விடுதியிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 6.40 மணிக்கு 7ஆவது நாள் முதல் கூட்டமான மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அமைக்கப்பட்ட கூட்ட மேடைக்கு வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையேற்றார்.  மண்டலத் தலைவர் ச.மு.ஜெகதீசன், மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன் நகரத் தலைவர் சீனிமுத்து, நகரச் செயலாளர் அரங்க. நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையேற்றார்கள். கழகத் துணைத்தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் வருகை தந்து நீட் பரப்புரை பயணத்தை தமிழர் தலைவர் மேற்கொள்வதின் அவசியம் குறித்து உரை யாற்றினார்.  இரவு 7 மணி முதல் 7.55 மணி வரை 55 நிமிடங் கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கவுரையாற் றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று உரையை கேட்டு விழிப்புணர்வு பெற்றனர்.  அனைவரிடமும் விடை பெற்று இரவு 8 மணிக்கு சிதம்பரம் நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.  கா.அருள்தாஸ் நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் நிவேதா எம்.முருகன், தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.இராஜகுமார், சி.பி.அய் மாநிலக்குழு உறுப்பினர் இடும் பையன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப் பாளர் ரவிச்சந்திரன் மற்றும் தி.மு.க நகர, ஒன்றிய செய லாளர்கள் முக்கிய பிரமுகர்கள் நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும்பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சிதம்பரம் பொதுக்கூட்டம் (26.01.2020)

சிதம்பரம் போல் நாராயணதெருவில் அமைக்கப்பட்டி ருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9.05 மணிக்கு தமிழர் தலைவர் வருகை தந்தார்கள்.  மாவட்டச் செயலாளர் அன்பு.  சித்தார்த்தன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர்  பேரா.பூ.சி. இளங்கோவன் தலைமையேற்றார். மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் சொ.தண்ட பாணி, மாவட்டத் துணைத்தலைவர் கோவி.பெரியார்தாசன் மாவட்ட இணைச் செயலாளர் சி.யாழ்திலீபன், மாநில இளைஞரணி செயலாளர் தி.சீ.இளந்திரையன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கடலூர் மாவட்டச் செயலாளர்  நா.தாமோதரன், மாவட்ட துணைச் செயலாளர் கா. கண்ணன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் ஆகி யோர் முன்னிலையேற்றனர். தி.மு,க. மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நீட் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வாழ்த்தி பேசினார். இரவு 9.20 மணி முதல் 10 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் நகர கழக தலைவர் கோவி.குணசேகரன் நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வாழ்த்தும் வரவேற்பும்

கடலூர் மாவட்ட தி,மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சி.பி.அய். மாநிலக்குழு உறுப்பினர் மணிவாசகம், வி.சி.க. மாவட்டச் செயலாளர் பால. அறவாழி, சி.பி.அய்.(எம்) மாவட்டக்குழு எஸ்.ஜி.இரமேஷ்பாபு, இஸ்லாமிய அய்க்கிய ஜமாத் வட்டாரத் தலைவர் முகமது ஜியாவுதீன் உள்ளிட்ட தோழமை இயக்கத்தினரும், கழகத் தோழர்களும் குடும்பம் குடும்பமாக மேடைக்கு வருகை தந்து நீட் எதிர்ப்பு பயணம் மேற்கொண்டு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவு புதுச்சேரியில் வரவேற்பு

26.01.2020 அன்று சிதம்பரம் கூட்டம் முடித்து பயணக் குழுவினருடன் புதுச்சேரி நோக்கி இரவு 10.05 மணிக்கு புறப்பட்டார் தமிழர் தலைவர், வழியில் கடலூரில் பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி இரவு உணவு முடித்து மீண்டும் பயணத்தை தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புதுச்சேரி அண்ணாமலை தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு புதுச்சேரி மண்டலத் தலைவர் இர.இராசு, மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், இளைஞரணி தலைவர் தி. இராஜா உள்ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்றனர். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி சிதம்பரத்திற்கே வருகை தந்து தலைவரை வர வேற்று அழைத்து சென்றார்கள். இரவு 1 மணியளவில் ஓய் வுக்கு சென்றார் தமிழர் தலைவர் அவர்கள்.

27.01.2020 புதுச்சேரியில் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

புதுச்சேரி அண்ணாமலை விடுதியில் தங்கியிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சி, சமுதாய இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் காலை முதல் மாலை வரை சந்தித்து சமூக நீதி தொடர்பான நடவடிக்கைகள் புதுச்சேரி அரசியல் நிலவரங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதி உரிமை பிரச்சினைகள், நீட் புதிய கல்விக் கொள்கை போன்றவற்றின் ஆபத்துக்கள் குறித்து விவாதித்து உரையாடி மகிழ்ந்தனர். வி.சி.க. பொதுச் செயலாளர் பாவ ணன் மீனவர் விடுதலை பேரியக்க நிறுவனர் மங்கையர் செல்வன், சி.பி.அய் மாவட்டச் செயலாளர் ராஜாங்கம், மத்திய குழு உறுப்பினர் முருகன், விடுதியின் உரிமையாளர் செண்பக ராஜன், ஏகாம்பரம் சமூக நீதி பேரவை பொறுப்பாளர் தன ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் அமைச்சர்

திரா. விசுவநாதன் சி.பி.அய் மாநிலச் செயலாளர் சலீம் உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப்பாளர்கள், புதுச்சேரி கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

புதுச்சேரி முதலமைச்சர் சந்திப்பு

நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டு புதுச்சேரி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அவர் தங்கியிருந்த அண்ணாமலை விடுதிக்கு புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு. வே.நாராயணசாமி அவர்கள் வருகை தந்து சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரங்கள், மத்திய அரசின் நிலைப்பாடுகள், புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பரிமாறி பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். முதல்வர் அவர்களுக்கு ஆசிரியர் அவர்களும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புதுச்சேரி பொதுக்கூட்டம் (27.01.2020)

27.01.2020 அன்று எட்டாவது நாள் பயணமாக மாலை 6.40க்கு அண்ணாமலை விடுதியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி அவ்வைத்திடல் சாரம் பகுதியில் அமைக்கப்பட் டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6.45க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். புதுச்சேரி மண்டலத் தலைவர் இர. இராசா வரவேற்றார்.  புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையேற்றார்.  மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் கோ. கிருஷ்ணமூர்த்தி, இரா. சடகோபன், கு. ரஞ்சித் குமார், ந. நடராசன், வீர. இளங்கோவன், லோ. பழனி, இரா. விலாசினிராஜ், அ. எழிலரசி, மு. ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  மாலை 7 மணிமுதல் 7.55 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார்கள்.  முதுகெலும்புள்ள புதுச் சேரி அரசையும் அதன் ஆற்றல்மிகு முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களையும் பாராட்டி பேசினார். புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் வே.நாராயணசாமி அவர்கள் இறுதியாக சிறப்புரையாற்றினார்.  இளைஞரணி தலைவர் தி.இராசா நன்றி கூறினார்.

- தொடரும்

நாகர்கோவில் முதல் சென்னை வரை நீட் எதிர்ப்புப் பெரும் பயணம் நாடெங்கும் மக்கள் பேராதரவு


தொகுப்பு: இரா.ஜெயக்குமார் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

9.2.2020 அன்றைய விடுதலையில்

வெளிவந்ததின் தொடர்ச்சி....

புதுச்சேரி தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு இர.கமலக்கண்ணன், மாநில தி.மு.க தெற்கு அமைப்பாளர் இரா.சிவா, மேனாள் அமைச்சர் இரா.விசுவ நாதன் சி.பி.அய் மாநில செயலாளர் அ.மு.சலீம், சி.பி.அய். எம்.முருகன் சி.பி.அய் (எம்) செயலாளர் இரா. இராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மனித உரிமை அமைப்பின் பொதுச்செயலாளர், இரா.முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்க பொறுப்பாளர் அ.சி.தீனா, த.பெ.தி.க தலைவர் வீர.மோகன் ஆகியோர் நீட்- பரப்புரை பயணம் மேற்கொண்டு புதுச்சேரி பரப்புரைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரி முதல்வரும், தமிழர் தலைவரும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு

புதுச்சேரி பொதுக்கூட்டத்தை முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் புதுச்சேரி மாண்புமிகு முதல் வர் அவர்களும் பொதுக்கூட்ட மேடையிலேயே செய்தியா ளர்களை சந்தித்து நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மற்றும் புதுச்சேரி அரசின் மாநில உரிமைகள் குறித்து பேட்டி அளித் தனர்.  8.10க்கு திண்டிவனம் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

திண்டிவனம் பொதுக்கூட்டம் (27.1.2020)

எட்டாவது நாள் இரண்டாவது கூட்டமாக திண்டிவனம் காந்தியார் திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9.05 மணிக்கு வருகைதந்தார் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள்.  மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி தலைமை யேற்றார்.  குழ.செல்வராசு, கே.பாலசுப்பிரமணியன், இரா.அன் பழகன், சு.பெத்தண்ணன், இரா.சாமிநாதன், விஸ்வநாதன் கோதை, மண்டலத்தலைவர் க.மு.தாஸ், விழுப்புரம் சுப்ராயன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9.15 மணி முதல் 10 மணிவரை 45 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் 'நீட்' தேர்வால் நமது மாணவர்கள் அடையும் துன்பங் களை எடுத்துரைத்து உரையாற்றினார்.  மண்டல இளைஞரணி செயலாளர் தா.இளம்பரிதி நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பும் வாழ்த்தும்

மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ஆர்.மாசிலாமணி (தி.மு.க) விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.மஸ்தான், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் பி.சீத்தாபதிசொக்கலிங்கம், சி.பி.அய் (எம்) தெற்கு பகுதி செயலாளர் ராமதாஸ், சி.பி.அய் வட்டச் செயலாளர் ஆ.இன்பஒளி, ம.தி.மு.க நகரச் செயலாளர், ஜெ.பாஸ்கரன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜான்பாஷா, எஸ்.டி.பி.அய் மாவட்டச் செயலாளர் ஏ.எம்.ஆர் சையத்ஹசன் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மாவட்டச் செயலாளர் எச்.தாஜீதின் எம்.டி.கே மாவட்டச் செயலாளர், ஜெ.முகமதுதில்லன், உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப்பாளர்கள் கழகத் தோழர்கள் நீட் எதிர்ப்பு பயணம் மேற்கொண்டு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்று திண்டிவனம் ஆரியாஸ் தங்கும் விடுதியில் இரவு உணவு முடித்து பிறகு ஓய்வுக்கு சென்றார்.

திண்டிவனத்தில் தீப் பந்த வரவேற்பு

முன்னதாக திண்டிவனம் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திண்டிவனம் எல்லையில் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் அவர்கள் தலை மையில் கழகக் கொடியுடன் எழுச்சி முழக்கமிட்டு கழகத் தோழர்கள் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இளைஞரணி தோழர்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு தீப்பந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

28.01.2020 திண்டிவனத்தில் தோழர்கள் சந்திப்பு

ஆரியாஸ் தங்கும் விடுதியில் தங்கியிருந்த தமிழர் தலை வர் அவர்களை ஆரியாஸ் விடுதி உரிமையாளர் மற்றும் தோழமை இயக்க பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சந்தித்து பயனாடை, பழங்கள் வழங்கி பயணம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 28.01.2020 முற்பகல் 10.50 மணிக்கு செய்யாறு நோக்கி புறப்பட்டார்.

செய்யாறு தோழர்கள் வரவேற்பு

9ஆவது நாள் பயணத்தை திண்டிவனத்தில் தொடங்கி முற்பகல் 12 மணிக்கு செய்யாறு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் சிலை அருகில் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அங்கி ருந்து புறப்பட்டார் ஆசிரியர்.

செய்யாறு முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

பகல் 12.15 மணிக்கு செய்யாறு பயணியர் மாளிகைக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள்.  மதியம் 2 மணி வரை யும்,  மதிய உணவுக்கு பின் 4 மணிமுதல் 6 மணி வரையும் செய்யாறு முக்கிய பிரமுகர்கள், வழக்குரைஞர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மருந்து வணிகர் சங்கத்தினர், ஆசிரியர்கள், தோழமை இயக்க பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் (குடும்பத்துடன்) என 100 க்கும் மேற்பட்டவர்கள் சாரைசாரையாக வருகை தந்து ஒளிப்படம் எடுத்து நீட் எதிர்ப்பு பரப்புரைக்கு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.  அனைவரிடமும் விடைபெற்று மாலை 6.10 க்கு கூட்ட மேடை நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.

செய்யாறு பொதுக்கூட்டம் (28.01.2020)

செய்யாறு ஆரணி கூட்டுரோடு அருகில் அமைக்கபட் டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு மாலை 6.20 க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். நகரத்தலைவர் தி.காம ராசன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையேற்றார். பொன்.சுந்தர், ஏ.அசோகன், வடமணப் பாக்கம் வி.வெங்கட்ராமன், முனைவர் மு.தமிழ்மொழி, நா.வெ.கோவிந்தன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 6.45 மணிமுதல் இரவு 7.30 மணிவரை 45 நிமிடங்கள் சிறப் புரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.  ஏரா ளமான பொதுமக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர்.  நகரச் செயலாளர் தங்கம் பெருமாள் நன்றி கூறினார்.

'பெரியார் 1000' மாணவர்களுக்கு பரிசு

தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா? விடை போட்டியில் செய்யாறு மாவட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூட்ட மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். பெற்றோர்களும் ஆசிரியர் களும் உடன் வருகைதந்து பங்கேற்றனர்.

தோழமை இயக்க பொறுப்பாளர்களின் வரவேற்பு

தி.மு.க. மாநில விவசாய அணி துணைச்செயலாளர் வ.அன்பழகன், முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் சி.பி.அய்(எம்), கோவை பழனி, வட்டாரத் தலைவர் பஜ்ராசலம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் எச்.கமால் ஆகியோர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பயணம் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்று இரவு 7.35 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.

காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தின் எழுச்சிமிகு வரவேற்பு

28.01.2020 இரவு 8.30 மணியளவில் காஞ்சிபுரம் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு காஞ்சி மக்கள் மன்றத்தி னர் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.  மாவட்ட கழக தலை வர் டி.ஏ.ஜி.அசோகன் காஞ்சி மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் ஜெஸ்சி, மகேஷ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.  பிறகு செங்கொடி ஏந்தி இருசக்கர வாகனங்களில் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காஞ்சி நகர வீதிகளில் எழுச்சிமிகு முழக்கங்களுடன் தலைவர் அவர்களை கூட்ட மேடை வரை ஊர்வலமாக அழைத்து சென்ற காட்சி காஞ்சிபுரத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் (28.01.2020)

ஒன்பதாவது நாள் இரண்டாவது கூட்டமாக  காஞ்சிபுரம், காந்திசாலை, பெரியார் நினைவுத்தூண் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 8.45 மணிக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள்.  மாவட்டச் செயலாளர் பூ.சுந்தரம் வரவேற்றார்.  மாவட்டத்தலைவர் டி.ஏ.ஜி அசோ கன் தலைமையேற்றார். இ.இரவீந்திரன், க.வேலாயுதம், பொன்.இராஜேந்திரன், க.தனசேகரன், செ.ரா.முகிலன் உள் ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9 மணி முதல் 10 மணி வரை 60 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் எழுச்சி முழக்கமிட்டார்.

தமிழர் தலைவர் எழுப்பிய ஒலிமுழக்கங்கள்

காஞ்சிபுரம் கூட்டத்தில் உரையை நிறைவு செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திடீர் என்று ஒழிப்போம் ஒழிப் போம் நீட்டை ஒழிப்போம்,  விரட்டுவோம் விரட்டுவோம் புதியக் கல்விக்கொள்கையை விரட்டுவோம்,  போராடுவோம் போராடுவோம் நீட்டை விரட்டும்வரை போராடுவோம் என எழுச்சி முழக்கமிட்டார். கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று எழுச்சி முழக்க மிட்டது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.  காஞ்சிபுரம் நகரத் தலைவர் கி.இளையவேல் நன்றி கூறினார்.  கூட்டம் முடித்து காஞ்சிபுரம் பயணியர் மாளிகையில் ஆசிரியர் அவர்களும் பயணக் குழுவினரும் இரவு உணவு அருந்தி முடித்த நிலையில் சோகமான செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வந்தது.  திருச்சி தங்காத்தாள் வாழ்விணையர் சின்னப்பன் மறைவு செய்தி.

பெரியார் மாளிகை தங்காத்தாளின் இணையர் சின்னப்பன் மறைவு திருச்சி விரைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்

திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப் பாளர் பெரியார் மாளிகை தங்காத்தாள் அவர்களின் வாழ் விணையர் திருச்சி பதிப்பு விடுதலை பொறுப்பாளர் சின்னப் பன் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி காஞ்சிபுரம் கூட்டம் முடித்து பயணியர் மாளிகை வருகைதந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 10.30 மணிக்கு கிடைத்தது.  உடனடியாக தோழர்களை அழைத்து ஆலோசனை செய்து இரவு 11 மணிக்கு சாலை வழியாக வாகனத்தில் திருச்சி நோக்கி தோழர்களுடன் புறப்பட்டார் ஆசிரியர் அவர்கள்.  29.01.2020 அதிகாலை 4.15 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்த ஆசிரியர் அவர்கள் மறைந்த சின்னப்பன் உடலுக்கு தோழர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து தங்காத்தாள், அறிவுமணி உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து சில மணித்துளிகள் கழித்து பெரியார் மாளிகையில் தங்கியிருந்தார்.

ஓடும் வாகனத்திலேயே இரங்கல் அறிக்கை எழுதிய ஆசிரியர்

வாகனத்தில் திருச்சி நோக்கி தோழர்களுடன் உரையா டியபடி பயணமான ஆசிரியர் அவர்கள் பேனாவையும், பேடையும் எடுத்தார். மளமளவென சின்னப்பன் அவர்க ளுக்கு இரங்கல் அறிக்கையை 15 நிமிடத்தில் எழுதி வண்டி யில் பயணம் செய்த ச.பிரின்சு என்னாரசு பெரியார் அவர் களிடம் இரவு 11.45 மணியளவில் கொடுத்தார்கள். அவர் உட னடியாக தனது செல்பேசியிலேயே டைப் செய்து ஆசிரியர் அவர்களிடம் படித்துக்காட்டி திருத்தம் பெற்று சென்னை விடுதலை அலுவலகத்துக்கு அனுப்பினார். இந்நிகழ்வு உடன் வருகை தந்தோரை வியக்க வைத்தது.

காலை 9.30 மணிக்கு இரங்கல் கூட்டம்

சென்னையிலிருந்து மோகனா அம்மையாரும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் குடும்பத்தினர், கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவரது வாழ்விணையர் ஆகியோர் 29.01.2020 அதிகாலை திருச்சி வந்து சேர்ந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அனைவரும் காலை 9.30 மணியளவில் மறைந்த சின்னப்பன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பிறகு நடந்த இரங்கல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் அவர்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் இரங்கலுரையாற்றினர். பிறகு அனைவரிடமும் விடைபெற்று காலை 10.30 மணிக்கு மீண்டும் காஞ்சிபுரம் நோக்கி சாலை வழியாக புறப்பட்டார் ஆசிரியர்.

திண்டிவனத்தில் மதிய உணவு

29.01.2020 திருச்சியிலிருந்து சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி வருகை தந்த தமிழர் தலைவர் மற்றும் உடன் வருகை தந்தோருக்கு நண்பகல் 1.15 மணிக்கு திண்டிவனம் க.மு.தாஸ் அவர்கள் ஏற்பாட்டில் திண்டிவனம் ஆரியாஸ் உணவு விடுதியில் மதிய உணவு அளிக்கப்பட்டது. மதிய உணவுக்கு பின் அவர்களிடமிருந்து விடைபெற்று மதியம் 2 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார். ஆசிரியர் அவர்கள் மாலை 3.30 மணியளவில் காஞ்சிபுரம் பயணியர் மாளிகையை வந்தடைந்தார். ஆசிரியரை காஞ்சிபுரம் மாவட்ட கழக தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் வரவேற்று அனைவருக்கும் தேனீர் வழங்கினார்.

அரக்கோணம் பொதுக்கூட்டம் (29.01.2020)

29.01.2020 அன்று மாலை 6.10 மணிக்கு காஞ்சிபுரம் பயணி யர் மாளிகையிலிருந்து தனது 10  ஆவது நாள் பயணத்தை தொடங்கினார் ஆசிரியர். அரக்கோணம்  எஸ்.ஆர்.கேட் அருகில் அமைக்கப்பட்டிருந்த கூட்ட மேடைக்கு மாலை 6.55 க்கு வருகை தந்தார்கள். மாவட்ட அமைப்பாளர் கொ.ஜீவன்தாசு வரவேற்றார், மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் தலைமையேற்றார், க.தீனதயாளன், பொன்.வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர். இரவு 7 மணி முதல் 7.51 வரை 51 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள், பொது மக்கள் பெருந்திரளாக கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர், நகர செயலாளர் பெரியார் நேசன் நன்றி கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

அரக்கோணம் கூட்டம் முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடை எதிரே இருந்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் குறித்தும் பேட்டியளித்தார். இரவு 7.55 மணிக்கு திருத்தணி நோக்கி பயணமானார் அசிரியர்.

அரக்கோணத்தில் வரவேற்பு

அரக்கோணம் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் எழுச்சி முழக்கமிட்டு அரக்கோணம் எல்லையில் வரவேற்றனர்.

திருத்தணி பொதுக்கூட்டம் (29.01.2020)

திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 8.35 மணிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். மாவட்டச் செய லாளர் அறிவுச்செல்வன் வரவேற்றார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மணி வரவேற்றார், மோகனவேல், க.எழில், இரா.ஸ்டாலின், சி.வீரமணி ஆகியோர் முன்னிலையேற்றனர். இரவு 8.55 மணி முதல் 9.35 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார், பொது மக்கள் பெருந்திரளாக கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர், நகர செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சி தொடக்கத்தில் திருத்தணி பன்னீர் செல்வத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் இரவு உணவு

திருத்தணிக் கூட்டம் முடித்து ஆசிரியர் அவர்களும் பயணக்குழுவினரும் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் இரவு உணவு அருந்தி அவர்களிடமிருந்து 10.30 மணியளவில் விடைபெற்று நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை அடையாறு இல்லத்திற்கு ஆசிரியர் அவர்களை வழியனுப்பிவிட்டு இரவு 1.15 மணியளவில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தனர் பயணக்குழுவினர்.

சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் அவர்கள் பயணக் குழுவினரை சந்திப்பும் - பாராட்டும்

நிறைவு நாள் 30.01.2020 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார் ஆசிரியர். 10 நாட்களாக தேங்கிக் கிடந்த கடிதங்களை படித்தல் மற்றும் அலுவலகப் பணிகளை முடித்து பகல் 1.00 மணியளவில் பெரியார் அருங்காட்சியகத்தில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தில் ஏற்பட்ட நிறை குறைகளை கேட்டு, பேச்சாளர்கள், ஓட்டுநர்கள் பொறுப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவரின் உழைப்பையும் பாராட்டியதோடு ஒரு சிறு பிரச்சினைகள் கூட ஏற்படாமல் வெற்றிகரமாக பயணம் முடிந்ததை மகிழ்ச்சியோடு பரிமாறி எதிர்காலத்தில் சரி செய்யப்பட வேண்டிய சில யோசனைகளையும் தெரிவித் தார், அனைவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். பிறகு பயணக்குழுவினர் அனைவரும் ஆசிரி யர் அவர்களோடு குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். தாம்புரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் அவர்கள் ஏற்பாட்டில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய் யப்பட்டு பரிமாறப்பட்டது.  தமிழர் தலைவர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் பயணக்குழுவினருடன் மதிய உணவு அருந்தினர்.  மதியம் 2.30 மணியளவில் அனைவரிடமும் விடைபெற்று புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நிறைவுவிழா பொதுக்கூட்டம் (30.01.2020)

30.01.2020 மாலை 6.10 மணிக்கு சென்னை அடையாறு இல்லத்திலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை எம்.ஜி.ஆர் நகர். கலைஞர் கருணாநிதி சாலையில் அமைக்கப்பட்டிருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும்பயண நிறைவு விழா பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 7 மணிக்கு வருகை தந்தார். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்றார்.  தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையேற்றார்.  தி.இரா.ரத்தினசாமி, செ.கோபால், பழநி.பன்னீர்செல்வம், ப.முத்தை யன், மதியழகன், ராகவன், தாமோதரன், அய்யாத்துரை, சேகர், மகேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.

நீட் விளக்க புத்தகத்தை பொதுமக்களிடம் விற்பனையில் இறங்கிய தமிழர் தலைவர்

பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒலிபெருக்கியை பிடித்து நீட் தொடர் பான புத்தகங்களை பொதுமக்களிடம் பெருமளவில் கொண்டு செல்லும் நோக்கோடு மேடையில் இருக்கின்ற நமது தலைமைக் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் மேடையை விட்டு கீழே இறங்கி பொதுமக்களிடையே கொண்டு வருவார்கள்.  அனைவரும் வாங்கி மக்களிடையே பரப்ப வேண்டும் என அறிவித்து நானே தொடங்கி வைக்கிறேன் என மேடையிலிருந்து கீழே இறங்கி ரூ.1800 க்கு பொது மக்களிடம் ஆசிரியர் அவர்களே புத்தகங்களை விற்பனை செய்தார்.  மேடையிலிருந்த தலைமைக் கழகப் பொறுப்பா ளர்கள் அனைவரும் பொதுமக்களிடம் சென்று புத்தகங்களை விற்பனை செய்தனர்.  தலைவரே களத்தில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டுக் புத்தகங்களை வாங்கினர்.

அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்று உரை

11 நாட்கள் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் அனைத்து கட்சி தலைவர்கள் உரையாற்றினார்கள்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ம.தி.மு.க கொள்கை விளக்க அணி செயலாளர் க.அழகுசுந்தரம், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.எச்.ஜவஹருல்லா, சி.பி. அய்.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, தி.மு.க செய்தி தொடர்பு செயலாளர், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட் டோர் சிறப்புரையாற்றினார்கள்.  87 வயதிலும் மிகவும் உற் சாகமாக கடந்த 11 நாட்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் அவர்களின் நோக்கம் நிறைவேற எங்களின் ஆதரவு என்றும் உண்டு என வாழ்த்து தெரிவித்து உரை யாற்றினார்.  இரவு 9.40 முதல் 10 மணிவரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவு விழா பேருரையாற்றினார். கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், வருகைதந்து கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய தோழமைக்கட்சி தலை வருக்கும் நன்றி தெரிவித்து, நீட்தேர்வின் அவலங்களால் நமது சமுதாய மாணவர்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுவதை எடுத்துரைத்து உரையாற்றினார். இறுதியாக மாவட்டச் செய லாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கிராமப்பிரச்சாரகுழு அமைப் பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன், கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஆகியோர் தொடக்கவுரையாற் றினார்கள். கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், கழக பொருளாளர் வீ.குமரேசன், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், அமைப்பு செயலாளர்கள் பழனி.பன்னீர்செல்வம், வே.செல்வம், ஊமை.ஜெயராமன், துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார், மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன், மகளிர் பாசறை செயலாளர் மணியம்மை, வழக்கு ரைஞர் வீரமர்த்தினி, பவானி உள்ளிட்ட கழகப் பொறுப்பா ளர்களும், பொதுமக்களும் கழகத் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர், நிறைவு விழா பொதுக்கூட்டத்தை மாநாடு போல் ஏற்பாடுகளை செய்த சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

சென்னை அடையாறு இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பிரியாவிடை பெற்ற பயணக்குழு தோழர்கள்

சென்னை நிறைவு விழா பொதுக்கூட்டம் முடிந்து தமிழர் தலைவர் அவர்களோடு சென்னை அடையாறு இல்லம் வருகை தந்த பயணக்குழுவினர் அனைவரும் இரவு உணவு முடித்து அவரவர் ஊருக்கு புறப்பட தயாராக இருந்த கழகத் தோழர்களை இரவு உணவு முடித்து ஓய்வுக்கு செல்லாமல் கீழே இறங்கி வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவரும் பத்திரமாக பாதுகாப்பாக ஊர் போய் சேர வேண்டும் என தெரிவித்து நுழைவு வாயில் வரை வந்து அனைவரையும் இரவு 11.30 மணிக்கு வழியனுப்பிவைத்துவிட்டு பிறகு ஓய்வுக்கு சென்றார். பயணக்குழுவில் பங்கேற்ற தோழர்கள் அனைவரும் தங்கள் தலைவரிடம் பிரியாவிடை பெற்று தங்கள் ஊருக்கு பயணமானார்கள். யாருக்கும் கிடைக் காத நமது தலைவர் ஆசிரியர் தலைமையில் பணி செய்ய கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதி மகிழ்ச்சியுடன் பயணித்தனர். நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணத்தின் அனைத்து கூட்டங்களிலும் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், கிராம பிரச்;சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்கள்.

சிறப்பான ஏற்பாடுகளை செய்து உபசரித்த மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்

நீட் தேர்வால் ஏற்படும் பேராபத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திட தமிழர் தலைவர் அவர்கள் 11 நாட்கள் மேற்கொண்ட பரப்புரை பெரும்பயணம் குறுகிய கால இடைவெளியில் அறிவிக்கப்பட்டாலும் இடையில் பொங்கல்விழா குறுக்கிட் டாலும், தலைவர் இடுகின்ற கட்டளைகளை இராணுவக் கட்ட ளையைவிட மேலாக கருதி உழைத்திடும் நமது மாவட்டக் கழக, ஒன்றியக் கழக, நகரக் கழக, மாநிலக்கழக, மண்டலக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் புயல் வேகத்தில் பணிகளை தொடங்கி வசூல்பணி, சுவர் விளம்பரம், சுவ ரொட்டிகள் விளம்பரம் தோழமைக் கட்சிகள் ஒருங்கிணைப்பு, மேடை, ஒலி,ஒளி அமைப்பு உட்பட அனைத்து ஏற்பாடுக ளையும் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தனர்.  பயணக் குழுவில் பங்கேற்று வந்த தோழர்களுக்கு தங்குமிட வசதி, உணவு ஏற்பாடு உபசரிப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று உபசரிப்பு உட்பட அனைத்தையும் மகிழ்ச்சியுடன் செய்து முடித்த சுயநலம் கருதாத நமது கழக தோழர்களின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது.  நீட்டை விரட்டும் வரை நமது தலைவர் இடும் எந்த கட்டளையையும் ஏற்று போராட்டத்தில் சிறை செல்ல தயாராவோம் தயாரா வோம்.  நன்றி.

(நிறைவு)

- விடுதலை நாளேடு, 9,11.2.20

சத்துணவிலும் மதநஞ்சைக் கலக்காதே!

சத்துணவிலும் மதவாத நஞ்சா? மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (சென்னை, 25.2.2020)

அதிமுக அரசின் 'அம்மா' உணவகம் மூடும் நிலையில்  இஸ்கான் மத நஞ்சு உணவு திட்டத்திற்கு உதவியா?

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத் துணைத் தலைவர் தமிழக அரசுக்கு கேள்வி!

சென்னை,பிப்.25, தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் என்கிற பெயரில் தனியாருக்கு தாரை வார்ப்பதுடன், இந்துத்துவா மதவாத நஞ்சினையும் புகுத்துவதைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  இன்று (25.2.2020) காலை நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் வி.தங்கமணி வரவேற்றார். வெங்கடேசன், பகுத்தறிவாளன், பரிதின்,  நதியா, தமிழ்ச்செல்வன், விஸ்வாஸ் பவித்ரா, அறிவழகன், இனநலம், பிரபாகரன், தனுஷ், அறிவரசி, அமரன், புத்தன், கவிஞர் ம.ஜ.சந்தீப், வி.சி.தமிழ்நேசன் வீ.தமிழ்ச்செல்வன் வெ.பெரியார் செல்வன், இரா.ராம்குமார், ப.பெரியார் செல்வம், ராஜசேகர், சசிகுமார், அறிவரசன், அறிவழகன், தொண்டறம், அறிவுமதி, விஜய், பிரவீன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்  இரா.செந்தூர்பாண்டி, திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் த.யாழ் திலீபன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் எ.சிற்றரசு மற்றும் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சென்னை மண்டலம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள், மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

'சத்துணவிலும் மதவாத நஞ்சா?' எனும் தலைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்து உரையாற்றினார்.

கண்டன  ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் கழக  அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார்.

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் கண்டன உரையைத் தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, அதற்குப் பின்னாலே பச்சைத்தமிழர் காமராசர்,  தொடர்ந்து திராவிட இயக்கங்களால் தொடரப்பட்டு வரும் திட்டம் மதிய உணவுத் திட்டம்.

நீதிக்கட்சி  காலத்தில் சென்னையில் மதிய உணவுத்திட்டம், காமராசர் ஆட்சிக்காலத்திலே மதிய உணவுத்திட்டம், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிகளில் மதிய உணவு பிள்ளைகளுக்கு கொடுத்து, இலவச சீருடை கொடுத்து, இலவச படிப்பு, இலவச புத்தகம், இலவச சைக்கிள் திட்டம், இன்றைக்கு ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்களிடையே இருந்து வரும் பிள்ளைகள் படிக்கக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை ஏற்பட்டது.

இப்போது காலை உணவு கொடுப்பதற்காக 'இஸ்கான்' என்று ஒரு நிறுவனம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  அமைப்பு, பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுப்பதாக சொல்கிறார்கள்.

காலை உணவுதானே கொடுக்கிறார்கள் ஏன் எதிர்க் கிறீர்கள்? என்ற கேள்வி எழலாம்.

காலை உணவு தாராளமாக கொடுக்கட்டும். ஆனால், அந்த நிறுவனங்களின் இந்துத்துவ கொள்கை - காலை உணவுத்திட்டத்திலே இருக்கிறது.

பூண்டு, வெங்காயம் உணவில் இடம் பெறாது என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான பிள்ளைகளின் உணவில் இவ்விரண்டும் உண்டு தானே.

உணவிலே இந்துத்துவா கண்ணோட்டத்தோடு சொல்வது என்பது உள்ளபடியே இந்த உணவுத்திட்டத்தாலே அவர் களுடைய மதவாதத்தை திணிக்கின்ற போக்காகவே கருத வேண்டும்.

வெங்காயம் விலை அதிகமானபோது, நாடாளுமன்றத் திலேயே மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதிநிலை அறிக்கையின்போது, நான் வெங்காயம் சாப்பிடும் பரம் பரையில் வரவில்லை என்றார்.

அவர்களின் மத எண்ணத்தை, பார்ப்பனிய சிந்தனையை வெகுமக்கள் மத்தியிலே திணிக்கக்கூடியதாக இருக்கிறது. விஞ்ஞான முலாம் பூசுகிறார்கள். என்ன ஆதாரம் உள்ளது?

காலை உணவு என்று கூறி அதில் தங்கள் இந்துத்துவக் கலாச்சாரத்தைத் திணிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு நிலம், மின்சாரம், குடிநீர் இனாமாக கொடுக்கிறது.

காலை உணவு என்கிற பெயரில் கார்ப்பரேட் மயமாகிறது என்றுதான் சொல்ல வேண்டும். உலகம் முழுவதும் நிதி திரட்டுகிறார்கள் -  ஆதாயம் இல்லாமல் அவர்கள் இதில் இறங்கவில்லை.

மத்தியில் பாஜக அரசு வந்த உடனே மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்றார்கள். அது பிரச்சினை ஆனது. அவர்களின் இந்துத்துவாத் திட்டத்தையொல்லாம் மக்கள் மத்தியில் திணிக்கிறார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் காலை உணவுத்திட்டத்தில் வெங்காயம், பூண்டு இல்லை என்கிறார்கள். அதனாலேயே நாங்கள் எதிர்க்கிறோம்.

அம்மா உணவுத் திட்டம் கொண்டு வந்தது அதிமுக அரசு. இப்பொழுது அத்திட்டம்  நசிந்து விட்டது. பெயரளவுக்குத் தான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலவசம் என்ற பெயரால் மத முக்காடு போட்டு வரும் கலாச்சாரத் திணிப்பு உணவுத் திட்டத்துக்குப் பச்சை கொடிக் காட்டுகிறது அதிமுக அரசு.

கருநாடக மாநிலத்தில்கூட எதிர்ப்பு வெடித்துள்ளது.

இந்த போராட்டம் ஒரு தொடக்கம் என்றார் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ். ஆம் இது வெறும் தொடக்கம்தான். தொடர்ந்து போராடுவோம். இந்துத்துவா திணிப்பு திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராடுவோம் என்று கண்டன உரையில் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்ட முடிவில் சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வ.வேலவன் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 25 2 20

திராவிட மாணவர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

சென்னை, பிப். 26- சத்துணவிலும் மதவாத நஞ்சா, எனும் தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 25.2.2020 அன்று காலை நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன் தொடக்க உரையாற்றினார். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்கள்.

கண்டன முழக்கமிட்டு ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள்

செந்தூரப்பாண்டியன், யாழ்திலீபன், கா.அமுதரசன், தஞ்சை மான வீரன், துர்காதேவி, விடுதலைஅரசி, தருமபுரி பூபதிராஜா, ஒசூர் க.கா.வெற்றி, உரத்தநாடு முருகேசன், மண்டலக்கோட்டை அரவிந்த், கலையரசன், ஒக்கநாடு மேலையூர் சாமிநாதன், திருவண்ணாமலை ராம்குமார், வடசென்னை வேல வன், எஸ்.தமிழ்செல்வன், செ.பிர வீன், திருவொற்றியூர் இரா.சதீஸ், இ.பவித்ரா, வி.யாழ்ஒளி, விருத்தாச் சலம் அறிவுசெல்வம், தென்சென்னை கு.பா.கவிமலர், தாம்பரம் பரசுரா மன், ஓவியர் சிகரம், யுவராஜ், சட்டக் கல்லூரி மாணவர்கள் க.கோபி, சசி குமார், கவி, தினேஷ், திருச்சி கார்த் திக், பாலாஜி உள்பட மாணவர்கள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திராவிடர் கழக பொறுப்பாளர்கள்

கழக துணைப்பொதுச்செயலா ளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணி செயலாளர் தக டூர் தமிழ்செல்வி, அமைப்புச் செய லாளர் வி.பன்னீர்செல்வம், திரா விடர் வரலாற்று ஆய்வு மய்ய செய லாளர் பேராசிரியர் ந.க.மங்களமுரு கேசன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், ஒசூர் கண்மணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டச் செயலா ளர் தி.செ.கணேசன், கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன், அமைப் பாளர் உடுமலை வடிவேல், பெரி யார் சமூகக் காப்பணி மாநில பொறுப்பாளர் சோ.சுரேஷ், தாம்ப ரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், போரூர் பரசுராமன், இராமேசுவரம் கே.எம்.சிகாமணி, ஊரப்பாக்கம் இரா மண்ணா, சி.சீனிவாசன், பொ.சுமதி, பொய்யாமொழி, கூடுவாஞ்சேரி மா.இராசு, நூர்ஜகான் ராசு, இரா மாபுரம் ஜெனார்த்தனம், ஓவியா அன்புமொழி, மா.குணசேகரன், சோழிங்கநல்லூர் பிசிஜெயராமன், கு.சோமசுந்தரம், க.தமிழினியன், கணேசமூர்த்தி, கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மு.சேகர், மயிலை பாலு, வி.விக்கி, பிரகாஷ், க.வெற்றி வீரன், ஓவியா, க.தமிழ்செல்வன், பரசுராமன்,  முரசு, பாலு, எண்ணூர் விஜயா மோகன், மணியம்மை, கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, தமிழரசி, தென் னரசி, தமிழ்சாக்ரட்டீஸ், பெரியார் மாணாக்கன், க.கலைமணி, வை.கலையரசன், தமிழ்செல்வன், பகுத் தறிவு, சந்திரபாபு, வழக்குரைஞர் பன்னீர்செல்வம், கொரட்டூர் இரா.கோபால், வெ.கார்வேந்தன், முத்தழகு, திருமலை,  திருவண்ணா மலை கவுதமன், கும்மிடிப்பூண்டி செ.உதயக்குமார், அருள், சுகன்ராஜ், இளையராணி, குணசேகரன், பாலு, கஜேந்திரன்,  சோழவரம் சக்ரவர்த்தி, திமுக மாணவரணி விக்னேஷ் உதயன், பாலச்சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண் டனர்.

- விடுதலை நாளேடு 26.2.20

சனி, 22 பிப்ரவரி, 2020

சென்னை பரப்புரை நிறைவுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் போர் முழக்கம்!

‘நீட்'டை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம்

எங்களோடு சிறைக்கு வாருங்கள்; வர முடியாதவர்கள்

எங்களை வழியனுப்பிட வாருங்கள்!

சென்னை, பிப்.5  ‘நீட்'டை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம்; எங்களோடு சிறைக்கு வாருங்கள்; வர முடியாதவர்கள் எங்களை வழியனுப்பிட வாருங்கள் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 30.1.2020 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற ‘நீட்' எதிர்ப்புப் பிரச்சாரப் பெரும் பய ணத்தின் நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘நீட்' தேர்வு என்ற ஒரு கொடுமை!

புதிய கல்வி கொள்கை என்ற நவீன குலதர்மக் கல்வித் திட்டம்; அதைப் போலவே, ஆரம்பப் பள்ளியிலிருந்து படிக்கக் கூடியவர்கள், குலக்கல்வி என்பதை எப்படி 66 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ கோபாலாச்சாரியாருடைய காலத்தில் கொண்டு வந்தார்களோ, அதையே ‘‘பழைய கள்- புது மொந்தை'' என்ற அளவில், புதிதாகக் கொண்டு வரக்கூடிய அளவிற்கு, ‘நீட்' தேர்வு என்ற ஒரு கொடுமையால், நம்முடைய பிள்ளைகள் இனிமேல் மருத்துவர்களாக ஆகக் கூடிய கனவேகூட காண முடியாது.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் அறவே மருத்துவர்களாக ஆக முடியாது; கிராமப்புற பிள் ளைகள் மருத்துவர்களாக ஆக முடியாது; சிறுபான்மை சமுதாய மக்கள் மருத்துவர்களாக ஆக முடியாது என்று சொல்லக்கூடிய அந்தக் கொடுமையான ஒரு கல்வித் திட்டம் என்ற வகையில், மீண்டும் மனு தர்மத்தை இங்கே கொண்டு வருகிறார்கள். இதுதான் அதனுடைய அடிப்படையாகும்.

இதோ என்னுடைய கைகளில் இருப்பதுதான் அசல் மனுதர்மம் நூல். இந்த மனுதர்மத்தைத்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

உங்களுக்காகத்தான், உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான்!

இங்கே வந்திருக்கின்ற தலைவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு ஆதரவு கொடுத்து, என்னை உற்சாகப்படுத்த வந்திருக்கிறார்கள் என்று மட்டும் நீங்கள் நினைக்காதீர்கள். உங்களுக்காகத்தான், உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தான் நாங்கள் எல்லாம் இங்கே வந்திருக்கின்றோம்.

ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி என்று ஒரே, ஒரே என்று சொல்லி, ஒரு ஆரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக் கலாம்; மனுதர்மத்தை மீண்டும் கொண்டு வரலாம் என்று நினைப்பதை முறியடிக்கக் கூடிய ஒரே அணி நாட்டில் உருவாகிறது. அது இமயம்முதல் குமரிவரை உருவாகிறது. வழக்கம்போல், தமிழ்நாடுதான் அதற்கு வழிகாட்டுகிறது என்பதற்காக இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

என்னுடைய வயதைப்பற்றியெல்லாம் இங்கே குறிப்பிட்டார்கள், வயதைப் பொருட்படுத்தவில் லையே என்று சொன்னார்கள். அதற்கு வேறு ஒரு காரணமோ, ரகசியமோ இல்லை - சுருக்கமாக சொல்கிறேன்.

95 ஆம் ஆண்டிலும் மூத்திரப் பையை சுமந்துகொண்டு போராட்டக் களத்திலே நின்றவர்

நம்முடைய தலைவர் 95  ஆம் ஆண்டிலும் மூத்திரப் பையை சுமந்துகொண்டு போராட்டக் களத்திலே நின்றவர். அதைப் பார்க்கும்பொழுது, 87 வயது என்பது இளமை. இது முதுமையே அல்ல.

‘‘வயது ஒரு பொருட்டல்ல என்று அவர் இருக் கிறார்'' என்று சொன்னார்கள். ஏனென்றால், நாம் எதிர்க்கவேண்டியவர்கள் - கொள்கை ஒரு பொருட் டல்ல என்ற ஒரு கூட்டம் இன்றைக்கு சேர்ந்து கொண் டிருக்கிறது. அதனை எதிர்க்கின்ற இந்த மாபெரும் ஒரு அணி- நிறைவு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய தென்சென்னை மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் வில்வநாதன் அவர்களே, வரவேற்புரையாற்றிய வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பெருமதிப் பிற்குரிய சகோதரர் கே.எஸ்.அழகிரி அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் முத்தரசன் அவர்களே,

அதுபோல, எங்கள் மாவட்டம், அவர் சொன்னார், அந்தப் பற்று போகாது என்று.  ஒரே அணிதான், ஒரே மண் என்று சொன்னார். ஒரே கொள்கையும்கூட -வண்ணங்கள் வேறாக இருந்தாலும், எங்கள் எண் ணங்கள் என்றைக்கும் ஒன்று என்று சொல்லக்கூடிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கொள்கை  விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம் அவர்களே,

கருமத்திற்குரியவர்கள்

கடைசி வரைக்கும் இருப்பார்கள்

எனது அருமை சகோதரர், சில பேர் இங்கே நினைத்துக் கொண்டிருந்தார்கள், அவர் வருவாரா? வரமாட்டாரா? என்று. வந்தாலும், வராவிட்டாலும், எங்களுடைய அங்கங்களில் அவர் ஒருவர். ஆகை யால், விழுப்புரத்திலிருந்து அவர் வந்து சேரவில்லை என்றாலும், சேர்ந்ததாகத்தான் கணக்கு வைப்போம். கருமத்திற்குரியவர்கள் கடைசி வரைக்கும் இருப்பார்கள்.

அந்த அடிப்படையில், அருமைச் சகோதரர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் சமூகநீதி போராளி பலராமன் அவர்களே,

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

காங்கிரஸ் பேரியக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தோழர் கோபண்ணா அவர்களே,

கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே, கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி அவர்களே, கழகத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் இன்பக்கனி அவர்களே, அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களே,

மற்றும் முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய தோழர் களே,

பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்கும் தொடர்புள்ள ஒரு குடும்பம்

தொடர்ந்து காங்கிரசில் இருக்கிறார் என்று சொல் வதைவிட, பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்கும் தொடர்புள்ள ஒரு குடும்பம், டாக்டர் சுப்பராயன் அவர்களுடைய காலத்திலிருந்து நான்காவது தலை முறையில் இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் அவர்கள்.

அவருடைய தாத்தாவினுடைய தேர்தல் பிரச் சாரத்திற்கு, தந்தை பெரியாரும், நானும் சென்றிருந் தோம். அப்படிப்பட்ட பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே,

நன்றியுரைக் கூறவிருக்கக்கூடிய தோழர் பார்த்த சாரதி அவர்களே, நண்பர்களே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளாதார சதவிகிதம் 4.5 சதவிகிதமாக கீழிறங்கி இருக்கிறது

உங்களுக்கு அதிகமாக சொல்லவேண்டிய அவசி யம் இல்லை. இப்பொழுது இருக்கிற போராட்டம், மத்திய அரசால் பல பிரச்சினைகள் உருவாகியிருக் கின்றன. சப்கா சாத், சப்கா விகாஸ்  எல்லாம் என்னா யிற்று என்று தெரியும். பொருளாதார சதவிகிதம் 4.5 சதவிகிதமாக கீழிறங்கி இருக்கிறது.

இதுவரையில் ஏழு துறைகளில், மூன்றரை கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். புதிதாக வேலை கேட்கவில்லை. ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். இன்றைய நிலை என்ன?

அவர்களுடைய தேர்தல் அறிக்கையில், ஒவ் வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று சொன்னாரே பிரதமர் மோடி - வங்கியே இப்பொழுது இல்லை.

காந்தியார் படத்தை ரூபாய் நோட்டிலிருந்து எடுக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய திட்டம்

இங்கே இருந்து சென்ற ஒரு பொருளாதார மேதை என்ன சொல்கிறார்  என்றால், இன்றைக்குக் காந்தியார் நினைவு நாள்; காந்தி படத்தை ரூபாய் நோட்டிலிருந்து எடுக்கவேண்டும் என்பது தான் அவர்களுடைய திட்டம். அதற்காக அவர் என்ன சொல்கிறார் என்றால்,

ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தைப் போட்டால், லட்சுமிகரமாக பொருளாதாரம் சரியாகிவிடும் என்கிறார்.

அட, அதிபிரகஸ்பதியே, லட்சுமி விலாஸ் வங்கியே, நலிந்து போன வங்கியாக இருக்கிறது. அந்த லட்சுமிவிலாஸ் வங்கியே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. அது நிலைக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், இவர்களுடைய திட்டம் ரூபாய் நோட்டிலி ருந்து காந்தி படத்தை எடுக்கவேண்டும் என்பதுதான்.

இதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது என்பதற் காகத்தான் நண்பர்களே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் எத்தனை தொழிற்சாலைகள் மூடப் பட்டு இருக்கின்றன. எதிர்காலம் இன்னும் எவ்வளவு கீழே போகும்? இவையெல்லாம் இருந்தாலும், அதையெல்லாம் ஒரு பக்கத்தில் நினைவூட்டுகிறோம்; ஆனால், எங்களை திசை திருப்ப முடியாது.

அதேநேரத்தில், ஒன்றை உங்களுக்குச் சொல்கி றோம். எல்லாவற்றிற்கும் அடிப்படை கல்வி. அந்தக் கல்வியில் தெளிவு இருந்தால் முன்னேற்றம் ஏற்படும்.  அதனால்தான் நம் மக்களை கல்வி கற்கக் கூடாது என்றார்கள்.

மனுதர்மத்தினுடைய அடிப்படை என்ன? ஆரம் பத்தில் மனுதர்மம் கிடையாது.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?''

‘நக்கீரன்'  வெளியீட்டில், மிகத் தெளிவாக அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்  - அவர்களுக்கு 100 வயது. அவர் ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலில் எழுதியிருக்கிறார்,

‘‘ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத் தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங் குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண் களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங் கேயே இருக்கலாம்' எனப்பட்டது.

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண் களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக் கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.''

அதற்கு முன், குறள் செழித்த நாடு - தொல்காப்பியம் வளர்ந்த நாடு - பல பெண்கள் புலவர்களாக  இருந்த கல்வி உயர்ந்த நிலையில் இருந்தது. கல்வி  கண் என்று கருதப்பட்டது.

அதனைக் குத்தினால் ஒழிய வேறு வழியில்லை என்பதற்காக, வந்தவர்கள் சூழ்ச்சியினாலே, திறத்தி னாலே மனுதர்மத்தை அமல்படுத்தினார்கள். இன் றைக்கும் போராட்டம், அண்ணல் அம்பேத்கர் எழு திய அரசமைப்புச் சட்டம் - அதைக்கூட முழுமையாக அவரை எழுதவிடவில்லை. ஆனால், என்ன செய்யவேண்டுமோ, அதை செய்துவிட்டார்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - சமூகநீதி, அடிப்படை உரிமை  இவை அத்தனையையும் உண் டாக்கினார்.

இப்பொழுது என்ன சொல்கிறார்கள் என்றால், வரலாற்றையே தலைகீழாக செய்கிறார்கள்.

காந்திமீது அவனுக்குப் பற்று - அம்பேத்கர் என்னவோ ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்ததுபோன்று, அவரை இன்றைக்கு அணைத்துப் பார்க்கிறார்கள்.

திராவிடர் கழகம் என்பது

ஸ்கேன் சென்டர்

எதிர்த்து அழிக்க முடியாததை - அணைத்து அழிப் பதுதான் ஆரியத்தினுடைய  காலங்காலமாக செய்து வந்திருக்கின்ற வேலை - அந்த வேலை இங்கே நடக்காது. நாங்கள் எல்லாம் பெரியார் கண்ணாடி போட்டு பார்க்கிறவர்கள். அதுமட்டுமல்ல, திராவிடர் கழகம் என்பது ஸ்கேன் சென்டர்.

இது போட்டோ கிராபி அல்ல; ஓவியம் அல்ல; போட்டோ கிராபர் கொஞ்சம் டச் செய்வார்; ஓவியர் கொஞ்சம் மெருகேற்றுவார். ஆனால், ஸ்கேன் என்பது, உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகவே காட்டும்; ஓட்டை போட்ட இதயத்தை, ஓட்டையாகவே காட்டும். அப்பொழுதுதான் அதற்கேற்றவாறு சிகிச்சை செய்ய முடியும்.

நாங்கள் ஸ்கேன் செய்தவுடன், டாக்டர்களாகிய (மேடையில் அமர்ந்திருப்பவர்கள்) இவர்கள் எல்லாம் ஆரம்பித்துவிடுவார்கள்.

ஏனென்றால், மருத்துவத் துறையில் ஸ்கேன் செய்தவுடன், அடுத்ததாக மருத்துவர்களிடம் போக வேண்டும்; அந்த மருத்துவர்கள் வராமல் இருப்பதற் காகத்தான் நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில், கல்விக் கண்ணை குத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.

ஒரே ஒரு சிறிய உதாரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.

பேராசிரியர் க.ப.அறவாணன் எழுதிய புத்தகத்தில் உள்ள ஒரு தகவலை சொல்கிறேன்.

‘‘1901 இல், எடுக்கப்பட்ட முதல் சென்சசில், ஒரு சதவிகிதம்கூட தமிழர்கள் படித்தவர்கள் இல்லை'' என்று எழுதியிருக்கிறார்.

காரணம் என்ன?

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கீழ்ஜாதிக் காரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வி அறிவைக் கொடுக்கக்கூடாது என்பதுதான் மனுதர்மம்.

அந்த மனுதர்மத்தை எதிர்த்துப் போராட்டம் - அதுதான் திராவிட இயக்கம். இந்த இயக்கம் போராடி தான், சரியாக  ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு திரா விட இயக்கம் வந்த காரணத்தினால்தான் நண்பர்களே உங்களுக்குச் சொல்கிறோம், படியுங்கள் என்று.

கல்வி நமக்கு எட்டாக் கனியாக இருந்தது

மனுதர்மத்தாலே மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள், கல்வி நமக்கு மறுக்கப்பட்டது.  கல்வி நமக்கு எட்டாக் கனியாக இருந்தது.

படித்த சூத்திரன்

குளித்த குதிரை

மதம் பிடித்த யானை

இவை யாவும் ஆபத்தானவை. இவைகளை விட்டு வைக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய மனுதர்மம்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு சரசுவதி பாட் டிக்கு கையெழுத்துப் போடத் தெரியாது. ஆனால், பேத்தி சரசுவதி இன்றைக்கு டாக்டர் சரசுவதி; பொறி யாளர் சரசுவதி, வழக்குரைஞர் சரசுவதி, நீதிபதி சரசுவதி.

இவையெல்லாம் சரசுவதி பூஜை கொண்டாடி யதினால் வந்ததா? சரசுவதி அன்றைக்கும் இருந்தாள்; இன்றைக்கும் இருக்கிறார்.

பெரியார்! பெரியார்!! பெரியார்!!!

ஆனால், அதற்குக் காரணம், ‘‘பெரியார்! பெரியார்!! பெரியார்!!!''

திராவிடர் இயக்கம்! திராவிடர் இயக்கம்!! திராவிடர் இயக்கம்!!!

பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர்! காமாராசர்!! காமராசர்!!!

அதைத் தொடர்ந்து அண்ணா, கலைஞர், திராவிட இயக்கம்.

நம் மக்கள் இப்பொழுது ஏராளமாகப் படித்து விட்டார்கள். மனுதர்மத்தைத் தாண்டிவிட்டார்கள். அதைத் தடுக்கவேண்டும் - அதற்கு என்ன வழி? என்றுதான், மீண்டும் குழிதோண்டுகிறார்கள்.

நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கையில்

சமூகநீதிக்கே இடமில்லை

அதனால்தான், நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை; இதில் சமூகநீதிக்கே இடமில்லை. யாராவது வந்து வாதிடச் சொல்லுங்கள், பார்க்கலாம்.

இட ஒதுக்கீடு நம்முடைய அடிப்படை உரிமை. அதைப் பறிக்க எவருக்கும் உரிமையில்லை.

மோடி அவர்கள் பதவியேற்கும்பொழுது ஒரு காட்சியை நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அந்த நிகழ்ச்சியின்போது, எல்லா அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டார்கள். மோடி மட்டும் எழுந்து, கொஞ்ச தூரம் நடந்து வந்தார்.

நான்கூட நினைத்தேன், மோகன் பாகவத்தை வணங்கப் போகிறார் போல இருக்கிறது; ஏனென்றால், அவர்தானே எஜமானர். அப்படியில்லையென்றால், ஏதோ ஒரு சாமியாரை வணங்கப் போகிறாரோ என்று பார்த்தால்,

ஒரு கல்வெட்டு போன்று அங்கே  ஒன்று இருந்தது. அது என்னவென்று தொலைக்காட்சி ஊடகத்தினர் அதனை தெளிவாகக் காட்டினர்.

எழ முடியாத அளவிற்கு

மக்கள் அவரை ஆக்குவார்கள்

அரசமைப்புச் சட்ட கல்வெட்டுதான் அது. அங்கே சென்ற மோடி அவர்கள், விழுந்து கும்பிட்டார். மோடி விழும் வித்தை இருக்கிறதே, அது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படியே தரையோடு விழுவார். எதிர்காலத்திலும் அதுதான், அதிலொன்றும் சந்தேக மேயில்லை. இப்பொழுது விழுந்து எழுந்தார், ஆனால், அடுத்தபடியாக விழுந்தார் என்றால், எழ முடியாத அளவிற்கு மக்கள் அவரை ஆக்குவார்கள். அதற்கு வேறு யாரும் காரணமல்ல, அவர்களேதான்.

அரசமைப்புச் சட்டத்தை அவ்வளவு குனிந்து வணங்குகிறாராம். என்னுடைய அரசு, என்னுடைய அமைச்சரவை, அரசமைப்புச் சட்டம்;  அந்த அரச மைப்புச் சட்டப்படிதான், இன்றைக்கு இஸ்லாமியர் களைப் பழிவாங்கக் கூடிய திட்டமா? அந்த அரச மைப்புச் சட்டப்படிதான், குலக் கல்வித் திட்டம் - சமூகநீதிக்கு அப்பாற்பட்ட மத்திய கல்விக் கொள்கைத் திட்டமா?

அந்த அரசமைப்புச் சட்டத்தில் கூறியிருக்கின்ற, சமூகநீதி, வாய்ப்புகள், அனைவருக்கும் கல்வி என்ற அந்த அடிப்படை உரிமையைப் பறிக்கிறீர்களே, அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசம்!

5 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப் பிலே பொதுத் தேர்வு - இதனை மத்திய அரசாங்கமே இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், இங்கே இருக்கிற ஆளுங்கட்சியினர், ‘‘ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசம்!''

எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடுகிறார்கள். நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, ஆனால், நீட் தேர்விற்கு பயிற்சி கொடுப்போம் என்கிறார்கள்.

எனவே, நண்பர்களே, இந்த மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது இருக்கிறதே, மீண்டும் மனுதர்மக் கொள்கைதான் அது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், 66 ஆண்டு களுக்கு முன்பு, இராஜகோபாலாச்சாரியார் தமிழ்நாட் டின் பிரதமராக வந்த நேரத்தில், பிள்ளைகள் அரை நேரம் படிக்கவேண்டும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் - குலதர்மக் கல்வித் திட்டம் - அதுதான் இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைத் திட்டம்.

‘‘கோவிலைக் கட்டுகிறவன் கதியெல்லாம் இதுதான்''

சமஸ்கிருத மொழித்திணிப்பு - அதனுடைய விளைவுதானே சில நாள்களில்  நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு. இராஜராஜன் கட்டிய பெரிய கோவில் அது. கலைஞர்தான், இராஜ ராஜனுக்கு சிலை செய்தார், அந்த சிலையை கோவி லுக்குள் வைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். நல்லதாகப் போயிற்று என்று, கோவிலின் வெளியே வைத்தார் அந்த சிலையை.

கோவிலுக்கு வெளியே இராஜராஜ சோழன் சிலை இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை கலைஞர் சொன்னார், ‘‘கோவிலைக் கட்டுகிறவன் கதியெல்லாம் இதுதான்'' என்றார்.

கோவிலைக் கட்டிய நீ வெளியே நிற்பாய்; உனக்கு சம்பந்தமில்லாதவன் சின்ன மணியை ஆட்டிக் கொண்டு உள்ளே சென்றுவிடுவான் என்று சொன்னார்.

‘‘குடமுழுக்கா? கும்பாபிசேகமா?''

இப்பொழுது நம்மாட்கள் பட்டிமன்றம் நடத்து கிறார்கள், ‘‘குடமுழுக்கா? கும்பாபிசேகமா?'' என்ற தலைப்பில்.

குடமுழுக்கு என்றால் செம்மொழி

கும்பாபிசேகம் என்றால், சமஸ்கிருதம்

குடமுழுக்கு என்றால், திராவிடம்

கும்பாபிசேகம் என்றால் ஆரியம்.

இதனை முக்கியமாக  நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் சட்டப்படி நடக்கின்றவர்கள். 10 மணி வரைதான் கூட்டம் நடத்தவேண்டும் என்று சொல்லி யிருக்கிறார்கள்; அந்த உத்தரவை நாங்கள் மீற மாட்டோம்.

மீற வேண்டிய அவசியம் வரும்பொழுது, மீற வேண்டிய சட்டங்களை மீறுவோம். அது அக்கிரம சட்டங்கள்.

இங்கே வந்துள்ள தலைவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுக்க மக்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறோம்!

அடுத்த போராட்டம், இந்த ஒரே அணியைச் சார்ந்தவர்கள், தமிழ்நாடு முழுக்க மக்களை ஆயத் தப்படுத்தியிருக்கிறோம்.

திராவிடர் கழகத்தின் பொதுக்குழு வருகின்ற பிப் ரவரி 21 ஆம் தேதியன்று திருச்சியில் கூடவிருக்கிறது.

மாநிலத்தின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன!

5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு,

8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு,

10 ஆம்வகுப்பில் பொதுத் தேர்வு,

11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு,

12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு

இவ்வளவு தேர்வு இருந்தாலும், இதற்குப் பிறகு நீட் தேர்வு தனித் தேர்வு - 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை கணக்கில் ஏற்கமாட்டார்களாம்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதற்குப் பிறகு நெக்ஸ்ட் தேர்வு.

பிறகு எதற்கு மாநிலக் கல்வி? மாநிலத்தின் உரிமை கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இது எங்கள் உரிமையா என்றால், உங்களுடைய உரிமை. உங்களுக்கு சூடு, சொரணை, வெட்கம் இருந்தால், நீங்கள் போராடவேண்டும். ஆனால், நாங்கள்தான் அந்தப் பணியை செய்துகொண்டிருக்கின்றோம்.

எங்கள் அனிதாக்கள் சாதாரணமா? ஒரு தாழ்த் தப்பட்ட, மூட்டை தூக்குகின்ற என்னுடைய சகோத ரனுடைய மகள். தாயில்லாப் பிள்ளை. நானும், திருமா வளவன் அவர்களும் சென்று பார்த்தோம். இந்த மேடை அளவிற்குக்கூட அவர்களுடைய வீடு இல்லை.

அந்த சூழ்நிலையில் படித்த அந்தப் பிள்ளை 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்களை வாங்கியி ருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியுமா? அந்தப் பிள்ளை என்ன கோட்சிங் வகுப்பிற்குச் சென்று படித்தவரா? இல்லை.

அந்தப் பிள்ளையினுடைய கனவு என்னவென் றால், தான் மருத்துவராகி, கிராமப்புறங்களில் சேவை செய்யவேண்டும் என்பதுதான்.

ஆனால், நீட் தேர்வில் அனிதா எடுத்த மதிப்பெண் வெறும் 87 தான். அதனால்,  மனம் உடைந்தது அந்தப் பிள்ளை.

அதற்குக் காரணம் என்ன? அந்தப் பிள்ளைக்கு அறிவு குறைவா? என்றால், இல்லை.

நீட் தேர்வில் மத்தியப் பாடத் திட்டத்திலிருந்து கேள்விகள்

மத்தியப் பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்வியினால்தான். மாநிலப் பாடத் திட்டத்தில் 1176 மதிப்பெண்கள் வாங்கிய பிள்ளைக்கு மத்தியப் பாடத் திட்டத்திலிருந்து கேள்வி கேட்டு தேர்வு வைக்கி றார்கள்.

எப்படி முடியும்?

புவியியல் தேர்வு அன்று, வரலாறு பாடத்திலிருந்து கேள்வி கேட்டால், பதில் எழுத முடியுமா?

எனவே நண்பர்களே, நம்முடைய மாணவர்களின் கல்விக் கண்ணை குத்துவதுதான் அவர்களுடைய  பணியாக இருக்கிறது.

குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, காமராசர் அவர்கள் பள்ளிகளைத் திறந்து, மதிய உணவு அளித்து, இலவசப் படிப்பு - கலைஞர் இதுவரை செய்த சாதனை சாதாரணமல்ல - தேர்வில்தான் இதுவரை பிள்ளைகள் முட்டையைப் பார்த்திருப் பார்கள் -  கலைஞர்தான், சத்துணவாக இரண்டு முழு முட்டையைப் போடுகிறேன் என்ற சாதனையை செய்தார்.

பழைய காட்டுமிராண்டித்தனத்திற்கு, இருண்ட இடத்திற்கு அழைத்துப் போக நினைக்கிறார்கள்

இப்படியெல்லாம் செய்த நேரத்தில், நம்முடைய பிள்ளைகளின் கல்வியை தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு பேரபாயம், மீண்டும் பழைய காட்டுமிராண் டித்தனத்திற்கு, இருண்ட இடத்திற்கு அழைத்துப் போக நினைக்கிறார்கள். இதனை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.

அந்தப் போராட்டத்திற்கு நீங்கள் அத்தனை பேரும், பெற்றோர்களே, எங்கள் பிள்ளைகளது பிரச் சினையல்ல இது. உங்கள் பிள்ளைகளுடைய பிரச் சினை, உங்கள் பேரப் பிள்ளைகளுடைய பிரச்சினை. அந்தப் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்கவேண்டும்.

அப்படி நீங்கள் வராவிட்டால்,

கடைசியாக ஒன்றை சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்,

‘‘ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர்ஆகிவிடுவார் உணரப்பா நீ'' என்றார்.

நீங்கள் உதையப்பர் ஆகவேண்டாம்; நாம் வன் முறையை செய்யவேண்டாம்; வன்முறையில் நமக்கு நம்பிக்கையில்லை. அதற்குப் பதிலாக ஒரு சிறிய திருத்தம். ஓடப்பர்தான் நாமெல்லாம் - ஏழைகள்தான்.

அம்பானிகள், அதானிகளுக்கு சொந்தக்காரர்கள் அல்ல. இன்றைய  மத்திய ஆட்சியின் நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை எல்லாம், முதலாளிகளுக்கு, கார்ப்பரேட்டுகளுக்கு.

வாக்குகளை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால்....

ஆனால், ஓடப்பராக இருக்கிற உங்களுக்கு நினை வூட்டுகிறோம்,  நீங்கள் ஓட்டப்பர்களும்கூட. அது தான் மிகவும் முக்கியம். ஓட்டு இருக்கிறது உங்களு டைய கைகளில். அந்த ஓட்டை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், ஒரு ஆண்டுதான் உள்ளது.

நீட், நீட்டாகப் போகிறது என்றெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது. நீட், நீட்டாகப் போகவில்லை, நீட், பூட்டாக இருக்கிறது. பூட்டுப் போட்டு இருக்கிறீர்கள்.

சிறைச்சாலைகளை

நிரப்பக் கூடிய போராட்டம்

எனவேதான், இந்தப் பயணம் இன்றைக்கு முடி வடையவில்லை. இன்றைக்கு விரிந்திருக்கிறது. எங்க ளுடைய பயணம், அது எங்கே போனாலும், சிறைச் சாலைகளை நிரப்பக் கூடிய போராட்டமாக, இந்தப் போராட்டம் நடைபெறும்.

இந்தத் திட்டங்கள், சூழ்ச்சி, கண்ணிவெடிகளுக்கு முடிவு கட்டும்வரை எங்களுக்கு ஓய்வில்லை - ஆதரவு தாரீர்!

சிறப்பாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், தவறாமல் வந்து ஊக்கப்படுத்திய நம்முடைய  தோழமை கட்சித் தலைவர்களுக்கும் மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்து, எங்களோடு சிறைக்கு வருவதற்கோ அல்லது நேரிடையாக வர வாய்ப்பில்லாதவர்கள் எங்களை வழியனுப்புவதற்கோ வாருங்கள் என்ற அழைப்பை உங்களுக்குக் கொடுத்து, விடை பெறுகிறேன்.

வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

ஒழிப்போம், ஒழிப்போம்!

நீட் தேர்வை ஒழிப்போம்!!

ஒழிப்போம், ஒழிப்போம்!

நீட் தேர்வை ஒழிப்போம்!

ஒழிப்போம், ஒழிப்போம்!

ஒழிப்போம், ஒழிப்போம்!

விரட்டுவோம், விரட்டுவோம்,

புதிய கல்விக் கொள்கையை விரட்டுவோம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

 - விடுதலை நாளேடு,5.2.20

புதன், 19 பிப்ரவரி, 2020

‘நீட்'டை ஒழிக்கும்வரை ஓயப்போவதில்லை - பிப்ரவரி 21 இல் திருச்சியில் தீர்மானிப்போம்!

நாகர்கோவில் முதல் சென்னை வரை - 11 நாள்கள் பெரும் பயணம் பிரச்சாரப் பயணத்தில் பெரும் பங்காற்றிய தோழர்களுக்குப் பாராட்டு - அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் பரிவு - பங்களிப்பு - பாராட்டு அனைத்திற்கும் நன்றி!

நாகர்கோவிலில் தொடங்கி - சென்னையில் நிறைவு பெற்ற ‘நீட்' எதிர்ப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் குறித்தும், அடுத்தகட்ட நமது நடவடிக் கைகள் திருச்சியில் வரும் 21 ஆம் தேதி தீர்மானிக்கப்படும் என்று அறிவித்தும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

நம் மக்களின் அடிப்படைத் தேவை கல்வியாகும். பகுத்தறிவு - பட்டறிவு - ஒத்தறிவு - பொது அறிவு ஆகிய அனைத்து அறிவுகளையும் ‘‘சாணை தீட்டுவது'' கல்வியாகும்.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்வியை பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடாது பறிக்கப்பட்ட கொடுமை, ஆரியத்தின் மனுதர்மப் படையெடுப்பின் காரணமாகவே! ஜாதி தர்மக் கொடுமையின் விளைவு இது!

நமது அரசர்களின் மனுதர்மப் பாதை

ஆயிரம் ஆண்டுகாலத்துக்குமுன் ஆண்ட அரசர்களின் ஆட்சி மனு மயமானதால், திராவிட சமுதாயம் கல்விக் கண்ணை இழந்தது! கல்வி ஆரியத்தின் ஏகபோகமாகியது!

இதனை மீட்டெடுக்கும் முயற்சி ஒரு தொடர் தடை ஓட்டப் பந்தயமாகவே இன்றுவரை நடத்தப்பட்டது - நடந்தும் வருகிறது!

நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்க ஆட்சியில் தொடங்கிய கல்வி மறுமலர்ச்சி - தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆட்சிகளின் போது தொடரவே செய்தது!

திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சி என்று கருதப் பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் முன்னே போவதும், பின்னே வருவதுமான சில பல நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் ஒரு தொடர் வளர்ச்சிக்கு அதிக பாதிப்பு அற்ற நிலை ஏற்பட்டு, பல போராட்டங்கள் மீட்டுருவாகி தொடர்ந்தன.

மோடி ஆட்சியும் -

தமிழகத்தின் சரணாகதி ஆட்சியும்!

ஆனால், கடந்த 3  ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி - மத்தியில் மோடி ஆட்சி ஏற்பட்டவுடன், டில்லியே சரணம் என்று ‘‘சாஷ்டாங்கமாக'' கீழே விழுந்து, மாநில உரிமைகளை - ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி, கூட் டாட்சிக்கு (Federal) விடை கொடுத்து, ஒற்றை ஆட்சி  (Unitary) ஆட்சியாகவே அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடைமுறைபடுத்துகின்றனர். அதில் முதல் தாக்குதலுக்கான பலியாக (First Casualty) நம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி குலதர்மக் கல்வியாக மாற்றப்பட்டு, சமஸ்கிருத மொழி - கலாச்சாரத்தின் படையெடுப்பாகவே மாறிவருகிறது!

நமது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிக் கட்டுமான உறுதிகளான - சமூகநீதி உள்ளிட்ட அடிப் படை உரிமைகள் திட்டமிட்டே பறிக்கப்படுகின்றன.

நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை

அழித்திட கண்ணிவெடி

நம் பிள்ளைகளின் ‘கல்விக் கண்' திட்டமிட்டே குத்தப்படுகிறது; நமது கல்வி வளர்ச்சி - குறிப்பாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி - நீதிக்கட்சி, காமராசர் ஆட்சி, பிறகு வந்த தி.மு.க. ஆட்சியில் வளர்ந்த தொழிற்படிப்பிலிருந்து தொடக்கக் கல்வி வரையில் மண்ணைப் போட்டு, பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிப் பாதையில், ‘நீட்' என்றும், புதிய மத்தியக் கல்விக் கொள்கை என்றும் கண்ணிவெடிகளை மத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதைத்து வைத்துள்ள பேரபாயம் நீடிக்கிறது!

நமது இயக்கப் பெரும்

பயணத்தின் எழுச்சி!

இதைப் பெற்றோர்களுக்கும், வருங்கால சந்ததியின ருமான நம் மக்களுக்கும் உணர்த்தி, மனுதர்மக் கல்வியை மாற்றி, சமதர்ம - மனித தர்மக் கல்வியை - அறிவியல் மனப்பான்மையோடு கூடிய முற்போக்குத் தொழிற்கல்வியை அளிக்கும் முந்தைய பொற்காலத் தைப் புதுப்பிக்கச் செய்ய ஓர் விழிப்புணர்வு இயக்கமாக - நமது பரப்புரைக்கான பெரும் பயணம் அமைந்தது. கடந்த 2020 ஜனவரி 20 ஆம் தேதி கன்னியாகுமரி - நாகர்கோவிலில் தொடங்கிய நமது கல்வி மீட்டெடுப்பு கடமைப் பயணம்,

நாகர்கோவில்

திருநெல்வேலி

கோவில்பட்டி

சாத்தூர்

மதுரை

காரைக்குடி

புதுக்கோட்டை

திருச்சி (மறைவு நிகழ்ச்சி)

கரூர்

சேலம் (கமிட்டி)

பெத்தநாயக்கன்பாளையம்  (படத்திறப்பு - கொடி யேற்றம்)

ஆத்தூர்

கல்லக்குறிச்சி

பெரம்பலூர்

அரியலூர்

மயிலாடுதுறை

சிதம்பரம்

புதுச்சேரி (மாநிலம்)

திண்டிவனம்

செய்யாறு

காஞ்சிபுரம்

அரக்கோணம்

திருத்தணி

பிரச்சாரக் கூட்டங்கள்  வெற்றி முரசு கொட்டின! நிறைவு விழா சென்னையில் மிகப் பெருந்திரள் நிகழ்ச் சியாக சென்னை மாவட்டக் கழகங்களின் பொறுப் பாளர்களால் வெகுதிறம்பட பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி நடத்தி வெற்றி வாகை சூட வைத்தார்கள்! சென்னை எம்.ஜி.ஆர். நகர் குலுங்கியது!

பயணத்தில் பங்கு கொண்டோரின்

மகத்தான பணிகள்

ஆங்காங்கே நமது மதச்சார்பற்ற முற்போக்கு அணிகளைச் சார்ந்தவர்களும், கிளைக் கழகங்களின் பொறுப்பாளர்களும், பெற்றோர்களும், மாணவர்கள் - இளைஞர்கள், வணிகர்கள் என்று பலதரப்பட்டோரும் நமது பரப்புரைக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வரலாறு படைத்தனர்.

ஏழு வாகனங்கள் (நகர்வு புத்தகச் சந்தை) உள்பட

26 தோழர்கள்

பயணம் 2700 கிலோ மீட்டர்

11 நாட்கள்

சிறு சிறு வெளியீடுகளை மக்கள் வாங்கிய வகையில் ரூ.75,000.

அத்துடன் ஒவ்வொரு நாளும் நாம் தங்கியிருந்த இடங்களில்  நேரில் வந்து அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் பொழிந்ததும், நமது உடல்நிலைப்பற்றி எல்லையற்ற கவலையைத் தெரிவித்ததும், நமக்கு உறவுகள் உலக உறவுகள் - ‘‘யாவரும் கேளிர்'' என்பதை உறுதிப்படுத்தின!

இம்முறை இந்த ஏற்பாடுகளை நமது இயக்கப் பொறுப்பாளர்கள், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட, நகர, கிராம, கிளைக் கழகப் பொறுப்பாளர் கள்வரை ஆர்வமும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடும் வண்ணம் மகிழ்ச்சியுடன் சிறந்த முறையில் கடமையாற்றி மக்களைத் திரட்டிய பணி மகத்தானது.

என்னுடன் வந்த பேச்சாளர்கள், அமைப்பினர் முதல் ஓட்டுநர் தோழர்கள், புத்தகப் பரப்புவோர், ஊடக உதவியாளர் உள்பட யாரும் சோர்வோ, களைப்போ, அலுப்போ இன்றி சுறுசுறுப்புத் தேனீக் களாகவே ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்பதற்கு இலக்கணமாகவே செயல்பட்டனர். மகிழ்ச்சிக் குடும்ப மாகவே ஒவ்வொரு நாளும் கடந்தது!

எல்லோருக்கும் நமது இதயம் கனிந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

‘‘அந்த நாளும் வந்திடாதோ'' என்று பிரிந்து சென்ற பின் ஏங்கும் பயணம் இது!

சென்னை நிறைவு விழாவின் மாட்சியும் - அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பும்!

நிறைவாக, சென்னையில் நமது கழக மாமணிகளின் சிறந்த ஏற்பாடு - நமது வெற்றி மகுடத்தில் முத்துகள்!

நமது தோழமைக் கட்சிப் போராளித் தலைவர்கள்,

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,

டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தி.மு.க.,

தோழர்  கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி

தோழர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பேராசிரியர் ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி,

வழக்குரைஞர் அழகுசுந்தரம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

- இப்படி கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய பல கட்சி தலைவர்களுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றி!

திருச்சியில் தீர்மானிப்போம்!

அடுத்த களத்திற்கான ஆயத்தத்திற்குத் தொடக்கம் சரியாகவே அமைந்தது.

திருச்சியில் பிப்ரவரி 21 இல் கூடுவோம்!

திடமான போராட்ட அறிவிப்புகள் வெளிவரும்,

எம் தலைவர் தந்தை பெரியார் என்றும் வாழ்வார்!

எப்போதும், எவருக்கும் தேவைப்படுவார்!

ஆம்! இது காலத்தின் கட்டளை, கடமையின் உயிர்ப்புடன் ஆயத்தமாவீர்,  ஆயத்தமாவீர் - தோழர்களே!

களம் காண, சிறைபுக ஆயத்தமாவீர்!!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.2.2020

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

நாகர்கோவில் முதல் சென்னை வரை ‘நீட்' எதிர்ப்புப் பரப்புரைப் பயணம்

நாகர்கோவில் முதல் சென்னை வரை ‘நீட்' எதிர்ப்புப் பரப்புரைப் பயணம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு தமிழர் தலைவர் தலைமையில் அணிவகுத்தது காண்!

தொகுப்பு: இரா.ஜெயக்குமார் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

நேற்றைய விடுதலையில் வெளிவந்ததின் தொடர்ச்சி....

22.01.2020 ஹார்விப்பட்டி இராமசாமி உடல்

மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பு

காலை உணவை முடித்து விடுதியிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர். இயக்கத்தின் புரவலர், 60 ஆண்டு கால விடுதலை வாசகர் மதுரை ஹார்விப்பட்டி பெரியார் பெருந் தொண்டர் இராமசாமி அவர்கள் உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் கொடையாக வழங்கினார். முன்னதாக நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்கள் இரங்கலுரையாற்றினார். 21.01.2020 அன்று மறைவுற்ற பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி அவர்களுக்கு மதுரை பொதுக் கூட்ட மேடையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பு

22.01.2020 முற்பகல் 11 மணிக்கு மதுரை மருத்துவக் கல் லூரியில் கூடிய செய்தியாளர்களிடம் பெரியார் பெருந் தொண்டர் இராமசாமி அவர்கள் நமது நிறுவனத்திற்கு உதவியது பற்றியும், நீட் தேர்வு பரப்புரைப் பெரும் பயணம் குறித்தும் பேட்டியளித்தார். 11.15 மணிக்கு தமிழர் தலைவர் உடன் வரும் தோழர்களுடன் காரைக்குடி நோக்கி புறப் பட்டார்.

காரைக்குடியில் வரவேற்பு

மதுரையில் புறப்பட்ட பயணக்குழுவினர் மதியம் ஒரு மணிக்கு காரைக்குடி வந்தடைந்தனர்.  காரைக்குடி பெரியார் சிலையருகில் கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

என்.ஆர்.சாமி நகர் பெரியார் தோட்டத்தில் மதிய உணவு

காரைக்குடி என்.ஆர்.சாமி நகர் பெரியார் தோட்டத்திற்கு மதியம் 1.15 மணிக்கு வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காரைக்குடி என்.ஆர்.சாமி பேராண்டாள் குடும்பத்தினர் சாமி.திராவிடமணி - ஜெயாதிராவிடமணி, சாமி.திராவிடச்செல்வன் - தமிழ்செல்வி, தி.என்னாரசு பிராட்லா  ஜான்சிராணி, ச.பிரின்சு என்னாரசு பெரியார், தி.புருனோ என்னாரசு  ரம்யா மலர், சரத்குமார் - ரம்யா, பெரியார் பிஞ்சுகள் சித்தார்த்தன், கவுதமன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.  பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் பயணக்குழுவில் வருகை தந்த அனைவருக்கும் மண்டலத்தலைவர் சாமி.திராவிடமணி - ஜெயா ஆகியோரின் தி.சாக்ரடீஸ் இல்லத்தில் மதிய உணவு அளித்து உபசரிக்கப்பட்டது.  பிறகு திராவிடச் செல்வன் இல்லம் மற்றும் பெரியார் தோட்டத்தை சுற்றிப் பார்த்தார் தமிழர் தலைவர். ஈரோடு தாத்தா புத்தகம் எழுதிய நாராநாச்சியப்பன் அவர்களுடைய தம்பி மகன் பிராட்லா இல்லத்தை கட்டிய பொறியாளர் நாச்சியப்பன், தமிழர் தலைவர் அவர்கள் கொடியுடன் உள்ள படத்தை ஆசிரி யருக்கு அன்பளிப்பாக அளித்து மகிழ்ந்தார்.  அவருக்கு ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்து அனைவரிடமும் விடைபெற்று காரைக்குடி நாச்சியப்பா பேலஸ் தங்கும் விடுதிக்கு பயணக்குழுவினருடன் ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர் அவர்கள்.

காரைக்குடியில் பொதுக்கூட்டம் (22.01.2020)

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை 6.45 மணிக்கு விடுதியிலிருந்து புறப்பட்டு 7 மணிக்கு காரைக்குடி அய்ந்து விளக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை அனைவரையும் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி தலைமையேற்றார். மண்டலத் தலைவர் சாமி. திராவிடமணி, மாநில மகளிரணி அமைப்பாளர் மு.சு கண்மணி, மாநில மாணவர் கழக செயலாளர்

ச.பிரின்ஸ்என்னாரசு பெரியார், தலைமைக் கழக பேச்சாளர் தி.என்னாரசுபிராட்லா, மண்டலச் செயலாளர் அ.மகேந்திர ராசன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிவேல், சிவகங்கை வழக்குரைஞர் இன்பலாதன், சுப்பையா, ராஜாராம், அனந்த வேல், மாவட்ட துணைத்தலைவர், கொ.மணிவண்ணன், நகரத்தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரவு 7.20 மணி முதல் 8.05 மணி வரை 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் தி.க.கலைமணி நன்றி கூறினார்.

தோழமை கட்சியினர் வரவேற்பு

தி.மு.க. நகர செயலாளர் நா.குணசேகரன், ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சி.மனோகரன், காங்கிரஸ் நகர தலைவர் ந.பாண்டிமெய்யப்பன், AITUC மாநில குழு உறுப்பினர் பழ.இராமச்சந்திரன், சி.பி.அய் (எம்) மாவட்டக்குழு கருப்பசாமி. சி.டி.அய். நகர செயலாளர் சீனிவாசன், வி.சி.க. இளையகவுதமன் உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப் பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்நாள் சாதனையாளர் படம் அன்பளிப்பு

அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது படத்தினை டைல்சில் பதிவு செய்து காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களுக்கு அளித்தனர்.  இரவு 8 மணிக்கு அனைவரிடமும் விடைபெற்று தமிழர் தலைவர் வாகனம் புதுக்கோட்டையை நோக்கி புறப்பட்டது.

புதுக்கோட்டை பொதுக்கூட்டம்  (22.01.2020)

இரவு 9.00 மணிக்கு புதுக்கோட்டை நகர எல்லையில் கழக இளைஞரணி தோழர்கள் இருசக்கர வாகனத்தில் ஏராளமானோர் வருகைதந்து பயணக் குழுவினரை வரவேற்று இரவு 9.05 மணிக்கு புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தனர்.  மாவட்டத் தலைவர் கு.அறிவொளி வரவேற்றார், மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். மண்டலச்செயலாளர் சு.தேன்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள், இரா.புட்பநாதன், இரா.சரஸ்வதி, மாவட்டச் செயலாளர், ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் இளங்கோ, மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9.20 மணி முதல் 10.00 மணிவரை 40 நிமிடங்கள் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் டாக்டர் சந்திரசேகரன், தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் கவிச்சுடர் கவிதைபித்தன், பெரியார் விருது பெற்ற மருத்துவர் உள் ளிட்டோர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.  பெரியார் திடலில் பெரியார் விருது பெற்ற மருத்துவர்   அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இரவு  திருச்சி பெரியார் மாளிகை

22.01.2020 இரவு 10.00 மணிக்கு புதுக்கோட்டையில் புறப்பட்டு பயணக்குழுவினர் வரும் வழியில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் உட்பட இரவு உணவை முடித்து இரவு சரியாக 11.30 க்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர்.

தோழர்கள் சந்திப்பு

லால்குடி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கழக பொறுப் பாளர்கள் தோழர்கள் பெரியார் மாளிகையில் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தார்கள்.

கரூரில் வரவேற்பு (23.01.2020)

திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து 23.01.2020 முற்பகல் 11.30 மணியளவில் பயணக்குழுவினருடன் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கரூர் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு பெரியார் சிலை அருகில் கரூர் மாவட்டக் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.  1.15 மணிக்கு கரூர் அரசி விடுதிக்கு ஆசிரியர் வருகை தந்தார்கள்.  மதியம் 2. மணிக்கு கரூர் அன்பு இல்லத்திலிருந்து கொண்டு வந்த உணவு ஆசிரியர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.  மாலை வரை கழகத் தோழர்கள் அரசியல் கட்சியினர், சமூக நீதி பற்றாளர்கள் பலர், ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

கரூர் பொதுக்கூட்டம் (23.01.2020)

23.01.2020 மாலை 6.45 மணிக்கு நான்காவது நாள் பரப்புரைக்காக கரூர் அரசி விடுதியிலிருந்து புறப்பட்டு கரூர் குமரன் சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6.55 மணிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து வரவேற்றார், மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி தலைமை தாங்கினார், சே.அன்பு, ம.பொம்மன், பொத்தனூர், க.சண்முகம், மு.க. இராஜசேகரன், க.நா.சதாசிவம் ஆகியோர் முன்னிலை யேற்றனர். 7.20 மணிக்கு உரையை தொடங்கி தமிழர் தலைவர் 8.05 மணிக்கு நிறைவு செய்தார். மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கூடி உரையை கேட்டு மகிழ்ந்தனர்.  நகர செயலாளர் ம.சதாசிவம் நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

நீட் எதிர்ப்பு பயணம் மேற்கொண்டு கரூர் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பேங்க் கே.சுப்ரமணி, காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சின்னசாமி, உள்ளிட்ட அனைத்துக்கட்சி தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரி வித்தனர். அவர்களிடமிருந்து விடைபெற்று 8.10 மணிக்கு கரூரிலிருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

ஈரோடு பொதுக்கூட்டம் (23.01.2020)

23.01.2020 ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9.40 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடை ஏறியவுடன் நேரடியாக பேச்சை தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவு செய்தார். மாவட்டச் செயலாளர் சிற்றரசு வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் நற்குணம் தலைமையேற்றார்.  கோபால கிருஷ்ணன், த.சக்திவேல், இரா.சீனிவாசன், ந.சிவலிங்கம், ப.காளிமுத்து, த.சண்முகம், ப.பிரகலாதன், பெ.இராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  மணிமாறன் நன்றி கூறினார்.

ஆசிரியர் அவர்களை வரவேற்ற தோழமை கட்சியினர்

தி.மு.க. பொறுப்பாளர்கள், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திருமதி.சுப்புலெட்சுமி ஜெகதீசன், காங்கிரஸ் கமிட்டி மாநகரத் தலைவர் ஈ.பி.ரவி, சி.பி.எம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சி.பி.அய். மாவட்டச்செயலாளர் திருநாவுக்கரசு, ம.தி.மு.க. சட்ட திருத்தக்குழு உறுப்பினர் கு.குணசேகரன், வி.சி.க மண்டல அமைப்பு செயலாளர் ந.விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து ‘நீட்' எதிர்ப்பு பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

சம்பத் இல்லம்

ஈரோடு சம்பத் அவர்களின் வாழ்விணையர் (திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களது தங்கை) அண்மையில் மறைவுற்றார்கள் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த ஆசிரியர் அவர்கள், அவர்கள் இல்லத்திற்கு வருகை தந்து துக்கம் விசாரித்து மறைந்த அம்மையார் படத்திற்கு - மாலை அணிவித்து இரவு 10.30 மணிக்கு சேலம் நோக்கி புறப்பட்டார்.

(23.01.2020) இரவு சேலத்தில் வரவேற்பு

ஈரோட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சாலை ஓரத் தில் இரவு உணவை முடித்து நள்ளிரவு 1.15 மணிக்கு சேலம் சிரிசாந்த் விடுதிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களை சேலம் தோழர்கள் வரவேற்றனர். பிறகு உறங்கச் சென்றார்கள்.

24.01.2020 சேலம்

காலை 8 மணி முதல் சேலம், மேட்டூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

‘பெரியார் 1000' மாணவர்களுக்கு பரிசு

தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், பெரியார் பிஞ்சு மாத இதழும் இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா விடை போட்டியில் சேலம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு சேலம் சிரிசாந்த் விடுதி அரங்கில் காலை 9.00 மணியளவில் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை

சுயமரியாதை சங்க கூட்டம் சேலம் செவ்வாய்பேட்டை சுயமரியாதைச் சங்கம் உறுப்பினர்கள் கூட்டம் 24.01.2020 அன்று காலை 9.30 மணியளவில் சிறீசாந்த் விடுதி அரங்கில் பழனி புள்ளையண்ணன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.  தமிழர் தலைவர் அவர்கள் வழிகாட்டுதல் உரை யாடல்களுடன் 10 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது.

செய்தியாளர்கள் சந்திப்பு

சேலம் சிறீசாந்த் விடுதியில் கூடிய செய்தியாளர்களிடையே காலை 10.00 மணியளவில் பேட்டியளித்தார். சேலம் சுயமரியாதை சங்கம் கட்டட வழக்கில் வெற்றிபெற்று அந்த சொத்து பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  நீட் பரப்புரையின் நோக்கத்தையும் விவரித்தார்.

பெத்தநாயக்கன் பாளையத்தில் வரவேற்பு

10.15 மணிக்கு சேலத்தில் புறப்பட்டு 11.00 மணிக்கு பெத்தநாயக்கன் பாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு தலைமையில் அனைத்து கட்சியினர் பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்றனர்.

காளிச்செட்டியூர் கா.பொ.ராசு இல்லம்

அண்மையில் மறைவுற்ற காளிச்செட்டியூர் பெரியார் பெருந்தொண்டர் கா.பொ.ராசு இல்லத்திற்கு 11.00 மணிக்கு சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை ஊர்பெரு மக்கள், உறவினர்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.  பிறகு அவர் கள் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ராசு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கிருந்து விடைபெற்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

கழக கொடியேற்றுதல்

பெத்தநாயக்கன் பாளையம் கடை வீதியில் அமைக் கப்பட்டிருந்த கழக இலட்சிய கொடியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முற்பகல் 11.20 மணிக்கு ஏற்றிவைத்தார்கள். அங்கும் பொதுமக்கள் கூடி நின்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.

கா.பொ.ராசு படத்திறப்பு

முற்பகல் 11.35 மணிக்கு பெத்தநாயக்கன் பாளையம் பிச்சமுத்து நாயக்கர் திருமண மண்டபம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு பேண்ட் வாத்திய இசையுடன் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.  பிறகு மறைந்த பெரியார் பெருந்தொண்டர் காளிசெட்டியூர் கா.பொ.ராசு அவர்களின் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு தலைமை வகித்தார். ஆசிரியர் பழனி வேல், விடுதலைசந்திரன் ஆகியோர் முன்னிலையேற்றனர் நண்பகல் 12.10 மணிக்கு ஆத்தூர் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

(தொடரும்)

தமிழ்நாட்டில் 11 நாள்கள் சூறாவளி சுற்றுப்பயணம்

நீட்', 'புதிய கல்வி'யின் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி

மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சாதனை

தொகுப்பு: இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

நேற்றைய விடுதலையில் வெளிவந்ததின் தொடர்ச்சி....

ஆத்தூரில் தோழர்கள் சந்திப்பு

24.01.2020 நண்பகல் 12.30 மணிக்கு ஆத்தூர் ராம கிருஷ்ணா ரெசிடென்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை ஆத்தூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குடும்பத்துடன் சந்தித்து உரையாடி மகிழ்ந் தனர்.  மதிய உணவுக்குப் பின் ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர் அவர்கள்.

ஆத்தூர் தங்கவேல் இல்லம்

மாலை 6.10 க்கு விடுதியிலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேல் வாழ்விணையரை சந்தித்து உடல் நலம் விசாரித்து விடைபெற்றார்.

ஆத்தூர் பொதுக்கூட்டம் (24.01.2020)

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6.20 க்கு வருகை தந்தார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மாவட்டச் செயலாளர் நீ. சேகர் வரவேற்றார். மாவட்டத் தலைவர்

த. வானவில் தலைமையேற்றார். பெ. சோமசுந்தரம், சி. சுப்ர மணியன், விடுதலைசந்திரன், வெ. அண்ணாத்துரை, திவாகர், வீராச்சாமி ஆகியோர் முன்னிலையேற்றனர்.  உ. செல்வன் நன்றி கூறினார். 7.10 மணி முதல் 8.05 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.  பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய ஆசிரியர் அவர்களின் உரையை பெருந்திரளாக பொது மக்கள் கூடி கேட்டனர்.

எடைக்கு எடை நாணயம்

நீட் எதிர்ப்பு பரப்புரை மேற்கொண்டு ஆத்தூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆத்தூர் கழக இளைஞரணி தோழர்களால் பொதுக்கூட்ட மேடையில் பொது மக்களின் வாழ்த்துக்களிடையே எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது.  நாணயத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அவர்கள் எனது எடைக்கு மேலாக வழங்கப்பட்ட நாணயம் ரூ.16,000 திருச்சியில் இயங்கி வரும் நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்

ஆத்தூர் பொதுக்கூட்ட மேடையில் தோழர் இளமாறன் அவர்கள் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களிடத்தில் விடைபெற்று இரவு 8.10 க்கு கல்லக்குறிச்சி நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

கல்லக்குறிச்சியில் வரவேற்பு

ஆத்தூர் பொதுக்கூட்டம் முடிந்து கல்லக்குறிச்சிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 9.05 க்கு மண்டலத் தலைவர் கா.மு. தாஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தோழர்கள் பயனாடை அணி வித்து மகிழ்ந்தனர்.

கல்லக்குறிச்சி பொதுக்கூட்டம் (24.01.2020)

கல்லக்குறிச்சி மந்தவெளி பொதுக்கூட்ட மேடைக்கு 24-01-2020 இரவு 9.10 மணிக்கு வந்தடைந்தார் தமிழர் தலைவர் அவர்கள். மாவட்டச்செயலாளர் கோ.சா.பாஸ்கர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ம. சுப்பராயன் தலைமையேற்றார். பொன்.ராமகிருஷ்ணன், க,மு.தாஸ், குழ. செல்வராசு, த. பெரிய சாமி, து. சுந்தரராசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  9.15 மணி முதல் 10 மணி வரை தமிழர் ஆசிரியர் அவர்கள் 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார்கள். முத்துசாமி நன்றி கூறினார்.

தமிழர் தலைவருக்கு மலர் கிரீடம்

நீட் பரப்புரை மேற்கொண்டு கல்லக்குறிச்சி வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மலர் கிரீடமும் மலர் மாலையும் அணிவித்து மகிழ்ந்தனர். மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையர்கண்ணி, தி.மு.க. செயற்குழு உறுப்பினர் அருணாசலம், உலகத் தமிழர் கவிஞர் பேரவை பொதுச் செயலாளர் புலவர் . கு,சீத்தா. வழக் குரைஞர் செல்வநாயகம், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் சரவணன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் ஏழுமலை, காங் கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய் கணேஷ், தி.மு.க ஒன்றிய செயலாளர் சி. வெங்கடாசலம், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், வி.சி.க மாவட்டச் செயலாளர் தமிழ்மாறன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஆ. பகல்முகமது உள்ளிட்ட தோழமை இயக்கத் தோழர்கள் ஆசிரியர் அவர் களை வரவேற்று பயனாடை அணிவித்து மகிழ்ந்துள்ளனர்.  இரவு 10.10 மணிக்கு திருச்சி நோக்கி புறப்பட்டார் ஆசிரியர். வேப்பூர் ஆரியாஸ் உணவு விடுதியில் இரவு உணவை முடித்து புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து ஓய்வுக்கு சென்றார் தமிழர் தலைவர்.

தோழர்கள் சந்திப்பு

திருச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை திருச்சி, லால்குடி மாவட்ட கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்தித்து சந்தாக்கள் வழங்கி சிறப்பித்தனர். திருச்சி வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடினார்.

பெரம்பலூரில் வரவேற்பு

6ஆவது நாள் பரப்புரை பயணம் மேற்கொண்டு 25.01.2020 மாலை 5.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களுக்கு மாலை 6.50 மணியளவில் பெரம்பலூர் மூன்று ரோட்டில் தி.மு.க பொறுப்பாளர் முகுந்தன் தலைமை யில் தி.மு.க, தி.க, வி.சி.க தோழர்கள் பயனாடை அணிவித்து உணர்ச்சி மிக்க வரவேற்பு அளித்து இருசக்கர வாகனங்களில் முன்னே அணிவகுத்து சென்றனர்.

பெரம்பலூர் பொதுக்கூட்டம் (25.01.2020)

பெரம்பலூர் தேரடியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடைக்கு மாலை 7 மணிக்கு வருகை தந்தார் ஆசிரி யர் அவர்கள், நகரத் தலைவர் அக்கி ஆறுமுகம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையேற்றார் மண்டலத் தலைவர் காமராஜ் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந் தன்  கழக பொதுக்குழு உறுப்பினர்கள், ப.அறுமுகம், இரா.அரங்கராசன், சா.தங்கபிரகாசம், ஆதிசிவம், அண்ணாத்துரை, பெ.துரைசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர் 7.15 மணி முதல் 7.55 வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் "நீட்டி"ன் அவலங்களை எடுத்துரைத்து உரையாற் றினார்கள். அனைத்துகட்சி தோழர்கள் பொதுமக்கள் பெருந் திரளாக கூடி நின்று உரையை கேட்டு தெளிவு பெற்றனர். மு.விசயேந்திரன் நன்றி கூறினார்.

தோழமை இயக்க பொறுப்பாளர்களின் வரவேற்பு

மாவட்ட தி.மு.க செயலாளர் சி.இராஜேந்திரன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் செ.துரைராஜ், சி.பி.அய் (எம்) மாநில விவசாய அணி செயலாளர் ந.செல்லதுரை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர் சுல்தான்மொய்தீன் உள்ளிட்ட ஏராள மான அனைத்து இயக்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை வரவேற்று பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு

பெரம்பலூர் பொதுக்கூட்டம் முடிந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அங்கு கூடியிருந்த செய்தியா ளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து நீட் பரப்புரை பயண நோக்கங்களை விளக்கி பேட்டியளித்தார் அனைவரி டமும் விடைபெற்று இரவு 8 மணிக்கு அரியலூர் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அரியலூரில் வரவேற்பு

அரியலூர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு ஊர் எல்லையில் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் அவர்கள் தலைமையில் கழகக் கொடியுடன் ஏராளமான தோழர்கள் கூடிநின்று ஒலி முழக்கங்களுடன் வரவேற்று பொதுக் கூட்ட மேடைக்கு அழைத்து சென்றனர்.

அரியலூர் பொதுக்கூட்டம் (25.01.2020)

25.01.2020 இரண்டாவது கூட்டம் அரியலுர் ஆயிரங்கால் மண்டப வீதியில் அனிதா நினைவரங்கத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையேற்றார் மாநில இளைஞரணி செயலா ளர் த.சீ.இளந்திரையன் மண்டலத் தலைவர் சி.காமராசு மண் டல செயலாளர் சு.மணிவண்ணன், இரத்தின.இராமச்சந்திரன் தங்க.சிவமூர்த்தி, சி.சிவக்கொழுந்து, பேராசிரியர் தங்கவேலு பொறியாளர் இரா.கோவிந்தராசன் உள்ளிட்டோர் முன்னிலை யேற்றனர் இரவு 8.50 மணிக்கு மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 9.05 க்கு பேச்சை தொடங்கி 9.55 வரை 50 நிமிடங்கள் உரையாற்றினார், நீட் என்ற தேர்வால் அனிதா உட்பட நமது பிள்ளைகளை எத் தனை பேரை இழந்துள்ளோம.; நீட்டை விரட்டும் வரை நமது போராட்டம் ஓயாது பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்து உரையாற்றினார். பெருந்திரளாக மக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர். ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருஷ் ணன் நன்றி கூறினார்.

தோழமை கட்சியினர் வரவேற்பு

ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் கு.சின்னப்பா, சி.பி.அய் (எம்) மாவட்டச் செயலாளர் இரா.மணிவேல், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சந்திரசேகர், சி.பி.அய் மாவட்டச் செயலாளர் இரா.உலகநாதன், எம்.ஜி.ஆர் கழக மாவட்டச் செயலாளர் எம்.ஜி கலைவாணன் உள்ளிட்ட தோழமை கட்சி பொறுப்பா ளர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து பரப் புரை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவு வல்லத்தில் ஓய்வு

அரியலூர் கூட்டம் முடித்து இரவு 10 மணிக்கு தோழர் களிடம் விடைபெற்று புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பயணக் குழுவினர் இரவு 11.15 மணிக்கு தஞ்சை வல்லம் வந்தடைந்தனர் இரவு உணவுக்கு பின் ஓய்வுக்கு சென்றார் ஆசிரியர் அவர்கள்.

தோழர்கள் சந்திப்பு (26.01.2020)

26.01.2020 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் கிளைக்கழக தோழர்ள், பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஒக்கநாடு மேலையூரில் நடைபெறும் மன்னை நாராயணசாமியின் 100ஆவது ஆண்டு விழா, நீட் எதிர்ப்பு கிராமப்புற வட்டார மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி மகிழ்ந்தனர். அனை வரிடமும் விடைபெற்று முற்பகல் 11 மணிக்கு மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

இராஜகிரி தங்கராசிடம் நலம் விசாரிப்பு

தஞ்சை வல்லத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 11.45 அளவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராஜகிரி தங்கராசு (96) அவர்களின் இல்லத்திற்கு திடீரென்று சென்று நலம் விசாரித்து ஒளிப்படம் எடுத்து சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தார்கள். தங்க.பூவானந்தம் அவரின் வாழ்விணையர் ஆசிரியர் அவர்களை வரவேற்று தங்கள் தோட்டத்தில் விளைந்த பழங்களை வழங்கி மகிழ்ந்தார். அனைவரிடமும் விடைபெற்று மயிலாடுதுறை நோக்கி பயணக்குழுவினர் புறப்பட்டனர்.

மயிலாடுதுறையில் வரவேற்பு

26.01.2020 மதியம் 1.30 மணிக்கு மயிலாடுதுறை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மில்லினியம் விடுதியின் முன் மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பிற்பகல் 2 மணிக்கு மதிய உணவுக்கு பின் ஓய்வுக்கு சென்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

தோழர்கள் சந்திப்பு

மயிலாடுதுறை மில்லினியம் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் அவர்களை மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கும்பகோணம் மாவட்டக் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்தித்து தங்கள் பகுதியில் நடைபெறும் இயக்கப் பணிகள் குறித்து தமிழர் தலைவர் அவர்களிடம் உரையாடி மகிழ்ந் தனர்.

மயிலாடுதுறை பொதுக்கூட்டம் (26.01.2020)

மயிலாடுதுறை தங்கும் விடுதியிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 6.40 மணிக்கு 7ஆவது நாள் முதல் கூட்டமான மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அமைக்கப்பட்ட கூட்ட மேடைக்கு வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையேற்றார்.  மண்டலத் தலைவர் ச.மு.ஜெகதீசன், மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன் நகரத் தலைவர் சீனிமுத்து, நகரச் செயலாளர் அரங்க. நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையேற்றார்கள். கழகத் துணைத்தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் வருகை தந்து நீட் பரப்புரை பயணத்தை தமிழர் தலைவர் மேற்கொள்வதின் அவசியம் குறித்து உரை யாற்றினார்.  இரவு 7 மணி முதல் 7.55 மணி வரை 55 நிமிடங் கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கவுரையாற் றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று உரையை கேட்டு விழிப்புணர்வு பெற்றனர்.  அனைவரிடமும் விடை பெற்று இரவு 8 மணிக்கு சிதம்பரம் நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.  கா.அருள்தாஸ் நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் நிவேதா எம்.முருகன், தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.இராஜகுமார், சி.பி.அய் மாநிலக்குழு உறுப்பினர் இடும் பையன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப் பாளர் ரவிச்சந்திரன் மற்றும் தி.மு.க நகர, ஒன்றிய செய லாளர்கள் முக்கிய பிரமுகர்கள் நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும்பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சிதம்பரம் பொதுக்கூட்டம் (26.01.2020)

சிதம்பரம் போல் நாராயணதெருவில் அமைக்கப்பட்டி ருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9.05 மணிக்கு தமிழர் தலைவர் வருகை தந்தார்கள்.  மாவட்டச் செயலாளர் அன்பு.  சித்தார்த்தன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர்  பேரா.பூ.சி. இளங்கோவன் தலைமையேற்றார். மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் சொ.தண்ட பாணி, மாவட்டத் துணைத்தலைவர் கோவி.பெரியார்தாசன் மாவட்ட இணைச் செயலாளர் சி.யாழ்திலீபன், மாநில இளைஞரணி செயலாளர் தி.சீ.இளந்திரையன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கடலூர் மாவட்டச் செயலாளர்  நா.தாமோதரன், மாவட்ட துணைச் செயலாளர் கா. கண்ணன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் ஆகி யோர் முன்னிலையேற்றனர். தி.மு,க. மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நீட் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வாழ்த்தி பேசினார். இரவு 9.20 மணி முதல் 10 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் நகர கழக தலைவர் கோவி.குணசேகரன் நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வாழ்த்தும் வரவேற்பும்

கடலூர் மாவட்ட தி,மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சி.பி.அய். மாநிலக்குழு உறுப்பினர் மணிவாசகம், வி.சி.க. மாவட்டச் செயலாளர் பால. அறவாழி, சி.பி.அய்.(எம்) மாவட்டக்குழு எஸ்.ஜி.இரமேஷ்பாபு, இஸ்லாமிய அய்க்கிய ஜமாத் வட்டாரத் தலைவர் முகமது ஜியாவுதீன் உள்ளிட்ட தோழமை இயக்கத்தினரும், கழகத் தோழர்களும் குடும்பம் குடும்பமாக மேடைக்கு வருகை தந்து நீட் எதிர்ப்பு பயணம் மேற்கொண்டு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவு புதுச்சேரியில் வரவேற்பு

26.01.2020 அன்று சிதம்பரம் கூட்டம் முடித்து பயணக் குழுவினருடன் புதுச்சேரி நோக்கி இரவு 10.05 மணிக்கு புறப்பட்டார் தமிழர் தலைவர், வழியில் கடலூரில் பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி இரவு உணவு முடித்து மீண்டும் பயணத்தை தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புதுச்சேரி அண்ணாமலை தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு புதுச்சேரி மண்டலத் தலைவர் இர.இராசு, மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், இளைஞரணி தலைவர் தி. இராஜா உள்ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்றனர். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி சிதம்பரத்திற்கே வருகை தந்து தலைவரை வர வேற்று அழைத்து சென்றார்கள். இரவு 1 மணியளவில் ஓய் வுக்கு சென்றார் தமிழர் தலைவர் அவர்கள்.

27.01.2020 புதுச்சேரியில் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

புதுச்சேரி அண்ணாமலை விடுதியில் தங்கியிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சி, சமுதாய இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் காலை முதல் மாலை வரை சந்தித்து சமூக நீதி தொடர்பான நடவடிக்கைகள் புதுச்சேரி அரசியல் நிலவரங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதி உரிமை பிரச்சினைகள், நீட் புதிய கல்விக் கொள்கை போன்றவற்றின் ஆபத்துக்கள் குறித்து விவாதித்து உரையாடி மகிழ்ந்தனர். வி.சி.க. பொதுச் செயலாளர் பாவ ணன் மீனவர் விடுதலை பேரியக்க நிறுவனர் மங்கையர் செல்வன், சி.பி.அய் மாவட்டச் செயலாளர் ராஜாங்கம், மத்திய குழு உறுப்பினர் முருகன், விடுதியின் உரிமையாளர் செண்பக ராஜன், ஏகாம்பரம் சமூக நீதி பேரவை பொறுப்பாளர் தன ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் அமைச்சர்

திரா. விசுவநாதன் சி.பி.அய் மாநிலச் செயலாளர் சலீம் உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப்பாளர்கள், புதுச்சேரி கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஆசிரியர் அவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

புதுச்சேரி முதலமைச்சர் சந்திப்பு

நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டு புதுச்சேரி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அவர் தங்கியிருந்த அண்ணாமலை விடுதிக்கு புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு. வே.நாராயணசாமி அவர்கள் வருகை தந்து சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரங்கள், மத்திய அரசின் நிலைப்பாடுகள், புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பரிமாறி பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். முதல்வர் அவர்களுக்கு ஆசிரியர் அவர்களும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புதுச்சேரி பொதுக்கூட்டம் (27.01.2020)

27.01.2020 அன்று எட்டாவது நாள் பயணமாக மாலை 6.40க்கு அண்ணாமலை விடுதியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி அவ்வைத்திடல் சாரம் பகுதியில் அமைக்கப்பட் டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6.45க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். புதுச்சேரி மண்டலத் தலைவர் இர. இராசா வரவேற்றார்.  புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையேற்றார்.  மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் கோ. கிருஷ்ணமூர்த்தி, இரா. சடகோபன், கு. ரஞ்சித் குமார், ந. நடராசன், வீர. இளங்கோவன், லோ. பழனி, இரா. விலாசினிராஜ், அ. எழிலரசி, மு. ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  மாலை 7 மணிமுதல் 7.55 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார்கள்.  முதுகெலும்புள்ள புதுச் சேரி அரசையும் அதன் ஆற்றல்மிகு முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களையும் பாராட்டி பேசினார். புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் வே.நாராயணசாமி அவர்கள் இறுதியாக சிறப்புரையாற்றினார்.  இளைஞரணி தலைவர் தி.இராசா நன்றி கூறினார்.

- தொடரும்

நாகர்கோவில் முதல் சென்னை வரை நீட் எதிர்ப்புப் பெரும் பயணம் நாடெங்கும் மக்கள் பேராதரவு

தொகுப்பு: இரா.ஜெயக்குமார் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

9.2.2020 அன்றைய விடுதலையில்

வெளிவந்ததின் தொடர்ச்சி....

புதுச்சேரி தோழமை இயக்கத்தினர் வரவேற்பு

புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு இர.கமலக்கண்ணன், மாநில தி.மு.க தெற்கு அமைப்பாளர் இரா.சிவா, மேனாள் அமைச்சர் இரா.விசுவ நாதன் சி.பி.அய் மாநில செயலாளர் அ.மு.சலீம், சி.பி.அய். எம்.முருகன் சி.பி.அய் (எம்) செயலாளர் இரா. இராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மனித உரிமை அமைப்பின் பொதுச்செயலாளர், இரா.முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்க பொறுப்பாளர் அ.சி.தீனா, த.பெ.தி.க தலைவர் வீர.மோகன் ஆகியோர் நீட்- பரப்புரை பயணம் மேற்கொண்டு புதுச்சேரி பரப்புரைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரி முதல்வரும், தமிழர் தலைவரும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு

புதுச்சேரி பொதுக்கூட்டத்தை முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் புதுச்சேரி மாண்புமிகு முதல் வர் அவர்களும் பொதுக்கூட்ட மேடையிலேயே செய்தியா ளர்களை சந்தித்து நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மற்றும் புதுச்சேரி அரசின் மாநில உரிமைகள் குறித்து பேட்டி அளித் தனர்.  8.10க்கு திண்டிவனம் நோக்கி புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

திண்டிவனம் பொதுக்கூட்டம் (27.1.2020)

எட்டாவது நாள் இரண்டாவது கூட்டமாக திண்டிவனம் காந்தியார் திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9.05 மணிக்கு வருகைதந்தார் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள்.  மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி தலைமை யேற்றார்.  குழ.செல்வராசு, கே.பாலசுப்பிரமணியன், இரா.அன் பழகன், சு.பெத்தண்ணன், இரா.சாமிநாதன், விஸ்வநாதன் கோதை, மண்டலத்தலைவர் க.மு.தாஸ், விழுப்புரம் சுப்ராயன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9.15 மணி முதல் 10 மணிவரை 45 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் 'நீட்' தேர்வால் நமது மாணவர்கள் அடையும் துன்பங் களை எடுத்துரைத்து உரையாற்றினார்.  மண்டல இளைஞரணி செயலாளர் தா.இளம்பரிதி நன்றி கூறினார்.

தோழமை இயக்கத்தினர் வரவேற்பும் வாழ்த்தும்

மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ஆர்.மாசிலாமணி (தி.மு.க) விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.மஸ்தான், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் பி.சீத்தாபதிசொக்கலிங்கம், சி.பி.அய் (எம்) தெற்கு பகுதி செயலாளர் ராமதாஸ், சி.பி.அய் வட்டச் செயலாளர் ஆ.இன்பஒளி, ம.தி.மு.க நகரச் செயலாளர், ஜெ.பாஸ்கரன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜான்பாஷா, எஸ்.டி.பி.அய் மாவட்டச் செயலாளர் ஏ.எம்.ஆர் சையத்ஹசன் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மாவட்டச் செயலாளர் எச்.தாஜீதின் எம்.டி.கே மாவட்டச் செயலாளர், ஜெ.முகமதுதில்லன், உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப்பாளர்கள் கழகத் தோழர்கள் நீட் எதிர்ப்பு பயணம் மேற்கொண்டு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்று திண்டிவனம் ஆரியாஸ் தங்கும் விடுதியில் இரவு உணவு முடித்து பிறகு ஓய்வுக்கு சென்றார்.

திண்டிவனத்தில் தீப் பந்த வரவேற்பு

முன்னதாக திண்டிவனம் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திண்டிவனம் எல்லையில் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் அவர்கள் தலை மையில் கழகக் கொடியுடன் எழுச்சி முழக்கமிட்டு கழகத் தோழர்கள் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இளைஞரணி தோழர்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு தீப்பந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

28.01.2020 திண்டிவனத்தில் தோழர்கள் சந்திப்பு

ஆரியாஸ் தங்கும் விடுதியில் தங்கியிருந்த தமிழர் தலை வர் அவர்களை ஆரியாஸ் விடுதி உரிமையாளர் மற்றும் தோழமை இயக்க பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சந்தித்து பயனாடை, பழங்கள் வழங்கி பயணம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 28.01.2020 முற்பகல் 10.50 மணிக்கு செய்யாறு நோக்கி புறப்பட்டார்.

செய்யாறு தோழர்கள் வரவேற்பு

9ஆவது நாள் பயணத்தை திண்டிவனத்தில் தொடங்கி முற்பகல் 12 மணிக்கு செய்யாறு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் சிலை அருகில் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அங்கி ருந்து புறப்பட்டார் ஆசிரியர்.

செய்யாறு முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

பகல் 12.15 மணிக்கு செய்யாறு பயணியர் மாளிகைக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள்.  மதியம் 2 மணி வரை யும்,  மதிய உணவுக்கு பின் 4 மணிமுதல் 6 மணி வரையும் செய்யாறு முக்கிய பிரமுகர்கள், வழக்குரைஞர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மருந்து வணிகர் சங்கத்தினர், ஆசிரியர்கள், தோழமை இயக்க பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் (குடும்பத்துடன்) என 100 க்கும் மேற்பட்டவர்கள் சாரைசாரையாக வருகை தந்து ஒளிப்படம் எடுத்து நீட் எதிர்ப்பு பரப்புரைக்கு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.  அனைவரிடமும் விடைபெற்று மாலை 6.10 க்கு கூட்ட மேடை நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.

செய்யாறு பொதுக்கூட்டம் (28.01.2020)

செய்யாறு ஆரணி கூட்டுரோடு அருகில் அமைக்கபட் டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு மாலை 6.20 க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். நகரத்தலைவர் தி.காம ராசன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையேற்றார். பொன்.சுந்தர், ஏ.அசோகன், வடமணப் பாக்கம் வி.வெங்கட்ராமன், முனைவர் மு.தமிழ்மொழி, நா.வெ.கோவிந்தன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 6.45 மணிமுதல் இரவு 7.30 மணிவரை 45 நிமிடங்கள் சிறப் புரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.  ஏரா ளமான பொதுமக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர்.  நகரச் செயலாளர் தங்கம் பெருமாள் நன்றி கூறினார்.

'பெரியார் 1000' மாணவர்களுக்கு பரிசு

தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா? விடை போட்டியில் செய்யாறு மாவட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூட்ட மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். பெற்றோர்களும் ஆசிரியர் களும் உடன் வருகைதந்து பங்கேற்றனர்.

தோழமை இயக்க பொறுப்பாளர்களின் வரவேற்பு

தி.மு.க. மாநில விவசாய அணி துணைச்செயலாளர் வ.அன்பழகன், முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் சி.பி.அய்(எம்), கோவை பழனி, வட்டாரத் தலைவர் பஜ்ராசலம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் எச்.கமால் ஆகியோர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பயணம் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்தனர். அனைவரிடமும் விடைபெற்று இரவு 7.35 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார் ஆசிரியர்.

காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தின் எழுச்சிமிகு வரவேற்பு

28.01.2020 இரவு 8.30 மணியளவில் காஞ்சிபுரம் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு காஞ்சி மக்கள் மன்றத்தி னர் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.  மாவட்ட கழக தலை வர் டி.ஏ.ஜி.அசோகன் காஞ்சி மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் ஜெஸ்சி, மகேஷ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.  பிறகு செங்கொடி ஏந்தி இருசக்கர வாகனங்களில் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காஞ்சி நகர வீதிகளில் எழுச்சிமிகு முழக்கங்களுடன் தலைவர் அவர்களை கூட்ட மேடை வரை ஊர்வலமாக அழைத்து சென்ற காட்சி காஞ்சிபுரத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் (28.01.2020)

ஒன்பதாவது நாள் இரண்டாவது கூட்டமாக  காஞ்சிபுரம், காந்திசாலை, பெரியார் நினைவுத்தூண் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 8.45 மணிக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள்.  மாவட்டச் செயலாளர் பூ.சுந்தரம் வரவேற்றார்.  மாவட்டத்தலைவர் டி.ஏ.ஜி அசோ கன் தலைமையேற்றார். இ.இரவீந்திரன், க.வேலாயுதம், பொன்.இராஜேந்திரன், க.தனசேகரன், செ.ரா.முகிலன் உள் ளிட்டோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9 மணி முதல் 10 மணி வரை 60 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் எழுச்சி முழக்கமிட்டார்.

தமிழர் தலைவர் எழுப்பிய ஒலிமுழக்கங்கள்

காஞ்சிபுரம் கூட்டத்தில் உரையை நிறைவு செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திடீர் என்று ஒழிப்போம் ஒழிப் போம் நீட்டை ஒழிப்போம்,  விரட்டுவோம் விரட்டுவோம் புதியக் கல்விக்கொள்கையை விரட்டுவோம்,  போராடுவோம் போராடுவோம் நீட்டை விரட்டும்வரை போராடுவோம் என எழுச்சி முழக்கமிட்டார். கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று எழுச்சி முழக்க மிட்டது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.  காஞ்சிபுரம் நகரத் தலைவர் கி.இளையவேல் நன்றி கூறினார்.  கூட்டம் முடித்து காஞ்சிபுரம் பயணியர் மாளிகையில் ஆசிரியர் அவர்களும் பயணக் குழுவினரும் இரவு உணவு அருந்தி முடித்த நிலையில் சோகமான செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வந்தது.  திருச்சி தங்காத்தாள் வாழ்விணையர் சின்னப்பன் மறைவு செய்தி.

பெரியார் மாளிகை தங்காத்தாளின் இணையர் சின்னப்பன் மறைவு திருச்சி விரைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்

திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப் பாளர் பெரியார் மாளிகை தங்காத்தாள் அவர்களின் வாழ் விணையர் திருச்சி பதிப்பு விடுதலை பொறுப்பாளர் சின்னப் பன் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி காஞ்சிபுரம் கூட்டம் முடித்து பயணியர் மாளிகை வருகைதந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 10.30 மணிக்கு கிடைத்தது.  உடனடியாக தோழர்களை அழைத்து ஆலோசனை செய்து இரவு 11 மணிக்கு சாலை வழியாக வாகனத்தில் திருச்சி நோக்கி தோழர்களுடன் புறப்பட்டார் ஆசிரியர் அவர்கள்.  29.01.2020 அதிகாலை 4.15 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்த ஆசிரியர் அவர்கள் மறைந்த சின்னப்பன் உடலுக்கு தோழர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து தங்காத்தாள், அறிவுமணி உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து சில மணித்துளிகள் கழித்து பெரியார் மாளிகையில் தங்கியிருந்தார்.

ஓடும் வாகனத்திலேயே இரங்கல் அறிக்கை எழுதிய ஆசிரியர்

வாகனத்தில் திருச்சி நோக்கி தோழர்களுடன் உரையா டியபடி பயணமான ஆசிரியர் அவர்கள் பேனாவையும், பேடையும் எடுத்தார். மளமளவென சின்னப்பன் அவர்க ளுக்கு இரங்கல் அறிக்கையை 15 நிமிடத்தில் எழுதி வண்டி யில் பயணம் செய்த ச.பிரின்சு என்னாரசு பெரியார் அவர் களிடம் இரவு 11.45 மணியளவில் கொடுத்தார்கள். அவர் உட னடியாக தனது செல்பேசியிலேயே டைப் செய்து ஆசிரியர் அவர்களிடம் படித்துக்காட்டி திருத்தம் பெற்று சென்னை விடுதலை அலுவலகத்துக்கு அனுப்பினார். இந்நிகழ்வு உடன் வருகை தந்தோரை வியக்க வைத்தது.

காலை 9.30 மணிக்கு இரங்கல் கூட்டம்

சென்னையிலிருந்து மோகனா அம்மையாரும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் குடும்பத்தினர், கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவரது வாழ்விணையர் ஆகியோர் 29.01.2020 அதிகாலை திருச்சி வந்து சேர்ந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அனைவரும் காலை 9.30 மணியளவில் மறைந்த சின்னப்பன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பிறகு நடந்த இரங்கல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் அவர்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் இரங்கலுரையாற்றினர். பிறகு அனைவரிடமும் விடைபெற்று காலை 10.30 மணிக்கு மீண்டும் காஞ்சிபுரம் நோக்கி சாலை வழியாக புறப்பட்டார் ஆசிரியர்.

திண்டிவனத்தில் மதிய உணவு

29.01.2020 திருச்சியிலிருந்து சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி வருகை தந்த தமிழர் தலைவர் மற்றும் உடன் வருகை தந்தோருக்கு நண்பகல் 1.15 மணிக்கு திண்டிவனம் க.மு.தாஸ் அவர்கள் ஏற்பாட்டில் திண்டிவனம் ஆரியாஸ் உணவு விடுதியில் மதிய உணவு அளிக்கப்பட்டது. மதிய உணவுக்கு பின் அவர்களிடமிருந்து விடைபெற்று மதியம் 2 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார். ஆசிரியர் அவர்கள் மாலை 3.30 மணியளவில் காஞ்சிபுரம் பயணியர் மாளிகையை வந்தடைந்தார். ஆசிரியரை காஞ்சிபுரம் மாவட்ட கழக தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் வரவேற்று அனைவருக்கும் தேனீர் வழங்கினார்.

அரக்கோணம் பொதுக்கூட்டம் (29.01.2020)

29.01.2020 அன்று மாலை 6.10 மணிக்கு காஞ்சிபுரம் பயணி யர் மாளிகையிலிருந்து தனது 10  ஆவது நாள் பயணத்தை தொடங்கினார் ஆசிரியர். அரக்கோணம்  எஸ்.ஆர்.கேட் அருகில் அமைக்கப்பட்டிருந்த கூட்ட மேடைக்கு மாலை 6.55 க்கு வருகை தந்தார்கள். மாவட்ட அமைப்பாளர் கொ.ஜீவன்தாசு வரவேற்றார், மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் தலைமையேற்றார், க.தீனதயாளன், பொன்.வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர். இரவு 7 மணி முதல் 7.51 வரை 51 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள், பொது மக்கள் பெருந்திரளாக கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர், நகர செயலாளர் பெரியார் நேசன் நன்றி கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

அரக்கோணம் கூட்டம் முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடை எதிரே இருந்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் குறித்தும் பேட்டியளித்தார். இரவு 7.55 மணிக்கு திருத்தணி நோக்கி பயணமானார் அசிரியர்.

அரக்கோணத்தில் வரவேற்பு

அரக்கோணம் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் எழுச்சி முழக்கமிட்டு அரக்கோணம் எல்லையில் வரவேற்றனர்.

திருத்தணி பொதுக்கூட்டம் (29.01.2020)

திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 8.35 மணிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். மாவட்டச் செய லாளர் அறிவுச்செல்வன் வரவேற்றார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மணி வரவேற்றார், மோகனவேல், க.எழில், இரா.ஸ்டாலின், சி.வீரமணி ஆகியோர் முன்னிலையேற்றனர். இரவு 8.55 மணி முதல் 9.35 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார், பொது மக்கள் பெருந்திரளாக கூடிநின்று ஆசிரியர் உரையை கேட்டு தெளிவு பெற்றனர், நகர செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சி தொடக்கத்தில் திருத்தணி பன்னீர் செல்வத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் இரவு உணவு

திருத்தணிக் கூட்டம் முடித்து ஆசிரியர் அவர்களும் பயணக்குழுவினரும் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் இரவு உணவு அருந்தி அவர்களிடமிருந்து 10.30 மணியளவில் விடைபெற்று நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை அடையாறு இல்லத்திற்கு ஆசிரியர் அவர்களை வழியனுப்பிவிட்டு இரவு 1.15 மணியளவில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தனர் பயணக்குழுவினர்.

சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் அவர்கள் பயணக் குழுவினரை சந்திப்பும் - பாராட்டும்

நிறைவு நாள் 30.01.2020 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார் ஆசிரியர். 10 நாட்களாக தேங்கிக் கிடந்த கடிதங்களை படித்தல் மற்றும் அலுவலகப் பணிகளை முடித்து பகல் 1.00 மணியளவில் பெரியார் அருங்காட்சியகத்தில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தில் ஏற்பட்ட நிறை குறைகளை கேட்டு, பேச்சாளர்கள், ஓட்டுநர்கள் பொறுப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவரின் உழைப்பையும் பாராட்டியதோடு ஒரு சிறு பிரச்சினைகள் கூட ஏற்படாமல் வெற்றிகரமாக பயணம் முடிந்ததை மகிழ்ச்சியோடு பரிமாறி எதிர்காலத்தில் சரி செய்யப்பட வேண்டிய சில யோசனைகளையும் தெரிவித் தார், அனைவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். பிறகு பயணக்குழுவினர் அனைவரும் ஆசிரி யர் அவர்களோடு குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். தாம்புரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் அவர்கள் ஏற்பாட்டில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய் யப்பட்டு பரிமாறப்பட்டது.  தமிழர் தலைவர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் பயணக்குழுவினருடன் மதிய உணவு அருந்தினர்.  மதியம் 2.30 மணியளவில் அனைவரிடமும் விடைபெற்று புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நிறைவுவிழா பொதுக்கூட்டம் (30.01.2020)

30.01.2020 மாலை 6.10 மணிக்கு சென்னை அடையாறு இல்லத்திலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை எம்.ஜி.ஆர் நகர். கலைஞர் கருணாநிதி சாலையில் அமைக்கப்பட்டிருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும்பயண நிறைவு விழா பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 7 மணிக்கு வருகை தந்தார். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்றார்.  தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையேற்றார்.  தி.இரா.ரத்தினசாமி, செ.கோபால், பழநி.பன்னீர்செல்வம், ப.முத்தை யன், மதியழகன், ராகவன், தாமோதரன், அய்யாத்துரை, சேகர், மகேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர்.

நீட் விளக்க புத்தகத்தை பொதுமக்களிடம் விற்பனையில் இறங்கிய தமிழர் தலைவர்

பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒலிபெருக்கியை பிடித்து நீட் தொடர் பான புத்தகங்களை பொதுமக்களிடம் பெருமளவில் கொண்டு செல்லும் நோக்கோடு மேடையில் இருக்கின்ற நமது தலைமைக் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் மேடையை விட்டு கீழே இறங்கி பொதுமக்களிடையே கொண்டு வருவார்கள்.  அனைவரும் வாங்கி மக்களிடையே பரப்ப வேண்டும் என அறிவித்து நானே தொடங்கி வைக்கிறேன் என மேடையிலிருந்து கீழே இறங்கி ரூ.1800 க்கு பொது மக்களிடம் ஆசிரியர் அவர்களே புத்தகங்களை விற்பனை செய்தார்.  மேடையிலிருந்த தலைமைக் கழகப் பொறுப்பா ளர்கள் அனைவரும் பொதுமக்களிடம் சென்று புத்தகங்களை விற்பனை செய்தனர்.  தலைவரே களத்தில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டுக் புத்தகங்களை வாங்கினர்.

அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்று உரை

11 நாட்கள் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் அனைத்து கட்சி தலைவர்கள் உரையாற்றினார்கள்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ம.தி.மு.க கொள்கை விளக்க அணி செயலாளர் க.அழகுசுந்தரம், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.எச்.ஜவஹருல்லா, சி.பி. அய்.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, தி.மு.க செய்தி தொடர்பு செயலாளர், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட் டோர் சிறப்புரையாற்றினார்கள்.  87 வயதிலும் மிகவும் உற் சாகமாக கடந்த 11 நாட்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் அவர்களின் நோக்கம் நிறைவேற எங்களின் ஆதரவு என்றும் உண்டு என வாழ்த்து தெரிவித்து உரை யாற்றினார்.  இரவு 9.40 முதல் 10 மணிவரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவு விழா பேருரையாற்றினார். கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், வருகைதந்து கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய தோழமைக்கட்சி தலை வருக்கும் நன்றி தெரிவித்து, நீட்தேர்வின் அவலங்களால் நமது சமுதாய மாணவர்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுவதை எடுத்துரைத்து உரையாற்றினார். இறுதியாக மாவட்டச் செய லாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கிராமப்பிரச்சாரகுழு அமைப் பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன், கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஆகியோர் தொடக்கவுரையாற் றினார்கள். கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், கழக பொருளாளர் வீ.குமரேசன், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், அமைப்பு செயலாளர்கள் பழனி.பன்னீர்செல்வம், வே.செல்வம், ஊமை.ஜெயராமன், துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார், மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன், மகளிர் பாசறை செயலாளர் மணியம்மை, வழக்கு ரைஞர் வீரமர்த்தினி, பவானி உள்ளிட்ட கழகப் பொறுப்பா ளர்களும், பொதுமக்களும் கழகத் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர், நிறைவு விழா பொதுக்கூட்டத்தை மாநாடு போல் ஏற்பாடுகளை செய்த சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

சென்னை அடையாறு இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பிரியாவிடை பெற்ற பயணக்குழு தோழர்கள்

சென்னை நிறைவு விழா பொதுக்கூட்டம் முடிந்து தமிழர் தலைவர் அவர்களோடு சென்னை அடையாறு இல்லம் வருகை தந்த பயணக்குழுவினர் அனைவரும் இரவு உணவு முடித்து அவரவர் ஊருக்கு புறப்பட தயாராக இருந்த கழகத் தோழர்களை இரவு உணவு முடித்து ஓய்வுக்கு செல்லாமல் கீழே இறங்கி வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவரும் பத்திரமாக பாதுகாப்பாக ஊர் போய் சேர வேண்டும் என தெரிவித்து நுழைவு வாயில் வரை வந்து அனைவரையும் இரவு 11.30 மணிக்கு வழியனுப்பிவைத்துவிட்டு பிறகு ஓய்வுக்கு சென்றார். பயணக்குழுவில் பங்கேற்ற தோழர்கள் அனைவரும் தங்கள் தலைவரிடம் பிரியாவிடை பெற்று தங்கள் ஊருக்கு பயணமானார்கள். யாருக்கும் கிடைக் காத நமது தலைவர் ஆசிரியர் தலைமையில் பணி செய்ய கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதி மகிழ்ச்சியுடன் பயணித்தனர். நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணத்தின் அனைத்து கூட்டங்களிலும் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், கிராம பிரச்;சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்கள்.

சிறப்பான ஏற்பாடுகளை செய்து உபசரித்த மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்

நீட் தேர்வால் ஏற்படும் பேராபத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திட தமிழர் தலைவர் அவர்கள் 11 நாட்கள் மேற்கொண்ட பரப்புரை பெரும்பயணம் குறுகிய கால இடைவெளியில் அறிவிக்கப்பட்டாலும் இடையில் பொங்கல்விழா குறுக்கிட் டாலும், தலைவர் இடுகின்ற கட்டளைகளை இராணுவக் கட்ட ளையைவிட மேலாக கருதி உழைத்திடும் நமது மாவட்டக் கழக, ஒன்றியக் கழக, நகரக் கழக, மாநிலக்கழக, மண்டலக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் புயல் வேகத்தில் பணிகளை தொடங்கி வசூல்பணி, சுவர் விளம்பரம், சுவ ரொட்டிகள் விளம்பரம் தோழமைக் கட்சிகள் ஒருங்கிணைப்பு, மேடை, ஒலி,ஒளி அமைப்பு உட்பட அனைத்து ஏற்பாடுக ளையும் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தனர்.  பயணக் குழுவில் பங்கேற்று வந்த தோழர்களுக்கு தங்குமிட வசதி, உணவு ஏற்பாடு உபசரிப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று உபசரிப்பு உட்பட அனைத்தையும் மகிழ்ச்சியுடன் செய்து முடித்த சுயநலம் கருதாத நமது கழக தோழர்களின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது.  நீட்டை விரட்டும் வரை நமது தலைவர் இடும் எந்த கட்டளையையும் ஏற்று போராட்டத்தில் சிறை செல்ல தயாராவோம் தயாரா வோம்.  நன்றி.

(நிறைவு)

-  விடுதலை நாளேடு 8 ,9 ,11 .2 .20