செவ்வாய், 31 டிசம்பர், 2019

எழுந்தது எதிர்க்கட்சியினரின் மாக்கடல் பேரணி!

வீழ்ந்திடும் த்பாசிச குடியுரிமைத் திருத்த மசோதா

தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழர் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

சென்னை, டிச.23  மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து இன்று சென்னையில் நடத்தியது வெறும் பேரணியல்ல, மக்கள் கடலின் மாபெரும் அணிவகுப்பு!

மத்திய பா.ஜ.க. பாசிச அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இன்று (23.12.2019) காலை சென்னையில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் எந்தவிதமான ஆழ்ந்த பரிசீலனை, பார்லிமெண்டரி செலக்ட் கமிட்டி போன்றவைகளின் பரிசீலனைக்கூட இல்லாமல், தடா லடியாக தங்களுக்குள்ள பெரும்பான்மை என்ற ஒரே பலத்தினைப் பயன்படுத்தி, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுப் பெற்றன. டில்லி, உத்தரபிரதேசம், கருநாடகா ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உயிரிழப்பு களும் நிகழ்ந்தன.

தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட் டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த பேரணிக்கு அனுமதி கேட்டு தி.மு.க. சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக் கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும் தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்று தி.மு.க. சார்பில் தெரிவிக் கப்பட்டது. இதற்கிடையே பேரணிக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தி.மு.க. பேர ணிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் அமைதியான முறையில் பேரணியை நடத்த வேண்டும் என்றும் வன்முறை ஏற்பட்டால் தலைவர்களே பொறுப்பு என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து தி.மு.க. பேரணி இன்று (23.12.2019)  காலை திட்டமிட்டபடி நடைபெற்றது.

தாளமுத்து நடராசன்

மாளிகையிலிருந்து...

எழும்பூரில் உள்ள தாளமுத்துநடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரையில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இன்று காலை 8 மணியில் இருந்தே தி.மு.க. தொண் டர்கள் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே குவியத் தொடங்கினார்கள்.

தோழமைக் கட்சிகளான திராவிடர் கழகம், ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.அய்., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

பேரணியில் பங்கேற்க 98 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபடி ஏராள அமைப்புகளை சேர்ந்த வர்களும், மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேரணியில் பங்கேற்பதற்காக 10.15 மணி அளவில் வந்தார். பின்னர் கூட்டணி கட்சி தலைவர்களை கைகுலுக்கி அவர் வரவேற்றார். இதையடுத்து முக.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக பேரணி தொடங்கியது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ராமகிருஷ்ணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அய்.ஜே.கே. கட்சி பொதுச்செயலாளர் சத்தியசீலன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், எம்.பி.கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், கதிர்ஆனந்த், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, மற்றும் மு.க.தமிழரசு, நடிகர் அருள்நிதி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, பூங்கோதை, மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பேரணியில் நடந்து சென்றனர்.

இம்மாபெரும் கண்டனப் பேரணியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் சென்னை மண்டலம், வடசென்னை, தென்சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள், கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

நாஞ்சில் சம்பத் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியின் முன் வரிசையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்களும் அணிவகுத்துச் சென்றனர்.

பேரணியில் பங்கேற்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஆகியோர் அவ்வப்போது அறிவிப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தனர்.

குடியுரிமை சட்ட நகலையோ, கொடும்பாவிகளையோ யாரும் எரிக்கக்கூடாது என்று கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.

தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து புறப் பட்ட பேரணி லேங்ஸ் கார்டன் ரோடு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை சென்றடைந்தது.

அங்கு தலைவர்கள் பேசுவதற்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறிய தலைவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் ஒலிமுழக்கங்களை எழுப்பினார்கள்.

அதசியம் - ஆனால், உண்மை!

கண்டனப் பேரணியில் அய்யப்பப் பக்தர்களும், காவி உடையுடன் பங்கேற்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டு வந்தனர்.

'படை பெருத்தது - பார் சிறுத்தது' குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மக்கள் கடலின் எழுச்சிப் பேரணி (சென்னை, 23.12.2019)



Smaller Font

- விடுதலை நாளேடு, 23.12.19

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம்!

சென்னை. டிச. 21- குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, திராவிட மாணவர் கழகஜத்தின் சார் பில் சாஸ்திரி பவன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு நன்னாரெசு பெரியார் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப் பையும் மீறி, நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடிரிமைத் திருத்தத் சட்டத்தை மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து நாடெங்கிலும் மாணவர்கள் கடுமையான போராட்டத்தை முன் னெடுத்தனர்! அதன் தொடர்ச்சியாக திராவிட மாணவர் கழகத்தினர், அதன் மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் மத்திய அரசின் அலுவலகமான சாஸ்திரிபவன் அலுவலகத்தை 19-.12.2019 காலை 11 மணி அளவில் முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்! எதிர்பாராத இந்தப் போராட்டத்தால் அந்தப்புகுதியில் சற்று நேரம், போக்குவரத்து நெரிச லும், பரபரப்பும் ஏற்பட்டது!

முற்றுகை! மறியல்! சிறை!

கல்லூரி சாலையில் உள்ள வானி யல் ஆயுவு மய்யத்திலிருந்து ஆர்ப் பாட்டம் தொடங்கியது! பிரின்சு என்னாரெசு பெரியார் மத்திய அர சைக் கண்டித்து முழக்கமிட்டபடியே வர, தோழர்களும் உணர்ச்சிபூர்வமாக முழக்கங்கள் இட்டபடியே பின் தொடர்ந்தனர்! கல்லூரி சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஹேடோசு சாலை வழியாக சென்று, சாசுத்திரிபவனை அடைந்தது! அங்கு சாஸ்திரிபவன் அலுவலகத்தின் முதன்மை வாயில் முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் குவிந்தவுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்! அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர் களை காவல் துறையினர் கைது செய்து, வள்ளுவர் கோட்டம் சாலை யில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத் திற்கு எதிரில் உள்ள, ஏபிவிபி திருக் கோயில் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

சிறைக்குள்ளும் அறிவுரையாடல்!

கைது செய்து செய்யப்பட்டத் தோழர்கள், தாங்கள் திராவிடர் கழ கத்திற்கு எப்படி வந்தோம்  என்ப தைப்பற்றி தனிதனியாக விவரித்தனர். கழகத்தின் பேச்சாளர் சே.மெ. மதிவதனி ஆசிரியரின் சிறப்புகளைப் பற்றி மாணவரணித் தோழர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பேசினார். மாணவரணித் தோழர்கள் அனை வரும் தனித்தனியாக ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆவடி விஜய் ஜாதி, அதன் தன்மைகள், அதை மக்கள் இன்னமும் புரிந்துகொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் தொல்லைகள் பற்றி விரிவாகப் பேசினார். அதைத் தொடர்ந்து புழல் அறிவுமாணன் பகுத்தறிவு, மூடநம்பிகை ஒழிப்புப் பாடல்களைப் பாடி தோழர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வை பெரியார் களம் தலைவர் தோழர் இறைவி நெறிப்படுத்தினார். பிற்பக லில் கைதானவர்களை பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ், மண்டலச் செய லாளர் தே.செ.கோபால் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார். மாலை 6 அளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட் டத் தலைவர் பா.முத்தையன், செய லாளர் கோ.நாத்திகன், தாம்பரம் நகரச் செயலாளர் சு.மோகன்ராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி,  பொன் னேரி வே.அருள், ஆவடி மாவட்ட இ¬ளைஞரணிச் செயலாளர் வி. சோபன்பாபு, தாம்பரம் ரூபன் தேவ ராஜ், புழல் அறிவுமாணன், பூந்தமல்லி சுரேசு, பூந்தமல்லி நகர அமைப்பாளர் மணிமாறன், பூவை சு.வெங்கடேசன், ஆவடி மாவட்ட மாணவரணிச் செய லாளர் வெற்றி, ஆவடி இளைஞரணித் தோழர் இ.தமிழ்மணி, திருவொற்றியூர் இளைஞரணித் தோழர் இரா.சதீசு,  மண்டல மாணவரணித் தலைவர் இர.சிவசாமி, பெரியார் களம் தலை வர் இறைவி, தென்சென்னை மாவட்ட மாணவரணித் தலைவர் வி.விசுவாசு, மாணவரணித் தோழர்கள் பொ.இ. பகுத்தறிவு, ஆவடி மாவட்ட மாண வரணித் தலைவர் செ.பெ.தொண் டறம், சென்னை மண்டல மாணவர ணிச் செயலாளர் வ.ம.வேலவன், வட சென்னை மாவட்ட மாணவரணிச் செயலாளர் சு.தமிழ்செல்வன், சி.பிர பாகரன், கோயம்பேடு மா.திருமால், மாநிலக்கல்லூரி மாணவர் வை.கு. நிரஞ்சன், சோலவரம் பா.சக்கரவர்த்தி, தரமணி கோ.மஞ்சநாதன், ஊரப் பாக்கம் பி.சீனிவாசன், சட்டக்கல்லூரி மாணவர் செ.பிரவீன்குமார், திரு வள்ளூர் மு.மேகலா, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மே.மதி வதனி, செங்குன்றம் கவு.ஜெகத்விஜய குமார், ஆகியோர் கைது செய்யப்பட் டனர்.

-  விடுதலை நாளேடு, 21.12.19


கிரகண மூடநம்பிக்கையை முறியடிக்கும் நிகழ்ச்சி (சென்னை, 26.12.2019)

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், Parthasarathy Rationalist உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வானம் மற்றும் வெளிப்புறம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், Anbu உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், Parthasarathy Rationalist மற்றும் Vilvanathan R உட்பட, பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் சாப்பிடுகின்றனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவு


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

26.12.19 முற்பகல் நிகழ்ந்த சூரிய மறைப்பின் (கிரகணத்தின்) பொழுது மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் பெரியார் திடல் வாயிலில் உணவு உண்டு மகிழ்ந்தோம்!


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்
இந்தக் கடமையைத்தான் திராவிடர் கழகம் செய்து கொண்டுள்ளது; மூளையைப் பிடித்த கிரகணம் நீங்குவதுதான் உண்மை விடுதலை
கிரகண மூடநம்பிக்கையை விளக்கி தமிழர் தலைவர் அறிக்கை
* சூரிய கிரகணம் - சந்திர கிரகணம் இயற்கையின் நிகழ்வு
* இதில் மூடநம்பிக்கைகளைப் புகுத்துவது வெட்கக்கேடு!

* விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம்

சூரிய கிரகணம் என்பது இயற்கை யில் நிகழக்கூடிய ஒன்றே! இதில் மூடநம்பிக்கையைப் பரப்பி வருகிறார் கள். இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ மக்களிடத்திலே விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என் கிறது - அந்தக் கடமையை திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் செய்து கொண்டிருக்கிறது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
கிரகணங்கள் (eclipses) என்பவை சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை - பூமி, சூரியனை சுற்றி வரும்போது - ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் மறைப்புகள் ஆகும்; குறிப்பிட்ட நேரத் திற்குப் பிறகு அது விலகிவிடும்; வழக்கம் போன்ற வெளிச்சம் பூமியில் உள்ளோ ருக்குக் கிடைக்கும்.
இதை அறிவியலில் - விஞ்ஞான வகுப் பில் நமது மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும்கூட தேவையற்ற புராண மூடநம்பிக்கைக் குப்பைகளையும் நமது மாணவர்கள், இளம்பிஞ்சுகள் உள்ளத்தில் அச்சுறுத்தும் வகையில், கற்பனைக் கட்டுக் கதைகளைப் பரப்பி, மூடநம்பிக்கைகளைப் பரப்பி, அதன் தோஷம் நீங்க, தர்ப்பைப் புல்லை, சட்டிப் பானை முதல் வீட்டில் எல்லா இடங்களிலும் போடவேண்டும்; பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து ‘‘கிரகண தோஷம்'' நீங்கிட மந்திரம் ஜபித்து, தானம் வழங்கவேண்டும் என்றும்,
கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாதா?
அந்தக் கிரகணத்தில் பெண்கள் குறிப் பாக கர்ப்பிணிப் பெண்கள் - வெளியே வரக்கூடாதென்றும், இன்னும் பல மூட நம்பிக்கைகளை அடுக்கடுக்காய் மூளைக்கு விலங்கு போட்டு, நமது மூளையில் ஏற்றி வைத்துள்ளார்கள்.
கிரகணம்பற்றி விஞ்ஞான பாடம் எடுக்கும் ஆசிரியர்களே, வீட்டில் குளிப்பது, தர்ப்பைப் புல்லைப் போடுதல் முதலிய சடங்குகளுக்குள் சரணாகதி அடைவது மகாவெட்கக்கேடு! தந்தை பெரியார் கூறு வதுபோல், படிப்பிற்கும், பகுத்தறிவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; வெறும் தேர்வு - மதிப்பெண் படிப்பினால் காதொடிந்த ஊசி அளவுக்குக்கூடப் பயனில்லை!
‘ராகு, கேது என்ற பாம்புகள்' விழுங்கு வதுதான் புராணக் கதை!
அதுமட்டுமா?
சூரியனுக்குக் குழந்தை பிறக்குமா?

சூரியனுக்கும், குந்திதேவிக்கும் பிறந்த குழந்தைதான் கர்ணன் என்ற பாரத (பாதக) கதை.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் 27 பெண் டாட்டிகள் என்பது, சந்திரன் பெற்ற சாபத் தால்தான் தேய்பிறை - பிறகு வேண்டிக் கொண்டதால் வளர்பிறை என்ற  பூகோள அடிப்படை அறிவையே கெல்லி எறியும் விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞானக் கதைகள்!
படித்தவர்கள் பலர்கூட ஜோதிடத்தை நம்பி நாசமாகிறார்கள்; ஏடுகள் ராசி பலன், வார பலன், நாள் பலன் எல்லாவற்றிற்கும், ஆங்கில ஆண்டுக்கும் பிறந்த நாளை வைத்து, இந்த கிரக பலன் கூறுவது எவ்வளவு வேடிக்கையும், விந்தையும் நிறைந்தது! இதில் கூடுதல் வெட்கக்கேடு - கம்ப்யூட்டர் ஜோதிடமாம்!  அஞ்ஞானத்தை விஞ்ஞானத்தின்மூலம் பரப்பும் வெட்கக்கேடு!
வானியல் வேறு; ஜோதிடம் வேறு!
வானவியலை (Astronomy) பகுத்தறிவா ளர்களான நாங்கள்  முழுக்க முழுக்க ஏற் கிறோம். ஆனால், ஜோதிடம் என்ற Astrology  என்பது போலி விஞ்ஞானம் (Pseudoscience). 9 கிரகங்களா,8 கிரகங் களா? புதிய கிரகங்கள் ஏராளம் உள்ளனவே - அவற்றிற்கென்று ஜோதிடத்தில் இடம் இல்லையே! செவ்வாய்த் தோஷம் பேசி, அதை நம்பி பல பெண்களின் திருமண வாழ்க்கையைக்கூட இழந்து தற்கொலை வரை செல்லும் கொடுமை உள்ள நாட்டில், செவ்வாய்க் கோளில் நாம் ஏவிய ஏவுகணை ராக்கெட்டுகள் வெற்றிகரமாகத் திரும்பி னவே - அதுவும் ஒரு செவ்வாய்க்கிழமை யிலே - அதைக் கண்ட பிறகாவது, திருந்த வேண்டாமா? மூடநம்பிக்கை இருளிலி ருந்து பகுத்தறிவு வெளிச்சத்திற்கு வர வேண்டாமா?
அரசமைப்புச் சட்டம்

என்ன கூறுகிறது?
நமது அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவு, குடிமக்களின் அடிப்படைக் கடமை களில் ஒன்றான,
அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்,
கேள்வி கேட்டு ஆராயும் பண்பு, மனித நேயம், சீர்திருத்தம் இவைகளைப் பரப்ப கட்டளை இட்டுள்ளதே!
அதன்மீது பிரமாணம் எடுத்தவர்கள் பரப்புகிறார்களா? பகுத்தறிவாளர்களும், இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் தானே அதைச் செய்கிறார்கள். ஆட்சியா ளர்கள் இதை கேலிக் கூத்தாக்கி மூடநம் பிக்கையை முழு மூச்சுடன் பரப்பும் பணி யில் ஈடுபடுவது அரசமைப்புச் சட்ட பிர மாண உறுதிமொழிக்கு விரோதம் அல்லவா?
மூளைக் கிரகணம் நீங்கவேண்டும்
இவர்களைப் பிடித்த ‘‘மூளைக் கிர கணம்'' எப்போது நீங்குமோ அப்போதுதான் உண்மை விடுதலை! விடுதலை!!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.12.2019
கேள்விக்கென்ன பதில்?

சூரிய கிரகணத்தின்போது இந்துக் கோவில்கள் மட்டும் மூடப்படுவதேன்?

சூரிய கிரகணத்தின்போது கோவில்களின் நடை மூடப்பட்டு, கிரகணம் முடிந்த பின்னரே திறக்கப்படுகிறது!
ஏன் இந்து கடவுள்களுக்கு மட்டும்? மற்ற மதக் கடவுள்களுக்கு இல்லை. மாதாக் கோவில், பள்ளிவாசல் - மசூதிகள் ஏன் மூடப்படுவதில்லை?
அந்தக் கடவுள்களுக்கு மட்டும் ‘பயம்' இல்லையா? ‘தோஷம்' பிடிக்காதா?
வேடிக்கையாக இல்லையா?

கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்ச்சியின் விவரம் 5 ஆம் பக்கம் காண்க
அறிவியல் ஆர்வமிகுதியில் பெண்கள், குழந்தைகள் பெரியார் திடலில் குவிந்தனர்
சூரிய கிரகணத்தின்போது மூடநம்பிக்கைகள் முறியடிப்பு

மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்வில் கழகக் குடும்பங்களோடு தமிழர் தலைவர் உணவருந்தினார்


சென்னை,டிச.26, சூரிய கிரகண மூடநம்பிக் கைகளை முறியடிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம் சார்பில் இன்று (26.12.2019) காலை நடத்தப் பட்டது.  நிகழ்ச்சியை திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.
செந்தமிழ் சேகுவேரா அறிவியல் விளக்கங் களை எடுத்துரைத்தார். இளைஞர்கள், மாண வர்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராள மானவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் திரண்டிருந் தார்கள்.  கிரகணத்தின்போது சூரியனை பாது காப்பான கண்ணாடியால் அனைவரும் கண்டு பயன் பெற்றனர்.
சூரியகிரகண மூடநம்பிக்கைகளை முறி யடிக்கும் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிற்றுண்டி அருந்தினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி,  பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத் தய்யன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலா ளர்கள் செ.ர.பார்த்த சாரதி,கோ.நாத்திகன், தி.செ. கணேசன்,  விடுதலைநகர் ஜெயராமன் மற்றும் சி.வெற்றி செல்வி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பெரியார் களம் இறைவி, சவுந்தரி நடராசன், தங்க.தனலட்சுமி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் ந.விவேகானந்தன், சென்னை மண்டல இளை ஞரணி  செயலாளர் இர.சிவசாமி, பெரியார் சமூகக் காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ், மகளிரணி நூர்ஜகான், சுமதி கணேசன், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பூங்குழலி, ஆ.வெங்கடேசன், திண்டிவனம் சிறீராமுலு, திருவண்ணாமலை கவுதமன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், சீனுவாசன், புரசை சு.அன்புச்செல்வன்,  மடிப்பாக்கம் பாண்டு, கொரட்டூர் பன்னீர்செல்வம், கொடுங்கையூர் கோ.தங்கமணி, திராவிடர் மாணவர் கழகத்தினர் உள்பட கழகத் தோழர்கள், பொதுமக்கள் பெருந் திரளாக திரண்டிருந்தனர். கருவுற்ற பெண்கள் வெளியே வரக்கூடாது என்கிற மூடநம்பிக்கையை முறியடித்து சீர்த்தி - பகலவன் இணையர் தமிழர் தலைவருடன் சூரிய கிரகணத்தின்போது உணவருந்தினார்கள்.
"செய்வதையே சொல்கிறோம், சொல்வதையே செய்கிறோம்" என்று மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்ச்சி எழுச்சியுடன் பெரியார் திடலில் கழகத் தோழர்களால் சிறப்பாக ஏற்¢பாடு செய்யப்பட்டது.
அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அரும்பாக்கம் சா.தாமோதரன் சிக்கன் பிரெட் அளித்தார். வானவியல் காட்சி திரையிடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடை பெற்றது. பெரியார் பிஞ்சுகளுக்கான ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.
- விடுதலை நாளேடு 26 12 19

திங்கள், 23 டிசம்பர், 2019

திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம்

தந்தை பெரியார் நினைவு நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன.  24.12.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு  சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை வழியாக பெரியார் திடலை அடைகிறது. திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள்  உள்ளிட்ட பலரும் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர்.

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமையப்பெற்றுள்ள 21அடி உயர பெரியார் முழு உருவச்சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  தலைமையில் மாலை அணிவிக்கப் படுகிறது.

பெரியார் நினைவிடம், அன்னை மணியம் மையார் நினைவிடம், சுயமரியாதை சுட ரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கழகத் தோழர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர்.

மாலை நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் நினைவு நாளில் பெரியார் விருது வழங்கும் விழா, புத்தக வெளியீட்டு விழா 24.12.2019 அன்று மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்று நூல்களை வெளியிட்டு, விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றுகிறார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகிக்கிறார்.

நூல் வெளியீட்டு விழா

புலவர் பா.வீரமணி தொகுப்பில் ஆசிரியர் கி.வீரமணியை பதிப்பாசியராகக் கொண்டு, ‘பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்’ 3 தொகுதி நூல்கள் வெளியிடப்படுகின்றன.

‘பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்’ 3 தொகுதி நூல்களின் நன்கொடை மதிப்பு ரூ.750. பெரியார் நினைவு நாளில் சிறப்புத்தள்ளுபடியில் ரூ.600க்கு வழங்கப்படுகிறது.

பெரியார் விருது வழங்கும் விழா

பெரியார் பன்னாட்டமைப்பு இயக்குநர் சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன், புதுக் கோட்டை மருததுவர் சூ.செயராமன், தோழர் திருமுருகன்காந்தி ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, முனைவர் மு.நாக நாதன், புலவர் பா.வீரமணி ஆகியோர் உரையாற் றுகின்றனர். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகிறார். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி நன்றி கூறுகிறார்.

பெரியார் மணியம்மை மருத்துவமனையில்

இலவச பொது மருத்துவ முகாம்

24.12.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம் பெரியார் நினைவு நாளையொட்டி நடைபெறுகிறது.

 

புதன், 18 டிசம்பர், 2019

தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா (சுயமரியாதை நாள்) - கோட்டூர்

மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா (சுயமரியாதை நாள்)

நீட் - "புதிய கல்விக் கொள்கையை" எதிர்த்து தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள்

சென்னை, டிச.18 தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடை பெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா (சுயமரியாதை நாள்) ‘நீட்', ‘புதிய கல்விக் கொள்கையை' எதிர்த்து தெருமு னைப் பரப்புக் கூட்டங்கள் நடைபெற்றன.

நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


அவர்களின்

தென் சென்னை - கோட்டூர்

தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கோட்டூர் அங் காடி பகுதியில் 07.12.2019 அன்று மாலை 6.00 மணி அளவில் தொடங்கி திராவிடர் கழகம் - இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம்  ந.மணித்துரை  (மாவட்ட இளைஞரணி செயலாளர்)   தலைமையிலும்  இரா.வில்வ நாதன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), செ.ர.பார்த்த சாரதி (மாவட்ட செயலாளர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணை தலைவர்), கோ.வீ.ராகவன் (மாவட்ட துணை செய லாளர்), சா.தாமோதரன் (துணை செயலாளர்),   மற்றும் மு.இரா.மாணிக்கம் (தலைவர், தென் சென்னை, பகுத்தறிவாளர் கழகம்) ஆகியோர் முன்னிலையிலும் சிறப்புடன் நடை பெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந.சிவசீலன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக 'இனநலம் கலைக் குழு'வை  சேர்ந்த பிரின்சு என்னாரசு பெரியார், இறைவி, து. கலைச்செல்வன், உடுமலை வடிவேலு ஆகியோரின்  கலை நிகழ்ச்சி நடைபெற்றது .

ஓவியா அன்புமொழி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), வீ.குமரேசன் (பொருளாளர்), ஆளூர் ஷாநவாஸ் (துணைப் பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தை கட்சி)  ஆகியோர் உரையாற்றியதற்கு பின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணிகளைப் பாராட்டி அனைவரும் பேசினர். 31 சி சட்டம் வடிவமைத்துக் கொடுத்து ஒன்பதாவது அட்டவணையில் 69 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை  மூன்று பார்ப்பனர் களை கொண்டே சேர்க்க வைத்து சாதனை படைத்தவர், ஏராளமான  மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தி  மண்டல் குழு அறிக்கையை அமலாக்க செய்தவர்,  அரசால் தமிழுக்கு ஆபத்து, இந்தி திணிப்பு, கல்வி உரிமை பறிப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு போன்ற  தமிழர்களின் உரிமைகள் தமிழ்நாட்டின் உரிமைகள்  பறிக்கப்படும் நிகழ்வுகளின் போதெல்லாம் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தி  தமிழர் தலைவர் என்றென்றும் சாதனை படைத்து வருகிறார், சாதனைகளை பாராட்டும் வகையில் அமெரிக்க மனிதநேய அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது என  சுட்டிக் காட்டினர். பிஜேபி அரசின் தமிழர் விரோத செயல்களையும் பார்ப்பனர்களின் உயர்வுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்டோரின் இட ஒதுக்கீட்டை பறிப்பது குறித்தும் விளக்கி பேசினர்.

வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), தே.செ. கோபால் (மண்டல செயலாளர்), சு.குமாரதேவன் (வட சென்னை மாவட்டத் தலைவர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்), அடையாறு த.க.நடராசன், வடசென்னை மாவட்ட செயலாளர் கணேசன்,  வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், சோழிங்கநல்லூர் மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழினியன், வட சென்னை ப.க. அமைப்பு செயலாளர் ஆ.வெங்கடேசன், பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்), வடசென்னை இளை ஞரணி தலைவர் தளபதி பாண்டியன்,  புரசை சு.அன்புச்செல் வன், பொழிசை கண்ணன், தரமணி கோ.மஞ்சநாதன், அ. அன்பு, வி.வளர்மதி, வி.தங்கமணி, வி,யாழ்ஒளி, பி.அஜந்தா, மு.பவானி, ஈ.குமார், மு.சண்முகப்பிரியன்,  பெரியார் சேகர், தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், குன்றத்தூர் சி.பரசுராமன் குன்றத்தூர் மு.திருமலை பூந்தமல்லி க.தமிழ்ச் செல்வன், சோழபுரம் சக்கரவர்த்தி,  சோழபுரம் ந.கஜேந்திரன், சு. தமிழ்ச்செல்வன், டி.தமிழ்ச்செல்வன், ஜி.டி.எம்.யாசிர், தமிழ ன் பிரபாகரன்,அ.தில்ரேஸ் பானு, எ.ஜெயவர்மன், சிறுத்தை சாகீர், மு.அய்ஸ்வர்யா, பா.முத்தழகு  மற்றும் சென்னை மண்டல கழகத் தோழர்கள் பெருமளவு பங்கேற்று இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பொதுமக்கள் பெருமளவில் வந் திருந்து கருத்துகளைக் கேட்டு பாராட்டு தெரிவித்தனர்.

ஜெயவர்மன் என்பவர் புதிய கழக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார் .

இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

சனி, 7 டிசம்பர், 2019

மேனாள் மேயர் வை.பாலசுந்தரம் மறைந்தாரே! தமிழர் தலைவர் கி.வீரமணி இரங்கல்

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர்  வை.பாலசுந்தரம் (வயது 76) உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த சில நாள் களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (6.12.2019) மறைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
சட்டமன்ற திமுக உறுப்பினராகவும், சென்னையின் மேயராகவும் பதவி வகித்தவர்.
அவரை இழந்து வாடும் அவரது மனைவி பவானி, மகள் அனுப்பிரியா மற்றும் குடும்பத்தாருக்கும், அவர் இயக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
7.12.2019
குறிப்பு: தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் மறைவுற்ற வை.பா. உடலுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

நேற்று (07.12.19) பிற்பகல் 1.30 மணி அளவில் தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த, 06.12.19ம் நாள் மறைவுற்ற மேனாள் மேயர் வை.பாலசுந்தரம் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகம் சார்பில் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் மாலைவைத்து மரியாதை செலுத்தினார். உடன்  தென் சென்னை மாவட்ட செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், ஆயிரம்விளக்கு மு.சேகர் மற்றும் இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை ஆகியோரும் பங்கேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியரின் இறங்கல் அறிவிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது.