வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

தென்சென்னை முழுவதும் தொடர் தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் நடத்த கலந்துரையாடலில் முடிவு

 

சென்னை, ஜூலை 27– தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.7.2026 அன்று மாலை 6.30 மணிக்கு அய்ஸ்அவுஸ் ஆர்.வி.ஆட்டோ கடையில் நடைபெற்றது. பொதுக் குழு உறுப்பினர் கோவி.ராகவன் கடவுள் மறுப்பு கூறினார்.

நீட் ஒழிப்பு, இரு சக்கர வாகனம் பரப்புரைப் பயணம். தந்தை பெரியார் பிறந்த நாள், விடுதலை சந்தா மற்றும் கூட்டத்தின் நோக்கம் விளக்கி மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் உரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பெரியார் யுவராஜ் பரப்புரை பயணத்தின் மிக அவசியம், இளைஞர்கள் தோழர்கள் கலந்து கொள்வது மிக முக்கியம் என்பதை விளக்கி பேசினார். மாவட்ட துணை தலைவர் நான்கு நாட்கள் பரப்புரை பயணத்தில் பங்கேற்பதாகவும், இந்த பரப்புரை பயணம் அய்ஸ் அவுஸ் ஆயிரம் விளக்கு பகுதிகளில் தெருமுனை கூட்டம் போல் நடத்த வேண்டும் என்றும் பேசினார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மாரிமுத்து பரப்புரை பயணத்தில் பங்கேற்பதாகவும், தொடர் பரப்புரை பயணம் நமக்கு மிகப்பெரிய அளவுக்கு ஒரு பிரச்சார பயணமாக அமைய வேண்டும் என்றும் பேசினார்.

தொடர்ந்து மாவட்ட துணை தலைவர் சேதுராமன், சூளைமேடு ராமச்சந்திரன், சைதை ரவி பேசினர். அதனை தொடர்ந்து நான்கு நாள்கள் தொடர் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தில் இரண்டு இரு சக்கர வாகனம் நான்கு நாள்கள் கலந்து கொள்வதென்றும் அய்ஸ் அவுஸ் பகுதியில் இருந்து தொடங்கும் போது 15 இருசக்கர வாகனம் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அய்ஸ் அவுஸ்ஆயிரம் விளக்கு பகுதியில் பரப்பரை என்பது தெருமுனைப் பிரச்சாரமாக நடத்திட வேண்டுமென்றும், தந்தை பெரியார் பிறந்த நாள் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து தென்சென்னை முழுக்க தொடர் தெருமுனைப் பிரச்சாரம் கூட்ட நடத்துவது என்றும், கடந்த விடுதலைச் சந்தாவை மீண்டும் தொடர்ந்து  புதுப்பிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அய்ஸ் அவுஸ்அன்பு நன்றி கூறினார்

கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்: மாவட்ட துணை தலைவர் மு.சண்முக பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் மணித்துரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட துணை இளைஞரணி செயலாளர் மாரிமுத்து, அய்ஸ் அவுஸ் அன்பு அப்துல்லா, உதயன், கோவி ராகவன், பி டி சி ராஜேந்திரன், பி.டி.சி. செல்வம் சைதை ரவி அய்ஸ் அவுஸ் தர்மா, தெய்வ சிகாமணி, ம.இனியா, சிவா.


- விடுதலை நாளேடு, 27.07.26

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை


தமிழ்நாடு

சென்னை, ஆக.7 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (7.8.2026) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திராவிட இயக்கத்தின் ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று தன்னை ஒரு வரி விமர்சனத்திற்குள் அடக்கி, பதிலளித்த வித்தகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2026) காலை10.30 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெருந்திரளான கழகத் தோழர்களுடன் இணைந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர்
ஆ. வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு  பெரியார், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி. பன்னீர்செல்வம், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ், கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா. மகளிரணித் தோழியர்கள் பேராசிரியர் க. பெரியார்செல்வி, பசும்பொன், தங்க. தனலட்சுமி, மு. பவானி, நதியா, த.மரகதமணி, த.இளவரசி, பூவைசெல்வி, செ.பெ.தொண்டறம், அன்புச்செல்வி. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், அய்ஸ்அவுஸ் அன்பு, ச. மகேந்திரன், பெரியார் மாணாக்கன், சி. காமராஜ், ஆனந்தன், ஜி. சண்முகம்.

தமிழ்நாடு

தாம்பரம் மாவட்டத் தலைவர் இரா. முத்தையன், மோகன்ராஜ், கருப்பையா, சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு. அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன்,  கொடுங்கையூர் தங்கமணி, எம்.ஆர். மாணிக்கம், அரும்பாக்கம் தாமோதரன்,  அருண், ஆனந்தன், நெய்வேலி, ஞானசேகரன்,  விடுதலை நகர்  பி.சி. ஜெயராமன், கலைமணி, அருண் ரங்கநாதன், விஜய், பார்த்திபன், பெரு. இளங்கோ, உடுமலை வடிவேல், ப. சிவக்குமார், இராவணன், ஆவடி மாவட்டச் செயலாளர் இளவரசன், பேராசிரியர் தீபக், சண்முகம் மாங்குடி துரை. ராகவன், சேரலாதன், முரளி கிருஷ்ணன், டாக்டர் பைரி நரேஷ் (தெலங்கானா) உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 07.08.26

வியாழன், 30 ஜூலை, 2026

நீட்’, EWSசை எதிர்த்து இரு சக்கர வாகனப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!


மற்றவை

சென்னை, ஜூலை 30 ‘நீட்’ தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (30.7.2026) முதல் 2.8.2026 வரை இரு சக்கர வாகனத்தின் மூலம் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு முறைப்படி காவல் துறைத் தலைமை இயக்குநர் அவர்களிடம் (டிஜிபி), திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த 18.7.2026 அன்று அனுமதி கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (30.7.2026) காலை புறப்பட இருந்த இந்தத் தருணத்தில், திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பயணத்திற்கு  காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (30.7.2026) காலை 9 மணியளவில் பெரியார் திடலில் இருந்து இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தொடங்க இருந்த நிலையில், காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில்:

‘‘தடையை மீறி இந்தப் பிரச்சாரப் பயணத்தை நடத்த முடியும் என்றாலும், முதலில் சட்ட ரீதியாக இப்பிரச்சினையை கழகம் அணுகும். அரசியலமைப்புச் சட்டப்படியான நமது அடிப்படை கருத்து, பேச்சு, ஜனநாயக உரிமைக்கு நீதிமன்றத்தின் மூலமாகப் பரிகாரம் தேடப்படும். தற்போதைக்கு திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் ஒத்திவைக்கப்படுகின்றது’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றவை

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், மாநில இளைஞரணி இணை செயலாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, எம்.ஆர்.மாணிக்கம், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், காப்பாளர் கி. இராமலிங்கம், துணைத் தலைவர் நா. பார்த்திபன், பொதுக் குழு உறுப்பினர் கி. தளபதிராஜ், பொதுக்குழு உறுப்பினர் தங்க. தனலட்சுமி, வழக்குரைஞர் துரை அருண், வழக்குரைஞர் செ. துரை, மாநில மகளிரணி துணை செயலாளர் வி.கே.ஆர். பெரியார்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மகளிர் பாசறைத் தலைவர்
த. மரகதமணி, உத்ரா, க.கலைமணி, சி. காமராசு, அரும்பாக்கம் சா.தாமோதரன், அயன்புரம் சு. துரைராசு,   கோ. தங்கமணி  உள்ளிட்ட தோழர்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர்.

- விடுதலை நாளேடு, 30.07.2026


செவ்வாய், 28 ஜூலை, 2026

தென்சென்னையில் ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை' என்ற நூலின் அறிமுக கூட்டம்

19.07.2026 மாலை 6.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் கோடம்பாக்கம் 'படைப்பு அரங்கத்'தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய 'ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை' என்ற நூலின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 

தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் மு.இரா.மாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார். 

திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் அறிமுக உரையாற்றினார். 

திராவிடர் கழக பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் நூலைப் பற்றி ஆய்வுரை வழங்கினார். 

பகுத்தறிவாளர்கள் கழக, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற, திராவிடர் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் மற்றும் பயனாளர்களும் கலந்து கொண்டனர்.















சனி, 25 ஜூலை, 2026

மாங்குடி துரை.இராவணன்!




கட்டுரை, ஞாயிறு மலர்

இயற்பெயர் துரைராஜ். திராவிடர் கழக மாநாட்டுப் பேரணியில் இராவணன் வேடமிட்டுச் சென்றதால், அன்று முதல் இராவணன் என்று அழைக்கப்படுபவர்.‌ அதுமட்டுமின்றி இராவணன் போலவே பெரிய மீசையும் வைத்திருப்பார். இயக்க நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், வேக நடைபோட்டு வந்துவிடுவார்.

வயதையெல்லாம் பொருட்படுத்தாமல், “எங்கள் கடன் பணி செய்து கிடப்பதே” என இயங்கும் இவரைப் போன்ற நூற்றுக் கணக்கான பெரியார் பெருந்தொண்டர்கள் தான் இந்த இயக்கத்தின் சொத்து! வாருங்கள், துரை.இராவணன் அவர்களிடம் பேசுவோம்!

பெரியார் கருத்துகள் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

“மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கிய தில்லை” என்கிற சொற்றொடர் ஒன்று உள்ளது. அப்படியான ஒரு மழை நேரத்தில் நான் ஒரு வீட்டின் திண்ணைப் பக்கம் ஒதுங்கினேன். அங்கே பகுத்தறிவு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை ஆனது. நான் பிறந்தது கும்பகோணம் மாவட்டம் திருவலஞ்சுழி அருகே மாங்குடி எனும் கிராமம்.

அம்மா பெயர் பொண்ணு பாப்பா, அப்பா பெயர் ஆறுமுகம். 1952இல் பிறந்த எனக்கு 74 வயதாகிறது. நான் மழைக்கு ஒதுங்கியது பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ்.நாதன் அவர்களின் வீடு. அங்கு அவர் 10 மாணவர்களை வைத்துக் கொண்டு, வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். நானும் சென்று அதில் கலந்து கொண்டேன்.

வாரம் ஒன்று வீதம் 7 வகுப்பில் பங்கேற்றேன். அப்போது எனக்கு 11 வயது. நான் பள்ளிப் படிப்புப் படித்தது கும்பகோணம் “பார்ப்பனர்” பள்ளியில். நாள்தோறும் திருநீறு பூசிவரச் சொல்வார்கள். அப்போதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இப்படியான சூழலில் தாமே ஒரு தலைப்பிட்டு கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார்கள்.

நான் கல்விக் கடவுள் சரஸ்வதி குறித்துப் பகுத்தறிவுப் பார்வையில் எழுதினேன். எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 8ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தேன். இது இயல்பாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா என்று தெரியவில்லை. அதன் பிறகு வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.

இறுதியாக நீங்கள் பெற்ற கல்வி என்ன?

பெரும்பாலும் அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் பார்ப்பனர்களாகவே இருப்பார்கள். சில இடங்களில் தமிழாசிரியராக நம்மவர்கள் இருப்பார்கள். உடற்கல்வி ஆசிரியராக நம்மவர்கள் மட்டுமே இருப்பார்கள். நான் சென்ற புதிய பள்ளியில் தமிழாசிரி யராகக் கோவிலாச்சேரி சின்னத்துரை என்பவர் பணிபுரிந்தார். அவர் பல வகைகளில் எனக்கு உற்சாகம் தந்தார். தொடர்ந்து கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பியுசி படித்தேன்.

அங்கு திராவிட மாணவர் கழகம் செயல்பட்டது. ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் மாணவர்களை ஒருங்கிணைத்தார். அதில் இணைந்து செயல்பட்டேன். இறுதியாகத் தஞ்சாவூர் சென்று அய்.டி.அய். படித்தேன். அங்கிருந்த தொடர் வண்டி நிலையத்தில் ராணி உணவகம் இருக்கும். அதனை நமது இயக்கத்தைச் சார்ந்தவர் வைத்திருந்தார். அங்கு போக வர இருப்பேன். அங்குதான் அய்யா கா.மா.குப்புச்சாமி உள்ளிட்ட  தோழர்கள் பலர் அறிமுகமாகினர்.

அதேநேரம் 10 ஆவது வயது வரை எனது வாழ்க்கை வித்தியாசமானது. மார்கழி மாதப் பஜனைக் குழுவிற்கு நான் தான் தலைவர். அதிகாலை எழுந்து காவிரி அரசலாறில் குளித்துவிட்டு, கழுத்தில் பூமாலை போட்டு, சிறுவர்களாகிய நாங்கள் தெருக்களில் பஜனை பாடிச் செல்வோம்.

இப்படித் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நடக்கும். எங்களை வழிநடத்த ஒரு பார்ப்பனச் சாமியார் இருந்தார். நாங்கள் வாங்கும் அரிசி, கரும்பு, பணம் ஆகியவற்றைச் சேகரித்து அவரிடம் கொடுப்போம்.
எஸ்.எஸ்.நாதன் வகுப்பைக் கேட்கும் முன், எனது வாழ்க்கை இப்படித்தான் போனது.

எங்கு வேலை செய்தீர்கள்?

எனக்கு 24 வயது இருக்கும் போது, 1976இல் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்கு முன் அய்.டி.அய் முடித்து ஊரில் இருந்தபோது, ஊர்க்காவல் படையில் இருந்தேன். வாரம் ஒருநாள் போக்குவரத்தைச் (Traffic) சரிசெய்வது, வாரம் ஒருநாள் இரவில் பாதுகாப்புப் பணிக்குச் செல்வது எனச் சமூகம் சார்ந்த வேலைகள் செய்வோம். அதற்கு நாளொன்றிற்கு ரூ.50 ஊதியம் கொடுப்பார்கள். எனக்கு அய்.டி.அய் கல்வியில் இடம் கிடைக்க, இந்த ஊர்க்காவல் படை சேவையும் முக்கியம்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் இயக்கத் தோழர்கள் 20 பேர் இருந்தோம். 1980ஆம் ஆண்டு திராவிடர் தொழிலாளர் கழகம் தொடங்கினோம். குடும்பம், குடும்பமாக வாகனம் பிடித்து மாநாட்டிற்குச் செல்வது, தந்தை பெரியார் பிறந்தநாள், நினைவு நாள் நடத்துவது, வாயிற் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது எனத் தொடர்ந்து செயல்பட்டோம். இதற்காகவே மாதந்தோறும் 50 ரூபாய் வீதம் பணம் சேகரிப்போம். ஆசிரியர் உட்பட கழகப் பேச்சாளர்கள் அனைவரும் எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

மாங்குடி கிராமத்தில் இருந்து சென்றபோது, எங்கள் ஊர் தமிழாசிரியர் முத்துவாவாசி வீட்டில் தான் சென்னையில் தங்கியிருந்தேன். பிறகு அவர் கல்வி அதிகாரியாகவும், ஓய்விற்குப் பிறகு கலைஞர் அவர்களுக்குச் சிறப்பு உதவியாளராகவும் இருந்தார். அசோக் லேலண்ட் நிறுவனத்தில் 34 ஆண்டுகள் பணிபுரிந்த நான், 2010இல் ஓய்வு பெற்றேன்.

உங்கள் திருமணம் குறித்துச் சொல்லுங்கள்?

1971ஆம் ஆண்டு சுவாமி மலையில் உள்ள திருமண மண்டபத்தில், ஆசிரியர் தலைமையில் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இணையர் பெயர் எழிலரசி. அவருடைய தந்தையார் இரத்தினசாமி, திருச்சி மாவட்டம், இலால்குடி பகுதியைச்  சார்ந்தவர்.

திராவிட இயக்கச் சிந்தனைக் கொண்டதால், சுயமரியாதைத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். இந்நிகழ்வில் புலவர் இராமநாதன்,
கோ.சி.மணி, மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், பட்டீஸ்வரம் அய்யாசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எனது இணையர் திருமணத்திற்குப் பிறகு கொள்கை உணர்வைப் பெற்றார். தமிழ்நாடெங்கும் நடைபெற்ற மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். 2010ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

எங்களுக்கு இந்திரஜித் என்கிற மகன் இருக்கிறார். அவர் தற்போது ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணி செய்கிறார். மகள் மதுமதி தமது 38ஆவது வயதில் இருதய நோய் காரணமாக இறந்துவிட்டார்.

உங்களின் இயக்க வேலைகள் குறித்துக் கூறுங்கள்?

படிக்கிற காலம் தொட்டே இயல்பாகவே கொள்கை சார்ந்த செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. அதுவும் பள்ளி நாட்கள், கல்லூரிப் பருவம், பணியிடம், ஓய்வுக்குப் பிறகு என அது தொடர்ந்து நீள்கிறது.

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் எனக்கு நல்ல பெயர் உண்டு. அனைத்து வகைகளிலும் சிறப்பாகப் பணியாற்றுவேன். அதனால் கொள்கைகள் சார்ந்த செயல்பாடுகளுக்கு எதிர்ப்புகள் எதுவும் வந்ததில்லை.

தொடக்கத்தில் திருவெற்றியூரில் தங்கியிருந்தேன். வடசென்னை மாவட்டத் தலைவராக அப்போது க.பலராமன் இருந்தார். அவருடன் இணைந்து பணியாற்றி, இயக்கக் கூட்டங்களில் கலந்து கொள்வேன். எண்ணூர், திருவொற்றியூர் இரண்டு இடங்களிலும் பெரியார் சிலை அமைக்கும் பணியில் என்னையும் ஈடுபடுத்திக் கொண்டேன். தவிர  பெரியார் திடல் நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொள்வேன்.

மணலி புதுநகர் பகுதியில் ஒரு வீடு வாங்கினேன். அதையொட்டி ஆவடி மாவட்டம், பாடி பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

இணையர் நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்குவேன். ஆசிரியருக்கு எடைக்கு எடைத் தங்கம் கொடுத்த போது 6 கிராம் வழங்கினேன். பெரியார் உலகத்திற்கு இதுவரை 65 ஆயிரம் வழங்கி இருக்கிறேன்.

மாணவர் பருவத்தில் இருந்தே இருப்பதால், பல்வேறு காலகட்டத் தோழர்களுடனும் அறிமுகம் இருக்குமே?

ஆமாம்! தொடக்கத்தில் பெரியார் சமூகக் காப்பணியில் இருந்தேன். ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற ஹிந்தி எழுத்துகளைத் தார் வைத்து அழிக்கும் போராட்டத்தில் பங்கு பெற்றுச் சிறை சென்றேன்.

சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற காவிரி நீர் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளேன். 1973ஆம் ஆண்டு கும்பகோணம் மூர்த்தி கலையரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியாருடன் படம் எடுத்துக் கொண்டேன். அதற்கு ஒரு ரூபாய் நன்கொடை வழங்கினேன்.

தவிர மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களில் மூன்று முறை தீ மிதித்துள்ளேன், வாயில் சூடம் ஏற்றியுள்ளேன், மண்ணெண்ணெயை வாயில் ஊற்றி நெருப்பைக் கக்கியுள்ளேன், அரிவாள் மீது ஏறி நின்றுள்ளேன். மேலும் திருச்சியில் அந்தக் காலத்தில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் கலந்துள்ளேன்.

அதில் துரை.சக்ரவர்த்தி, துரை.சந்திரசேகரன், சிவகங்கை இன்பலாதன் போன்றோரும் கலந்து கொண்டனர். எந்தவொரு நிகழ்ச்சியையும், மாநாட்டையும் தவற விடுவதில்லை. கடந்த ஜனவரியில் நடைபெற்ற மும்பை மாநாடு, ஜூன் மாதம் குற்றாலத்தில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை வரை கலந்துள்ளேன்.

சென்னை முகப்பேரில் இருந்தால் இங்குள்ள நிகழ்வுகளிலும், ஓசூரில் மகன் வீட்டிற்குச் சென்றால் அங்குள்ள நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவேன். க.பார்வதி, இராயபுரம் மு.போ.வீரன், மலேசியா சக்தி மோகன், ஆவடி இரா.மனோகரன், ஆவடி க.திருநாவுக்கரசு, பா.தட்சிணாமூர்த்தி, கி.இராமலிங்கம், ஏ.தணிகாசலம், எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம், அதேபோல கும்பகோணம் மாரிமுத்து, சுந்தர பெருமாள் கோயில் சன்னாசி, பட்டீஸ்வரம் அய்யா சாமி, இராமலிங்கம், பழனி, சரஸ்வதி, இந்திரா, அழகுமணி, ராஜு, இராமமூர்த்தி, குமாரசாமி, கவுதமன் உள்ளிட்ட இன்னும் ஏராளமான தோழர்களுடனும் பணி செய்துள்ளேன், இப்போதும் செய்து வருகிறேன்”, எனப் பெரிய மீசைக்காரர் துரை.இராவணன் கூறினார்.

 - விடுதலை ஞாயிறு மலர், 25.07.26


புதன், 15 ஜூலை, 2026

கல்வி வள்ளல் காமராசரின் 124 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை

திராவிடர் கழகம்

சென்னை, ஜூலை 15 கல்வி வள்ளல் காமராசரின் 124ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2026)  காமராசர்  சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார்.

‘பச்சைத் தமிழர்’, ‘தமிழ்நாட்டின் ரட்சகர்’ என்றெல்லாம்பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்டவர் கல்வி வள்ளல் காமராசர் ஆவார்.

காமராசர் அவர்களின் 124ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2026) காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த காமராசரின்  படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர்  வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர்கள் மயிலை டி.ஆர். சேதுராமன், மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி செயலாளர்  பெரியார் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ. அன்பு, பா. இராசேந்திரன் (எம்.டி.சி.), சூளைமேடு ஆட்டோ சேகர்,     அரும்பாக்கம் சா.தாமோதரன், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு. அண்ணாமலை, பேராசிரியர் க. பெரியார்செல்வி, மரகதமணி, கோ. தங்க தனலட்சுமி, தொண்டறம் உள்ளிட்டவர்களும்,

வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன்,  மாவட்டச் செயலாளர் புரசை அன்புச்செல்வன், கோ. தங்கமணி, சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, செயலாளர் தமிழினியன், விடுதலை நகர் பி.சி. ஜெயராமன், கோவர்த்தனம், சி. காமராஜ், தாம்பரம் மாவட்டத் தலைவர் இரா. முத்தைய்யன், மோகன் ராஜ், பெரியார் மாணாக்கன், பார்த்தீபன், ரங்கநாதன், விஜய், மகேஷ், டைசன், உடுமலை வடிவேல், அருள் மற்றும் திரளான தோழர்களும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தை தலை மையிடமாகக் கொண்டு இயங்கும், “மூடநம்பிக்காலு நிர்மூலன் சமிதி” சார்பில் (MNS) மாநிலத் தலைவர் பைரி நரேஷ், இளைஞரணித் தலைவர் அச்சுதராஜ், மத்திராலா அங்குலு, ஏழுரு தேசய்யா மற்றும் இந்த அமைப்பைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் அனந்தராஜ், ஆத்மபூரா அசரத்தய்யா ஆகியோரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

-விடுதலை நாளேடு, 15.07.26

செவ்வாய், 7 ஜூலை, 2026

பேரெழுச்சி தந்த அறப்போராட்டக் கள வீரர்கள் பட்டியல் வழங்கும் நிகழ்ச்சி! (சேலம்)

 

திராவிடர் கழகம்

‘சேலம் செயலாற்றும் காலம்’ என்றார் அறிஞர் அண்ணா, ஆம், கழகம் செயலாற்றியது உண்மை தானே? அதையும் நாம் கண்டோம்தானே? அவா ளும் கண்டுகொண்டதால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கின்றனர் தானே? ‘‘இந்த திராவிடர் கழகம் மட்டும் இல்லையென்றால்…’’ இந்த ‘விடுதலை’ மட்டும் இல்லையென்றால்… என்று நாள்தோறும்  ஒப்பாரி வைத்துக்கொண்டுதானே இருக்கின்றனர். அந்த அளவுக்கு, 1944 ஆம் ஆண்டு இதே சேலத்தில் நடைபெற்ற மாநாடு தந்த, இனமீட்புச் சொல்லான, ‘திராவிடர் கழகம்’ என்ற அடையாளம் மட்டுமே எண்ணற்றசாதனைகளை செய்து காட்டியிருக்கிறது! அதுதானே, இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டை எல்லாவற்றிலும் முதன்மை மாநிலமாக ஆக்கியுள்ளது. அதனால்தானே அந்த ‘திராவிடம்’ என்ற கொள்கையைச் சிதைப்பதற்காக கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரியம்; பார்ப்பனியம் அதற்கே உரிய சாம, தான, பேத, தண்டம் என்று எல்லா உத்திகளையும் பயன்படுத்திப் பார்த்தும் பலன் கிடைக்காமல், ‘பலித்தவரை பார்ப்பனியம்’ என்று இன்னமும் முயன்று கொண்டு இருக்கின்றது. இதற்காகத்தானே பெரியாரும், அம்பேத்கரும், ‘பார்ப்பனர்களுக்கு முன் புத்தியும் இல்லை. பின் புத்தியும் இல்லை’ என்று பச்சையாகச் சொன்னார்கள். சூடு சுரணை இருந்தால்தானே? ‘ஆயிரம் பேர் கூட இல்லாத இயக்கம்தானே திராவிடர் கழகம்’ என்று தன் வயிற்றெரிச்சலை ஆரியம் புதுப்பித்துக்கொள்கிறது.

அந்த ஆயிரம் பேரைக் கண்டுதானே ஆரியம் இன்னும் அலறிக் கொண்டிருக்கிறது? திராவிடர் கழகத்த வர், பெரியார் தொண்டர்கள் என்போர் இவர்களின் எண்ணிக்கைக் கணக்குக்குள் அடங்குவோர்தானே! ‘‘அட, பரிதாபத்திற்குரிய பார்ப்பனியமே!’ என்று எள்ளி நகையாடும் வகையில் அமைந்தது சேலம் பொதுக்குழு!

சேலம் அய்ந்து சாலை சந்திப்பு அருகில் உள்ள கே.எம்.பி.திருமண அரங்கில், 4.7.2026 அன்று காலையில் 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரையிலும் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற அந்தப்பொதுக்குழுவில்தான் கருஞ்சட்டை வீரர்களுக்கு பேரெழுச்சி தந்த, அந்த நிகழ்ச்சியும் நடந்தேறியது. அந்தப் பேரெழுச்சிக்குக் காரணமானவர்  வேறு யார்? திராவிடர் கழகத்தின் தன்னேரில்லாத தலைவர், தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான் அது!

பொதுவாகவே திராவிடர் கழகம் பொது ஒழுக்கச் சிதைவு ஏற்படுவதைப் பற்றி கவலைப்படுகிற இயக்கமாகும். மகளிர் பாதுகாப்பு விசயத்தில்கூட போதை ஒழிப்பு என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம்தான் என்றாலும், போதை ஒழிப்பு என்ப தில் கஞ்சா, அபின், ஹெராயின், குட்கா உள்ளிட்டவை மட்டும்தான் வகைப்படுத்தப்படுகிறது. இவற்றைவிட ஆபத்தானவை ஜாதி போதை, மத போதை, பதவி போதை, சினிமா போதை ஆகியவைதான் என்பதே திராவிடர் கழகத்தின் பார்வை.

முன்னது, தனி மனிதனை அல்லது அந்த தனி மனிதன் சார்ந்த குடும்பத்தை மட்டும்தான் பாதிப்படையச் செய்யக்கூடி யதாகும். ஆனால், பின்னது, ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிப்படையச் செய்யக்கூடியது.  ஆகவேதான், கடமை யுணர்வுடன் இதற்கென்று தனிப் பிரச்சாரப் படை அமைத்து அவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து, சமூகத்தின் எல்லா தளங்களிலும் தொடர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது  திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளின் விழைவு.

அந்த அடிப்படையில்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கடந்த 11.06.2026, வியாழக்கிழமை அன்று ‘1000 இளைஞர்களை அறப்போ ருக்குத் தாருங்கள்! எதற்கென்று பிறகு சொல்கிறேன்!’ என்று ‘விடுதலை’யில்  அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் காரணங்கள் எதுவும் சொல்லப்பட வில்லை. திராவிடர் கழகத்தில் சேரும் போதே, ‘‘திராவிடர் கழகம் உங்களுக்கு பதவி தராது! பட்டம் தராது! சிறை தரும்! வேண்டுமானால் மானம் தரும்! மரியாதை தரும்! அறிவு தரும்!’’ என்று சொன்னதைக் கேட்ட பிறகும்தான், தொண்டர்களாகத் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

திராவிடர் கழகம் ஒரு வேறுபட்ட புதுமையான அற்புதமான இயக்கம் என்று சொல்லப்படுவது இதை முன்னிட்டுதான். சொந்தக் காசை செலவழித்துக்கொண்டு இயக்கப் பணி செய்ய வேண்டும். இந்த சூழலில்தான் கழகத் தலைவர் வெளியிட்ட அறிவிப்பு பொதுக்குழுவில் பேரெழுச்சியை உண்டாக்கியது. அந்த அறிவிப்பு செய்யப்பட்ட காலத்தில்தான் நீட் எதிர்ப்புக்கு கண்டனப் போராட்டம், மேகதாது அணை கட்டுவதற்கு கண்ட னப் போராட்டம், கலைஞரின் 103 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கருநாடகம், மகாராட்டிரம் ஆகிய நான்கு மாநிலங்களில் 103 ‘‘திராவி டர் எழுச்சி நாள்’’ பரப்பு ரைக்கூட்டங்கள் என்று திராவிடர் கழகத்தின் ஒட்டுமொத்த அணிகளும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த காலம். அதிலும் ‘விடுதலை’ சந்தா, பெரியார் உலகம் நன்கொடை என்று இயங்கிக்கொண்டே இருந்த காலம் அது! இப்படிப்பட்ட நெருக்கடியில்தான் 16 வயது முதல் 35 வயது வரையிலான 1000 இளைஞர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அந்தக் காட்சி, கண்கொள்ளாக் காட்சி தான்!  பொதுக்குழு மேடையிலிருந்து ‘‘கழகப் பொறுப்பாளர்கள், அறப் போராட்டக் கள வீரர்கள் பட்டியலைக் கழகத் தலைவரிடம் தாருங்கள்’’ என்று அறிவிப்புச் செய்யப்பட்டவுடன், மேடையிலும், அரங்கிலும் ஒரு பர பரப்புத் தொற்றிக்கொண்டது. முதலில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை
இரா. ஜெயக்குமார், தனது கையில் இருக்கும் பட்டியலை வாசித்தார்.

நாகப்பட்டினம், காரைக்கால், திரு வாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விருத்தாச்சலம், அரியலூர், கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருச்சி, லால்குடி, துறையூர், கரூர், தாராபுரம், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, மேட்டுப்பாளையம், கோபி, நீலமலை ஆகிய கழக மாவட்டங்களில் மொத்தம் 773 பேர் அடங்கிய பட்டியலாக நீண்டது.

அப்போது, அந்தந்த மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்களுடன் பட்டியலை கழகத் தலைவரிடம் வழங்கிய போது மேடை கொள்ளவில்லை. கர வொலி அரங்கெங்கும் எதிரொலித்தது.

அது ஓய்வதற்குள், மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, பழனி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செய்யாறு, வேலூர், காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், மதுரை புறநகர், மதுரை மாநகர், தேனி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், இராமநாதபுரம், அறந்தாங்கி என 18 மாவட்டங்கள் இணைந்து 494 பேர் அடங்கிய அறப்போராட்டக்கள வீரர்கள் பட்டியலைக் கழகத் தலைவரிடம் அதே பரபரப்புடன் ஒப்படைத்தார்.

திராவிடர் கழகம்

அடுத்ததாக, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கடலூர், புதுச்சேரி என ஒரு மாவட்டம் ஒரு யூனியன் பிரதேசம் ஆகிய இரண்டுக்குமாக 31 போராட்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை ஒப்படைத்தார்.

அதைத் தொடர்ந்து, மாநில ஒருங்கி ணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தென் சென்னை, வடசென்னை, திரு வொற்றியூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர்  ஆகிய 10 மாவட்டங்கள் இணைந்து 200 போராட்டக் கள வீரர்கள் அடங்கிய பட்டியலை வழங்கினார்.

அடுத்ததாக, மாநில ஒருங்கி ணைப்பாளர் தருமபுரி ஊ.ஜெயராமன் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர், சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு என ஒன்பது மாவட்டங்களுக்கு மொத்தம் 208 அறப் போராட்டக் கள வீரர்களைக் கழகத் தலைவரிடம் வழங்கினர்.

குறுகிய நேரத்தில் இந்தக்காட்சிகள் நடந்து முடிந்துவிட்டாலும், மாநிலம் முழுவதுமிருந்து வந்த பொறுப்பாளர்கள் மேடையில் ஏறி கழகத் தலைவரிடம் ஆசையாசையாக பட்டியலை வழங்குவதும், ஒளிப்படங்கள் எடுத் துக்கொள்வதும், அடுத்த மாவட்டத் தோழர்கள் அடுத்தடுத்து மேடையில் ஏறி தங்களது பட்டியலை வழங்குவதில் காட்டிய ஆர்வத்தாலும் கழகத் தலைவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடித்தான் போய்விட்டார். தோழர்களின் அந்த ஆர்வத்தைத் தமிழ்நாட்டில் பதவிக்காக சிலர் படும் பாட்டை ஒப்பிட்டுப் பார்த்து, ஒரேயடியாக சலித்துக்கொள்ள வேண்டியதில்லை. இதையெல்லாம் சரி செய்வதற்குத்தான், ‘‘இதோ! இருக்கிறது இளைஞர் பட்டாளம்’’ என்று ஆறுதலைக் கொடுத்தது. ஒருவழியாக அந்நிகழ்ச்சி முடிந்தது.

இறுதியில் பட்டியல் சரிபார்க்கப் பட்டது. முடிவைத் தலைவரே அறி வித்தார். அதுவும், ‘‘மகிழ்ச்சியான செய்தி” என்று குறிப்பிட்டுவிட்டே அறிவித்தார். அதைக் கேட்டு அரங்கமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. கேட்டது 1000 இளைஞர்களைத்தான்! கிடைத்தது 1706. இதுவும் முதல் கட்டம்தான். விரைவில் கழகத் தலைவர் கேட்டதை இரண்டு மடங்காக்குவார்கள் தோழர்கள். போராட்டக் களத்துக்கு, தலைவரின் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களின் பட்டி யல்தான் அது! முதியவர்களிலேயே முதிர்ந்தவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் அய்யா பொத்தனூர் சண்முகம் அவர்களுக்கு வயது 104. அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது பொதுக்குழுவில். செய்தவர் கழகத் தலைவர்! அவருக்கு வயது 93. 104 வயதுக்காரர் சொல்கிறார். ‘‘என்னையும் அந்தப்பட்டியலில் முதலில் சேர்த்துக்கொள்ளுங்கள்’’ என்றார். கேட்டவர்களுக்கு மயிர்க் கூச்செரிந்துவிட்டது. இதற்குப் பின்னரும் ‘இனமலர்கள்’ சூடு சுரணை இல்லாமல் துள்ளத்தான் செய்யும். காலப்போக்கில்… அந்த மலரின் இதழ்கள் ஒவ்வொன்றாக அவாள்கள் பதறப் பதற உதிர்ந்தே தீரும். இதுவும் காலத்தின் கட்டாயம்தான்.

திராவிடர் கழகம் என்றால் வெறும் சொல் அன்று! செயல்! அதை நிறுவும் வகையில்தான், இந்த இளைஞர்களின் பட்டியல்! இந்த இளைஞர்கள், தலைமை ‘எள்’ என்றால், ‘எள்ளாக’ மட்டுமே நிற்கக்கூடியவர்கள். திராவிடர் கழகம் இந்த இளைஞர்களுக்குக் கொள்கைப் பயிற்சிகள் வழங்கி, சமூகத்தில் இருக்கும்  போதைகளிடமிருந்து இளை ஞர்களைக் காப்பாற்ற வேண்டிய தன் வரலாற்றுக்கடமையை நிச்சயம் ஆற்றும்.

கழகத் தலைவரின் ஆணையேற்று, சிறைக்கு அஞ்சாமல் அறப்போராட்டக் களத்தில் முன்நிற்கும்! திராவிடம் வெல்லும்!!

- விடுதலை நாளேடு, 6.7.26