வியாழன், 18 ஜூலை, 2024

தமிழ்நாட்டின் 5 முனைகளிலிருந்தும் இரு சக்கர ஊர்திகளில் ‘நீட்’டை எதிர்த்து பிரச்சாரப் பெரும் பயண வீரர் – வீராங்கனையர்


விடுதலை நாளேடு

 முதல் குழு (கன்னியாகுமரி முதல் சேலம் வரை – 1030 கி.மீ.)

1. தலைவர் இரா. செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), 2. ஒருங்கிணைப்பாளர் சு. இனியன் – தென்காசி (திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்), 3. பேச்சாளர் மூ. இளமாறன் – நாகை (திராவிடர் மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில செயலாளர்) 4. ஆ. அறிவுச்சுடர் – திருச்சி, 5. த. வீரன் – தென்காசி, 6. பா. முத்துக்கருப்பன் – மதுரை, 7. த. நாகராஜ் – தூத்துக்குடி, 8. இரா. அழகர் – அருப்புக்கோட்டை, 9. ஏ. வீரபாண்டிய கட்டபொம்மன் – நெல்லை, 10. சு. ஆறுமுகம் – அருப்புக்கோட்டை, 11. செ. நவீன்குமார் – தூத்துக்குடி, 12. ப. வெங்கடேஷ் – பெரம்பலூர், 13. சீ. செங்கதிர் வள்ளுவன் – தென்காசி, 14. த. முத்துராமன் – திருநெல்வேலி, 15. ச. கசமுத்து – திருநெல்வேலி, 16. அ.க. அருள்மணி – திருச்சி, 17. சக்தி சரவணன் – திண்டுக்கல், 18. செ.அ. அவனிகோ இளந்திரையன் – லால்குடி.
தொடங்கி வைத்தவர்: மாநில ஒருங்கிணைப்பாளர் – இரா. குணசேகரன்.

இரண்டாம் குழு (இராமநாதபுரம் முதல் சேலம் வரை – 920 கி.மீ)
1. குழுத் தலைவர் நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), 2. ஒருங்கிணைப்பாளர் அ.ஜெ. உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 3. சொற்பொழிவாளர் தே. நர்மதா (திராவிடர் கழகம்) 4. வாழப்பாடி வேல்முருகன், 5. ஜெகதை குமார், 6. கா. காரல் மார்க்ஸ், 7. வி. புஷ்பநாதன், 8. நாகை என். இரவிக்குமார், 9. ப. இராஜேந்திரன், 10. ஜா.இர. நிலவன், 11. அ. வீரமணி, 12. க. கலையரசன், 13. இர. மகேந்திரன், 14. க. இராகுல், 15. மு. கார்த்திக், 16. பொன். பன்னீர் செல்வம், 17. பெரியார் கணபதி, 18. இரா. இரமேஸ், 19. சு. தர்மசீலன், 20. அ. பிரகாசு, 21. செ. மர்சிகா.
தொடங்கி வைத்தவர்: கே.எம். சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்).

மூன்றாம் குழு (புதுச்சேரி முதல் சேலம் வரை 1000 கி.மீ)
1. குழுப் பேச்சாளர் சே.மெ. மதிவதனி (கழக துணைப் பொதுச் செயலாளர்), 2. தலைவர் தா. தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 3. செ.பெ. தொண்டறம், 4. பி. அறிவுச்செல்வன், 5. குழு ஒருங்கிணைப்பாளர் கோ. வேலு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 6. க. சத்தியசீலன், 7. ச. சித்தார்த், 8. நவா ஏழுமலை, 9. ச. அன்புகரசன், 10. நா. உதயசங்கர், 11. பா. செந்தில், 12. ரா. ராமநாதன், 13. ப. பாஸ்கர், 14. இரு. ராஜேந்திரன், 15. த. நந்தகுமார், 16. மு. அருண்குமார், 17. கு. பிரவீன்குமார், 18. த.சி. இளந்திரையன், (தலைமைக் கழக அமைப்பாளர்), 19. செ. சிலம்பரசன், 20. சு. பன்னீர்செல்வம்.
தொடங்கி வைத்தவர்: சிவ. வீரமணி, (புதுவை மாநில தலைவர்).

நான்காம் குழு (தாராபுரம் முதல் சேலம் வரை – 890 கி.மீ.)
1. குழு ஒருங்கிணைப்பாளர் மு.வீரமணி (மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணி தலைவர்), 2. மு. பிரபாகரன், 3. ச. பிரசாந்த், 4. குழுத் தலைவர், த. சிவபாரதி (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்), 5. கோ. பிரகதீஸ்வரன், 6. ந. விக்னேஷ்குமார், 7. ந. மோகன்குமார், 8. ச. ஆதித்யன், 9. குழு பேச்சாளர், தருமபுரி யாழ். திலீபன் (அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) 10. சி. புதுமைராஜ்.
நான்காம் குழுவில் பெண்கள் யாரும் இடம் பெறவில்லை.
தொடங்கி வைத்தவர்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்.

அய்ந்தாம் குழு (சென்னை முதல் சேலம் வரை – 660 கி.மீ.)
1. குழு பேச்சாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), 2. குழுத் தலைவர் சோ. சுரேஷ் – வடசென்னை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 3. குழு ஒருங்கிணைப்பாளர் மா. செல்லதுரை– தருமபுரி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 4. தளபதி பாண்டியன் – வடசென்னை 5. ஆ. வெங்கடேசன்– வடசென்னை, 6. மு. வேலவன் – வடசென்னை, 7. நா. பார்த்திபன் – வடசென்னை, 8. பா. பார்த்திபன் – வடசென்னை 9. அ. புகழேந்தி – வடசென்னை, 10. கி. ஏழுமலை – ஆவடி, 11. சா. சென்னகிருஷ்ணன் – ஆவடி, 12. வ. வேலவன் – ஆவடி 13. நா. விவேகானந்தன் – தாம்பரம், 14. க. கண்ணன் – தாம்பரம், 15. ஜி. ராஜவர்மன்– தாம்பரம், 16. த. ராஜா– தென்சென்னை, 17. இரா. அருள் – தென்சென்னை, 18. ச. அகரன்– கிருஷ்ணகிரி, 19. கு. ஹரிஹரன் – தருமபுரி, 20. மா. நித்தியானந்தம் – திருப்பத்தூர், 21. தா. பாண்டியன் – திருப்பத்தூர், 22. மு. பசும்பொன் –ஆவடி 23. க. இறைவி – தாம்பரம், 24. த. மரகதமணி – வடசென்னை, 25. டே. பிரித்திவிராஜ் – வடசென்னை, 26. மு. பவானி – தென்சென்னை, 27. சா. தாமோதரன் – தென்சென்னை, 28. ரே. வடிவேலன் – அரூர், 29. கு. ராஜேந்திரன் – திருப்பத்தூர், 30. ஆ. செல்வம் – சோழிங்கநல்லூர் 31. ச. சஞ்சய்– தென்சென்னை, 32. ர. ராஜேஷ்– அரூர், 33. வி. யாழ்ஒளி – தென்சென்னை, 34. கே.என். மகேஷ்வரன் – வடசென்னை, 35. ஒ. இராமச்சந்திரன் – வடசென்னை, 36. பொ.இ. பகுத்தறிவு – தஞ்சை, 37. வை. கலையரசன் – ஆவடி 38. துரை. அருண் – தென் சென்னை 39. கோகுல்குமார் – ஒசூர், 40. சித்தார்த் – ஒசூர், 41. ச. தருண் – ஒசூர், 42. ச.க. தருண் – ஒசூர், 43. வே. சரவணன் – வடசென்னை.
தொடங்கி வைத்தவர்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்.
5 குழுக்களினதும் ஏற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் : பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்.

‘நீட்’ எதிர்ப்பு இரு சக்கர ஊர்திப் பயணம் மேற்கொண்டு வருகை தந்த இளைஞர்களை சேலத்தில்
கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் வரவேற்றார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் ஜூலை 11ஆம் தேதி கன்னியாகுமரி, இராமநாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை ஆகிய 5 முனைகளில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு குழுவும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து சிற்றூர், பேரூர், நகராட்சி, மாநகராட்சி என பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து ‘நீட் விலக்கு ஏன்’ என்ற துண்டறிக்கைகளையும், புத்தகங்களையும் மக்களிடையே பரப்பி ஜூலை 15 சேலம் வருகை தந்த 5 குழுக்களிலும் பங்கேற்ற 112 இளைஞர்கள், மாணவர்களை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் வரவேற்று பேரணியாக மேடைக்கு அழைத்து வந்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், தலைமை கழக அமைப்பாளர்கள், ஊமை ஜெயராமன், ஈரோடு சண்முகம் ஆகியோரும் வரவேற்றனர்.

‘நீட்’ எதிர்ப்பு இரு சக்கர ஊர்திப் பேரணியை
சேலத்தில் தலைவர்கள் பார்வையிட்டனர்
திராவிடர் கழக இளைஞரணி, திராவிடர் மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து புறப்பட்டு ஜூலை 15இல் சேலம் நிறைவு விழாவிற்கு வருகை தந்த நீட் எதிர்ப்பு இரு சக்கர ஊர்திப் பேரணியாக வருகை தந்த குழுவினரை, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மேனாள் அமைச்சர் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேனாள் தலைவர் ஈ.வி.கி.ச. இளங்கோவன் எம்.எல்.ஏ., சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர் இராஜேந்திரன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ. வந்தியதேவன், கழக பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ் ஆகியோர் பார்வையிட்டு கையசைத்து வாழ்த்தி வரவேற்றனர்.

திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் இரு சக்கர வாகனப் பரப்புரை பயண நிறைவு விழா பொதுக் கூட்டம் சேலம் – கோட்டை மைதானத்தில் நேற்று (15.7.2024) மாலை 6 மணிக்கு தொடங்கியது. அய்ந்து முனைகளிலிருந்தும் (11.7.2024) புறப்பட்டு கன்னியாகுமரி, இராநமாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் தொடங்கிய 100க்கும் மேற்பட்ட தோழர்கள் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் கோட்டை மைதானத்தை வந்தடைந்தனர். மூன்று வரிசைகளாக அணி வகுத்த தோழர்களை விண்ணைமுட்டும் முழக்கத்துடன் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி., மேனாள் ஒன்றிய அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் உள்ளிட்ட தலை வர்கள், பயணத் தோழர்களை வரவேற்றனர். ‘நீட்’டை ஒழித்துக் கட்டுவதற்கான முழக்கம் ஒலித்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக அனைவரையும் சேலம் மாவட்டத் தலைவர் அ.ச. இளவழகன் வரவேற்று உரையாற்றினார்.

சேலம் மாவட்டச் செயலாளர் சி. பூபதி தலைவரை முன்மொழிந்தார். அதனை தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி தொடங்கி 15.7.2024, வரை அய்ந்து நாட்கள் வெயில், மழையின் இடையில் தொடர் பிரச்சா ரங்களை மேற்கொண்டு 250க்கும் மேற்பட்ட நகர, பேரூர், ஒன்றிய, கிராமங்களில் ‘நீட்’க்கு எதிரான முழக்கங்களை எடுத்துரைத்த கழகத்தின் இளைஞரணி சொற்பொழிவாளர்கள் 1) திருவாரூர் தே. நர்மதா, 2). மு. இளமாறன், 3. த.மு. யாழ் திலீபன் மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர்கள், 4. சே.மெ. மதிவதனி, 5. ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தையும் மக்களின் மன நிலையையும், சுருக்க மாக எடுத்துக் கூறி உரையாற்றினார்கள். 5ஆம் குழுத் தோழர்கள் கழகத் தலைவரிடம் பயண குழு உண்டியலை காண்பித்தவுடன் தமது சர்பாக ரூ.500ம், அதனைத் தொடர்ந்து ஆ. இராசா எம்.பி., ஈ.வெ.கி.ச. இளங்கோவன் எம்.எல்.ஏ., இரா. இராசேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோரும் பயணக் குழுவை பாராட்டி உண்டியல் நிதி அளித்தனர். ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், இந்த வாகனப் பேரணியை சென்னை பெரியார் திடலில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். திருவண்ணாமலை, விருத்தாச்சலம் ஆகிய ஊர்களிலும் பங்கேற்று உரையாற்றி இருக்கிறேன் என்று கூறினார்.

மதிமுக கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் ஆ. வந்தியத்தேவன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், சேலம் மாநகர மேயர் ஆ. இராமச்சந்திரன், தி.மு.க. மத்திய மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. இராஜேந்திரன், சேலம் தமிழ்நாடு கமிட்டியின் ேமனாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஆ. இராசா ஆகியோர் பயணக் குழுக்களை வரவேற்று வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக சேலம் மாநகர செயலாளர் ச.வெ. இராவணபூபதி நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக