சனி, 16 ஏப்ரல், 2022

அண்ணல் அம்பேத்கரின் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை ‘சமத்துவ நாள்‘ உறுதிமொழி ஏற்கப்பட்டது

சென்னை மந்தைவெளியில் 'வென்றது திராவிடம்' என்ற கல்வெட்டுடன் கழகக்கொடியை ஏற்றி வைத்து, சிந்தனை பலகை திறப்பு


கழகத் துணைத்தலைவர் பங்கேற்பு

சென்னை, ஏப். 16- சென்னை மந்தை வெளியில் தென் சென்னை மாவட்ட கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிந்தனை பலகை, ‘வென்றது திராவிடம்' கல்வெட்டு திறந்துவைத்து கழகக் கொடியை கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் ஏற்றிவைத்தார்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளை ஞர் அணி சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131ஆவது பிறந்தநாள் 14.4.2022 முற்பகல் 10.30 மணி அளவில் மிகச்சிறப்பாகவும், எழுச்சியோ டும் கொண்டாடப்பட்டது.

மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தின் எதிரில் புதிதாக அமைக்கப்பட்ட 'வென்றது திராவிடம்' என்ற கல்வெட்டுடன் கூடிய கொடிக்கம்பத்தில் விசாலாட்சி தோட்டம் இரா. மாரிமுத்து தலைமையில் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், இளைஞரணித் தலைவர் ச.மகேந்திரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் ந.மணித்துரை ஆகியோர் முன்னி லையில் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகக் கொடியேற்றி யதோடு, சிந்தனைப் பலகையை யும் திறந்து வைத்து, மாணவர்க ளுக்கு பென்சில் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

அதன் பிறகு மந்தைவெளி விசாலாட்சி தோட்டத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமை யில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலையில் சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் இரா.தே.வீரபத்திரன் வாழ்த்து முழக்கங்களுக்கு  இடையே மாலை அணிவித்தார்.  மயிலை யுவராஜ் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். வழக்குரைஞர் சு.குமாரதேவன், தரமணி கோ.மஞ்சுநாதன், மு.சண்முகபிரியன், இரா.பிரபா கரன், மாணவர் கழகம் கு.பா.அறிவழகன், கு.பா.கவிமலர், ஸ்டாலின், ராஜேஷ், விசா லாட்சி தோட்டம் ரஞ்சித், ராம்கி, கவுதம், கார்த்திக், பன் னீர், மந்தைவெளி ரஞ்சித், பாலாஜி, பெரியார்பிரியன், பாண்டி, பெரியார் ஆதவன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் சூரி, அய்யப்பன், திமுக வட்ட துணைச் செயலாளர் சரண்ராஜ் மற்றும் திரளான தோழர்கள், பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

புதன், 6 ஏப்ரல், 2022

சுயமரியாதை இயக்கத்தின் நாகரிகத்தொட்டில் நாகர்கோவில்! நம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவே எங்களின் தொடர் பிரச்சாரம்! (நீட் எதிர்ப்பு பரப்புரை தொடக்கம்)