வியாழன், 28 மார்ச், 2019

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து

திராவிடர் கழக மகளிரணி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்




சென்னை, மார்ச் 17- பொள்ளாச்சியில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை சார்பில் நேற்று (16.3.2019) மாலை 3 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் கடந்த ஆறு ஆண்டுகாலமாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களும், பணியாற் றும் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டுள்ளனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வளர்ந்த ஒரு சமுதாயத்தில் நாம் இருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பி, வெட்க மடையவும் செய்கிறது.

இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கிறார் கள் என்று எண்ணும்போது அதிகாரம் எந்த அளவுக்குக் கேவலத்தின் உச்சியையும் எட்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

இந்தக் கேவலமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைக்கு ஆளாக்கவில்லை என்றால், பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு என்பதே இல்லையோ என்ற பேரச்சத்தைத்தான் ஏற்படுத்தும். உலக நாடுகள் மத்தியில் நாம் தலைக் குனியும் அவலத்தை உண்டாக்கும். திராவிடர் கழக மகளி ரணி மகளிர் பாசறை சார்பில் சென்னையில் 16.3.2019 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 12.3.2019 அன்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

அதன்படி அன்னை மணியம்மையார் நூற்றாண்டு ஆண்டான இந்தாண்டில், பெண்கள் மத்தியில் இந்த வகையில் விழிப்புணர்வுப் பணி வீறு கொண்டு எழும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழர் தலைவர் தெரிவித்திருந்தார்.

கழகத் தலைவரின் அறிவிப்பின்படி அன்னை மணியம்மையாரின் நினைவு நாளான நேற்று (16.3.2019) மாலை 3 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை யின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தலைமை தாங்கி உரையாற்றினார்.

வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, இறைவி, கு.தங்க மணி, சே.மெ.மதிவதனி, வி.வளர்மதி, நாகவள்ளி, பூவை.செல்வி, செ.கனகா, க.வனிதா, பொன்னேரி செல்வி, இராணிரகுபதி, பண்பொளிகண்ணப்பன், க.சுமதி, மரகதமணி, நதியா, பொன்னேரி இராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன உரை

திராவிட கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ம.தி.மு. க.வின் மாநில மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, "புதிய குரல்" எழுத்தாளர் ஓவியா ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்தினர்.

திராவிடர் கழக மகளிர் பிரிவு இணைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கி நன்றி கூறினார். ஆர்ப்பாட்ட முழக்கங்களை வழக்குரைஞர் வீரமர்த்தினி, இறைவி ஆகியோர் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம், திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் அ.கலைசெல்வி, வேலூர் மண்டலத் தலைவர் சட கோபன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், பெருங்கவிக்கோ, வா.மு.சேதுராமன், திண் டிவனம் சிறீராமுலு, கவிஞர் கண்மதியன், நெய்வேலி ஞானசேகரன், நிலவு முத்துகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

மகளிரணியினர்

துணைப்பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி. பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, சி.வெற்றிச்செல்வி. க.பார்வதி, அ.கலைச்செல்வி, தகடூர் தமிழ்ச்செல்வி, மல்லிகா தயாளன் (மதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர்), தங்க.தனலட்சுமி, பெரியார் செல்வி, அ.வீரமர்த்தினி, செ.கனகா, க.பண்பொளி, பகுத்தறிவு, வளர்மதி, விஜயலட்சுமி, சே.தமிழரசி, கோட்டீஸ்வரி, நூர்ஜகான், நதியா சக்கரவர்த்தி, மணிமேகலை, பூவை. செல்வி, கனிமொழி, வனிதா, ராதிகா, மோகனப்பிரியா, ராணி ரகுபதி, நாகவள்ளி, நதியா, பொன்னேரி செல்வி, மடிப்பாக்கம் தேவி, வி.சாந்தி, இந்திராணி,  பொன்னேரி ராணி, அமல சுந்தரி, பூவிழி, சரோஜா, ஆற்றலரசி, பரிமளா ராமநாதன்,  இறைவி, சந்திரா, வாசுகி, கவின், கவிசிறீ, மேரி, காவியா, பா.மணியம்மை, சந்திரா, விஜயா மோகன், சீலா விக்ரம் சூர்யா, செம்மொழி, ராணி, கீதா, ஆவடி மெர்சி, கற்பகம், எழிலரசி, சரோஜா, தெய்வானை, வாசுகி, பவதாரணி

மறுமலர்ச்சி திமுக

கவுசல்யா ரவி, லட்சுமி ஜீவா, உஷா ஜெயச்சந்திரன், நாகம்மாள், மல்லிகா, சாந்தி, காந்திமதி, சுபாஷினி, மன்னி, மேரி, மகேஸ்வரி, மாரியம்மாள், கலைச் செல்வி, சாந்தி தியாகராஜன், புஷ்பா, மோகவள்ளி,

வடசென்னை

மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தி.செ. கணேசன், கி. இராமலிங்கம், கோ.தங்கமணி, பெரு.இளங்கோ, அ.செந்தமிழ்தாசன்,  ஆத்தூர் சேகர், புரசை சு.அன்புச்செல்வன், நா.பார்த்திபன், திலீபன், பா.கோபாலகிருட்டிணன்

தென்சென்னை

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், கோ.வி. ராகவன், சைதை தென்றல், ஆயிரம்விளக்கு சேகர், யாழ் பாண்டியன், சைதை செல்வம், தொழிலாளரணி பழனிபாலு.

தாம்பரம் மாவட்டம்

மாவட்ட தலைவர் ப.முத்தையன், கோ.நாத்திகன், வெ.ஞானசேகரன், விடுதலை நகர் செயராமன், கூடு வாஞ்சேரி இராசு, தாம்பரம் குணசேகரன், சோமசுந் தரம், சக்திவேல், தமிழினியன், பொற்செழியன், சீனிவாசன்,  மோகன்ராஜ், பொழிசை கண்ணன்

ஆவடி மாவட்டம்

மாவட்ட தலைவர் பா.தென்னரசு, க.இளவரசன், முத்துகிருஷ்ணன், சோபன்பாபு, கார்வேந்தன், கொரட்டூர் பன்னீர்செல்வம், ராமதுரை, கலைமணி, சுகுமாரன், பகுத்தறிவு, நடராசன், ஏழுமலை, அருள் தாஸ், மூர்த்தி, முரளி, தமிழ்மணி, ராமலிங்கம், பெரியார் மாணாக்கன், கொரட்டூர் கோபால், அமுதன், ரகுபதி, காரல் மார்க்ஸ், சந்திரபாபு, உடுமலை வடி வேல், பட்டாளம் பன்னீர், மூர்த்தி, டி.எஸ்.கவுதமன் (மேனாள் மாவட்டத் தலைவர், திருவண்ணாமலை)

கும்மிடிப்பூண்டி

அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், இரா.ரமேஷ், உதயகுமார், அருள், முருகன், பாலாஜி, சோழவரம் சக்கரவர்த்தி, கஜேந்திரன், விஜயகுமார், பாலாஜி, தமிழ்ச்செல்வன்

எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்!


போராட்டம் போராட்டம்

மகளிர் உரிமைப் போராட்டம்!

போராட்டம் போராட்டம்

பெண் சிங்கங்களின் போராட்டம்!

பெண் என்றால் பேதைகளா?

ஆண்களுக்கு அடிமைப் போதைகளா?

பெண் என்றால் போகப் பொருள்களா

ஆண்கள் என்றால் அராஜக சூரர்களா?

அனுமதியோம் அனுமதியோம்

ஆண்கள் ஆதிக்கத்தை - அக்கிரமத்தை

அனுமதியோம் - அனுமதியோம்!

முடிவு கட்டு முடிவு கட்டு

பொள்ளாச்சி கொடுமைகளுக்கு

முடிவு கட்டு முடிவு கட்டு!

ஓயமாட்டோம் ஓயமாட்டோம்!

முடிவு தெரியும்வரை ஓயமாட்டோம்!

வந்து விட்டோம் வந்து விட்டோம்

வீதிக்கே வந்து விட்டோம் - வந்துவிட்டோம்!

நிர்பயாவைத் தீண்டிய பாம்புகளை

தண்டித்தது போல பொள்ளாச்சி நாகப்பாம்புகளுக்கும்

தண்டனை கொடு - தண்டனை கொடு!

துடைப்பத்தை ஏந்திய கைகள்

துப்பாக்கியை ஏந்தும் துப்பாக்கியை ஏந்தும்!

மத்திய மாநில அரசுகளே

பயிற்சி கொடு - பயிற்சி கொடு

துப்பாக்கிப் பயிற்சி கொடு - உரிமம் கொடு!

கெஞ்ச மாட்டோம் கெஞ்ச மாட்டோம்

ஆண்கள் அராஜகத்தை ஒழித்திடாமல்

துஞ்ச மாட்டோம் - துஞ்ச மாட்டோம்!

வாழ்க வாழ்க வாழ்கவே!

தந்தை பெரியார் வாழ்கவே!

வெல்க வெல்க வெல்கவே!

பெண்கள் போராட்டம் வெல்கவே!

அன்னை மணியம்மையார் நினைவு நாளில்

சூளுரைப்போம் - சூளுரைப்போம்

பெண்களுக்கான சுயமரியாதையை காப்பாற்றிட காப்பாற்றிட

சூளுரைப்போம் - சூளுரைப்போம்!

சமையலறைப் பெண்களே

வாருங்கள், வாருங்கள் வீதிக்கு வாருங்கள்!

சுயமரியாதையை காப்பாற்றிட

சூளுரைக்க வாருங்கள்!

பெண்களே பெண்களே போராடு -

பெரியார் வழியில் நடைபோடு!

போராடுவோம் - வெற்றி பெறுவோம்!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

- விடுதலை நாளேடு, 17.3.19

எம்.ஏ.கிரிதரன் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு



ஆவடி, மார்ச் 28 இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாம் ஆண்டு நினைவுநாளை (12.3.2019) யொட்டி, ஆவடி பெரியார் மாளிகையில், 24.3.2019 அன்று மாலையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில்,  கிரிதரனின் படத்தைத் திறந்து வைத்து அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் நினைவேந்தல் உரை ஆற்றினார்.

மண்டலச் செயலாளர் தே.செ. கோபால், மாவட்டத் தலைவர் பா.தென்னரசு,  செயலாளர் க.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், வாலாஜாபாத் மோகன், மற்றும் வஜ்ரவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 28.3.19

திங்கள், 25 மார்ச், 2019

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம்



மறைமலைநகர், மார்ச் 24  17.2. 2-019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க துணைச் செயலாளர் கோ. கணேஷ் அவர்கள் 41 ஆண்டுகள் பணியாற்றி 23.2.2019இல் பணி ஓய்வு பெறுவதையொட்டி  கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் த.ரமேஷ் தலைமையிலும் செய லாளர் செ.ர. பார்த்தசாரதி முன் னிலையிலும் மறைமலை நகர் வள்ளுவர் மன்றத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் பூ.சுந்தரம் அவர்கள் கோ.கணேஷ் அவர் களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். மறைமலைநகர் திராவிடர் கழக  நகர செயலாளர் துரை. முத்து அவர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார். சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

உடன் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் 2019 ஆம் ஆண்டு புதிய பொறுப்பாளர் தேர்வும் நடைபெற்றது.

புதிய பொறுப்பாளர் பட்டியல்


தலைவர் - த.ரமேஷ். செய லாளர் - செ.ர.பார்த்தசாரதி, பொரு ளாளர் - கா.நாகராஜ், துணைத் தலைவர் - கோ.குமாரி

துணைச் செயலாளர்-  கோ.கணேஷ்,  ம.கருணாநிதி

செயற்குழு உறுப்பினர்கள் பா.இயேசுராஜா, வ.வசந்தி,  து.டில்லி

துணைத்தலைவர் கோ.குமாரி நன்றி கூறினார்.

மறைமலைநகர் நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சங்கம் சார்பாக கோ.கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- விடுதலை நாளேடு, 24.3.2019

வியாழன், 14 மார்ச், 2019

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

தமிழர் தலைவர் உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்பு




சென்னை, மார்ச் 10- பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள சென்னை, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட 7 பெருநகரங்களில் நேற்று (9.3.2019) மாலை  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சென்னை வாலாஜா சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பெருந்திரளான கழகத் தோழர் களுடன் தமிழர் தலைவர் பங்கேற்றார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் மனித சங்கிலிப் போராட்டம் நேற்று மாலை நடந்தது.



சென்னை அண்ணா சாலை அருகே உள்ள அண்ணா சிலையிலிருந்து வாலாஜா சாலை தொடக்கம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை நடைபெற்ற இம்மனித சங்கிலி போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை மண்டல கழகத் தோழர் - தோழியர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.


இப்போராட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி, திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், திராவிட மாணவர்கள் கழக மாநில செயலாளர் ச.பிரின்சுஎன்னாரெசு பெரியார் மற்றும் மண்டல கழக, வடசென்னை, தென்சென்னை, தாம்பரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திராளான கழகத் தோழியர்கள் பங்கேற்றனர்.



இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, எஸ்.டி.பி.அய். கட்சி தலைவர் நெல்லை முபாரக், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தமிழ் பேரரசு கட்சி தலைவர் கவுதமன், தோழர் தியாகு, திரைக்கலைஞர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், மனோபாலா, இயக்குனர்கள், அமீர், வெற்றிமாறன், ராம், களஞ்சியம் உள்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இப்போராட்ட முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து போராட் டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

- விடுதலை நாளேடு, 10.3.19

திங்கள், 11 மார்ச், 2019

நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!



தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர்கள், இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி (12-3-2019) ரூபாய் 3,000 விடுதலை வளர்ச்சி நிதியாக அளித்துள்ளார். நன்றி!


-  விடுதலை நாளேடு, 11.3.19