ஞாயிறு, 7 ஜூலை, 2024

மண்டல் பரிந்துரையை அமலாக்கக்கோரி நடைபெற்ற மறியல்-கைது! -1.8.1989

 

இயக்க வரலாறான தன் வரலாறு(234) : 

செப்டம்பர் 16-30 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்

கி.வீரமணி


மண்டல் பரிந்துரையை அமலாக்கக்கோரி நடைபெற்ற மறியலில் கைதாகும்

ஆசிரியர் கி.வீரமணி மற்றும் கழகத்தினர்

 

26.7.1989 முதல் 31.7.1989 வரை ரயில் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மண்டல குழு பரிந்துரைகளைச் செயல்படுத்த பிரச்சாரம் மேற்கொண்டு தமிழகம் முழுவதும் சென்று மக்களிடத்தில் கிளர்ச்சி குறித்து விளக்கி வந்தேன்.

1.8.1989 அன்று அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, ஊர்வலமாக மறியலுக்குப் புறப்பட்டபோது அருகே போலிசார் தயாராக நிறுத்திவைத்திருந்த வேன்களில் கைது செய்து ஏற்றினர். அப்போது, ‘மண்டல் பரிந்துரையை அமலாக்கு!’ என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

முன்னதாகவே போராட்ட வீரர்களிடையே தமிழக ஜனதாதள் கட்சி முன்னணியினர் வி.எஸ்.தளபதி எம்.ஏ., பி.எல்., கலிவரதன், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் எனக்கு கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்தி அனுப்பினர். எங்களை கைது செய்தனர்.  இதில் பெண்கள் 36, ஒரு பெண் கைக்குழந்தையுடன் கைதானார். 2.8.1989 அன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக