வெள்ளி, 23 டிசம்பர், 2016

தென் சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று தென் சென்னையில் கீழ்க்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெற விருக்கின்றன.

காலை 8.00 மணி தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு,  அண்ணா சாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மாலை அணிவிப்பு.

தலைமைக் கழக நிகழ்ச்சிகள்

காலை 9.00 மணியளவில் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து கழகத் தோழர்கள் பெருந்திரளான அளவில் திரண்டு பங்கேற்கும் அமைதி ஊர்வலம்Õ தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை வழியே பெரியார் திடல் அடைகிறது.

காலை 10 மணி: பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை யில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு: கழக மகளிரணி சார்பில், பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு; திராவிடர் தொழிலாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்தல்.

அதனைத் தொடர்ந்து இந்திய நாத்திக சங்கத்தின் ஆந்திர அறிவியல் மாணவர் கழகம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை தந்தை பெரியார் நினைவுநாள் சிறப்புக்கூட்டம் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறுகிறது.
நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய உலகத் தலைவர் பெரியார்’- தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு (தொகுதி-4) நூல் வெளியிடப்படுகிறது.
மருத்துவ முகாம்

தந்தை பெரியார் நினைவு நாளை யொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவ மனையில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி முடிய குருதிக் கொடை முகாம், மகளிர் மார்பகப் பரிசோதனை, கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, பொது மருத்துவம், தாய்சேய் நலம், நீரிழிவுநோய், கண், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், சிறுநீரகம் பல்வேறு பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

செல்வேந்திரன்-புவனேசுவரி இணை ஏற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்

-விடுதலை,16.12.16
சென்னை, டிச. 19- தென் சென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தோழர் கு.செல்வேந்திரன் - மு.புவனேசுவரி வாழ்க்கை இணை ஏற்பு விழா, 15.12.2016 அன்று மாலை 6.30 மணியள வில் சென்னை சைதாப்பேட்டை எஸ்.பி.எஸ். திருமண மண்ட பத்தில் சிறப்பாக நடைபெற் றது.
தென் சென்னை மாவட்டக் கழக இளைஞரணித் துணைத் தலைவர் மு.முகிலன் வரவேற் புரையாற்றினார். தலைமைக் கழக சொற்பொழிவாளர் செ.தமிழ்சாக்ரடீஸ் அறிமுகவுரை வழங்கினார்.
கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மணவிழாவிற்குத் தலைமை வகித்து, மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழி யினை ஏற்கச் செய்து, இணை ஏற்பு நிகழ்வினை நடத்தி வைத்து அறிவுரையாற்றினார்.
தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வ நாதன், சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, கழகப்பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.
மணவிழாவிற்கு தலைமை வகித்து நடத்தி வைத்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களுக்கு மணமக்கள் குடும்பத்தார் பயனாடை அணி வித்து சிறப்புச் செய்தனர்.
மணமகன் கு.செல்வேந்தி ரன் கழக கொள்கை வழி நடக்க ஊக்கிய அவரது பெற்றோர் சு.பெ.குமார் - நீலாவதி, சகோ தரியார் சாந்தி மற்றும் மண மகள் மு.புவனேசுவரி தாயார் மு.லட்சுமி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த் திய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு மணமகன் கு.செல்வேந்திரன் பெரு மகிழ்வுடன் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழ கப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி மற் றும் கழகப் பொறுப்பாளர்க ளுக்கு மணமக்கள் குடும்பத்தி னர் பயனாடை அணிவித் தனர்.
மணவிணீழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பறை இசை முழக்கத்துடன் குழுமிய கழகத் தோழர்களும், மணமக்கள் குடும்பத்தினர் உற் சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழர் தலைவரை வரவேற் கும் விதமாக சைதை அண்ணா சாலை சந்திப்பிலும், மண விழா மண்டபத்திலும் டிஜிட் டல் பேனர்களும், சாலையின் இருபுறங்களில் கழகக் கொடி களுடன் கூடிய கம்பங்களும் நிறுவப்பட்டிருந்தன.
மண விழாவில் மாநில கழக மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர் செல்வம், கழகப் பொதுக்குழு உறுப்பினர்களான சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், எண்ணூர் வெ.மு.மோகன், சவுந்தரி நட ராசன், வடசென்னை மாவட் டக் கழகத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன், சைதை வள்ளியம்மாள் பாலு, தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் மயிலை டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், துணைத் தலைவர் கோ.வீ.இராகவன், சைதை தென்றல், ப.ஆனந்தன், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தய்யன், செய லாளர் கரசங்கால் நாத்திகன், முன்னாள் செயலாளர் அனகை ஆறுமுகம், மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் இர.சிவசாமி, மாவட்டக் கழக இளைஞரணி துணைச் செயலாளர் சுரேசு, தமிழினியன், விடுதலை நகர் சி.ஜெயராமன், மாநில கழக வழக்குரைஞரணி அமைப்பா ளர் ஆ.வீரமர்த்தினி, வழக் குரைஞர் ந.விவேகானந்தன், வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி, மாநில கழக மாண வரணி துணை செயலாளர் நா.பார்த்திபன், வடசென்னை மாவட்டக் கழக செயலாளர் தே.ஒளிவண்ணன், துணை செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி தலைவர் புரசை சு.அன்புச் செல்வன், செய லாளர் தளபதி பாண்டியன், துணைத் தலைவர் மங்களபுரம் பாசுகர், மகளிர் பாசறை செய லாளர் த.மரகதமணி, செஞ்சி ந.கதிரவன், பெரியார்திடல் சுரேசு, வை.கலையரசன், கலை மணி, திருநின்றவூர் அருண், வேப்பம்பட்டு கழகத் தலைவர் சிவ.இரவிச்சந்திரன், செயலா ளர் பட்டாளம் பன்னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் க.ச.க.இரணியன், பொன்னேரி ப.க. தோழர் கே.வினோத், திரா விடர் மகளிர் பாசறை செல்வி, கார்க்காத்தகுடி ஊராட்சி மன் றத்தலைவர் கா.சேகர், மலர் விழி - நெடுங்கிள்ளி, பெரியார் களம் இறைவி, பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந் தில்குமாரி, கலைத்துறை பொறுப் பாளர் செ.கனகா, வழக்குரை ஞர் ம.வீ. அருள்மொழி, இங் கர்சால் பெரியார் சாக்ரட்டீஸ், புரூனோ, இனியரசன், ஈழ முகிலன், பொறியாளர் ஈ. குமார், புரசை பாலமுருகன், ஆவடி பன்னீர், சூளைமேடு கோ.வீ.ராகவன், சைதை மு.ந. மதியழகன், பெரியார் மாணாக் கன், க.வெண்ணிலா, இ.சீர்த்தி,  கலைமதி, தமிழ்ச்செல்வி, பவானி, ரேவந்த், க.ஆற்றல் அரசி, தமிழீழம், பெரியார் பிஞ்சுகள் ஆ.பிரியவர்சினி, ஆ.ஆதவன், சித்தார்த் புருனோ மற்றும் கழகப் பொறுப்பாளர் களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.
மணவிழாவில் கழக இளை ஞரணித் தோழர் மு.சண்முகப் பிரியன் இணைப்புரை வழங் கினார். தென் சென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் ச.மகேந்திரன் நன்றி கூறினார்.
விடுதலை,19.12.16
விடுதலை,13.12.16

திங்கள், 19 டிசம்பர், 2016

மறைவு-நுங்கம்பாக்கம் என்.கிருஷ்ணமூர்த்தி


தென் சென்னை நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழகத் துணைச் செயலாளர் ல.கி.சரவணனின் தந்தையார் தி.மு.க. செயல் வீரர் ல.என். கிருஷ்ண மூர்த்தி (வயது-78) அவர்கள் 6.12.2016  விடியற் காலை 5 மணியளவில் காலமானார்.   தென் சென்னை சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்   தலைமையில்  மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், அரும்பாக்கம் க.தமிழ்ச்செல்வன், மதுரவாயல்  க.பாலமுரளி, நுங்கம் பாக்கம் பகுதி தலைவர் மு.கோபால், செயலாளர் க.வெற்றிவீரன், கோ.குமாரி மற்றும் பகுதி தி.மு.க.பொறுப்பாளர் நு.வே.மோகன் ஆகியோர் அவரது உடலுக்கு  மாலைவைத்து மரியாதை செலுத் தினர். மாலை 5 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

-விடுதலை,10.12.16

வியாழன், 1 டிசம்பர், 2016

நுங்கம்பாக்கம் மா.நடராசன் முதலாமாண்டு நினைவேந்தல்

புரசைவாக்கம், டிச. 1- 26.11.2016 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை  புர சைவாக்கம் பகுதியிலுள்ள ராஜ் பவன் உணவக அரங்கில் தென் சென்னையை சேர்ந்த நுங்கம் பாக்கம் பகுதி கழக துணைத் தலைவரும், அசோக் லேலண்டு திராவிடர் தொழிலாளர் கழக துணைச் செயலாளருமான சுய மரியாதைச் சுடர் மா.நடராசன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பெ. செல்வராசு (மாநில தி.தொ.க.) அவர்கள் தலைமையில் நடை பெற்றது. செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை யாற்றினார்.
இரா.வில்வநாதன் (மாவட் டத் தலைவர்) அவர்களின் வீர வணக்க உரைக்குப்பின் சுய மரியாதைச் சுடர் மா.நடராசன் அவர்களின் படத்தை திறந்து வைத்து கழக துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நினைவேந்தல் உரை யாற்றினார்.
சா.தாமோதரன் (துணைச் செயலாளர்), நுங்கம்பாக்கம் வெற்றிவீரன், நா.மதிவாணன், க.தமிழினியன், துரை.ராவ ணன், கோ.தங்கமணி, த.தன லட்சுமி, செ.உமா, க.சுமதி, அரும்பாக்கம் க.தமிழ்ச்செல் வன், புரசை அன் புச் செல்வன் மற்றும் குடும்ப நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண் டனர்.
நிகழ்ச்சி முடிவில் மா.நட ராசன் அவர்களின் துணைவி யார்  பத்மாவதி அனைவருக்கும் நன்றி கூறினார.


-விடுதலை,1.12.16

Image may contain: 2 people, people standing and indoor

Image may contain: 4 people, people sitting


-விடுதலை,17.11.16