வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

பெருந்தொண்டர் மானமிகு மயிலை திரு.சாமிநாதன் மறைவு


பெருந்தொண்டர் மானமிகு மயிலை திரு.சாமிநாதன் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தும் ஆசிரியர்

31.10.1993 தந்தை பெரியார் பெருந்தொண்டரான மானமிகு மயிலை திரு.சாமிநாதன் அவர்கள் தமது 90ஆவது வயதில், மயிலை காரணீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை அறிந்து வருந்தினேன்.

அவரது இல்லம் சென்று, அவர் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினேன். தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் எம்.கே.காளத்தி, மாவட்டப் பொருளாளர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் பல கருஞ்சட்டை தோழர்களும் உடன் வந்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த பெரியவர் சாமிநாதன் சுயமரியாதை வீரர். தான் மறைந்தால் கருப்புச் சட்டை போட்டு, எவ்வித சடங்கும் செய்யாமல் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியதை, என்னிடம் அவரது துணைவியார், பிள்ளைகள், பேரன்கள் கூறி அழுதனர். அனைவருக்கும் நான் ஆறுதல் கூறினேன். மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு நெருங்கிய நண்பர்.

அவரது கடையில் ‘விடுதலை’ இதழ் விற்பனை செய்வதில் தீவிர ஆர்வம் காட்டுபவர் சுயமரியாதை திருமணங்களை தனது இல்லத்தில் நடத்தி வைத்தவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், நம்மிடம் மிகுந்த பாசம் கொண்டவர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஜூன் 16 - ஜூலை 15.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக