வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியார் சிலை திறப்பு

30.9.1993 தந்தை பெரியார் சிலை திறப்பு சென்னை  ராயப்பேட்டையில் நடந்தது. தி.மு.க, அ.தி.மு.க., பா.ம.க. தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியில் பெரியார் சமூகக் காப்பணி, தற்கொலைப் படை அணிவகுப்பு அனைவரையும் ஈர்த்தன. புதுப்பேட்டை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, அய்ஸ்அவுஸ், வி.எம்.தெரு வழியாக விழா மேடையை அடைந்தது. தனி மேடையில் அமர்ந்து பேரணியை பார்வையிட்டேன். பின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தந்தை பெரியார் முழு உருவச் சிலையை அ.தி.மு.க. செயல் வீரர் மணிமாறன் அன்பளிப்பாக வழங்கினார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசிய பின் நான் எனது நிறைவுரையை இரவு 10.40க்கு தொடங்கி 12.05க்கு நிறைவு செய்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், மே 16 - ஜூன் 15 .2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக