வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

.சி.சிகாமணி - ச.மோகனா வாழ்க்கை ஒப்பந்த விழா

சி.சிகாமணி - ச.மோகனாவுக்கு வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவிக்கும் ஆசிரியர்

 23.08.1994 சென்னை எழும்பூர் மோத்தி மகாலில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைத் தலைவர் சி.சிகாமணி மணவிழாவை தலைமையேற்று நடத்தி  வைத்தேன். மணமக்கள் சி.சிகாமணி - ச.மோகனாவுக்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து உரையாற்றுகையில்,

நாளும் கிழமையும் பார்க்காமல் நடைபெறுவதே தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைத் திருமண முறையாகும். லண்டன்  தொலைக்காட்சி பி,.பி.சி.யில் இருந்து என்னைப் பேட்டி காண்பதற்காகப் பெரியார் திடலுக்கு வந்தார்கள். அவர்களிடம் கழகத்தின் சமூகப்பணியைப் பற்றியும், சுயமரியாதைத் திருமணங்களைப் பற்றியும் விளக்கிக் கூறினேன். அங்கு நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணத்தையும் அவர்கள் படம் எடுத்தார்கள். இன்றைக்கு டில்லியில் இருந்து லண்டன் பி.பி.சி.நிருபர் ஆன்ட்ரூ ஒயிட் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில்  சென்னை பெரியார் திடலுக்கு வந்திருந்த போது அங்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தைப் பார்த்து, நானும் அதுபோல சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். லண்டனில் இருக்கும் பி.பி.சி. நிருபர் இதுபோன்ற திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் இந்த அளவுக்கு உலக மக்களையும் கவர்ந்துள்ளது என வாழ்த்துரையில் குறிப்பிட்டோம்.

28.08.1994 சென்னை சைதாப்பேட்டை வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயல் வீரர் தே. தமிழ்ச்செல்வன் - விஜயாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி,

- உண்மை இதழ், 16-31.10.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக