செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

பெரியார் பெருந்தொண்டர் செ.குப்புசாமி இல்ல மணவிழா

23.1.1995 அன்று சென்னை அண்ணா நகர் சோபா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் செ.குப்புசாமி இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு, தலைமை ஏற்று நடத்தி வைத்தேன். செ.குப்புசாமி _ துளசியம்மாளின் மகன் கவுதமனுக்கும், பி.கே.பலராமன் _ ரேணுகா ஆகியோரின் மகள் கவியரசிக்கும் சுயமரியாதைத் திருமண முறைப்படி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். மணமக்களுக்கு வாழ்த்து கூறுகையில், “சுயமரியாதைத் திருமணம் என்பது வாழ்வியல் திருமணம்; மனிதநேயத் திருமணம். பெரியார் பெருந்தொண்டர் செ.குப்புசாமி அவர்கள் சிறந்த கொள்கை வீரர். எந்த நிலையிலும் தந்தை பெரியாரின் கொள்கையை வழிகாட்டியாகக் கொண்டு லட்சிய உணர்வுடன் வாழ்ந்து வருபவர் என்று கூறி, அவருடைய அய்ம்பதாவது திருமண நாளையொட்டி, அவரையும் அவருடைய இணையரையும் மாலை மாற்றிக்கொள்ளச் செய்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 16-30.11.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக