செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

திருவொற்றியூரில் தந்தை பெரியார் சிலையை திறப்பு


திருவொற்றியூரில் தந்தை பெரியார் சிலையை திறந்து வைக்கும் ஆசிரியர் மற்றும் விழா அமைப்பாளர்கள்

19.02.1994 சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும், மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், தீ மிதி நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவொற்றியூர் நகர திராவிடர் கழக தலைவர் பெ.செல்வராசு தலைமை வகித்தார். நகர திராவிடர் கழகப் பொருளாளர் க.இராசேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

க.பலராமன்

வட சென்னை மாவட்ட தலைவர் க.பலராமன், மாவட்ட செயலாளர் அ.குணசீலன், தென்சென்னை மாவட்ட தலைவர் எம்.பி.பாலு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

அ.குணசீலன்

மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில், முதுகில் அலகு குத்தி அம்பாசிடர் காரை இழுத்து வந்த தி.ச. மாவட்டம் செய்யாறை அடுத்த வடமணப்பாக்கம் திராவிடர் கழக இளைஞரணியை சேர்ந்த தோழர்கள் மு.சேகர், க.ஜெயபாலன், பொ.வெங்கடேசன் ஆகியோர்விழாவில் சிறப்பிக்க பெற்றனர்.

எம்.பி.பாலு

கழகத்தினரின் ஆரவாரத்துடன் தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்தேன்.

இந்தித் திணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியரை வரவேற்கும் கழகத்தினர்

திருவொற்றியூர் பகுதி முழுவதுமே கழகக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட மேடை மிகப்பெரிய அளவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒலி - ஒளி ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

-உண்மை இதழ், 16-31.7.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக