செவ்வாய், 10 மார்ச், 2026

அன்னை மணியம்மையாரின் 107-ஆவது பிறந்த நாள் சிலைக்கு மாலை – நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை கழக துணைத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!



திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 10- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 107ஆவது பிறந்த நாளான இன்று (10.3.2026) காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முன்னதாக சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிரணியினர் ஊர்வலமாகச் சென்று மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளி தூண் ஆகிய இடங்களில் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளர் கழகம், திராவிடன் நலநிதி, பெரியார் மருத்துவமனை, பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகியவற்றின் சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வீ.பன்னீர்செல்வம், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் ச.குமாரதேவன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், வழக்குரைஞர் துரை.அருண், திராவிடன் நலநிதி தலைவர் ப.சீத்தாராமன், விடுதலை அச்சக மேலாளர் சரவணன்.

மகளிரணி

பெரியார் மருத்துவமனையின் மருத்துவர் தர்சினி ஆனந்த், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி, பேராசிரியர் பெரியார் செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, உமா செல்வராசு, தங்க.தனலட்சுமி, மு.செல்வி, மு.செல்விமுரளி, நூர்ஜகான், மதனராணி, பூங்குழலி, வளர்மதி, மனோகரி, இளவரசி, கற்பகம், மரகதமணி, க.வெண்ணிலா, மீனாம்பாள், க.சுமதி, மோகனப்பிரியா, விசாலாட்சி, வாணி, தேவி, இந்திரா, இளவேனில், உத்ரா, சாந்தி, சண்முகலட்சுமி, பெரியார் பிஞ்சுகள் ஆதிரை, அதிரன், பெரியார் மருத்துவமனை செவிலியர் சந்தியா.

தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  சென்னை  மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன், மயிலை சேதுராமன், அரும்பாக்கம் தாமோதரன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தமிழினியன், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை ச.அன்புச்செல்வன், தொழிலாளரணி, செல்வராசு, இராமலிங்கம் மற்றும் சி.சித்தார்த்தன், சி.காமராஜ், கண்ணன், மகேஷ், டெய்சன், கலைமணி விஜய், பெரு.இளங்கோ, பொறியாளர் சிங்காரவேலன், ரங்கநாதன், ஜான்சன், கோ.தங்கமணி, முரளி, இளவரசு, தமிழ்செல்வன், முகப்பேர் முரளி, ஜனார்த்தனம், பெரியார் திடல் பணிமனைத் தோழர்கள் மற்றும் திரளான கழகத் தோழர் – தோழியர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

அன்னை மணியம்மையார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் : நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை

-விடுதலை நாளேடு, 10.03.2026

ஞாயிறு, 8 மார்ச், 2026

சோ.சுரேஷ் – மு.பவானி இணையேற்பு விழா : தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்


திராவிடர் கழகம்
மதுரை கோ.புதூர் பரசுராமன்பட்டி வ.சோமு – சோ.புஷ்பம் ஆகியோரின் மகன் சோ சுரேஷ் – சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் நினைவில் வாழும் ர.முத்து – மு.குணசுந்தரி ஆகியோரின் மகள் மு.பவானி இருவரின் இணையேற்பு விழாவை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: மோகனா வீரமணி, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மதுரை மாவட்டத் தலைவர் முருகானந்தம், செயலாளர் சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன் மற்றும் இரு இல்லத்தார். (மதுரை கோ.புதூர் சிறீ ராதா லட்சுமி பேலஸ், 8.3.2026)

-விடுதலை நாளேடு,8.3.2026

https://www.youtube.com/live/HuwC6FJ7Z7c?si=sr7h-hho-vbnC3n4

வியாழன், 5 மார்ச், 2026

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியைக் கண்டித்து சமூகநீதிக்கான பெரும் போராட்டத்தில் பங்கேற்றோர்




சென்னை, மார்ச் 5– ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியைக் கண்டித்து 3.3.2026 அன்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் விவரம் வருமாறு:-

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாநில கழக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கழக கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் அதிரடி அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்கள் செ.பெ.தொண்டறம், பொறியாளர் தேவ.நர்மதா..

வடசென்னை

மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், நா.பார்த்திபன், சி.பாசுகர், ப.கோபாலகிருஷ்ணன், அயன்புரம் துரைராசு, ஆ.பாஸ்கர், புரசை பாலா, இரா.எம்ரோஸ், ஓட்டேரி சேகர், பழ.சேரலாதன், வழக்குரைஞர் ஜெ.துரை, சி.காமராஜ், ஓ.இராமச்சந்திரன், சி.சித்தார்த்தன், வ.தமிழ்ச்செல்வன், அ.புகழேந்தி, பா.பார்த்திபன், சஞ்சய், பார்த்தீஸ்வரன், விஸ்வா, கோகுல், ச.விஜய், இரா.அருள், ம.பூவரசன், சி.முரளிகிருஷ்ணன்.

தென் சென்னை

மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,கோ.வீ.ராகவன், மு.சண்முகப்பிரியன், இரா.மாரிமுத்து, ந.இராமச்சந்திரன், ச.மாரியப்பன், நுங்கம்பாக்கம் சஞ்சய், ச.ஆனந்தன், பா.இராசேந்திரன்,எம்..டி.சி, ச.மகேந்திரன், அ.அன்பு, எம்.ஆனந்தன், உதயசூரியன், எஸ்.அப்துல்லா, ச.சந்தோஷ், வே.சித்தார்த்தன்.

மேற்கு சென்னை

மாவட்ட கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, மாவட்டக் கழகச் செயலாளர் க.சுப்பிரமணியன், நெய்வேலி வெ.ஞானசேகரன், மு.ரா.மாணிக்கம், அரும்பாக்கம் தாமோதரன், ச.ஜனார்த்தனன், சு.ஜெயசீலன், ஈக்காட்டுத்தாங்கல் மு.சேகர், அருள், தம்பி சேகுவாரா, ஜான்.

தாம்பரம்

மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், மாவட்ட கழகச் செயலாளர் கோ.நாத்திகன், வழக்குரைஞர் ஆர்.உத்திரகுமாரன், சு.மோகன்ராஜ், கருப்பையா, குணசேகரன், சன் சரவணன், இர.சிவசாமி, கார்த்திக், பழனிசாமி, மதியழகன், தனசேகரன், ராமண்ணா, ஆறுமுகம், பாலமுரளி, ஆதித்யா.

ஆவடி

மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்டக் கழகச் செயலாளர் க.இளவரசன், ரகுபதி, பூவை.தமிழ்ச்செல்வன், கோ.முருகன் இ.தமிழ்மணி, வேல் முருகன், பெரியார் மாணாக்கன், சுந்தர்ராஜ், சு.வெங்கடேசன், இனியன், நன்னன், சேத்பட் நாகராஜ், சதீஷ், கண்ணன், முகபேர் முரளி, தங்க ரவி, அ.சரவணன், பாசறை கோபால், பட்டரவாக்கம் ரவிச்சந்திரன், ஆ.வெ.நடராசன், முத்துகிருஷ்ணன், உடுமலை வடிவேல், வேல்சாமி, இரணியன், பன்னீர்செல்வம், சி.வச்சிரவேல், ஆதிரன், அண்ணாதுரை.

கும்மிடிப்பூண்டி

மாவட்ட கழகத் தலைவர் புழல் ஆனந்தன், வடகரை ஜெகத் விசயகுமார், வடகரை உதயக்குமார், பொன்னேரி அருள், சக்கரவர்த்தி, கஜேந்திரன், பெரியபாளையம் ஆகாஸ், அருணகிரி, செல்வராஜ், க.ச.க.இரணியன்.

சோழிங்கநல்லூர்

மாவட்ட கழகத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட கழக செயலாளர் நங்கநல்லூர் தமிழினியன், காப்பாளர் இரா.தே.வீரபத்திரன், பி.சி.ஜெயராமன, நித்தியானந்தன்.

திருவொற்றியூர்

மாவடட கழகத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்ட கழகச் செயலாளர் ந.இராசேந்திரன், மா.சேகர், கோ.தங்கமணி, சி.வாசு.

மகளிரணி

சி.வெற்றிச்செல்வி, வி.கே.ஆர்.பெரியார்செல்வி, பசும்பொன், தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, வி.வளர்மதி, பி.அஜந்தா, த.மரகதமணி, நர்மதா, அறிவுமதி, சி.மெர்சி ஆஞ்சலாமேரி, சி.அமலசுந்திரி, வி.கே.மகிழினி, அன்புச்செல்வி, கீதா ராமதுரை, சுகந்தி தமிழ்மணி, எல்லம்மாள், தேன்மொழி, வள்ளி, முகபேர் செல்வி, இனியன், நாகவள்ளி, அருணா, மீனாம்பாள், நன்னன், புஷ்பா பன்னீர்செல்வம், நந்தினி அண்ணாதுரை, நதியா, வெண்ணிலா, த.இளவரசி, யாழ் தமிழ், திராவிட எழில்,  வெண்ணிலா, ராணி ரகுபதி (ஆவடி) ஆகியோர் பங்கேற்றனர்.

 - விடுதலை நாளேடு, 5.3.2

போராட்டத்தில் தென் சென்னை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டோர் பட்டியல்

1.இரா.வில்வநாதன், (மாவட்ட தலைவர்)

2.செ.ர.பார்த்தசாரதி ,(மாவட்ட செயலாளர்)

3.கோ.வீ.ராகவன்(பொதுக்குழு உறுப்பினர்),

4.மு.சண்முகப்பிரின் (துணைத்தலைவர்)

5.இரா.மாரிமுத்து(இளைஞர் அணி துணைச் செயலாளர்)

6.ந.இராமச்சந்திரன்,

7.ச.மாரியப்பன்

8.நுங்கம்பாக்கம் சஞ்சய்

9.ச.ஆனந்தன்

10.பா.இராசேந்திரன்,எம்..டி.சி

11.ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

12.அ.அன்பு (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

13.வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)

14.பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 

15.உதயசூரியன்

16.எஸ்.அப்துல்லா

17.ச.சந்தோஷ்

18.வே.சித்தார்த்தன்

19.ஆ.வீரமர்த்தினி(கழக செயலவைத் தலைவர்) 

20. த.வீரசேகரன் (வழக்குரைஞர் அணி தலைவர்)

21. சே.மெ.மதிவதனி துணைப் பொதுச் செயலாளர்)



,


செவ்வாய், 3 மார்ச், 2026

சென்னையில் ‘சாஸ்திரிபவன்’ முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட தோழர்கள் கைது!



சமூகநீதிக்கான பெரும் போராட்டம் தமிழ்நாடு அளவில்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் பார்ப்பனர்– உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
57 ஆவது முறையாகக் கைது!

சென்னை, மார்ச் 3- ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

தொடக்கத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆரப்பாட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காவல் துறை யினரால் கைது செய்யப்பட்டார். அவர் கைதாவது 57 ஆவது முறையாகும்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தந்த தகவலின்படி, இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய அயல் தொடர்புப் பணி (IFS) உள்ளிட்ட அகில இந்திய சேவைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியிடங்கள் மற்றும் தற்போதைய பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய சேவை வாரியான, மாநில வாரியான விவரங்கள் பின்வருமாறு:

மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள 6,877 இந்திய ஆட்சிப் பணி, 5,099 இந்திய காவல் பணி, 3,193 இந்திய அயல் நாட்டுப் பணி ஆகியவற்றில் முறையே 5,577, 4,594, 2,164 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் 2020 முதல் 2024 வரை நடத்தப்பட்ட குடிமைப் பணி தேர்வுகளில் நேரடி நியமனமாக IAS, IPS, IFS சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலின்படி, அட்டவணை ஜாதி  (SC), அட்டவணை பழங்குடி (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) சார்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை யும் தரப்பட்டுள்ளன.

01.01.2025 நிலவரப்படி, IAS,. IPS, IFS சேவை களில் மாநிலக் கட்டமைப்பு வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் சிவில் லிஸ்ட் (Civil List) அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1,300 இந்திய ஆட்சிப் பணியிடங்களும், 505 இந்திய காவல் பணியிடங்களும், 1,029 இந்திய அயலுறவுப் பணியிடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சேவைகளில் சமூக நீதி, சமச்சீர் பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தத் தகவல்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிலாகப் பதிவாகியுள்ளன.

ஒன்றிய அரசு தந்துள்ள இந்த தகவல்களின்படி, சமூகநீதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அய்.ஏ.எஸ்.சில் 8 சதவீதம், அய்.பி.எஸ்.சில் 10 சதவீதம், அய்.எஃப்.எஸ்.சில் 17.28 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் இருப்பதும் எஞ்சியுள்ள 82 சதவீதம் முதல் 92 சதவீதம் வரையிலான இடங்கள் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினரால் அபகரிக்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவின் அதிகாரப்பிடி இன்னும் பார்ப்பனர்களின் கைகளில்தான் இருக்கிறது என்ற சுடும் உண்மையை ஒளிக்கப் பார்க்கிறார்கள்.

இந்தியாவின் திட்டங்களை வகுக்கும் பிரதமர் அலுவலகத்தின் அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் பார்ப்பனர்களும், உயர் ஜாதியினரும்தான் என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரத்தினர்.

பார்ப்பன – உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!

2022 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சகம் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர்களின் எண்ணிக்கை 322 பேர்.
இதில்,
எஸ்.சி (பட்டியல் ஜாதியினர்) – 16
எஸ்.டி (பழங்குடியினர்) – 19
ஓ.பி.சி (பிற்படுத்தப்பட்டோர்) – 39
மட்டும் தான்!
உயர் அதிகாரமிக்க செயலாளர்கள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால்,
2019-ஆம் ஆண்டு நிலவரப்படி,
மொத்தமுள்ள 89 செயலாளர்களில்,
பழங்குடியினர் (ST) – 3
ஒடுக்கப்பட்டோர் (SC) – 1
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 0
ஆம், ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவர் இல்லை. ஒரே ஒருவர் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்!

இந்தியாவின் உயர் அதிகாரம் அனைத்தும் பார்ப்பனர், உயர்ஜாதியினரின் கைகளிலேயே இருக்கிறது என்பதற்கு இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும்! பாரீர், பாரீர்! பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!

எனவே, சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்கள் ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னையில் இன்று (3.3.2026) காலை 11 மணியளவில் ஒன்றிய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பெருந்திரளான ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கண்டன முழக்கங்களை ஒலித்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், காவல் துறையினரால் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டார்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழர் தலைவரும், கழகத் தோழர்களும் முதற்கட்டமாக ஷெனாய் நகர் சமூக நலக் கூடத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி க.பெரியார் செல்வி, பசும்பொன் உள்ளிட்டோர் மற்றும் வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி மாவட்டக் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட
ஒலி முழக்கங்கள்!

வாழ்க வாழ்க வாழ்கவே சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே! வெல்லட்டும்! வெல்லட்டும்! சமூகநீதி வெல்லட்டும்! வீழட்டும்! வீழட்டும்! ஆரிய ஆதிக்கம் வீழட்டும்! உறுதி செய், உறுதி செய்! ஒன்றிய அரசே உறுதி செய்! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்! தேவை! தேவை! அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை!

தமிழ்நாடு

 

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அரசே! ஏமாற்றாதே, ஏமாற்றாதே! இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் ஏமாற்றாதே, ஏமாற்றாதே! எங்கே எங்கே இடஒதுக்கீடு? உயர் பதவிகளில் இடஒதுக்கீடு! அமல்படுத்து! அமல்படுத்து! மண்டல் கமிஷன் பரிந்துரையை   முழுமையாக அமல்படுத்து!

நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து! இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப் பட்டோருக்கும்,    பிற்படுத்தப் பட்டோருக்கும் சட்டப்படி இடஒதுக்கீட்டை  முழுமையாக வழங்கிடு!

ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே! வெளியிடு, வெளியிடு! வெள்ளை அறிக்கை வெளியிடு! ஒன்றிய அரசின் பதவிகளில் உயர் அதிகாரப் பதவிகளில் இடஒதுக்கீட்டு விவரங்களை முழுமையாக வெளியிடு!

 

அமைத்திடு, அமைத்திடு! சமூகநீதியைக் கண்காணிக்க அதிகாரமிக்க ஆணையத்தை அமைத்திடு, அமைத்திடு!       ஒன்றிய அரசே அமைத்திடு!

பின்பற்று! பின்பற்று! திராவிட மாடலைப் பின்பற்று! ஒன்றிய பாஜக மோடி அரசே! சமூகநீதியை நிலைநாட்டுவதில்   திராவிட மாடலைப் பின்பற்று! கற்றுக் கொள்! கற்றுக்கொள்!     பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டிலிருந்து ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியைக் கற்றுக் கொள்!

 

EWS என்ற பெயரால் 10 சதவிகித இடங்களை அபகரிக்கும் பார்ப்பனச் சதியை முறியடிப்போம், முறியடிப்போம்! எங்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும் தமிழர் தலைவர் ஆசிரியரும் பெற்றுத் தந்த சமூகநீதியை அழிக்கத் துடிக்கும் ஆரியத்தை விடமாட்டோம், விடமாட்டோம்! போராடுவோம், வெற்றிபெறுவோம் வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

தமிழ்நாடு

ஞாயிறு, 1 மார்ச், 2026

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்

‘மேற்கு சென்னை’ புதிய மாவட்டமாகச் செயல்படும்!

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்

சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு

திருவொற்றியூர் மாவட்டம்

மாவட்டத் தலைவர் – வெ.மு.மோகன்

மாவட்டச் செயலாளர் – ந.இராசேந்திரன்

மாவட்டத் துணைத் தலைவர் – எம்.ஆர்.எப்.சேகர்

மாவட்டத் துணைச் செயலாளர்கள் – செல்வம், வாசு

1.புது வண்ணை

2.பழைய வண்ணை

3.கொடுங்கையூர்

4.இராயபுரம்

5.திருவொற்றியூர்

6.காசிமேடு

7.மணலி

8.மாத்தூர்

9.எலந்தஞ்சேரி

10.மாதவரம்

11.எண்ணூர்

12.கத்திவாக்கம்

வடசென்னை மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் – கி.இராமலிங்கம்

மாவட்டத் தலைவர் – தளபதி பாண்டியன்

மாவட்டச் செயலாளர் – புரசை சு.அன்புச்செல்வன்

மாவட்டத் துணைத் தலைவர்கள் – நா.பார்த்திபன், பாலமுருகன்

மாவட்டத் துணைச் செயலாளர் – வ.தமிழ்ச்செல்வன்

மாவட்ட இளைஞரணித் தலைவர் – ஓட்டேரி ந.கார்த்திக்

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – பா.பார்த்திபன்

  1. புளியந்தோப்பு
  2. வியாசர்பாடி
  3. பெரம்பூர்
  4. மகாகவி பாரதியார் நகர்
  5. கவிஞர் கண்ணதாசன் நகர்
  6. பெரியார் நகர்
  7. கொளத்தூர்
  8. அண்ணா நகர் – திருமங்கலம்
  9. அயனாவரம்
  10. கீழ்ப்பாக்கம்
  11. புரசைவாக்கம்
  12. வேப்பேரி
  13. பாரிமுனை
  14. எருக்கஞ்சேரி
  15. பட்டாளம்
  16. ஓட்டேரி
  17. வில்லிவாக்கம்,
  18. அமைந்தகரை
  19. மண்ணடி
  20. சூளை

தென்சென்னை மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் – சைதை மு.ந.மதியழகன்

மாவட்டத் தலைவர் – இரா.வில்வநாதன்

மாவட்டச் செயலாளர் – செ.ர.பார்த்தசாரதி

மாவட்டத் துணைத் தலைவர்கள்
– டி.ஆர்.சேதுராமன், மு.சண்முகப்பிரியன்

  1. எழும்பூர்
  2. சேத்துப்பட்டு
  3. நுங்கம்பாக்கம்
  4. சூளைமேடு
  5. சைதாப்பேட்டை
  6. புதுப்பேட்டை
  7. சிந்தாதிரிப்பேட்டை
  8. ஆயிரம் விளக்கு
  9. தேனாம்பேட்டை
  10. ராயப்பேட்டை
  11. நந்தனம்
  12. ஆழ்வார்பேட்டை
  13. சேப்பாக்கம்
  14. திருவல்லிக்கேணி
  15. நொச்சி நகர்
  16. பட்டினப்பாக்கம்
  17. மயிலாப்பூர்
  18. மந்தைவெளி
  19. ராஜா அண்ணாமலைபுரம்
  20. கோட்டூர்புரம்
  21. அடையாறு
  22. திருவான்மியூர்

மேற்கு சென்னை மாவட்டம்

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர் – கரு.அண்ணாமலை

மாவட்டச் செயலாளர் – ராமபுரம் க.சுப்பிரமணி

  1. அரும்பாக்கம்
  2. எம்.எம்.டி.ஏ. காலனி
  3. கோயம்பேடு
  4. வடபழனி
  5. சாலிகிராமம்
  6. சின்மயா நகர்
  7. விருகம்பாக்கம்
  8. வளசரவாக்கம்
  9. ராமாபுரம்
  10. கே.கே.நகர்
  11. அசோக்நகர்
  12. ஆழ்வார் திருநகர்
  13. ஜாபர்கான்பேட்டை
  14. ஈக்காட்டுதாங்கல்
  15. கிண்டி
  16. கத்திபாரா – ஆலந்தூர்
  17. கோடம்பாக்கம்
  18. தியாகராயர் நகர்

- விடுதலை நாளேடு, 01.03.2026