வியாழன், 4 பிப்ரவரி, 2021

வடசென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் கி.இராமலிங்கம் - -லட்சுமி ஆகியோரது மணவிழா

15.08.1993 திராவிடர் கழக தலைமை நிலையத்தில் பணியாற்றி வருகின்ற வடசென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் கி.இராமலிங்கம் - -லட்சுமி ஆகியோரது மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடந்த மணவிழாவினை தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தலைவரை முன்மொழிந்தார்.

பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரி முதல்வர், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் க.பலராமன், மாவட்ட செயலாளர் அ.குணசீலன், புரசை பகுதி தி.மு.க. செயலாளர் சிட்டிபாபு, தென்சென்னை மாவட்டக் கழக தலைவர் எம்.பி.பாலு, மாவட்டச் செயலாளர் எம்.கே.காளத்தி, வடசெங்கை எம்.ஜி.ஆர். மாவட்ட செயலாளர் ஆவடி இரா.மனோகரன், செம்பியம் வட்ட தி.மு.க. செயலாளர் ரெங்கநாதன், தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.கே.டி.சுப்ரமணியன், மாநில இளைஞரணி செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மகளிரணி செயலாளர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், ‘விடுதலை’ நிர்வாகி சி.ஆளவந்தார், தலைமை நிலையச் செயலாளர் ஆனூர் ஜெகதீசன், சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன், கழக சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் செ.துரைசாமி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சாமிதுரை ஆகியோர் மணமகன் இராமலிங்கத்தின் சிறப்புகளையும், தொண்டுகளையும் பாராட்டி வாழ்த்தி உரையாற்றினார்கள்.

ஏராளமான கருஞ்சட்டைக் குடும்பத்தினரும், நண்பர்களும் திருமண விழாவிற்குத் திரண்டு வந்திருந்தனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16.4-15.5.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக