வியாழன், 4 பிப்ரவரி, 2021

மதவெறியை மாய்ப்போம் மனித நேயம் காப்போம் என்று தமிழ்நாடு முழுவதுமான பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு மாநாடு

18.04.1993 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மதவெறியை மாய்ப்போம் மனித நேயம் காப்போம் என்று தமிழ்நாடு முழுவதுமான பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, மதவெறி ஆபத்தானது என்பதை விளக்கி கடந்த ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி கன்னியகுமரியிலிருந்து சென்னை வரை நடைபெற்றது. நாடு முழுவதும் பிரச்சார செய்துள்ளோம். மதவெறியை மாய்ப்பதன் மூலமே மனித நேயத்தைக் காக்க முடியும் என்பதனை தெளிவாக அறிவித்திருக்கிறோம்!

எந்தப் புரட்சியானாலும், சமுதாயப் புரட்சியைப் பொறுத்த வரையிலே, அது தென்னாட்டில் - தந்தை பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டிலிருந்துதான் கிளம்ப வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இந்த ஒலி முழக்கத்தை நாம் கொடுத்தோம். அண்மையில் சமூகநீதி காவலர் வி.பி.சிங் அவர்களுடன் தமிழகத்திற்கு வந்த அன்பு சகோதரர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள், "டில்லி இந்தியாவின் தலைநகரம் என்று சொன்னாலும், சமூகநீதிக்கு இந்தியாவில் ஒரு தலைநகரம் உண்டு என்று சொன்னால் அது தந்தை பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாடாகத்தான் இருக்க முடியும். ஆகவேதான், தமிழ்நாடு எப்படி வழிநடத்திச் செல்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறோம்" என்று சொன்னார்.

ஆரியத்தின் உயிர்நாடி எதுவென்று கண்டறிந்து அந்த இடத்தில்தான் தந்தை பெரியார் கை வைத்தார்கள். அதன் காரணமாக குலதரும ஆட்டம் கண்டது. தந்தை பெரியாரின் தத்துவம் தென்னாட்டில் மட்டுமல்லாது வடநாட்டிலும் பரவ ஆரம்பித்தது என்று பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எடுத்து விளக்கி உரையாற்றினேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15.4.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக