செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

21.2.1994 இந்தித் திணிப்பை எதிர்த்தும் - கடுமையான விலை வாசி உயர்வைக் கண்டித்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசு அலுவலக முன் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

21.2.1994 இந்தித் திணிப்பை எதிர்த்தும் - கடுமையான விலை வாசி உயர்வைக் கண்டித்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசு அலுவலக முன் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் எனது தலைமையில் பெரியார் திடலிலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டது.

இருவர் இருவராக அணி வகுத்து, இந்தி எதிர்ப்பு - விலைவாசி உயர்வுக் கண்டன முழக்கங்கள் அடங்கிய தட்டிகளையும், கழகக் கொடியையும் கரங்களில் ஏந்திக்கொண்டு, விண்ணதிர முழக்கங்களை, முழங்கிக் கொண்டு புறப்பட்டனர்.

“திணிக்காதே திணிக்காதே இந்தியைத் திணிக்காதே! இந்தித் திணிப்பா - ஆரியப் பண்பாட்டுப் படை எடுப்பா? கட்டுப்படுத்து, கட்டுப்படுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்து’’ என்பது போன்ற முழக்கங்களை முழங்கிக் கொண்டு மகளிரணியினரும், தோழர்களும் அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தோழர்கள் கைது செய்யப்பட்டனர். நான் 35 ஆவது முறையாகக் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டேன். “தொலைக் காட்சியில் இந்தித் திணிப்பு, முக்கிய அரசு அலுவலகங்களிலே இந்தியில் கையெழுத்து போடவேண்டும் என ஆணையை எதிர்த்து அனைத்துக் கட்சியையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என பத்திரிகைக்குத் தெரிவித்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.7.20


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக