திங்கள், 15 பிப்ரவரி, 2021

"எல்லோருக்கும் உரியார்; அவர்தான் பெரியார்"


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சு. அறிவுக்கரசு-இரஞ்சிதம் அறக்கட்டளைப் பொழிவும், நூல் வெளியீடும்!

சென்னை, பிப். 14- உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் Òஎல்லோருக்கும் உரியார்; அவர்தான் பெரியார்” எனும் தலைப்பில், சு. அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைப் பொழி வும், நூல் வெளியீட்டு விழாவும் நடை பெற்றது.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத் தில் பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெரு விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், பன்னிரண்டாம் நாளான 12.2.2021 காலை 11 மணியளவில் “சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்ட ளைச் சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர் கள் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவரும், அறக்கட்டளையின் நிறுவனருமான சு. அறிவுக்கரசு அவர்கள், சிறப்பாகச் செயல்படும் இயக்குநரையும், நிகழ்ச் சியை ஒருங்கிணைத்துக் கொண்டி ருக்கும் இவ்வறக்கட்டளையின் பொறுப் பாளரும், உதவிப்பேராசிரி யருமான முனைவர் நா. சுலோசனா ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

அவர் தனது உரையில், தன்னிலும் கொள்கையில் சிறந்திருந்த காலம் சென்ற தனது இணையர் இரஞ்சிதம் அவர்கள், ஜாதி மறுப்பில் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத் திலுள்ள பெரியார் சிந்தனை உய ராய்வு மய்யத்தின் உதவிப் பேராசிரியர் த.ஜெயகுமார், “எல்லோருக்கும் உரி யார்; அவர்தான் பெரியார்” எனும் தலைப்பிலான ஆய்வின் சுருக்கத்தைப் பொழிவாக வழங்கினார். அதில் பார்ப்பனர் நலம் உட்பட சமூகம், அரசியல், இலக்கியம், பெண்விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழிச்சீர் திருத்தம், கடவுள் மறுப்பு போன்ற பல்வேறு தலைப்புகளைப் பட்டிய லிட்டு, ஆன்மிகத்தில் நம்பிக்கைக் குரியவர்களாக இருந்தாலும் அவர் களும் பெரியாரை ஏற்றுக் கொண்டா டுவதைச் சுட்டிக்காட்டி, பெரியார் ஒருவர்தான் அனைவருக்கும் உரியார் என்று அனைவரின் ஒப்புதலோடு எண்பித்தார்.

முன்னதாகத் தலைமையேற்றுப் பேசிய இயக்குநர் கோ.விசயராகவன் பெரியாரின் அருமையை ஆய்வு மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்து ரைத்தார். நிகழ்வில் முனைவர் த. ஜெயக்குமார் எழுதிய எல்லோருக்கும் உரியார்; அவர்தான் பெரியார்! புத்த கத்தை இயக்குநர் வெளியிட, அறக் கட்டளையின் நிறுவனர் சு. அறிவுக் கரசு பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பட்டாபிராம் இந்து கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரி யர் முனைவர் தெய்வ அகண்ட பரமன் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். மற்றொருவர் முனைவர் பட்ட ஆய்வாளர் சுப்ப ராயன், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த இராணிப்பேட்டை ஜெய ராமன், ஆவடி மாவட்ட அமைப்பா ளர் உடுமலை வடிவேல், உலகத் தமி ழாராய்ச்சி உதவிப்பேராசிரியர் முனைவர் மணி.கோ. பன்னீர்செல்வம், பெரியார் வலைக்காட்சி அருள் மற் றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவிருந்தது.ஆனால் இயக் குநர் முனைவர் கோ.விசயராகவன் பெரியார் பெயரில் நடைபெறும் இந் நிகழ்வில் தான் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி, காலை 11 மணியளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக