வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

மாங்கொல்லையில் பகுஜன் சமாஜ் கட்சி ஏற்பாடு செய்திருந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா


சமூக நீதிக்காவலர்  கான்ஷிராம்

உடன் ஆசிரியர்

17.09.1994 அன்று மயிலை மாங்கொல்லையில் பகுஜன் சமாஜ் கட்சி ஏற்பாடு செய்திருந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சமூகநீதிக் காவலர் கான்ஷிராம் அவர்கள் பேசுகையில், இனி இந்தியாவை ஆளப்போகிறவர்கள் பெரியார் -அம்பேத்கர் வழி நடப்பவர்கள் தாம். பார்ப்பனியத்தால் வஞ்சிக்கப்பட்ட மக்கள் பெரியார் வலியுறுத்திய சுயமரியாதைக்காகப் போராடக் கிளம்பி இருக்கிறார்கள். இந்த சுயமரியாதைத் தத்துவத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய உரிய நேரம் வந்துவிட்டது. அதில் தமிழ்நாடு தனித்து விளங்குகிறது. நாங்கள் தமிழ்நாட்டுக்கு கருத்தைச் சொல்ல வரவில்லை; கருத்துகளைப் பெற்றுச் செல்லவே வருகிறோம். பெரியார் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பாடுபட்டு வருபவரும் மிகச்சிறந்த தலைவருமான திரு.கி.வீரமணி அவர்களின் சிறந்த வழிகாட்டுதலால் தமிழகம் சிறந்து விளங்குகிறது’’ என கழகத்தின் சமூகப் பணியைப் பாராட்டி உரையாற்றினார்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி, 

- உண்மை இதழ், 16-31.10.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக