சனி, 17 ஆகஸ்ட், 2019

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தமிழாற்றுப்படை விருதுகள் செங்கை பூ.சுந்தரத்திற்கு "பெரியார் விருது" வழங்கி சிறப்பிப்பு


செங்கற்பட்டு, ஆக. 17- தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு மாவட்டங்கள் வழங்கும் தமிழ்சான்றோர்களுக்கு தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கும் விழா 15.8.2019 அன்று 11 மணிக்கு செங்கற்பட்டில் புத்தக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய - ரஷ்ய கலாச்சார நட்புறவு கழகத்தின் பொது செயலாளர் ப.தங்கப்பன் (அய்ஆர்சியு எப்எஸ்) 27 விருதாளர்களுக்கு விருது வழங்கினார். ஓவியக்கவி நா.வீரமணி அவர் கள் தலைமையில் விருது பெற்றவர்கள்.
1) காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செங்கை பூ.சுந்தரம் - பெரியார்  விருது
2) குரு.சம்பந்தம் - தொல்காப்பியர் விருது
3) ம.ச.முனுசாமி - அவ்வையார் விருது
4) கோ.வெள்ளைச்சாமி - வள்ளலார் விருது
5) வெற்றிக்கண்ணன் - அண்ணா விருது
6) இ.மணிவாசகன் - பாரதிதாசன் விருது
7) நாகை மனோகரன் - திருமூலர் விருது
8) த.கு.கருணாநிதி - கலைஞர் விருது
9) அமுதகீதன் - மறைமலை அடிகள் விருது
10) கோஸ்வா சாம்டேனியல் - கால்டுவெல் விருது
11) பாரதி ஜிப்ரான் - புதுமைப்பித்தன் விருது
12) சா.கா.பாரதிராஜா - இளங்கோவடிகள் விருது
13) தோ.ருக்மாங்கதன் - பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் விருது
14) மல்லை தமிழச்சி - ஜெயகாந்தன் விருது
15) தயானி அன்பு - ஆண்டாள் விருது
16) கோ.செழியன் - கபிலர் விருது
17) பேராசிரியர் கிள்ளிவளவன் - பாரதியார் விருது
18) இராம.மாணிக்கம் - அப்பர் விருது
19) சு.பழனிச்சாமி - கம்பர் விருது
20) அசோகன் - ஜெயங்கொண்டார் விருது
21) உமர்தாசன் - அப்துல் ரகுமான் விருது
22) முத்து கிருட்டிணன் - கண்ணதாசன் விருது
23) நா.மணிமாறன் - வைரமுத்து விருது
24) சிவக்குமார் - வைரமுத்து விருது
25) செந்தமிழ் - வைரமுத்து விருது
26) வல்லம் சோமு - வைரமுத்து விருது
27) சந்திரசேகர் - உ.வே.சா. விருது
கு.ராஜா, அ.அசோக் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். பிரவீன், மோகன், முத்துகிருட்டிணன், மா.பாலகிருட்டிணன், சுனில்குமார், எழிலரசன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
- விடுதலை நாளேடு, 17. 8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக