வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

கலைஞர் சிலை திறப்பு  விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

எதிர்நீச்சலிலேயே வளர்ந்த கலைஞரின் சிலையை - எதிர்நீச்சல்காரர் வங்காளத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அழைத்து திறக்கச் செய்தது பொருத்தமானது

கலைஞர் அளித்துவிட்டுச்சென்ற


அய்ம்பெரும் முழக்கங்களை செயல்படுத்த  உறுதி ஏற்போம்!


கலைஞர் சிலை திறப்பு  விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை




சென்னை, ஆக.9   கலைஞர் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற அய்ம்பெரும் முழக்கங்களை செயல்படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

7.8.2019 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்குத் தலைமையேற்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்  உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

பல்திறன் கொள்கலன் ஆற்றல் நிறைந்தவர் கலைஞர்


மிகுந்த உணர்ச்சிபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்றவரும், பல்திறன் கொள் கலன் ஆற்றல் நிறைந்த நம்முடைய தலைவர், மானமிகு கலைஞருக்கான விழா இது. ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்று, காஞ்சி கருவூலத்தையே தனதாக்கிக் கொண்டு, மிகப்பெரிய அளவிற்கு, தனக்கு மட்டுமல்ல, இந்தத் தரணிக்கே இந்த இயக்கம் சொந்தம் - திராவிடர் இயக்கம் சொந்தம் என்று காட்டக்கூடிய அளவிற்கு, முத்திரை பொறித்துச் சென்ற தலைவர் கலைஞர். அவர்களுக்குப் பிறகும்கூட, வெற்றிடம் என்பது கிடையாது - எல்லோரும் பெற்றிடமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும் சரி, தமிழ்நாடும் இருக்கும் என்பதற்கு அடையாளமாக இன் றைக்கு அவர் விட்ட பணிகள் மட்டுமல்ல, அவர் நினைக் காத பணிகளையெல்லாம்கூட செய்து கொண்டி ருக்கக்கூடிய நம்முடைய ஒப்பற்ற தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வீரர் அன்பிற்குரிய சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,

எதிர்நீச்சல் வீராங்கனை மம்தா பானர்ஜி


இந்த நிகழ்ச்சியில் கலைஞர் அவர்களுடைய உருவச் சிலையை, அவருடைய மூத்த பிள்ளை என்று கையெ ழுத்து ஏடாகத் தொடங்கி, தனி ஆளாக மிகப்பெரிய அளவிற்கு உழைத்து, 75 ஆண்டுகாலம் ஒரு பெரிய வரலாற்றை- நாளேட்டு வரலாற்றை உருவாக்கிய அந்த ஏட்டின் அலுவலகத்தில், எத்தனையோ கசப்பான அனு பவங்கள் அங்கே நடந்ததுண்டு; அதையெல்லாம் மாற்றி, இன்றைக்கு அங்கே ஒரு வசந்தம் பூத்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கலைஞர் அவர்களுடைய சிலை - அவர்கள் நாள்தோறும் உடன்பிறப்புக்கு எழுது கின்ற மடலை எப்படி உட்கார்ந்துகொண்டு எழுது வார்களோ - அதேபோன்று அந்த மடலை எழுதக்கூடிய வகையில் சிலை உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுக் குரியது - சரியானவரை அடையாளம் காண எப்பொழுதும் தவற மாட்டார் நம்முடைய தளபதி அவர்கள் என்பதற்கு அடையாளமாக, மேற்கு வங்கத்தினுடைய வீராங்கனை யாக இருக்கக்கூடிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை அழைத்து, கலைஞர் அவர்களுடைய சிலையை திறந்து வைக்கக்கூடிய வரலாறு படைத்த விழா இது. எதிர்நீச்சலை கலைஞர் எப்படி போட்டாரோ - அதேபோல, கலைஞர் அவர்களுடைய சிலையைத் திறப்பதற்கும் ஒரு எதிர்நீச்சல் வீராங்கனைதான் தேவை - சரியானவராக இருக்க முடியும் என்ற அளவில், நம்மு டைய அன்பான அழைப்பை ஏற்று வந்திருக்கக்கூடிய வீராங்கனை - இரும்பு மனிதர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எடுத்துக்காட்டான முதலமைச்சராக இருக்கக் கூடிய மேற்கு வங்கத்தினுடைய முதலமைச்சர் அருமை சகோதரியார் மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்களே,

புதுச்சேரியினுடைய மாண்புமிகு முதலமைச்சர், அவரும் ஒரு எதிர்நீச்சல் வீரர்தான். தினமும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார். எனவேதான், அது மிகவும் பொருத்தமானது - அப்படிப்பட்ட அருமை நண்பர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களே,

கலைஞர் அவர்களோடு இணைந்து அவரை தன்னு டைய தமிழாசான் என்பதை எப்பொழுதும் நன்றியுணர் வோடு  மறக்காமல் எங்கும் பதிவு செய்யக்கூடிய நம்முடைய கவிப்பேரரசு அவர்களே,

இந்நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்ற முரசொலி ஆசிரியர் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய செல்வம் அவர்களே,

இணைப்புரை வழங்கிக்கொண்டிருக்கக்கூடிய அருமை நண்பர் செயல்வீரர் அன்பழகன் அவர்களே,

எதிரிலும், மேடையிலும் அமர்ந்திருக்கக்கூடிய அத் துணை திராவிடர் இயக்க, திராவிட முன்னேற்றக் கழக, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களே, பெரு மக்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

It is most fitting that we must welcome the Iron Lady of West Bengal.


Madam,


You’ve come to the land of Dravidam;


You’ve come to the land of Periyar;


you've come to the land of Social Justice;


You’ve come to the land of Self-Respect;


You are most welcome, our hearty greetings.


It is most fitting and proper that you have unveiled our Leader’s statue at his office. which has revolutionized the minds of the Tamils. Not only Tamils here, Tamils throughout the world.


Kalaignar’s Pen was more mightier than anyother sword.


He has done that. So it is most fitting and proper.


You are always swimming against the current.


Mr. Naryanasamy another Cheif Minister is always swimming against the current.


Periyar swimmed against the current,


Anna swimmed against the current, and Kalaignar swimmed against the current and our Stalin our Thalapathi is swimming against the current, always they are known for that. So it is most fitting, you have come here.


We are not ‘Jalras!' We are not simply saying Yes-man. We are always  here to support the necessary things and opposed the evil and you will have to come here, even often and often.


State Rights are  systematically being curbed and taken away.


So it is responsibility of my dear Brother Stalin who will ask the entire India to come to Tamil Nadu to defend that because the constitution is being  scraped.


The constitution is not only done, it is undone. Undone that is going on. So, it is high time that you’ve come here as the fighter. Not only in Bengal, here also,  because the forces, the fundamentalists- forces, they want to take away the Periyar,   so all so  Vidhyasagar, they want to take it away  and vandalised Vidhyasagar statue there. Now, nobody could touch Periyar here. Because, Periyar completely has given a long history of our heritage.


கலைஞர் அவர்களும் எதிர்நீச்சலிலேதான் வெற்றி பெற்றார்


அன்புள்ள நண்பர்களே, எதிர்நீச்சல் அடித்த எல்லோரையும் ஒன்று சேர்த்திருக்கக்கூடிய கூட்டம். காரணம், நம்முடைய கலைஞர் அவர்களும் எதிர் நீச்சலிலேதான் வெற்றி பெற்றார். முழு கலைஞரை எப்பொழுது நீங்கள் பார்க்க முடியும் என்று சொன்னால், இளைய தலைமுறைக்கு, அவரோடு நெருங்கிப் பழக முடியாத தலைமுறைக்கு நாங்கள் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

முதலமைச்சரான கலைஞரைப் பார்ப்பதைவிட,

எழுத்தாளர் கலைஞரைப் பார்ப்பதைவிட,

பேச்சாளர் கலைஞரைப் பார்ப்பதைவிட,

திரைப்பட வசன கர்த்தா கலைஞரைப் பார்ப்பதைவிட,

கலைஞரை, முழுக் கலைஞராகப் பார்க்கவேண்டும் என்று சொன்னால், எதிர்ப்பிலேதான் எங்கள் கலைஞர் முழுக் கலைஞராக எப்பொழுதும் திகழ்வார். காரணம், அதுதான் ஈரோடு குருகுலத்தில் அவர் படித்த கற்ற பாடம்.

கலைஞர் பேனாவை, வாள்முனையைவிட வேக மாகச் சுழற்றியவர்

சுருக்கமாக ஒன்றை சொல்கிறேன்.

நெருக்கடி காலத்தில், முரசொலி பட்டபாடு,

நெருக்கடி காலத்திலே இந்த இயக்கம் பட்டபாடு,

"ஈரோடு போனவன் எப்பொழுதும் நீரோடு  போகமாட்டேன்''


நெருக்கடி காலத்திலே தணிக்கை என்ற பெயராலே, கழுத்தை நெரித்து, கருத்துகளெல்லாம் கொல்லப்பட்ட நேரத்திலே, கலைஞர் பேனாவை, வாள்முனையைவிட வேகமாகச் சுழற்றினார்; எதிர்நீச்சலிலே வெற்றி பெற்றார்...

அப்பொழுது அவரிடத்தில் ஒரு செய்தியாளர் கேட்டார், ஏன் உங்களுடைய ஆட்சியை கலைத்தார்கள் தெரியுமா, மத்திய அரசாங்கத்தார்?

செய்தியாளர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரைப் பார்த்து,

ஆட்சியை இழந்திருக்கிறோம் என்பதைப்பற்றி கவலைப்படாத கலைஞரைப் பார்த்து,

மக்களையே நம்பிக்கொண்டிருக்கும் கலைஞரைப் பார்த்து செய்தியாளர் சொன்னார்,

நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை; தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்பதற்காகத்தான், உங்கள் ஆட்சியைக் கவிழ்த்தார்கள், டில்லி உங்கள் ஆட்சியைக் கவிழ்த்தது'' என்று சொன்னார்.

ஒரே வரியில் பதில் சொன்னார் கலைஞர், அவர்தான் கலைஞர்.

"ஈரோடு போனவன் எப்பொழுதும் நீரோடு போக மாட்டேன்'' என்று சொன்னார்.

நிமிர்ந்து நின்று நம்முடைய லட்சியப் பாதையில் வெல்வோம்!


எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்டவர்கள் நாங்கள்; எனவேதான், ஆற்றோடு போகமாட்டோம்; எதிர்நீச்சல் அடித்தால்  swimming against the current  என்பது இருக்கிறதே, அதுதான் சாதனை; That is the achievement ஆகவேதான், நான் ஈரோடு போனேன்; என்னுடைய தலைவனே எதிர்நீச்சல் அடித்து வழிகாட்டிய தலை வன்தான். ஆகவேதான், நாங்கள் எப்பொழுதுமே அடி பணியமாட்டோம்; நிமிர்ந்து நிற்போம். நிமிர்ந்து நின்று நம்முடைய லட்சியப் பாதையில் வெல்வோம் என்று சொன்னார்.

அந்தக் கலைஞருடைய நினைவு நாள் என்று சொன்னாலும், இது வரலாற்று நினைவு நாள் - அதில் அற்புதமான சாதனையை செய்த நம்முடைய தளபதி அவர்களுக்கு, தமிழ்கூறும் நல்லுலகம் என்றைக்கும் நன்றி சொல்லவேண்டும்.

வென்றார் என்று சொல்லுங்கள்;


வெல்வார் என்று  சொல்லாதீர்கள்


அவர் வெல்வார் என்று சொன்னார் கவிப்பேரரசு; ஒரு சிறிய திருத்தம்; தமிழை எழுதும்போது, அவர் திருத் தத்திற்குரிய அளவிற்கு எழுத மாட்டார்; அவரைத் திருத் துகிறேனே என்று எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது; இருந்தாலும், ஆசிரியர் நான், ஒப்புக்கொள்வார் என நான் நினைக்கிறேன். வென்றார் என்று சொல்லுங்கள்; வெல்வார் என்று  சொல்லாதீர்கள்.

நிச்சயமாக, 40-க்கும் 40- என்று சொன்னார்கள் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள். 39 இல் 38; அதில் வென்றாரா? இல்லையா? 13 பெரிதா? 9 பெரிதா? வென்றாரா இல்லையா? நாளைக்கும் வென்றார்! வென் றார்!! வென்றார்!!! என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அளவிற்கு வரும்.

எனவே, நண்பர்களே! இன்றைய காலகட்டம், மாகாணங்களுடைய உரிமைகளையெல்லாம் பறித்து, மாநிலங்களே இருக்கக்கூடாது, ஒற்றை ஆட்சி - ஒரே ஆட்சி - ஒரே ரேஷன் கார்டு - ஒரே கலாச்சாரம், அது சமஸ்கிருத கலாச்சாரம்; ஒரே மதம், அது இந்துத்துவா - ஒரே கட்சி இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல் கிறீர்களே, இப்படி ஒன்று, ஒன்று, ஒன்று என்றாக்கிக் கொண்டிருக்கிறீர்களே, அவர்களைப் பார்த்துக் கேட் கின்றோம், கலைஞர் அவர்களுடைய நினைவு நாளிலே, கலைஞர் அவர்கள் போட்டுத் தந்த மேடையிலே, கலைஞரோடு தோளோடு தோள் நின்று போராட்டங்களில் சிறைச்சாலைக்குச் சென்றவர்கள் என்ற முறையில், எங்களைப் போன்றவர்கள் கேட்கிறோம்,

ஒரே ஜாதி என்று சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?


ஒரே மதம் - இந்து மதம்; ஒரே மொழி - சமஸ்கிருதம், இந்தி; ஒரே ரேசன் கார்டு; ஒரே அமைப்பு என்றெல்லாம் ஒன்று, ஒன்று, ஒன்று என்றாக்கிக் கொண்டிருக்கிறீர்களே, உங்களைப் பார்த்துக் கேட்கிறோம், ஒரே ஜாதி என்று சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? ஒரே ஜாதி என்று சத்தம் போடுவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

மாட்டீர்கள்! காரணம், நீங்கள் மனுவின் மைந்தர்கள்; மனுதர்ம ஆட்சியை, நீங்கள் மீண்டும், மீண்டும் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

எனவேதான், தந்தை பெரியாருடைய வழியில், சமத்துவபுரம் கண்டார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

மாநில சுயாட்சி என்பதை இன்றைக்கு வற்புறுத்த வேண்டிய கட்டம். எனவேதான், இரண்டு முதலமைச் சர்கள் போதாது; இதற்கு ஒப்புக்கொள்கிற அத்துணை முதலமைச்சர்களும், இன்றைக்கு வேறு முகாமில் இருக்கின்றவர்கள்கூட, பட்ட பிறகு வருவார்கள்; தமிழ் நாடுதான் கைகுலுக்கி நிற்கும். வங்காளத்தைப் பொருத்த வரையில், இந்தி எதிர்ப்பிலும் நம்மோடு அவர்கள் பயணிக்கக்கூடியவர்கள். மொழிப் பிரச்சினையில் அவர்களுக்கும், நமக்கும் வேறுபாடு கிடையாது.

வங்கத்தின் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஒருமுறை சொன்னார்,

‘‘I am a Dravidian from Bengal''

என்று. அது பதிவாகி இருக்கிறது.

அய்ம்பெரும் முழக்கங்கள்


எனவேதான், உங்களைப் பார்க்கும்பொழுது, நான் யாரையோ பார்க்கவில்லை; உரிமைக்குப் போராடுகின்ற உங்களைப் பார்க்கின்றோம். நாங்கள் அதற்கு ஆயத்தக் களம் அமைத்திருக்கின்றோம். நீங்கள் இங்கே வந்தது வெறும் சிலை திறப்பு விழாவிற்காக மட்டுமல்ல; இந்த நாட்டினுடைய உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்; பறிக்கப்படக் கூடாது. மாநிலங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்படுவது என்பது மிகவும் முக்கியம்.

எனவே, கலைஞர் அவர்களுடைய நினைவு நாள் என்ற இந்த வரலாற்று குறிப்பு நாளில், அய்ந்து பெரும் முழக்கங்களை கலைஞர் அவர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள்.

அவை முழக்கங்கள் அல்ல நண்பர்களே, ஆயுதங்கள். அந்த ஆயுதங்களை வைத்துத்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும்; தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தி யாவைக் காப்பாற்ற முடியும்.

எனவேதான், கலைஞருடைய நினைவைப் போற்றுகின்ற வகையில், இந்த அய்ந்து உறுதிமொழிகளை நான் இங்கே சொல்லுகிறேன். நீங்கள் தொடர்ந்து சொல்லவேண்டும். டில்லி வரையில் அது கேட்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்; அதுதான் கலைஞருக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய மரியாதை.

அந்த அய்ம்பெரும் முழக்கங்கள், வெறும் முழக்கங்கள் அல்ல. அவைகள்தான் வருங்கால போர்த் திட்டங்கள். அதனை நன்றாகத் தெளிந்து பார்க்கவேண்டும்.

1) அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

2)  ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!

3)  இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

4) வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

5) மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி!

(தமிழர் தலைவர் முழக்கங்களைச் சொல்ல சொல்ல, அனைவரும் திரும்பச் சொன்னார்கள்).

போர்க் களத்திற்கு ஆயத்தமாகுக!


இதுதான் நம்முடைய அடுத்த பணி. அதனுடைய தொடக்கம்தான் இது. வெறும் சிலை திறப்பு அல்ல.

வாழ்க கலைஞர்! வாழ்க பெரியார்!! வருக மாநில உரிமைகள்!

இந்தப் போர்க் களத்திற்கு ஆயத்தமாகுக!

உயிர் வெல்லமல்ல!

என்றைக்கு வேண்டுமானாலும், பெரியார் சொன் னதைப்போல, மனிதன் நோயால் சாகக்கூடாது; விபத்தால் சாகக்கூடாது. கொள்கைக்காக சாகவேண்டும். அதற்குத் தயாராகுங்கள்! தயாராகுங்கள் இளைஞர்களே!

அதுதான் கலைஞருடைய சிலையைப் பார்க்கும் பொழுது நீங்கள் பெறவேண்டிய உணர்வு என்று கூறி என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 9.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக