July 22, 2022 • Viduthalai
தமிழர் தலைவரிடம் சந்தாக்கள் வழங்கல்
தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா. வில்வநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து குடும்ப சந்தாவாக 27 அரையாண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகையை வழங்கினார்.உடன் தென்சென்னை மாவட்ட தலைவரின் இணையர் வளர்மதி. தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து குடும்ப சந்தாவாக 5 அரையாண்டு விடுதலை சந்தாவுக்கான தொகையை வழங்கினார். (பெரியார் திடல்-21.07.2022).
---------------------------------
வனத்துறை அமைச்சர் கா. இராமச்சந்திரன் அவர்கள் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு அய்ந்து ஆண்டுகளுக்கான சந்தா ஒன்றும் மற்றும் ஓராண்டுக்கான சந்தா ஒன்றும் வழங்கினார். குமரிமாவட்ட திமுக வர்த்தகர் அணி பொறுப்பாளர் இளஞ்செழியன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். உடன் குமரிமாவட்ட திராவிடர்கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் மாவீரன் எஸ். அலெக்சாண்டர். 20.7.2022 அன்று புத்தகரம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல் வீரர் லெனின் அன்பரசு அவர்களிடம் ஓராண்டு விடுதலை சந்தா, கும்மிடிப்பூண்டி மாவட்டம் சார்பாக , புழல் த.ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர்), புழல் ஒன்றிய செயலாளர் உதயகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கலைஞர் கருணாநிதி நகர் எம். மதிமாறன் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு அரையாண்டு சந்தா வழங்கினார்.
---------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக