தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

சனி, 2 ஜூலை, 2022

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் எச்சரிக்கை!


தமிழ்நாட்டின் ஜனநாயகப்பூர்வமான வேண்டுகோள்களுக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்கவேண்டும்
  June 16, 2022 • Viduthalai

அப்படி மதிப்பளிக்காவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு மோடி அரசே பொறுப்பு!

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் எச்சரிக்கை!

சென்னை, ஜூன் 16   தமிழ்நாட்டின் ஜனநாயகப்பூர்வமான வேண்டுகோள்களுக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்க வேண்டும்; அப்படி மதிப்பளிக்காவிட்டால், நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை நாங்கள் செய்வோம். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு மோடியே பொறுப்பு - மோடி அரசே பொறுப்பு என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள். 

இந்தி எதிர்ப்பு மாநாடு

கடந்த 4.6.2022  அன்று மாலை    சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில்  இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன்  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பான முறை யில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாட்டிற்குத் தலைமையேற்று சிறப் பித்துக் கொண்டிருக்கின்ற நம் அனைவருடைய நன் மதிப்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய திராவிடர் கழகத் தலைவர் மரியாதைக்குரிய அய்யா ஆசிரியர் அவர்களே,

மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்காக வருகை தந்திருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்  பேரன்புமிக்க அண்ணன் வைகோ அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர் பாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செய லாளர்  பேரன்புக்குரிய பேராசிரியர் சுப.வீ. அவர்களே,

வருகை தரவிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமா அவர்களே,

இங்கே வரவேற்புரையாற்றிய மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்களே,

எழுச்சியுரை வழங்க வருகை தரவிருக்கின்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சு. அவர்களே,

இங்கே உரையாற்றிய நம் பெருமதிப்பிற்குரிய திரா விடர் கழகப் பிரச்சார செயலாளர் பேரன்புமிக்க வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,

மாநாட்டில் 12 தீர்மானங்கள்

12 தீர்மானங்களையும் மிகச் சிறப்பான முறையில் முன்மொழிந்து உரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

பெருந்திரளாகப் பங்கெடுத்து இருக்கின்ற திராவிடர் கழகத் தோழர்களே, கூட்டணிக் கட்சித் தோழர்களே, பொதுமக்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முதலில் அன்பான ஒரு வேண்டுகோள், மேடைக்கு இடதுபுறமாக நிற்பவர்கள், நாற்காலியில் அமர்ந்தால் நல்லது. ஏனென்றால், நாற்காலிகள் காலியாக இருப்ப தைப் படமெடுத்து, இந்தி எதிர்ப்பு மாநாடு தோல்வி; நாற்காலிகள் காலியாக இருக்கின்றன என்று படம் போடுகின்ற பத்திரிகைகள் இருக்கின்றன தமிழ்நாட்டில்.

ஆகவே, ஓர் அன்பான வேண்டுகோள், எல்லோரும் நாற்காலியில் அமருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கே நம்முடைய கவிஞர் அவர்கள் 12 தீர்மானங் களை முன்மொழிந்தார்கள். அந்த 12 தீர்மானங்களையும் இங்கே இருக்கின்ற நாம் அனைவரும் ஒருமனதாகக் கரவொலி எழுப்பி ஆதரித்து, ஏற்றுக்கொண்டிருக் கின்றோம்.

12 தீர்மானங்களில், 11 ஆவது தீர்மானத்தை நம்மு டைய கவிஞர் படித்தார் அல்லவா, அதற்காக அவருக்கு நம்முடைய தனிப் பாராட்டு.

அந்தத் தீர்மானம் புரியவில்லை. அவர் நன்றாகத்தான் படித்தார்; அச்சடித்தும் என்னுடைய கைகளில் கொடுத் திருக்கிறார்கள்.

ஆனால், புரியவில்லை. புரியாத பாஷையில், புரியாத மொழியில், புரியாத வார்த்தைகளில் நம்முடைய ஒன்றிய அரசாங்கத்தினுடைய திட்டங்கள் இருக்கின்றன.

இந்த மேடையில் இருப்பவர்கள் எல்லோருக்குமே - வெளியில் உள்ள பேர் - தேச விரோதிகள். 

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பா.ஜ.க.வினர் சொல்வது தேச விரோதிகள் என்று.

அட, முட்டாள்களா, இங்கே நிறைவேற்றப்பட்ட 2 ஆவது தீர்மானத்தைப் படித்துப் பாருங்கள். இந்தத் தீர்மானம் எதை வலியுறுத்துகிறது என்று சொன்னால்,

நாடு ஒன்றாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தும் 2 ஆவது தீர்மானம்!

இந்த நாட்டினுடைய ஒற்றுமை, ஒருமைப்பாடு சீர்குலைந்துவிடக் கூடாது - நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று 2 ஆவது தீர்மானம் வலியுறுத்துகிறது.

இன்று இருக்கின்ற மோடி அரசாங்கம், ஒரு மிருக பலத்தோடு இருக்கிறது என்பது உண்மைதான்.

மிருக பலத்தோடு நாடாளுமன்றத்தில் இருக்கிற ஒரே காரணத்திற்காக, ‘‘நாங்கள் நினைத்ததையெல்லாம் செய் வோம் - அதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்‘‘ என்று நிர்ப்பந்திப்பது நாட்டிற்கு விரோதமானது. நாட் டின் ஒற்றுமைக்கு எதிரானது; நாட்டின் ஒருமைப்பாட் டிற்கு எதிரானது.

இத்தகைய காரியங்களைத்தான் மொழித் திணிப்பில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் செய்துகொண்டிருக் கிறார்கள்.

நாம் என்ன உடை உடுத்தவேண்டும் என்பதை மோடி தீர்மானிக்கிறார்.

நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதை மோடி தீர்மானிக்கிறார்.

நாம் என்ன மொழி பேசவேண்டும் என்பதை மோடி தீர்மானிக்கிறார்.

நீ தீர்மானித்தால், நான் அதை ஏற்றுக்கொண்டால், நான் என்ன மனிதனா?

நீங்கள் தீர்மானிப்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமா?

அவர் சொல்கிறார், அரசமைப்புச் சட்டம்தான் நாட்டை வழிநடத்துகிறது என்று.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற ஒன்றிய அரசு

அரசமைப்புச் சட்டம்தான் வழிநடத்துகிறது என் பதை மோடி அவர்கள் ஏற்றுக்கொண்டால், ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டால், அந்த அரசமைப்புச் சட்டத் திற்கு உட்பட்டு ஆட்சி நடத்தவேண்டும்.

ஆனால், அரசமைப்புச் சட்டம்தான் நாட்டை வழி நடத்துகிறது என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு, மறு பக்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான முறை யில், எதிரான முறையில் செயல்படுகிற அரசாங்கமாகத் தான் இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் இருக்கிறது.

ஆசிரியரின் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம்!

நம்முடைய ஆசிரியருக்கு வயதாகிவிட்டது என் றால், அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ‘‘நான் என்ஜின்; நீ என்ஜினை நிறுத்தப் பார்க்கிறாயா? அது உன்னால் முடியாது’’ என்று என்னிடம் சவால் விடுகிறார்.

நான் சவால் விடவில்லை - இந்தித் திணிப்பு என்ற வந்தவுடனேயே, அமித்ஷாவினுடைய அறிக்கை வந்தவுடனேயே, இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் - ‘‘நான் தார்ச் சட்டியை எடுத்துக்கொண்டு போகிறேன், நீ தார்ச் சட்டியை எடுத்துக்கொடு’’ என்று சொல்லி,

ஒரு போராட்டம் - பெரிய அளவிற்கு, மிகுந்த எழுச்சியோடு. உண்மையிலேயே திராவிடர் கழகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மிகுந்த எழுச்சியோடு பங்கு பெற்றார்கள். அந்தப் போராட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது.

கொள்கை ரீதியான போராட்டம்

இப்போது இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு என்பது, ஏதோ இந்தியை தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. எந்த மொழியையும் நாங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. எந்தத் தனிப்பட்ட நபர்களையும் நாங்கள் எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியான போராட்டம். எம் மொழியின்மீது உன் மொழியைத் திணிக்காதே.

எம்முடைய தாய்மொழிமீது, இன்னொரு மொழி யைக் கொண்டு வந்து திணிக்காதே!

கலைஞர் அவர்களுடைய சிலை திறப்பு விழாவில், நாட்டினுடைய குடியரசு துணைத் தலைவர் பங்கேற்றார். நாங்கள் எல்லோரும் அதில் கலந்துகொண்டோம்.

ஒரு மொழி திணிக்கப்படக் கூடாது என்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்

அந்த நிகழ்வில் அவர் என்ன பேசுகிறார், ஒரு மொழி திணிக்கப்படக் கூடாது என்கிறார்.

அந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளிலும் வெளிவந்தது.

அவர் நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருந்தாலும், அவருடைய கட்சி எது என்பது எல் லோருக்கும் தெரியும். பா.ஜ.க.வினுடைய அகில இந்திய தலைவராக இருந்தவர்; ஆர்.எஸ்.எஸ்சால் ஊட்டி வளர்க்கப்பட்டவர்தான் அவரும்.

மோடி எப்படி ஊட்டி வளர்க்கப்பட்டு இருக்கிறாரோ, அப்படித்தான் அவரும். அவர் சொல்கிறார், ஒரு மொழியைத் திணிக்கக்கூடாது என்று.

ஆனால், அவரின்கீழ் இருக்கக்கூடிய ஒன்றிய அர சாங்கம், வலுக்கட்டாயமாகத் திணிப்பதற்கான முயற்சி களைத் தொடர்ந்து மேற்கொள்கிறது.

அமித்ஷா கனவு காணுகிறார் - 

ஆர்.எஸ்.எஸ். கனவு காணுகிறது

அதுவும் அமித்ஷாவினுடைய அறிக்கை மிகமிக அபாயகரமான அறிக்கையாகும்.

ஒரே  நாடு, ஒரே மொழி கனவை மக்கள் நனவாக்க வேண்டுமாம்.

யார் அப்படி கனவு கண்டார்கள்?

ஒரே நாடு என்பதுதான் இருக்கிறதே, திரும்பத் திரும்ப நீ ஏன் அதைப் பிளவுபடுத்துகிறாய்?

ஒரே நாடுதான் இந்தியா.

ஒரே மொழியாம் - அப்படி எந்த மக்கள் கனவு கண்டார்கள்? எந்த மக்களும் கனவு காணவில்லை. 

அமித்ஷா கனவு காணுகிறார்; அவருடைய வகை யறாக்கள் கனவு காணுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். கனவு காணுகிறது.

அந்தக் கனவை, நீங்கள் கண்ட கனவை, எங்கள்மீது திணிக்கப் பார்க்கிறீர்கள். எங்கள் மூலமாக நிறைவேற்ற முயற்சிக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது.

இது நடக்காது என்பது வெறும் பேச்சளவில் இல்லை. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்து 1930 ஆம் ஆண்டுமுதல் தொடங்கிய போராட்டங்களை யெல்லாம் இங்கே நம்முடைய சகோதரி அவர்கள் இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்.

வரலாற்றில் அழிக்க முடியாத போராட்டம்!

1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் என்ன நடை பெற்றது? இந்தியாவே இந்தப் பக்கம் திரும்பி நின்றது.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் - ஒரு சாதாரண போராட்டமல்ல - வர லாற்றில் அழிக்க முடியாத போராட்டம்.

தன்னுடைய தாய்மொழிக்காக, தன்னையே அழித் துக்கொண்ட மாணவர்கள். வேறு எந்த மொழிக்கும் இப்படி நடந்ததாகத் தெரியவில்லை.

தாய்மொழிக்காக, தமிழுக்காக தன்னைத்தானே தனது உடலில்  பெட்ரோலை ஊற்றி எரித்துக்கொண்ட மாணவர்கள். தன்னெழுச்சியாக நடைபெற்ற தமிழ்நாடு தழுவிய போராட்டம். யாரும் தூண்டிவிடாமல் தன்னெ ழுச்சியாக நடைபெற்ற போராட்டம்.

அனைத்துப் பள்ளிகளும், அனைத்துக் கல்லூரி களும், அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மாதக் கணக்கில் மூடப்பட்டன.

நேருவின் வாக்குறுதி!

அப்பொழுதுதான் நேரு வாக்குறுதி கொடுத்தார், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை நாங்கள் திணிக்க மாட்டோம் என்று.

அவர் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. அந்தப் போராட் டத்திற்கு  மதிப்பளித்தார். மக்களின் எழுச்சிக்கு மதிப் பளித்து, அந்த வாக்குறுதியைக் கொடுத்தார்.

ஆனால், இன்றைக்கு இருக்கிற மோடி அரசுப்பற்றிக் குறிப்பிடும்பொழுது இங்கே நம்முடைய சகோதரி அருள்மொழி அவர்கள் பேசுகிறபொழுது, ஹிட்லர் பாணியைப் பின்பற்றுகிறார்கள் என்று இங்கே குறிப்பிட்டார். மிகமிக சரியான ஒப்பீடு.

ஹிட்லரைப் பின்பற்றுகிற கூட்டம். ஹிட்லரைப் பின்பற்றினால், முடிவு எப்படி இருக்கும் என்பது வேறு விஷயம். நான் எல்லா மேடைகளிலும் சொல்லியிருக்கிறேன்; இங்கேயும் சொல்லுகிறேன். ஏறத்தாழ 130 கோடி மக்களுக்குப் பிரதமராக  மோடி இருக்கிறார்.

அப்படியொரு நிலைமை 

மோடிக்கு ஏற்படக்கூடாது

ஹிட்லருக்கு ஏற்பட்ட நிலைமை அவருக்கு ஏற்பட் டால், அது இந்தியாவிற்கு அவமானம் - நமக்கு அவமானம்!

130 கோடி மக்களுக்குத் தலைவராக இருந்த ஒருவர் - நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்று சொன்னால், அது நாட்டிற்கு அவமானம்; அப்படியொரு நிலைமை மோடிக்கு ஏற்படக்கூடாது என்பது என்னு டைய தாழ்மையான வேண்டுகோள்.

ஏனென்றால், நீங்கள் நாட்டினுடைய பிரதமர்; நீங்கள் தனி மனிதரல்ல. ஹிட்லரின் கொள்கையைப் பின்பற்றி னால், பாசிசத்தைப் பின்பற்றினால், என்னாகும்? பாசிசம் ஒருபோதும் வெற்றி பெறாது. மனித உயிர்களை ஆயிரக் கணக்கில், லட்சக்கணக்கில் பலிவாங்கும். ஆனால், வெற்றி பெறமுடியாது. ஆனால், அந்தப் பாசிசக் கொள்கையைத்தான் இன்றைக்கு இருக்கிற மோடி அரசாங்கம் பின்பற்றுகிறது. அது மொழியானாலும், மற்றவையானாலும் அதைத்தான் பின்பற்றுகிறது.

பிரதமர், குஜராத்தில் பேசுகிறார்; எட்டாண்டுகால ஆட்சியில், இந்திய மக்கள் யாரும் தலைகுனியும்படியாக என்னுடைய ஆட்சி நடைபெறவில்லை என்று கம்பீரமாகப் பேசுகிறார்.

எத்தனை முறை நாட்டு மக்கள் தலைகுனிந்திருக் கிறார்கள்;  நாடே தலைகுனிந்து இருக்கிறது என்று பட்டியல் போட முடியும்.

உங்கள் எட்டாண்டு கால ஆட்சியில், நாடு பல வகையில் நாட்டு மக்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்; நிமிர்ந்து நிற்க முடியவில்லை. அந்த அளவிற்கு ஒரு மோசமான ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. மிகமிக மோசமான ஆட்சி.

மக்களை மொழி ரீதியாக, மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிளவுபடுத்தி, தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எல்லாவிதமான காரியங் களையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க.வின் ஆட்சியைக் கவிழ்ப்பது அவர்களின் நோக்கமல்லவாம்!

இங்கே அண்ணாமலை என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஏற்கெனவே காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர்; அவரை தமிழ்நாடு பா.ஜ.க.விற்குத் தலைவராகப் போட்டிருக்கிறார்கள்.

அவர் சொல்கிறார், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல என்று.

எப்படி அவருடைய உள்ளத்தில் இருப்பது வெளியில் வந்துவிட்டது பாருங்கள்.

 தமிழ்நாட்டில் இருக்கின்ற பத்திரிகைகள், ஊடகங்கள் என்ன காரணமோ தெரியவில்லை; அச்சுறுத்தலா? மிரட்டலா? அல்லது பணமா? என்று தெரியவில்லை.

தி.மு.க. ஆட்சி - முதுகெலும்பு உள்ள ஆட்சி - யாருக்கும் வளையாத ஆட்சி!

அண்ணாமலைக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் வேறு யாருக்கும் கொடுப்பதில்லை. முதலமைச்சர் செய்திகள்கூட பின்னாலே போய்விடுகிறது. அண்ணா மலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய செய்திகள் போடப்படுகின்றன. அவர் மிரட்டுகிறாரா? அல்லது இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துகொண்டிருக்கிறாரா? என்று தெரியவில்லை.

இப்பொழுது தமிழ்நாட்டில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, நம்முடைய அன்பிற்குரிய சகோதரர் ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் உள்ள ஆட்சி முதுகெலும்பு உள்ள ஆட்சி - யாருக்கும் வளையாத ஆட்சி. இதுதான் பிரச்சினை அவாளுக்கு.

ஆளுநர் ஒற்றர்போல் 

வேலை செய்துகொண்டிருக்கிறார்

ஆளுநரைப் போய் மீண்டும் மீண்டும் பார்க்கிறார். தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 21 மசோதாக்களுக்கு நீங்கள் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று.

அப்படியென்றால், சட்டமன்றம் பெரியதா? ஆளுநர் பெரியவரா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டமன்றம். ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்டவர். ஆளுநரை நியமிப்பது ஒன்றிய அரசு. சம்பளம் கொடுப்பது மாநில அரசு.

நியமனம் செய்வதோடு ஒன்றிய அரசினுடைய வேலை முடிந்துபோய்விட்டது. ஆளுநர் அவர்கள் ஒற்றர் போல் வேலை செய்துகொண்டிருக்கிறார்.

சட்டமன்றத் தீர்மானங்களை மதிப்பதில்லை. அலட் சியப்படுத்துகிறார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் நாட்டு மக்களைத் தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின்மீது உண்மையில் அண்ணா மலைக்கு அக்கறை இருக்குமேயானால், ஆளுநரை சந்தித்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக் களை ஏன் கிடப்பில் போட்டிருக்கிறீர்கள்? உடனே அந்த மசோதாக்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள் என்று சொல்லவேண்டும்.

ஏனென்றால், அந்த மசோதாக்கள் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டு இருப்பவை. 

அதை செய்யாமல், அண்ணாமலை அவர்கள் வேறு மாதிரியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வைப் பிரதிபலிக்கின்ற மாநாடாகும்

ஆகவே, இன்றைக்கு சைதாப்பேட்டையில் நடை பெறுகிற இந்தி எதிர்ப்பு மாநாடு, ஏதோ சைதாப் பேட்டைக்கு உரிய மாநாடல்ல; சென்னைக்கு உரிய மாநாடல்ல; தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வைப் பிரதிபலிக்கின்ற மாநாடாகும்.

வந்திருப்பவர்களுடைய எண்ணிக்கை எத்தனை ஆயிரம்; எத்தனை லட்சம், எத்தனை கோடி என்பதல்ல பிரச்சினை. தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலித்து, ஒன்றிய அரசு என்னென்ன தவறுகளை செய்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக 11 தீர்மானங் களில் விளக்கப்பட்டு இருக்கின்றன.

அனைத்து மாநிலங்களையும் 

சமமாகப் பாவிக்கவேண்டும்

ஒரு ஒன்றிய அரசு, அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும்; அனைத்து மொழிகளையும் சமமாகப் பாவிக்கவேண்டும்.

இங்கே கவிஞர் அவர்கள், யாருக்கும் தெரியாத, யாருக்கும் புரியாத, யாரும் ஏற்காத சமஸ்கிருத மொழிக்கு 643 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அதேநேரத்தில், தென் மாநில மொழிகள் அது கன்னடமாக இருக்கலாம், தெலுங்காக இருக்கலாம், மலையாளமாக இருக்கலாம், தமிழாக இருக்கலாம் - இந்த மொழிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதைக் காட்டிலும் 29 சதவிகிதம் அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி  ஒதுக்கப்படுகிறது என்று சொன்னால், எவ்வளவு பெரிய வேறுபாடு; எவ்வளவு பெரிய பாகுபாடு - இதை எப்படி அனுமதிப்பது?

நாட்டைப் பிளவுபடுத்துபவர்கள் யார்?

எல்லா மாநிலங்களுக்குமான ஒன்றிய அரசா? அல்லது சில குறிப்பிட்ட மாநில அரசுகளுக்கு மட்டும் உரிய ஒன்றிய அரசா?

அப்படியென்றால் யார் பிளவுபடுத்துவது?

யார் பிரிவினைவாதி?

யார் தேசத் துரோகிகள்?

மோடி வகையறாக்கள்தான் நாட்டின் தேச விரோதிகள் -

மோடி வகையறாக்கள்தான் நாட்டைப் பிளவுபடுத்து கிறார்கள்.

உண்மையிலேயே யோக்கியமானவராக இருந்தால், நாட்டினுடைய பிரதமர் என்கிற முறையில் இருந்தால், ஒன்றிய அரசு, அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும்; அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பளிக்கவேண்டும்.

சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்கவேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை.

 எத்தனை பேர் பேசுகிறார்கள் அந்த மொழியை?

விகிதாச்சார அடிப்படையில் நிதி ஒதுக்கு.

எண்ணிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கு

அல்லது சமமாகவாவது நிதி ஒதுக்கு.

சமஸ்கிருதம் யாருக்கும் தெரியாத மொழி. அதை கடவுள் மொழி என்கிறார்கள். கடவுள் எங்கே இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.

அய்யர் போய் கருவறைக்குள்போய் சிலையிடம் சொல்கிறார்; அங்கே இருக்கின்ற சிலை தலையை ஆட்டவும் இல்லை, மடக்கவும் இல்லை; ஆமாம் என்றும் சொல்லவில்லை; இல்லை என்றும் சொல்ல வில்லை. ஏனென்றால், அது கருங்கல் சிலை.

அதுகிட்ட சொல்கிற மொழிக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கவேண்டும்?

பேசுகின்ற மொழிக்கு, மக்கள் பயன்படுத்துகின்ற மொழிக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடா?

மணியார்டர் படிவத்திலிருந்து 

தமிழ்மொழி நீக்கம்

ஏற்கெனவே மணியார்டர் படிவத்தில், மூன்று மொழிகள் இருக்கும் - இந்தி, ஆங்கிலம், தமிழ் மொழி இருக்கும்.

இப்பொழுது தமிழ் மொழியை அந்தப் படிவத்திலிருந்து எடுத்துவிட்டார்கள்.

இந்திப் போராட்டத்திற்கு முன்பு எல்லா ரயில்  நிலை யங்களிலும் மேலே இந்தி எழுத்து இருக்கும்; போராட் டத்தின்மூலமாக அது பின்னுக்குப் போய்விட்டது. இப்பொழுது அது மீண்டும் முன்னுக்கு வர முந்திரிக் கொட்டை மாதிரி முந்தி வருவதற்கான ஏற்பாட்டை அமித்ஷா செய்துகொண்டிருக்கிறார்.

அவருக்கின்ற அதிகாரத்தை அவர் பயன்படுத்து கிறார். அவருக்கு இருக்கிற அதிகாரம் 2024 ஆம் ஆண்டுவரை இருக்கலாம்; அல்லது அதற்கு முன்பே கூட குறையலாம்.

சுப்ரமணியசாமி சொல்கிறார், காஷ்மீரில் உன்னால் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஆகவே, உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகு என்று அந்தக் கட்சியை சார்ந்தவரே சொல்கிறார்.

உங்கள் அதிகாரத்தைக் காட்டிலும் 

மிகவும் சக்தி வாய்ந்தது மக்கள் சக்தி

அமித்ஷா அதிகாரத்தில் இருக்கிறார் என்கிற காரணத்திற்காக, மோடி அதிகாரத்தில் இருக்கிறார் என்கிற காரணத்திற்காக, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், உங்கள் அதிகாரத்தைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தது மக்கள் சக்தி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

மக்கள சக்திக்கு நிகராக வேறு எதுவும் கிடையாது. மக்கள் இதை ஏற்கமாட்டார்கள் - உங்களுடைய நட வடிக்கையை, உங்களுடைய அணுகுமுறையை, உங் களுடைய அறிக்கைகளை ஒருபோதும் ஏற்கமாட் டார்கள்.

ஒன்றிய அரசு இதே கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுமேயானால், தமிழ்நாடு கிளர்ந்தெழுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒன்றிய அரசு ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவேண் டும். இங்கே மாநாடு நடைபெறுகிறது என்று சொன்னால், இந்த மாநாட்டிலே நாம் நிறைவேற்றுகிற தீர்மானங்களில் 11 தீர்மானங்கள் ஒன்றிய அரசு சம்பந்தப்பட்டவை. 12 ஆவது தீர்மானம், தமிழ்நாட்டில், குழந்தைகளுக்குத் தமிழில் வைக்கவேண்டும்; அதற்குரிய ஏற்பாட்டினை தமிழ்நாடு அரசு செய்யவேண்டும் என்ற தீர்மானம்.

மற்ற 11 தீர்மானங்களும் உங்களுக்குரிய சம்பந்தப் பட்ட தீர்மானங்கள். நீங்கள் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை உள்ளவர்களானால், இந்த 11 தீர்மானங்களும், நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே, உங்கள் காதுகளுக்கு எட்டிவிடும்; அதற்குள்ள வசதி உங்களிடத்தில் இருக்கிறது.

அந்தத் தீர்மானங்களை நீங்கள் மதிக்கவேண்டும்; திராவிடர் கழக மாநாட்டில் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அந்தத் தீர்மானங்களை நாங்கள் பரிசீலிக்கிறோம்; ஏற்றுக்கொள்கிறோம் என்று நீங்கள் பதில் சொல்லவேண்டும் - ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இருந்தால்.

பாசிஸ்டுகளாகத்தான் செயல்படுவோம் என்று சொன்னால்...

ஜனநாயகத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை - நாங்கள் சர்வாதிகாரமாக செயல்படுவோம் - நாங்கள் பாசிஸ்டுகளாக செயல்படுவோம் என்று சொன்னால்,

அந்தப் பாசிசத்தை நாங்கள் சந்திக்கத் தயார் என்று சொல்லுகின்ற நிலைமை வரும்.

அதற்காக என்ன விலைகளைக் கொடுக்கவேண்டி வந்தாலும், என்ன விளைவுகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்த வயதில், தார்ச் சட்டியை ஆசிரியர் அய்யாவால் தூக்க முடியும் என்றால், இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்கள், தார்  பேரலையே தூக்கிக் கொண்டு வருவார்கள்.

ஒரு இந்தி எழுத்துக்கூட தமிழ்நாட்டில் இருக்க முடியாது. எந்த இடத்திலும் இருக்க முடியாது.

ஒன்றிய அரசு தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும்

ஆகவே, ஒன்றிய அரசு தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்; தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு தீர்மானம் முடிகிறபொழுதும், மிகுந்த பொறுப்பான முறையில்தான் வார்த்தைகள் போடப்பட்டு இருக்கின்றன.

மாற்றிக் கொள்ளவேண்டும்; மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு மோடியே பொறுப்பு - மோடி அரசே பொறுப்பு

இந்த ஜனநாயகப்பூர்வமான வேண்டுகோள்களுக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்கவேண்டும்; அப்படி மதிப் பளிக்காவிட்டால், நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை நாங்கள் செய்வோம். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு மோடியே பொறுப்பு - மோடி அரசே பொறுப்பு.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:45 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இந்திய எதிர்ப்பு, முத்தரசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ▼  ஜூலை (25)
      • அரியலூர் படைத்தது அரும்பெரும் வரலாற்றை!
      • அமைச்சர் மற்றும் பல்வேறு தோழர்கள் விடுதலை சந்தா, ந...
      • திராவிட மகளிர் கொண்டாடிய பவளவிழா பிறந்தநாள் மாட்சி
      • தென் சென்னை மாவட்டத்தில் "விடுதலை" சந்தா சேர்ப்பை ...
      • சுயமரியாதைச் சுடரொளி இராம. அரங்கண்ணல் துணைவியார் த...
      • தென் சென்னையில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி (அமைச...
      • சட்டக்கதிர் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்களின் தாயார் கம...
      • தென்சென்னையில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி (மக்கள...
      • 40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்ட...
      • சென்னை தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி துணை அம...
      • திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கடைவீதிப்பிரசாரம்
      • 116ஆவது மாமன்ற உறுப்பினர் மற்றும் மாமன்ற ஆளுங் கட்...
      • தமிழர் தலைவரிடம் ‘விடுதலை' சந்தாக்கள் வழங்கல் (சண்...
      • பேராசிரியர் மு. நாகநாதன் நூல்கள்: தமிழர் தலைவர் வெ...
      • கல்வி வள்ளல் காமராசரின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளான...
      • அரும்பாக்கம் கோ.பா.சாரதி மறைவு
      • மணவிழா மகிழ்வாக ஆசிரியரிடம் சந்தாக்கள் வழங்கல் (இர...
      • தென்சென்னை கடைவீதி பரப்புரை வசூல்
      • திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அர...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்ச...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தி.மு.க. செய்தித் தொடர்...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செய்தி எம்பி பாலு அவர்க...
      • இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகு...
      • மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ...
      • சி.பா.ஆதித்தனாரின் 41ஆவது நினைவுநாள்: சிலைக்கு மலர...
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.