தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

சனி, 2 ஜூலை, 2022

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்


இந்தி மொழி நம்மைச் சிதைத்துவிடும் - நம் பெருமையைக் கெடுத்துவிடும்! இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஆசிரியருக்குத் துணையாக தி.மு.க., திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கும்!
  June 15, 2022 • Viduthalai

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை, ஜூன் 15  சமத்துவ சிந்தனையை அழிப்ப தற்காக உள்ளே நுழைய முயற்சிக்கும் மொழியாக, இந்தி மொழி இருக்கின்றது. அது நம்மைச் சிதைத்துவிடும், நம் பெருமையைக் கெடுத்துவிடும். இந்தப் போராட்டத்தில் ஆசிரியர் அவர்களுக்குத் துணையாக திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கும். இந்தி வந்தால் நமக்குக் கேடு - நம்முடைய பெருமைகள் கெடும் என்றார்  திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அவர்கள். 

இந்தி எதிர்ப்பு மாநாடு

கடந்த 4.6.2022  அன்று மாலை    சென்னை சைதாப்பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில்  திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.,  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் கழகத்தின் சார்பாக இங்கே நடைபெறு கின்ற இந்தி எதிர்ப்புத் திறந்தவெளி மாநாட்டிற்குத் தலைமையேற்று இருக்கின்ற அய்யா ஆசிரியர் அவர்களே,

இங்கே எனக்கு முன்பு உரையாற்றி இருக்கின்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களே,

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப.வீ. அவர்களே, வரவேற்புரையாற்றி இருக்கின்ற 

இரா.வில்வநாதன் அவர்களே,

தீர்மானங்களை இங்கே நம்முன்னால் முன்வைத்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களே, திராவிடர் கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,

எனக்குப் பின்பு இங்கே உரையாற்ற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் தொல்.திருமாவள வன் அவர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற செ.ர.பார்த்தசாரதி அவர்களே,

மற்றும் இங்கே திரளாகக் குழுமியுள்ள பெரியோர் களே, நண்பர்களே, தாய்மார்களே உங்கள் அனை வருக்கும் வணக்கம்.

இந்தி நம்மை சூத்திரனாக்கிவிடும்

இந்தி என்ன செய்யும்? என்றால், நம்மை சூத்திரன் ஆக்கிவிடும்.

இந்தி நம்மை சூத்திரனாக்கிவிடும்.

இந்தி எந்த நன்மையையும் செய்யாது.

நான் ஒரு பட்டியலைச் சொல்கிறேன், அந்தப் பட்டி யலைக் கேளுங்கள்.

மேற்கு வங்காளம் வளர்ந்த மாநிலமா, இல்லையா?

அதற்குக் கீழே ஒடிசா வளர்ந்த மாநிலமா, இல்லையா?

அதற்குக் கீழே ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா வளர்ந்த மாநிலமா, இல்லையா?

அதற்குக் கீழே தமிழ்நாடு வளர்ந்த மாநிலமா, இல்லையா?

மேற்கே கேரளா, அதற்கு மேலே கருநாடகம், அதற்கு மேலே மராட்டியம், அதற்கு மேலே குஜராத், அதற்கு மேலே பஞ்சாப் - இவையெல்லாம் வளர்ந்த மாநிலங் களா, இல்லையா?

ஏன் இதைக் கேட்கிறேன் என்றால், இந்த மாநிலங் களில், இந்தி அந்த மக்களுடைய தாய்மொழி இல்லை.

வளராத மாநிலம் என்றால், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், இன்னும் புதிதாகப் பிறந்த இரண்டு, மூன்று மாநிலங்கள்.

பிறகு எதற்கு நான் இந்தியைப் படிக்கவேண்டும்?

இங்கே படிக்கப்பட்ட தீர்மானங்களில், இரண்டாவது தீர்மானத்தில் ஒன்றைச் சொன்னார்கள்.

ஒரே மொழியாக இந்தி இருந்தால், உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று இந்த நாட்டினுடைய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா ஓரிடத்தில் பேசியிருக்கிறார்.

அமித்ஷா என்பவர் இந்தியரா? 

எனக்கு வந்த சந்தேகம் என்னவென்றால், அமித்ஷா என்பவர் இந்தியரா? என்பதுதான்.

அமித்ஷா என்பவர் இந்தியரா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. காரணம் என்னவென்றால், 70 ஆண்டுகளுக்குமேல், இந்தியாவை அடையாளப்படுத் துகிற நம்முடைய பெருமை என்னவென்றால், வேற்று மையில் ஒற்றுமைதான் என்பதுதான் இந்தியாவை அடையாளப்படுத்துகின்ற ஒன்று.

நம்முடைய பண்பாடு வேறுபட்ட பண்பாடு.

நம்முடைய மொழி, பல மொழி. இருந்தாலும், ஒற்று மையாக இருக்கிறோமே, இதுதான் உலகளவில் உள்ள மக்களை இந்தியாவைப் பார்த்து வியக்க வைக்கிறது.

1947 வரைக்கும் இந்தியா ஒரு நாடு இல்லை

ஒருவேளை இந்தியர் யார் என்று அவருக்கே இன்னும் தெரியவில்லை போலிருக்கிறது. இந்தி வந்தால்தான், இனிமேல்தான் இந்த நாட்டை அடையாளப்படுத்தப் போகிறாராம்.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 1947 வரைக்கும் இந்தியா ஒரு நாடு இல்லை.

விந்திய மலைக்குத் தெற்கே பார்த்தீர்களேயானால், வெள்ளையர் காலத்தில், சென்னை மாகாணம் (மெட்ராஸ் பிரசிடென்சி) என்று சொல்லக்கூடிய அந்தப் பகுதிதான் ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுடைய வசம் இருந்தது.

இன்னொரு பெரிய பகுதி - 

திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னராட்சி

மைசூர் சமஸ்தானம் மன்னராட்சி

அய்தராபாத் சமஸ்தானம் மன்னராட்சி

தென்னிந்தியாவில் நான்கு ராஜாங்கம் இருந்தது.

வடக்கே ஓரளவிற்கு, பாம்பே பிரசிடென்சி, கல்கத்தா பிரசிடென்சி என்று இரண்டு இருந்தது. சென்டர் பிரசிடென்சி என்ற ஒன்று இருந்தது. ஒரு சில குறுநில மன்னர்கள் இருந்தார்கள். ஆனாலும், பெரும்பாலான பகுதிகள் வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருந்தது.

சர்தார் பட்டேல் ஒவ்வொரு ராஜாவாகப் 

பார்த்துப் பேசினார்

1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்ற பிறகு, விடுதலை அடைந்த பிறகு, அப்பொழுது இருந்த உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல், ஒவ்வொரு ராஜாவாகப் போய்ப் பார்த்து,  பேசியதால், நாமெல்லாம் ஒன்றாக சேர்ந்து இந்தியாவானோம்.

ஒரு நாடாக வைத்துக்கொள்வோம் என்று கேட்டு, அதற்கு அய்தராபாத் நிஜாம் முதலில் ஒத்துக்கொள்ள வில்லை; பிறகு இவர்கள் அதிகாரத்தை வைத்து, படைகளை வைத்துப் பணிய வைப்போம் என்று சொன்னதினால், அவரும் சேர்ந்து, அதற்குப் பிறகு இது ஒரு நாடாக ஆயிற்று.

ஆனால், பல்வேறு பண்பாடுகள், மொழிகள் புழங்கி வந்த இந்த நாடு, முழுமையாக வெள்ளையர்கள் ஆதிக் கத்தில் இல்லை; விடுதலையான பிறகு, ஒருங்கிணைக்கும் முயற்சியை காங்கிரஸ் செய்தது. இன்னொரு ஒரு பெரிய நல்ல காரியத்தையும் செய்தார்கள்.

1951 இல் மொழிவழி மாநிலங்களாகப் பிரித்தார்கள்!

அந்தக் காலத்தில் என்ன கோபம் நம்மேல் இருந்தாலும், காங்கிரஸ்மேல் எனக்குப் பிடிமானம் எங்கே வருகிறது என்றால், மொழிவழி மாநிலங்களாக இந்தியாவைப் பிரித்தார்கள் 1951 இல்.

ஏனென்றால், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது. ஒரு நாகரிகம் இருக்கிறது. சில பழக்க வழக்கங்கள் இருக்கின்றன.

அந்த மொழியைக் காப்பாற்றுகின்றபொழுதுதான், அந்தப் பண்பாட்டையும் காப்பாற்ற முடியும் என்று கருதினார்கள். எனவே, மொழிவழி மாநிலங்களாகப் பிரித்தார்கள்.

அதுகூட இவர்களுக்குத் தெரியவில்லை.

இந்தி எதற்கு?

அன்றைக்கு ராஜாக்களிடம் பேசும்பொழுது, சும்மா பேசி, நம்மோடு சேர்ந்து ஒன்றாக இருக்கலாம் அல்லவா!

உனக்கு வருஷா வருஷம் நான் மானியம் தருகிறேன். வாடகைக்குத்தான் குடியிருந்தோம். 1970 ஆம் ஆண்டு வரைக்கும் வாடகைக்குப் பல பகுதியில் குடியிருந்த ஒரு நாடாக இருந்தது.

இந்திரா காந்தி பிரதமராக வந்தவுடன் 

மன்னர் மானியத்தை ஒழித்தார்

1970 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக வந்து, மன்னர் மானியத்தை ஒழித்ததற்குப் பிறகுதான் முழுமையாக மன்னர்கள் ஒழிந்தார்கள்.

இப்படி ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால், அந் தந்த மக்களுக்கான மொழியைக் காப்பாற்றவேண்டும்.

வடமொழியான சமஸ்கிருதத்திற்கு 643 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

எனக்கு ஒரு ஆசை என்னவென்றால், வடமொழிக் கென்று ஒரு மாநிலத்தை உருவாக்கிப் பாருங்கள்.

தமிழர்களுடைய பெருமை என்பது 

2000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருமை

இது நம்மை சோதிக்கும் திட்டம். தமிழர்களுடைய பெருமை என்பது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருமை.

நம்முடைய பண்பாடு என்பது சமத்துவப் பண்பாடு.

நான் நாடாளுமன்றத்திலேயே பேசினேன், விந்திய மலைக்குத் தெற்கே நான்கு நாடுகள் இருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு - சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகள்.

விந்திய மலைக்கு வடக்கே, பெரிய நாடுகள் என்று - மராட்டியர்கள் இருந்தார்கள், மகதர்கள் இருந்தார்கள், குப்தர்கள் இருந்தார்கள், மவுரியர்கள் இருந்தார்கள் - நான்கு பெரிய நாடுகள்.

என்ன வித்தியாசம் தெரியுமா?

வடக்கே இருந்த மராட்டியர்கள், மகதர்கள், குப்தர் கள், மவுரியர்கள் இவர்களில் யாராவது ஒருவர் மன்ன ராக வரவேண்டும் என்றால், அவர்கள் சத்திரியராக இருக்கவேண்டும்.

ஏனென்றால், வருணாசிரமம் என்பது அவர்கள் தர்மம் - வடமொழி தர்மம்.

ஆனால், நம்முடைய சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் இருந்தார்களே, யார் வீரனோ அவர்கள் ஆட்சிக்கு வரலாம். சத்திரியர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் - அது விதி என்பது இங்கே கிடையாது.

மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்ட காலம்.

இது நம்முடைய பெருமை.

விந்திய மலைக்குத் தெற்கே முழுமையாகப் பரவலாக இருந்த மொழி தமிழ் மொழி.

திருவள்ளுவர் ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘‘ என்று சொன்ன நேரத்திலே இங்கே இருந்த ஒரே மொழி தமிழ் மொழி.

11 ஆம் நூற்றாண்டு வரை 

ஜாதியே கிடையாது

பிறகு அவர்கள் வர வர, அந்த மொழியையும் இழுத்துக்கொண்டு வந்தார்கள்; மொழிக் கலப்பு நடந்து, சில புதிய மொழிகள் தோன்றின. மறுபடியும் உள்ளே வந்தார்கள், 10 ஆம் நூற்றாண்டு, 11 ஆம் நூற்றாண்டு வரை ஜாதியே கிடையாது.

ஜாதி இருந்தால், குறிப்பிட்ட  ஜாதியைச் சேர்ந்த வர்கள்தான் மன்னராக வேண்டும் என்ற விதி அங்கே வரும்.

ஆகவே, ஜாதி கிடையாது - 

எல்லோரும் சமம் என்கிற ஒற்றைச் சிந்தனையுடைய ஒரு பண்பாடு இந்த உலகத்திலே இருந்தது என்றால், அது தமிழராகிய நம்முடைய பண்பாடு. இந்தப் பண் பாட்டை அழிப்பதற்காக அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

மனுதர்மத்தை இங்கே கொண்டு வந்து புகுத்துவ தற்காக அவர்கள் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறார்கள்.

முதலிலே சொன்னார்களே, முதலில் இந்தி வரும் - குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது என்று சொன் னார்களே, அதுதான்.

இதிலிருந்து நாம் விடுபட்டு நிற்கவேண்டும். இதை விடக்கூடாது. நாம் மனிதர்களாக இருக்கும்வரை இதை அனுமதிக்கக் கூடாது. இதை அனுமதித்தால், நாம் மனிதர்களாக இருக்கமாட்டோம். அடிமைகளாக, சூத்திரர்களாக இருப்போம்.

நம்முடைய பண்பாடு அல்ல.

நம்முடைய இலக்கியங்கள் சொல்லவில்லை

வள்ளுவர் சொல்லவில்லை

ஏழு, எட்டு மொழியை செம்மொழி என்று சொல் கிறார்களே, தமிழ், வடமொழி, கிரேக்க மொழி, ரோமாபுரி மொழி, சீன மொழி, அரேபிய மொழிகளை செம்மொழி என்கிறார்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, தொடர்ச்சியாக வழக்கத்தில் உள்ள மொழியை செம்மொழி என்று சொல்வார்கள்.

இந்த ஏழு, எட்டு மொழிகளில் பல இலக்கியங்கள் இன்னும் இருக்கின்றன.

தமிழர்கள்தான் ஆண்  - பெண் சமத்துவத்தைக் கடைப்பிடித்தார்கள்

ஆனால், தமிழ் மொழியில் மட்டும்தான், பெண்கள் பாட்டு எழுதி, இலக்கியங்களில் அவை இடம்பெற்றி ருக்கின்றன. காரணம் என்னவென்றால், தமிழர்கள்தான் ஆண்  - பெண் சமத்துவத்தைக் கடைப்பிடித்தார்கள்.

சமஸ்கிருதத்தில், ஒரு பெண்கூட கவிதையோ, பாட்டையோ எழுதி நான் பார்க்கவில்லை. வேறு எந்த மொழியிலும் கிடையாது.

கிரேக்க மொழியில் கிடையாது; அரேபிய மொழியில் கிடையாது. 400, 500 ஆண்டுகளுக்குள் வந்திருக்கலாமே தவிர, அதற்கு முன்பு கிடையாது.

தமிழனுக்குள்ள பெருமை, மனிதர்களை, மனிதர் களாக சமத்துவத்தோடு நடத்திய ஒற்றைச் சமுதாயம் உலகத்திலே இருக்கிறது என்றால், அது நம்முடைய தமிழ்ச் சமுதாயம் மட்டும்தான்.

திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கும்!

அந்த ஒற்றைச் சிந்தனையை, சமத்துவ சிந்தனையை அழிப்பதற்காக உள்ளே நுழைய முயற்சிக்கும் மொழி யாக, இந்தி மொழி இருக்கும். அது நம்மைச் சிதைத்து விடும், நம் பெருமையைக் கெடுத்துவிடும். இந்தப் போராட்டத்தில் ஆசிரியர் அவர்களுக்குத் துணையாக திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கும்.

இந்தி வந்தால் நமக்குக் கேடு -

நம்முடைய பெருமைகள் கெடும்,

நம்முடைய மரியாதை போகும்,

நம்மிடையே இப்பொழுது நிலவி வருகிற சகோதரத் துவம் அழியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்று சொல்லி,

இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன், வணக்கம்!

- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அவர் கள் சிறப்புரையாற்றினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:32 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இந்தி எதிர்ப்பு, இளங்கோவன், மாநாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ▼  ஜூலை (25)
      • அரியலூர் படைத்தது அரும்பெரும் வரலாற்றை!
      • அமைச்சர் மற்றும் பல்வேறு தோழர்கள் விடுதலை சந்தா, ந...
      • திராவிட மகளிர் கொண்டாடிய பவளவிழா பிறந்தநாள் மாட்சி
      • தென் சென்னை மாவட்டத்தில் "விடுதலை" சந்தா சேர்ப்பை ...
      • சுயமரியாதைச் சுடரொளி இராம. அரங்கண்ணல் துணைவியார் த...
      • தென் சென்னையில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி (அமைச...
      • சட்டக்கதிர் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்களின் தாயார் கம...
      • தென்சென்னையில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி (மக்கள...
      • 40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்ட...
      • சென்னை தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி துணை அம...
      • திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கடைவீதிப்பிரசாரம்
      • 116ஆவது மாமன்ற உறுப்பினர் மற்றும் மாமன்ற ஆளுங் கட்...
      • தமிழர் தலைவரிடம் ‘விடுதலை' சந்தாக்கள் வழங்கல் (சண்...
      • பேராசிரியர் மு. நாகநாதன் நூல்கள்: தமிழர் தலைவர் வெ...
      • கல்வி வள்ளல் காமராசரின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளான...
      • அரும்பாக்கம் கோ.பா.சாரதி மறைவு
      • மணவிழா மகிழ்வாக ஆசிரியரிடம் சந்தாக்கள் வழங்கல் (இர...
      • தென்சென்னை கடைவீதி பரப்புரை வசூல்
      • திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அர...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்ச...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தி.மு.க. செய்தித் தொடர்...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செய்தி எம்பி பாலு அவர்க...
      • இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகு...
      • மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ...
      • சி.பா.ஆதித்தனாரின் 41ஆவது நினைவுநாள்: சிலைக்கு மலர...
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.