புதன், 15 ஜூன், 2022

தென் சென்னை கடை வீதிப் பிரச்சாரம் - திருவல்லிக்கேணி


தென் சென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக - ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டினை முன்னிட்டு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நேற்று (12.6.2022) கடை வீதி பிரச்சாரம் நடைபெற்றது. கடை வீதி பிரச்சாரத்தினை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி துவங்கி வைத்தார். இதில் சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, கோ.வீ.ராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக