தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

திங்கள், 20 ஜூன், 2022

இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகும்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர்


 அ.அருள்மொழி
  June 20, 2022 • Viduthalai

சென்னை, ஜூன் 20  இந்தி வந்தால் நம் வரலாறும், பண் பாடும் அழிந்துபோகும் என்றார்  திராவிடர் கழகப் பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள். 

இந்தி எதிர்ப்பு மாநாடு

கடந்த 4.6.2022  அன்று மாலை    சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் கழகத்தினுடைய  தொடர் முயற்சிகள்

இந்தி எதிர்ப்பு மாநாடு என்பதும், தொடர்ச்சியாக இந்தியைத் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல், ஆட்சி, அதிகாரம் இவற்றைப் பயன்படுத்தி, ஊடுருவல் செய் கின்ற வடநாட்டு ஆதிக்கவாதிகளை எதிர்த்துப் போரா டுகிற திராவிடர் கழகத்தினுடைய தொடர் முயற்சிகள், எப்போதெல்லாம் இந்த வேலையில் டில்லி அரசு தீவிர மாக இறங்குகிறதோ, அப்போதெல்லாம் அதைவிட தீவிரமாக, அதை எதிர்த்து நின்று முறியடிக்கின்ற பணியை செய்து வருகின்றது.

அதனுடைய இந்தக் காலகட்டத்தின் மிக அவசிய மான தொடக்கமாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

எப்போதும் திராவிடர் கழகத்தினுடைய போராட்ட அணுகுமுறை என்பது - கிளர்ச்சி - பிரச்சாரம் - கிளர்ச்சி இவை மாறி மாறி வரும்.

இந்தி அழிப்புப் போராட்டம்

பிரச்சாரம் முதலில் நடக்கும். தொடர்ந்து கிளர்ச்சி நடக்கும். ஆனால், இந்த மாநாட்டிற்கு முன்னதாகவே, இந்தி அழிப்புப் போராட்டத்தை நடத்தி, தமிழர் தலைவர் உள்பட ஏராளமான தோழர்கள் கைது செய்யப்பட்டு, அந்தப் போராட்டத்தை சென்ற மாதம் தமிழ்நாடு மிக ஒரு அதிர்வோடு பதிய வைத்திருக்கிறது.

இந்தப் போராட்டம் ஏன் நடக்கிறது என்பதற்குப் பதில், ஏன் இந்தித் திணிக்கப்படுகிறது என்பதில்தான் இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன்னால், இந்த நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும், ஒரு நோக்கம் இருந்தது.

காங்கிரஸ் இயக்கம் விடுதலைக்காகப் போராடியது.

கம்யூனிஸ்ட் இயக்கம் பெறுகிற விடுதலை வர்க்க பேதம் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்கும் என்று நம்பியது.

ஆர்.எஸ்.எஸ். கட்சியோ, விடுதலை பெறுகின்ற இந்தியா, இந்துராஷ்டிரமாக இருக்கவேண்டும் என்று நினைத்தது.

சுயமரியாதையைப் பெறவேண்டும்  என்பதே குறிக்கோள்

ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இந்தியா விற்கு சுதந்திரம் வருகிறதோ, இல்லையோ - இந்திய மக்கள் சமத்துவத்தை அடையவேண்டும்; ஜாதி ஒழிய வேண்டும்; பெண்ணடிமை ஒழியவேண்டும்; தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மறுக்கப்பட்ட கல்வி உரிமையை, வேலை வாய்ப்பை, சுயமரியாதையைப் பெறவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு, தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.

ஆனால், இந்திய தேசிய இயக்கமாக நடந்த காங்கிரஸ் கட்சியிலும், அதற்கு எதிர்க்கட்சியாக தன்னை நினைத்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்.சினுடய அமைப் பிலும் - இருந்த பார்ப்பனர்கள் - இரண்டு கட்சியிலும் இருந்த பார்ப்பனர்கள் - இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால், இந்திதான் இந்தியாவினுடைய பொது மொழி - தேசிய மொழி - ஆட்சி மொழி என்று ஆக்கிவிட வேண்டும் என்கிற முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

இந்தியாவின் பெரிய தலைவர்களாக, நாம் அறிந்த தலைவர்கள் அத்துணைப் பேரும் வலிமையான இந்தியா இருக்கவேண்டும் என்றால், இந்தியாவிற்கு ஒரு ஆட்சி மொழி - பொது மொழி வேண்டும் - அது இந்தி மொழியாகத்தான் இருக்க முடியும் என்று பார்ப்பனர் களுக்கு ஆதரவாகவே பேசினார்கள்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னாலே, அவர்களுடைய முயற்சி நடந்தது. அதற்கு ஆதரவாக, தென்னிந்தியாவின் மெட்ராஸ் பிரசிடென்சியை ராஜாஜி ஆட்சி செய்தார். அதைவிட பொற்காலம் அவர்களுக்கு வேறு என்ன இருக்க முடியும்?

ராஜாஜியின் முயற்சியை முறியடித்தார் தந்தை பெரியார்

வெள்ளைக்காரன் போவதற்கு முன்னாலேயே, தென்னிந்தியாவில் இந்தியை ஆட்சிமொழியாக்கிவிட வேண்டும் என்று ஆச்சாரியார் முயற்சி செய்தார்.

அதை, அன்று படை நடத்தி, இந்தி எதிர்ப்புப் பேரணிகளை நடத்தி, மிகப்பெரிய மாநாடு கூட்டி, மாபெரும் தமிழ் அறிஞர்களை அதில் தலைமை ஏற்கச் செய்து, முன்னிலைப்படுத்தி, ராஜாஜியின் முயற்சியை முறியடித்தார் தந்தை பெரியார்.

அது நடந்தது 1938 களில்.

இன்னும் ஒரு பத்து, பனிரெண்டு ஆண்டுகள் சென்றுவிட்டால், ஒரு நூற்றாண்டாக அவர்கள் இந்த முயற்சியை செய்கிறார்கள். ஒரு நூற்றாண்டாக நாம் அதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏன் அவர்கள் இந்தியை முன்வைக்கிறார்கள்?

இந்தியாவிலே எத்தனையோ மொழிகள் இருக்கின் றன; இந்தி ஏன் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது?

இந்திதான் தேசிய மொழி என்று சொல்லுகிற எல்லோ ருக்கும் தெரியும் இந்தி அப்படியொன்றும் பெரிய இலக்கிய மொழி அல்ல.

அதில் பெரிய காவியங்கள் எதுவும் மிகப்பெரியதாக தமிழ் இலக்கியம்போலவோ, வங்காள இலக்கியம் போலவோ இல்லை.

ஆனாலும், ஏன் இந்தி வேண்டும்? ஏன் இந்தி வேண்டாம்? அவ்வளவுதான் என்னுடைய உரை.

இந்தி மொழிக்கும் - சமஸ்கிருத மொழிக்கும் எழுத்து கிடையாது!

ஏன் அவர்களுக்கு இந்தி வேண்டும் என்றால், இந்தி தான் சமஸ்கிருதத்திற்கான முன்னோட்டம். குரங்கினு டைய குட்டி போன்று-கங்காருவினுடைய குட்டி போன்று.

இன்னும் சொல்லப்போனால், அந்த இரண்டு மொழி களுக்கும் எழுத்து கிடையாது. இரண்டுமே இரவல் எழுத்தைப் பயன்படுத்துகிற, தேவநகரி எழுத்தைப் பயன்படுத்துகிற மொழிகள்.

ஆகவே, இந்தியினுடைய தேவநகரி எழுத்தைப் படித்துவிட்டால், சமஸ்கிருதத்தை நம்முடைய மூளை யில் திணிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும்.

அவ்வளவுதான் இந்தி ரகசியம்.

தந்தை பெரியார் அவர்கள் ஏன் இந்தி வேண்டாம் என்று சொல்லுகிறோம் என்பதற்கு இரண்டு காரணங் களை சொன்னார்கள்.

எங்களுடைய வரலாறும், பண்பாடும் அழிந்து போகும்

ஒன்று, 

நாங்கள் படிக்கத் தொடங்கினால், அரசாங்கம் அதனை ஆட்சிமொழியாக ஏற்றுக்கொண்டால்,  நீங்கள் இந்தியா முழுக்க ஒரே தேர்வை - அதை இந்தியில் நடத்துவீர்கள்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவனோடு, நாங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கப்படுவோம். எங்களுடைய வரலாறும், பண்பாடும் அழிந்து போகும்.

இது ஒரு காரணம்.

ஏன் உங்களால் முடியாது என்று கேட்டபொழுது,

தந்தை பெரியார் சொன்னார்,

அந்த மொழிக்கும், எங்கள் மொழிக்கும் தொடர்பு இல்லை. எங்களால் அதைப் படிக்க முடியாது என்று சொன்னார்.

வராததை வரும் என்று சொல்வதற்குத்தான் வெட்கப்படவேண்டும்

அப்பொழுது அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள், இந்தி படிக்க வராது என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று பேசுகிறார்.

அதற்குப் பதில் தந்தை பெரியார் அவர்கள் சொன் னார், ''எனக்குப் படிக்க வராது, வராது என்று சொல்வதற்கு எதற்கு வெட்கப்படவேண்டும். வராததை வரும் என்று சொல்வதற்குத்தான் வெட்கப்படவேண்டும்.

எனக்குப் படிக்க வராது, எங்கள் மொழி வேறு, அந்த மொழி வேறு'' என்று அன்றைக்கு அய்யா அவர்கள் சொன்னது, இன்றைக்கு வரை பொருத்தமானது.

ஏன், மலையாளத்தவர்கள் படிப்பார்களே, தெலுங் கர்கள் படிப்பார்களே, கன்னடர்கள் படிப்பார்களே, உங்களால் படிக்க முடியாதா என்று கேட்டால், முடியாது.

அவர்களால் எப்படி படிக்க முடியும் என்றால், அந்த மொழிகள் எல்லாம் தமிழும், சமஸ்கிருதமும் கலந்து, பிரிந்து உருவான மொழிகள். எல்லா மொழிகளிலும் தமிழ்ப் பாதி - சமஸ்கிருதம் பாதி.

ஆகவே, அவர்களுக்கு சமஸ்கிருதம் படிப்பதோ, இந்தி படிப்பதோ புதிதாக இருக்காது.

இந்தி மொழி நமக்கு இயல்பானதல்ல

ஆனால், அந்த வாடையே படாத தூய்மையான தனக்கென்று ஒரு வரலாற்றைக் கொண்ட மொழி தமிழ் மொழி. நாம் அதைப் பேசி படித்து வளர்ந்தவர்கள்.

ஆகவே, நமக்கு அந்த மொழி இயல்பானது அல்ல. 

தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் நான்கு வகைச் சொற்களை சொல்கிறார்கள். தொல்காப்பியம் சொல்கிறது.

நான்கு வகையான சொற்கள்!

ஒரு சொல், எப்படி என்றால்,

இயற்சொல், திசைச் சொல், திரிசொல், வடசொல்

நான்கு வகையான சொற்கள் நம்முடைய வாயில் புழங்குகின்றன.

ஒன்று, இயற்சொல்

இரண்டாவது திசைச் சொல்

மூன்றாவது திரிசொல்

நான்காவது வடசொல்

இது எப்பொழுது உள்ளே வந்ததோ, அப்பொழுதே வடக்கு ஆகாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதற்குத்தான் இலக்கணம். அப்படிப்பட்ட வரலாறு அன்றைக்கு இருந்து தொடங்குகிறது.

இனி மிக ஆபத்தான காலத்தை நாம் எதிர்கொள் கிறோம். ஏனென்றால் இன்றைக்கு இந்தியாவை ஆட்சி செய்கிறவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஹிட்லரை தங்கள் முன்னுதாரணமாகக் கொண்டவர்கள்.

இவர்களுடைய குரு, காந்தியைக் கொலை செய்த கோட்சே!

உலகத்தில் நல்லவர்கள் என்று பட்டியல் வைத்தால், அந்தப் பட்டியலுக்குப் பக்கத்தில்கூட வரக்கூடாத ஒரு ஆபத்தான மனிதன். அந்த ஹிட்லரை தங்களுடைய முன்னோடியாகக் கொண்டவர்கள் இவர்கள்.

இவர்கள் கும்பிடுகிற  இவர்களுடைய குரு, காந்தி யைக் கொலை செய்த கோட்சே! நல்லவர்களுக்கும், அவர்களுக்கும் தொடர்பே கிடையாது.

மனித உரிமைப்பற்றி, மக்களைப்பற்றி அவர்களுக்குக் கவலை கிடையாது. 

அவர்களுடைய கவலை மாடுகளைப்பற்றியது; அதிலும் பசு மாடு பற்றியது.

அதற்காக மனிதனைக் கொல்லலாம் என்கிற தத் துவத்தைக் கொண்டவர்கள். தங்களுடைய வடநாட்டு ஆதிக்கத்தை வடவர் ஆதிக்கத்தை தமிழ்நாட்டிலே நடத்திக் காட்டுவதற்கு அவர்களுக்கு இந்தி என்பது ஒரு பெரிய ஆயுதம் - அரசியல்.

எச்சரிக்கை ஒலியை எழுப்புவதுதான் இந்த மாநாட்டினுடைய நோக்கம்

எனவேதான், இந்தக் கட்டத்தில் நாம் ஏமாந்தால், நம்முடைய அடுத்த தலைமுறை எவ்வளவு பெரிய ஆபத்தை சந்திக்கும் என்கிற எச்சரிக்கை ஒலியை எழுப்புவதுதான் இந்த மாநாட்டினுடைய நோக்கம்.

இத்தனை ஆண்டுகள் போராடியதும், காப்பாற்றி யதும் பெரிதல்ல. இந்தக் காலகட்டத்தில் நம்முடைய மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதும், ஒன்றிய அரசுக்கு நம்முடைய எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலிப்பதும்தான் காலத்தின் தேவை!

அந்தத் தேவையை நிறைவேற்றத்தான் இந்த மாநாடு என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள்  சிறப்புரை யாற்றினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:53 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அருள்மொழி, இந்தி எதிர்ப்பு, மாநாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ▼  ஜூன் (23)
      • விடுதலை' சந்தா சேர்ப்பில் சென்னை மண்டல திராவிடர் க...
      • தரமணி கோ.மஞ்சநாதன் படத்திறப்பு கழகத் துணைத் தலைவர்...
      • பா.வள்ளியம்மாள் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுநாளை யொ...
      • மதுரை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட...
      • மதுரை பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பா...
      • இந்தியில் உள்ள ஒரே இதிகாசம் துளசிதாஸ் இராமாயணமே! ப...
      • இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகு...
      • தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையி...
      • தென் சென்னை கடை வீதிப் பிரச்சாரம் - திருவல்லிக்கேணி
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் ...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாள...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிடர் இயக்கத் தமிழர...
      • தரமணி மஞ்சநாதன் மறைவு
      • இந்தி திணிப்பு - எதிர்ப்பு ஏன்?
      • நிஜப் புலியும் - வேஷம் போட்ட புலியும் - தலையங்கம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.த...
      • மகளிர்க்கு புத்துணர்வை தந்த பெண்ணியப் பயிலரங்கம்
      • எழுச்சியுடன் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டு முழக்கங்கள் - 4.6.2022
      • இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாடு
      • ஹிந்தி எதிர்ப்பு மாநாடு தீர்மானம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டுச் சிந்தனை கலாச்சாரப் படை ...
      • முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைக்குத் தமிழர் தலைவர் ம...
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.