தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

செவ்வாய், 14 ஜூன், 2022

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா சிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரை


இந்தி எதிர்ப்புப் போராட்டம் எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்படவில்லை; ஒத்தி வைக்கப்படுகிறது - மீண்டும் வரும் என்று நமக்குத் தெரியும்! 
   June 14, 2022 • Viduthalai

ஒத்தி வைக்கப்பட்ட அந்தப் போராட்டம் மறுபடியும் இப்போது 

நம்முடைய ஆசிரியர் அவர்களால் உயிர்பெற்று எழுகிறது  இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

சென்னை, ஜூன் 14  இந்தி எதிர்ப்புப் போராட்டம் எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட வில்லை; ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் வரும் என்று நமக்குத் தெரியும்; எனவே ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்தி வைக்கப்பட்ட அந்தப் போராட்டம் மறுபடியும் இப்போது நம்முடைய ஆசிரியர் அவர்களால் உயிர் பெற்று எழுகிறது என்பதை இந்த மாநாடு காட்டுகிறது என்றார்  திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.  

இந்தி எதிர்ப்பு மாநாடு

கடந்த 4.6.2022  அன்று மாலை    சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா சிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றி னார்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 

வரலாறு கூடுதலாக ஆகிவிடும்

காலம் கருதி மேடையில் இருக்கும் தலைவர்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைக்க இயல வில்லை. மன்னிக்கவேண்டும்.

தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.

இந்தி மிக அண்மைக்காலத்தில் தோன்றிய மொழி. போகிற போக்கைப் பார்த்தால், இந்தி மொழியின் வரலாற்றைவிட, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வர லாறு கூடுதலாக ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது.

நம்முடைய ஆசிரியர் அவர்களால் 

உயிர்பெற்று எழுகிறது!

இந்தி எதிர்ப்புப் போராட்டம் எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்படவில்லை; ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் வரும் என்று நமக்குத் தெரியும்; எனவே ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்தி வைக்கப்பட்ட அந்தப் போராட்டம் மறுபடியும் இப்போது நம்முடைய ஆசிரியர் அவர்களால் உயிர்பெற்று எழுகிறது என்பதை இந்த மாநாடு காட்டுகிறது.

எனக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்களில் ஓரிரு செய் தியை மட்டும் உங்களோடு நான் பகிர்ந்துகொள்கிறேன்.

சில நாள்களுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட அனுப வத்தை, இன்று காலை என் முகநூலில் பதிவு செய் திருக்கிறேன். உங்களில் சிலர் படித்திருப்பீர்கள். இல்லை யென்றாலும், அது மக்கள் எல்லோருக்கும் போயாக வேண்டும் என்பதால், அந்த அனுபவத்திலிருந்து என் உரையைத் தொடங்குகின்றேன்.

ஒரு வார காலத்திற்குள்ளாகத்தான்.

எனக்கு ஏற்பட்ட அனுபவம்!

சென்னையில் உள்ள ஒரு பெரிய ஒன்றிய அரசின் நிறுவனத்தில் நடைபெற்ற ஓர் அரசு விழாவில் உரையாற்றுவதற்காக நான் அழைக்கப்பட்டேன்.

அந்த விழா முடிந்து, மதிய உணவு - அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய அதிகாரியாக  - முதல் அதிகாரியாக இருக்கின்றவரும், நானும் மதிய உணவை எடுத்துக் கொண்டிருந்த வேளையில், இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தோம்.

என்ன வேடிக்கை என்றால், அவருக்குத் தமிழில் ஒரு சொல்கூட தெரியவில்லை.

எனக்கு இந்தியில் ஒரு சொல்கூட தெரியாது.

போனால் போகிறது, ஆங்கிலம் தெரியுமா? என்றால், அவருக்கும் என்னைப் போலவே அரைகுறையாகவே ஆங்கிலம் தெரிந்திருந்தது.

எங்களுக்குத் தெரிந்த அந்த ஆங்கிலத்தில் நாங்கள் உரையாடினோம்.

தமிழே தெரியாது என்கிறீர்களே, இப்போதுதான் பணிக்கு வந்திருக்கிறீர்களா? என்று கேட்டேன்.

பத்து மாதங்கள் ஆகிவிட்டன என்றார்.

பத்து மாதங்களில் ஏன் நீங்கள் தமிழைக் கற்றுக் கொள்ளவில்லை என்று  கேட்டேன்.

அவர் சொன்னார்,  ‘‘நான் எப்போது மாற்றல் ஆகிப் போகலாம் என்று காத்திருக்கிறேன்; நீங்கள் வேறு தமிழைக் கற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்’’ என்றார்.

அவர்  உத்தரப்பிரதேசத்துக்காரர்.

நீங்கள் சொந்த ஊருக்குப் போகவேண்டும் என்று முயற்சிக்கிறீர்களா? என்றேன்.

அதற்கு அவர் சொன்ன விடை முக்கியமானது.

இல்லை, ‘‘தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு அனுப்பினாலும் சம்மதம்’’  என்றார்.

ஏன் ‘‘தமிழ்நாட்டின்மீது உங்களுக்கு என்ன அவ்வளவு பெரிய கோபம்?’’ என்று கேட்டேன்.

‘‘கோபம் ஒன்றும் இல்லை.

இது நல்ல ஸ்டேட்தான் சார்; கிளைமேட் நன்றாக இருக்கிறது; மக்கள் எல்லோரும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், நான் மட்டுமல்ல, எங்களில் யாருமே தமிழ்நாட்டிற்கு வர விரும்புவதில்லை. அதற்கு இந்த மொழி ஒன்றுதான் காரணம்’’ என்றார்.

ஏன், மற்ற மாநிலங்களில் என்ன நிலை? என்றேன்.

அவர் சொன்னார், ‘‘இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு  எந்த மாநிலத்திற்கு நாங்கள் அனுப்பப் பட்டாலும், இந்தியை வைத்து எங்களால் நாட்களை நகர்த்திவிட முடியும். கண்டிப்பாக, ஒரு சிலராவது இந்தியை அறிந்திருப்பார்கள்.''

நான் கேட்டேன், கேரளாவில்...

‘‘அது கொஞ்சம் கஷ்டம் - ஆனாலும், தமிழ்நாடு அளவிற்கு இல்லை.

இந்தத் தமிழ்நாட்டில்தான், கடைவீதிக்குப் போனால், யாருக்கும் இந்தி தெரியவில்லை என்கிறார்கள். இந்தித் திரைப்படம் போடும் திரையரங்கிற்குப் போனால்,  அங்கே வேலை பார்க்கிறவர்களுக்கும் இந்தி தெரிய வில்லை. அலுவலகத்தில் யாருமே இந்தி பேச மறுக்கிறார்கள்.

எனவே, அலுவலகத்தில், வீடுகளில், கடைத்தெரு வில், திரையரங்கில் எங்குமே இந்தி தெரியாத ஒரு மாநிலம் இந்தியாவில் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடுதான்’’ என்று அவர் சொன்னார்.

என்னுடைய அரசியல் பின்புலம் தெரியாது

அவருக்கு நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் என்று மட்டுமே தெரியுமே தவிர, என்னுடைய அரசியல் பின்புலம் தெரியாது.

எனவே, அவர் மனம் விட்டுப் பேசினார்.

இங்கு யாருக்குமே இந்தி தெரியாது என்று சொன்னது ஓரளவிற்கு உண்மைதான். 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்திருக்கிற அண்ணாமலைக்கே இந்தி தெரியாது என்று அவரும் சொல்லியிருக்கிறார். அது அவரே சொன்னது.

அப்படியென்றால், அவர்களுக்குக் கோபம் வருமா? வராதா? 

யாரை அவர்கள் தலைவராக நியமித்திருக்கிறார் களோ, அவருக்கே இந்தி தெரியாது.

தமிழ்நாட்டில் சில சிக்கல்கள் அவர்களுக்கு எப்படி வருகிறது என்றால்,

அண்மையில் பிரதமர் அவர்களும், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் சேர்ந்து கலந்துகொண்ட கூட்டம். அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பெயரை சொன்னவுடன், அவ்வளவு பெரிய கைதட்டல் வந்தது. அவர்களுக்குக் கோபம் வந்தது.

ஆனால், அதற்கான உண்மையான காரணத்தைப் பலர் இன்னமும் அறியவில்லை.

முதலமைச்சர் பெயரை சொன்னவுடன் நம்மவர்கள் எல்லோரும் கைதட்டியதில் அவர்களுக்குக் கோபம் இல்லை. அவர்கள் அழைத்து வந்தவர்களும் சேர்ந்தே கைதட்டினார்கள் என்பதினால்தான் அவர்களுக்குக் கோபம்.

தங்களை மறந்து கைதட்டிவிட்டு, பிறகுதான் கைகட்டிக் கொண்டார்கள்

சிரமப்பட்டு அவர்கள் யாரையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்தார்களோ, அவர்களும் முதலமைச்சர் பெயரை சொன்னவுடன், தங்களை மறந்து கைதட்டி விட்டு, பிறகுதான் கைகட்டிக் கொண்டார்கள்.

அதுபோல, யாருக்கும் இந்தி தெரியாது என்றால், அண்ணாமலைக்கும் தெரியாது என்கிற வரைக்குமான இந்தத் தமிழ்நாட்டை விட்டுப் புறப்படவேண்டும் என்று சொல்கிறார்.

சரி, உங்கள் தாய்மொழி இந்தி தானே? என்று கேட்டேன்.

அவர் சொன்னார், என் தாய்மொழி பிரஜிபாஷா என்றார்.

அப்படி ஒரு மொழி இருப்பது நமக்குத் தெரியாது.

எதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றால், அதற்கு முன்பு அவர் சொன்ன ஒரு வரி, மிகமிக முதன்மையானது - எனக்கே கண்ணைத் திறந்த வரி என்று சொல்லவேண்டும்.

அவர் சொன்னார், இப்படி தமிழ்நாட்டில் யாருமே இந்தி தெரியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று என்னிடத்திலே சொன்னார்.

என்ன? என்று கேட்டேன்.

ஆங்கிலம் தெரிகிற வரையில் தமிழ்நாட்டுக்குள் இந்தி வர முடியாது

‘‘வேறொன்றுமில்லை; இங்கே தமிழ்நாட்டில் பரவலாக எல்லோருக்கும் ஓரளவிற்கு ஆங்கிலம் தெரிகிறது. ஆங்கிலம் தெரிகிற வரையில் இந்த நாட்டுக்குள் இந்தி வர முடியாது’’ என்று தெரிவித்தார்.

அவர் சொன்ன காரணம் பாருங்கள்,

ஆங்கிலம் எல்லோருக்கும் தெரிந்திருப்பதால், இந்தி தேவை என்று அவர்கள் கருதவில்லை. எப்போது ஆங்கிலம் போகிறதோ, அப்போதுதான் நாங்கள் உள்ளே வர முடியும் என்று சொன்னார்.

இது உங்களுக்கு இப்போது தெரிகிறது; எங்கள் அய்யாவிற்கு எப்போதே தெரிந்துவிட்டது.

அய்யாவிற்கும், அண்ணாவிற்கும், கலைஞருக்கும் எவ்வளவு தொலைநோக்குப் பார்வை இருந்திருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

தாய்மொழிதான் நமக்கு வாள்; 

ஆங்கிலம் நமக்குக் கேடயம்

ஆங்கிலம் என்பது நமக்கு ஒரு அரணாக இருக்கிறது; ஒரு கேடயமாக இருக்கிறது. தாய்மொழிதான் நமக்கு வாள்; ஆங்கிலம் நமக்குக் கேடயம்.

நமக்கு வாளும் வேண்டும்; கேடயமும் வேண்டும்.

ஆங்கிலத்தைப் புறக்கணித்துவிடக் கூடாது என் பதை அந்த அதிகாரியின் கூற்றிலிருந்து நான் தெளிவாக அறிந்துகொள்ளுகிறேன்.

சிலர் கேட்கிறார்கள், இரண்டும் அந்நிய மொழிகள் தானே?

இந்தி மொழியாவது இங்கிருந்து வந்த அந்நிய மொழி - ஆங்கிலம் எங்கிருந்தோ வந்த அந்நிய மொழி.

இரண்டு அந்நிய மொழிகளில் ஏன் இந்தியை எதிர்க் கிறீர்கள்; ஆங்கிலத்தை வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டுமே என்கிறீர்களே என்றால்,

வரலாற்றில் 300 ஆண்டுகளுக்குமுன்பே...

அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாற்றில் 300 ஆண்டுகளுக்குமுன்பே ஆங்கிலம் நம்மைத் தேர்ந்தெடுத்துவிட்டது.

அது ஆட்சியின்மூலமாக வந்தது.

இன்னொரு செய்தி என்னவென்றால், ஆங்கிலம் நமக்குப் பயன்படுகிறது; இந்தி நம்மை அடிமைப்படுத் துகிறது.

இரண்டிற்கும் இருக்கின்ற பெரிய வேறுபாடு - அருள் மொழி அவர்கள் சொன்னதுபோல,  இந்தி என்பது கங்காருகுட்டி முன்னால் வருகிறது; கங்காரு பின்னால் இருக்கிறது. சமஸ்கிருதம்தான் அவர்களுக்கு அடிப் படையான நோக்கம்.

ஆகையினாலே, ஆங்கிலம் நமக்குப் பயன்படுகிறது; இந்தி நம்மை அடிமைப்படுத்துகிறது.

எனவே, இரண்டு அந்நிய மொழிகளில் ஆங்கிலம் நமக்குக் கேடு செய்யவில்லை என்பது அடிப்படையான செய்தி.

உங்களுடைய தாய்மொழி எது? என்று கேட்ட பொழுது, பிரஜிபாஷா என்றார்.

உத்தரப்பிரதேசத்தில் 

இந்தி தாய் மொழி இல்லை

நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம், உத்தரப்பிர தேசத்தில் எல்லோருக்கும் இந்திதான் தாய்மொழி என்று.

இல்லை.

இந்தியினுடைய கிளை மொழி என்று அவர்கள் சொல்கிறார்கள்; வடமேற்குப் பகுதியில் வாழ்கின்ற மக்களில் மிகப்பெரும்பான்மையானவர்களுக்கு பிரஜி பாஷாதான் தாய்மொழி.

சரி, தென்மேற்கில் வாழ்கிறவர்களுக்கு, உத்தரப்பிர தேசத்தில் புத்தேல்கண்டி என்பதுதான் தாய்மொழி.

இப்படியெல்லாம் பெயர்களையே நாம் கேள்விப் பட்டு இருக்கமாட்டோம். மறைமலையடிகள் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். நான் சிறுவனாக இருக்கிறபொழுது, நம்முடைய நாவலர் பேசி நான் கேட்டிருக்கிறேன்.

தென்மேற்குப் பகுதியில் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறவர்களுக்கான தாய்மொழி புத்தேல்கண்டி.

சரி, வடகிழக்கில் போஜ்பூரி.

உத்தரப்பிரதேசத்திற்குப் பக்கத்தில் வந்தால், உத்தர காண்ட் இருக்கிறது. அங்கே அவர்கள் இந்தி, சமஸ் கிருதம் இரண்டையும் ஆட்சி மொழிகளாகவே அறிவித் திருக்கிறார்கள்.

உத்தரகாண்டிலே 

தாய்மொழி என்பது கட்டுவா!

ஆனால், அங்கே இந்தி தெரிந்தவன் குறைவு; சமஸ் கிருதம் தெரிந்தவன் கிடையாது. அவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு 76 சதவிகித மக் களுக்கு உத்தரகாண்டிலே தாய்மொழி என்பது கட்டுவா.

இந்த இந்தி என்ன செய்யும் என்றால், எல்லா தாய் மொழிகளையும் அழித்துவிடும்.

இன்றைக்கு கட்டுவா என்று இந்தியாவில் இருக் கிறவர்களுக்கே அப்படி ஒரு மொழி இருப்பது தெரியாது.

முத்தரசன் அவர்கள் பேசும்பொழுது சொன்னார், விகிதாசார அடிப்படையிலே சமஸ்கிருதத்திற்குப் பணம் ஒதுக்குங்கள் என்று.

5 கோடி பேர் பேசும் 

இராஜஸ்தானிய மொழி!

அப்படி ஒதுக்கினால், ஒன்றுமே மிஞ்சாது.

5 கோடி பேர் இராஜஸ்தானிய மொழி பேசுகிறார்கள். இன்றைக்குவரைக்கும் இராஜஸ்தானிய மொழி, எட்டாவது அட்டவணையில்கூட இடம்பெறவில்லை. 5 கோடி பேர் பேசுகிறமொழி, ஆனால், இன்னமும் ஒரு லட்சத்தைத் தொடாத சமஸ்கிருதத்திற்குக் கொட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கிற தொகை, நம்முடைய தீர்மானத்திலே படிக்கப்பட்டது 643 கோடி ரூபாய்.

அது செம்மொழி என்று  ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய அய்ந்து மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிற தொகைபோல, 29 மடங்கு அதிகம்.

இது என்ன ஜனநாயகம்? என்று நாம் கேட்கிறோம்.

இந்தி எதிர்ப்பைப் பொழுதுபோக்கிற்காக நாம் நடத்த வில்லை. இந்தி எதிர்ப்பு என்பது எதற்காக நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறோம்.

தமிழ்நாடு தன்னைப் பாதுகாத்துக் கொண்டது

உண்மையாகவே, தமிழ்நாடு மிக புத்திசாலித்தனமாக தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.

நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே, எங்களுக்குத் தாய்மொழி தமிழ். வெளியேற தொடர்புகொள்ள ஆங் கிலம் என்பதை மிகத் தெளிவாக முடிவெடுத்த காரணத் தினால்தான், இன்றைக்கு வரைக்கும் பொருளாதாரத்தில், சமூகநீதியில் முன்னேறி இருக்கிறது தமிழ்நாடு. அதைத் திராவிட மாடல் என்று சொன்னால், பலருக்கு வயிற் றெரிச்சலாக இருக்கிறது. அதுதான் திராவிட மாடல்.

வேறு என்ன? என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்றைக்குப் பிற மாநிலங்களில் இதை ஏற்றுக் கொள்ளுகிற நிலை வந்திருக்கிறது.

2015, ஜூலை மாதத்தில் ஒரு மிகப்பெரிய கலவரம் குஜராத்தில் நடைபெற்றது.

எதற்காக என்றால், பட்டேல் சமூகத்தினர், தங்களைப் பொதுப்பட்டியலிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நடத்தினார்கள். உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம்.

2015, ஜூலையில் தொடங்கிய அந்தப் போராட்டம், ஆகஸ்ட் 22 ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதிவரைக் கும் மிகப்பெரிய வன்முறைக் கிளர்ச்சியாக மாறியது.

குஜராத்தைச் சேர்ந்த சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர்

அப்போது, போலோபாய் பட்டேல் என்கிற சாகித்ய அகடாமி விருது பெற்ற குஜராத்தைச் சேர்ந்த எழுத் தாளர் சொன்னார்; அவரும் பட்டேல் சமூகத்தைச் சார்ந்தவர்தான்.

அவர் சொன்னார், ‘‘இந்தப் பட்டேல் சமூகத்தினர், பொருளாதாரத்தில் நாங்கள் வசதியாக இருக்கிறோம். எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், ஏன் நாங்கள் பின்தங்கிவிட்டோம்; எதற்காக எங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கச் சொல்லு கிறோம் என்று கேட்டால், ஒரு தவறு செய்துவிட்டோம் - இந்தியும்,  குஜராத்தியும்  போதும்   என்று   இருந்து விட்டோம். ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளாமல் விட்ட தால், எங்கள் சமூகம் பின்தங்கிவிட்டது’’ என்பது அவர் தந்த வாக்குமூலம்.

தகவல் தொடர்புத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறவர்கள் தமிழர்கள்தான்

இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம் - அயல்நாட்டிலே இருக்கிற கணிப்பொறித் துறை, தகவல் தொடர்புத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறவர்கள் தமிழர்கள்தான்.

முதலில் நம்முடைய பிள்ளைகள் - அவாள் இல்லை - நம்முடைய பிள்ளைகள்தான் இன்றைக்கும் வெளி நாடுகளில் முதலில் இருக்கிறார்கள். 

அவுட்சோர்சிங் என்ற சேவைத் துறையில், தகவல் நுட்பத் துறையில் வருகிற வருமானத்தில், 54.3 சதவிகிதம் இந்த சேவை துறையில் இருந்து வருகிறது - அவுட்சோர்சிங்கிலிருந்து வருகிறது.

அவுட்சோர்சிங்கில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்தால், முதலிடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தென்னிந்தியாதான் இரண்டாவது இடத்திலே இருக் கிறதே தவிர, வட இந்தியா பக்கத்திலேகூட இல்லை.

அதனால்தான் நீங்கள் எண்ணிப் பாருங்கள், பீகார் மக்கள் இந்தி தெரிந்தவர்கள்தானே?

ஏன் இந்தக் கரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்றார்கள்.

இந்தியும், பீகாரியும் தெரிந்த பீகார் மக்கள் வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்

அவர்களுக்காக நான் பரிவோடுதான் சொல்கிறேன், கட்டடக் கூலிகளாக இருக்கிறார்கள்; உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறும் இந்தியும், பீகாரியும் போதும் என்பதால், வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.

மிகச் சரியாக அய்யா பெரியார் அவர்கள் இதனை முன்னெடுத்தார்.

அவுட்சோர்சிங் என்பது நமக்குத் தெரியும். முன்பெல் லாம் நம்முடைய பெண் பிள்ளைகள் படிக்கவே கூடாது; பிறகு வேலைக்கே போகக்கூடாது. இப்பொழுது இரவு 9 மணிக்கு நம் வீட்டுப் பெண் பிள்ளைகள் வேலைக்குப் போகிறார்களா, இல்லையா?

ஏனென்றால், அமெரிக்காகாரன் அப்பொழுதுதான் விழித்திருப்பான். அவன் விழித்திருக்கும்பொழுதுதான், அவனுக்கான வேலையை நாம் செய்யவேண்டும். அவுட்சோர்சிங் துறையில் வேலை செய்வதற்கு ஆங் கிலம் தெரிந்தால் மட்டும் போதாது; அமெரிக்கர்களின் ஆங்கில ஒலிப்பு முறை தெரியவேண்டும்.

ஆங்கில ஒலிப்பு முறை நமக்குக் கற்றுக் கொடுத்த வர்கள் பிரிட்டிஷ்காரர்கள்; நமக்கு அமெரிக்கர்களின் ஆங்கில ஒலிப்பு முறை தெரியாது.

ஒருமுறை நான் அமெரிக்காவில் போய் இறங்கு கிறபொழுது,  விமான நிலைய அதிகாரிகளின் விசார ணையின்போது, எங்கே தங்கப் போகிறீர்கள்? எத்தனை நாள் தங்கப் போகிறீர்கள்? என்றுதான் கேட்கிறார்கள் என்று நானே ஒரு யூகம் செய்துகொண்டேன். அவர்கள் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை.

அதற்குப் பிறகு, அப்படித்தான் கேட்டிருப்பார்கள் என்று நான் கருதி, ஒரு அய்ந்து நிமிடம் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்  விடை சொல்கிற வரைக்கும் பொறுமையாக இருந்தார்.

நான் பேசியதை இங்கிலீசாகவே  மதிக்கவில்லை

அங்கே இருந்த ஒரு பெண்மணி என்னைப் பார்த்து கேட்டார், 

Could you please translate in to English என்று கேட்டார்கள்.

அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது, நான் பேசியதை இங்கிலீசாகவே  மதிக்கவில்லை என்று.

நான் இங்கிலீசில் பேசியதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

அமெரிக்கர்களின் ஆங்கில ஒலிப்பு முறை முற்றிலுமாக வேறுபட்டது, நம்மிடத்திலிருந்து.

அதையும் புரிந்துகொண்டுதான் நம்முடைய பிள்ளைகள், 54 சதவிகித வருவாயை இந்த நாட்டிற்கு ஈட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

அய்யா காட்டிய வழியில், அண்ணா என்ன செய்தார், 1968, ஜனவரி 23 ஆம் தேதி இதற்கென்றே தனியாக ஒரு சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி, தமிழ்நாட்டில் எந்தக் கொம்பன் வந்தாலும், இனிமேல் இருமொழிக் கொள்கை தான் என்பதை நிறைவேற்றினார்.

அய்யாவும், அண்ணாவும் தொடர்ந்ததை, கலைஞர் தொடர்ந்து எடுத்துச் சென்றார்.

திராவிடக் கொள்கையிலிருந்து ஜெயலலிதாவால்கூட விலகிட முடியாது

எங்கே நாம் வெற்றி பெற்றோம் என்றால், ஜெயலலி தாவால்கூட அதை மாற்ற முடியவில்லை என்பதில் வெற்றி பெற்றோம்.

ஆயிரம் பேசலாம், நான் யார் என்று அவர் சட்ட மன்றத்திலே சொல்லியிருக்கலாம். ஆனால், திராவிடக் கொள்கையிலிருந்து ஜெயலலிதாவால்கூட விலகிட முடியாது என்கிற இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியது எது என்றால், திராவிடர் கழகம் தொடங்கி வைத்த அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் - ஒத்தி வைத்த போராட்டம் மறுபடியும் தொடங்கியிருக்கிறது - தொடரும்.

வாய்ப்புக்கு நன்றி! வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:57 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இந்தி எதிர்ப்பு, சுபவீ, மாநாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ▼  ஜூன் (23)
      • விடுதலை' சந்தா சேர்ப்பில் சென்னை மண்டல திராவிடர் க...
      • தரமணி கோ.மஞ்சநாதன் படத்திறப்பு கழகத் துணைத் தலைவர்...
      • பா.வள்ளியம்மாள் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுநாளை யொ...
      • மதுரை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட...
      • மதுரை பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பா...
      • இந்தியில் உள்ள ஒரே இதிகாசம் துளசிதாஸ் இராமாயணமே! ப...
      • இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகு...
      • தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையி...
      • தென் சென்னை கடை வீதிப் பிரச்சாரம் - திருவல்லிக்கேணி
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் ...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாள...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிடர் இயக்கத் தமிழர...
      • தரமணி மஞ்சநாதன் மறைவு
      • இந்தி திணிப்பு - எதிர்ப்பு ஏன்?
      • நிஜப் புலியும் - வேஷம் போட்ட புலியும் - தலையங்கம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.த...
      • மகளிர்க்கு புத்துணர்வை தந்த பெண்ணியப் பயிலரங்கம்
      • எழுச்சியுடன் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டு முழக்கங்கள் - 4.6.2022
      • இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாடு
      • ஹிந்தி எதிர்ப்பு மாநாடு தீர்மானம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டுச் சிந்தனை கலாச்சாரப் படை ...
      • முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைக்குத் தமிழர் தலைவர் ம...
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.