தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

ஞாயிறு, 26 ஜூன், 2022

மதுரை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


ராமர் பாலம் என்று கூறி, மக்கள் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கக் கூடாது
 June 25, 2022 • Viduthalai

பத்தாம் வகுப்பில் தமிழில் 47 ஆயிரம் மாணவர்கள் தோல்வி  அதிர்ச்சிக்குரியது
''அக்னிபத்'' என்பது ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை இராணுவமயமாக்கும் திட்டமே!  உயர்நீதிமன்ற பதவிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை!
'திராவிட மாடல்' அரசை - கொச்சைப்படுத்தும் வட மாநில ஊடகங்களுக்குக் கண்டனம்!
60 ஆண்டு காலம் 'விடுதலை' ஆசிரியராக அரும்பணியாற்றி வரும் 
அருமைத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு 
60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்கள் வழங்கப்படும்!
மதுரை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


மதுரை, ஜூன் 25 88 ஆண்டுகால 'விடுதலை' ஏட்டுக்கு 60 ஆண்டுகாலம் ஆசிரியராக அரும்பணியாற்றிய ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 60 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டி அளிப்பது என்ற தீர்மானம் உள்பட எட்டு தீர்மானங்கள், திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் மதுரை நோட்புக் அரங்கில் இன்று (25.6.2022) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1  

இரங்கல் தீர்மானம்

பெரம்பலூர் மேனாள் மாவட்டக் கழகத் தலைவர் ஆறுமுகம் (மறைவு 26.02.2022 )குடந்தை. பி.மனோரஞ்சிதம் (வயது 65 மறைவு 2.3.2022) நெய்வேலி இரா.கோபாலகிருஷ்ணன் (மறைவு 4.3.2022)  லால்குடி த.செல்வம் (வயது 60 மறைவு 18.3.2022) மன்னை ச.செந்தில் (மறைவு 18.3.2022) தருமபுரி ரத்தினம்மாள் (மறைவு 22.3.2022) தஞ்சாவூர் இரா.மருதாம்பாள் (மறைவு 30.3.2022) திருவையாறு கவுசல்யா, (மறைவு 2.4.2022)   புதுவை தட்சணாமூர்த்தி (மறைவு 10.4.2022) வாஷிங்டன் மு.பரமசிவம் (மறைவு 11.4.2022) காரைக்குடி லெ.நாராயணசாமி (மறைவு 16.4.2022)  மேனாள் கிருட்டினகிரி மாவட்டக் கழகத் தலைவர் ஒசூர் துக்காராம் (மறைவு 20.4.2022)  திருவையாறு வெ.அரங்கசாமி (உடற்கொடை) (வயது 82 மறைவு 29.4.2022) சாந்தா (வயது 74 மறைவு 30.4.2022) ஆவடி ஜி.சுப்பிரமணியம் (எ) மல்ல மணிமாறன் (மறைவு 2.5.2022) மயிலாடுதுறை பேராசிரியர் ஏ.சுப்பையா, (வயது 101 மறைவு 4.5.2022) சேலம் சி.தனபால் (வயது 82 மறைவு 5.5.2022) அருப்புக்கோட்டை ச.அண்ணாதுரை (வயது 76 மறைவு 5.5.2022) தருமபுரி மா.கிருஷ்ணன் (மறைவு 5.5.2022) திருச்சி ஆர்.சுமதி (வயது 66 மறைவு 10.5.2022), திருவண்ணாமலை ஜெ.மணி (வயது 72 மறைவு 14.5.2022) சேலம் செல்வி (வயது 56 மறைவு 15.5.2022), அரியலூர், கருக்கை கார்மேகம் (வயது 45 மறைவு), புதுக்கோட்டை அ.சேக்கப் (வயது 79 மறைவு 3.6.2022) கிருட்டினகிரி சின்னப்பிள்ளை அம்மாள் (மறைவு 7.6.2022), திருவண்ணாமலை கு.பச்சையப்பன் (வயது 88 மறைவு 10.6.2022) சென்னை - தரமணி கோ.மஞ்சுநாதன் (வயது 65 மறைவு 13.6.2022) நல்லாத்தூர் நா.சு.தமிழ்ச் செல்வன் (மறைவு 14.6.2022) மதுரை வே.ராஜாம்பாள் (மறைவு 15.6.2022) திருப்பத்தூர் கமலாம்மாள் ராஜசேகரன் (வயது 102 மறைவு 16.6.2022) சிவகங்கை பெரி.பெருமாள் (வயது 86 மறைவு 17.6.2022) மலேசியா ச.வடிவேலு (பி.ஜே.கே.) (வயது 84 மறைவு 19.6.2022) ஆகியோரின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இவர்களின் பிரி வால் வருந்தும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் களுக்கும் நண்பர்களுக்கும் இப்பொதுக்குழு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த இயக்க வீரர்களுக்கு இப்பொதுக்குழு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறது.

தீர்மானம் எண்: 2

‘விடுதலை’ ஆசிரியராக 60 ஆண்டுகள் பணியாற்றி வரும் தலைவருக்கு  60 ஆயிரம் சந்தாக்கள் அளித்தல்!

திராவிடர்களின் போர் வாளாம் 88 ஆண்டு காணும் ‘விடுதலை’ ஏட்டுக்கு 60 ஆண்டு காலம் ஆசிரியர் என்னும் ஒப்பற்ற வரலாறு படைத்து வரும் - 4 பக்கங்களாக ஒரே வண்ணத்தில் வெளிவந்த ‘விடுதலை’ ஏட்டை 8 பக்கங்களாகப் பல வண்ணங்களில் கருத்துக்கும், கண்களுக்கும் விருந்தாக வும், சென்னையிலிருந்து மட்டும் வெளிவந்த ‘விடுதலை’ ஏட்டை இரண்டாம் பதிப்பாக திருச்சிராப்பள்ளியிலிருந்தும் வெளிவரச் செய்த வகையிலும், ஈடு இணையற்ற சாதனைக்கு உரியவருமான நமது போற்றுதலுக்குரிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குத் தனது முழு மனமும், மணமும் கமழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தலைதாழ்ந்த நன்றியையும் இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

கரோனா என்னும் கடும் தொற்று நோய் நாட்டைப் பெரும் அலைக்கழிப்புக்கும், பேரச்சத்திற்கும் உள்ளாக்கிய நெருக்கடி யான நிலையிலும்கூட, ‘விடுதலை’ ஏட்டின் அச்சுப் பதிப்பை ஒரு நாள் கூட நிறுத்தாமல் இணையத்தின் (றிஞிதி) வாயிலாக வும் இன்னும் இலட்சக்கணக்கானோர் படிக்கும்படி விரிவு படுத்தி நடத்திக் காட்டியவர் நமது ஆசிரியர் ஆவார்.

‘விடுதலை’ ஆசிரியராக ‘விடுதலை’ ஆசிரியருக்கான நாற்காலியில், தோளை அழுத்திப் பிடித்து பாசத்துடன் நமது ஆசிரியர் அவர்களை அமர வைத்தவர் தந்தை பெரியார்! இது வேறு எவருக்கும் கிடைக்கப் பெறாத பெரும் பேறாகும். அதோடு மட்டுமல்ல - ‘விடுதலை’யை வீரமணியின் ஏக போகத்தில் ஒப்படைக்கிறேன் என்று தந்தை பெரியார், 6.6.1964 நாளிட்ட ‘விடுதலை’யில் எழுதியதும் சாதாரண மானதல்ல.

தந்தை பெரியார் கணிப்புப் பொய்க்கவில்லை; அவர் எதிர்பார்ப்பையும் விஞ்சிய அளவுக்கு, ‘விடுதலை’யைத் தன் சுவாசமாகக் கொண்டு நாளும் உழைக்கும் ஆசிரியரின் 60 ஆண்டு ‘விடுதலை’ப் பணிக்குப் பாராட்டு - நன்றி என்கிற வகையில் 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களை, அவரைப் பெருமகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் அளவுக்கு திரட்டிக் கொடுப்பது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

ஆசிரியரின் 50ஆம் ஆண்டு ‘விடுதலை’ப் பணிக்கு 50 ஆயிரம் சந்தாக்களைத் திரட்டிக் கொடுத்த நாம், இதனையும் சாதித்துக் காட்டுவோம் என்ற உறுதியோடு, ஜூலை மாதம் முழுவதும் - வேறு எந்தப் பணியையும் ஒதுக்கி வைத்து,  இலக்காக இப்பெரும் பணியை முடிப்பது என்று இப் பொதுக்குழு உறுதி செய்கிறது.

“நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்ற நமது தலைவரின் அருமொழியை அவரை மய்யப்படுத்தும் இந்த முயற்சியிலும் உறுதியாக நிறைவேற்றுவோம் என்றும் இப்பொதுக்குழு மிகுந்த மன உறுதியோடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண்: 3

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது 1860ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகின்றது. அவ்வப்போது பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.

சுதந்திர இந்திய நாட்டில்கூட 5 திட்டங்கள் பரிந்துரைக் கப்பட்டன. நாடாளுமன்றத்தில் அண்ணா முதல் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் பலரும் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்கள் இது தொடர்பான ஒன்றிய அமைச்சராக இருந்த போது இத்திட்டத்திற்குப் புத்துயிர் கிடைத்தது.

ஆனாலும், ராமன் பாலம் என்ற பொய்யான ஒன்றைக் கூறி, பார்ப்பன சக்திகள் முட்டுக்கட்டை போட்டன. உச்சநீதி மன்றம் வரை சென்று தடை பெற்ற நிலையில் - தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான இத்திட்டம் செயல்படா நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

ராமராஜ்யம் அமைக்கப் போகிறோம் என்று கூறுவோரின் ஆட்சி வந்த நிலையில், இந்தத் திட்டம் முற்றிலும் முடக்கப் பட்டுவிட்டது.

மக்கள் வளர்ச்சித் திட்டம் ஒன்று - மதக் காரணம் காட்டி முடக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கதும், வெட்கப்படத் தக்கதுமாகும்.

இத்திட்டத்தால் பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டுக்கு - குறிப்பாக தென் மாநிலப் பகுதிக்குப் பெரும் பலன் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறி இருந்தும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்தக் கால்வாயால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடல் பகுதிகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம் 424 கடல் மைல் அளவுக்குக் குறையும். இதன் மூலம் கிட்டத்தட்ட 25 முதல் 30 மணி நேரப் பயணம் மிச்சமாகும். வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்குப் பதில், நேரடியாக இந்தியக் கடல் எல்லை வழியாகவே இந்தியத் துறைமுகங்களுக்கு வர முடியும். இதனால் வெளிநாட்டுக் கப்பல் போக்குவரத்தும் அதிகரிக்கும். இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரைக்கும், கிழக்குக் கரையில்  இருந்து மேற்குக் கரைக்கும் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், இலங்கை அரசுக்கு ஏராளமான தொகையை நுழைவுக் கட்டணமாகவும், வாட கைக் கட்டணமாகவும் செலுத்த வேண்டியுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது இனிமேல் தேவையிருக்காது.

மேலும் அரபிக் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல், இந்தியப் பெருங்கடலில் இருந்து அரபிக் கடலை அடைய வேண்டிய வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றாமல் இந்தியக் கடல் பகுதி வழியாகவே செல்லும். இதனால் இந்தியத் துறைமுகங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பலன்கள் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் பெரும் அளவில் உருவாகும். ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட் டினம் உள்ளிட்ட சிறு துறைமுக நகரங்கள் பெரும் அபி விருத்தி அடையும்.

தூத்துக்குடி துறைமுகம் மிகப் பெரும் துறைமுகமாக மாறும் வாய்ப்பு உள்ளது. ராமேஸ்வரம் துறைமுகமும் வளர்ச்சி பெறும். இதனால் தமிழ்நாட்டில் கடல் சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். மீன்பிடி தொழிலும் பெரும் வளர்ச்சி காணும். மொத்தத்தில், சேது சமுத்திரத் திட்டத்தால் இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் மிகவும் ஏற்ற மடையும்; வர்த்தகம் பெருகும்.

இத்தகையதோர் அரும்பெரும் திட்டத்தை - பொருளா தாரத்தையும், வேலைவாய்ப்பையும் மேம்படுத்தும் திட்டத் தைச் செயல்படுத்துவதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் பெருமளவு ஒன்றிய அரசை வற்புறுத்தி செயல்படுத்தச் செய்திட ஆவன செய்யுமாறு திராவிடர் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 4

பத்தாம் வகுப்புத் தேர்வில் -தமிழ்த் தேர்வில் மாணவர்களின் பெருந்தோல்வி மீது ஆய்வு தேவை !

நடந்து முடிந்த 10ஆம் வகுப்புத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் தமிழ்த் தேர்வில் தோல்வியுற்றனர் என்கிற தகவல் பெரிதும் அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிக்கிறது. இதற்கான காரணத்தின் மீது உரிய ஆய்வு ஒன்றினை நடத்து மாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால் பண்பாட்டு நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையோடு இப்பிரச்சி னையை திராவிடர் கழகப் பொதுக்குழு அணுகுகிறது.

தேவையான எண்ணிக்கையில் தமிழாசிரியர்களை நியமித்து, இக்குறைபாட்டைச் சரிசெய்ய ஆவன செய்யுமாறு, தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5

‘திராவிட மாடல்’ அரசைப் பற்றி அவதூறுப் பிரச்சாரத்துக்குக் கண்டனம்!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு வட இந்திய ஊடகங்கள் தொடர்ந்து திட்டமிட்டு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியை மோசமான ஆட்சி என்று - வட இந்தியா வில் முக்கியமாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களின் மக்களிடையே வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் “ஹிந்து விரோதக் கட்சியின் ஆட்சி - ஹிந்துக் கோவில்களுக்கு கூடுதல் மின் கட்டணம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர். சுதர்ஷன் செய்தித் தொலைக்காட்சி இதில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தத் தொலைக்காட்சியின் உண்மையான உரிமையாளர் சாமியார் ஆதித்யநாத் ஆவார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது தொடர்ந்து மத விரோதச் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வரக் கூடியதாகும்.

தமிழ்நாட்டு ஆட்சியாளரான ஹிந்து விரோதி ஸ்டாலின் அரசினர் - மசூதிகளிலும், தேவாலயங்களிலும் யூனிட்டிற்கு ரூ. 2.15 வசூல் செய்கின்றனர் என்று செய்தி வெளியிட்டார். இந்தச் செய்தியை, இவர்களது அலை வரிசையிலிருந்து பெறப்பட்டது என்ற குறிப்போடு வடக்கே பிரபல செய்தித் தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

வட இந்திய மக்களிடையே தமிழ்நாடு அரசு குறித்து மோசமான சிந்தனையை விதைத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு இதனைத் தடுக்காவிட்டால் இவர்கள் தொடர்ந்து இதுபோன்ற போலிச் செய்திகளை வெளியிட்டு, தமிழ்நாட் டிற்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

நாகரிகம், ஒழுக்கம், நேர்மை இல்லாத கட்சி  என்று ஒன்று உலகில் இருக்கிறது என்றால், அது சங்பரிவாரும், அதன் அரசியல் வடிவமான பிஜேபியும்தான்.

இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் என்னும் நற்பெயரைச் சிதைப்பதுதான் இவர்களின் நோக்கமாகும்.

எங்கும் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்னும் சொற்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்து உள்ள நிலையில், இந்தச் சொல் லாட்சியானது, பார்ப்பன சக்திகளின் வயிற்றைப் பெரிதும் கலக்க ஆரம்பித்து விட்டது. இதன் தாக்கம் வெளிமாநிலங் களிலும் பரவி விடும் என்கிற பயம் அவர்களை உலுக்குகிறது.

இந்தக் கட்டத்திலேயே தமிழ்நாடு அரசு இதில் தலை யிட்டு, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் எண்: 6

‘அக்னி பத்’ திட்டம் நாட்டுப் பாதுகாப்புக்காக அல்ல; ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை இராணுவமயமாக்கும் திட்டமே!

நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய அரசு இப் பொழுது கொண்டு வரும் “அக்னிபத் திட்டம்” குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, முன்னாள் இராணுவ அதிகாரி களே கவலையுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

“அக்னிபத் திட்டத்தின்”கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியமர்த்தப்படுவார்கள் என்ற ஒன்றிய அரசின் திட்டம் நாடு முழுவதும் குறிப்பாக பிகார், உத்தரப்பிரதேசம் முதலிய மாநில இளைஞர்களிடையே கடும் கொந்தளிப்பைக் கிளப்பி யுள்ளது. இரயில்கள் கொளுத்தப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து. இவை அனைத்துமே இராணு வத்தில் சேர விருப்பம் கொண்டு தேர்வு எழுதி இன்னும் பணி கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களின் தன்னிச்சை யான போராட்டமாகும்.

அக்னிபத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் சுமார் 45,000 முதல் 50,000 வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் பெரும்பாலானோர் நான்கு ஆண்டுகளில் சேவையை விட்டு வெளியேற்றப்படுவார்கள். மொத்த வருடாந்திர ஆள் சேர்ப்புகளில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரமாக 15 ஆண்டுகளுக்கு தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்கிறது மோடி அரசு.

வெளியேற்றப்படும் இளைஞர்கள், பட்டப்படிப்பைத் தொடர முடியாமலும், இராணுவப் பணியில் தொடர முடி யாமலும் வேலைவாய்ப்பைத் தேடும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே, இராணுவத்தில் 15 ஆண்டு கள் பணியாற்றி வெளிவந்துள்ள முன்னாள் இராணுவ வீரர்களுக்கே உரிய வேலைவாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் நான்காண்டு முடித்தவர்களுக்கு வேலை தரப்படும் என்ற அரசின் உறுதியெல்லாம் காற்றோடு கலந்து செல்லும் என்பதுதான் யதார்த்தம்.

பா.ஜ.க. அலுவலகத்தில் பாதுகாப்பு வேலைகளில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார் பா.ஜ.க. பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா. அக்னி வீரர் களுக்கு ஓட்டுநர்கள், எலக்ட்ரீசியன்கள், துவைப்பது (வாஷிங்), முடிதிருத்துவது போன்ற தொழில்களுக்கான பயிற்சிகள் கிடைக்கும் என்கிறார் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி.

அக்னி பாத் திட்டம் என்பது பா.ஜ. கட்சிக்கும்,ஆர்.எஸ்.எஸ். சங்கத்திற்கும் எதிர்காலப் பயன்பாட்டிற்காக ஓர் அரை இராணுவப் படையை சட்டபூர்வமாக உருவாக்கு வதே ஒழிய, வேறொன்றுமில்லை. கொம்பு மற்றும் வாள்களால் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பயிற்சி பெற்றவர்கள் இப்போது மக்கள் வரிப் பணத்தில் ஆயுதப் படையிடமிருந்து உயர்மட்ட ஆயுதப் பயிற்சியைப் பெறப் போகிறார்கள் என இராணு வத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி கூறியதைப் புறம் தள்ள முடியாது. ஜெர்மனியில் அடால்ப் ஹிட்லரும் இத்தகைய முறையைத்தான் கையாண்டார்.

இராணுவத்தில் அதிகாரி பதவிகளுக்குக் கீழ் உயர்ஜாதி பார்ப்பனர்கள் ஒருவரும் சேர்வது கிடையாது. ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள்தான் சேருவதற்கு ஆர்வமாகப் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கான 15 ஆண்டுகால பணி, ஓய்வுத் தொகைத் (பென்ஷன்) திட்டம் அனைத்தையும் ஒழித்துக் கட்டி, பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு நான் காண்டு காலப்பணி, முடிந்தவுடன் ரொக்கமாக சில லட்சம் என்ற தேன் தடவிய விஷ உருண்டையைக் கொடுக்கும் நிலைதான் இது. ஒன்றிய பா.ஜ.க. அரசு, சமூகத்தில் மத வெறுப்பைத் தூண்டி அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் சதியை இளைஞர்கள் உணர்ந்து எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும் எனத் திராவிடர் கழகப் பொதுக்குழு இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறது. இராணுவப் பயிற்சி பெறும் இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கி, தங்களின் மதவாத அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கமும் இதற்குள் இருக்கிறது என்பதைப் புறக்கணிக்க முடியாது.

அனைத்து மதச்சார்பற்ற அமைப்புகளும் இணைந்து நாட்டு ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திட வேண்டியதும் அவசியம் என்று இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

தீர்மானம் எண்: 7

கடந்த காலக் கழகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுதல்!

கடந்த காலங்களில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, வழக்குரைஞர் அணி, தொழிலாளர் அணி, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திட்டமிட்ட வகையில் இலக்குகளை வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8

உயர்நீதிமன்ற பதவிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75; தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 55. இதில் 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் என்பது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் மிகப்பெரிய அநீதியாகும். 3 சதவீத பார்ப் பனர்கள் அனுபவிக்கும் வாய்ப்பு - ஆதிக்கம் 22 விழுக் காடாகும். இந்நிலையில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவி களுக்குப் பார்ப்பனர்களை நியமனம் செய்திடாமல், வாய்ப்புக் கிடைத்திராத பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே நீதிபதிகளாக நியமனம் செய்திட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தொடர்ந்து பார்ப்பனர்களையே நியமிப்பதைத் தவிர்க்குமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:17 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தீர்மானம், பொதுக்குழு, மதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ▼  ஜூன் (23)
      • விடுதலை' சந்தா சேர்ப்பில் சென்னை மண்டல திராவிடர் க...
      • தரமணி கோ.மஞ்சநாதன் படத்திறப்பு கழகத் துணைத் தலைவர்...
      • பா.வள்ளியம்மாள் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுநாளை யொ...
      • மதுரை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட...
      • மதுரை பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பா...
      • இந்தியில் உள்ள ஒரே இதிகாசம் துளசிதாஸ் இராமாயணமே! ப...
      • இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகு...
      • தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையி...
      • தென் சென்னை கடை வீதிப் பிரச்சாரம் - திருவல்லிக்கேணி
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் ...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாள...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிடர் இயக்கத் தமிழர...
      • தரமணி மஞ்சநாதன் மறைவு
      • இந்தி திணிப்பு - எதிர்ப்பு ஏன்?
      • நிஜப் புலியும் - வேஷம் போட்ட புலியும் - தலையங்கம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.த...
      • மகளிர்க்கு புத்துணர்வை தந்த பெண்ணியப் பயிலரங்கம்
      • எழுச்சியுடன் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டு முழக்கங்கள் - 4.6.2022
      • இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாடு
      • ஹிந்தி எதிர்ப்பு மாநாடு தீர்மானம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டுச் சிந்தனை கலாச்சாரப் படை ...
      • முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைக்குத் தமிழர் தலைவர் ம...
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.