தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu

செவ்வாய், 14 ஜூன், 2022

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை உரை


இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ''தேசிய மொழி'' என்ற ஒன்று இருக்கிறதா? அதிகம் பேர் பேசும் மொழி இந்தி என்பதே சுத்தப் புரட்டு!
   June 06, 2022 • Viduthalai

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை உரை

சென்னை, ஜூன் 6  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தேசிய மொழி என்று எங்கும் குறிப்பிடப்படவே இல்லை. பெரும்பான்மை யினர் பேசும் மொழி இந்தி என்று சொல்லப்படுவதும் பொய் - இந்தி எதிர்ப்புத் தீயை அணைய விடோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 4.6.2022 அன்று மாலை சென்னை சைதாப்பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.

அவரது தலைமையுரை வருமாறு:

தலைமை உரை என்ற இந்நிகழ்வு சடங்குபோல, சம்பிரதாயம்போல நடத்தவேண்டிய ஒரு நிகழ்வாக, எனக்கு முன்பு உரையாற்றிய அத்தனை அறிஞர் பெரு மக்களும், இந்நிகழ்வை அருமையாக ஆக்கியிருக் கிறார்கள்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சற்று முன்பாக உரையாற்றிய நம்முடைய மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாசற்ற மா.சு.,

அதேபோல, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர் பாளராக இருக்கக்கூடியவரும், சுயமரியாதை வீரருமான டி.கே.எஸ்.இளங்கோவன்,

மூன்றாவது குழலாக எப்பொழுதும் வெடித்துக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய சகோதரர் தொல்.திருமாவளவன்,

திராவிட இயக்கத்தின் போர் வாளாக இருக்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செய லாளர் சகோதரர் வைகோ,

வரவேற்புரையாற்றிய தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வநாதன்,

நன்றியுரையாற்றவிருக்கக்கூடிய செ.ர.பார்த்தசாரதி,

தீர்மானங்களை அருமையாக வடிவமைத்து இங்கே முன்மொழிந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் அன்புராஜ், பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகிய அனைத்துத் தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே மாதிரியான குண்டுகள்

இங்கே உரையாற்றிய அறிஞர் பெருமக்களு டைய உரை என்பது வரலாற்றுப் பெருமைமிக்க உரையாக இருந்தன. அதிலும் குறிப்பாக பல கருத்துகள், நான் எதை வலியுறுத்தவேண்டும் என்று நினைத்துக் கொண் டிருந்தேனோ, அதனை எழுச்சித் தமிழர் அவர்கள் சிறப்பாக செய்தார்கள்.

இந்தக் குழலிலிருந்து குண்டுகள் வெடித்தாலும், ஒரே மாதிரியாகத்தான் வெடிக்குமே தவிர, வேறு விதமாக இருக்காது என்பதற்கு அடையாளமாக, யாருக்கு என்ன சொல்லவேண்டுமோ, அதனைச் சொன்னார். இறுதியில் வந்தாலும், முத்தாய்ப்பாக அழகாகச் சொன்னார்.

எனவே, இந்த மேடையில், சமஸ்கிருத ஆதிக்கம் என்பது எவ்வளவு கொடுமையானது என்று கொஞ்ச நேரம் கேட்பதற்கே சங்கடமாக இருந்தது. அதை இங்கே அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

ஹிந்தித் திணிப்பு என்பதை மய்யப்படுத்தி சொல்ல வேண்டுமானால், இது வெறும் மொழித் திணிப்புப் பிரச்சினையல்ல.

மொழித் திணிப்பு - ஒரு பண்பாட்டுத் திணிப்பே!

ஒரு மொழியைத் திணிக்கலாமா? வேண்டாமா? என்கிற பிரச்சினையல்ல. ஒரு பண்பாட்டுப் படை யெடுப்பு. அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை - மூளைக்குப் போட்ட விலங்கை - இங்கே சகோதரர் அவர்கள் சொன்னதைப்போல, அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, நண்பர்கள் சுட்டிக்காட்டி யதைப்போல, எந்த அளவிற்கு வந்தது?

இந்த இயக்கம் மட்டும் இல்லையானால், திராவிடர் இயக்கம் இல்லையானால், தந்தை பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், இந்த இயக்கமும், திராவிட மாடல் ஆட்சியும் இல்லையானால், இந்த நேரத்தில் நம்முடைய வாயிலிருந்து வணக்கம் என்கிற வார்த்தை வருமா? 

தகுதிமிக்க தலைவர் அவர்களே என்று சொல்கி றோமே, அந்த சொல் வருமா?

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? என்று கேட் கின்ற அரைவேக்காடுகளுக்கு அற்புதமாக ஆணி அடித்தது போன்று பதில் சொன்னார்; வாயே திறக்கக் கூடாது அவர்கள்; அந்த அளவிற்கு, நாக்கில் ஆணி அடித்தது போன்று பதில் சொல்லிவிட்டார் மிகத் தெளிவாக.

மகாராஜ, மகாராஜ ராஜஸ்ரீ என்பார்கள் -

முன்பெல்லாம் கடிதம் எழுதினால், சிரஞ்சீவி என்பார்கள்-

சிரம் என்றால் தலை; சீவுவது என்றால், வெட்டுவது.

சிரஞ்சீவி என்றால், தலையை வெட்டுவது என்று அர்த்தம்.

இன்றைக்குத்தானே ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது வணக்கம் என்று சொல்கிறோம்.

ஆரியர் -திராவிடர் என்பதற்கு விளக்கம் சொன்னார்கள்.

ஆரியம் - திராவிடம் என்பது ரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பதல்ல.

ஆரியம் - திராவிடம் என்பது வெறும் இனத் தினுடைய அடையாளம் அல்ல.

தத்துவத்தின் அடையாளங்கள் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

வணக்கம் என்பது திராவிடம்

நமஸ்காரம் என்பது ஆரியம்.

வருணாசிரம தர்மம், ஜாதி, பூணூல் - முதுகிலே பூணூல் போட்டால், அது ஆரியம்.

வெறும் முதுகாக இருந்தால், அதுதான் திராவிடம்.

சிலர் நம்மாட்களே பூணூல் போட்டுக் கொண்டி ருக்கிறார்கள் என்றால், அது சூடு போட்டுக் கொள்வது போன்றது; அந்தப் பூணூலுக்கு எந்த மரியாதையும் கிடையாது - போலியானது; செல்லாத நாணயம் போன்றது - கவுண்டர் பிட் காயின் போன்றதுதான்.

மிகப்பெரிய அளவில், இன்றைக்கு வந்திருக்கின்ற பல செய்திகளுக்கு அற்புதமான விளக்கமாக இந்த மாநாடு இருந்தது.

ஒரு செய்தியை சொன்னார்கள் - இந்தி மெஜாரிட்டி, மெஜாரிட்டி  என்பதுபற்றி அழகாக சுப.வீ. அவர்கள் சொன்னார்கள்.

இந்தி பேசுபவர்களிலேயே பல பிரிவுகள் இருக்கிறார்கள் என்பதை அவர் சொன்னார்.

12 மாநிலங்களில் மட்டும்தான் இந்தி!

ஒரு செய்தியை உங்கள் கவனத்திற்குச் சொல்கிறேன்.

என்னுடைய கையில் இருப்பது கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி ஒரு செய்தியைப்பற்றி ஆய்வுக் கட்டுரை வந்திருக்கிறது.

அந்தச் செய்தியின் தலைப்பு என்ன தெரியுமா?

Is Hindi or English beneficial as the link language?

இணைப்பு மொழியாக இந்திதான் இருக்கவேண்டும்; ஆங்கிலத்தை எடுத்துவிடவேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா சொன்ன வுடன்,

ஓர் ஆய்வில் அதற்குப் பதில் சொல்கிறார்கள்:

Residents of only 12 of the 35 States and Union Territories (UTs) reported Hindi as their first choice of language for communication (Census 2011). But there is a caveat. “Hindi” is an umbrella term encompassing 56 languages (mother tongues) including Bhojpuri, Rajasthani, Hindi and Chhattisgarhi. While 43% of Indians speak “Hindi”, only 26% speak Hindi specifically as their mother tongue.

இதன் மொழியாக்கம் வருமாறு:

35 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இருக் கின்றன. இவற்றை இணைத்ததில், உங்களுக்கு எது இணைப்பு மொழி என்றால், இந்திதான் இணைப்பு மொழி என்று வெறும் 12 மாநிலங்களில்தான் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

இதை அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் கேட்டார். அண்ணா அவர்களுக்கு நேரம் ஆயிற்று என்று  அன்று சபாநாயகராக இருந்த அம்மையார் அவர்கள், மணியை அடித்தார்கள்.

மாநிலங்களவையில் அண்ணா

உடனே அண்ணாவின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்கிற வேறுபாடில்லாமல், அண்ணா அவர்களுக்கு நேரம் கொடுங்கள்; அவர் பேசட்டும்; அவருடைய உரையை நாங்கள் கேட்கவேண்டும் என்று சொன்னார்கள்.

நேரமாயிற்றே என்று சபாநாயகர் அம்மையாராக இருந்தவர் சொன்னார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களையே அண்ணா அவர்கள் அவ்வளவு ஈர்த்துவிட்டார்; எங்கள் நேரத்தை அண்ணா அவர்களுக்குக் கொடுக்கிறோம். அவரைப் பேச அனுமதியுங்கள்,  அனுமதியுங்கள் என்று சொன்னார்.

அங்கே அண்ணா அவர்கள் உரையாற்றும்பொழுது ஓர் ஆழமான கருத்தைச் சொன்னார்.

இந்தி மொழியை 42 சதவிகிதத்தினர் பேசுகிறார்கள் மெஜாரிட்டியாகப் பேசுகிறார்கள் என்று காட்டியிருக் கிறார்கள். அந்த மெஜாரிட்டி உண்மையான மெஜாரிட் டியா? என்று கேள்வி கேட்டுவிட்டு சொன்னார்,

மூன்று மாநிலத்தில் உள்ளவர்கள்  எல்லோருடைய பெயரையும் சேர்த்து இந்தி பேசுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்.

இந்தி மொழி பேசுவோர் 

வெறும் 26 விழுக்காடுதான்!

அமித்ஷா சொல்வது எவ்வளவு பொருத்த மில்லாதது - அவருடைய துறையின் அறிக்கை யைக்கூட படிக்காத, பொறுப்பற்ற அமைச்சராக அமித்ஷா நடந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளம் இந்த செய்தியாகும்.

வெறும் 26 சதவிகிதம்தான் இந்தி மொழியைப் பேசக்கூடியவர்கள். 

எனவே, இந்தி மொழி பேசுபவர்களின் மெஜாரிட்டி இருக்கிறது என்கிற வாதமும், பொய் யான வாதமாகும்.

நம்மூரில் இருக்கின்ற அண்ணாமலை போன்றவர்கள், விஷயம் தெரியாதவர்கள் சொல்கிற வாதம் என்ன வென்றால், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் - இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

அதற்கு நம்முடைய அமைச்சர் பொன்முடி அவர்கள் அழகாக சொன்னார்,

இந்தி படித்தால் என்னாகும் என்றால், இங்கே வந்து பானி பூரிதான் விற்கவேண்டும்.

இந்தி படித்தவர்களுக்கு நாம்தான் வேலை கொடுக் கிறோம்; நம்மாட்களுக்கு அவர்கள் வேலை கொடுப்ப தில்லை; ஆங்கிலம் படித்திருந்தால் அமெரிக்காவில் வேலை கிடைக்குமே தவிர, இந்தி படித்தால் பீகாரில் வேலை கிடைக்காது.

ஆகவே,ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷா அவர்கள், தங்களுடைய துறையின் அறிக்கை என்ன என்பதுபற்றிகூட புரிந்துகொள்ளாமல் பேசு கிறார்கள்.

பிரதமர் உள்பட அமைச்சர்கள் வரை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வது நம்முடைய இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதானே!

தலைசிறந்த வித்தைக்காரர் 

பிரதமர் மோடி

நம்முடைய பிரதமர் இருக்கிறாரே, அவரைவிட தலைசிறந்த வித்தைக்காரரை உலகத்தில் வேறு எங்கும் கண்டுபிடிக்க முடியாது.

அவருடைய வித்தைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பெயர் வைத்துவிட்டார்கள்.

இரண்டாம் முறை அவர் பிரதமராக பதவி யேற்கும்பொழுது, அவருடைய பெயரை முதலில் அழைக்கிறார் குடியரசுத் தலைவர் பதவி பிரமாணத்தின்போது.

மோடி அவர்கள் பதவியேற்பதற்கு முன்பாக, மேடையை விட்டு கீழே இறங்கி, நடந்து செல்கிறார்; யாருக்கோ மரியாதை தருவதற்காக அவர் செல்கி றார் என்று இந்தியாவிலுள்ள அனைவரும் தொலைக்காட்சியின் வழியே பார்த்துக் கொண்டி ருந்தார்கள்.

அவர் நேரே நடந்து சென்று, அரசமைப்புச் சட்டக் கல்வெட்டு இருக்கும் இடத்திற்குச் சென்று, அதைத் தொட்டுக் கும்பிட்டு வருகிறார்.

அரசமைப்புச் சட்டத்தை அந்த அளவிற்கு மதிக்கின்றவரா அவர்?

அருமையான வித்தை - வித்தையிலேயே உச்சக்கட்டம்!

அதற்குப் பிறகுதான் பதவிப் பிரமாணம் எடுக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தை 

நீக்கி - மனுதர்மமா?

அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைக்க வேண்டும் என்கிற உறுதியில் இருக்கிறார்கள் அவர்கள்.

ஏனென்றால், அந்த அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற மூன்று வார்த்தைகள் அவர்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. பிரியாம்பிள் என்று சொல்லக்கூடிய முகவுரையில்.

Liberty - Equality - Fraternity

சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்கிற வார்த்தைகள்தான்.

இதற்குக்கூட அழகாக விளக்கம் சொன்னார் டாக்டர் அம்பேத்கர்.

இந்த வார்த்தைகள் பிரெஞ்சு புரட்சி வார்த்தைகள் என்று நினைப்பீர்கள். ஆனால், இதை அங்கே இருந்து எடுக்கவில்லை. இந்த வார்த்தைகள் மூன்றும் கவுதமப் புத்தரின் வார்த்தைகளாகும்.

பவுத்தம்! பவுத்தம்!! பவுத்தம்!!! என்று சொல்லி, யாருக்கும் தெரியாத வெளிச்சத்தைக் காட்டினார்!

அதுதான் திராவிடம்!

வருணாசிரம தர்மம் என்றால், அது ஆரியம்.

ஆரியம் என்றால், ரத்தப் பரிசோதனை செய்வதல்ல - அது கலந்து போயிற்று என்பது எல்லோருக்கும் தெரியும். அதைப்பற்றி கவலையில்லை.

எப்படி கலந்தது என்பதைப்பற்றி அந்தக் காலத்தில் அண்ணா அவர்கள் மேடையில் சொல்லியிருக்கிறார். அதை இப்பொழுது ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.

நம்மைப் பொறுத்தவரையில், அந்தத் தத்துவங்கள் கூடாது என்பதுதான்.

இன்றைக்கு எந்த அளவிற்கு அந்தக் கொடுமைகள் வந்து இருக்கிறது தெரியுமா?

நம்முடைய மூளைக்கு விலங்கு போட்டு, ‘நமஸ்காரம்‘ என்று சொல்ல வைத்தார்கள். நம்முடைய இயக்கம் வந்த பிறகுதான் வணக்கம் என்று சொல்கிறார்கள்.

நம் குழந்தைகளுக்குத் தமிழில் 

பெயர் சூட்டவேண்டாமா?

ஒரு கொடுமை என்னவென்றால், இங்கேகூட 

12 ஆவது தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம்.

ஒரு தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, இமான் அண்ணாச்சி அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற  குழந்தைகளின் பெயரைக் கேட்கிறார் - அந்தப் பெயர்கள் எல்லாம் வாயிலேயே நுழையவில்லை.

எல்லாக் குழந்தைகளும் நம்முடைய குழந்தைகள் தான் - கருப்பு, கருப்பாக இருக்கின்ற குழந்தைகள் - சிவப்பாக இருக்கும் குழந்தைகள்கூட இல்லை.

எந்த அளவிற்கு நம்மாட்களின் மூளைக்கு விலங்கு போட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

மக்களிடையே பிரிவை உண்டாக்கி வைத்தார்கள். பிரித்து வைப்பதுதான் ஆரியம்.

மக்களை மட்டுமா பிரித்தான்? மாட்டையும் பிரித்து விட்டான்.

கொஞ்சம் வெள்ளையாக இருக்கின்ற மாட்டிற்குப் பசு மாடு - கோமாதா.

கோவுக்குப் பெரியம்மா ஒன்று இருக்கிறதே? எருமை மாடு.

எது கெட்டியான பால்?

எருமைப் பால்.

தயிர்கூட எருமைப் பால் என்றால், அருமையாக இருக்கும் - தாய்மார்களாகிய உங்களுக்குத் தெரியும்.

எருமை மாடு கருப்பாக இருக்கிறது என்பதால், அதனை ஆரியர்கள் பிரித்தார்கள்.

மாட்டைப் பிரித்தான் - மனிதனைப் பிரித்தான் - பிறகு மனிதன் காலையே பிரித்தான்.

வலது காலை எடுத்து முன்னால் வைத்து வா என்று மணப்பெண்ணைப் பார்த்து சொல்வார்கள்.

பெரியார்தான் கேட்டார், ''ஏண்டா, இடது கால் உன்னுடைய கால் இல்லையா? அது என்ன இரவல் காலா? நொண்டி காலா?'' என்று கேட்டார்.

‘நொண்டி’ என்ற வார்த்தையை நான் சொல்வதற்குக் காரணம், புரிவதற்காகச் சொல்கிறேன் - யாரும் தவறாக நினைக்கவேண்டாம்.

இரண்டு காலும் நம்முடைய கால்கள்தானே!

இடதுகால் இரவல் காலா?

அதுமட்டுமல்ல, பெரியார் இன்னொரு கேள்வி யையும் கேட்டார் - பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் அதனைத் தொடர்ந்து கேட்கிறோம்.

நாட்டையே காப்பாற்றுகின்றவர்கள் யார்?

இராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

‘‘மணமகளே, மணமகளே வா! வா!

உன் வலது காலை எடுத்து வைத்து வா! வா!’’

என்று பாடலே இருக்கிறது.

வலது காலை எடுத்து வைப்பதற்கு முன்பாக - பெரியார்தான் கேட்டார்.

ஏண்டா, இந்த நாட்டைக் காப்பாற்றுவது இராணுவம்; ஊரைக் காப்பாற்றுவது காவல்துறை.

இந்த இரண்டு துறைக்கும் பயிற்சி கொடுக்கும் பொழுது என்ன சொல்வார்கள்?

‘‘லெப்ட், ரைட் - லெப்ட், ரைட்’’ என்றுதானே மார்ச் பயிற்சி கொடுக்கிறார்கள்.

முதலில் இடது காலைத்தானே எடுத்து வைக்கச் சொல்கிறார்கள். அந்தப் பயிற்சியின்பொழுது, இல்லீங்க, நாங்கள் அர்த்தமுள்ள இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் - ஆகவே, வலது காலை எடுத்து வைத்துதான் எங்களுக்குப் பழக்கம் என்று சொன்னால்,

பயிற்சி கொடுப்பவர்கள், அவர்களுடைய காதைத் திருகி தூக்கி வெளியே எறிவார்கள் அல்லவா!

அறிவிற்கு வேலை கொடுக்காமல் ஆக்கிவிட் டார்களே!

மூடத்தனத்தின் முடநாற்றம்

எனவே நண்பர்களே, நாம் வெறும் மொழித் திணிப்பை மட்டும் எதிர்க்கவில்லை.

பண்பாட்டுத் திணிப்பை எதிர்க்கிறோம்.

அறிவுக்கு விலங்கு -

பகுத்தறிவுக்கு விலங்கு போட்டார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒரு செய்தியை எடுத்துச் சொல்கிறேன்.

இந்தியா முழுக்க ஒரே மொழி இருந்தால்தான், இந்தியாவினுடைய அடையாளமாம்.

என்ன அடையாளம்?

அண்ணா கேட்டார் - அன்றைக்கு அவர் கேட்ட கேள்விக்கு  யாராவது பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

இங்கே பேசிய இளங்கோவன் அவர்களும், மற்ற நண்பர்களும்  சொன்னார்கள்.

Unity in Diversity

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதானே  நம்முடைய அடையாளம் - இந்தியாவினுடைய சிறப்பு.

அய்க்கியம் என்பதும் 

சீர்மை என்பதும் உண்மையா?

ஆனால், அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்டார்.

இன்னும் அண்ணா அவர்களும், கலைஞர் அவர் களும் ஏன் நிலைத்தவர்களாக இருக்கிறார்கள்?

நம்மைப் பொறுத்தவரையில் என்றைக்கும் அவர்கள் வாழுகிறவர்கள் - வழிகாட்டக் கூடியவர்கள் - தந்தை பெரியாருடைய தொண்டர்கள்.

அண்ணா கேட்டார்,

நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள் - 

Unity is different from Uniformity

என்று சொன்னார்.

ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று சொல்வது சீர்மை - யூனிட்டி என்பது அய்க்கியம்.

எல்லோரும் ஒரே அளவுதான் இருக்கவேண்டும் என்று சொல்வதா யூனிட்டி?

இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றவர்கள் எல் லோரும் ஒரே கருத்துள்ளவர்கள்தான்.

ஆனால், ஒருவர் வெள்ளை சட்டை அணிந்திருக் கிறார்; நான் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறேன். ஒருவருக்கு தலை நரைத்திருக்கிறது; இன்னொருவருக்கு தலைமுடி கருப்பாக இருக்கிறது.

இல்லை, இல்லை எல்லோருக்கும் கருப்பாகத்தான் தலைமுடி இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?

எல்லோரும் ஒரே உயரத்தில்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முடியுமா?

சீர்மை என்பதற்காக, எல்லோரும் கோதுமை உணவைத்தான் சாப்பிடவேண்டும்; அரிசி உணவே இருக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா?

எனவே, Unity is different from Uniformity  

என்று அண்ணா அவர்கள் சொன்னார்.

இதுதான் திராவிடம் - இதுதான் அறிவு.

ஆகவே இந்தி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய அடையாளம் என்று சொல்வது இருக் கிறதே - அவர்கள் இந்த நாட்டையே கொச்சைப்படுத்து கிறார்கள்.

தேசிய மொழி என்று ஒன்று இருக்கிறதா?

அரசமைப்புச் சட்டத்திலே 22 மொழிகள் என்று எட்டாவது அட்டவணையில் இருக்கிறதே - அது என்ன தலைப்பில் இருக்கிறது தெரியுமா?

லாங்வேஜஸ் என்றுதான் இருக்கிறது.

அதிலே நேஷனல் லாங்வேஜ்  என்கிற வார்த்தை கிடையாது.

அரசமைப்புச் சட்டத்தில், Official Language  என்பதைத் தவிர, வேறு எங்காவது தேசியம் என்கிற வார்த்தை இருக்கிறதா?

தயவு செய்து இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லட்டும்.

சொல்ல முடியாது.

காரணம் என்னவென்றால், எல்லா மொழிகளுக்கும் சமத்துவம் இருக்கும்பொழுது, பிறகு என்ன ஒரு மொழி? ஒரே மொழி? இணைப்பு மொழி?

அந்த இணைப்பு மொழியை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று சொன்னோம்.

காமராஜர் அவர்கள் எவ்வளவு பொது அறிவு உள்ளவர் என்பதற்கு உதாரணம்,

கலைஞர் அவர்கள் ஒருமுறை எங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு செய்தியை சொன்னார்-

இரண்டு மொழிகள் வரப் போகிற தீர்மானத்தை அண்ணா அவர்கள் சொல்வதற்கு முன்பாக, அந்தக் கருத்துகளைப்பற்றி பேசுகிறார்கள்.

முதலமைச்சர் காமராசர் 

சொன்னது!

இந்தி எதிர்ப்பு - ஆங்கிலத்தைக்கூட நாம் விட்டு விட்டு, ஒரு மொழிதான் இருக்கவேண்டும் என்று வேகமாகப் பேசியபொழுது,

அப்பொழுது முதலமைச்சராக இருக்கின்ற காமராஜர் அவர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த கலைஞரை அழைக்கிறார்.

அவரிடம் மெதுவாக சொல்கிறார், ''அவசரப்பட்டு ஆங்கிலம் வேண்டாம் என்று பேசிவிடாதீர்கள். ஏனென்று சொன்னால், ஆங்கிலத்தை விட்டுவிட்டால் என்னாகும் தெரியுமா? இந்தி வந்து குந்திக்கும்; ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள்;  இருமொழிக் கொள்கைதான்'' என்றார்.

காமராஜர் சொன்ன அந்த வார்த்தையை அப்படியே கலைஞர் அவர்கள் சொன்னார்.

அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றினார்.

இதுதான் திராவிட மாடல் - திராவிட மாடல் என்பது அனைவருக்கும் அனைத்தும்!

யாருடைய உரிமையையும் பறிப்பதல்ல! அந்த வகையிலே சொல்லும்பொழுது நண்பர்களே,

அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நடப்பது யார்?

ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று பேசுகிறீர் களே, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாகப் பேசக்கூடியவர்கள் அல்லவா நீங்கள்!

நாங்கள் அரசமைப்புச் சட்டத்திற்காக வாதாடு கிறோம் - நீங்கள் அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் - இன்றைக்கு நேர் விரோத மாகப் பேசுகிறீர்கள் என்பதற்கு அடையாளம் -

அடிக்கட்டுமானத்தில் இருக்கக்கூடிய அடிப் படைக் கருத்துகளில் ஒன்றான,

Cultural and Educational Rights 

(1) Any section of the citizens residing in the territory of India or any part there of having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same.

ஒரு தனியான மொழி, எழுத்து, பண்பாடு இவை இருக்கக்கூடிய எந்தப் பகுதியாக இருந் தாலும், அவர்கள் அந்த மொழியைப் பாதுகாக்க, அந்தக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது அடிப்படை உரிமை - அதைப் பறிக்கக்கூடிய உரிமை யாருக் கும் கிடையாது என்பது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய உரிமையாகும்.

இதைத்தான் இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

மீண்டும் களத்தில் சந்திப்போம்!

அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதை செய்யுங்கள் என்று ஆளுங்கட்சியைப் பார்த்து கேட்கின்ற பரிதாபம், விசித்திரம் உலகத்திலேயே நம் நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் கிடையாது.

இந்த மாநாடு ஒரு நல்ல தொடக்கம். நம்முடைய தலைவர்கள் இங்கே வந்து சிறப்பாக உரையாற்றினார்கள்.

அதுபோலவே, எவ்வளவு பெரிய கடமைகள் இருந்தாலும், இது மிக முக்கியமானது என்பதற்காக, இந்தத் தொகுதியினுடைய உறுப்பினரும், ஒப்பற்ற முறையில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அகில உலகமும் வியக்கத்தகுந்த அளவிற்கு சிறப்பாக செயல்படக்கூடிய நம்முடைய மாசற்ற அமைச்சர் மா.சு. அவர்கள் சிறப்பான வகையில் வந்து நம்மை ஊக்கப்படுத்தியதற்கும், உங்களுக்கும் நன்றி கூறி,

மீண்டும் இந்தி எதிர்ப்புக் களத்தில் சந்திப்போம்!

தேவைப்படுகின்ற நேரத்தில் இந்தக் களம் என்றைக்கும் இருக்கும்.

நீறுபூத்த நெருப்பு எச்சரிக்கை!

அன்றைக்கு மூட்டப்பட்ட தீ இருக்கிறதே, அந்தத் தீ பொறியாக இருந்தாலும், அது வெறும் நீறு பூத்ததுபோல இருந்தாலும் - நீறு   பூத்ததைத் தள்ளி வைக்கக்கூடிய மிகப்பெரிய பணியை அமித்ஷாக்களும், வடநாட்டிலே இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் செய்கிற காரணத்தால்,

நாங்கள் எதற்கும் தயார்! தயார்!! தயார்!!! மிக முக்கியமான பிரகடனம் என்று கூறி,

வாய்ப்பளித்த உங்களுக்கும், சிறப்பாக ஏற்பாடு செய்த தென்சென்னை மாவட்டத் தோழர்களுக்கும், இறுதிவரையில்  இருந்த உங்களுக்கும், காவல் துறைக்கும், ஊடகத் துறைக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!! என்று கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:35 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இந்தி எதிர்ப்பு, கி வீரமணி, மாநாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

பகுத்தறிவும் மாணவர்களும்’சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ.பாபு
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுவர் எழுத்து
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நடராசன்
  • நடராஜன்
  • நடவடிக்கைகள்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகர்கோயில்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மாலை
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முதல்வர்
  • மும்பை
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...
  • திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்
    01-02-2019 சொற்பொழிவாளர்  ஊர் அதிரடி அன்பழகன்                               துறையூர் இரா.பெரியார் செல்வன்                      காரைக...
  • பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை
    தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (46)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ▼  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ▼  ஜூன் (23)
      • விடுதலை' சந்தா சேர்ப்பில் சென்னை மண்டல திராவிடர் க...
      • தரமணி கோ.மஞ்சநாதன் படத்திறப்பு கழகத் துணைத் தலைவர்...
      • பா.வள்ளியம்மாள் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுநாளை யொ...
      • மதுரை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட...
      • மதுரை பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பா...
      • இந்தியில் உள்ள ஒரே இதிகாசம் துளசிதாஸ் இராமாயணமே! ப...
      • இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகு...
      • தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையி...
      • தென் சென்னை கடை வீதிப் பிரச்சாரம் - திருவல்லிக்கேணி
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் ...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாள...
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திராவிடர் இயக்கத் தமிழர...
      • தரமணி மஞ்சநாதன் மறைவு
      • இந்தி திணிப்பு - எதிர்ப்பு ஏன்?
      • நிஜப் புலியும் - வேஷம் போட்ட புலியும் - தலையங்கம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.த...
      • மகளிர்க்கு புத்துணர்வை தந்த பெண்ணியப் பயிலரங்கம்
      • எழுச்சியுடன் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டு முழக்கங்கள் - 4.6.2022
      • இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாடு
      • ஹிந்தி எதிர்ப்பு மாநாடு தீர்மானம்
      • இந்தி எதிர்ப்பு மாநாட்டுச் சிந்தனை கலாச்சாரப் படை ...
      • முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைக்குத் தமிழர் தலைவர் ம...
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.