திங்கள், 12 நவம்பர், 2018

தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
 தரமணி தந்தை பெரியார் நகர்
17.9.18 காலை 7.00 மணிக்கு தரமணி பெரியார் நகரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தரமணி மஞ்சநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா.வில்வ நாதன் மாலை அணிவித்தார்.    துணைச் செயலாளர் சா.தாமோதரன், எ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்ற பொறுப்பாளர்கள் ஜி.கண்ணன், கோ.மனோோகர், மீசை டி.சேகர், அ.மகாதேேவன் மற்றும் ச.சந்தோஷ், அய்ஸ் அவுஸ் அன்பு, ந.மணித்துரை, கு.பா.அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜி.கண்ணன் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கினர். 

தியாகராயர் நகர்
காலை 8 .10 மணிக்கு தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலு தலைமையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன்  மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் முன்னிலையிலும் அமைப்பாளர் மு.ந.மதியழகன் மாலை அணிவித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மு.சேகர், ந.இராமச்சந்திரன், கோ.மஞ்சநாதன், அய்ஸ் அவுஸ் அன்பு, ந.மணித்துரை, கு.பா.அறிவழகன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக