ஞாயிறு, 4 நவம்பர், 2018

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் ஏராளமான இளைஞரணியினர் பங்கேற்பு

தஞ்சாவூரில் நடைபெறும் கழக மாநில மாநாட்டில் இளைஞரணி சார்பில்


சீருடை அணிவகுப்பை நடத்துவது என தீர்மானம்




சிறப்பு தீர்மானம் 13:
இளைஞரணி சீருடை அணிவகுப்பு நடத்துதல்
2019 பிப்ரவரி 2, 3 ஆகிய நாள்களில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூகநீதி மாநாட்டில் நடைபெறும் ஊர்வலத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் சீருடை அணிவகுப்பை எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.


சென்னை, நவ. 4 திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில்  3.11.2018 அன்று முற்பகல் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது அவர் இளைஞரணியினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அணுகு முறைகள் குறித்தும், இளைஞரணிப் பொறுப் பாளர்களோடு கலந்துரையாடி தலைமை யுரையாற்றினார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் பட்டுக் கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரத்தமிழன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் வரவேற்புரை ஆற்றி னார். கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிறைவாக கருத்துரை வழங்கினார். முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு இளைஞரணித் தோழர்களின் பணிகளைப் பாராட்டி, 2019 பிப்ரவரி 2,3 ஆகிய நாள்களில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாட்டில் இளைஞரணி சார்பில் மிகுந்த எழுச்சியுடன் மிகப்பெரிய அளவில் சீருடை அணி வகுப்பை நடத்திட வேண்டும். இளை ஞரணி தோழர்கள் உடனடியாக அதற்கான செயல்திட்டத்தில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பின்னர், விழுப்புரம் மண்டலத் தலை வர் க.மு.தாஸ், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமார தேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் மோகன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஆத்தூர் சுரேஷ், ப.வெற்றிச்செல்வன், தே.காமராஜ், பொழிசை ச.கண்ணன், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக் குமார், ஈரோடு மண்டல இளைஞரணிச் செயலாளர் சா.ஜெயராஜ்செல்லத்துரை, திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் முனைவர் அன்புராஜா, கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், திண்டுக்கல் மண்டல இளைஞரணிச் செயலாளர் குண.அறிவழகன், மதுரை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், விழுப்புரம்மண்டல இளைஞ ரணிச் செயலாளர் தா.இளம்பரிதி, காஞ்சிபுரம் மண்டல இளைஞரணிச் செயலாளர் தி.இளந்திரையன், சேலம் மண்டல இளை ஞரணிச் செயலாளர் கூ.செல்வம், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.சிவசாமி, தருமபுரி மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆறுமுகம், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் வீ.திராவிடன், புதுச்சேரி  இளைஞரணித் தலைவர் தி.இராசா, காரைக்கால் மண்டல இளை ஞரணி பொறுப்பாளர் பெரியார் கணபதி, தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் விஜயகுமார், அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன்.செந்தில்குமார், விருத்தாசலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அருண்குமார், திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பழனிச் சாமி, கோவை மாவட்ட இளைஞரணித் தலைவர் திராவிடமணி, திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் திலீபன், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் நாகராசன், திண்டிவனம் மாவட்ட இளைஞரணித் தலைவர் பாபு, வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழ் சாக்ரடீஸ், குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவக்குமார், ஆவடி மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், தருமபுரி மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் பகத்சிங், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் இளைஞரணியின் பணிகள் குறித்தும், எதிர்கால வேலைகள் குறித்தும் பேசினர்.

கூட்டத்தில், மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் பார்த்தீபன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், திண்டிவனம் மாவட்டத் தலைவர் கந்தசாமி, வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், செந்துறை மதியழகன், அரும்பாக்கம் தாமோதரன், மாவட்ட ப.க. செயலாளர் பழனி மெர்சி ஆஞ்சலாமேரி, விருத்தாசலம் மாவட்ட ப.க. செயலாளர் தே.சுதாகர், தஞ்சை யோவான்குமார், குமார் விருத்தா சலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடராசா, திண்டிவனம் தம்பிபிரபா கரன், சென்னை சண்முகப்பிரியன், செல் வேந்திரன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் கணேசன், விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் மணி, நாகை திலீபன் சக்ரவர்த்தி, சுரேஷ், வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பரசன், அமைப்பாளர் தயாளன், செந்துறை அறிவன், மத்தூர் இராமஜெயம், தாம்பரம் மாவட்ட இளை ஞரணி செயலாளர் சட்டநாதன், மரக் காணம் அம்சராஜ், திண்டிவனம் தமிழரசு, வடசென்னை மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் பகலவன், விருத்தாசலம் நகர செயலாளர் சேகர், அருப்புக்கோட்டை பெரியார் செல்வம், மரக்காணம் மதிவாணன், விருத்தாசலம், சந்துரு, வீரமுத்து, தீபக்குமார், கல்லக்குறிச்சி சபரிநாதன், விழுப்புரம் கோதண்டராமன், கல்லக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பகவான்தாஸ், விருத்தாசலம் மாவட்ட மாணவர் கழக செயலாளர் இராமராஜ், அசோக் நகர் அகிலன், விருத்தாசலம் வெங்கடேசன், காஞ்சீபுரம் தனுஷ், திருநாவுக்கரசு, குரோம்பேட்டை இனியரசன், தென் சென்னை தாஸ், ஆவடி சரவணன், பெரியார் திடல் கலைமணி, தெய்வசிகாமணி, இன்பரசன், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் பால சுப்பிர மணியன், புழல் அறிவுமானன், வாதுர் அன்பரசன், அர்ச்சுனன், ரேகா உள்பட 150க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற் றனர்.

நிறைவாக மாநில மாணவர் கழக கூட்டுச்செயலாளர் சே.மெ.மதிவதனி நன்றி கூறினார்.

திராவிடர் கழக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்


திருவாரூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: சு.இராஜ்மோகன் வேலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: ந.கண்ணன் (குடியாத்தம்)

அரியலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: பொன்.செந்தில்குமார் (செந் துறை) சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்:  சோ.சுரேஷ் அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்: சு.அறிவன் (செந்துறை)

வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்: பொ.தயாளன் (காங்கேயநல்லூர்)

மதுரை புறநகர் மாவட்ட இளை ஞரணித் தலைவர்: பா.முத்துக்கருப்பன் (திருமங்கலம்), மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணிச் செய லாளர்: இரா.பிரபாகரன் (கூடல்நகர்)

காரைக்கால் மண்டல இளைஞரணித் தலைவர்: நாத்திக.பொன்முடி, காரைக்கால் மண்டல இளைஞரணிச் செயலாளர்: கோ.மு.பெரியார்கணபதி

சோழிங்கநல்லூர் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்: எம்.நித்தியானந்தம் (கேளம்பாக்கம்)

திருவொற்றியூர் மாவட்ட இளைஞ ரணித் தலைவர்: சதீஷ் (திருவொற்றியூர்), திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: திலீபன் (திருவொற்றியூர்)

நாகை மாவட்டம்


நாகை மாவட்ட இளைஞரணித் தலை வர்: வெ.தீபன்சக்ரவர்த்தி, நாகை மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: பா.பாலாஜி, நாகை மாவட்ட இளைஞரணி அமைப் பாளர்: கி.சுரேஷ், நாகை மாவட்ட இளை ஞரணித் துணைத்தலைவர்: கா.குமரேசன், நாகை மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர்: இரா.இரமேஷ்

சேலம் மாவட்டம்


ஆத்தூர் மாவட்ட இளைஞரணிச் செய லாளர்: ப.வேல்முருகன்

திண்டிவனம் மாவட்டம்


திண்டிவனம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: ச.செந்தில்

மரக்காணம் வட்டத் தலைவர்: தெ.ஜெகதீசன், மரக்காணம் வட்டச் செயலாளர்: வா.மதிவாணன், மரக்காணம் நகர செயலாளர்: லிகோரி சுரேஷ் வர்சைல், மரக்காணம் நகர அமைப்பாளர்: கா.அம்ச ராஜ், மரக்காணம் நகர துணைத் தலைவர்: பா.மணிகண்டன்

வானூர் வட்டத் தலைவர்: சிவ.கவுரி சிறீதர், வானூர் வட்ட அமைப்பாளர்: மாரிமுத்து

ஒலக்கூர் ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்: தேவராஜ்

ஈரோடு மாவட்டம்


பவானி ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்: தே.தேவேந்திரன்

தென்சென்னை மாவட்டம்


மாவட்ட இளைஞரணித் தலைவர்: சி.மகேந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: ந.மணித்துரை, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்: இரா.கதிரவன்.

திருவள்ளூர் மாவட்டம்


மாவட்ட இளைஞரணி தலைவர்: விஸ்வாகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர்: மு.ராக்கி

வடசென்னை மாவட்டம்


மாவட்ட இளைஞரணி செயலாளர்: அ.தமிழ்ச்செல்வன் (எருக்கஞ்சேரி), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: கோ.பகலவன்

ஆவடி மாவட்டம்


மாவட்ட இளைஞரணித் தலைவர்: வெ.கார்வேந்தன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: க.கலைமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: சே.கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர்: இரா.கலை வேந்தன்.

- விடுதலை நாளேடு, 4.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக