திங்கள், 12 நவம்பர், 2018

தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் தமிழர் தலைவரிடம் வழங்க முடிவு



சென்னை, நவ. 12 தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக பொறுப் பாளர்கள் கூட்டம் 9.11.2018 அன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் மேல்மாடி முத்துதெருவில் அமைந் துள்ள மாவட்ட கழக செயலாளர் பார்த்தசாரதி இல்லத்தில் உற்சாகமாக நடைபெற்றது.

தென்சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங் கேற்று திராவிட மாணவர் கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 86ஆவது பிறந்தநாள் மகிழ்வாக வழங்கப்படவுள்ள விடுதலை சந்தா சேகரிப்புப் பணி களையும், ஒவ்வொரு கழகத் தோழர் களும் விடுதலை சந்தா திரட்டும் பணிகளில் முழுமூச்சாய் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் எடுத் துரைத்தார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மாண வர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.

சந்தா திரட்டித்தர பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்


மாவட்ட தலைவர் வில்வநாதன் 20 சந்தாக்கள், மாவட்ட செயலாளா செ.ரா.பார்த்தசாரதி 20 சந்தாக்கள், மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் 10 சந்தாக்கள், அரும் பாக்கம் க.தமிழ்ச்செல்வன் 10 சந் தாக்கள், மாவட்ட துணைத் தலைவர் கோ.வி.இராகவன் 10 சந்தாக்கள், மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன் 10 சந்தாக்கள், மாவட்ட மாணவர் கழக தலைவர் விஸ்வாசு 5 சந்தாக்கள், மாவட்ட மாணவர் கழக செயலாளர் கு.ப.அறிவழகன் கவின் மலர் 5 சந்தாக்கள், பகுதி பொறுப் பாளர் க.இராமச்சந்திரன் மாணவர் கழக பொறுப்பாளர்கள், துணை வேந்தன், இரவி 10 சந்தாக்கள்

இறுதியாக கவின்மலர் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 12.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக