வியாழன், 29 நவம்பர், 2018

டிசம்பர் 2இல் சுயமரியாதை நாள் விடுதலை சந்தாக்கள் வழங்கும் விழா!

திமுக பொருளாளர் துரைமுருகன், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் பங்கேற்பு


சென்னை, நவ.29 சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் பிறந்த நாள் 2.12.2018 அன்று காலை சுயமரியாதை நாள், விடுதலை நாளிதழ் சாந்தா வழங் கும் விழா நடைபெறுகிறது. விடுதலை நாளிதழின் ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக விடுதலை சந்தாக்களை கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் விழாவில் வழங்குகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள கழக மாவட்டங்களிலிருந்தும், கருநாடகா, மராட் டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும், பன்னாட்டளவில் அமெரிக்காவிலிருந்தும் விடுதலை நாளிதழுக்கான சந்தாக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளிக்கப்படுகின்றன.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 2.12.2018 அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கழக மாவட்டங்களின் சார்பில் விடுதலை சந்தா வழங்குதலும் சந்திப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முற்பகல் 11 மணிக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலை மையில் தமிழர் தலைவர் 86ஆம் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டலச் செயலா ளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதே வன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல் லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி வரவேற்புரை யாற்றுகிறார்.  கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அறிமுக வுரையாற்றுகிறார்.

திமுக பொருளாளர் க.துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் இரா.முத்தரசன் ஆகியோர் விழாவில்  பங்கேற்று கருத்துரையாற்றுகிறார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றுகிறார். கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மாணவர் கழக மாநில செயலாளர்  ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகின்றனர்.

விழா முடிவில் கழகப் பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் நன்றியுரையாற்று கிறார்.

26.11.2018 அன்று நடைபெற்ற ஜாதி தீண்டாமை  ஒழிப்பு மாநாட்டில் வெளியி டப்பட்ட அறிவிப் பின்படி, 2.12.2018 அன்று நடை பெறுகின்ற விழாவில் விடுதலை சந் தாவுடன் கஜா புயல் நிவாரண உதவிகள் அளிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு எள்ளது.

நூல் வெளியீடு

2.12.2018 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில் இயக்க வெளி யீடுகள் வெளியிடப்படுகின்றன.

டிசம்பர் 2 தமிழர் தலைவர் பிறந்த நாள் புதிய வெளியீடுகள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில்... இயக்க வரலாறான தன் வரலாறு (பாகம் 6) ரூ.250

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள்  13ஆம் தொகுதி ரூ. 200

துரை.சக்கரவர்த்தி எழுதிய தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம் ரூ.40

வழக்குரைஞர் கி.மகேந்திரன் எழுதிய தமிழரின் பரிணாமம்  ரூ.40 ஆகிய நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு மலர் 2018 ரூ.200

தொடர்புக்கு: 7639818254, 9626657609

பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், குருதிக்கொடை

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2018 அன்று காலையில் குருதிக்கொடை சிறப்பு முகாம் மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்க ளின் 86ஆம் பிறந்த நாளை முன்னிட்டு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குருதிக்கொடை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

2.12.2018 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பொது மருத்துவம், தாய் சேய் நலம், நீரிழிவு நோய், கண் மருத்துவம், காது மூக்கு  தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்துறை களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெறுகிறது. இம்முகாமில் பரிசோதனை கள், மருத்துவ ஆலோசனைகள், சிகிச் சைகள் வழங்கப்படுகின்றன.

-  விடுதலை நாளேடு, 29.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக