வியாழன், 8 நவம்பர், 2018

திருவொற்றியூர் கழக மாவட்ட கலந்துரையாடல்



திருவொற்றியூர், நவ. 5 திரு வொற்றியூர் மாவட்ட திரா விடர் கழக கலந்துரையாடல் கூட்டம் புதுவண்ணை பெரியார் மாளிகையில் அமைப்புச் செய லாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையிலும், மாவட்ட தலைவர் வெ.மு. மோகன் மற்றும் மண்டல செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் முன் னிலையிலும் 28.10.2018 அன்று மாலை 7 மணியளவில் நடை பெற்றது.

தீர்மானங்கள்


1) கிளை தோறும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுக் கொடிக்கம்பங்கள் நிறுவுவது என தீர்மானிக்கப் பட்டது.

2) புதிய கிளைகள் அமைப் பது

3) அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவுடன் புது வண்ணை பெரியார் பெருந் தொண்டர் க.பலராமன் அவர் களின் நூற்றாண்டு விழாவும் (1.7.1919 & 1.7.2019) சேர்த்து புது வண்ணை பகுதியில் எழுச்சி யுடன் கொண்டாடுவது என தீர் மானிக்கப்பட்டது. தலைமைக் கழகத்தின் அனுமதி கோருவது,

4) விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கமாக நடத்துவது

5) திருவொற்றியூர் பெரியார் நகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை மறைத்து அடிக்கடி பேனர்கள் கட்டுவது பற்றி காவல்துறை மற்றும் மாநகராட்சி அமைப்புகளிடம் புகார் தெரிவிப்பது என தீர் மானிக்கப்பட்டது.

6) திருவொற்றியூர் மாவட்ட அமைப்பாளராக செ.நாகேந்தி ரன், மாவட்ட துணைச் செய லாளராக புதுவண்ணை சு.செல்வன் ஆகியோர் நியமிக்கப் பட்டனர். மாவட்ட இளை ஞரணி தலைவராக மு.ரா.

திலீபன் நியமிக்கப்பட்டார். மாவட்ட செயலாளராக இரா.சதீஷ் நியமிக்கப்பட்டார்.

-  விடுதலை நாளேடு, 5.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக