தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
பொதுக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மார்ச், 2024

தஞ்சையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!



விடுதலை நாளேடு
Published March 26, 2024

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா
♦ சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுவோம்!
♦ அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நசுக்கும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய ஆட்சியை மக்களவைத் தேர்தலில் வீழ்த்துவோம்!
‘இந்தியா’ கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்!
தேர்தல் களத்தில் கழகத் தோழர்களின் பங்களிப்பு சிறக்கட்டும்!
தஞ்சையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

தமிழர் தலைவர் எழுதிய “மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!” என்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் புத்தகத்தை கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி வெளியிட கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.

தஞ்சை, மார்ச் 26 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நசுக்கும் மதவாத ஒன்றிய பி.ஜே.பி. அரசை வரும் மக்களவைத் தேர்தலில் வீழ்த்தி, வாக்காளர்கள் ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வதைக் கடமையாகக் கொள்ளவேண்டும் என்றும், தேர்தல் களத்தில் திராவிடர் கழகத் தோழர்களின் பணி சிறப்பாக இருக்கவேண்டும் என்றும் தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தந்த கழகத் தோழர்கள்

திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூர் இராமசாமி திருமண மண்டபத்தில் நேற்று (25.3.2024) மாலை திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம் 

தீர்மானம் எண் 2:
மக்களவைத் தேர்தலும் – வாக்காளர்களின் கடமையும்!

ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு, ‘‘முன்னேற்றம், வளர்ச்சி” என்ற கோஷத்தோடும், வாக்களித்தால், ‘அச்சே தின்’ ‘நல்ல காலம் மக்களுக்கு பிறக்கும்’ என்ற வாக்குறுதி அளித்தும் பெரும்பான்மை இடங்களை பெற்று ஒன்றியத்தில் ஆட்சிக்கு இருமுறை வந்தது.
கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில், நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே அடைந்துள்ளது.
பொருளாதார மேம்பாடு, ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பணம் மீட்பு, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு என மோடி அரசு அளித்த வாக் குறுதிகள் அனைத்துமே வெற்று அறிவிப் புகளாக, காலவாதியான வாக்குறுதிகளாக இருக்கின்றன என்பதை நாட்டு மக்கள் இன்று தெளிவாக உணர்ந்துள்ளார்கள் – கொடு மைக்கும் ஆளாகியுள்ளனர்.

ரூபாய் மதிப்பிழப்பு என்று திடீரென்று அறிவித்து பொருளாதாரமே முற்றிலும் நசிந்து போகும் நிலையை உருவாக்கினார் பிரதமர் மோடி. சிறு குறு, நடுத்தர தொழில்கள் இழுத்து மூடப்பட்டன. இலட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்து நடுவீதிக்கு வந்தனர்.

கோவிட் பெருந்தொற்றுப் பிரச்சினையை தவறாகக் கையாண்டதும், தடுப்பூசி என்பதில் நடந்த குழப்பங்களும், பொருளாதாரத் துறை யின் நாசகாரச் செயல்பாடும், பாதுகாப்புத் துறை சாதனங்களை வாங்குவதில்கூட ஏற்பட்ட சந்தேகங்களும், விவசாயிகள் போராட்டத்தை அரசு அணுகிய விதம், பெட்ரோல், டீசல் விலைகளின் செங்குத்தான ஏற்றம் அனைத்துமே, மோடி தலைமையிலான பாஜக அரசு, மக்கள் விரோத அரசாகவே தொடர்ந்து நடந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

நாடாளுமன்ற நடைமுறைகளை அவமதித்தல், ஜனநாயக மாண்பைக் காலில் போட்டு மிதித்தல், அரசமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ள அமைப்புகளின் மாண்பைத் தகர்த்தல், மா நில உரிமைகளை மறுத்தல், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாக ‘‘போட்டி அரசாங்கத்தை” நடத்துதல், நிதி பங்கீட்டில் ஓரவஞ்சனை என அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு தீவிர போக்கினை மட்டுமே பாஜக அரசு செய்து வந்துள்ளது. ‘‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற பெயரில் நாட்டை ஹிந்துத்துவ மதவாதப் படுகுழியில் தள்ளும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது மோடி அரசு.

‘‘எங்கள் அரசு வெளிப்படைத் தன்மையுடனும், அனைத்து மாநிலங்களையும் அரவணைத்துச் செல்லும்” எனப் பேசி வந்த பிரதமர் மோடியின் தொடர் நடவடிக்கைகள், அதற்கு எதிர்மாறாகவே உள்ளன. தேர்தல் பத்திரம் தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடக் கூடாது என்பதில் காட்டிய தீவிரம், ‘‘பி.எம்.கேர்” என அரசு விளம்பரத்தோடு நடைபெறும் நிறுவனம் தனியார் அமைப்பு என கூசாமல் தந்திரமாக நடைபெறும் ஓர் அரசாக மோடி அரசு விளங்குகிறது.
தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பின்மூலம் மக்கள் நலன் சார்ந்தும், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமூகநீதி அடிப்படையிலும் எந்த திட்டங்களையும், சட்டங்களையும் பாஜக ஆட்சி செயல்படுத்தவில்லை. மாறாக, முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தின் பாசிச சித்தாந்தந்தை நடைமுறைப்படுத்தி, சிறுபான்மையினருக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் சட்டங்களை நிறைவேற்றுவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் முத்தாய்ப்பாக விளங்கும் மதசார்பின்மைக் கொள்கையை குழி தோண்டி புதைக்கும் விதமாக, கோயில் கட்டுவதிலும், அதைத் திறப்பதிலும் ஹிந்துத்வா கொள்கையை முன்னெடுக்கும் ஓர் அரசாக மோடி தலைமையிலான அரசு நாளும் நடந்து வருகிறது.

நமது அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில், நாட்டின் மதசார்பின்மைக்கும், சமூக நீதிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் ஊறுவிளைவிக்கும் பாசிச பாஜக எதேச்சதிகார ஆட்சியை அகற்றுவது இந்திய மக்களின் இன்றைய இன்றியமையாத கடமையாகும். ஆகவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக ஆட்சியை விரட்டிடவும், இந்தியா கூட்டணிக்கு பேராதரவு தந்து வெற்றி பெற செய்திடவும் நாட்டு மக்கள் உறுதியாக இருக்கவேண்டுமென்றும், நாட்டு மக்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக திராவிடர் கழகம் முழு மூச்சுடன் களத்தில் இறங்கிப் பாடுபடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 3:
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா!

அறிவாசான் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா 2024 நவம்பரில் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு நிறை வடைகிறது.
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும் உலகம் தழுவிய அளவில் இன்றைய தினம் பெரும் வரவேற் பைப் பெற்று வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுயமரியாதை, சமூகநீதி, இனநலம், மொழி மானம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, பாலியல் உரிமை, ஜாதி ஒழிப்பு, சமத்துவம், சமதர்ம சிந்தனைகளின் செழித்த விளைச்சல் நிலமாகவும், இந்தியத் துணைக் கண்டத்திலேயே தனித்துவம் மிக்கதாகவும், ‘‘திராவிட பூமி, பெரியார் மண்” என்று கட்சிகளைக் கடந்து பலராலும் ஒப்புக்கொள் ளப்பட்டதாகவும், அரசியலிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாகவும், பார்ப்பன வல்லாண்மையை வேரடி மண்ணோடு வீழ்த்தும் போராயுதமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்றால், அதற்கு வலுவான அடித்தளம் இட்டது தந்தை பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கமே!

சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுகள் – நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரலாற்றுத் திருப்பங் களாகவும், ஆட்சிகள்மூலம் செயல்படுத்தப்படும் உயரத்தை எட்டின என்பதும் வரலாறு!

ஒரே நேரத்தில் சுயமரியாதை இயக்கத்திற்கும், ‘‘நீதிக் கட்சி” என்றழைக்கப்பட்ட திராவிடர் இயக்கத்திற்கும் தலைவராக விளங்கி, பிறகு, ‘‘திராவிடர் கழகமாக” பரிணமித்து, இன்றுவரை உயிர்த் துடிப்போடு – தேர்தலில் பங்கேற்காத சமூகப் புரட்சி இயக்கமாக, நாட்டின் அரசியல், சமூக கலங்கரை வெளிச்சமாகவும் செயல் பட்டு வருகிறது.
பிரச்சாரம் – போராட்டம் என்ற இரு விசைகளுடன் சுழன்று சுழன்று தொண்டறம் புரியும் மக்கள் இயக்கமாகவும், அனைத்துத் திராவிட கட்சிகளுக்கும் தாய் என்று சொல்லும் அளவுக்கும், பிற கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பெரும் சக்தியாகவும், வரலாறு படைத்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா தொடக்கம் இவ்வாண்டு நவம்பரில் வருகிறது.
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் சுயமரி யாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை இவ்வாண்டு இறுதியில் கொண்டாடுவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
அதற்குள் இயக்கம் இல்லாத பட்டி, தொட்டி, நாடு, நகரங்கள் எல்லாவற்றிலும் நமது கிளைகள் அமைக்கும் பணியை முடித்தாகவேண்டும் என்று கழகத் தோழர் களை, பொறுப்பாளர்களை இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

தீர்மானம் எண் 4:
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டுவிழா!

சிந்து சமவெளி என்பது திராவிட நாகரிகம்தான் என்று (பொ.ஆ.மு. (Common Era) BCE 3300-1300) இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த சர்ஜான் மார்ஷல் என்பவர் 1924 ஆம் ஆண்டில் தொல்லியல் ஆய்வின் மூலம் உலகறியச் செய்தார்.

‘ஆரியம் – திராவிடம்’ என்பதெல்லாம் வெள்ளைக் காரனின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப்பனர்கள் பரப்புரை செய்வதெல்லாம் – ஆரியப் பார்ப்பனர்களின் தந்திரமே என்பது 1924 இல் தொல்லியல் ஆய்வின்மூலம் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று உறுதி செய்யப்பட்டது. (‘தினமணி’ ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன் போன்றவர்களும் இதனை ஏற்கின்றனர்).

1924 இல் பிரகடனப்படுத்தப்பட்ட திராவிட நாகரிகத் தினையும், அதனை ஆய்வின்மூலம் உலகறியச் செய்த சர்ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பையும் வரலாற்றில் நினைவு கூர்வதற்கு அதன் நூற்றாண்டு விழாவினை வரும் டிசம்பரில் சிறப்புடன் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 5:
பாடகர் கிருஷ்ணாவுக்கு விருது – தந்தை பெரியார்மீது அவதூறு பரப்புவோருக்குக் கண்டனம்- எச்சரிக்கை!

சென்னை மியூசிக் அகாடமி என்ற அமைப்பு கர்நாடக இசைக் கலைஞரும் சமூக நல்லிணக்க உணர்வுடன் செயல்பட்டுவருபவருமான டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுமென அறிவித் திருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஞ்சனி-காயத்ரி என்ற இரண்டு பாடகிகள், டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் பற்றி பாடல் பாடியிருக்கிறார் என்றும், கருநாடக இசையில் சமூகக் கருத்துகளைப் பாடுவதையும் காரணம் சொல்லி, தந்தை பெரியாரைக் குறித்த அவதூறுகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளை யும் தெரிவித்துள்ளனர். அதனையொட்டி மேலும் சில பார்ப்பனக் கோஷ்டிகளும் அவர்களுடன் இணைந்து உள்ளன. பெரியார் மீதான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருவதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், இந்த விவகாரத்தில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகவும், தந்தை பெரியார் பற்றிய அவதூறுகளுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்து உள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே ராகத்தை இசைப் பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்திருப்பது மிகவும் தெளிவாகிறது.
ஆனால், இப்பிரச்சினையில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதில் மியூசிக் அகாடமியும், அதன் தலைவர் என்.முரளியும் காட்டிவரும் உறுதி பாராட்டுக் குரியதாகும்.
தந்தை பெரியார் ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட மனிதநேயத் தலைவர். அவரை இழிவு செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மன்னிப்புக் கேட்கவில்லை யெனில், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 6(அ):
கழக செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துதல்!

2023 மே 13 ஆம் தேதியன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் கழக அமைப்பு முறையிலும், நிர்வாக முறையிலும் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கழகப் பணிகள் பல தளங்களிலும் எழுச்சி யுடன் நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கழகச் செயல்வீரர்களின் பணி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.
அடுத்து நாம் சந்திக்க இருப்பது மக்களவைத் தேர்தலாகும். கொள்கை, லட்சியம் என்ற அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்தல் என்பது – நமது கழகத் திற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகமிக முக்கிய மானதாகும்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்த வகையில் இந்தியாவிற்கே வழிகாட்டுவதாகும் என்பதற்கு அவர் பெரிதும் உழைத்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியே தக்க சான்று. இந்தியா கூட்டணியின் வெற்றியே ‘வேற்றுமையில் ஒற்றுமையை’ இந்திய நாடும், நாளை அமையப்போகும் அரசும் தக்க வைக்கவும், கூட்டாட்சி தத்துவத்தோடு, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஆட்சியாக ஒன்றியத்தில் அமைவதற்கான நல்வாய்ப்பாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அத்தனைத் தொகுதிகளிலும் வெற்றி பெற நமது கழகத் தோழர்கள் முழு மூச்சுடன் பாடுபடுவது என்றும், அடுத்து இவ்வாண்டு இறுதியில் காத்திருக்கும் இரு நூற்றாண்டு விழாக்கள் சிறப்புற நடத்துவது என்றும்,
இந்தப் பணிகளுக்கிடையே கழகக் கட்டமைப்புப் பணிகளிலும் கழகப் பொறுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கழகத் தோழர்களை யும், பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 6(ஆ):
தந்தை பெரியார் காட்டிய நெறிமுறையின்படி பரப்புரைப் பணிகள்

கழகத் தலைவர் வழிகாட்டுதல்படி நமது சொற்பொழி வாளர்கள்மூலம் பரப்புரை பயணங்களை வாக்காளர் களிடையே போதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தித் தரும் வகையில் பொறுப்புடன் நடத்தி, கொள்கைக் கூட்டணிக்கு அச்சாணி போன்று இயக்கவேண்டியது நமது தலையாய கடமையாகும். தந்தை பெரியார் காட்டிய நெறிமுறையின்படி பரப்புரை பணிகள் அமைக்கப்படல் வேண்டும் என்று இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

ஈரோடு த. சண்முகத்தின் 60ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை ஆதவனின் 68ஆவது பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை கூறினார். தாராசுரம் இளங்கோவனின் 84ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (தஞ்சை 25.3.2024)

தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்

திராவிடர் கழக செயலவைத் தலைவர் – சீரிய எழுத்தாளர் – பேச்சாளர் கடலூர் மானமிகு சு.அறிவுக் கரசு (வயது 84, மறைவு: 22.1.2024), திராவிடர் கழக மேனாள் மாநில மகளிரணி செயலாளரும் கொள்கை வீராங்கனையுமாகிய க.பார்வதி (வயது 77, மறைவு: 8.11.2023), நீண்டகால இயக்க செயல்வீரர், மாவட்ட கழக காப்பாளர் நெய்வேலி வெ.ஜெயராமன் (வயது 82, மறைவு: 22.12.2023), முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் கோவை கண்ணன் (வயது 84, மறைவு: 2.1.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், கோவையில் பல்வேறு பொது அமைப்புகளில் இருந்து தொண்டறம் பேணிய கோவை ‘வசந்தம்‘ கு.இராமச்சந்திரன் (வயது 98, மறைவு: 24.6.2023), கோவை மாவட்ட மேனாள் செயலாளர், பொள்ளாச்சி கழக செயல் வீரர் பாரதி (வயது 67, மறைவு: 4.2.2024).

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பெரியார் தொண்டர் கு.தாமோதரன் (மறைவு: 9.2.2024), ஆந்திர மாநிலம் பாரத

நாத்திக சமாஜ் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் (வயது 80, மறைவு: 7.2.2024), புதுக்கோட்டை மாவட்டக் கழக காப்பாளர் செயல் வீரர் பெ.இராவணன் (வயது 90, மறைவு: 11.2.2024), திராவிட இயக்க உணர்வாளர் – சிந்தனையாளர் கயல் தினகரன் (வயது 88, மறைவு: 14.2.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கல்லக்குறிச்சி பெரியார் நேசன் (வயது 94, மறைவு: 22.2.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமி (வயது 102, மறைவு: 25.2.2024), புழல் தோழர் டி.பி.ஏழுமலை (வயது 71, மறைவு: 24.2.2024), பெரியார் பெருந்தொண்டர் மூக்கனூர் பெருமாள் (ரெட்டியார்) (ஓமலூர் வட்டம்) (வயது 94, மறைவு: 27.2.2024), கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடி யு.கலாநாதன் (வயது 84, மறைவு: 6.3.2024).

அரூர் நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் மார்க்ஸ் (மறைவு: 11.3.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிறீரங்கம் எஸ்.எஸ்.முத்து (வயது 93, மறைவு: 13.3.2024), விழுப்புரம் மாவட்ட கழகத் தலைவர் ப.சுப்பராயன் (வயது 71, மறைவு: 18.3.2024), வேலூர் – திமிரி நகர கழக தலைவர் ஜெ.பெருமாள் (வயது 76, மறைவு: 20.3.2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் திருவையாறு வடிவேலு (வயது 91, மறைவு: 21.3.2024).

புகழ் புத்தகாலயம் பதிப்பாளர் – கவிஞர் தமிழ் ஒளி படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற எழுத்தாளர் செ.து.சஞ்சீவி (வயது 94, மறைவு: 20.5.2023), நீடாமங்கலம் நகர கழகத் தலைவர் இர.அமிர்தராஜ் (வயது 82, மறைவு: 21.5.2023), விருத் தாசலம் நகர கழகத் தலைவர் நா.சுப்பிரமணியன் (வயது 73, மறைவு 25.5.2023), ஜாதி ஒழிப்பு வீரர் – தத்தனூர் துரைக்கண்ணு (வயது 91, மறைவு: ஜூன் 2023), சோழங்கநல்லூர் வடகுடி கிளைக் கழகத் தலை வர் த.காமராஜ்(ஜூன் 2023).

சென்னை தியாகராயர் நகர் மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஏழுமலை (வயது 92, மறைவு: 15.6.2023), இயக்க ஈடுபாட்டாளர் சிங்கப்பூர் அன்னபூரணி நடராசன் (வயது 89, மறைவு: 19.7.2023), மலேசிய கழகத்தின் மூத்த உறுப்பினர் இரா.நல்லுசாமி (மறைவு: 21.7.2023), மலேசிய கழகத்தின் மூத்த தலைவர் சின்னப்பன் (மறைவு: 21.7.2023), மதுரை பேராசிரியர் முனைவர் கஸ்தூரிபாய் மனோகரன் (வயது 78, மறைவு: 23.7.2023), இனமானக் கவிஞர் செ.வை.ர.சிகாமணி (வயது 83, மறைவு: 7.8.2023), பொத்தனூர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் சி.தங்கவேல் (வயது 86, மறைவு: 9.8.2023), கழகக் காப்பாளர் திருச்சி துப்பாக்கி நகர் சோ.கிரேசி (வயது 76, மறைவு: 20.8.2023).

மத்தூர் ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர் ப.மங்களதேவி (மறைவு: 23.8.2023), குடந்தை மாநகர கழகத் தலைவர் செயல் வீரர் கு.கவுதமன் (வயது 68, மறைவு: 24.8.2023), கழகப் பற்றாளர் துறையூர் ‘வீகேயென்’ பாண்டியன் (மறைவு: 25.8.2023), சென்னை பகுத்தறிவாளர் ந.சி.இராசவேலு (வயது 83, மறைவு: 26.8.2023), திருத்தணி ஒன்றிய கழக அமைப்பாளர் கி.சபரி (மறைவு: 29.8.2023), இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி (வயது 54, மறைவு: 4.9.2023), பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் பெரியார் முரசு (எ) ஆறுமுகம் (வயது 93, மறைவு: 4.9.2023).
பகுத்தறிவு இயக்குநர் – நடிகர் தேனி மாரிமுத்து (வயது 56, மறைவு: 8.9.2023), தருமபுரி மாவட்டக் கழக மேனாள் தலைவர் புலவர் வேட்ராயன் (வயது 76, மறைவு: 17.9.2023), கடலியல் வரலாற்று ஆய்வாளர், ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணியன் (வயது 60, 6.10.2023), செம்பனார் கோவில் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் டி.கனகலிங்கம் (வயது 82, மறைவு 17.02.2024) ஆகிய மறைவுற்ற பெருமக்களுக்கும், சுயமரியாதைச் சுடரொளிகளுக்கும் இப்பொதுக்குழு தனது ஆழ்ந்த துயரத்தையும், அவர்களின் அளப் பரிய தொண்டுக்கு வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் இப்பெருமக்களின் மறைவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத் தினருக்கும் இப்பொதுக்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை கழகத் தோழர்கள், கொள்கை முழக்கமிட்டு வரவேற்றனர். தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர்
சி.அமர்சிங் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (தஞ்சை – 25.3.2024)

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரை

விடுதலை நாளேடு
Published March 26, 2024

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்பு – கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரையாற்றினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (திராவிடர் கழகப் பொதுக்குழு, தஞ்சை – 25-3-2024)


இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:07 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தஞ்சை, தீர்மானம், பொதுக்குழு

ஞாயிறு, 26 ஜூன், 2022

மதுரை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


ராமர் பாலம் என்று கூறி, மக்கள் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கக் கூடாது
 June 25, 2022 • Viduthalai

பத்தாம் வகுப்பில் தமிழில் 47 ஆயிரம் மாணவர்கள் தோல்வி  அதிர்ச்சிக்குரியது
''அக்னிபத்'' என்பது ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை இராணுவமயமாக்கும் திட்டமே!  உயர்நீதிமன்ற பதவிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை!
'திராவிட மாடல்' அரசை - கொச்சைப்படுத்தும் வட மாநில ஊடகங்களுக்குக் கண்டனம்!
60 ஆண்டு காலம் 'விடுதலை' ஆசிரியராக அரும்பணியாற்றி வரும் 
அருமைத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு 
60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்கள் வழங்கப்படும்!
மதுரை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


மதுரை, ஜூன் 25 88 ஆண்டுகால 'விடுதலை' ஏட்டுக்கு 60 ஆண்டுகாலம் ஆசிரியராக அரும்பணியாற்றிய ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 60 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டி அளிப்பது என்ற தீர்மானம் உள்பட எட்டு தீர்மானங்கள், திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் மதுரை நோட்புக் அரங்கில் இன்று (25.6.2022) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1  

இரங்கல் தீர்மானம்

பெரம்பலூர் மேனாள் மாவட்டக் கழகத் தலைவர் ஆறுமுகம் (மறைவு 26.02.2022 )குடந்தை. பி.மனோரஞ்சிதம் (வயது 65 மறைவு 2.3.2022) நெய்வேலி இரா.கோபாலகிருஷ்ணன் (மறைவு 4.3.2022)  லால்குடி த.செல்வம் (வயது 60 மறைவு 18.3.2022) மன்னை ச.செந்தில் (மறைவு 18.3.2022) தருமபுரி ரத்தினம்மாள் (மறைவு 22.3.2022) தஞ்சாவூர் இரா.மருதாம்பாள் (மறைவு 30.3.2022) திருவையாறு கவுசல்யா, (மறைவு 2.4.2022)   புதுவை தட்சணாமூர்த்தி (மறைவு 10.4.2022) வாஷிங்டன் மு.பரமசிவம் (மறைவு 11.4.2022) காரைக்குடி லெ.நாராயணசாமி (மறைவு 16.4.2022)  மேனாள் கிருட்டினகிரி மாவட்டக் கழகத் தலைவர் ஒசூர் துக்காராம் (மறைவு 20.4.2022)  திருவையாறு வெ.அரங்கசாமி (உடற்கொடை) (வயது 82 மறைவு 29.4.2022) சாந்தா (வயது 74 மறைவு 30.4.2022) ஆவடி ஜி.சுப்பிரமணியம் (எ) மல்ல மணிமாறன் (மறைவு 2.5.2022) மயிலாடுதுறை பேராசிரியர் ஏ.சுப்பையா, (வயது 101 மறைவு 4.5.2022) சேலம் சி.தனபால் (வயது 82 மறைவு 5.5.2022) அருப்புக்கோட்டை ச.அண்ணாதுரை (வயது 76 மறைவு 5.5.2022) தருமபுரி மா.கிருஷ்ணன் (மறைவு 5.5.2022) திருச்சி ஆர்.சுமதி (வயது 66 மறைவு 10.5.2022), திருவண்ணாமலை ஜெ.மணி (வயது 72 மறைவு 14.5.2022) சேலம் செல்வி (வயது 56 மறைவு 15.5.2022), அரியலூர், கருக்கை கார்மேகம் (வயது 45 மறைவு), புதுக்கோட்டை அ.சேக்கப் (வயது 79 மறைவு 3.6.2022) கிருட்டினகிரி சின்னப்பிள்ளை அம்மாள் (மறைவு 7.6.2022), திருவண்ணாமலை கு.பச்சையப்பன் (வயது 88 மறைவு 10.6.2022) சென்னை - தரமணி கோ.மஞ்சுநாதன் (வயது 65 மறைவு 13.6.2022) நல்லாத்தூர் நா.சு.தமிழ்ச் செல்வன் (மறைவு 14.6.2022) மதுரை வே.ராஜாம்பாள் (மறைவு 15.6.2022) திருப்பத்தூர் கமலாம்மாள் ராஜசேகரன் (வயது 102 மறைவு 16.6.2022) சிவகங்கை பெரி.பெருமாள் (வயது 86 மறைவு 17.6.2022) மலேசியா ச.வடிவேலு (பி.ஜே.கே.) (வயது 84 மறைவு 19.6.2022) ஆகியோரின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இவர்களின் பிரி வால் வருந்தும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் களுக்கும் நண்பர்களுக்கும் இப்பொதுக்குழு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த இயக்க வீரர்களுக்கு இப்பொதுக்குழு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறது.

தீர்மானம் எண்: 2

‘விடுதலை’ ஆசிரியராக 60 ஆண்டுகள் பணியாற்றி வரும் தலைவருக்கு  60 ஆயிரம் சந்தாக்கள் அளித்தல்!

திராவிடர்களின் போர் வாளாம் 88 ஆண்டு காணும் ‘விடுதலை’ ஏட்டுக்கு 60 ஆண்டு காலம் ஆசிரியர் என்னும் ஒப்பற்ற வரலாறு படைத்து வரும் - 4 பக்கங்களாக ஒரே வண்ணத்தில் வெளிவந்த ‘விடுதலை’ ஏட்டை 8 பக்கங்களாகப் பல வண்ணங்களில் கருத்துக்கும், கண்களுக்கும் விருந்தாக வும், சென்னையிலிருந்து மட்டும் வெளிவந்த ‘விடுதலை’ ஏட்டை இரண்டாம் பதிப்பாக திருச்சிராப்பள்ளியிலிருந்தும் வெளிவரச் செய்த வகையிலும், ஈடு இணையற்ற சாதனைக்கு உரியவருமான நமது போற்றுதலுக்குரிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குத் தனது முழு மனமும், மணமும் கமழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தலைதாழ்ந்த நன்றியையும் இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

கரோனா என்னும் கடும் தொற்று நோய் நாட்டைப் பெரும் அலைக்கழிப்புக்கும், பேரச்சத்திற்கும் உள்ளாக்கிய நெருக்கடி யான நிலையிலும்கூட, ‘விடுதலை’ ஏட்டின் அச்சுப் பதிப்பை ஒரு நாள் கூட நிறுத்தாமல் இணையத்தின் (றிஞிதி) வாயிலாக வும் இன்னும் இலட்சக்கணக்கானோர் படிக்கும்படி விரிவு படுத்தி நடத்திக் காட்டியவர் நமது ஆசிரியர் ஆவார்.

‘விடுதலை’ ஆசிரியராக ‘விடுதலை’ ஆசிரியருக்கான நாற்காலியில், தோளை அழுத்திப் பிடித்து பாசத்துடன் நமது ஆசிரியர் அவர்களை அமர வைத்தவர் தந்தை பெரியார்! இது வேறு எவருக்கும் கிடைக்கப் பெறாத பெரும் பேறாகும். அதோடு மட்டுமல்ல - ‘விடுதலை’யை வீரமணியின் ஏக போகத்தில் ஒப்படைக்கிறேன் என்று தந்தை பெரியார், 6.6.1964 நாளிட்ட ‘விடுதலை’யில் எழுதியதும் சாதாரண மானதல்ல.

தந்தை பெரியார் கணிப்புப் பொய்க்கவில்லை; அவர் எதிர்பார்ப்பையும் விஞ்சிய அளவுக்கு, ‘விடுதலை’யைத் தன் சுவாசமாகக் கொண்டு நாளும் உழைக்கும் ஆசிரியரின் 60 ஆண்டு ‘விடுதலை’ப் பணிக்குப் பாராட்டு - நன்றி என்கிற வகையில் 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களை, அவரைப் பெருமகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் அளவுக்கு திரட்டிக் கொடுப்பது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

ஆசிரியரின் 50ஆம் ஆண்டு ‘விடுதலை’ப் பணிக்கு 50 ஆயிரம் சந்தாக்களைத் திரட்டிக் கொடுத்த நாம், இதனையும் சாதித்துக் காட்டுவோம் என்ற உறுதியோடு, ஜூலை மாதம் முழுவதும் - வேறு எந்தப் பணியையும் ஒதுக்கி வைத்து,  இலக்காக இப்பெரும் பணியை முடிப்பது என்று இப் பொதுக்குழு உறுதி செய்கிறது.

“நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்ற நமது தலைவரின் அருமொழியை அவரை மய்யப்படுத்தும் இந்த முயற்சியிலும் உறுதியாக நிறைவேற்றுவோம் என்றும் இப்பொதுக்குழு மிகுந்த மன உறுதியோடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண்: 3

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது 1860ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகின்றது. அவ்வப்போது பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.

சுதந்திர இந்திய நாட்டில்கூட 5 திட்டங்கள் பரிந்துரைக் கப்பட்டன. நாடாளுமன்றத்தில் அண்ணா முதல் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் பலரும் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்கள் இது தொடர்பான ஒன்றிய அமைச்சராக இருந்த போது இத்திட்டத்திற்குப் புத்துயிர் கிடைத்தது.

ஆனாலும், ராமன் பாலம் என்ற பொய்யான ஒன்றைக் கூறி, பார்ப்பன சக்திகள் முட்டுக்கட்டை போட்டன. உச்சநீதி மன்றம் வரை சென்று தடை பெற்ற நிலையில் - தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான இத்திட்டம் செயல்படா நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

ராமராஜ்யம் அமைக்கப் போகிறோம் என்று கூறுவோரின் ஆட்சி வந்த நிலையில், இந்தத் திட்டம் முற்றிலும் முடக்கப் பட்டுவிட்டது.

மக்கள் வளர்ச்சித் திட்டம் ஒன்று - மதக் காரணம் காட்டி முடக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கதும், வெட்கப்படத் தக்கதுமாகும்.

இத்திட்டத்தால் பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டுக்கு - குறிப்பாக தென் மாநிலப் பகுதிக்குப் பெரும் பலன் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறி இருந்தும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்தக் கால்வாயால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடல் பகுதிகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம் 424 கடல் மைல் அளவுக்குக் குறையும். இதன் மூலம் கிட்டத்தட்ட 25 முதல் 30 மணி நேரப் பயணம் மிச்சமாகும். வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்குப் பதில், நேரடியாக இந்தியக் கடல் எல்லை வழியாகவே இந்தியத் துறைமுகங்களுக்கு வர முடியும். இதனால் வெளிநாட்டுக் கப்பல் போக்குவரத்தும் அதிகரிக்கும். இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரைக்கும், கிழக்குக் கரையில்  இருந்து மேற்குக் கரைக்கும் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், இலங்கை அரசுக்கு ஏராளமான தொகையை நுழைவுக் கட்டணமாகவும், வாட கைக் கட்டணமாகவும் செலுத்த வேண்டியுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது இனிமேல் தேவையிருக்காது.

மேலும் அரபிக் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல், இந்தியப் பெருங்கடலில் இருந்து அரபிக் கடலை அடைய வேண்டிய வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றாமல் இந்தியக் கடல் பகுதி வழியாகவே செல்லும். இதனால் இந்தியத் துறைமுகங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பலன்கள் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் பெரும் அளவில் உருவாகும். ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட் டினம் உள்ளிட்ட சிறு துறைமுக நகரங்கள் பெரும் அபி விருத்தி அடையும்.

தூத்துக்குடி துறைமுகம் மிகப் பெரும் துறைமுகமாக மாறும் வாய்ப்பு உள்ளது. ராமேஸ்வரம் துறைமுகமும் வளர்ச்சி பெறும். இதனால் தமிழ்நாட்டில் கடல் சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். மீன்பிடி தொழிலும் பெரும் வளர்ச்சி காணும். மொத்தத்தில், சேது சமுத்திரத் திட்டத்தால் இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் மிகவும் ஏற்ற மடையும்; வர்த்தகம் பெருகும்.

இத்தகையதோர் அரும்பெரும் திட்டத்தை - பொருளா தாரத்தையும், வேலைவாய்ப்பையும் மேம்படுத்தும் திட்டத் தைச் செயல்படுத்துவதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் பெருமளவு ஒன்றிய அரசை வற்புறுத்தி செயல்படுத்தச் செய்திட ஆவன செய்யுமாறு திராவிடர் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 4

பத்தாம் வகுப்புத் தேர்வில் -தமிழ்த் தேர்வில் மாணவர்களின் பெருந்தோல்வி மீது ஆய்வு தேவை !

நடந்து முடிந்த 10ஆம் வகுப்புத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் தமிழ்த் தேர்வில் தோல்வியுற்றனர் என்கிற தகவல் பெரிதும் அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிக்கிறது. இதற்கான காரணத்தின் மீது உரிய ஆய்வு ஒன்றினை நடத்து மாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால் பண்பாட்டு நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையோடு இப்பிரச்சி னையை திராவிடர் கழகப் பொதுக்குழு அணுகுகிறது.

தேவையான எண்ணிக்கையில் தமிழாசிரியர்களை நியமித்து, இக்குறைபாட்டைச் சரிசெய்ய ஆவன செய்யுமாறு, தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5

‘திராவிட மாடல்’ அரசைப் பற்றி அவதூறுப் பிரச்சாரத்துக்குக் கண்டனம்!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு வட இந்திய ஊடகங்கள் தொடர்ந்து திட்டமிட்டு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியை மோசமான ஆட்சி என்று - வட இந்தியா வில் முக்கியமாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களின் மக்களிடையே வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் “ஹிந்து விரோதக் கட்சியின் ஆட்சி - ஹிந்துக் கோவில்களுக்கு கூடுதல் மின் கட்டணம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர். சுதர்ஷன் செய்தித் தொலைக்காட்சி இதில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தத் தொலைக்காட்சியின் உண்மையான உரிமையாளர் சாமியார் ஆதித்யநாத் ஆவார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது தொடர்ந்து மத விரோதச் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வரக் கூடியதாகும்.

தமிழ்நாட்டு ஆட்சியாளரான ஹிந்து விரோதி ஸ்டாலின் அரசினர் - மசூதிகளிலும், தேவாலயங்களிலும் யூனிட்டிற்கு ரூ. 2.15 வசூல் செய்கின்றனர் என்று செய்தி வெளியிட்டார். இந்தச் செய்தியை, இவர்களது அலை வரிசையிலிருந்து பெறப்பட்டது என்ற குறிப்போடு வடக்கே பிரபல செய்தித் தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

வட இந்திய மக்களிடையே தமிழ்நாடு அரசு குறித்து மோசமான சிந்தனையை விதைத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு இதனைத் தடுக்காவிட்டால் இவர்கள் தொடர்ந்து இதுபோன்ற போலிச் செய்திகளை வெளியிட்டு, தமிழ்நாட் டிற்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

நாகரிகம், ஒழுக்கம், நேர்மை இல்லாத கட்சி  என்று ஒன்று உலகில் இருக்கிறது என்றால், அது சங்பரிவாரும், அதன் அரசியல் வடிவமான பிஜேபியும்தான்.

இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் என்னும் நற்பெயரைச் சிதைப்பதுதான் இவர்களின் நோக்கமாகும்.

எங்கும் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்னும் சொற்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்து உள்ள நிலையில், இந்தச் சொல் லாட்சியானது, பார்ப்பன சக்திகளின் வயிற்றைப் பெரிதும் கலக்க ஆரம்பித்து விட்டது. இதன் தாக்கம் வெளிமாநிலங் களிலும் பரவி விடும் என்கிற பயம் அவர்களை உலுக்குகிறது.

இந்தக் கட்டத்திலேயே தமிழ்நாடு அரசு இதில் தலை யிட்டு, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் எண்: 6

‘அக்னி பத்’ திட்டம் நாட்டுப் பாதுகாப்புக்காக அல்ல; ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை இராணுவமயமாக்கும் திட்டமே!

நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய அரசு இப் பொழுது கொண்டு வரும் “அக்னிபத் திட்டம்” குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, முன்னாள் இராணுவ அதிகாரி களே கவலையுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

“அக்னிபத் திட்டத்தின்”கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியமர்த்தப்படுவார்கள் என்ற ஒன்றிய அரசின் திட்டம் நாடு முழுவதும் குறிப்பாக பிகார், உத்தரப்பிரதேசம் முதலிய மாநில இளைஞர்களிடையே கடும் கொந்தளிப்பைக் கிளப்பி யுள்ளது. இரயில்கள் கொளுத்தப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து. இவை அனைத்துமே இராணு வத்தில் சேர விருப்பம் கொண்டு தேர்வு எழுதி இன்னும் பணி கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களின் தன்னிச்சை யான போராட்டமாகும்.

அக்னிபத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் சுமார் 45,000 முதல் 50,000 வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் பெரும்பாலானோர் நான்கு ஆண்டுகளில் சேவையை விட்டு வெளியேற்றப்படுவார்கள். மொத்த வருடாந்திர ஆள் சேர்ப்புகளில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரமாக 15 ஆண்டுகளுக்கு தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்கிறது மோடி அரசு.

வெளியேற்றப்படும் இளைஞர்கள், பட்டப்படிப்பைத் தொடர முடியாமலும், இராணுவப் பணியில் தொடர முடி யாமலும் வேலைவாய்ப்பைத் தேடும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே, இராணுவத்தில் 15 ஆண்டு கள் பணியாற்றி வெளிவந்துள்ள முன்னாள் இராணுவ வீரர்களுக்கே உரிய வேலைவாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் நான்காண்டு முடித்தவர்களுக்கு வேலை தரப்படும் என்ற அரசின் உறுதியெல்லாம் காற்றோடு கலந்து செல்லும் என்பதுதான் யதார்த்தம்.

பா.ஜ.க. அலுவலகத்தில் பாதுகாப்பு வேலைகளில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார் பா.ஜ.க. பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா. அக்னி வீரர் களுக்கு ஓட்டுநர்கள், எலக்ட்ரீசியன்கள், துவைப்பது (வாஷிங்), முடிதிருத்துவது போன்ற தொழில்களுக்கான பயிற்சிகள் கிடைக்கும் என்கிறார் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி.

அக்னி பாத் திட்டம் என்பது பா.ஜ. கட்சிக்கும்,ஆர்.எஸ்.எஸ். சங்கத்திற்கும் எதிர்காலப் பயன்பாட்டிற்காக ஓர் அரை இராணுவப் படையை சட்டபூர்வமாக உருவாக்கு வதே ஒழிய, வேறொன்றுமில்லை. கொம்பு மற்றும் வாள்களால் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பயிற்சி பெற்றவர்கள் இப்போது மக்கள் வரிப் பணத்தில் ஆயுதப் படையிடமிருந்து உயர்மட்ட ஆயுதப் பயிற்சியைப் பெறப் போகிறார்கள் என இராணு வத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி கூறியதைப் புறம் தள்ள முடியாது. ஜெர்மனியில் அடால்ப் ஹிட்லரும் இத்தகைய முறையைத்தான் கையாண்டார்.

இராணுவத்தில் அதிகாரி பதவிகளுக்குக் கீழ் உயர்ஜாதி பார்ப்பனர்கள் ஒருவரும் சேர்வது கிடையாது. ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள்தான் சேருவதற்கு ஆர்வமாகப் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கான 15 ஆண்டுகால பணி, ஓய்வுத் தொகைத் (பென்ஷன்) திட்டம் அனைத்தையும் ஒழித்துக் கட்டி, பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு நான் காண்டு காலப்பணி, முடிந்தவுடன் ரொக்கமாக சில லட்சம் என்ற தேன் தடவிய விஷ உருண்டையைக் கொடுக்கும் நிலைதான் இது. ஒன்றிய பா.ஜ.க. அரசு, சமூகத்தில் மத வெறுப்பைத் தூண்டி அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் சதியை இளைஞர்கள் உணர்ந்து எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும் எனத் திராவிடர் கழகப் பொதுக்குழு இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறது. இராணுவப் பயிற்சி பெறும் இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கி, தங்களின் மதவாத அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கமும் இதற்குள் இருக்கிறது என்பதைப் புறக்கணிக்க முடியாது.

அனைத்து மதச்சார்பற்ற அமைப்புகளும் இணைந்து நாட்டு ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திட வேண்டியதும் அவசியம் என்று இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

தீர்மானம் எண்: 7

கடந்த காலக் கழகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுதல்!

கடந்த காலங்களில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, வழக்குரைஞர் அணி, தொழிலாளர் அணி, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திட்டமிட்ட வகையில் இலக்குகளை வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8

உயர்நீதிமன்ற பதவிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75; தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 55. இதில் 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் என்பது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் மிகப்பெரிய அநீதியாகும். 3 சதவீத பார்ப் பனர்கள் அனுபவிக்கும் வாய்ப்பு - ஆதிக்கம் 22 விழுக் காடாகும். இந்நிலையில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவி களுக்குப் பார்ப்பனர்களை நியமனம் செய்திடாமல், வாய்ப்புக் கிடைத்திராத பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே நீதிபதிகளாக நியமனம் செய்திட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தொடர்ந்து பார்ப்பனர்களையே நியமிப்பதைத் தவிர்க்குமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:17 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தீர்மானம், பொதுக்குழு, மதுரை
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்

14.04.25 அம்பேத்கர் பிறந்த நாள்
உறுதிமொழி ஏற்பு - பெரியமேடு

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல்

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம, 22. 11 .2025 மாலை 6 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ. ஆட்டோ ஒர்க்ஸ் அருகில், மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் அவர்கள் பெரியார் உலகம் நிதி திரட்டுதல், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், தமிழர் தலைவர் ஆசிரியரின் 93 வது பிறந்த நாளை(டிசம்பர்- 2) சிறப்பாக கொண்டாடுதல் குறித்து நோக்க உரையாற்றினார். நோக்க உரையின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, அரும்பாக்கம் சா. தாமோதரன், மயிலை சோ.பாலு, எம்.டி. சி. சு.செல்வம், வெ.கண்ணன், இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து, மந்தைவெளி எ. பன்னீர்செல்வம், தரமணி ம.ராஜு ஆகியோர் கருத்துகளை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. இரங்கல் தீர்மானம் கவியருவி ஈரோடு தமிழன்பன், தாம்பரம் பெரியார் பெருந்தொண்டர் தி.இரா.ரத்னசாமி, இரத்தினசாமி அவர்களின் இணையர் ர. ஆதிலட்சுமி மற்றும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை ந.கிருஷ்ணன் ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 2. 'பெரியார் உலகம்' கட்டுமான நிதிக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் செய்து தருவதன ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. 3. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 வது ஆண்டு (டிசம்பர் -2) பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும், 4. கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்து வழங்குதல் மற்றும் கழக பரப்புரை பணிகளை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 5. பெரியார் உலகம் நிதி திரட்டுவதற்காக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இளைஞர் அணி துணைத் தலைவர் அ. அன்பு நன்றி கூறினார்.
Powered By Blogger

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!" "பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்க...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்

லேபிள்கள்

  • ‘உரையாடல் குடில்
  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ. அன்பரசன் – பொ. மந்த்ரா அபிநயா
  • அ.பாபு
  • அகழாய்வு அறிக்கை
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழகிரி
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவு இல்லம்
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • ஆளுநர் எதிர்ப்பு
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரத்தினசாமி
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் அரங்கம்
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இல கணேசன்
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம் ஜி ஆர் நகர்
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • எஸ்.அய். ஆர்.
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • க.வெற்றிவீரன்
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கலைஞர் பிறந்த நாள்
  • கலைஞர் பிறந்தநாள்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கள வீரர்கள்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காசா
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காண்டீபன்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • கார்ல்மார்க்ஸ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலக்கணக்கு
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கி.வீரமணி விருது
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கீழடி
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமரேசன்
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கேரளா
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ. அரங்கநாதன்
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சமூகநீதிக் காவலர்
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சாலிகிராம்
  • சாஸ்திரி பவன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதைச் சுடரொளி
  • சுவர் எழுத்து
  • சுவர் ஓவியம்
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை தொகுதி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோ.சுரேஷ் – மு.பவானி
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • ஞாயிறு மலர்
  • டி ஆர் பாலு மனைவி
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டி.கே.நடராசன் – குஞ்சிதம்
  • டிரோஜன் குதிரை
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தமிழினி
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாம்பரம்<விஜயவாடா
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.இரா.இரத்தினசாமி
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரை.இராவணன்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேசியக் கல்வி
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொல்லியல் அகழாய்வு
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளர் சட்டம்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நகல் எரிப்பு
  • நடராசன்
  • நடராஜன்
  • நடராஜன் குடும்பம்
  • நடவடிக்கைகள்
  • நடிகர்ராஜேஷ்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகம்மையார்
  • நாகர்கோயில்
  • நாத்திகர் மாநாடு
  • நால் அறிமுகம்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நிறைவு விழா
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நெகிழித்திரை
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தகம் வெளியீடு
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொறுப்பு மாவட்டங்கள்
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • போரூர்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி -மகளிர் பாசறை
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைமலைநகர்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்சிகள்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாட்டு தீர்மானங்கள்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மார்ஷல்
  • மாலை
  • மாலை அணிவி
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முத்தையன்
  • முதல்வர்
  • மும்பை
  • மும்மொழித் திட்டம்
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மேற்கு சென்னை
  • மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன்
  • மேனாள் பிரதமர்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராதிகா தாயார்
  • ராமாபுரம்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட்டார மாநாடு
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாசுதேவன்
  • வாழ்க்கை
  • வாழ்க்கை குறிப்பு
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருகம்பாக்கம்
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கக் கூட்டம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா
    கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி – கோ. குமாரி இணையரின்...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • சைதை எம்.பி. பாலு பேசுகிறேன்!
    1948 ஆம் ஆண்டு ஆலந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாரின் பேச்சை முதல் முதலாக கேட்டேன். அன்று முதல் நான் பெரியாரின் ...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (48)
    • ▼  ஜூலை (6)
      • நீட்’, EWSசை எதிர்த்து இரு சக்கர வாகனப் பயணத்தைத் ...
      • தென்சென்னையில் ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை' எ...
      • மாங்குடி துரை.இராவணன்!
      • கல்வி வள்ளல் காமராசரின் 124 ஆம் ஆண்டு பிறந்த நாள்:...
      • பேரெழுச்சி தந்த அறப்போராட்டக் கள வீரர்கள் பட்டியல்...
      • சேலம்: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்...
    • ►  ஜூன் (7)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (6)
  • ►  2025 (94)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (16)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ►  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.