வெள்ளி, 14 ஏப்ரல், 2023

கி.முல்லைவேந்தன் _ கனகரத்தினம், கி.சேகர் _ மு.வெ.நிர்மலா, கி.இந்திரா _ கவிஇரவீந்திரன், சுஜாதா _ சாமிநாதன் ஆகியோரது வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (287)

பிப்ரவரி 16-28,2022

ஈரோடு சமூகநீதி இளைஞரணி மாநாடு

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு வகுதி.....



 சென்னை பெரியார் திடலில் கழகத் தோழர்களின் சுயமரியாதைத் திருமணங்களை 27.4.1998 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தேன். இத்திருமண நிகழ்வு ஜாதி மறுப்பு திருமணங்களாக எளிய முறையில் நடைபெற்றது. நான்கு ஜோடி மணமக்கள் கி.முல்லைவேந்தன் _ கனகரத்தினம், கி.சேகர் _ மு.வெ.நிர்மலா, கி.இந்திரா _ கவிஇரவீந்திரன், சுஜாதா _ சாமிநாதன் ஆகியோரை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ள வைத்து விழாவினை நடத்தி வைத்தேன். விழாவில் உரையாற்றுகையில், “ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுடைய குழந்தைகளுக்கு அரசு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு சில ஆண்டுகளிலேயே ஜாதிப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்’’ என எடுத்துக் கூறினேன். விழாவிற்கு சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து கழகத் தோழர்களும், உறவினர்களும் வந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக