வியாழன், 13 ஏப்ரல், 2023

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொதுக் கூட்டம்



தமிழர் தலைவர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டவர்கள் பங்கேற்பு

சென்னை, ஏப். 13- மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில் நேற்று (12.4.2023) மாலை சைதை - தேரடி திடலில் அரசியல் சட்ட விதிகளை தொடர்ந்துமீறி வரும் ஆளுநர் ஆர். என்.ரவியைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட் டணி சார்பில் 12.4.2023 அன்று ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பதிலாக சைதை - தேரடி திடலில் மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டமாக நடைபெறும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்திருந்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சைக் கண்டித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்பு தல் வழங்காதது, ஸ்டெர்லைட் பிரச் சினை குறித்தும், சனாதன ஆதரவு குறித்து, தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும் நேற்று (12.4.2023) மாலை சைதை நேரடி திடலில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கனிமொழி எம்.பி. தலைமையுரை

இப்பொதுக் கூட்டத்திற்கு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி தலைமை தாங்கி உரையாற்றுகையில்:

"தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநி லங்களில் ஆளுநர்கள் மூலம் பா.ஜ.க குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. மாநில அரசால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களைக் கிடப்பில் போடும் ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆளுநருக்கு எதிரான இந்தப் பொதுக் கூட்டம் இதோடு நின்று விடாது. டில்லி வரை சென்று இந்தக் கூட்டம் போராடும். ஆளுநர் தனது அதிகாரம் என்னவென்று புரிந்து கொண்டு நடக்க வேண்டும். இல்லை யென்றால் பெரியார் மண் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்.

ஆளுநர் பதவி வேண்டாம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் போரா டிக் கொண்டிருக்கிறது. எங்களின் தியாகங்களை, போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதை முதலில் ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் மற்ற மாநிலங்களிலும் பேரவையில் தீர் மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச் சர்களுக்கு நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவிற்கே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு வழிகாட்டும்" என தெரிவித்தார். 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலா ளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சு.திரு நாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச் செயலாளர் மும்மது அபுபக்கர், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி யின் தலைவர் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவா ஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்பட தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங் கேற்று ஆளுநரை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்.

இம்மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப் பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மணிக்கம், துணை செயலா ளர் வி.பி.மணி, காங்கிரஸ் கட்சி தளபதி பாஸ்கர், தி.மு.க. நாடாளுமனற் உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டக் கழகப் பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் அ.வீரமர்த்தினி, சைதை தென்றல், ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல், சைதை ரவி, சண்முகப்பிரியன், மு.இரா.மாணிக்கம், வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணை அமைப்பாளர் சி.பாசுகர், விடுதலை நகர் பி.சி.ஜெயராமன் மற்றும் கழகத் தோழர்கள், தி.மு.க. பகுதிச் செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், ள்ளிட்ட திமுக மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்ற னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக